Jump to content

சென்னையில் 11 வயது சிறுமியை 16 பேர் பாலியல் வன்கொடுமை: காவலாளிகள் உள்பட 18 பேர் கைது


Recommended Posts

சென்னையில் 11 வயது சிறுமியை 16 பேர் பாலியல் வன்கொடுமை: காவலாளிகள் உள்பட 18 பேர் கைது

 

 
murder

சென்னை: சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 11 வயது சிறுமியை காவலாளிகள் உள்பட 18 பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் தொடர்புடையை 18 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னையில் அயனாவத்தில் 350 வீடுகள் கொண்ட பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி சென்னையில் உள்ள பள்ளி ஒன்றில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். செவி திறன் குறைபாடு உள்ள அந்த சிறுமி, தினந்தோறும் பஸ்சில் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். பள்ளிக்கு செல்லும் போதும், வரும்போதும் குடியிருப்பில் உள்ள லிப்டை பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது, ‘லிப்ட்’டை இயக்கும் ஊழியர்களோடு அந்த சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியை கத்தியை காட்டி மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பயத்தில் சிறுமியும் விஷயத்தை வெளியே சொல்லாமல் அமைதியாக இருந்துள்ளார். 

இதையே தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட காம வெறி கொண்ட மிருகங்கள் சிறுமியை, மொட்டை மாடி, ‘லிப்ட்’டுக்குள் வைத்து இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். அத்தோடு விடாமல் குடியிருப்புக்கு வேலைகளுக்கு வந்த பிளம்பர்கள், எலக்ட்ரீசியன்கள் என 16 பேர் கடந்த 6 மாதங்களாக ஒவ்வொருவராக தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

வெளி மாநிலத்தில் படித்து வரும் சிறுமியின் மூத்த சகோதரி, நேற்று முன்தினம் சென்னை வந்துள்ளார். அவரிடம்  தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி சிறுமி அழுதிருக்கிறார். அதன் பிறகு, இந்த விவரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவர, சிறுமியிடம் விசாரித்தபோது அழுதுகொண்டே தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குறித்து தெரிவித்துள்ளார். காவலாளி ஒருவர் பெயரையும், ‘லிப்டை’ இயக்கும் ஊழியர்கள் இருவர் பெயரையும் மட்டுமே தெரிவித்துள்ளார். அவர்கள் மீது அந்த சிறுமியின் தந்தை அயனாவரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இதையடுத்து உடனடியாக பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட 3 பேரை பிடித்து அயனாவரம் போலீஸார் விசாரித்தனர். அவர்கள் அளித்த தகவலின் படி, 13 பேரையும் அயனாவரம் போலீஸார் அதிரடியாக பிடித்தனர்.

இதில், பிளம்பர் சுரேஷ் (32), காவலாளிகள் அபிஷேக் (23), இரால் பிரகாஷ்(40), சுகுமாரன்(60), லிப்ட் ஊழியர் ரவிக்குமார்(64), வீட்டு வேலைக்காரர் ராஜசேகர் (40) என 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், மற்றவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது போக்ஸோ, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதி வீட்டில் குற்றம் சுமத்தப்பட்ட அனைவரும் பேரும் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. சிறுமியிடம் மாஜிஸ்திரேட்டு நேற்று மாலை விசாரணை நடத்தி, சிறுமி கூறிய தகவல்களை மாஜிஸ்திரேட்டு பதிவு செய்துள்ளார். 

இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அனைவரும் வேப்பேரி காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். மாஜிஸ்திரேட்டு அறிக்கை சமர்ப்பித்த பிறகு, அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

செவி திறன் குறைபாடு உள்ள ஒரு சிறுமியை காம வெறி கொண்ட மிருகங்கள் செய்த செயல் சென்னை வாழ் மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. 

http://www.dinamani.com/latest-news/2018/jul/17/சென்னையில்-11-வயது-சிறுமியை-16-பேர்-பாலியல்-வன்கொடுமை-காவலாளிகள்-உள்பட-18-பேர்-கைது-2961898.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தென்னிந்திய தமிழ் காடையர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, colomban said:

தென்னிந்திய தமிழ் காடையர்கள் கைது செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

எப்பொழுதுமே  கொழுத்தி  விடுவதிலேயே  கண்ணாயிருக்கிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, விசுகு said:

எப்பொழுதுமே  கொழுத்தி  விடுவதிலேயே  கண்ணாயிருக்கிறீர்கள்

ஆத்திரம் தாங்க முடியல்லை விசுகு ஐயா. 

தென்னிந்திய மீனவர்கள் இலங்கையில் வந்து மீன்பிடிக்கின்றார்கள். தமிழ் படங்களும் / சின்னத்திரை நாடக‌ங்கள் எல்லாமே கேவலமானது. பிக்பொஸ் அசிங்கத்தின் உச்சம். 

சமீபத்தில் ஒர் சிங்கள அரசில்வாதியும் இந்த தமிழ்படத்தின் காரணமாகவே யாழ் இளைஞர்கள் குழுவாக நின்று அடிபடுகிறார்கள் என்று கூறியிருந்தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, colomban said:

ஆத்திரம் தாங்க முடியல்லை விசுகு ஐயா. 

தென்னிந்திய மீனவர்கள் இலங்கையில் வந்து மீன்பிடிக்கின்றார்கள். தமிழ் படங்களும் / சின்னத்திரை நாடக‌ங்கள் எல்லாமே கேவலமானது. பிக்பொஸ் அசிங்கத்தின் உச்சம். 

சமீபத்தில் ஒர் சிங்கள அரசில்வாதியும் இந்த தமிழ்படத்தின் காரணமாகவே யாழ் இளைஞர்கள் குழுவாக நின்று அடிபடுகிறார்கள் என்று கூறியிருந்தான்.

இது  தங்களது கருத்து

நாங்கள்  இவற்றில்  சளைத்தவர்களல்ல...

நல்லது கெட்டது எங்கும் உண்டு

நாம  தான் தேவையானதை பொறுக்கி  எடுக்கணும்

யாரின் தலையிலாவது தவறை  போட்டு

நான்  சுற்றவாளி  அல்லது பழுதாக்கி  போட்டார்கள் என்பது அறியாமை  மட்டுமே.

Link to comment
Share on other sites

12 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; குற்றவாளிகளை சரமாரியாகத் தாக்கிய வழக்கறிஞர்கள்: வழக்கில் ஆஜராக மாட்டோம் என உறுதி

 

 
download%2013

உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் மீது தாக்கு

அயனாவரத்தில் 12 வயது சிறுமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது சரமாரித் தாக்குதல் நடத்தப்பட்டது. குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக மாட்டார்கள் என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத் தலைவர் மோகன கிருஷ்ணன் தெரிவித்தார்.

சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஷிவாங்கி. இவரது 12 வயது மகள் மாற்றுத்திறனாளி. 7-ம் வகுப்பு படித்து வரும் அச்சிறுமியை கடந்த 7 மாத காலமாக, அவர் வசிக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் பணிபுரிந்து வரும் பாதுகாவலர்கள், லிப்ட் ஆபரேட்டர்கள், பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்டோர் சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

 

குடியிருப்பில் விசாரணை நடத்திய போலீஸார் சிறுமி அடையாளம் காட்டிய 18 பேரை நேற்றிரவு கைது செய்தனர். பின்னர் அவர்கள் மீது கொலை மிரட்டல், போக்சோ சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்ந்து கைது செய்தனர்.

தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் உலுக்கியுள்ள இந்த சம்பவத்தில் கைதான 18 பேரையும் உயர் நீதிமன்ற கூடுதல் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த போலீஸார் அழைத்து வந்தனர். அவர்களை வரும் 31-ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டப்பின் வெளியே அழைத்து வரப்பட்ட அவர்களை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சிலர் தாக்கினர். கை, கால்,முகம், முதுகு என சரமாரியாகத் தாக்கப்பட்ட அவர்கள் அலறினார்கள். அவர்களை தாக்குதல் நடத்தும் வழக்கறிஞர்களிடமிருந்து காப்பாற்ற போலீஸார் போராடி மீட்டனர். நீதிமன்றத்தில் நடந்த தாக்குதலால் அந்த இடமே பரபரப்பாக காணப்பட்டது.

குற்றவாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து வழக்கறிஞர் சங்கத்தலைவர் மோகனகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''12 வயது சிறுமிக்கு கடந்த பல மாதங்களாக இந்தக் கொடுமை நடந்துள்ளது. அந்த சிறுமி காது கேட்காத, வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவருக்கு இத்தகைய கொடுமை பல மாதங்களாக தொடர்ந்து நடந்துள்ளது.

இந்த வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பாலியல் குற்றத்துக்கு எதிராகவும், சிறுமிக்கு நேர்ந்த கொடுமையைக் கண்டித்தும் வழக்கறிஞர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்கள்.

கொடூர குற்றச்செயலில் ஈடுபட்ட அந்த குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாட மாட்டோம் என்று ஒட்டுமொத்த வழக்கறிஞர்களும் முடிவு செய்துள்ளோம். இந்த முடிவை அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுக்கும், அனைத்து நீதிமன்றங்களுக்கு இந்த முடிவு எழுத்துப்பூர்வமாக வழங்கப்படும்'' என்று மோகனகிருஷ்ணன் தெரிவித்தார்.

வழக்கறிஞர்கள் தாக்குதலிலிருந்து குற்றவாளிகளை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல இணை ஆணையர் அன்பு தலைமையில் போலீஸார் வரவழைக்கப்பட்டு புழல் சிறைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article24444621.ece

 

Link to comment
Share on other sites

பிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல?!

 

 
CHILD_ABUSE

 

அனிச்ச மலர் குழந்தைகளை அநியாயமாக உங்கள் சொந்தக் காரணங்களுக்காக புறக்கணிக்காதீர்கள் பெற்றோர்களே! பெண் குழந்தைகளுக்கு எதிரான பல்வேறுவிதமான குற்றங்களுக்கு அதுவே மிகப்பெரிய காரணமாகி விடுகிறது.

பெற்றோர்களே! நாம் நமது குழந்தைகளுக்கு ஆத்மார்த்தமான பெற்றோர்களாகத்தான் இருக்கிறோமா? அல்லது இந்த சமூகத்தின் முன் அவர்களது பெற்றோர்களாக வெறும் கடமை மற்றும் ஆற்றிக் கொண்டிருக்கிறோமா? இந்தக் கேள்விக்கான பதிலை ஒவ்வொரு பெற்றோரும் மீண்டும், மீண்டும் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய தருணம் இது!

மொத்த இந்தியாவையும் அதிர்ச்சியில் உறைய வைத்த காஷ்மீர் சிறுமியின் பாலியல் வன்கொலை சம்பவம் ஏற்படுத்திச் சென்ற ரணத்தின் வலி குறையுமுன் மேலும் அப்படியானதொரு இரக்கமற்ற சம்பவம் இன்று நம் தலைநகரில் அரங்கேற்றப்பட்டிருக்கிறது. என்ன?.. இதில் அகப்பட்ட சிறுமி அவளைப் போல கொலை செய்யப்படவில்லை. மற்றபடி அவளுக்கு நேர்ந்த அதே மரணவலி இவளுக்கும் நேர்ந்திருக்கிறது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நேற்று அச்சிறுமியின் அக்காவுக்கு விஷயம் தெரிந்து அவள் விழித்துக் கொண்டு எச்சரித்திருக்காவிடில் இந்தச் சிறுமியும் கொலைபாதகர்களால் பாலியல் வன்கொலை செய்யப்பட 99.9% வாய்ப்புகள் இருந்திருக்கின்றன என்கின்றன அக்குற்றச்சம்பவம் குறித்து மணிக்கொரு தரம் வெளிவரும் ஊடகச் செய்திகள். 

அவற்றைக் கேட்க நேரும் ஒவ்வொரு முறையும் நெஞ்சம் பதறுகிறது.

குற்றத்தில் ஈடுபட்ட 17 பேரும் தற்போது போக்ஸோ சட்டத்தின் கீழ் நீதிமன்ற விசாரணைகுட்படுத்தப் பட்டிருப்பதாக செய்தி. விசாரணை முடிந்ததும் இவர்கள் புழல் சிறையில் அடைக்கப்படலாம். நீதிமன்ற வளாகத்தில் வைத்தே 17 பேரும் வழக்கறிஞர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். காரணம் அவர்களது செயலின் மீதான சமூக வெறுப்பு, பெற்ற குழந்தையாகக் கருத வேண்டிய சிறுமியின் மீது நடத்தப்பட்ட வெறிச்செயலை அறிந்து சாமான்ய சமூகத்துக்கு அவர்கள் மேல் இயல்பாக எழுந்த நரகலை கண்டாற் போலானதொரு அசூயை. இவர்களை இப்படியே அடித்தே கொன்றால் என்ன? என்பதான ஒரு உத்வேகம். அரசு செலவில் சிறையில் அடைத்து இவர்களுக்கு உணவிட்டு விசாரணை என்ற பெயரில் சுதந்திரக் காற்றை சுவாசிக்க அனுமதிப்பதின் அபத்தம் உண்டக்கிய வெறுப்புணர்வு எல்லாமும் கலந்து தான் அவர்கள் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தை அறிந்ததில் இருந்து கொதித்துப் போயிருக்கும் பெண்கள் நிறைந்த கும்பலில் ஒருவேளை அவர்கள் 17 பேரும் இந்நேரம் சிக்கியிருந்தால் குற்றுயிரும், குலையுயிருமாகி சின்னாபின்னமாகி இருப்பார்கள்.

