Jump to content

‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்)


Recommended Posts

‘கவனமாக சென்று வாருங்கள்’ ( படங்கள்)

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

DSC_0510-copy.jpg?resize=800%2C533
யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக விபத்துக்கள் அதிகரித்துள்ளன. கடந்த 6 மாத காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையில் மட்டும் 42 பேர் விபத்தினால் மரணமடைந்தும் 2045 பேர் வீதி விபத்தினால் காயமடைந்தும் உள்ளனர். மக்கள் மத்தியில் வீதி ஒழுங்கு தொடர்பில் விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனை சரி செய்யும் வகையில் வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அவர்களின் ஆலோசனையின் பேரில் வடமாகாண ஆளுநர் செயலகம் முதலமைச்சர் அமைச்சு காவல்துறை தலைமையகம் ஆகியன இணைந்து ‘கவனமாக சென்று வாருங்கள்’ நிகழ்ச்சித்திட்டத்தினை ஆரம்பித்து வைத்துள்ளன.

யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் 1500க்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்கள் மற்றும் வாகனச்சாரதிகள் கலந்து கொண்டனர். கொழும்பிலிருந்து வருகை தந்திருந்த வீதி போக்குவரத்து பொலிஸாரின் செயல்முறை காட்சி நாடகங்களும் வீதியில் அரங்கேற்றப்பட்டன

வீதிகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான விழிப்புணர்வு ஸ்ரிக்கர்களை வட மாகாண ஆளுநர் றெஜினோல் குரே ஒட்டி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்திருந்தார்.

DSC_0414-copy.jpg?resize=800%2C533DSC_0417-copy.jpg?resize=800%2C533DSC_0422-copy.jpg?resize=800%2C533DSC_0427-copy.jpg?resize=800%2C533DSC_0429-copy.jpg?resize=800%2C533DSC_0449-copy.jpg?resize=800%2C533

http://globaltamilnews.net/2018/88075/

Link to comment
Share on other sites

மிகவும் பாராட்டத்தக்க செயற்பாடு. ஆளுநருக்கும் அவருடன் இணைத்து செயற்படும் மாகாண சபை மற்றும் காவல்துறைக்கும் நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லூசுத்தனமான செயற்பாடு இது. ஸ்ரிக்கர் ஒட்டுவதால் விபத்துக்கள் ஒரு போதும் குறையப்போவதில்லை.

 உண்மையான அக்கறை இருப்பின்,

முதலில் காவல்துறை இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும்.

இரண்டாவது சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் வழிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

மூன்றாவது அங்கு ஓடும் வாகனங்களை முறையாக வீதிகளில் ஓடக்கூடிய நிலையில் உள்ளனவா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது வாகனம் ஓட்டுவதில் உள்ள பிரச்சனைகள்,  எப்படியான விபத்துக்கள், அதன் பின்விளைவுகளை என்பவற்றை தெளிவுற விளங்கப்படுத்த வேண்டும்.

ஐந்தாவது ஒழுங்கான வீதி அமைப்பு பராமரித்தல் அமையவேண்டும்.

ஆறாவது பாதசாரிகளுக்கு வீதிப் போக்குவரத்து முறைகளை விளங்க்ப்படுத்த வேண்டும்.

ஏழாவது கட்டாக்காலி நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

மிகவும் பாராட்டத்தக்க செயற்பாடு. ஆளுநருக்கும் அவருடன் இணைத்து செயற்படும் மாகாண சபை மற்றும் காவல்துறைக்கும் நன்றிகள்.

பிரச்சனை எப்படி உருவாகின்றது என்பதை எள்ளளவும் சிந்திக்காமல்  ஸ்ரிக்கர் ஒட்டும் செயலுக்கு நன்றி சொல்கின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் எமது உயிர் எமது கைகளில் என்ற சிந்தனை எல்லாருக்கும் வர வேண்டும்.அதுக்குப் பிறகுத்தான் மற்றதுகள் எல்லாம்.

Link to comment
Share on other sites

4 hours ago, MEERA said:

லூசுத்தனமான செயற்பாடு இது. ஸ்ரிக்கர் ஒட்டுவதால் விபத்துக்கள் ஒரு போதும் குறையப்போவதில்லை.

 உண்மையான அக்கறை இருப்பின்,

முதலில் காவல்துறை இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும்.

இரண்டாவது சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் வழிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

மூன்றாவது அங்கு ஓடும் வாகனங்களை முறையாக வீதிகளில் ஓடக்கூடிய நிலையில் உள்ளனவா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது வாகனம் ஓட்டுவதில் உள்ள பிரச்சனைகள்,  எப்படியான விபத்துக்கள், அதன் பின்விளைவுகளை என்பவற்றை தெளிவுற விளங்கப்படுத்த வேண்டும்.

ஐந்தாவது ஒழுங்கான வீதி அமைப்பு பராமரித்தல் அமையவேண்டும்.

ஆறாவது பாதசாரிகளுக்கு வீதிப் போக்குவரத்து முறைகளை விளங்க்ப்படுத்த வேண்டும்.

ஏழாவது கட்டாக்காலி நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

எட்டாவது எல்லா சாரதிகளுக்கும் தரமான முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு மாகாணசபையின் மாஜி போக்குவரத்து அமைச்சர் இதுபோன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த தான் மீண்டும் அமைச்சர் பதவியில் அமரவேண்டும் என்று அண்மைய செவ்வியொன்றில் குறிப்பிட்டிருந்தார். ஆளுனரின் இந்த அதிரடி நகர்வுக்கு மாஜி போக்குவரத்து அமைச்சரின் கருத்து என்னவாயிருக்கும்.

உயர்பொறுப்புகளில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கடமைகளை சரிவர புரிந்துகொண்டு வேலை செய்தாலே விபத்துகளையும் உயிரிழப்புகளையும் கணிசமாக குறைக்கலாம். இதற்கு ஆளுனரோ முதலமைச்சரோ போக்குவரத்து அமைச்சரோ வீதியில் இறங்கி வேலைசெய்து பந்தா காண்டவேண்டிய அவசியமில்லை. 

வாகனங்களின் குறைபாடுகளையும் பழுதுகளையும் கண்டறிந்து உடனுக்குடன் திருத்தவேலைகளை செய்வதற்கும் பாதசாரிகள் உட்பட வாகனச்சாரதிகளுக்கு சிறந்த பயிற்சிகளை வழங்கி செய்முறையிலும் பாடவகுப்புகளிலும் சித்திபெற்றவர்களுக்குமட்டுமே வாகன ஓட்டுநருக்கான அனுமதிப்பத்திரம் வழங்கப்படுதல் வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Athavan CH said:

எட்டாவது எல்லா சாரதிகளுக்கும் தரமான முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

 

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ பொலிஸ் மாதிரி நாட்டுப் பற்றுடன் சிறிலங்கா காவல்துறை செயல்படுமானால் எந்த அறிவித்தலும் தேவையில்லை. 

