Jump to content

முஸ்லீம்களுக்கு எதிராக தொடராக மேற்கொள்ளப்பட்ட கூட்டுப் படுகொலைகளின் முதல் களம் குருக்கள்மடம்: 28 ஆண்டுகள் நினைவு நூல் வெளியீடு.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

478d28dc-0328-408e-82f1-4ce3d39e4e73.png

 

- ஜெயபாலன் த -
28 ஆண்டுகளுக்கு முன் இன்றைய இதே நாளான யூலை 12 1990இல் தமிழீழ விடுதலைப் புலிகள் 
கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள் சிலவற்றை இடைமறித்து அதில் பயணித்த 69 முஸ்லீம்களைப் மட்டக்களப்பில் குருக்கள்மடத்தில் வைத்து படுகொலை செய்தனர். ஏற்கனவே கீழ் நிலையில் இருந்த தமிழ் – முஸ்லீம் இனங்களுக்கு இடையேயான உறவை இப்படுகொலைகள் மிக மோசமான நிலைக்குத் தள்ளியது.

இப்படுகொலைகள் இடம்பெற்று 28 ஆண்டுகளின் பின் இப்படுகொலையை ஆவணப்படுத்தும் ‘குருக்கள் மடத்துப் பையன்” என்ற நூலை சையது பஷீர் எழுதி உள்ளார். நிச்சாமம் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல் யூலை 14 சனிக்கிழமை தேசம் வெளியிட்டு வைக்க உள்ளது. கிழக்கு லண்டன்; ஈஸ்ற்ஹாமில் நடைபெற உள்ள இந்நிகழ்வுக்கு அரசியல் ஆய்வாளர் வி சிவலிங்கம் தலைமைதாங்க உள்ளார். இந்நிகழ்வில் அரசியல் மற்றும் சமூக விமர்சகர் எஸ் சிறிதரன் (முத்து), தேசம் த ஜெயபாலன், நூல் திறனாய்வாளர் விமர்சகர் மு நித்தியானந்தன் ஆகியோர் நூல் ஆய்வை மேற்கொள்ள உள்ளனர். இந்நிகழ்வில் நூலாசிரியர் சையது பஷீர் அவர்களுடனான கலந்துரையாடலும் இடம்பெறும்.


 
 இலங்கை முஸ்லீம் இனத்தவர்களுக்கு 1990ம் ஆண்டு குருதி தோய்ந்த ஆண்டு என்றால் மிகையல்ல. தமிழீழ விடுதலைப் புலிகள் முஸ்லீம்களுக்கு எதிராக நடத்திய வன்முறைத் தாக்குதல்கள் அதன் உச்சத்தைத் தொட்ட காலம் அது. இத்தொடர் படுகொலைகளின் முதல் களம் மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 உயிர்களை காவுகொண்டது. அதனைத் தொடர்ந்து கீழ்வரும் கூட்டுப் படுகொலைகள் தொடர்ந்தது.

தமிழீழ விடுதலை இயக்கங்கள் அனைத்துமே முஸ்லீம்களுக்கு எதிரான தங்கள் ஆயுதங்களை ஆங்காங்கே திருப்பிய போதும் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகத் திட்டமிட்ட வகையில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையை தங்கள் அரசியல் இராணுவக் கட்டமைப்புக்குள் கொண்டிருந்தனர். வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்களை வெளியேற்றி தமிழீழ விடுதலைப் புலிகள் இனச்சுத்திகரிப்பு செய்வதற்கு வசதியாக கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட தொடர் கூட்டுப்படுகொலைகள்:

1990 யூலை – 12 மட்டக்களப்பு குருக்கள் மடத்தில் 69 முஸ்லீம் பயணிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 01 மூதூர் முஸ்லிம்கள் வெளியேற்றம்
1990 ஆகஸ்ட் – 03 காத்தான்குடி மஸ்ஜிதுகளில் 103 முஸ்லிம்கள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 05 அம்பாறை முல்லியன்காடு 17 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 06 அம்பாற 33 முஸ்லிம் விவசாயிகள் படுகொலை
1990 ஆகஸ்ட் – 12 ஏறாவூர் 116 பேர் முஸ்லிம் கிராம படுகொலை
1990 ஒக்ரோபர் – 30 வடமாகாணத்தில் இருந்து முஸ்லீம்கள் வெளியேற்றம்
1992 ஒக்ரோபர் – 15 பலியகொடல்லா 285 கிராம வாசிகள் படுகொலை

._._._._._.

