Jump to content

அப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம்


Recommended Posts

அப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம்

 

 
 

2009 இல்  அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என ஒன்பது வயது சிறுமியொருவர் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளிடம் உருக்கமான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

c1.jpg

இன்று கிளிநொச்சி கூட்டுறவு  மண்டபத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே குறித்த சிறுமி மேற்கண்ட கோரிக்கையை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகளிடம் விடுத்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் சரணடைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தினர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் சென்றிருந்தனர்.

இதன்போது விடுதலைப்புலிகளின் திரைப்பட பிரிவில் கடமையாற்றிய திலக் என்பவரும் சரணடைந்திருந்தார்.  இவ்வாறு சரணடைந்த திலக் என்பவரின் ஒன்பது மகளே இன்று மிக  உருக்கமாக தனது அப்பாவை தேடித்தாருமாறும் தான் இதுவரை அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

c3.jpg

c2.jpg

இதன்போது கூட்டுறவு மண்டபத்திலிருந்த கிராம அலுவலர்கள்  உட்பட பலர் கண்ணீர்விட்டு அழுதமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/36625

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகளே ! 2009 க்குப் பின்னர்தான் இந்தியப் பெருங்கடலில் உப்பின் அளவு கூடியது. அதன் காரணம், அக்கரையில் நீ பெருக்கிய கண்ணீரும் இக்கரையில் நான் வடித்த கண்ணீரும் தானடி.

Link to comment
Share on other sites

சரணடைந்தவர்களை கொன்றது போர்க்குற்றம் இல்லை என்றும் சிலர் இங்கு வாதாடுகிறார்கள். சில மனிதருக்கு ஆறாம் அறிவு ஏன் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, nunavilan said:

சரணடைந்தவர்களை கொன்றது போர்க்குற்றம் இல்லை என்றும் சிலர் இங்கு வாதாடுகிறார்கள். சில மனிதருக்கு ஆறாம் அறிவு ஏன் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

போர்க் கைதிகளைக் கூட எவ்வாறு நடத்த வேண்டும் என ஐ.நா. வகுத்து 150 வருடங்கள் கூட ஆகவில்லை. குறைந்தது 20 நூற்றாண்டுகள் முன்னர் இதனை வகுத்த புறநானூற்று நாகரிகத்திற்குரியது தமிழினம். இன்னும் நாகரிகம் அடையாத மனிதர்களை  'ஆறறிவற்ற ஜீவன்கள் ' என்பதன்றி வேறு  என்ன சொல்வது ?

Link to comment
Share on other sites

6 hours ago, nunavilan said:

சரணடைந்தவர்களை கொன்றது போர்க்குற்றம் இல்லை என்றும் சிலர் இங்கு வாதாடுகிறார்கள். சில மனிதருக்கு ஆறாம் அறிவு ஏன் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

சரண் அடைந்தவர்களை மட்டுமல்ல, சரண் அடையாமல் கைப்பற்றப்பட்டவர்களை கூட கொலை செய்வது குற்றம். போரின்போது இது இடம்பெற்றால் போர்க்குற்றம். போர்க்குற்றவாளிகளில் முக்கியமானவரும் அடையாளம் கானப்படக்கூடியவரும் இந்த குற்றங்களை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள். இலங்கை போரில் இவர்களை உலகறியும். இந்த போர்க் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும்வரை அல்லது ஒரு  நீதி மன்றம் அவற்றில் இருந்து விடுவிக்கும் வரை கோத்தபாயாவின் அமெரிக்க குடியுரிமையை அமெரிக்க அரசு தக்க வைத்துக்கொள்ளும் என்று மகிந்த ராஜபக்சவுக்கு தெரிவித்ததாக செய்திகள் வந்து இருந்தன. ஆனால் கோத்தபாயா அமெரிக்கா வந்த போது இந்த அமெரிக்க குடிமகனை கைது செய்யவில்லை. இவ்வாறு கைது செய்வதற்கு பிடிவிறாந்து ஒரு நீதிமன்றால் வழங்கப்பட்டு இருந்தால் கைது செய்யப்பட்டு இருப்பான். இங்கே இருக்கும் தமிழர் அமைப்புக்களால் இந்த பிடிவிறாந்தை பெற முடியவில்லை. அதற்கு தேவையான ஆதாரங்களோ பணமோ இருக்கவில்லை. கோத்தபாய அமெரிக்க குடிமகனாக இருப்பதாலும் சீன சார்பு அமெரிக்க எதிர்ப்பு அரசியல் செய்வதாலும் இந்த சாத்தியம் உள்ளது.

