Jump to content

ரஜினி கையில் இரட்டை இலை! - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை


Recommended Posts

மிஸ்டர் கழுகு: ரஜினி கையில் இரட்டை இலை! - பி.ஜே.பி விரிக்கும் மாயவலை

 

 

p42b_1531481942.jpg

‘‘அ.தி.மு.க-வின் அதிகார மையமாக ரஜினி... இது எப்படி இருக்கு?’’ என்றபடியே என்ட்ரி ஆனார் கழுகார்.

‘‘நம்புகிற மாதிரி இல்லையே?’’ என்றோம்.

‘‘எதுவும் நடக்கலாம் என்பதுதான் அரசியல் தியரி’’ எனச் சொல்லிவிட்டு, குறிப்பு நோட்டைப் புரட்ட ஆரம்பித்த கழுகார், ‘‘சென்னையில் பி.ஜே.பி நிர்வாகிகள் மத்தியில் அமித் ஷா ஆற்றிய உரைக்கு அர்த்தம் தேடும் பி.ஜே.பி சீனியர் தலைவர்கள் சிலர், இதைத்தான் சொல்கிறார்கள். ‘தமிழகத்தில் பி.ஜே.பி எங்கே இருக்கிறது என்று கேட்பவர்கள், 2019 மார்ச் மாதத்தில் பி.ஜே.பி-யைப் பற்றித் தெரிந்துகொள்வார்கள். இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு, கூட்டணி குறித்து முடிவெடுப் போம். தமிழகத்தில் வலிமையான கூட்டணி அமையும். தமிழகத்தில் ஊழல் இல்லாத தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமையும்’ என்று பேசினார் அமித் ஷா.’’

‘‘அதற்கு என்ன?’’

‘‘ரஜினி, கார்த்திக் சுப்பராஜ் படத்தை முடித்துவிட்டு அரசியலுக்கு வருவார் என்கிறார் தமிழருவி மணியன். செப்டம்பருக்குள் அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிடும். 2.0 படம் நவம்பரில் ரிலீஸ் ஆகிறது. கிட்டத்தட்ட அந்த நேரத்தில் ரஜினி முழுமையாக அரசியலுக்கு வந்திருப்பார்.’’

p42a_1531481933.jpg

‘‘இரண்டுக்கும் எப்படி முடிச்சுப் போடுகிறீர்கள்?’’

‘‘தமிழக பி.ஜே.பி சீனியர்கள், ‘அமித் ஷா சொல்லும் அந்த வலிமையான கூட்டணியும், தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியும் ரஜினியை வைத்தே அமையும்’ என்கிறார்கள். அ.தி.மு.க-வின் நிர்வாகப் பொறுப்புக்கு ரஜினியைக் கொண்டுவந்து, அவர் கையில் இரட்டை இலை என்ற வெற்றிச் சின்னத்தைக் கொடுத்தால் அது சாத்தியமாகும் என்பதுதான் பி.ஜே.பி-யின் மாஸ்டர் பிளான். அதற்காக காய்கள் நகர்த்தப்படுகின்றன. இரு திராவிடக் கட்சிகள் உள்பட அனைத்துக் கட்சிகளிடமும் ஒரே மாதிரியாகப் பழகக்கூடியவர் ரஜினி. ஆனாலும், பி.ஜே.பி-மீது ரஜினிக்கு தனிப்பாசம் உண்டு. அகில இந்திய தலைவர்களில் நரேந்திர மோடிதான், வீடு தேடி வந்து ரஜினியைப் பார்த்தவர். ‘அரசியலுக்கு வருவேன்’ என 1996-லிருந்து சொல்லிக் கொண்டிருந்த ரஜினி, கடந்த டிசம்பரில்தான் அரசியலுக்கு வருவதைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டார். ‘இத்தனை ஆண்டு காலம் அமைதியாக இருந்துவிட்டு, ரஜினி இப்போது அரசியலுக்கு வருவதே பி.ஜே.பி-க்காகத்தான். பின்னணியில் இருந்து ரஜினியை பி.ஜே.பி-தான் இயக்குகிறது’ என்ற விமர்சனங்கள் இன்றுவரையில் தொடர்கின்றன.’’ 