சையது பஷீரின்

“குருக்கள் மடத்துப் பையன்”

நூல் வெளியீடு

யூலை 14 2018

மாலை 4:00 மணிக்கு

Trinity Centre
East Avenue
Eastham
London E12 6SG

அனைவரையும் நட்புடன் வரவேற்கின்றோம்!

07800596786
த ஜெயபாலன்
தேசம்
 
https://www.madawalaenews.com
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பசி 1990 க்கு முதல் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை

Link to comment
Share on other sites

46 minutes ago, நந்தன் said:

ஜப்பசி 1990 க்கு முதல் முஸ்லிம்களுக்கு எதிராக எதுவும் நடக்கவில்லை

ஜப்பசி 1990 க்கு முதல் மன்னாரிலும் வேறு பிரதேசங்களிலும் விடுதலை புலிகள் அமைப்பை கட்டி எழுப்புவதில் முஸ்லிம்களும் தமிழராக இணைத்து செயற்பட்டனர். மற்ற தமிழ் அமைப்புகளை அழித்ததால் உண்டான பகைமையால் விடுதலை புலிகளை அழிப்பதில் தமிழரே முஸ்லிம்களிலும் பார்க்க பெரும் பங்கு ஆற்றினர். இதில் தலைவரின் பாசறையில் வளர்ந்த கருணா அம்மானின் பங்களிப்பு அளப்பெரியது. முஸ்லிம்களை இந்த ஜப்பசி 1990ல் வெளியேற்றியது போல் தமிழரையும் விடுதலை புலிகள் ஒட்டுமொத்தமாக உடுத்த உடையுடனும் ஐந்நூறு ரூபா பணத்துடனும் வெளியேற்றி இருந்தால் முஸ்லிம்கள் அழியாது தப்பியது போல் தமிழரும் தப்பி பிழைத்து இருப்பர். 

Link to comment
Share on other sites

On 7/13/2018 at 5:44 AM, Jude said:

 முஸ்லிம்களை இந்த ஜப்பசி 1990ல் வெளியேற்றியது போல் தமிழரையும் விடுதலை புலிகள் ஒட்டுமொத்தமாக உடுத்த உடையுடனும் ஐந்நூறு ரூபா பணத்துடனும் வெளியேற்றி இருந்தால் முஸ்லிம்கள் அழியாது தப்பியது போல் தமிழரும் தப்பி பிழைத்து இருப்பர். 

அப்படியா? எப்படி 1983 இனப்படுகொலையில் அவ்வளவு மக்களூம் கொல்லப்பட்டனர்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, nunavilan said:

அப்படியா? எப்படி 1983 இனப்படுகொலையில் அவ்வளவு மக்களூம் கொல்லப்பட்டனர்??

அரைச்ச மாவையே அரைக்கிற கொம்பனிக்காரர் உதுக்கும் மூட்டைக்கணக்கிலை மா வைச்சிருப்பினம்.

Link to comment
Share on other sites

10 hours ago, nunavilan said:

அப்படியா? எப்படி 1983 இனப்படுகொலையில் அவ்வளவு மக்களூம் கொல்லப்பட்டனர்??

1983 இல் சிங்கள பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழர்களிலும் பார்க்க தமிழ் ஈழத்தில் விடுதலை புலிகளின் காலத்தில் கொல்லப்பட்ட தமிழரின் தொகை பல மடங்கானது. மனிதர்கள்  இறப்பைதையும் கொல்லப்படுவதையும் நாம் குறைக்க பார்க்கிறோம்,  எந்த நாட்டிலே மனிதர்கள்  இறப்பதில்லை அல்லது கொல்லப்படுவதில்லை?