 

மற்ற ஸ்ரீ லங்கா போர் வீரர்கள், ஆயுததாரிகள், அரசியல்வாதிகள் போர்க்குற்றவாளிகளாக இருந்தாலும் ஸ்ரீ லங்காவில் அவர்கள் இருக்கும்வரை வேறு எந்த நாடும் அங்கு பொலிசையோ இராணுவத்தையோ அனுப்பி அவர்களை கைது செய்யாது. இதற்கு காரணம் அந்த நாடுகள் அப்படி செய்ய முனைந்தால் ஸ்ரீ லங்கா போலிசும் இராணுவமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும். மேலும் அதற்கான செலவையும் உயிர் இழப்புகளையும் பொலிசை அனுப்பிய நாட்டு மக்கள் எதிர்ப்பார்கள். அவ்வாறான முடிவு எடுத்த அரசியல்வாதி தனது பதவியை இழப்பார். ஆகவே இலங்கை போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் சாத்தியம் மிகவும் குறைவு.

 

அடிப்படியில் இரண்டு தேவைகள் உள்ளன. ஈழத்தமிழர் தான் இவற்றை தயார் படுத்த வேண்டும்:

  1. போர்க்குற்றவாளிகளை கைது செய்து, விசாரணை நடத்தி சிறையில் வைத்து சாப்ப்பாடு போட பணம் - பல கோடிகள் செலவாகும்.
  2. போர்க்குற்றவாளிகளை கைது செய்து கொண்டுவர உயிரை இழக்கவும் தயாரான ஒரு இராணுவம் - இது தனியார் இராணுவமாகவும் இருக்கலாம். 

இவற்றை தயார் படுத்த்தினால் சில நாடுகள் ஆதரவு தரக்கூடும். இவை இரெண்டும் இன்று தமிழ் மக்களிடம் இல்லை. இவை பற்றி கருத்து சொல்லும் தமிழர்களை கூட நான் அறியவில்லை. ஆகவே இலங்கை போர்க்குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் சாத்தியம் மிகவும் குறைவு.

 

Link to comment
Share on other sites

Quote

மற்ற ஸ்ரீ லங்கா போர் வீரர்கள், ஆயுததாரிகள், அரசியல்வாதிகள் போர்க்குற்றவாளிகளாக இருந்தாலும் ஸ்ரீ லங்காவில் அவர்கள் இருக்கும்வரை வேறு எந்த நாடும் அங்கு பொலிசையோ இராணுவத்தையோ அனுப்பி அவர்களை கைது செய்யாது. இதற்கு காரணம் அந்த நாடுகள் அப்படி செய்ய முனைந்தால் ஸ்ரீ லங்கா போலிசும் இராணுவமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும். மேலும் அதற்கான செலவையும் உயிர் இழப்புகளையும் பொலிசை அனுப்பிய நாட்டு மக்கள் எதிர்ப்பார்கள். அவ்வாறான முடிவு எடுத்த அரசியல்வாதி தனது பதவியை இழப்பார். ஆகவே இலங்கை போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் சாத்தியம் மிகவும் குறைவு.

போர்க்குற்றவாளிகள் உயர்ஸ்தானிகளாக பல நாடுகளில்  வேலை பார்க்கிறார்கள். அவர்களே தண்டனை எதுவும் பெறாமல  சுதந்திரமாக உள்ளனர்.

Quote

 

அடிப்படியில் இரண்டு தேவைகள் உள்ளன. ஈழத்தமிழர் தான் இவற்றை தயார் படுத்த வேண்டும்:

  1. போர்க்குற்றவாளிகளை கைது செய்து, விசாரணை நடத்தி சிறையில் வைத்து சாப்ப்பாடு போட பணம் - பல கோடிகள் செலவாகும்.
  2. போர்க்குற்றவாளிகளை கைது செய்து கொண்டுவர உயிரை இழக்கவும் தயாரான ஒரு இராணுவம் - இது தனியார் இராணுவமாகவும் இருக்கலாம். 