‘‘சரி, இந்தத் திட்டத்துக்கு ரஜினி ஒப்புக்கொள்ள வேண்டுமே?’’

‘‘அதற்குத்தான் வருகிறேன். ரஜினி 1996 மற்றும் 98 தேர்தல்களுக்குப் பிறகு, எந்தத் தேர்தலிலும் வெளிப்படையாகக் கருத்து சொல்லவில்லை. 2011 சட்டசபைத் தேர்தலில் ரஜினி வாய்ஸ் கொடுக்கவில்லை. ஆனால், அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரிக்கு அவர் வாக்களிக்க வந்தபோது, வாக்குப்பதிவு இயந்திரத்தில் இரட்டை இலை சின்னத்துக்கு எதிரே இருந்த பட்டனை ரஜினி அழுத்தும் காட்சிகள் வெளியாகின. அதைப் படம்பிடித்தவர்களை ரஜினி தடுக்கவில்லை. இரட்டை இலைமீதான ரஜினியின் பாசம் பற்றி அவரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒரு விஷயத்தைச் சொல்கிறார்கள். 1996 தேர்தலில் தி.மு.க ஜெயிப்பதற்கு ரஜினியும் பங்கு வகித்தார். அந்த நேரத்தில் நெருக்கமான சிலர் ரஜினியிடம், ‘இந்தத் தேர்தலில் நீங்கள் களமிறங்கியிருந்தால் ஆட்சியில் அமர்ந்திருக்கலாமே?’ எனக் கேட்டார்கள். அதற்கு ரஜினி, ‘இந்திய அரசியலில் சினிமா நடிகர்களுக்கு மாஸ் ஏற்பட்டது என்.டி.ஆருக்கும் எம்.ஜி.ஆருக்கும்தான். அப்படியான மாஸ் எனக்கு அரசியலில் கிடைக்குமா என்கிற சந்தேகம் உண்டு. எம்.ஜி.ஆரின் தொண்டர்கள் அப்படியே என் ரசிகர்களுடன் இணைந்தால் நிச்சயம் அரசியலில் இறங்கலாம்‘ என்று சொன்னாராம்.’’

‘‘ஓஹோ!’’

‘‘இதை உண்மையாக்கும் வகையில் சில விஷயங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. ‘ரஜினி மக்கள் மன்றம்’ என்ற பெயரில்தான் ரஜினி இயங்கிவருகிறார். கமல் கட்சியை ஆரம்பித்துத் தேர்தல் ஆணையத்திலும் பதிவுசெய்துவிட்டார். ஆனால், ரஜினி கட்சியையே ஆரம்பிக்கவில்லை; பெயரும் சூட்டவில்லை. ‘அரசியலுக்கு வருவதாக அறிவித்தவர், கட்சி ஆரம்பித்தல்லவா களமிறங்கியிருக்க வேண்டும். அதை அவர் செய்யாமல் இருப்பது ஏன்’ என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 2018 மார்ச் மாதம் ஏ.சி.சண்முகம் ஏற்பாட்டில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத்தில் எம்.ஜி.ஆரின் சிலையை ரஜினி திறந்து வைத்தார். அங்கே ரஜினி பேசிய அரசியலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘எம்.ஜி.ஆரைப் போல ஒருவர் வருகிறேன் என்று சொன்னால், அவனைவிட பைத்தியக்காரன் யாரும் இருக்கமுடியாது. ஆனால், எம்.ஜி.ஆர் தந்த நல்லாட்சி, ஏழை மக்களுக்கான ஆட்சி, சாமானிய மக்களுக்கான ஆட்சி, அந்த ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு’ என்று சொன்னார்.

எம்.ஜி.ஆரின் ரசிகர்களை, அவரின் தொண்டர்களை அப்படியே மொத்தமாக அணைத்துக்கொள்வதுதான் ரஜினியின் திட்டம் என்பது அந்தப் பேச்சிலிருந்து வெளிப்பட்டது.’’

‘‘அது கைகூடுமா?’’