அதனால் தான் கேட்கிறேன் எனதருமைச் சமூகமே! சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்தவர்களுக்கு ஏன் நீதி விசாரணை? இது அறிந்தே செயல்படுத்தப் பட்ட அராஜகம். இதற்கு தேவை விசாரணை அல்ல, தீர்ப்பு மட்டுமே! பேனா முனை உடைத்து நீதிபதிகள் ஆணையிடலாம்.. பாகுபலி ஸ்டைலில்...

பெண்ணுடல் அல்ல, பிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல, மர்மஸ்தானம் என.

அத்தனை கொடூரம் தேவையா?

என மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பலாம். இது கொடூரமென்றால் அறியாப் பிஞ்சுகளின் எதிர்காலம் சிதைவதைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லையா என எதிர்கேள்வி எழுப்பத்தான்  வேண்டும். இந்தக் கதை தொடர்கதையாகி வருகையில் இத்தனை ஆத்திரம் எழுவதை எவரால் தான் கட்டுப்படுத்த முடியும்.

சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருத்தியை குடியிருப்பு வளாகப் பணியாளர்களே கடந்த 7 மாதங்களாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ள இச்செய்தி மிகுந்த அதிர்ச்சிக்குரியது மட்டுமல்ல. நம் சமூக அமைப்பின் மிக மிகக் கேவலமான அம்சமும் கூட. இதில் அந்தச் சிறுமியின் குற்றமென்ன? அவளுக்கு செவித்திறன் குறைபாடு இருப்பதாகத் தகவல். இப்படிப் பட்ட குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதைத் தவிர அவளைச் சார்ந்தவர்களுக்கு வேறென்ன முக்கியமான வேலைகள் இருந்திருக்கக் கூடும்?

குழந்தை கடந்த 7 மாதங்களாக இந்தக் கொடுமைகளை அனுபவித்து வந்திருப்பதாகச் செய்தி. கடந்த 7 மாதங்களும் ஒரு தாய் தன் 11 வயது மகளுக்கு நிகழ்ந்த கொடுமையை உணராதும், அது குறித்த எந்த விதமான சந்தேகமும் கொள்ளாமல் இருந்தது எப்படி? மிகுந்த மனசஞ்சலத்தைத் தருவதாக இருக்கிறது இக்கேள்வி. பெண் குழந்தைகள்... தங்களுக்கு நேரும் அச்சுறுத்தல்களை முதலில் சென்று சொல்லத்தக்க நபராக இருக்க வேண்டியது அம்மா எனும் பிம்பமே! ஆனால், அந்த அம்மாவுக்கே மகளுக்கு நேர்ந்த கொடுமை 7 மாதங்கள் கடந்த பிறகே தெரிய வந்திருக்கிறது என்றால்... என்ன மாதிரியான வாழ்க்கையை இந்தச் சமூகம் சிலருக்கு விதித்திருக்கிறது என்று யோசியுங்கள். அக்குழந்தையின் அம்மாவைக் குற்றம் சொல்வதல்ல இந்தக் கட்டுரையின் நோக்கம். அவர் என்ன காரணத்தினால் தன் மகளுக்கு நேர்ந்திருக்கும் கொடூரத்தை அறியத் தாமதமானது? என்பதையும் நாம் சேர்த்தே யோசிக்க வேண்டியதாயிருக்கிறது. 

சென்னை போன்ற பெருநகரங்களில் வாழ விதிக்கப்பட்டவர்களின் வாழ்வில் காலையும், இரவும் மட்டுமே குடும்பத்திற்குச் சொந்தமான நேரங்கள். மற்ற நேரங்களை எல்லாம் அவர்கள் தத்தமது அலுவல்களுக்கு ஒப்புக் கொடுத்து விடுகிறார்கள். குழந்தைகள் வளர்வது என்பது அவர்களுக்கு அனிச்சைச் செயலாக நிகழ வேண்டியதாயிருக்கிறது. போகிறபோக்கில் குழந்தைகள் வளர்ந்து விட வேண்டும் என்ற எண்ணம் இன்று ஒரு சாரரிடையே நிலவுகிறது. அப்படியானவர்கள், தங்கள் குழந்தைகள் அமைதியாக இருந்தால் அவர்களுக்கு எவ்விதப் பிரச்னையும் இல்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள். மீறியும் குழந்தைகள் வாயிலாக பள்ளிகள், அவர்களது நண்பர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விருப்பங்கள் குறித்தெல்லாம் ஏதாவது புகார்கள் வந்தால், உடனடியாக அவர்கள் சந்தேகிப்பது தங்களையும், தங்களது வாழ்வியல் முறையையும் அல்ல, தங்களது குழந்தைகளை என்பதாகவே இருக்கிறது. இதிலிருந்து தான் தொடங்குகிறது குழந்தைகளுக்குத் தங்களது பெற்றோர்கள் மீதான அவநம்பிக்கை.

கடந்த மாதம் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் பங்கேற்கச் சென்றிருக்கையில் ஒரு அப்பா, தன் மகனது வகுப்பாசிரியையிடம் சொன்ன சேதி, ‘மேம், அவன் படிக்கலைன்னா கூட பரவாயில்லை, ஆனா, தினமும் அவன் அம்மா காலைல 5 மணிக்கெல்லாம் எழுந்து கஷ்டப்பட்டு சமைச்சுக் கொடுத்து விடறாங்க, அந்த சாப்பாட்டை மட்டும் வீணாக்க விடாதீங்க. அவன் சாப்பாட்டை குப்பையில் கொட்டினா, அவனை நீங்க எப்படி அடிச்சாலும் நான் கேட்க மாட்டேன். தோலை உறிச்சு எடுங்க’ என்கிறார். 

இங்கே பிரச்னை சாப்பாட்டில் அல்ல அவரது அணுகுமுறையில் என்பதை அவர் ஏன் உணரக்கூடாது! மகன் சாப்பாட்டை குப்பையில் கொட்டினால், அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள விரும்பாமல் அவனது செயலுக்கான தண்டனை அளிப்பதில் தான் மும்முரமாக இருக்கிறார் இந்த தந்தை.