இவற்றை தயார் படுத்த்தினால் சில நாடுகள் ஆதரவு தரக்கூடும். இவை இரெண்டும் இன்று தமிழ் மக்களிடம் இல்லை. இவை பற்றி கருத்து சொல்லும் தமிழர்களை கூட நான் அறியவில்லை. ஆகவே இலங்கை போர்க்குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் சாத்தியம் மிகவும் குறைவு.

 

மிலோசவிச் தானாக சிறைக்குள் வந்து குந்தி இருப்பார் என நான் நினைக்கவில்லை,

https://www.theguardian.com/world/2006/mar/11/warcrimes

Link to comment
Share on other sites

3 hours ago, nunavilan said:

போர்க்குற்றவாளிகள் உயர்ஸ்தானிகளாக பல நாடுகளில்  வேலை பார்க்கிறார்கள். அவர்களே தண்டனை எதுவும் பெறாமல  சுதந்திரமாக உள்ளனர்.

  1. இந்த நாடுகள் இவர்களை போர்க்குற்றவாளிகள் என்று ஏன் ஏற்றுகொள்ளவில்லை?
  2. அந்த நாட்டு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டும் தமிழ் அமைப்புகள் இவர்களை கைது செய்யுமாறு ஏன்  வழக்கு போடவில்லை?
  3. இந்த போர்க்குற்றவாளிகளை சிறையில் அடைப்பதில் தமிழ் அமைப்புக்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் வழக்கு போட்டு இருப்பார்களே?
3 hours ago, nunavilan said:

மிலோசவிச் தானாக சிறைக்குள் வந்து குந்தி இருப்பார் என நான் நினைக்கவில்லை,

https://www.theguardian.com/world/2006/mar/11/warcrimes

மிலோசவிச்சை   பிடிப்பதற்கும், வழக்கு நடத்துவதற்கும் சிறையில் அடைப்பதற்கும் ஆகிய செலவை யார் வழங்குகிறார்கள்?

இவற்றை எல்லாம் இலவசமாக நலன் விரும்பிகள் தமது செலவில் செய்கிறார்கள் என்றா சொல்கிறீர்கள்?

அப்படி பார்த்தாலும், ஈழத்தமிழருக்கு இப்படி இலவசமாக உதவக்கூடிய நலன் விரும்பிகள் யார் ? எவரும் இல்லை.

 

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உங்களுக்கு இந்தியா பற்றி நான் தந்திருப்பது தரவுகளை. நீங்கள் மேலே அலம்பியிருப்பது இந்தியா தொடர்பான உங்கள் ஆத்திரக் கருத்துக்களை. இந்தியா மீது அபிமானம் எனக்கும் இல்லை - ஆனால், தரவுகளை நோக்கித் தான் ஒரு நாட்டின் முன்னேற்றம் பற்றிய கருத்துக்கள் வர வேண்டும், அந்த நாட்டை விரும்புகிறோமா வெறுக்கிறோமா என்பதை ஒட்டியல்ல. பொருளாதார வளர்ச்சி ஊழலால் பெரிதும் பாதிக்கப் பட்டிருக்கிறது இந்தியாவில். ஆனால், மனித வளம் அதையும் மீறி இந்தியாவை முன்னேற்றி வருகிறது. இந்தியா போன்ற கலாச்சாரப் பின்னணி கொண்ட, ஆனால் மனித வளம் மிகக் குறைந்த பாகிஸ்தானிலோ. வங்க தேசத்திலோ இந்தியாவில் இருப்பது போன்ற வளர்ச்சி இல்லை - இது உங்களுக்குக் கசக்கலாம், ஆனால் யதார்த்தம் அது தான்.
    • அருமையான கண்ணோட்டம் அழகான சிந்தனைகள் ......நல்லாயிருக்கு ......!  👍 இந்தக் கவிதையை நீங்கள் யாழ் அகவை 26 ல் பதியலாமே .......இப்பவும் நிர்வாகத்தில் சொன்னால் மாற்றிவிடுவார்கள்.........நாளையுடன் திகதி முடியுது என்று நினைக்கிறேன்.........!  
    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.