Jump to content

சிறிலங்காவின் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிறிக்கட் குழுவில் இடம்பெறும் தமிழ் வீரர்கள்


Recommended Posts

வட மாகாண வீரர்களின் சாதனையே தேசிய அணிக்கான தெரிவு

 

 

Untitled-1-159-696x464.jpg
 

வட மாகாணத்தில் இரு கிரிக்கெட் வீரர்கள் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய அணியில் இணைந்திருப்பது மிகப்பெரிய சாதனை என்று இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முகாமையாளர் ஹேமந்த தேவப்பிரிய குறிப்பிட்டார்.

”யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். ஒருவர் டெஸ்ட் குழாமில் 16 ஆவது வீரராக இருக்கும் வலதுகை சுழல் பந்துவீச்சாளர் (விஜயகாந்த்) வியாஸ்காந்த். அந்த பகுதியில் இருந்து கிரிக்கெட் வீரர் ஒருவர் வருவது மிகப்பெரிய சாதனையாகும்” என்று அவர் தெரிவித்தார்.

 

இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடர் செவ்வாய்க்கிழமை (17) ஆரம்பமாகவுள்ளது. இதுபற்றி விளக்கும் ஊடக சந்திப்பு கொழும்பில் திங்கட்கிழமை (16) நடைபெற்றபோதே ஹேமந்த தேவப்பிரிய இதனை தெரிவித்தார்.

யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான வியாஸ்காந்த் இந்த டெஸ்ட் தொடருக்கு மேலதிக வீரராக இலங்கை இளையோர் குழாமில் முதல் முறை சேர்க்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒருநாள் தொடரில் வட மாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்தியதை அடுத்தே அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்த மாகாண மட்ட கிரிக்கெட் தொடரில் திறமையை வெளிப்படுத்திய பல வீரர்களும் இந்தியாவுடனான இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

”தொடர்ச்சியாக நடத்தப்பட்ட மாகாண மட்ட கிரிக்கெட் போட்டிகளால் தேர்வாளர்களுக்கு அனைத்து மாகாணங்களில் இருக்கும் வீரர்களையும் பார்க்க முடிந்தது. அணித் தேர்வில் அந்த திறமைகள் அதிகம் கவனம் செலுத்தப்பட்டது.

நல்லதொரு குழாம் எமக்கு கிடைத்திருக்கிறது. எதிர்காலத்தில் இலங்கை அணிக்கு ஆடக்கூடிய வீரர்கள் இருக்கும் ஒரு குழாமாக இது உள்ளது. தமது திறமைகளை வெளிக்காட்ட அந்த வீரர்களுக்கு இது நல்லதொரு சந்தர்ப்பமாக அமையவுள்ளது” என்று ஹேமந்த தேவப்பிரிய தெரிவித்தார்.

பந்துவீச்சில் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தி வரும் வியாஸ்காந்த் கடந்த ஜூலை 13, 14 ஆம் திகதிகளில் நடைபெற்ற இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டு நாள் பயிற்சிப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் சபை 19 வயதுக்கு உட்பட்ட பதினொருவர் அணிக்காக அதிகபட்சம் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி தேர்வுக் குழுவினரின் அவதானத்தை பெற்றுள்ளார்.

அதேபோன்று 19 வயதுக்கு உட்பட்ட வட மாகாண அணியின் தலைவராக செயற்பட்ட யாழ் மத்திய கல்லூரியின் வேகப்பந்து வீச்சாளர் எஸ். மதுஷனும் இலங்கை இளையோர் அணியில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கொழும்பு, NCC மைதானத்தில் செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவிருக்கும் நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் தொடருக்கு தமது அணி தயாராக இருப்பதாக இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவர் நிபுன் தனஞ்சய பெரேரா குறிப்பிட்டார்.