இன்னொரு அம்மா, எம்பொண்ணுக்கு சோஷியல் சயின்ஸ் பாடத்துல மட்டும் மார்க் குறையுது. ரெண்டு அடி போட்டாவது கொஞ்சம் படிக்க வைங்க மேம்.

இன்னொரு அம்மா, வகுப்பாசிரியையிடம் தொலைபேசியில் அழுது கொண்டே பகிர்ந்து கொண்ட விஷயம், மேம், எம்பொண்ணு இப்ப 9 வது தான் படிக்கிறா, ஆனா, சுத்தமா என்னை மதிக்கிறதே இல்லை. எதுக்கெடுத்தாலும் எதிர்த்துப் பேசறா. அடிக்க கை ஓங்கினா, பதிலுக்கு அவளும் கை ஓங்கறா. நாங்கல்லாம் இப்படியா இருந்தோம். இப்படியெல்லாம் செய்திருந்தோம்னா, எங்க பேரண்ட்ஸ் எங்களை கொன்னே போட்ருப்பாங்க. வீட்ல வச்சு வளர்த்திருக்கவே மாட்டாங்க, கொஞ்சம் புத்தி சொல்லுங்க மேம். அவளுக்கு பெரியவங்க கிட்ட மரியாதையா நடந்துக்கச் சொல்லி கத்துக் கொடுங்க ப்ளீஸ்... தினமும் அவளால என் நிம்மதியே போச்சு, எனக்கும், என் ஹஸ்பண்டுக்கும் இடையில் சண்டை வரதுக்கு காரணமே என் மகளாத்தான் இருக்கறா! என்ன செய்யறது, இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கறதுன்னே எனக்குப் புரியல’ 

தன் மகள் குறித்து இந்த அம்மா, அவளது வகுப்பாசிரியையிடம் புலம்பியதைப் பற்றிச் சொல்வதற்கு என்ன இருக்கிறது என்கிறீர்களா? வேறென்ன இருக்க முடியும்? இந்த அம்மாவுக்குப் புரிந்திருக்க வேண்டும், வகுப்பாசிரியையைக் காட்டிலும் மகளே தனக்கு மிகவும் நெருக்கமானவள் என, அந்தச் சிறுமியை அழைத்து ஒரு அன்பான அம்மாவாக தனியே பேசி இருக்க வேண்டும். அவளது எடுத்தெரிந்து பேசும் குணத்துக்கான காரணம் எங்கிருந்து கிளைத்தது எனக் கண்டறிய முயன்றிருக்க வேண்டும். இப்படியெல்லாம் செய்யாமல் வகுப்பாசிரியையிடம் புகார் கூறுவதால் பலனுண்டாகும் என இந்த அம்மா எதிர்பார்த்தார் எனில் அதற்கான பலன் நிகழ்தகவாகிறது. ஒருவேளை வகுப்பாசிரியை பக்குவமானவர் எனில் தன் மாணவியின் எதிர்கால நலன் கருதி அவளிடம் இது குறித்துப் பேசி சமாதானம் செய்வார். இல்லையெனில் வகுப்பறையில் பிற மாணவ, மாணவிகள் முன்னிலையில் அந்த மாணவியை கண்டிக்க இதையே ஒரு காரணமாக வைத்துக் கொள்ளக் கூடும். இதைப் பற்றியெல்லாம் கூட பெற்றோர்கள் யோசிக்க வேண்டும் தானே?!

மேலே சொன்ன உதாரணங்கள் அனைத்தும் பெற்றோர் மனப்பான்மை எப்படிப் பட்டதாக இருக்கிறது? என்பதை உணர்ந்து கொள்ளும் பொருட்டு அறியத் தந்தவை. 

இப்போது அயனாவரம் சிறுமிக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி மேலும் சில வார்த்தைகள்...

  • அச்சிறுமியை கடந்த 7 மாதங்களாக அவளது குடியிருப்பிலிருக்கும் லிஃப்ட் ஆப்பரேட்டர், பிளம்பர், வாட்ச்மேன், தோட்டக்காரன், எனப் பல கேவலமான ஜந்துக்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியிருக்கிறார்கள். இதைப் பற்றி அச்சிறுமி ஒருமுறை கூடவா தன் தாயிடம் தெரிவிக்காது இருந்திருப்பாள்? அப்படித் தெரிவிக்கவில்லையெனில் அதற்கு என்ன காரணம்? 
  • சிறுமியை அச்சுறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த அந்த படுபாதகர்களின் மீது அந்தக் குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் ஒரு ஈ காக்கைக்கு கூடவா இதுவரையிலும் சந்தேகம் வரவில்லை?!
  • குழந்தைகள் வளரும் காலத்தில், தனி வீடுகளைக் காட்டிலும் அபார்ட்மெண்டுகள் பாதுகாப்பனவை என்று தான் பெரும்பாலான பெற்றோர்கள்  தங்களுக்கான வசிப்பிடங்களாக அவற்றைத் தேர்ந்தெடுக்கின்றனர். அங்கு ஒரு 11 வயதுச் சிறுமி கத்தியைக் காட்டி மிரட்டப்பட்டும், ஆபாச புகைப்படமெடுக்கப்பட்டும் அச்சுறுத்தப்பட்டு தொடர்ச்சியாக சீரழிக்கப்பட்டிருப்பதை எப்படி கவனிக்கத் தவறினார்கள்.
  • 7 மாதங்களாக சிறுமிக்கு போதை மருந்து இஞ்ஜெக்ட் செய்தும், குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுத்தும் குடியிருப்பின் உள்ளே காலியாகக் கிடக்கும் வீடுகள், உடற்பயிற்சி கூடம், மாடியில் ஆள் நடமாட்டம் இல்லாத இடம் என சீரழித்திருக்கின்றனர். அங்கே கிடந்த காலி குளிர்பான பாட்டில்கள் மற்றும் காலி சிரிஞ்சுகள் வாயிலாக இப்போது அது கண்டறியப்பட்டுள்ளது. அப்படியெனில், அது எப்படி பிறர் கவனத்தில் இருந்து தப்பியது? ஒருவேளை யாரேனும் கவனித்திருந்தும் நமக்கென்ன என்று இருந்து விட்டார்களா? என்ற ஐயத்தை எழுப்புகிறது இந்த பாயிண்ட்.
  • அபார்ட்மெண்டுகள் நிறைந்த கான்கிரீட் வனமாகி விட்ட சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு குடியிருப்பு வளாகத்துக்கான பணியாளர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கிறார்கள்? அவர்களுக்கான ஒழுக்க விதிமுறைகள் எதையும் கவனத்தில் கொள்வதில்லையா குடியிருப்போருக்கான கூட்டமைப்புகள். வல்லூறுகள் வெளியில் இருந்தால் குழந்தைகளை வீட்டில் பாதுகாக்கலாம். குழந்தையும் வீட்டைப் பாதுகாப்பு என நம்பலாம். ஆனால், அயனாவரச் சிறுமி விஷயத்தில் அவளது வசிப்பிடத்தில் நம்பிக்கைக்கு உரியவர்களாகத் திகழ்ந்திருக வேண்டியவர்களே அவளைச் சிறுமியென்றும் பாராமல் சீரழித்திருக்கிறார்கள். அப்படியானால் குற்றத்தில் குடியிருப்பின் கூட்டமைப்புக்கும் பங்கிருக்கிறது தானே?! சரியான நபர்களைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டியது யார் பொறுப்பு?
  • இப்போதும் கூட வெளிமாநிலத்தில் படித்து வரும் சிறுமியின் அக்கா விடுமுறையில் வீட்டில் இருந்த காரணத்தால் சிறுமி தனக்கு நேர்ந்த கொடூரத்தை அவரிடம் சொல்லி அழுதிருக்கிறார். அப்படியாகத்தான் இந்தக் கொடுமை வெளியில் தெரிய வந்துள்ளது. எங்கோ படித்து விட்டு விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த அக்காவிடம் பகிர முடிந்த விஷயத்தை அந்தக் குழந்தையால் ஏன் தன் தாயாரிடம் பகிர முடிந்திருக்கவில்லை? என்பது யோசிக்க வேண்டிய கேள்வி.

