Jump to content

‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்)


Recommended Posts

‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

DSC_0510-copy.jpg?resize=800%2C533
யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 42 பேர் விபத்தினால் மரணமடைந்தும் 2045 பேர் வீதி விபத்தினால் காயமடைந்தும் உள்ளனர். மக்கள் மத்தியில் வீதி ஒழுங்கு தொடர்பில் விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனை சரி செய்யும் வகையில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களின் ஆலோசனையின் பேரில் வடமாகாண ஆளுநர் செயலகம் முதலமைச்சர் அமைச்சு காவல்துறை தலைமையகம் ஆகியன இணைந்து ‘கவனமாக சென்று வாருங்கள்’ நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளன.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் 1500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச்சாரதிகள் கலந்து கொண்டனர். கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த வீதி போக்குவரத்து பொலிஸாரின் செயல்முறை காட்சி நாடகங்களும் வீதியில் அரங்கேற்றப்பட்டன

வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை வட மாகாண ஆளுநர் றெஜினோல் குரே ஒட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

DSC_0414-copy.jpg?resize=800%2C533DSC_0417-copy.jpg?resize=800%2C533DSC_0422-copy.jpg?resize=800%2C533DSC_0427-copy.jpg?resize=800%2C533DSC_0429-copy.jpg?resize=800%2C533DSC_0449-copy.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/88075/

Link to comment
Share on other sites

மிகவும் பாராட்டத்தக்க செயற்பாடு. ஆளுநருக்கும் அவருடன் இணைத்து செயற்படும் மாகாண சபை மற்றும் காவல்துறைக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசுத்தனமான செயற்பாடு இது. ஸ்ரிக்கர் ஒட்டுவதால் விபத்துக்கள் ஒரு போதும் குறையப்போவதில்லை.

 உண்மையான அக்கறை இருப்பின்,

முதலில் காவல்துறை இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும்.

இரண்டாவது சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் வழிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

மூன்றாவது அங்கு ஓடும் வாகனங்களை முறையாக வீதிகளில் ஓடக்கூடிய நிலையில் உள்ளனவா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது வாகனம் ஓட்டுவதில் உள்ள பிரச்சனைகள்,  எப்படியான விபத்துக்கள், அதன் பின்விளைவுகளை என்பவற்றை தெளிவுற விளங்கப்படுத்த வேண்டும்.

ஐந்தாவது ஒழுங்கான வீதி அமைப்பு பராமரித்தல் அமையவேண்டும்.

ஆறாவது பாதசாரிகளுக்கு வீதிப் போக்குவரத்து முறைகளை விளங்க்ப்படுத்த வேண்டும்.

ஏழாவது கட்டாக்காலி நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

மிகவும் பாராட்டத்தக்க செயற்பாடு. ஆளுநருக்கும் அவருடன் இணைத்து செயற்படும் மாகாண சபை மற்றும் காவல்துறைக்கும் நன்றிகள்.

பிரச்சனை எப்படி உருவாகின்றது என்பதை எள்ளளவும் சிந்திக்காமல்  ஸ்ரிக்கர் ஒட்டும் செயலுக்கு நன்றி சொல்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமது உயிர் எமது கைகளில் என்ற சிந்தனை எல்லாருக்கும் வர வேண்டும்.அதுக்குப் பிறகுத்தான் மற்றதுகள் எல்லாம்.

Link to comment
Share on other sites

4 hours ago, MEERA said:

லூசுத்தனமான செயற்பாடு இது. ஸ்ரிக்கர் ஒட்டுவதால் விபத்துக்கள் ஒரு போதும் குறையப்போவதில்லை.

 உண்மையான அக்கறை இருப்பின்,

முதலில் காவல்துறை இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும்.

இரண்டாவது சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் வழிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

மூன்றாவது அங்கு ஓடும் வாகனங்களை முறையாக வீதிகளில் ஓடக்கூடிய நிலையில் உள்ளனவா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது வாகனம் ஓட்டுவதில் உள்ள பிரச்சனைகள்,  எப்படியான விபத்துக்கள், அதன் பின்விளைவுகளை என்பவற்றை தெளிவுற விளங்கப்படுத்த வேண்டும்.

ஐந்தாவது ஒழுங்கான வீதி அமைப்பு பராமரித்தல் அமையவேண்டும்.

ஆறாவது பாதசாரிகளுக்கு வீதிப் போக்குவரத்து முறைகளை விளங்க்ப்படுத்த வேண்டும்.