அத்துடன் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலைகள் இல்லாததும் விபத்துக்கான முக்கிய காரணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அத்துடன் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலைகள் இல்லாததும் விபத்துக்கான முக்கிய காரணம்.

அதை இங்கு சுட்டி காட்டிய போது வேண்டிகட்டியது நினைவுக்கு வருது பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Kavi arunasalam said:

712_C748_F-0_D09-47_E4-81_D2-_ACC011_CD2

 

5 hours ago, ஈழப்பிரியன் said:

கவனமாக வெட்டுங்கள்.

ஒரு வரியில், சிந்திக்க...   கூறிய விதம் அருமை.

Link to comment
Share on other sites

9 hours ago, MEERA said:

லூசுத்தனமான செயற்பாடு இது. ஸ்ரிக்கர் ஒட்டுவதால் விபத்துக்கள் ஒரு போதும் குறையப்போவதில்லை.

 உண்மையான அக்கறை இருப்பின்,

முதலில் காவல்துறை இலஞ்சம் பெறுவதை நிறுத்த வேண்டும்.

இரண்டாவது சாரதி அனுமதிப்பத்திரம் எடுக்கும் வழிகளில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும்.

மூன்றாவது அங்கு ஓடும் வாகனங்களை முறையாக வீதிகளில் ஓடக்கூடிய நிலையில் உள்ளனவா என்று உறுதிப்படுத்த வேண்டும்.

நான்காவது சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும் போது வாகனம் ஓட்டுவதில் உள்ள பிரச்சனைகள்,  எப்படியான விபத்துக்கள், அதன் பின்விளைவுகளை என்பவற்றை தெளிவுற விளங்கப்படுத்த வேண்டும்.

ஐந்தாவது ஒழுங்கான வீதி அமைப்பு பராமரித்தல் அமையவேண்டும்.

ஆறாவது பாதசாரிகளுக்கு வீதிப் போக்குவரத்து முறைகளை விளங்க்ப்படுத்த வேண்டும்.

ஏழாவது கட்டாக்காலி நாய்கள் மாடுகளை கட்டுப்படுத்த வேண்டும்.

அடேங்கப்பா! இவ்வளவு அறிவாளியான நீங்கள் ஏன் நீங்கள் யாழ்ப்பாணம் போய் மாகாணசபைக்கு ஆலோசகராக இருக்க கூடாது? நீங்கள் சொல்வது எல்லாம் செய்ய வேண்டியவை தான், ஆனால் நடைமுறையில் இவ்வளவும் செய்ய பல பத்து ஆண்டுகளாகும். செய்து முடிக்க ஸ்ரீ லங்கா சிங்கப்பூர் ஆகி விடும்.

ஸ்டிக்கர் ஒட்டுவதன் நோக்கம் மீண்டும் மீண்டும் சாவு வரும், கவனம் என்று அறிவுறுத்தவே. இங்கே அமேரிக்கா, கனடாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பளிச்சிடும் எழுத்துக்களில், கவனமாக வீடு போய் சேருங்கள் என்று போட்டு இருப்பார்கள். தூங்கி ஓய்வு எடுத்து விட்டு ஓடுங்கள் என்றும் போடுவார்கள். இந்த முறைகள் உலகளாவிய அளவில் பயனுள்ளவை என்று அறியப்பட்டு உள்ள முறைகள்.

 

Link to comment
Share on other sites

2 hours ago, ஈழப்பிரியன் said:

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழீழ பொலிஸ் மாதிரி நாட்டுப் பற்றுடன் சிறிலங்கா காவல்துறை செயல்படுமானால் எந்த அறிவித்தலும் தேவையில்லை. 

தமிழீழ பொலிஸ்  என்றதும் 1992 டிசம்பரில் தமிழீழம் கடந்து ஊரியானுக்கூடாக யாழ்ப்பாணம் போன காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள். கிளிநோச்சியை வந்தடையத்தான் தெரிந்தது தாக்குதல்கள் காரனாமாக ஊரியானுக்கூடாக படகுகள் ஓடவில்லை என்று.  தமிழீழத்தில் இரவு நிற்க வேண்டி வந்தது. ஒரு தேவாலயத்தில் படுத்தோம். விடிய எழுந்தால் பிரதான வீதியில் கொஞ்சம் பரபரப்பு! பக்கத்தில் இருந்த சாப்பாட்டு கடையில் ஒரு படுகொலை. கடைக்காரர் எல்லோரும் சேர்ந்து ஒருவரை வெட்டியும் அடித்தும் கொன்றுவிட்டார்கள். இறந்தவர் கப்பம் வசூலிக்கும் ஊர் சண்டியர். கூப்பிடு தூரத்தில் தமிழீழ போலிஸ் நிலையம்.

அத்துடன் முக்கியமாக அதிவேக நெடுஞ்சாலைகள் இல்லாததும் விபத்துக்கான முக்கிய காரணம்.

காலையில் கொலை. மாலையில் காலாற  கிளிநோச்சி நெடுஞ்சாலையில் நடந்தால் ஒரு வயோதிப பெண்ணின் அழுகுரல். சாலையில் அருகில் உள்ள பள்ளமான நிலத்தில் இருந்த அவரது வீட்டு காணிக்குள் ஊர் கழிவு நீரை நகர ஊழியர்கள் கான் வெட்டி விட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களை ஒரு பொறியியலாளர் வழிநடத்தி கொண்டு இருந்தார். நான் மனம் தாங்காமல் அவரிடம் கேட்டேன் ஏன் நீங்கள் சாலைக்கு குறுக்காக வெட்டி மறுபுறம் உள்ள காட்டுக்குள்  கழிவு நீரை விடக்கூடாது என்று. அவர் சொன்னார் இது இயக்கத்தின் மேலிடத்து உத்தரவு என்று. நான் கேள்வி கேட்பதை கண்ட அவரது மேலாளர் தொலைவில் இருந்து மோட்டார் சயிக்கிளில் வேகமாக வந்தார். "இவர் ஆர் கனக்க கதைக்கிறார்?" என்று அவரிடம் காட்டமாக கேட்டார். நான் தலை தப்பியது காணும் என்று நடையை கட்டினேன். 

இதற்கு பிறகு தமிழீழம் போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

Link to comment
Share on other sites

8 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் எமது உயிர் எமது கைகளில் என்ற சிந்தனை எல்லாருக்கும் வர வேண்டும்.அதுக்குப் பிறகுத்தான் மற்றதுகள் எல்லாம்.