இவ்விஷயம் பற்றி ஊடகத்தில் கருத்து தெரிவித்த மனநல மருத்துவர் ஷாலினி, பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் மேலும் அன்பாகவும், நெருக்கமாகவும் இருக்க வேண்டியதன் அவசியத்தை இது போன்ற சம்பவங்கள் மேலும், மேலும் வலுயுறுத்துகின்றன என்றதோடு குழந்தையின் அம்மாக்கள் தங்களது வாழ்வில் நல்ல மனநிலையில் இருந்தால் மட்டுமே குழந்தைகளின் சீரான வளர்ச்சியில் அவர்களால் நல்லமுறையில் கவனம் செலுத்த முடியும் என்றார். அயனாவரம் சிறுமி விவகாரத்தில் மட்டுமல்ல இது உலகச் சிறுமிகள் மற்றும் அவர்களது அம்மாக்கள் விஷயத்திலும் கூட மிக மிக கவனிக்கத்தக்க அம்சங்களில் இது ஒன்றெனக் கூறலாம்.

குழந்தைகள் தங்களுக்கு நேரும் சங்கடங்களை, பிரச்னைகளை, உடல்நலக் கோளாறுகளை, பாலியல் அச்சுறுத்தல்களை எந்த வித மறு யோசனைக்கும் இடமின்றி, அச்சமின்றி முழு நம்பிக்கையுடன் பெற்றோர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும். அப்போது தான் இம்மாதிரியான கொடூரச் செயல்களுக்கெல்லாம் வழியற்றுப் போகும். மாறாக, நம் குழந்தைகள் இப்படியான ஆபத்துக்களிலிருந்து தப்புவதற்கான  அத்தனை வாசல்களையும் பெற்றோரான நாமே அடைத்து இறுகப் பூட்டியதாக ஆகி விடக்கூடாது.

ஆதலால் பெற்றோர்களே! குழந்தைகள் விஷயத்தில் நீங்கள் மேலும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில அம்சங்கள்...

  • தினமும் பள்ளி விட்டு வரும் குழந்தைகளிடத்தில் குறைந்த பட்சம் அரைமணி நேரமாவது உரையாடுங்கள். நேரில் வேலைப்பளு இருந்தால் அலுவலகத்தில் இருந்து லஞ்ச் பிரேக்கிலோ அல்லது மாலை ஸ்னாக்ஸ் நேரத்திலோ ஃபோனிலாவது குழந்தைகளிடத்தில் அன்றைக்கு நீங்கள் இல்லாத பொழுதுகளில் வீட்டிலும், பள்ளிகளிலும்ம் வெளியிலும் என்னென்ன நடந்திருக்கிறது என்று பேச்சுவாக்கில் கேட்டு வையுங்கள்.
  • வீட்டில் காப்பாளர்களை வைத்து அவர்கள் பொறுப்பில் குழந்தைகளை விட்டுச் செல்கிறீர்கள் என்றால் அவர்களைப் பற்றி தினமும் குழந்தைகளிடம் விசாரியுங்கள். உங்களை விட அந்தக் காப்பாளர்கள் எந்த விதத்திலும் உங்கள் குழந்தைகளின் சொந்த விஷயத்தில் அக்கறை கொள்ள முடியாது என்பதைப் புரிய வையுங்கள். அம்மா அடிப்பார், அப்பா மிரட்டுவார் என்பது மாதிரியான வீணான பயத்தை உருவாக்க வேண்டாம்.
  • அது பள்ளியோ, கடைகளோ, அல்லது நண்பர்களின் வீடுகளோ எங்கு வேண்டுமானாலும் இருக்கட்டும், தங்களுக்கு பாரபட்சமாகவோ அல்லது கெடுதலாகவோ என்ன நிகழ்ந்தாலும் அல்லது நிகழப்போவதற்கான அறிகுறி தென்பட்டாலும் போதும் அதைக் குறித்து உறுதியாகவும், தைரியமாகவும் கேள்வியெழுப்ப குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். தங்களுக்கெதிரான வன்முறையை ஒருபோதும் தாங்கிக் கொள்ளச் சொல்லி குழந்தைகளைப் பழக்காதீர்கள். அது எப்படிப்பட்டதாயினும் சரி எதிர்த்துக் குரலெழுப்ப குழந்தைகளுக்கு கற்றுத்தாருங்கள்.
  • ஐயோ... அவர்களுடன் சேராதே, ஐயோ அந்த வீட்டுக்குப் போகாதே என குழந்தைகளை தனிமைப் படுத்தாதீர்கள். கும்பலாக விளையாடுவதில் இருக்கும் பாதுகாப்புணர்வைப் பற்றி சரியான முறையில் போதியுங்கள்.
  • பெண் குழந்தைகள் மற்றும் சிறுமிகளிடத்தில் எதிர்பாராமல் நிகழ்த்தப்படக் கூடிய ஆபாசமான பாலியல் சமிஞ்சைகளை எப்படி தைரியமாக எதிர்கொண்டு முறியடிக்க வேண்டும் என்பது குறித்து ஒருதாயைக் காட்டிலும் எவராலும் சிறப்பாகக் கற்றுத்தர முடியாது. எனவே அது குறித்து அம்மாக்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு குழந்தைகளுக்கு கற்றுத்தாருங்கள்.
  • குடும்பம் என்பது அப்பா, அம்மா, உடன்பிறந்தவரை உள்ளடக்கியது இது தவிர உறவினர்கள் என்போர் குடும்ப அமைப்பின் இரண்டாம் வளையத்திற்கு சென்று விடுகிறார்கள். ஆகவே, எவராக இருந்தாலும் சரி அது நெருங்கிய உறவினராகவே இருந்த போதும் அதைப் பற்றி தனது பெற்றோரிடம் புகார் அளித்து தனக்கான நீதியையும், பாதுகாப்பையும் பெறும் உரிமை குழந்தைகளுக்கு உண்டு. அதற்கான நம்பிக்கையை குழந்தைகளிடத்தில் உண்டாக்க வேண்டியது பெற்றோர் கடமை.