ஏழாவது கட்டாக்காலி நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

எட்டாவது எல்லா சாரதிகளுக்கும் தரமான முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணசபையின் மாஜி போக்குவரத்து அமைச்சர் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த தான் மீண்டும் அமைச்சர் பதவியில் அமரவேண்டும் என்று அண்மைய செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார். ஆளுனரின் இந்த அதிரடி நகர்வுக்கு மாஜி போக்குவரத்து அமைச்சரின் கருத்து என்னவாயிருக்கும்.

உயர்பொறுப்புகளில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கடமைகளை சரிவர புரிந்துகொண்டு வேலை செய்தாலே விபத்துகளையும் உயிரிழப்புகளையும் கணிசமாக குறைக்கலாம். இதற்கு ஆளுனரோ முதலமைச்சரோ போக்குவரத்து அமைச்சரோ வீதியில் இறங்கி வேலைசெய்து பந்தா காண்டவேண்டிய அவசியமில்லை. 

வாகனங்களின் குறைபாடுகளையும் பழுதுகளையும் கண்டறிந்து உடனுக்குடன் திருத்தவேலைகளை செய்வதற்கும் பாதசாரிகள் உட்பட வாகனச்சாரதிகளுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி செய்முறையிலும் பாடவகுப்புகளிலும் சித்திபெற்றவர்களுக்குமட்டுமே வாகன ஓட்டுநருக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

எட்டாவது எல்லா சாரதிகளுக்கும் தரமான முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ பொலிஸ் மாதிரி நாட்டுப் பற்றுடன் சிறிலங்கா காவல்துறை செயல்படுமானால் எந்த அறிவித்தலும் தேவையில்லை. 

அத்துடன் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலைகள் இல்லாததும் விபத்துக்கான முக்கிய காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அத்துடன் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலைகள் இல்லாததும் விபத்துக்கான முக்கிய காரணம்.

அதை இங்கு சுட்டி காட்டிய போது வேண்டிகட்டியது நினைவுக்கு வருது பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

712_C748_F-0_D09-47_E4-81_D2-_ACC011_CD2

 

5 hours ago, ஈழப்பிரியன் said:

கவனமாக வெட்டுங்கள்.

ஒரு வரியில், சிந்திக்க...   கூறிய விதம் அருமை.

Link to comment
Share on other sites

9 hours ago, MEERA said:

லூசுத்தனமான செயற்பாடு இது. ஸ்ரிக்கர் ஒட்டுவதால் விபத்துக்கள் ஒரு போதும் குறையப்போவதில்லை.

 உண்மையான அக்கறை இருப்பின்,

முதலில் காவல்துறை இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும்.

இரண்டாவது சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் வழிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

மூன்றாவது அங்கு ஓடும் வாகனங்களை முறையாக வீதிகளில் ஓடக்கூடிய நிலையில் உள்ளனவா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது வாகனம் ஓட்டுவதில் உள்ள பிரச்சனைகள்,  எப்படியான விபத்துக்கள், அதன் பின்விளைவுகளை என்பவற்றை தெளிவுற விளங்கப்படுத்த வேண்டும்.

ஐந்தாவது ஒழுங்கான வீதி அமைப்பு பராமரித்தல் அமையவேண்டும்.

ஆறாவது பாதசாரிகளுக்கு வீதிப் போக்குவரத்து முறைகளை விளங்க்ப்படுத்த வேண்டும்.

ஏழாவது கட்டாக்காலி நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

அடேங்கப்பா! இவ்வளவு அறிவாளியான நீங்கள் ஏன் நீங்கள் யாழ்ப்பாணம் போய் மாகாணசபைக்கு ஆலோசகராக இருக்க கூடாது? நீங்கள் சொல்வது எல்லாம் செய்ய வேண்டியவை தான், ஆனால் நடைமுறையில் இவ்வளவும் செய்ய பல பத்து ஆண்டுகளாகும். செய்து முடிக்க ஸ்ரீ லங்கா சிங்கப்பூர் ஆகி விடும்.

ஸ்டிக்கர் ஒட்டுவதன் நோக்கம் மீண்டும் மீண்டும் சாவு வரும், கவனம் என்று அறிவுறுத்தவே. இங்கே அமேரிக்கா, கனடாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பளிச்சிடும் எழுத்துக்களில், கவனமாக வீடு போய் சேருங்கள் என்று போட்டு இருப்பார்கள். தூங்கி ஓய்வு எடுத்து விட்டு ஓடுங்கள் என்றும் போடுவார்கள். இந்த முறைகள் உலகளாவிய அளவில் பயனுள்ளவை என்று அறியப்பட்டு உள்ள முறைகள்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ பொலிஸ் மாதிரி நாட்டுப் பற்றுடன் சிறிலங்கா காவல்துறை செயல்படுமானால் எந்த அறிவித்தலும் தேவையில்லை. 

