Jump to content

அவற்றின் கண்கள்


Recommended Posts

அவற்றின் கண்கள் - பா.திருச்செந்தாழை

 
ஓவியங்கள் : ரமணன்

 

வில்சன் - மேரி, ஓய்வுபெற்ற ஆசிரியத் தம்பதி. மேரி இன்று இறந்துவிட்டிருந்தார். பணி நாளினிடையே ஒரு மரணக் குறிப்பானது கார்ட்டூன் தோற்றம் பெற்றுவிடுகிறது. ஹவுசிங்போர்டு முட்டுச்சந்தில் அவர்களின் வீடு இருந்தது. நீராதாரம் இழந்துவிட்டு வீடுகளைக் கைவிட்டுச் சென்றுவிட்டவர்களால் அந்தத் தெரு சூன்யமடைந்திருந்தது. இயல்பாகவே முட்டுச்சந்து வீடுகள் காலத்தில் அதிர்ச்சியடைந்து அமைதியானவை. அநாதைக் கூழாங்கற்களில், மரங்களில், ஜன்னல்களில் பிணங்களைப்போல இறுகிவிட்ட ஈரத்திற்காகக் காயவைக்கப்பட்ட கொடித்துணிகளில் முட்டுச்சந்துகள் தங்களின் துக்கத்தை வளர்க்கின்றன. அதேவேளையில், பருவகால நோயொன்றிலிருந்து மீண்டுகொண்டிருப்பவனுக்கு முட்டுச்சந்து வீடுகள் தருகின்ற அமைதி தனித்துவமிக்கது. கிறித்தவ வீடுகளுக்கே உரிய ஒரு மருத்துவ நிசப்தமும், லேசாகக் கண்ணாடிப்பொழிவு ஏறிவிட்ட சிமிட்டித் தரையும்கொண்ட எளிய வீடு அது.

வில்சன் - மேரி தம்பதிக்குக் குழந்தைகளில்லை. குழந்தையற்றவர்கள் தங்களின் வயது மீதான ஓர்மையை இழந்துவிடுவதோடு, துக்க நாடகத்தின் சாயலோடு குழந்தையின் துடுக்குத்தனங்களையும் பிரதி செய்கிறார்கள். வில்சனும் மேரியும் சர்ச்சுக்குச் செல்கையில் தங்களுக்குள் சிறுசிறு சண்டைகள் பழிப்புகள் செய்துகொள்வார்கள். பிரார்த்தனை முடிந்து திரும்புகையில் சிறிய பழங்கள், கிழங்குகளைக் கொறித்தபடி சாலையோர நிழலில் நடந்து செல்வார்கள்.

120p1_1524653089.jpg

மேரியின் பாதத்தின் கீழே ஐஸ்பார் வைக்கப்பட்டிருந்தது. சர்ச்சுக்குத் தயாரான பாவனையுடன் அவர் கிடத்தப்பட்டிருந்தார். நீண்டகாலமாகச் சிதையாத மௌனம் விரிந்திருந்த அவ்வீட்டில், விவரிக்கவியலாத ஒரு தயக்கத்தை நான் உணர்ந்தேன். குழந்தைகளற்ற வீட்டின் பொருள்கள் வயதேறி உருகுகின்றன. பிறகு, அவற்றுக்குக் கண்கள் திறக்கின்றன. இரு மனித பொம்மைகளின் தினசரியை அவை அசுவாரஸ்யமாகப் பார்க்கின்றன. ஒரு நாவலின் இறுதிப் பக்கத்தின் கருமையை வீட்டின் சுவர்கள் வடிக்கத் தொடங்குகையில், அவர்களில் ஒருவர் மரணிக்கிறார்.