பெற்றோர்களிடம் ஒரு வார்த்தை...

குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அற்ற நிலை நீடிக்க வேண்டும். பெற்றோர் சதா நேரமும் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டே இருந்தால் அதைப் பார்த்து வளரும் குழந்தைகளுக்குள் அவர்களே அறியாமல் ஒருவித அச்சம் படியும். இது அவர்களை பயந்தாங்கொள்ளிகளாக ஆக்கி தங்களுக்கு நேரும் பாதிப்புகளை எதிர்த்து குரல் கொடுக்க விடாமல் செய்து விடும். எனவே குழந்தைகள் வளர்வதற்கான ஆரோக்யமான சூழலை வீட்டிலும், வெளியிலும் உருவாக்க வேண்டியதும், தொடர்ந்து அதைக் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டியதும் கூட பெற்றோர் கடமையாகவே கருதுகிறேன்.

கடைசியாக இந்த சமூகத்துக்கும், மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஒரு கேள்வி...

இந்தியாவில் மட்டுமல்ல தொடர்ந்து உலகம் முழுவதுமே பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும், ஏன் பல இடங்களில் ஆண்குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் இச்சூழலில் அப்படியான கொடூரங்களை அரங்கேற்றத் துணியும் அளவுக்கு மனச்சிதைவு கொண்டோருக்கு நீதி விசாரணை தேவை தானா? அவர்கள் திட்டம் போட்டு, விதம், விதமான பாலியல் சித்ரவதை முறைகளைத் தேர்ந்தெடுத்து, போதை வஸ்துக்களின் துணையுடனும், ஆயுதங்களின் துணையுடனும் ஒன்றுமறியாத பச்சைக் குழந்தைகளை காவு வாங்கிக் கொண்டே இருப்பார்கள். அதை இந்தச் சமூகம் பொறுமையாக வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டுமா? சிற்சில சம்பவங்களில் பணமோ, அந்தஸ்தோ, அரசியல் பலமோ, ஜாதியோ முன்வந்து அப்படியான கொடூரர்களைக் காப்பாற்ற முயன்று அதில் வெற்றியும் பெறும். நீதி விசாரணையின் பெயரிலான இந்த அநியாயங்களை இந்தச் சமூகம் பொறுத்துக் கொண்டு தான் ஆக வேண்டுமா? 

கட்டுரையின் இடையில்  குறிப்பிட்டதைப் போல...

பெண்ணுடல் அல்ல, பிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல, மர்மஸ்தானம் என்பதில் உங்களுக்கேதும் ஆட்சேபணை உண்டா?

Image courtesy: Naukri Nama

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/jul/17/cut-the-culprits-genetal-organs-2962005.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, விசுகு said:

இது  தங்களது கருத்து

நாங்கள்  இவற்றில்  சளைத்தவர்களல்ல...

நல்லது கெட்டது எங்கும் உண்டு

நாம  தான் தேவையானதை பொறுக்கி  எடுக்கணும்

யாரின் தலையிலாவது தவறை  போட்டு

நான்  சுற்றவாளி  அல்லது பழுதாக்கி  போட்டார்கள் என்பது அறியாமை  மட்டுமே.

நல்ல கருத்து. இதுதான் எமது தாயகத்தில் நடக்கும் குற்றச்செயல்களுக்கும் நடக்கிறது.எதிரியின் பங்கு உண்டுதான் அதற்க்காக எம்மவர்கள் ??

Link to comment
Share on other sites

இந்த வக்கீல் கூட்டம் ஏன் பாய்ந்து விழுந்து அடிக்குது ?

தங்களால் நீதி பெற்று தர முடியாது என்ற நம்பிக்கையிலா ?

அல்லது அருணா வின் கந்தன் படுகொலையில் மறைத்த தன் உளவு முகமூடி போல் இவர்களின் நாத்தம் வெளிவர கூடாது எனும் நோக்கிலா ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் சம்பந்தப் பட் டவர்கள், 23 வயதிலிருந்து 60 வயது உள்ளவர்கள் எனும் போது... அதிர்ச்சியாகவும் ஆத்திரமாகவும் உள்ளது. ☹️

//கைது செய்யப்பட்டவர்களின் பெயர் மற்றும் வயது விபரத்தை பொலிஸ் வெளியிட்டுள்ளது.
1.ரவிக்குமார்(60)
2.சுகுமாறன் ( 60 )
3.இரால் பிரகாஷ்-(58)
4.குணசேகர் (55)
5.முருகேசன்(54), 
6.தீனதயாளன்( 50 )
7.சீனிவாசன் ( 45 )
8.உமாபதி ( 42 )
9.ராஜசேகர் ( 40 )
10.பழனி ( 40 )
11.பாபு ( 36 )
12.ராஜா(32)
13.சுரேஷ்(32), 
14.ஜெயராம்(26)
15.ஜெய்கணேஷ்(23), 
16.அபிஷேக்(23), 
17.சூர்யா(23),//

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நவீனன் said:

பெண்ணுடல் அல்ல, பிஞ்சுகளின் தளிர் உடலின் மீது இரக்கமற்று இச்சையுடன் கை வைக்கும் ஒவ்வொரு இழிபிறவிக்கும் வெட்டப்படவேண்டியது சிரசு அல்ல, மர்மஸ்தானம் என்பதில் உங்களுக்கேதும் ஆட்சேபணை உண்டா?

Image courtesy: Naukri Nama

http://www.dinamani.com/editorial-articles/special-stories/2018/jul/17/cut-the-culprits-genetal-organs-2962005.html

எவ்வித ஆட்சேபனையும் இல்லை. இவர்கள் மர்ம ஸ்தானம் வெட்டப்பட்டு பொது வெளியில் கட்டிவைக்கப்பட்டு பின்னர் மக்களால் கற்களால் எறிந்தே கொல்லப்படவேண்டும்.