Link to comment
Share on other sites

அவர்களுக்கு “குருக்கள்மடத்து பையனை” போல் நம்மவர்க்கு “உடும்பன்குளம், திராய்க்கேணி,வீரமுனை,சத்துருக்கொண்டான்” எனப் பல “பெடியன்கள்” இருக்கின்றார்கள்....

Link to comment
Share on other sites

13 hours ago, Jude said:

1983 இல் சிங்கள பகுதிகளில் கொல்லப்பட்ட தமிழர்களிலும் பார்க்க தமிழ் ஈழத்தில் விடுதலை புலிகளின் காலத்தில் கொல்லப்பட்ட தமிழரின் தொகை பல மடங்கானது. மனிதர்கள்  இறப்பைதையும் கொல்லப்படுவதையும் நாம் குறைக்க பார்க்கிறோம்,  எந்த நாட்டிலே மனிதர்கள்  இறப்பதில்லை அல்லது கொல்லப்படுவதில்லை?

"தமிழரும் தப்பி பிழைத்து இருப்பர்" என்பதற்கு பதிலை காணோம். பிறகு எண்ணிக்கையை புகுத்தி   ஒரு சுத்துமாத்து ஏன்? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/18/2018 at 9:38 AM, பழுவூர் கிழான் said:

அவர்களுக்கு “குருக்கள்மடத்து பையனை” போல் நம்மவர்க்கு “உடும்பன்குளம், திராய்க்கேணி,வீரமுனை,சத்துருக்கொண்டான்” எனப் பல “பெடியன்கள்” இருக்கின்றார்கள்....

நம்மளுக்கு நடந்தால் சம்பவம் அவர்களுக்கு நடந்தால் சரித்திரம் என நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள் அதைக்காவிக்கொண்டு திரிய காம்புகளும் இருக்கு இருக்கணும் அப்பதான் நமக்கும் ந்டந்த சம்பவங்கள் ஞாபகத்திலிருக்கும் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
    • போட்டியில் கலந்துள்ள அஹஸ்த்தியன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! எங்கே மிச்சப் பேர் @ஈழப்பிரியன், @பையன்26?
    • த‌லைவ‌ரே பெரிய‌ப்ப‌ர் போன‌ கிழ‌மையே சொல்லி விட்டார் ம‌று ப‌திவு போட‌ முடியாது என்று சும்மா ஒரு ப‌திவு போட்டேன் ஓம் பெரிய‌ப்ப‌ர் ம‌ன‌சு மாறி இருப்பார் என்று பெரிய‌ப்ப‌ர் விடா பிடியில் இருக்கிறார் அது ச‌ரி த‌லைவ‌ரே போனா ஆண்டு நீங்க‌ள் பெற்ற‌ 5ப‌வுன்சில் ஈழ‌த்தில் பெரிய‌ மாளிகை க‌ட்டின‌தா த‌க‌வ‌ல் வ‌ருது.........கூடு பூர‌லுக்கு என்னை அழைக்க‌ வில்லை நீங்க‌ள் 2021 நான் வென்ற‌ 5ப‌வுன்ஸ்சின்  என‌து ஊரில் ஜ‌ந்து மாடி கொட்ட‌ல் க‌ட்டி விஸ்னேஸ் என‌க்கு அந்த‌ மாதிரி போகுது லொல்😂😁🤣.........................
    • துபாய் பஸ் ஸ்ராண்டை ஒட்டிய விவேகானந்தர் தெருவில் அவர் இருப்பதால் அங்கு வெள்ள பாதிப்பு இல்லை என்று அறிய கிடக்கிறது. 
    • அந்த ஜனாதிபதி கட்டிலில்... நாட்டு மக்கள் பலரும் படுத்து எழும்பியதை நாம் பார்த்தோமே...😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.