தமிழீழ பொலிஸ்  என்றதும் 1992 டிசம்பரில் தமிழீழம் கடந்து ஊரியானுக்கூடாக யாழ்ப்பாணம் போன காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள். கிளிநோச்சியை வந்தடையத்தான் தெரிந்தது தாக்குதல்கள் காரனாமாக ஊரியானுக்கூடாக படகுகள் ஓடவில்லை என்று.  தமிழீழத்தில் இரவு நிற்க வேண்டி வந்தது. ஒரு தேவாலயத்தில் படுத்தோம். விடிய எழுந்தால் பிரதான வீதியில் கொஞ்சம் பரபரப்பு! பக்கத்தில் இருந்த சாப்பாட்டு கடையில் ஒரு படுகொலை. கடைக்காரர் எல்லோரும் சேர்ந்து ஒருவரை வெட்டியும் அடித்தும் கொன்றுவிட்டார்கள். இறந்தவர் கப்பம் வசூலிக்கும் ஊர் சண்டியர். கூப்பிடு தூரத்தில் தமிழீழ போலிஸ் நிலையம்.

அத்துடன் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலைகள் இல்லாததும் விபத்துக்கான முக்கிய காரணம்.

காலையில் கொலை. மாலையில் காலாற  கிளிநோச்சி நெடுஞ்சாலையில் நடந்தால் ஒரு வயோதிப பெண்ணின் அழுகுரல். சாலையில் அருகில் உள்ள பள்ளமான நிலத்தில் இருந்த அவரது வீட்டு காணிக்குள் ஊர் கழிவு நீரை நகர ஊழியர்கள் கான் வெட்டி விட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களை ஒரு பொறியியலாளர் வழிநடத்தி கொண்டு இருந்தார். நான் மனம் தாங்காமல் அவரிடம் கேட்டேன் ஏன் நீங்கள் சாலைக்கு குறுக்காக வெட்டி மறுபுறம் உள்ள காட்டுக்குள்  கழிவு நீரை விடக்கூடாது என்று. அவர் சொன்னார் இது இயக்கத்தின் மேலிடத்து உத்தரவு என்று. நான் கேள்வி கேட்பதை கண்ட அவரது மேலாளர் தொலைவில் இருந்து மோட்டார் சயிக்கிளில் வேகமாக வந்தார். "இவர் ஆர் கனக்க கதைக்கிறார்?" என்று அவரிடம் காட்டமாக கேட்டார். நான் தலை தப்பியது காணும் என்று நடையை கட்டினேன். 

இதற்கு பிறகு தமிழீழம் போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

8 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் எமது உயிர் எமது கைகளில் என்ற சிந்தனை எல்லாருக்கும் வர வேண்டும்.அதுக்குப் பிறகுத்தான் மற்றதுகள் எல்லாம்.

அதை அடிக்கடி நினைவுஊட்ட தான் இந்த ஸ்டிக்கர்.

8 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை எப்படி உருவாகின்றது என்பதை எள்ளளவும் சிந்திக்காமல்  ஸ்ரிக்கர் ஒட்டும் செயலுக்கு நன்றி சொல்கின்றார்.

நீங்கள் அதை சிந்தித்து கண்டுபிடித்து உலகுக்கே வழிகாட்டலாமே? தமிழீழத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டீர்கள். இனி இது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

அடேங்கப்பா! இவ்வளவு அறிவாளியான நீங்கள் ஏன் நீங்கள் யாழ்ப்பாணம் போய் மாகாணசபைக்கு ஆலோசகராக இருக்க கூடாது? நீங்கள் சொல்வது எல்லாம் செய்ய வேண்டியவை தான், ஆனால் நடைமுறையில் இவ்வளவும் செய்ய பல பத்து ஆண்டுகளாகும். செய்து முடிக்க ஸ்ரீ லங்கா சிங்கப்பூர் ஆகி விடும்.

ஸ்டிக்கர் ஒட்டுவதன் நோக்கம் மீண்டும் மீண்டும் சாவு வரும், கவனம் என்று அறிவுறுத்தவே. இங்கே அமேரிக்கா, கனடாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பளிச்சிடும் எழுத்துக்களில், கவனமாக வீடு போய் சேருங்கள் என்று போட்டு இருப்பார்கள். தூங்கி ஓய்வு எடுத்து விட்டு ஓடுங்கள் என்றும் போடுவார்கள். இந்த முறைகள் உலகளாவிய அளவில் பயனுள்ளவை என்று அறியப்பட்டு உள்ள முறைகள்.