 

”சமபலமான அணி ஒன்று எம்மிடம் உள்ளது. இந்தியாவுக்கு எதிராக தொடர் முழுவதும் நன்றாக ஆட எதிர்பார்த்துள்ளோம். இந்திய அணி பலமான அணியாக இருந்தபோதும் எமது அணியும் அதற்கு நிகராக உள்ளது. தொடரை சிறந்த முறையில் பூர்த்தி செய்யவே எதிர்பார்த்திருக்கிறோம்” என்று வென்னப்புவ புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த சகலதுறை வீரரான நிபுன் தனஞ்சய நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கை இளையோர் குழாமில் கடந்த முறை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் ஆடிய ஐந்து வீரர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தவிர, மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த 15 வயதுடைய இளம் வீரர் துனித் வெல்லாலகேவும் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இடம்பெற்றுள்ளார்.  

”இந்த குழாத்தில் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ணத்தில் ஆடிய வீரர்களுடன் 1999 ஆம் ஆண்டு பிறந்த வீரர்களும் உள்ளனர். இந்த தொடரிலும் அடுத்து வரவிருக்கும் ஆசிய கிண்ண தொடரிலும் எதிர்வரும் 19 வயதுக்கு உட்பட்ட உலகக் கிண்ண அணியில் ஆட முடியுமான வீரர்கள் அதிகம் பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த தொடரில் திறமையை வெளிப்படுத்துவதை இலக்காகக் கொண்டே அணி தேர்வுகள் இடம்பெற்றபோதும் அடுத்த இளையோர் உலகக் கிண்ணமே பிரதான இலக்காக உள்ளது” என்று ஹேமந்த தேவப்பிரிய குறிப்பிட்டார்.

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியுடன் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இந்த போட்டித் தொடர் ஜூலை மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்திய கிரிக்கெட் சபையுடன் இணைந்து எதிர்வரும் காலத்தில் இவ்வாறான பல சுற்றுப்போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லி டி சில்வா தெரிவித்தார்.

”19 வயதுக்கு உட்பட்ட சுற்றுப்போட்டிகள் இளம் வீரர்களுக்கு தமது திறமையை வெளிப்படுத்த வழி ஏற்படுத்தி கொடுப்பதாக உள்ளது. இலங்கை கிரிக்கெட் சபையாக நாம் இந்திய கிரிக்கெட் சபையுடன் நீண்ட காலமாக நல்ல உறவை பேணி வருகிறோம். இந்திய கிரிக்கெட் சபையுடன் எட்டப்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் இதேபோன்ற இரு தரப்பு சுற்றுப்பயணங்களை எதிர்வரும் காலங்களிலும் நடத்துவதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம்.

இந்திய கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட்டுக்கு எப்போதும் ஆதரவாக இருந்து வருகிறது. வயது மட்ட போட்டி தொடர்களில் அவர்கள் பலம் மிக்கவர்களாக உள்ளனர். இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இலங்கை சுற்றுப்பயணம்  இலங்கை இளம் வீரர்களுக்கு தமது திறமை மற்றும் அனுபவத்தை வளர்த்துக்கொள்ள உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” என்று அவர் குறிப்பிட்டார்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

இலங்கை இளையோர் அணிக்காக பந்துவீச்சில் சோபித்த யாழ் மத்திய கல்லூரி வீரர் வியாஸ்காந்த்

Link to comment
Share on other sites

 சிறிலங்காவின் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான  கிறிக்கட் குழுவில் இடம்பெறும் தமிழ் வீரர்கள்

37225243_1620320448077395_74212413747767

 

37338410_1620320488077391_32964292025966

Link to comment
Share on other sites

 

இலங்கை அணியில் தமிழ் பேசும் வீரர்களின் பிரவேசம் ஆரம்பம்

இலங்கை இளம் அணியில் தமிழ் பேசும் வீரர்கள் உள்வாங்கப்பட்டமை எதனை உணர்த்துகின்றது என்பது குறித்து விளக்கும் இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும் தற்போதைய போட்டி மத்தியஸ்தருமான பிரதீப் ஜயப்பிரகாஷ்.

Link to comment
Share on other sites

இன்று ஆரம்பமாகிய 2 வது டெஸ்ட் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான வியாஸ்காந்த் 16 ஓவர்கள் பந்துவீசி  71 ஓட்டங்களை விட்டு கொடுத்து 1 விக்கெட்யை வீழ்த்தி உள்ளார்.