முழுத்தமிழ் இனமே வெட்கி  தலைகுனிய வேண்டிய தருணமிது. தனது மகள் போதைப்பொருளின் ஆளுமையில் இருக்கிறாள் என்பதைக்கூட அறியமுடியாத பெற்றோர்களை நினைக்க ஆத்திரம்தான் வருகிறது.மாற்றுத்திறனாளி குழந்தைதானே என்று கவனிக்காது விட்டிருப்பின் முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் பெற்றோர்களே!!!

Link to comment
Share on other sites

சிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல!

 

இந்த விஷயத்தில் ரொம்ப ஆபத்தான ஒரு தரப்பினர் யார் என்றால் அந்தச் சிறுமியின் விருப்பத்தோடுதான் இது நிகழ்ந்திருக்கிறது என்கிற கருத்தை முன்வைப்பவர்கள். குறிப்பாக இவர்களிடமிருந்துதான் நம் பிள்ளைகளை காப்பாற்ற வேண்டும்.

சிறுமி வல்லுறவு வழக்கில் சிக்கியுள்ள 17 பேர் மட்டும் குற்றவாளிகள் அல்ல!
 

ரு சிறுமியிடம் பதினேழு பேருக்கும் மேற்பட்டோர் வல்லுறவு கொண்டிருக்கும் செய்தி பல உண்மைகளை மீண்டும் நமக்கு நினைவுக்குக் கொண்டுவருகின்றன. குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை கொடுக்க காவல்துறையும், சட்டமும் இருக்கிறது. அவர்கள் இச்சமூகத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அது ஒன்றைச் செய்வதில் மட்டுமே நாம் இந்த விஷயத்தில் தன்னிறைவு அடைந்துவிடப் போகிறோமா? இனி பெண் இனத்துக்குக் கொடுமை இழப்பவர்கள் யாரும் இல்லாமல் ஆகி விடுவார்களா?

பாலியல் தொல்லை

தவறு செய்து மாட்டிக்கொண்டவர்களுக்கு மட்டும்தான் குற்றவாளி என்று பெயர். ஆனால், இன்னும் மாட்டிக்கொள்ளாமல் சராசரி மனிதன் என்கிற போர்வையில் விதவிதமான துன்புறுத்தல்களை பலபேர் செய்து கொண்டுதானிருக்கிறார்கள். இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் இந்தப் பதினேழுபேரும் ஓரிரு தினங்களுக்கு முன்பு அன்பான அப்பாவாக, தோழனாக, தாத்தாவாக நடமாடிக் கொண்டிருந்தவர்கள்தானே? இவ்வளவு வக்கிரமான மனப்போக்கு ஆணுக்கு எங்கிருந்து உருவானது, அவர்களுக்குள் அந்த எண்ணத்தை எது வலுப்படுத்துகிறது எனச் சிந்திக்கிறபோது பல்வேறு வகையான சமூகக் காரணிகள் நமக்குக் கிடைக்கின்றன. எல்லா ஆண்களையும் பொதுமைப்படுத்தவில்லை எனினும் இதற்கு நாம் எல்லோரும் கூட்டுப் பொறுப்பு ஏற்றே ஆக வேண்டும். அந்தக் குழந்தையை வல்லுறவுக்கு உட்படுத்திய அனைவர்க்கும் உள்ள ஒற்றுமை, அவர்களனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் என்கிற தகவல் உணர்த்துவதை சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது.

 

 

தன் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்கு உடலோ, வயதோ, பாலினமோ, உறவுமுறையோ முக்கியமில்லை என்பதை ஆணாதிக்கச் சமூகம் திரும்பத் திரும்ப நிரூபித்துக்கொண்டே இருக்கிறது. பல ஆண்டுகளாகவே நீடிக்கும் இந்தக் கசப்பான உண்மையை நம்மிடையே வைத்துக்கொண்டு பிறகு எதன் அடிப்படையிலும் நாம் நாகரிகமடைந்துவிட்டோம் எனச் சொல்ல முடியாது.

 

 

செவித்திறனற்ற, தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று சரியாகச் சொல்லக் கூடத் தெரியாத ஒரு சிறுமியை, தன் பேத்தி வயதுடைய குழந்தையைத் தடவிப்பார்க்க வேண்டுமென 66 வயதுள்ள ஒரு பெரியவருக்கு எப்படித் தோன்றுகிறது? அந்தப் பதினேழு பேரில் ஏழுபேர் ஐம்பது வயதுக்கு மேற்போட்டோர் என்கிற அதிர்ச்சி நம் வீட்டுப் பிள்ளைகளின் மீது இன்னும் அதிக கவனம் செலுத்தத் தோன்றுகிறது. தன் காமத்தைத் தீர்த்துக் கொள்வதற்கு எந்தவொரு வடிகாலும் தெரியாமல் இறுகிப்போன ஒரு சூழலில் காமவெறியுடன் வாழ்பவர்களை எப்படி இணங்காணுவது.

அந்தச் சிறுமி வசித்த அப்பார்ட்மென்ட்டில் முந்நூறுக்கும் மேற்பட்ட வீடுகள் இருந்திருக்கின்றன. அதில் 30 சதவிகிதம் குடும்பங்களால் நிரம்பியிருக்கிறது. என்ன இருந்து என்ன பயன்? ஏழுமாதமாக ஒரு சிறுமியை இத்தனை பேர் அதே வளாகத்தில் வைத்தே வல்லுறவு கொண்டிருக்கிறார்கள். மட்டுமன்றி, செய்கின்ற தவறை வீடியோ எடுத்து ரசிக்கும் அளவுக்கு குரூரமான மனம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அந்தச் சூழல் அவர்களுக்கு சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறது.

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள்

அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்றுகூட தெரியாமல் இருக்கும் அப்பார்ட்மென்ட் கலாசாரத்துக்கு இன்னும் எத்தனை பேரை பலிக்கொடுக்கப் போகிறோம்?

அந்தச் சிறுமி, தனக்கு நடந்ததைக் கூறுவதற்கு ஊரிலிருந்து தன் அக்கா வரும்வரை ஐந்து மாதம் காத்திருந்திருக்கிறாள். வீட்டிலுள்ள மற்றவர்களிடம் அவள் அதைப் பகிர்ந்துகொள்ள முடியாத அளவுக்கு அவளை தடுத்தது எது என்பதையும் யோசிக்க வேண்டியிருக்கிறது.