 

எத்தனை தசாப்தங்களாக இலங்கை - சிங்கப்பூர் ஆகிவிடும் என்று கதை விடுகிறோம், ஆனால் அங்குள்ள அரசோ மக்களோ அதை நோக்கி ஒரு அடியேனும் நகர்ந்ததில்லை.

அமேரிக்கா கனடாவில் high way இல் நாய் ஓடுகிறதா அல்லது இத்துப் போன road worthy இல்லாத வாகனங்கள் தான் ஓடுகின்றனவா? 

இலங்கையில் என்றாவது overloaded என்று எந்த வாகனமாவது நிறுத்தப்பட்டிருக்கிறதா?

 

வடமாகாண சபையை யார்தான் கவனத்தில் எடுக்கிறார்கள்? 

(என்னுடன் கூடப்படித்தவர்களே அரச திணைக்களங்களிலும் வடமாகாண சபையிலும் வேலை செய்கிறார்கள், சில வருடங்களுக்கு முன்னர் " என்னுடன், கூடப்படித்தவனே எனது அறிக்கைக்கு பதில் அனுப்புகிறான் இல்லை" என வடமாகாண சபையில் வேலை செய்யும் நண்பன் குறைபட்டுக் கொண்டான், இப்போ அவனும் அரச திணைக்களத்திற்கு மாற்றலாகிவிட்டான்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை எப்படி உருவாகின்றது என்பதை எள்ளளவும் சிந்திக்காமல்  ஸ்ரிக்கர் ஒட்டும் செயலுக்கு நன்றி சொல்கின்றார்.

அவர் அப்படித்தான். அரசாங்கம் எது செய்தாலும் செம்பு தூக்கிக்கொண்டு வந்திடுவார்.பிறகுதான் நல்லதா கெட்டதா என்றெல்லாம் யோசிப்பார்.இனிப்பாருங்கோ அதை நியாயப்படுத்த ஒரு பெரிய வகுப்பெடுப்பார்.
அப்பாடா அதை நினைக்க இப்பவே  கண்ணை கட்டுதே.!!

18 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் எமது உயிர் எமது கைகளில் என்ற சிந்தனை எல்லாருக்கும் வர வேண்டும்.அதுக்குப் பிறகுத்தான் மற்றதுகள் எல்லாம்.

இப்போ எமது உயிர்களெல்லாம் எமக்கு முன்னே அல்லது பின்னே வாகனம் ஓட்டி வருபவரின் கைகளிலோ அல்லது கால்களிலிலேயே  தங்கி இருக்கிறது.நாம் எவ்வளவு கவனமாக வண்டி ஓட்டினாலும், முன்னாலும், பக்கத்தாலும் பின்னாலும் வந்தெல்லோ இடிக்கிறாங்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

ஸ்டிக்கர் ஒட்டுவதன் நோக்கம் மீண்டும் மீண்டும் சாவு வரும், கவனம் என்று அறிவுறுத்தவே. இங்கே அமேரிக்கா, கனடாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பளிச்சிடும் எழுத்துக்களில், கவனமாக வீடு போய் சேருங்கள் என்று போட்டு இருப்பார்கள். தூங்கி ஓய்வு எடுத்து விட்டு ஓடுங்கள் என்றும் போடுவார்கள். இந்த முறைகள் உலகளாவிய அளவில் பயனுள்ளவை என்று அறியப்பட்டு உள்ள முறைகள்.

 

நீங்கள் சொல்வது மிகச்சரியே. இந்த வாசகங்கள் பெரிய எழுத்துக்களில் சாலை ஓரங்களில் பெரிய விளம்பர பலகைகளில் எழுதப்படவேண்டும். ஸ்டிக்கரில் அடித்து அதை எமது வாகனத்திலேயே ஓட்டுவதைத்தான் லூசுத்தனமான வேலை என்று மீரா குறிப்பிட்டார்.  அப்படித்தானே மீரா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிவேகம்,சாலைவிதிகளை மீறுவோர்களுக்கு  அதியுச்ச தண்டப்பணம், வாகனம் பறிமுதல், சாரதி அனுமதி பத்திரம் ரத்து போன்றன தண்டனையாக வழங்கப்பட்டாலொழிய விபத்துக்களை கட்டுக்குள் கொண்டுவருவது முடியாத காரியம்.