அதை அடிக்கடி நினைவுஊட்ட தான் இந்த ஸ்டிக்கர்.

8 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை எப்படி உருவாகின்றது என்பதை எள்ளளவும் சிந்திக்காமல்  ஸ்ரிக்கர் ஒட்டும் செயலுக்கு நன்றி சொல்கின்றார்.

நீங்கள் அதை சிந்தித்து கண்டுபிடித்து உலகுக்கே வழிகாட்டலாமே? தமிழீழத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டீர்கள். இனி இது ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Jude said:

அடேங்கப்பா! இவ்வளவு அறிவாளியான நீங்கள் ஏன் நீங்கள் யாழ்ப்பாணம் போய் மாகாணசபைக்கு ஆலோசகராக இருக்க கூடாது? நீங்கள் சொல்வது எல்லாம் செய்ய வேண்டியவை தான், ஆனால் நடைமுறையில் இவ்வளவும் செய்ய பல பத்து ஆண்டுகளாகும். செய்து முடிக்க ஸ்ரீ லங்கா சிங்கப்பூர் ஆகி விடும்.

ஸ்டிக்கர் ஒட்டுவதன் நோக்கம் மீண்டும் மீண்டும் சாவு வரும், கவனம் என்று அறிவுறுத்தவே. இங்கே அமேரிக்கா, கனடாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பளிச்சிடும் எழுத்துக்களில், கவனமாக வீடு போய் சேருங்கள் என்று போட்டு இருப்பார்கள். தூங்கி ஓய்வு எடுத்து விட்டு ஓடுங்கள் என்றும் போடுவார்கள். இந்த முறைகள் உலகளாவிய அளவில் பயனுள்ளவை என்று அறியப்பட்டு உள்ள முறைகள்.

 

எத்தனை தசாப்தங்களாக இலங்கை - சிங்கப்பூர் ஆகிவிடும் என்று கதை விடுகிறோம், ஆனால் அங்குள்ள அரசோ மக்களோ அதை நோக்கி ஒரு அடியேனும் நகர்ந்ததில்லை.

அமேரிக்கா கனடாவில் high way இல் நாய் ஓடுகிறதா அல்லது இத்துப் போன road worthy இல்லாத வாகனங்கள் தான் ஓடுகின்றனவா? 

இலங்கையில் என்றாவது overloaded என்று எந்த வாகனமாவது நிறுத்தப்பட்டிருக்கிறதா?

 

வடமாகாண சபையை யார்தான் கவனத்தில் எடுக்கிறார்கள்? 

(என்னுடன் கூடப்படித்தவர்களே அரச திணைக்களங்களிலும் வடமாகாண சபையிலும் வேலை செய்கிறார்கள், சில வருடங்களுக்கு முன்னர் " என்னுடன், கூடப்படித்தவனே எனது அறிக்கைக்கு பதில் அனுப்புகிறான் இல்லை" என வடமாகாண சபையில் வேலை செய்யும் நண்பன் குறைபட்டுக் கொண்டான், இப்போ அவனும் அரச திணைக்களத்திற்கு மாற்றலாகிவிட்டான்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை எப்படி உருவாகின்றது என்பதை எள்ளளவும் சிந்திக்காமல்  ஸ்ரிக்கர் ஒட்டும் செயலுக்கு நன்றி சொல்கின்றார்.

அவர் அப்படித்தான். அரசாங்கம் எது செய்தாலும் செம்பு தூக்கிக்கொண்டு வந்திடுவார்.பிறகுதான் நல்லதா கெட்டதா என்றெல்லாம் யோசிப்பார்.இனிப்பாருங்கோ அதை நியாயப்படுத்த ஒரு பெரிய வகுப்பெடுப்பார்.
அப்பாடா அதை நினைக்க இப்பவே  கண்ணை கட்டுதே.!!

18 hours ago, சுவைப்பிரியன் said:

முதலில் எமது உயிர் எமது கைகளில் என்ற சிந்தனை எல்லாருக்கும் வர வேண்டும்.அதுக்குப் பிறகுத்தான் மற்றதுகள் எல்லாம்.

இப்போ எமது உயிர்களெல்லாம் எமக்கு முன்னே அல்லது பின்னே வாகனம் ஓட்டி வருபவரின் கைகளிலோ அல்லது கால்களிலிலேயே  தங்கி இருக்கிறது.நாம் எவ்வளவு கவனமாக வண்டி ஓட்டினாலும், முன்னாலும், பக்கத்தாலும் பின்னாலும் வந்தெல்லோ இடிக்கிறாங்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

ஸ்டிக்கர் ஒட்டுவதன் நோக்கம் மீண்டும் மீண்டும் சாவு வரும், கவனம் என்று அறிவுறுத்தவே. இங்கே அமேரிக்கா, கனடாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் பளிச்சிடும் எழுத்துக்களில், கவனமாக வீடு போய் சேருங்கள் என்று போட்டு இருப்பார்கள். தூங்கி ஓய்வு எடுத்து விட்டு ஓடுங்கள் என்றும் போடுவார்கள். இந்த முறைகள் உலகளாவிய அளவில் பயனுள்ளவை என்று அறியப்பட்டு உள்ள முறைகள்.

 

நீங்கள் சொல்வது மிகச்சரியே. இந்த வாசகங்கள் பெரிய எழுத்துக்களில் சாலை ஓரங்களில் பெரிய விளம்பர பலகைகளில் எழுதப்படவேண்டும். ஸ்டிக்கரில் அடித்து அதை எமது வாகனத்திலேயே ஓட்டுவதைத்தான் லூசுத்தனமான வேலை என்று மீரா குறிப்பிட்டார்.  அப்படித்தானே மீரா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதிவேகம்,சாலைவிதிகளை மீறுவோர்களுக்கு  அதியுச்ச தண்டப்பணம், வாகனம் பறிமுதல், சாரதி அனுமதி பத்திரம் ரத்து போன்றன தண்டனையாக வழங்கப்பட்டாலொழிய விபத்துக்களை கட்டுக்குள் கொண்டுவருவது முடியாத காரியம்.

எதுவும் புரியாத மக்களுக்குத்தான் விழிப்புணர்வு பயன்படும்,

இழப்புக்கள்,வலிகள்,காயங்கள் என எல்லாமே பட்டு தெரிந்த மக்களுக்கு விழிப்புணர்வு என்பது வெறும் நேர விரயம்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Jude said:

கடைக்காரர் எல்லோரும் சேர்ந்து ஒருவரை வெட்டியும் அடித்தும் கொன்றுவிட்டார்கள். இறந்தவர் கப்பம் வசூலிக்கும் ஊர் சண்டியர். கூப்பிடு தூரத்தில் தமிழீழ போலிஸ் நிலையம்.