356/3 *

 

 

 

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் களமிறங்கிய தமிழ் கிரிக்கெட் வீரர்

 

19 வயதிற்குட்பட்டோருக்கான இந்தியா - இலங்கை அணிகளுக்கிடையிலாள கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சார்பாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் வீரரொருவர் களமிறங்கியுள்ளார்.

Vijayakanth-Vijayakanth.jpg

19 வயதிற்குட்பட்டோருக்கான இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டி இன்று ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.

இப் போட்டியிலேயே யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற வீரர் இலங்கை பதினொருவர் அணியில் விளையாடுகின்றார்.

 

யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான விஜயகாந்த் வியஸ்காந்த், மேல், வடமத்திய மற்றும் வடமேல் மாகாண அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சிறந்த சுழற்பந்து வீச்சுப்பெறுதிகளைப்பெற்றுள்ளார். இதேவேளை, அணி இக்கட்டான நேரத்தில் துடுப்பெடுத்தாடும் திறமை கொண்டவர்.

அண்மையில் இடம்பெற்ற இந்திய மற்றும் இலங்கை பத்தொன்பதுக்கு வயதிற்குட்பட்டோருக்கான பயிற்சிப் போட்டியில் நான்கு விக்கெட்டுக்களைக் வியஸ்காந்த் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் இந்திய அணி நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. தற்போதுவரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 331 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இதில் விஜயகாந்த் வியாஸ்காந்த் 59 ஓட்டங்களைக் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/37179

Link to comment
Share on other sites

இந்திய அணியின் மிகப்பெரிய இணைப்பாட்டத்தை முடித்தார் வியாஸ்காந்த்

Vijayakanth-Viyaskanth-696x464.jpg
 

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான இரண்டாவது இளையோர் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி இமாலய ஓட்டங்களை பெற்றுள்ளது.

 

 

இதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட தேசிய  அணிக்கு முதல் முறை களமிறங்கிய யாழ் மத்திய கல்லூரி வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது சுழற்பந்து மூலம் தீர்க்கமான விக்கெட்டை வீழ்த்தினார். எனினும் இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவின்போது 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 428 ஓட்டங்களை பெற்று இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தது.

ஹம்பாந்தோட்டை, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (24) ஆரம்பமான நான்கு நாட்கள் கொண்ட இந்த இளையோர் டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணித்தலைவர் அனுஷ் ராவத் முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

இந்தியாவுடனான தோல்வியை சந்தித்த முதல் டெஸ்ட் போட்டில் ஆடிய இலங்கை இளையோர் அணியில் இருந்து இந்த போட்டியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. நவீன் பெர்னாண்டோ, துலித் வெல்லாலகே மற்றும் ஷஷிக்க துல்ஷான் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் வியாஸ்காந்த், சொனால் தினூஷ மற்றும் நுவனிது பெர்னாண்டோ ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.

இதில் வியாஸ்காந்த் 36 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கை தேசிய அணி ஒன்றில் இடம்பெறும் முதல் வட மாகாணத்தைச் சேர்ந்த வீரராக பதிவானார்.

 

 

இலங்கை கிரிக்கெட் சபை நடத்திய மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்தியதை அடுத்தே அவருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய அணியின் முதல் விக்கெட்டை வலதுகை சுழற்பந்து வீச்சாளர் கல்ஹார செனரத்னவினால் வீழ்த்த முடிந்தது. இந்திய அணித்தலைவர் ரவாத் 11 ஓட்டங்களுடன் செனரத்னவின் பந்துக்கு போல்டானார்.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆரம்ப வீரர் அதர்வா டயிட் மற்றும் பவன் ஷா ஜோடி இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். இருவரும் முதல் நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை துடுப்பெடுத்தாடி 263 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர். இதன்மூலம் இந்திய அணி 300 ஓட்டங்களை கடந்தது.