‘‘ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைந்தபிறகு கூடிய அ.தி.மு.க பொதுக்குழுவில், பொதுச் செயலாளர் என்கிற பதவியை நீக்கிவிட்டனர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளில் அமர்ந்தபடி அவர்கள் கட்சியை நடத்திவருகிறார்கள். அவர்களுக்கு ஓட்டு வாங்கும் அளவுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை என்பது பி.ஜே.பி தலைமைக்குப் புரிந்திருக்கிறது. அ.தி.மு.க-விடம் இரட்டை இலை சின்னம் இருந்தாலும், மக்களை ஈர்க்கும் அளவுக்கு வசீகரமான ஒரு தலைமை தேவை. அந்த இடத்தை ரஜினி பூர்த்தி செய்வார் என பி.ஜே.பி நம்புகிறது. அதனால்தான், அ.தி.மு.க சீனியர்களை சம்மதிக்கவைக்க மாயவலை விரிக்கிறது. இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. அது விரைவில் முடிவுக்கு வரும்போது, அ.தி.மு.க-வின் அதிகாரப் பதவிக்கு ரஜினி வரலாம்.’’ 

‘‘இரட்டை இலை வழக்கு விரைவில் முடிவுக்கு வந்துவிடும் போலவே?’’

‘‘ஆமாம். இந்த வழக்கில் தினகரன், சசிகலா தரப்பு வாதங்கள் முடிவடைந்துவிட்டன. அதே போல், எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதமும் முடிவடைந்துவிட்டது. இன்னும் செம்மலை மற்றும் மதுசூதனன் தரப்பு வாதங்கள் மட்டுமே நிலுவையில் உள்ளன. அவையும் விரைவில் முடிந்து, இந்த மாதம் 23-ம் தேதிக்கு முன்பே தீர்ப்பையும் எதிர்பார்க்கலாம் என்கிறார்கள். தினகரன் பக்கம் உள்ள 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கு விசாரணை விரைவில் சென்னை உயர் நீதிமன்றத்தில் துவங்க உள்ளது என்பதை டெல்லி நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டியுள்ளார்கள் தினகரன் தரப்பினர். நீதிபதியும் அதை உள்வாங்கிக்கொண்டு, ‘விரைவில் வழக்கு முடிவுக்கு வந்துவிடும்’ என்று சூசகமாகக் கூறியுள்ளார். இரட்டை இலை வழக்கின் தீர்ப்பு வந்த அடுத்த சில நாள்களில், 18 எம்.எல்.ஏ வழக்கிலும் தீர்ப்பு வந்துவிடும். இரு வழக்குகளின் தீர்ப்பும் தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தலாம். ஒருவேளை ஏதேனும் தாமதமானாலும், ஆகஸ்ட் இரண்டாம் வாரத்துக்குள் இரண்டு வழக்குகளும் முடிந்துவிடும்.’’

‘‘தி.மு.க-வில் மண்டலச் செயலாளர்கள் நியமனம் எப்போதாம்?’’

‘‘லண்டனிலிருந்து ஸ்டாலின் திரும்பியதும் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். எட்டு பேருக்குப் பொறுப்பு கிடைக்கப்போகிறது. சென்னை, திருவள்ளூர் , வேலூர் மாவட்டங்களுக்கு துரைமுருகன்; காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு பொன்முடி; திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங் களுக்கு எ.வ.வேலு; கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு ஆ.ராசா; திருச்சி, பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், கரூர் மாவட்டங்களுக்கு கே.என்.நேரு; மதுரை, திண்டுக்கல், தேனி, நெல்லை மாவட்டங்களுக்கு ஐ.பெரியசாமி; விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்; தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு கீதாஜீவன் என்று உத்தேசப் பட்டியல் ரெடியாக உள்ளது. வேடிக்கை என்ன வென்றால், இவர்களில் எல்லோருமே அவர்கள் ஏற்கெனவே வகிக்கும் மாவட்ட மற்றும் மாநிலப் பதவிகளிலும் தொடர்வார்களாம். இவர்களில் சிலர் மாவட்டச் செயலாளர்களாகவும் உள்ளனர். ‘மண்டலச் செயலாளர் என்ற அதிகாரத்தில் பக்கத்து மாவட்டங்களில் இவர்கள் குழப்பம் ஏற்படுத்த மாட்டார்களா?’ என்று சீனியர் தலைவர்கள் சிலர் கேட்கிறார்கள்.’’