இப்படிப்பட்டவர் இருந்தால் என்ன இறந்தால் என்ன?சிலவேளை இயக்கம் சொல்லியும் மீறியிருப்பார்.அதனால் இயக்கமே சொல்லி பிளானும் கொடுத்திருக்கலாம்.  

உங்களுக்கு புலிகள் என்றால் எப்பவுமே கிலி கொள்கிறீர்கள்.ரொம்பவும் பாதிக்கப்பட்டிருக்கலாம்.எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

ஆயிரம் திறமை இருந்தால் அதைப் பாராட்டுங்கள்.இருக்கும் ஓரிரு குறைகுற்றத்தையே தூக்கிப் பிடிக்காதீர்கள்.
இப்படியே போனால் உலகில் எந்த ஒரு கணவன் மனைவி கூட சேர்ந்து வாழ இயலாது.நீங்கள் மனைவிக்கும் மனைவி உங்களுக்கும் 100 வீதமும் பிடிக்கும்படியாக வாழமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Jude said:

தமிழீழ பொலிஸ்  என்றதும் 1992 டிசம்பரில் தமிழீழம் கடந்து ஊரியானுக்கூடாக யாழ்ப்பாணம் போன காலத்தை நினைவுக்கு கொண்டு வருகிறீர்கள். கிளிநோச்சியை வந்தடையத்தான் தெரிந்தது தாக்குதல்கள் காரனாமாக ஊரியானுக்கூடாக படகுகள் ஓடவில்லை என்று.  தமிழீழத்தில் இரவு நிற்க வேண்டி வந்தது. ஒரு தேவாலயத்தில் படுத்தோம். விடிய எழுந்தால் பிரதான வீதியில் கொஞ்சம் பரபரப்பு! பக்கத்தில் இருந்த சாப்பாட்டு கடையில் ஒரு படுகொலை. கடைக்காரர் எல்லோரும் சேர்ந்து ஒருவரை வெட்டியும் அடித்தும் கொன்றுவிட்டார்கள். இறந்தவர் கப்பம் வசூலிக்கும் ஊர் சண்டியர். கூப்பிடு தூரத்தில் தமிழீழ போலிஸ் நிலையம்.

ஊர் இடத்தை சொல்லாமல் யாரும் கட்டுக்கதை பரப்பலாம் பாஸ் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

ஊர் இடத்தை சொல்லாமல் யாரும் கட்டுக்கதை பரப்பலாம் பாஸ் .

இவர்கள்...இப்படிப்பட்டவர்கள் தான் புலிகளால் தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் ஏன் சந்ததிக்குமே ஆபத்து என்று சொல்லி சிற்றிசன் எடுத்து சுகபோக வாழ்கை வாழ்கின்றவர்கள்.
இலங்கை பூர்வீகமே தெரியாதவர்கள். :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு முறை நான் ஓட்டோவில் போகும் போது ஒரு பாதுகாப்பில்லாத ரயில் கடவையில் அதன் சாரதி எந்தப் பக்கமும் பாக்காமல் வேகத்தையும் குறைக்காமல் போனார்.என்னப்பா இப்படி போகிறீகள் என்டு கேட்டதற்க்கு இது ரயில் வாற நேரம் இல்லை எங்களுக்கு இது எல்லாம் வலு நோமல் என்றார்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

நீங்கள் அதை சிந்தித்து கண்டுபிடித்து உலகுக்கே வழிகாட்டலாமே? தமிழீழத்துக்கு வழி கண்டுபிடித்து விட்டீர்கள். இனி இது ?

புலிகளின் நடவடிக்கைகளை  நீதி நியாயம் ஒழுங்கு  என சிங்கள மக்களும் அரசும் மெச்சுகின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, சுவைப்பிரியன் said:

ஒரு முறை நான் ஓட்டோவில் போகும் போது ஒரு பாதுகாப்பில்லாத ரயில் கடவையில் அதன் சாரதி எந்தப் பக்கமும் பாக்காமல் வேகத்தையும் குறைக்காமல் போனார்.என்னப்பா இப்படி போகிறீகள் என்டு கேட்டதற்க்கு இது ரயில் வாற நேரம் இல்லை எங்களுக்கு இது எல்லாம் வலு நோமல் என்றார்.?