 

இந்த இருவரதும் இணைப்பாட்டமானது இளையோர் டெஸ்ட் போட்டிகளில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டங்களை சமப்படுத்துவதாகும். 2007ஆம் ஆண்டு கண்டியில் நடைபெற்ற இலங்கை இளையோர் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய இளையோர் அணியின் அபினவ் முகுந்த் மற்றும் தன்மாய் சிறிவாஸ்தாவா ஜோடி 2ஆவது விக்கெட்டுக்கு 263 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டனர்.

இவ்வாறான ஒரு நிலையில், செயற்பட ஆரம்பித்த வியாஸ்காந்த் அபாரமாக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த அதர்வா டயிடின் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்கவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் இந்திய அணியின் மிகப்பெரிய இணைப்பாட்டத்தை (260) முறியடித்த வியாஸ்காந்த் தேசிய அணிக்காக தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார். டயிட் 172 பந்துகளில் 20 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 177 ஓட்டங்களை பெற்றார்.

டயிடின் விக்கெட் வீழ்த்தப்பட்ட பின் இந்திய அணியின் ஓட்ட வேகம் குறைந்தது. இந்நிலையில் இந்திய அணி அடுத்தடுத்து இரண்டு ரன் அவுட்களை பெற்றது இலங்கைக்கு ஆறுதலை ஏற்படுத்தியது. தேவதூத் பதிக்கல் 6 ஓட்டங்களுடன் ஓடும்போது ஆட்டமிழந்தார்.

 

 

பவன் ஷாஹ்வுடன் இணைந்து 4 ஆவது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்களை பகிர்ந்துகொண்ட ஆர்யான் ஜுவாலும் 41 ஓட்டங்களுடன் தேவையற்ற முறையில் ரன் அவுட் ஆனார்.

எனினும் ஒரு முனையில் சிறப்பாக ஆடிவரும் பவன் ஷாஹ் ஆட்டமிழக்காது 177 ஓட்டங்களுடன் இரட்டைச் சதத்தை நெருங்கியுள்ளார். அவர் இந்த ஓட்டங்களை பெறுவதற்கு 227 பந்துகளுக்கு முகம்கொடுத்து 19 பௌண்டரிகளை பெற்றுள்ளார். அவருடன் நேஹால் வதேரா 33 பந்துகளில் 5 ஓட்டங்களை பெற்று களத்தில் உள்ளார்.     

இதன்போது இலங்கை இளையோர் சார்பில் ஆறு பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் வியாஸ்காந்த் மற்றும் செனரத்னவினால் தலா ஒரு விக்கெட் வீழ்த்தப்பட்டது. 18 ஓவர்கள் பந்துவீசிய வியாஸ்காந்த் 80 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார்.

நாளை (25) போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தொடரும்.

போட்டியின் சுருக்கம்

Full Scorecard

 

India U19

 

428/4 & 0/0

(0 overs)

Result

0/0 & 0/0

(0 overs)

Sri Lanka U19

 

India U19’s 1st Innings

Batting         R B
Atharva Taide c N.Madushka b V.Viyaskanth 177 172
Anuj Rawat b K.Senaratne 11 38
Pawan Shah not out 177 227
Devdutt Paddikal (runout) K.Mishara 6 16
Aryan Juyal (runout) V.Viyaskanth 41 61
Nehal Wadhera not out 5 33
Extras
11 (lb 4, nb 7)
Total
428/4 (90 overs)
Fall of Wickets:
: 1-40 (A. Rawat, 11.2 ov), 2-303 (A Taide, 57.4 ov), 3-331 (D Padikkal, 65.2 ov), 4-407 (A Juyal, 80.4 ov)
Bowling O M R W E
Kalana Perera 13 1 58 0 4.46
Nipun Malinga 10 1 50 0 5.00
Kalhara Senaratne 26 1 128 1 4.92
Sandun Mendis 14 2 67 0 4.79
Vijayakanth Viyaskanth 18 2 80 1 4.44
Sonal Dinusha 9 0 41 0 4.56

Sri Lanka U19’s 1st Innings

 

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் விளாசிய பவன் ஷா, முச்சதத்தைத் தவறவிட்டார்: இந்தியா யு-19 அணி 613 ரன்களுக்கு டிக்ளேர்

 

 
pawan

பவன் ஷா. | படம்: ட்விட்டர்.