எதுவும் புரியாத மக்களுக்குத்தான் விழிப்புணர்வு பயன்படும்,

இழப்புக்கள்,வலிகள்,காயங்கள் என எல்லாமே பட்டு தெரிந்த மக்களுக்கு விழிப்புணர்வு என்பது வெறும் நேர விரயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

கடைக்காரர் எல்லோரும் சேர்ந்து ஒருவரை வெட்டியும் அடித்தும் கொன்றுவிட்டார்கள். இறந்தவர் கப்பம் வசூலிக்கும் ஊர் சண்டியர். கூப்பிடு தூரத்தில் தமிழீழ போலிஸ் நிலையம்.

இப்படிப்பட்டவர் இருந்தால் என்ன இறந்தால் என்ன?சிலவேளை இயக்கம் சொல்லியும் மீறியிருப்பார்.அதனால் இயக்கமே சொல்லி பிளானும் கொடுத்திருக்கலாம்.  

உங்களுக்கு புலிகள் என்றால் எப்பவுமே கிலி கொள்கிறீர்கள்.ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆயிரம் திறமை இருந்தால் அதைப் பாராட்டுங்கள்.இருக்கும் ஓரிரு குறைகுற்றத்தையே தூக்கிப் பிடிக்காதீர்கள்.
இப்படியே போனால் உலகில் எந்த ஒரு கணவன் மனைவி கூட சேர்ந்து வாழ இயலாது.நீங்கள் மனைவிக்கும் மனைவி உங்களுக்கும் 100 வீதமும் பிடிக்கும்படியாக வாழமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

தமிழீழ பொலிஸ்  என்றதும் 1992 டிசம்பரில் தமிழீழம் கடந்து ஊரியானுக்கூடாக யாழ்ப்பாணம் போன காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள். கிளிநோச்சியை வந்தடையத்தான் தெரிந்தது தாக்குதல்கள் காரனாமாக ஊரியானுக்கூடாக படகுகள் ஓடவில்லை என்று.  தமிழீழத்தில் இரவு நிற்க வேண்டி வந்தது. ஒரு தேவாலயத்தில் படுத்தோம். விடிய எழுந்தால் பிரதான வீதியில் கொஞ்சம் பரபரப்பு! பக்கத்தில் இருந்த சாப்பாட்டு கடையில் ஒரு படுகொலை. கடைக்காரர் எல்லோரும் சேர்ந்து ஒருவரை வெட்டியும் அடித்தும் கொன்றுவிட்டார்கள். இறந்தவர் கப்பம் வசூலிக்கும் ஊர் சண்டியர். கூப்பிடு தூரத்தில் தமிழீழ போலிஸ் நிலையம்.

ஊர் இடத்தை சொல்லாமல் யாரும் கட்டுக்கதை பரப்பலாம் பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊர் இடத்தை சொல்லாமல் யாரும் கட்டுக்கதை பரப்பலாம் பாஸ் .

இவர்கள்...இப்படிப்பட்டவர்கள் தான் புலிகளால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஏன் சந்ததிக்குமே ஆபத்து என்று சொல்லி சிற்றிசன் எடுத்து சுகபோக வாழ்கை வாழ்கின்றவர்கள்.
இலங்கை பூர்வீகமே தெரியாதவர்கள். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை நான் ஓட்டோவில் போகும் போது ஒரு பாதுகாப்பில்லாத ரயில் கடவையில் அதன் சாரதி எந்தப் பக்கமும் பாக்காமல் வேகத்தையும் குறைக்காமல் போனார்.என்னப்பா இப்படி போகிறீகள் என்டு கேட்டதற்க்கு இது ரயில் வாற நேரம் இல்லை எங்களுக்கு இது எல்லாம் வலு நோமல் என்றார்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

நீங்கள் அதை சிந்தித்து கண்டுபிடித்து உலகுக்கே வழிகாட்டலாமே? தமிழீழத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டீர்கள். இனி இது ?

புலிகளின் நடவடிக்கைகளை  நீதி நியாயம் ஒழுங்கு  என சிங்கள மக்களும் அரசும் மெச்சுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு முறை நான் ஓட்டோவில் போகும் போது ஒரு பாதுகாப்பில்லாத ரயில் கடவையில் அதன் சாரதி எந்தப் பக்கமும் பாக்காமல் வேகத்தையும் குறைக்காமல் போனார்.என்னப்பா இப்படி போகிறீகள் என்டு கேட்டதற்க்கு இது ரயில் வாற நேரம் இல்லை எங்களுக்கு இது எல்லாம் வலு நோமல் என்றார்.?

முன்னர் ஓட்டோவுக்கு இரண்டு பக்கத்தாலும் ஏறி இறங்கலாம்.இப்போ என்ன நடந்தாலும் ஒரே ஒரு பக்கத்தால்த் தான் ஏறி இறங்கலாம்.ஆனால் சாரதி இரண்டு பக்கமும் பாவிக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.