முன்னர் ஓட்டோவுக்கு இரண்டு பக்கத்தாலும் ஏறி இறங்கலாம்.இப்போ என்ன நடந்தாலும் ஒரே ஒரு பக்கத்தால்த் தான் ஏறி இறங்கலாம்.ஆனால் சாரதி இரண்டு பக்கமும் பாவிக்கலாம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/299532
    • "சிந்து சம வெளி, சங்க கால விளையாட்டும் பொழுதுபோக்கும்"     சிந்து சம வெளியில் சிறுவர்களின் வாழ்வைப் பற்றி எமக்கு பெரிதாக ஒன்றும் தெரியாவிட்டாலும், அங்கு கண்டு எடுக்கப்பட்டவைகளில் இருந்து நாம் சில தகவல்களை ஊகிக்கக் கூடியதாக உள்ளது. சுட்ட களி மண்ணில் செய்த பொம்மை வண்டி, பொம்மை மிருகம் போன்றவற்றுடன் விளையாடி மகிழ்ந்தார்கள் என அறிகிறோம். உதாரணமாக, தலையை குலுக்கும் பொம்மை பசு, கயிறு ஒன்றில் வழுக்கி செல்லும் பொம்மை குரங்கு, சின்ன அணில் போன்றவற்றுடன், மழை வெயிலை தவிர்க்க கூடிய, சிறு கூரை அமைக்கப் பட்ட பொம்மை வண்டிலையும் தொல் பொருள் ஆய்வாளர்கள் அங்கு கண்டு எடுத்துள்ளார்கள். இவைகள் எல்லாம் மனித இனம் பொம்மைகளுடன் 4000-5000 ஆண்டுகளுக்கு முன்பே விளையாடத் தொடக்கிவிட்டது என்பதை காட்டுகிறது.   சிந்து சம வெளி நாகரிகத்தில் சிறுவர்கள் முற்றத்திலும், வீதியிலும் தட்டையான கூரையிலும் விளையாடி யிருக்கலாம். மேலும் இன்று எம் சிறுவர்கள் தொலைக் காட்சியில் மகிழ்ந்து நேரத்தை செலவழிப்பது போல இல்லாமல், அன்று இந்த சிறுவர்கள் எளிமையான விசில் [சீழ்க்கை] போன்ற ஒன்றில் மகிழ்ந்து திரிந்தார்கள். பண்டைய இந்த இந்தியர்களே விசிலை கண்டுபிடித்து அதைப்பற்றிய சிந்தனையை எமக்கு ஊட்டியவர்களாக அதிகமாக இருக்கலாம். சிந்து சம வெளி சிறுவர்கள் மெருகூட்டாத மண்ணால் [terracotta] செய்யப்பட்ட சக்கரத்தில் இழுக்கக்கூடிய பொம்மை மிருகம், கிலுகிலுப்பை [rattles], பறவை உருவம் கொண்ட சீழ்க்கை [விசில் / whistles] போன்ற வற்றுடனும் விளையாடி பொழுதை இன்பமாகக் கழித்துள்ளார்கள்.   மேலும் அங்கு ஒரு சிறுவன் சிறு தட்டு ஒன்றை கையில் ஏந்தி நிற்கும் களி மண் உருவம் கிடைத்துள்ளது. அதிகமாக இது ஒரு எறிந்து விரட்டும் [throw-and-chase game] விளையாட்டாக இருக்கலாம். சிந்து சம வெளி இளம் சிறுவர்கள் சிறிய நாளாந்த வீட்டு வேலைகளில் ஈடுபடும் அதேவேளையில், மூத்த பிள்ளைகளுக்கு வேட்டை, கட்டிட கலை, விவசாயம் போன்ற செயற் திறன்கள் போதிக்கப்பட்டன. அத்துடன் சிந்து சம வெளி முதிர்ந்த மக்கள் சூதாட்டத்திலும் பலகை [போர்ட்] விளையாட்டிலும் தங்களது ஓய்வு நேரத்தில் ஈடுபட்டார்கள். தொல்பொருள் ஆய்வாளர்கள் ஹரப்பா பகுதியில், குறிப்பாக கலிபங்கன், லோதல், ரோபர், அலம்கிர் பூர், தேசல்பூர் [Kalibangan, Lothal, Ropar, Alamgirpur, Desalpur] மற்றும் இவையை சுற்றியுள்ள பிரதேசங்களிலும் மணற் கல்லாலும் மெருகூட்டாத மண்ணாலும் செய்த தாயக் கட்டைகளை [பகடைக் காய்களை] கண்டு பிடித்தார்கள். சில கி மு 3000 ஆண்டை சேர்ந்தவையாகும். இவை சூதாட்டத்திற்கு பாவிக்கப் பட்டன. இந்த கட்டைகளே அதிகமாக உலகின் மிகப் பழமையானதாகவும் இருக்கலாம். ஆகவே இன்று நாம் பாவிக்கும் தாயக்கட்டை போன்று ஆறு பக்கங்களையும் புள்ளிகளையும் கொண்ட ஒன்றை முதல் முதலில் பாவித்தவர்கள் இந்த சிந்து சம வெளி மக்களாகவே இருப்பார்கள். இந்த தாயக்கட்டைகள் பின்னர் மேற்கு பக்கமாக பாரசீகத்திற்கு பரவியதாக நம்பப்படுகிறது. தாயக்கட்டை பற்றிய உலகின் மிகப் பழமையான குறிப்புகள் ரிக் வேதத்திலும் அதர்வண வேதத்திலும் காணலாம். இவை சிந்து சம வெளியை வென்ற பின் / கடந்த பின்  ஆரியர்களால் எழுதப்பட்டவை என்பது குறிப்பிடத் தக்கது .   "தாயக்கட்டைகளுடன் என்றுமே விளை யாடாதே. உன்னுடைய வேளாண்மையை செய், அதன் செழிப்பில் மகிழ், அதற்கு மதிப்பு கொடு, உனது கால் நடைகளை நன்றாக பராமரி, உனது மனைவியுடன் திருப்திபடு, இது ஆண்டவன் அறிவுறுத்தல் "   என கி மு 1500–1100 ஆண்டு ரிக் வேதம் 10-34-13 கூறுகிறது.   இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க இலக்கியம் பண்டைய தமிழக தகவல்களை தரும் ஒரு சுரங்கமாக இருப்பதுடன், அவை வரலாற்று முக்கியத்துவம் கொண்ட பலவற்றையும் பிரதி பலிக்கிறது. அலங்கரிக்கப்பட்ட பொம்மைகளுடன் அங்கு சிறுமிகள் அல்லது இளம் பெண்கள் விளையாடியதை தமிழ் சங்க பாடல், நற்றிணை குறிக்கிறது. அதே போல, பொம்மை வண்டிகள், மற்றும் கடற்கரையில் மணல் வீடு கட்டி சிறுவர்கள் விளையாடி யதை குறுந்தொகை எடுத்து கூறுகிறது. மேலும் சமய சம்பந்தமான நடனங்கள், புளியங்கொட்டை, சோளிகள், இரும்பு மற்றும் மரத்தால் ஆன தாயக்கட்டைகளுடன் விளையாடுதல், வரிப்பந்து என அழைக்கப்படும் நூலினால் வரிந்து கட்டப்பட்ட ஒருவகைப் பந்தினைக் கொண்டு ஆடுதல் அன்றைய மகளிரின் வழக்கமாக இருந்தது. மாடி வீடுகளில் மேல் மாடத்தில் வரிப்பந்தாடியது பற்றிப் பெரும்பாணாந்றுப்படை   ‘‘பீலி மஞ்ஞையின் இயலிக் கால தமனிப் பொற்சிலம் பொலிப்ப உயர்நிலை வான்தோய் மாடத்து வரிப் பந்தசைஇ’’   என எடுத்துரைக்கின்றது. மேலும் மரத்தின் கிளையில் பனை நாரில் [கயிற்றில்] கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்தல் பொதுவாக இளம் பெண்களின் பொழுது போக்காக இருந்தது. அப்போது பாடும் பாடல் ஊசல் வரியாகும். இதனைத் திருப்பொன்னூசல் என்று திருவாசகம் குறிப்பிடுகின்றது. தலைவன், தலைவியை ஊசலில் வைத்து ஆட்டியதை,   ‘‘பெருங்கயிறு நாலும் இரும்பனம் பிணையல் பூங்கண் ஆயம் ஊக்க ஊக்காள்’’   என்று குறிஞ்சிக்கலி குறிப்பிடுகின்றது.   