இளம் மகாராஷ்டிரா பேட்ஸ்மன் பவன் ஷா 282 ரன்கள் விளாசினார், இது யு-19 சர்வதேச போட்டிகளில் 2வது அதிகபட்ச ஸ்கோராகும். இதில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகளை விளாசி சாதனை புரிந்துள்ளார் பவன் ஷா. இலங்கை யு-19 அணிக்கு எதிராக இந்திய யு-19 அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 613 ரன்கள் குவித்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்திய யு-19 அணி ‘இளையோர் டெஸ்ட்’ தொடரில் ஆடி வருகிறது. இதில் ஹம்பண்டோட்டாவில் நடைபெறும் இறுதி டெஸ்ட் போட்டியின் 2ம் நாளில்தான் இளைய வீரர் பவன் ஷா 282 ரன்கள் குவித்தார், இந்தியா யு-19 613 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

 
 

பவன் ஷாவின் 282 ரன்கள் 332 பந்துகளில் விளாசப்பட்டது இதில் 33 பவுண்டரிகள் ஒரு சிக்ஸ் அடங்கும். முச்சதத்தை 18 ரன்களில் தவற விட்டார் பவன் ஷா.

1995ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக மெல்போர்னில் ஆஸி.யின் கிளிண்டன் பீக் 304 நாட் அவுட் சாதனையை பவன் ஷா முறியடிக்க முடியாமல் போனது.

இந்த இன்னிங்சின் முக்கிய அம்சம் இன்னிங்சின் 108வது ஓவரில் இலங்கை இளம் இடது கை வேகப்பந்து வீச்சாளர் விசித்ரா பெரேராவை தொடர்ச்சியாக 6 பவுண்டரிகளை ஒரே ஓவரில் விளாசினார் பவன் ஷா.

சந்தீப் பாட்டீல் ஒருமுறை பாப் வில்லிசை 6 பவுண்டரிகள் விளாசினார், அதே போல் மே.இ.தீவுகளின் சர்வான், இந்தியாவின் முனாஃப் படேலை டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 6 பவுண்டரிகள் அடித்தார், 2015 உலகக்கோப்பையில் இலங்கையின் திலக ரத்ன தில்ஷான், ஆஸி.இடது கை வேகப்பந்து புயலான மிட்செல் ஜான்சனை ஒரேஓவரில் 6 பவுண்டரிகள் விளாசினார்.

இந்த இன்னிங்ஸின் போது பவன் ஷா 2வது விக்கெட்டுக்காக இடது கை தொடக்க வீரர் அதர்வா டைடுடன் (177) இணைந்து 263 ரன்களை இருவரும் சேர்த்தனர். நிகில் வஹேராவுடன் இணைந்து 167 ரன்களைச் சேர்த்தார் பவன் ஷா.

இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரான 613/8 டிக்ளேருக்கு எதிராக இலங்கை முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய இடது கை வேகப்பந்து வீச்சாளர் மோஹித் ஜங்ரா 43/3.

https://tamil.thehindu.com/sports/article24513018.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

பீனிக்ஸ் பறவையாய் விஸ்வரூபம் எடுத்த தமிழ் இளைஞன்! சர்வதேசத்தை மிரட்ட வரும் யாழ் மைந்தன்

 

வடக்கிலிருந்து போர் மேகங்கள் நகர்ந்து சென்றாலும், மக்களின் மனங்களில் அது கொடுத்த ரணங்கள் இன்னமும் மாறவில்லை.

இழப்புக்களோடும் வலிகளோடும், வாழும் சமூகத்தில் இளைய தலைமுறையினரின் கனவுகளுக்கும் அவை தடையாகிக் கொண்டிருக்கின்றன. அத்தகு தடைகளை உடைத்து வெளியே வரத் துடிக்கும் நமது அடுத்தடுத்த தலைமுறையினருக்கான வாய்ப்புக்கள் மிகக் குறைவாகத் தான் கிடைக்கின்றன.