பெண்களே இல்லாத மரண வீடு இது. ஆகையால் இந்த மரணம் தன் சம்பிரதாயங்களை இழந்திருக்க, சொற்பக் கண்களின் கூட்டமானது ஓர்அலுவலகத் தன்மையை அபத்தமாகப் பிரதிபலித்தது. வில்சன் தன் சட்டையை இன் செய்திருக்க, அவரது பல்செட் ஒரு நிரந்தரச் சிரிப்பை வழியவிட்டபடியிருந்தது. பிளாஸ்டிக் சேரில் கிடந்த ஆங்கில தினசரியைத் துல்லியமாக மடித்தப்படி உள்ளே கொண்டு சென்றார். வெளியில் வரும்போது அந்தப் பல்செட் புதியவர்களைப் பார்ப்பதுபோல மீண்டும் சிரித்தது.
120p3_1524653224.jpg
வந்திருந்த சொற்பக் கண்களும் வெளியில் கிடந்த சேர்களில் காரிய நிமித்தமாக அமர்ந்து, அந்தத் தெருவின் நடமாட்டமிழந்த வெறுமையைப் பார்த்துக்கொண்டிருந்தோம். எனக்கு லேசாக தலை வலித்தது. ஒரு தேநீருக்காக நான் நடக்கவேண்டிய தொலைவை அஞ்சி, இருக்கையிலேயே தொய்ந்தேன். வீட்டினுள்ளே மிக மெல்லியதாக வில்சன் யாருடனோ பேசிக்கொண்டிருப்பது கேட்டது. சில நிமிடங்களுக்குப் பிறகு, அவர் மட்டுமே எதிர்க்குரலற்று பேசிக்கொண்டிருப்பதை உணர்ந்து மெதுவாக எழுந்து எட்டிப் பார்த்தேன். ஞாபகம் வந்தவரைப்போல வில்சன், ஓர்அறையிலிருந்து மேரியின் பைபிளை எடுத்துவந்து தலைமாட்டில் வைத்தார். மேரியின் விரல்தடம் பதிந்து பதிந்து எண்ணெய் கக்கிய கறுப்பு ரெக்சின் போட்ட பைபிள், மினுங்கும் காகத்தைப்போலிருந்தது. மேரியின் முகத்திலிருந்து ஓர் ஆமோதிப்பைப் பெற்றுவிட்ட திருப்தியுடன் தலையசைத்துக்கொண்டார். மேரியின் பின்பாதங்கள் ஐஸ்பாரை பிறை வடிவத்தில் கரைத்தபடி உள்ளிறங்கிக்கொண்டிருக்க, உருகி வழிந்த நீரின் மேல் கால்மிதியைப் போட்டுவைத்தார். ஒரு மௌனச் சடங்குபோல எல்லாம் நிகழ்ந்துகொண்டிருந்தன. நான் முன்னறையைத் தாண்டி உள்ளே செல்ல யோசித்திருக்க, கால்மிதியை நீவிவிட்டபடி என்னை ஏறிட்ட வில்சன், முற்றிலும் அந்நியமான ஒரு பார்வையுடன் மேரியின் பக்கம் திரும்பிக்கொண்டார்.

கல்லறைத்தோட்ட வாகனம் வருவதற்கு தாமதமாகுமெனத் தெரிந்தது. நாங்கள் மூன்று பேர் மட்டுமே எஞ்சியிருந்தோம். வில்சன் வெளியே வந்து சில பிளாஸ்டிக் சேர்களை ஒன்றிணைத்து ஆள்களற்ற எதிர் வீட்டினோரம் வைத்துவிட்டு வந்தார். எங்கள் பக்கம் திரும்பாமல் கானல் நெளியத் தொடங்கிவிட்ட தெருமுனையை உற்று நோக்கியபடியே சில நொடிகள் நின்றார். என்னுடன் மீந்த இரண்டு பேரும், வில்சன் வீட்டிற்குள் சென்றதும் நழுவிவிடத் தயாரானார்கள். என்னால் யூகிக்கவே முடியவில்லை தனியனாக அந்தத் தெருவில், அந்த வீட்டில் எனது இருப்பை.

இறந்த மனைவியின் ஊறிய பாதங்களில் வழியும் குளிர்ந்த நீரைத் துடைத்தபடி அவளுடன் பேசிக்கொண்டிருக்கும் மனிதன்... கண் விழித்துவிட்ட அறைப் பொருள்களின் பார்வைகள் உயிர்ச்சலனம் இல்லாத சூன்யத் தெருவில் மெருகைப்போல சிதைகின்ற வீடுகளின் அரற்றல்கள்... மேலும், என்னை மிரளச் செய்யும்விதம் எப்போது வேண்டுமானாலும் கா... வெனக் கரைந்துவிடுகின்ற மினுக்கத்தில் ஒரு பைபிள்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுதான சிங்கள இனவாதம்  படித்து படித்து பலமுறை  சொல்லியிள்ளோம் ?
    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.