பண்டைய தமிழகத்தில் இளம் பெண்கள் ஒப்பீட்டு அளவில் கூடுதலான சுதந்திரத்துடனும் மகிழ்ச்சி யுடனும் தமது வாழ்வை அனுபவித்தார்கள். இந்த மணமாகாத இளம் பெண்கள் எப்படி விளையாடி இன்பமாக பொழுதை போக்கி கழித்தார்கள் என்பதை சங்க இலக்கியம் எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. எனினும் அவர்கள் மகிழ்ந்து விளையாடிய விளையாட்டு அவர்களின் வயதைப் பொறுத்து மாறுபட்டன. அவர்கள் களங்கமில்லாத, அப்பாவி பேதை பருவத்தில், தமது கூட்டாளிகளுடன் தமக்கு மிகவும் பிடித்த, மனகிழ்ச்சி ஊட்டும் பாவை விளையாட்டு விளை யாடினார்கள். அவர்கள் வண்டல் மணலால் அல்லது புல்லால் பாவை (பொம்மை) செய்து அதற்குப் [வண்டற் பாவைக்குப்] பூச்சூட்டி அல்லது பனிக் காலத்தில் கொட்டிக் கிடக்கும் ஈரத்தைப் பயன்படுத்தி பூந்தாதுகளைச் சேர்த்துப் பிடித்து பாவை செய்து விளையாடுவர். இதனை   'தாதின் செய்த தண் பனிப் பாவை காலை வருந்தும் கையாறு ஓம்பு என',   அதாவது மகரந்தம் முதலிய பொடிகளாற் செய்யப்பட்ட மிக்க குளிர்ச்சியையுடைய விளை யாட்டுப் பாவையானது அடுத்த நாள் காலை அதன் வண்ணம் மங்கிவிடும். ஆதலால் அழாதே” என்று கூறித் தோழியர் தலைவியைத் தேற்றினர். என்று குறுந்தொகை 48 குறிப்பிடுகிறது.   பெரும்பாலும் பெண்களின் பல பொழுது போக்கு ஐவகை நிலத்திலும் பொதுவாக இருந்தன, சங்கம் பாடல், ஐங்குறுநூறு 124 இல் தலைவியின் தோழி தலைவனிடம்   "நெய்தல் நிலத் தலைவனே! நான் உன்னிடம் உறவுக் கொண்டவளைப் பார்த்தேன். அந்த பூங்கொடியின் வண்டற் பாவையை அலை கொண்டு பெருங்க கடல் பறித்து சென்றதால் அவள் கடலை உலர்த்தி அதை இல்லாமல் அழிக்க, நுண்மணலை கோபத்துடன் அதனுள் எறிகிறாள்" என கூறுகிறாள்.   "கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே". [ஐங்குறுநூறு 124]   முத்து பதித்த தங்க வளையல்கள் அணிந்தவளே, காந்தள் பூப் போன்ற விரல்களை உடையவளே, அகப்பை போன்ற அழகான முன்கையை கொண்டவளே, நீ சிறு மட்பானையுடனும் வண்ண பாவையுடனும் விளையாடவா இங்கு வந்தாய்? கவர்ச்சி கூட்டும் உன் கால் கொலுசு ஓசை ஒலிக்க, பட்டுப் போன்ற உன் கூந்தல் தோளின் கிழே அவிழ்ந்து விழ, நீ நடந்து வர நான் கண்டேன். நீ என்னை கண்டும் காணாதவளாய் அலட்சியம் செய்து மௌனமாய் விலகிப் போகையில் நான் என்னையே இழந்தேன், என்னை கவனி என, தலைவன் தலைவியிடம் கலித்தொகை 59 இல் கெஞ்சி கேட்கிறான். இதில் குறிப்பிடப்பட்ட பாவை, பிற் காலத்தை சேர்ந்த மரத்தால் செய்யப்பட்ட, கண்ணை கவரும் வண்ண பாவையாக அதிகமாக இருக்கலாம்.   "தளை நெகிழ் பிணி நிவந்த பாசு அடைத் தாமரை முளை நிமிர்ந்தவை போலும் முத்துக் கோல் அவிர் தொடி அடுக்கம் நாறு அலர் காந்தள் நுண் ஏர் தண் ஏர் உருவின் துடுப்பு எனப் புரையும் நின் திரண்ட நேர் அரி முன்கைச் சுடர் விரி வினை வாய்ந்த தூதையும் பாவையும் விளையாட அரிப் பெய்த அழகு அமை புனை வினை ஆய் சிலம்பு எழுந்து ஆர்ப்ப அம் சில இயலும் நின் பின்னு விட்டு இருளிய ஐம்பால் கண்டு என் பால என்னை விட்டு இகத்தர இறந்தீவாய் கேள் இனி" [கலித்தொகை 59]   இதேபோல், சிறு பையன்கள் பொம்மை தேரை உருட்டி விளையாடினார்கள் என்பதை அகநானுறு 16 இலும், பட்டினப் பாலை 20-25 இலும் நாம் காண்கிறோம். காவிரிப்பூம் பட்டினத்தில் கடற்கரை சார்ந்த பாக்கங்களில் வாழ்கின்ற மகளிர் தங்கள் வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்காக நெல்லைப் பரப்பியிருந்தனர். அப்போது அந் நெல்லைக் கொத்தித் தின்ன வந்த கோழியைக் கல்லெறிந்து விரட்டாமல், ஒரு செல்வக் குடும்பப்பெண் ஒருத்தி, பொன்னால் செய்யப்பட்ட கனமான காதணியைக் கழற்றி அதை எறிந்து விரட்டினாள். ஆனால் அக்காதணியானது கோழியின் மேல் படாது, கடற்கரை மணலில் சென்று விழுந்தது. அது, அவ்வழியே சிறுவர்கள் ஓட்டிச் சென்ற முக்கால் சிறுதேரினை மேலே செல்ல விடாமல் தடுத்ததாம். இதனை,   ‘அகநகர் வியன் முற்றத்துச் சுடர்நுதல் மட நோக்கின் நேரிழை மகளிர் உணங்குணாக்கவரும் கோழியெறிந்த கொடுங்காற் கனங்குழை பொற்காற் புதல்வர் புரவியின்றுருட்டும் முக்காற் சிறுதேர் முன் வழி விலக்கும்”   என்ற பட்டினப் பாலை அடிகளால் (20-25) அறியலாம்.   பொம்மலாட்டம் இந்தியர்களின் மிகப் பழமையான மரபுவழிக் கலைகளில் ஒன்று. இது பல ஆண்டுகளாக செய்திகளை மக்களிடையே பரப்பும் ஒரு ஊடகமாகவும் இருந்தது. எதற்கெடுத்தாலும் தலையாட்டும் பேர் வழிகளை, 'சும்மா. தஞ்சாவூர் பொம்மையாட்டம் தலையாட்டாதே' என்று கூறுவதை கேட்டிருப்பீர்கள்.   