‘‘தமிழக காங்கிரஸிலும் புதிய நிர்வாகிகள் நியமனம் இருக்கப்போகிறதாமே?’’

‘‘ராகுல் காந்தி கடந்த ஜனவரியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரான பிறகு மாநிலத் தலைவர்கள் யாரையும் அவர் மாற்றவில்லை. ஆனால், மாநில நிர்வாகிகள் புதிதாக நியமிக்கப்பட்டு வருகிறார்கள். மாநிலத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர் என்று ஒவ்வொரு பொறுப்பிலும் ஆறு பேர் மட்டுமே போதும் என்று ராகுல் காந்தி சொல்லியிருக்கிறாராம். ஆனால், பழைய முறையிலேயே நிர்வாகிகள் பட்டியலை திருநாவுக்கரசர் தயார் செய்துள்ளாராம். அத்துடன் ஜூலை 16-ம் தேதி அவர் டெல்லி செல்கிறார். இதில் பொருளாளர் பதவிக்குத்தான் கடும் போட்டி. திருநாவுக்கரசர் தனிக்கட்சி தொடங்கியபோது அவருடன் இருந்த நாசே.ராமச்சந்திரன் இப்போது பொருளாளராக உள்ளார். ஆனால், அவர் இப்போது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அணியில் இருக்கிறார். எனவே, அவரை மாற்ற திருநாவுக்கரசர் முடிவெடுத்து விட்டார். காங்கிரஸ் கட்சியின்வசம் இருக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளைக் குறிவைத்துப் பொருளாளர் பதவிக்குப் பலர் காய் நகர்த்துகிறார்கள். பரிசீலனையில் உள்ள பலர் குற்றப் பின்னணி உள்ளவர்களாம். பட்டியலுடன் அரசர் டெல்லி போவதற்கு முன்பாகவே, புகார்கள் ராகுலுக்குப் போயிருக்கின்றன.’’

‘‘பழநி உற்சவர் முருகன் சிலை கும்பகோணத்துக்கு வந்திருக்கிறதே?’’

‘‘இந்தச் சிலை செய்வதில் முறைகேடு நிகழ்ந்ததாக வழக்கு நடைபெறுகிறது. அதனால், ஜூலை 11-ம் தேதி பழநி கோயிலிலிருந்து இந்தச் சிலை எடுத்துவரப்பட்டு, வழக்கு நடைபெறும் கும்பகோணம் கூடுதல் முதன்மை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. கும்பகோணம் நாகேஸ்வரன் கோயில் வளாகத்தில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் இதை வைக்க நீதிபதி உத்தரவிட்டார். எப்போதும் கலகலப்பாக இருக்கும்  சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி பொன்.மாணிக்கவேல், கும்பகோணம் நீதிமன்றத்துக்கு முருகன் சிலையைக் கொண்டு வந்தபோது, இறுக்கமாகவே காணப்பட்டார். பின்னர் சிலை வைக்கப்பட்ட நாகேஸ்வரன் கோயிலுக்குச் சென்றவர், ‘சிலைகளில் பெயின்ட்டால் எழுதக் கூடாது. வேண்டுமென்றால் விவரங்களை அட்டையில் எழுதி ஐ.டி கார்டு போல் மாட்டிவிடுங்கள்’ என்று திருமேனி உலோகப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொன்னார். ‘மீறி யாராவது பெயின்ட்டால் எழுதினால் எல்லோரும் ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும்’ என்றார். ராஜராஜ சோழன் சிலையை மீட்டுக்கொண்டுவந்தபோதெல்லாம் உற்சாகமாகக் காணப்பட்டார் பொன்.மாணிக்கவேல். முருகன் சிலை வந்தபோது அந்த உற்சாகம் மிஸ்ஸிங். ‘இந்தச் சிலை முறைகேடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பலரைக் காப்பாற்ற ஆட்சியாளர்கள் கொடுக்கும் நெருக்கடிதான் இதற்குக் காரணம்’ என்கிறார்கள் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவினர்’’ என்ற கழுகார் பறந்தார்.

அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி

படம்: ஏ.சிதம்பரம்


p42c_1531481972.jpg

அமித் ஷா சந்தித்த நிழல் மனிதர்!

மிழகத்துக்கு பி.ஜே.பி தலைவர் அமித் ஷா வந்திருந்தபோது, அவரின் பயணத் திட்டத்தில் இல்லாத ஒன்று நடந்தேறியது. கிருஷ்ணமூர்த்தி என்பவர் வீட்டுக்கு அமித் ஷா சென்றதே அது. தமிழகத்தின் பெரும்பாலான வி.ஐ.பி-க்களால் ‘ஜுடிஷியல்’ கிருஷ்ணமூர்த்தி என்று அழைக்கப்படும் இவர், கும்பகோணத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். காஞ்சி சங்கர மடத்தின் தொடர்பு ஆரம்பத்தில் இருந்துள்ளது. அதன்பிறகு சென்னையைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர் மூலம் நீதிபதிகள் தொடர்பு கிருஷ்ணமூர்த்திக்குக் கிடைத்துள்ளது. காஞ்சி மடத்தின் தொடர்பால் பி.ஜே.பி நபர்களுடன் ஏற்பட்ட பழக்கம், நீதிபதிகளுடன் ஏற்பட்ட நட்பு... இரண்டும் ஒரு கட்டத்தில் இவரை டெல்லி மேலிட வட்டாரங்களில் வளையவரச் செய்துள்ளது. பல நிறுவனங்கள் தங்களுக்கு ஏற்படும் சட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வுகாண இவரை அணுகுகின்றன. இதில் சில அரசியல்வாதிகளும் அடக்கம்.

இந்த அளவுக்கு நீதித்துறையில் செல்வாக்கு இருப்பதால்தான் இவரை ‘ஜுடிஷியல்’ கிருஷ்ணமூர்த்தி என்று அடைமொழியுடன் அழைக்க ஆரம்பித்தனர். இந்த நிழல் மனிதரை அமித் ஷா சந்தித்தது இப்போது சர்ச்சையாகியுள்ளது.


p42d_1531481991.jpg

அடுத்த ரெய்டு எங்கே?

ரசுகளுக்கு முட்டை மற்றும் பருப்பு சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனத்தில் ஐந்து நாள்கள் நடைபெற்ற ரெய்டு நிறைவடைந்தது. ‘‘அடுத்த ரெய்டு ஸ்வர்ணபூமி நிறுவனத்தில்தான்’’ என்கிறார்கள் வருமானவரித் துறை அதிகாரிகள். ‘கிறிஸ்டி’ நிறுவனர் குமாரசாமிக்கு நெருக்கமான ஷங்கர் என்பவர் நடத்தும் நிறுவனம்தான் ஸ்வர்ணபூமி. கிறிஸ்டி நிறுவனத்தின் பல்வேறு பிசினஸ்கள் இப்போது இந்த நிறுவனத்தின் பெயரில்தான் நடைபெறுகின்றன. கிறிஸ்டி நிறுவன ரெய்டின்போது, ஸ்வர்ணபூமி நிறுவனம் குறித்த ஆவணங்களையும் ஐ.டி துறை அள்ளியுள்ளது. இந்த நிறுவனத்துக்கும், தமிழகத்தின் மாண்புமிகு ஒருவருக்கும் இருக்கும் தொடர்பும் ஆராயப்படுகிறது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எம்ஜியார் போயே 31 வருசமாகுது. கடைசி (பப்)படம் வந்து 42 ஆண்டுகள்...

இன்னும் எம்ஜியார் ரசிகர்கள் என்று சும்மா அள்ளி விட்டு, மாராட்டியருக்கு சலங்கை கட்டி விட பார்கிறார்கள்.

தமிழகத்தில், காசு கொடுத்தால் யாருக்கும் விழும் வாக்கு - வெள்ளையர் வந்து கட்சி ஆரம்பித்தாலும் அதுதான் கதை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'வஞ்சனை செய்வாரடி கிளியே' என்ற வரிகள் பாஜக போன்ற பாசிச சக்திகளுக்கே பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.