பொதுவாக இலங்கை கிரிக்கெட் தேசிய அணியில் தமிழ் வீரர்கள் இல்லாமல் இருப்பது அல்லது உள்வாங்கப்படாமல் இருத்தல் எமக்கான வெற்றிடத்தை எப்பொழுதும் காட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த வெற்றிடத்தை நிரப்பும் கனவோடு களம் கண்டு வெற்றிப் பாதையில் பயணிக்கிறான் யாழ்.மத்திய கல்லூரி மாணவன் வியாஸ்காந்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

மாகாண அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஒருநாள் தொடரில் வடமாகாண அணிக்காக திறமையை வெளிப்படுத்திய வியாஸ்காந், அடுத்து இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணியுடனான தொடருக்கு தெரிவு செய்யப்பட்டு விளையாடி வருகிறார்.

தமிழ் இளைய தலைமுறையினருக்கு நம்பிக்கை ஒளிக்கீற்றாய் மிளிரத் தொடங்கியிருக்கும் வியாஸ்காந்தோடு பேசினோம்.

”என்னுடைய இந்த வெற்றிக்கு யாழ். மத்திய கல்லூரிக்கு பெரும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். என் திறன் கண்டு, அதற்கு ஏற்றால் போல பயிற்சிகளை எடுத்துக் கொள்வத்கு என் பள்ளிக்கூடம் பெரும் உதவியாக இருந்தது.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அதேபோன்று என் குடும்பத்தை குறித்துப் பேசியாக வேண்டும். அவர்கள் கொடுக்கும் ஆதரவும், ஊக்குவிப்பும் இல்லையென்றால் என்னால் இவ்வளவு தூரம் வரை செல்ல முடிந்திருக்காது.

என்னுடைய சகோதரர்களும் பயிற்சிக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள். அந்த வாய்ப்புக்களைப் பயன்படுத்திக் கொண்டு இந்தளவு தூரம் நான் வந்திருக்கிறேன்.

வழமையாக அனைத்துப் போட்டிகளும் நன்றாக என்னுடைய திறனை வெளிப்படுத்துவேன். வடக்கின் பெரும் போர் என்று வர்ணிக்கப்படும், மத்தியகல்லூரி எதிர் பரியோவான் கல்லூரிகளுக்கிடையில் நடந்த சமர் போட்டிகள் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்தப் போட்டிகளில் ஓரளவுக்கு என் திறனை வெளிப்படுத்தி கல்லூரி வெற்றிக்கு என் பங்கும் இருந்ததை எண்ணி பெருமை கொள்கிறேன். அந்தப் போட்டியில் இரு இன்னிங்ஸில் ஆறு விக்கெட்டுகளையும், 36 ஓட்டங்களையும் பெற்றேன்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

தொடர்ந்து மாகாண மட்டப் போட்டிகள் சவாலாக இருந்தன. அந்தப் போட்டிகளில் விளையாடுவதற்கு அதிகளவான பயற்சிகளை பெற்றுக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது. வட மத்திய, வட மேல் மாகாணங்களுக்கிடையிலான போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலமாக 19வயது தேசிய அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொண்டேன்.

சாதாரணமாக எமது மைதானங்களில் விளையாடி விட்டு பெரும் மைதானங்களில் விளையாடுவதென்பது கடினமான ஒன்று. இதற்கு அதிகளவான பயிற்சிகள் தேவை என்பதை உணர்ந்தேன்.

எமது மாகாணங்களில் பல இளைஞர்கள் மாணவர்கள் விளையாடும் ஆர்வத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கான வாய்ப்புக்கள், வசதிகள் இடம் கொடுப்பதில்லை. அந்த வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.” என்று கூறுகிறார் வியாஸ்காந்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

எங்கள் பிள்ளையின் வெற்றிப் பாதையை எண்ணிப் பெருமை கொள்கிறோம் என்கிறார்கள் வியாஸ்காந்தின் பெற்றோர்கள். சிறு வயதிலிருந்தே அவன் பந்தோடு தான் இருப்பான். அவனுக்கான தடைகளை நாங்கள் விதித்ததில்லை. பாடசாலை அணியில் சேர்ந்து விளையாடுவதற்கும் அடம்பிடித்துக் கொண்டான்.