ஒரு சமயம் தஞ்சையை ஆண்ட மன்னர் சுயமாய் சிந்திக்காமல், ராணி சொன்னதற் கெல்லாம் தலை யாட்டிக் கொண்டே  இருந்தாராம். இதனால் வெறுத்துப் போன குடிமக்கள், ராஜாவை நூதன முறையில் கிண்டலடிக்க, தலையாட்டி பொம்மைகளைச் செய்து வீட்டுக்கு வீடு ஆட்டிவிட்டு தம் செய்தியை பரப்பினர் என்கின்றனர். இந்த பொம்மலாட்டம் சிந்து சம வெளியில் பிறந்து இப்ப மற்றைய பல நாடுகளிலும் காணப்படுகிறது. சிந்து சம வெளி அகழ்வில், கிமு2500 ஆண்டளவை சேர்ந்த பிரிக்கக்கூடிய தலையை கொண்ட பொம்மை ஒன்றை தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டு எடுத்துள்ளார்கள். இந்த தலைகளின் அசைவுகளை ஒரு நூலினால் கையாளக் கூடியதாக உள்ளது. இது பொம்ம லாட்டம் [puppetry] அங்கு இருந்தது என்பதற்கான சான்றாக உள்ளது. ஒரு குச்சியில் மேலும் கீழும் ஏறி இறங்கக் கூடியதாக கையாளக் கூடிய பொம்மை மிருகங்களும் வேறு அகழ்வு ஒன்றில் அங்கு கண்டு பிடிக்கப்பட்டது, இதை மேலும் உறுதிப் படுத்துகிறது. மேலும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட திருக்குறள் கூட, குறள் 1020 இல் மனத்தில் நாணம் இல்லாதவர் உலகத்தில் இயங்குதல், மரத்தால் செய்த பாவையைக் கயிறு கொண்டு ஆட்டி உயிருள்ளதாக மயக்கினாற் போன்றது என்கிறார். இதனை,   "நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை நாணால் உயிர்மருட்டி அற்று".   [குறள் 1020] என்ற அடிகளால் திருவள்ளுவர் கூறுகிறார்.     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]        
    • துபாய் வெள்ளத்துக்கு செயற்கை மழை திட்டம்தான் காரணமா? ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் பாய்ன்டிங் மற்றும் மார்கோ சில்வா பதவி, பிபிசி செய்திகள் 8 மணி நேரங்களுக்கு முன்னர் வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன. துபாய் விமான நிலையம் ‘மிகவும் சவாலான நிலைமைகளை’ எதிர்கொண்டி வருவதாக நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில பகுதிகள் நீரில் மூழ்கியதால், சில பயணிகள் விமான நிலையத்துக்கு வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. துபாயின் வடக்கே, ஒரு கார் திடீர் வெள்ளத்தில் சிக்கி அதிலிருந்த ஒருவர் உயிரிழந்தார். ஓமனில் உள்ள சஹாம் நகரில், மீட்புப் படையினர் ஒரு சிறுமியின் உடலை மீட்டுள்ளனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை முதல் ஓமனில் இறந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்திருக்கிறது. புதன்கிழமை அன்று (ஏப்ரல் 17), துபாய் சர்வதேச விமான நிலையத்திற்குச் செல்லும், மற்றும் அங்கிருந்து புறப்படும் சுமார் 290 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்கள் உலகின் அனைத்து கண்டங்களில் இருக்கும் நாடுகளையும் இணைக்கும் முக்கியமான விமானங்களாகும். மேலும் 440 விமானங்கள் தாமதமானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   பட மூலாதாரம்,ANNE WING படக்குறிப்பு,துபாயிலிருந்து உலகின் பலபகுதிகளுக்குச் செல்லும் பல முக்கியமான விமானச் சேவைகள் முடங்கின வளைகுடா நாடுகளில் இந்த முறை அசாதாரண மழையா? ஆம் என்கிறார்கள் நிபுணர்கள். துபாய், ஐக்கிய அரபு அமீரகத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆனாலும் பொதுவாக மிகவும் வறண்ட பிரதேசம். சராசரியாக ஒரு வருடத்திற்கு 100மி.மீ-க்கும் குறைவான மழையையே பெறுகிறது. ஆனால், எப்போதாவது அங்கு கனமழை பெய்கிறது. துபாயிலிருந்து 100கி.மீ. தொலைவில் இருக்கும் அல்-ஐன் (Al-Ain) நகரில் 24 மணி நேரத்தில் சுமார் 256மி.மீ மழை பதிவாகியுள்ளது. ஒரு ‘துண்டிக்கப்பட்ட’ காற்றழுத்தத் தாழ்வு மையம், சூடான, ஈரமான காற்றை உள்ளிழுத்து மற்ற வானிலை அமைப்புகளை உள்ளே வரவிடாமல் தடுக்கிறது. "வளைகுடா பகுதி நீண்ட காலம் மழையின்றி இருந்தபிறகு, ஒழுங்கற்ற அதிக மழைப்பொழிவுகளைப் பெறுகிறது. ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது மிகவும் அரிதான மழைப்பொழிவு நிகழ்வு," என்கிறார் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மழைப்பொழிவு முறைகளை ஆய்வு செய்யும் வானிலை ஆய்வாளர் பேராசிரியர் மார்டன் அம்பாம். பட மூலாதாரம்,REUTERS/ZAHEER KUNNATH படக்குறிப்பு,வெள்ளக்காடான துபாய் விமான நிலையம் துபாய் பெருமழைக்கு காலநிலை மாற்றம் காரணமா? இந்த திடீர் பெருமழையில் காலநிலை மாற்றம் எவ்வளவு பங்கு வகித்தது என்பதை இன்னும் சரியாகக் கணக்கிட முடியவில்லை. அதற்கு இயற்கை மற்றும் மனித காரணிகளை அறிவியல் ரீதியாக முழுமையாகப் பகுப்பாய்வு செய்யவேண்டும். இதற்குப் பல மாதங்கள் ஆகலாம். ஆனால், காலநிலை மாற்றத்தைப் பொருத்து, அசாதாரண மழைப்பொழிவு நிகழ்கிறது. எளிமையாகச் சொன்னால்: வெப்பமாகும் காற்று அதிக ஈரப்பதத்தைத் தக்கவைக்கும் இது மழையின் தீவிரத்தை அதிகரிக்கும். "இந்த மழையின் தீவிரம் இதுவரை பதிவாகாதது. இது வெப்பமாகும் காலநிலையுடன் ஒத்துப்போகிறது. புயல்களை உருவாக்கும் வகையில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. அதனால் நிகழும் பெருமழை மற்றும் அதனுடன் தொடர்புடைய வெள்ளம் ஆகியவை படிப்படியாக தீவிரமடையும்," என்று ரீடிங் பல்கலைக்கழகத்தின் காலநிலை அறிவியல் பேராசிரியர் ரிச்சர்ட் ஆலன் விளக்குகிறார். உலகம் தொடர்ந்து வெப்பமடைந்து வருவதால், இந்த நூற்றாண்டின் இறுதியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் பெரும்பகுதி முழுவதும் வருடாந்திர மழைப்பொழிவு சுமார் 30% வரை அதிகரிக்கும் என்று ஒரு சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. "நாம் தொடர்ந்து