`குட் டச் பேட் டச்' என்கிற தொடு உணர்வுகள் பற்றிய புரிதல் எல்லா வகையான குடும்பங்களிலும் பரவலாகத் தெரிய வர வேண்டும். தனக்கு எது நடந்தாலும் வெளிப்படையாக அதைச் சொல்லுகிற தைரியத்தை குழந்தைகளிடம் நாம் ஏற்படுத்த வேண்டும். இந்த விஷயத்தில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை. தன்னையொரு ஒரு பாலியல் பண்டமாக மட்டுமே ஒருவன் பார்க்கிறான் என்றும், பல வகையான பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்துகிறான் என்றும் பெண்களுக்குத் தெரியும். அதை வெளியே சொல்லாமல் பெண் சமூகம் தயங்குவது எதனால் என யோசிப்பதிலிருந்துதான் இதற்கான நிரந்தரத் தீர்வை நோக்கி நாம் நகர முடியும். 

 

 

மாறாக, குற்றம் புரிந்தவர்களுக்கு உடனடியாக தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென நாம் உணர்ச்சிவயப்படுவதும், இவர்களுக்காக யாரும் வாதாடக் கூடாது என வழக்கறிஞர் சங்கர் அறிக்கை விட்டிருப்பதும் தற்காலிகமாக இதைக் கடந்துபோகும் எதிர்வினைகள் மட்டுமே. இந்த விஷயத்தில் ரொம்ப ஆபத்தான ஒரு தரப்பினர் யார் என்றால் அந்தச் சிறுமியின் விருப்பத்தோடுதான் இது நிகழ்ந்திருக்கிறது என்கிற கருத்தை முன்வைப்பவர்கள். குறிப்பாக இவர்களிடமிருந்துதான் நம் பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும். 

https://www.vikatan.com/news/tamilnadu/131209-everyone-who-accuses-the-victim-are-the-criminals-here.html

Link to comment
Share on other sites

சென்னை சிறுமிக்கு போதை மருந்து ஏற்றப்பட்டதா?

 

 

 

சென்னையில் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட 11 வயது சிறுமிக்கு, போதை ஊசி செலுத்தியமை தொடர்பில் பொலிஸார் அதிரடி விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

rape.jpg

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை, 17 காமக்கொடூரன்களால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில், இந்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்

11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட இந்த வழக்கை மிகவும் கவனமாக விசாரித்து வருகிறோம். பாதிக்கப்பட்ட சிறுமி கொடுத்த தகவல் அடிப்படையில் தான் 17 பேரையும் கைது செய்துள்ளோம். தற்போதைய நிலவரப்படி இந்த வழக்கில் 17 பேர் தான் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் சிறுமியை பெரும்பாலும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கு செல்லாத நேரத்திலும், தங்களது இச்சைக்கு பயன்படுத்தியிருக்கிறார்கள். பெரும்பாலும் கழிவறையில் வைத்தே பலாத்கார சம்பவம் நடந்துள்ளது.

“நீல நிறத்தில் உள்ள போதை ஊசியை தனக்கு கத்தி முனையில் மிரட்டி போட்டுவிடுவார்கள் என்றும், போதை ஊசியைப் போட்ட உடன் மயக்க நிலை வந்துவிடும்” என்றும் சிறுமி விசாரணையில் குறிப்பிட்டுள்ளார்.

201807190836226739_ayanavaram-girl-moles

ஆனால், அந்த போதை ஊசியின் பெயர் என்ன? என்பது பற்றி சிறுமியால் கூறமுடியவில்லை. இதுபற்றி கைதான 17 பேரிடமும் விசாரித்துவிட்டோம். அவர்கள் போதை ஊசி பயன்படுத்தவில்லை என்று மறுத்துவிட்டனர். இருந்தாலும் இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். கைது செய்யப்பட்டவர்களை தேவைப்பட்டால் மீண்டும் காவலில் எடுத்து விசாரணை நடத்துவோம். விரைவில் இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.என தெரிவித்துள்ளார்.

நேற்று குறித்த வழக்கு தொடர்பாக, உயர் பொலிஸ் அதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இந்த வழக்கில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பான முக்கியமான தடயங்களை பொலிஸார் சேகரித்துள்ளனர். மேலும். குறித்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 17 பேரும், புழல் மத்திய சிறையில், தனி அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அடைக்கப்பட்டுள்ள பகுதிக்கு மற்ற கைதிகள் செல்ல சிறை காவலர்கள் அனுமதிக்கவில்லை. மற்ற கைதிகள் இவர்களை தாக்கக்கூடும் என்பதற்காக இந்த முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/36871

Link to comment
Share on other sites

பாலியல் துஷ்பிரயோகம் புரிந்தோரை அடையாளம் காட்டினார் சிறுமி

 

 
 

இந்திய புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலியல் துஸ்பிரயோக குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு நீதவான் நீதிபதி முன்னிலையில் இன்று இடம்பெற்ற போது குறித்த துஸ்பிரயோக குற்றவாளிகளை சிறுமி அடையாளம் காட்டினார். 

Puzhal_Jail_11339.png

அயனாவரத்தில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7 ஆம் தரத்தில் கற்கும் 11 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுதொடர்பில் குடியிருப்பில் மின்னுயர்த்தி இயக்குபவரான ரவிக்குமார் மற்றும் காவலாளிகள் அபிஷேக், சுகுமாறன் உள்ளிட்ட 17 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 6 மாதத்துக்கும் மேலாக சிறுமியை மிரட்டி பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுவந்தமை விசாரணையில் தெரிய வந்தது.

கைதான 17 பேரும் சென்னை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர்களை சட்டத்தரணிகள் சிலர் சுற்றி வளைத்து தாக்கியமையும் குறிப்பிடத்தக்கது.. இதைதொடர்ந்து குற்றவாளிகள் 17 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில் புழல் சிறையில் பாலியல் துஸ்பிரயோக குற்றவாளிகள் 17 பேரின் அடையாள அணிவகுப்பு நீதவான் நீதிபதி முன்னிலையில் இன்று இடம்பெற்றது.

இதற்காக எழும்பூர் நீதவான் நீதிபதிகளான கலைபொன்னி, ரோகித் ஆகியோர் கலந்துகொண்டனர். பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோரும் வரவழைக்கப்பட்டு இருந்தனர்.

இதன்போது குறித்த துஸ்பிரயோக குற்றவாளிகளுடன் அவர்களது சம வயதுடைய மேலும் 10 கைதிகள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் குற்றவாளிகள் 17 பேரையும் சிறுமி அடையாளம் காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.. 

http://www.virakesari.lk/article/37258

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் முதல் குற்றவாளி அந்த சிறுமியின் தாய் 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.