தேசிய அணியில் விளையாடிய முதலாவது யாழ். வீரர் என்ற பெருமையை அவன் பிடித்திருப்பது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவனின் அடைவு மட்டத்தை எண்ணி பெரும் மகிழ்ச்சியடைகின்றோம் என்கிறார்கள் பெற்றோர்கள்.

பதினாறு வயதேயான விஜயகாந்த் வியாஸ்காந் யாழ். மத்திய கல்லூரியே தன்னை அடையாளப்படுத்தியதாக குறிப்பிடுகிறான். தனக்கு பயிற்சி கொடுத்த சிறு வயது- ராஜதுரை வினோத்குமார் தற்போது- சந்திரமோகன் சுரேஷ்மோகன் ஆகிய பயிற்சியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறான்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

தன்னுடன் சேர்ந்து விளையாடிய சக வீரர்கள், மாணவர்களை நினைவுபடுத்தும் வியாஸ்காந், முதலாவது சர்வதேசப் போட்டியில் முதலாவது இன்னிங்ஸ் 21 ஓவர் 94 ரண் கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தியிருக்கிறான். துடுப்பாட்டத்தில் 3 ரண் (17 பந்துகள்). இரண்டாவது இன்னிங்ஸ் ; துடுப்பாட்டம் 16 ரண்(32பந்துகள்). களத்தடுப்பு - ஒரு ரண் அவுட். எடுத்திருக்கிறான்.

இலங்கையின் தேசிய அணியில் விளையாடி பெரும் சாதனைகளை படைப்பது தனது கனவு என்று கூறும் வியாஸ்காந்திற்கு வாழ்த்துக்கள்.

வடக்கு கிழக்கிலிருந்து தேசிய அணிகளுக்கு தெரிவாகும் வாய்ப்புக்களை பெற இருக்கும் இன்னும் பிற எமது இளைய தலைமுறை வீரர்களுக்கு வியாஸ்காந்தின் வெற்றிப் பயணம் முன்னுதாரணமாக அமையட்டும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

அழிவுகளில் இருந்து மீண்டெழும் ஒரு இனத்தின் வெற்றியென்பது ஒட்டுமொத்த இனத்தின் வெற்றியாகவும், அடையாளமாகவும் மாறும். இன்று பீனிக்ஸ் பறவை போல் எழுந்து வெற்றிப் பாதையில் பயணிக்கும் எம் அடுத்த தலைமுறையினரின் வெற்றி என்பது மகத்தானது. வரலாற்றில் பதியப்பட வேண்டியது.

அத்தகு பாதையில் பயணிக்கும் வியாஸ்காந் சர்வதேசப் போட்டிகளில் விளையாடி மற்றைய அணிகளுக்கு மிரட்டலாய் அமையட்டும். அவன் வழி தேசிய அணியில் தமிழ் இடம் மீண்டும் பிடிக்கட்டும்.

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

http://www.tamilwin.com/special/01/189299?ref=imp-news

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
    • Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:40 AM   யாழ்ப்பாணம் - நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் கடலில் குழந்தை பிரசவித்துள்ளார்.  நயினாதீவைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்று புதன்கிழமை திடீரென பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து, நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர் பரிந்துரைத்தார். அதனையடுத்து போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு, அம்புலன்ஸ் படகு தற்போது சேவையில் ஈடுபடாததால், பொதுமக்கள் போக்குவரத்து படகில் ஏற்றி குறிகாட்டுவான் நோக்கி அழைத்து வந்துள்ளனர்.  இந்நிலையில் கடலில் படகு பயணித்துக்கொண்டிருந்த வேளை, பிரசவ வலி பெண்ணுக்கு அதிகரித்ததை அடுத்து, படகின் கீழ் தளத்தில் இருந்த ஆண்களை மேல் தளத்திற்கு அனுப்பி வைத்த பின்னர் , படகில் பயணித்த பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர்.  படகு குறிகட்டுவான் இறங்கு துறையை வந்தடைந்ததும், அங்கு தயார் நிலையில் நின்ற புங்குடுதீவு வைத்தியசாலையின் நோயாளர் காவு வண்டியில் தாயையும் சேயையும், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர்.  தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/181359
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.