பெட்ரோல், டீசல், எரிவாயு மற்றும் நிலக்கரியை எரித்தால், காலநிலை தொடர்ந்து வெப்பமடையும், மழைப்பொழிவு தொடர்ந்து அதிகமாக இருக்கும், மேலும் வெள்ளத்தில் மக்கள் தொடர்ந்து உயிரிழக்க நேரிடும்," என்கிறார் லண்டனின் இம்பீரியல் கல்லூரியில் காலநிலை அறிவியலின் மூத்த விரிவுரையாளர் முனைவர் ஃப்ரீடெரிக் ஓட்டோ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை செயற்கை மழையால் ஏற்பட்ட வெள்ளமா? செயற்கை மழை (மேக விதைப்பு – Cloud Seeding) என்பது அதிக மழையைப் பெறுவதற்கு மேகங்களைச் செயற்கையாக மாற்றியமைக்கும் முறையாகும். விமானங்கள் மூலம் சில்வர் அயோடைடு போன்ற சிறிய துகள்களை மேகங்களில் தூவுவதன்மூலம் இது செய்யப்படுகிறது. இது மேகங்களில் இருக்கும் நீராவியை நீராக மாற்ற உதவும். இந்தத் தொழில்நுட்பம் பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் ஐக்கிய அரபு அமீரகம் தண்ணீர் பற்றாக்குறையைச் சமாளிக்க இதைப் பயன்படுத்தி வருகிறது. வெள்ளம் ஏற்பட்ட சில மணிநேரங்களில், சமூக ஊடகங்களில் சிலர் அதற்கான காரணம் செயற்கை மழை நடவடிக்கைதான் என்று தவறாகப் பதிவிட்டனர். ‘ப்ளூம்பெர்க்’ தரவு நிறுவனத்தின் அறிக்கைகளின்படி, கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் செயற்கை மழைக்கான விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட செவ்வாய்க்கிழமை அன்று அவை பயன்படுத்தப்படவில்லை. செயற்கை மழை நடவடிக்கை எப்போது நடந்தது என்பதை பிபிசி-யால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடியவில்லை என்றாலும், வல்லுநர்களின் கூற்றுப்படி அது புயலுக்குச் சாதகமாக ஒரு சிறிய விளைவை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் புயலுக்கு செயற்கை மழை-மேக விதைப்பைக் காரணமாகக் காட்டுவது ‘தவறானது’ என்று அவர்கள் கூறுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,துபாய் மழை "மேக விதைப்பு துபாயைச் சுற்றியுள்ள மேகங்களிலிருந்து மழை பொழியவைக்கச் செய்திருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே, காலநிலை மாற்றத்தின் காரணமாக வளிமண்டலம் அதிக நீரை உறிஞ்சி, மேகங்களை உருவாக்கியிருக்கும்," என்று முனைவர் ஓட்டோ கூறுகிறார். மழைப்பொழிவை ஏற்படுத்தும் காற்று, ஈரப்பதம் மற்றும் தூசி ஆகியவை போதுமானதாக இல்லாதபோது மேக விதைப்பு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் கடந்த வாரத்தில், வளைகுடா முழுவதும் வெள்ள அபாயம் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்திருந்தனர். "இதுபோன்ற தீவிரமான வானிலை நிகழ்வுகள் முன்னறிவிக்கப்பட்டால், செயற்கை மழை போன்ற விலையுயர்ந்த செயல்முறைகள் செய்யப்படுவதில்லை. அதற்கான அவசியமில்லை," என்கிறார் அபுதாபியில் உள்ள கலீஃபா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் மற்றும் புவி இயற்பியல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் டயானா பிரான்சிஸ். பிபிசி வானிலை ஆய்வாளர் மாட் டெய்லர் கடுமையான வானிலை நிகழ்வு ஏற்கனவே முன்னறிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார். "இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன. இந்தக் கணினி மாதிரிகள் மேக விதைப்பு விளைவுகளை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை," என்று அவர் கூறினார். "மேக-விதைப்பின் மூலம் நிகழ்பவற்றைவிட இந்த பாதிப்புகள் மிக அதிகமாக இருந்தன. பஹ்ரைனில் இருந்து ஓமன் வரை கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்படிருக்கிறது," என்றார். அமீரகத்தில் மேக விதைப்புப் பணிகள் அரசாங்க அமைப்பான ‘தேசிய வானிலை ஆய்வு மையத்தால் (National Center of Meteorology - NCM) நடத்தப்படுகிறது.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'இந்நிகழ்விற்கு முன்னதாக, கணினி மாதிரிகள் ஏற்கனவே ஒரு வருடம் பெய்யெவேண்டிய மழை சுமார் 24 மணி நேரத்தில் பெய்யும் என்று கணித்திருந்தன' தீவிர மழைக்கு ஐக்கிய அரபு அமீரகம் தயாராக உள்ளதா? கனமழை கொடிய வெள்ளமாக மாறுவதைத் தடுக்க வலுவான பாதுகாப்பு தேவைப்படுகிறது. துபாய் பெரிதும் நகரமயமாக்கப்பட்ட நகரம். ஈரப்பதத்தை உறிஞ்சுவதற்கு சிறியளவே மரங்கள் உள்ளன. மேலும் துபாயின் வடிகால் வசதிகளால் அதீத மழைப்பொழிவைத் தாங்க முடியவில்லை. "அடிக்கடி தீவிர மழைப்பொழிவு ஏற்படும் இந்தப் புதிய யதார்த்தத்தைச் சமாளிக்க உத்திகளும் நடவடிக்கைகளும் தேவை," என்று பேராசிரியர் பிரான்சிஸ் கூறூகிறார். "உதாரணமாக, சாலைகள் மற்றும் கட்டடங்களின் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும். வசந்தகாலத்தின் மழையிலிருந்து நீரைச் சேமித்து, ஆண்டின் பிற்பகுதியில் அதைப் பயன்படுத்துவதற்கு நீர்த்தேக்கங்களை உருவாக்க வேண்டும்," என்றார். இவ்வாண்டு ஜனவரி மாதம், ஐக்கிய அரபு அமீரகத்தின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் துபாயில் வெள்ளத்தை நிர்வகிக்க உதவும் புதிய பிரிவை அமைத்தது. https://www.bbc.com/tamil/articles/crgydzpy7vyo
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.