Jump to content

சினிமா விமர்சனம் - கடைக்குட்டி சிங்கம்


Recommended Posts

சினிமா விமர்சனம் - கடைக்குட்டி சிங்கம்

 
 

80களிலும் 90களிலும் குடும்பம் என்ற அமைப்பைப் போற்றும் சினிமாக்கள் வரிசைகட்டி வெளிவந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் ஒரு பாத்திரம் தியாகியாக இருக்கும். ஆனால், தமிழ் சினிமாவை சமீப காலமாக நகைச்சுவைப் படங்களும் பேய்ப் படங்களும் பிடித்து ஆட்டியதில் இந்த வகைப் படங்கள் இல்லாமலேயே போயின. இந்தப் படத்தின் மூலம் அந்த கடந்த காலத்திற்குள் கூட்டிச் செல்கிறார் பாண்டிராஜ்.

   
திரைப்படம் கடைக்குட்டி சிங்கம்
   
நடிகர்கள் கார்த்தி, சாயிஷா, அர்த்தனா பினு, பிரியா பவானி, சத்யராஜ், சூரி, பொன் வண்ணன், விஜி, பானுப்ரியா, இளவரசு, சந்துரு, சரவணன்
   
இசை டி. இமான்;
   
ஒளிப்பதிவு வேல்ராஜ்
   
இயக்கம் பாண்டிராஜ்
   
   
கடைக்குட்டி சிங்கம்படத்தின் காப்புரிமை2D ENTERTAINMENT

பெருநாழி ரணசிங்கம் (சத்யராஜ்) மிகப் பெரிய பணக்காரர். முதல் மனைவிக்கு (விஜி சந்திரசேகர்) ஆண் குழந்தை இல்லாததால், முதல் மனைவியின் தங்கையையே (பானுப்ரியா) திருமணம் செய்துகொள்கிறார். இதற்குப் பிறகு முதல் மனைவிக்கு ஆண்குழந்தையாகப் பிறக்கிறார் குணசிங்கம் (கார்த்தி). குணசிங்கத்திற்கு ஐந்து சகோதரிகள். இந்த சகோதரிகளில் இருவருக்கு திருமண வயதில் பெண்கள் இருக்கிறார்கள்.

ஒருவர் செல்லம்மா (ப்ரியா பவானி); மற்றொருவர் ஆண்டாள் (அர்த்தனா பினு). இவர்களில் ஒருவரை குணசிங்கம் கல்யாணம் செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்திருக்க, அவர் கண்ணுக்கினியாள் (சாயிஷா) என்ற வேறொரு பெண்ணைக் காதலிக்கிறார். இதனால், குடும்பத்தில் என்னவெல்லாம் பிரச்சனைகள் ஏற்படுகின்றன, அதை மீறி காதலித்த பெண்ணை குணசிங்கம் கைப்பிடித்தாரா என்பதுதான் கதை. இதற்கு நடுவில் கண்ணுக்கினியாளின் மாமாவாக வரும் வில்லனையும் (சந்துரு) சமாளிக்க வேண்டும்.

கடைக்குட்டி சிங்கம்படத்தின் காப்புரிமை2D ENTERTAINMENT

சேரன் இயக்கிய பாண்டவர் பூமி படத்தைப் போல, இந்தப் படத்திலும் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். யார், யாருக்கு எந்த வகையில் உறவு என்பதை குழப்பமில்லாமல் பதியவைப்பதற்காக படத்தின் முதல் அரை மணி நேரத்தை எடுத்துக்கொள்கிறார் இயக்குநர் . இந்த அரை மணி நேரத்தில் விவசாயத்தின் பெருமை, இயற்கை விவசாயத்தின் மகிமை ஆகியவற்றையும் சொல்வதால், நமது பொறுமை ரொம்பவுமே சோதனைக்குள்ளாகிறது.

ஆனால், இதற்குப் பிறகு கொஞ்சம் சுதாரித்துக்கொள்ளும் இயக்குநர், பிரதான கதைக்குள் நுழைகிறார். குடும்பத்திற்கு வெளியில் காதல், ஊருக்குள் சாதி உணர்வை வளர்த்து தலைவராக நினைக்கும் வில்லன், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் நடந்த ஆணவக் கொலையை ஞாபகப்படுத்தும் சம்பவங்கள் என மெல்ல சூடுபிடிக்கிறது படம். அவ்வப்போது வில்லனின் ஆட்களை துவம்சம் செய்து, படத்தின் டெம்போ குறையாமல் பார்த்துக்கொள்கிறார் இயக்குனர். முடிவில் ஒரு உருக்கமான காட்சிக்குப் பிறகு எல்லாம் சுபம்.

கடைக்குட்டி சிங்கம்படத்தின் காப்புரிமை2D ENTERTAINMENT

அவ்வப்போது பாடல்கள், கதாநாயகன் 50 பேரைப் பந்தாடும் சண்டைக்காட்சிகள், பெண்கள் உருக்கமாகப் பேசும் நீள நீள வசனங்கள் என பழைய பாணியிலேயே நகர்கிறது படம். ஆனால், இம்மாதிரிப் படங்களைப் பார்த்து வெகுநாட்களாகிவிட்டதாலும் சற்றே விறுவிறுப்பான திரைக்கதையாலும் தொடர்ந்து ஆர்வத்தைத் தக்கவைக்கிறது படம்.

கதாநாயகனின் தந்தை, ஆண் குழந்தைக்காக இரண்டு கல்யாணங்களைச் செய்வதும் மூன்றாவதாக திருமணம் செய்ய நினைப்பதும் படத்தின் பிற பாத்திரங்களால் ஆங்காங்கே விமர்சிக்கப்படுகின்றன. ஆனால், அது ஒரு குற்றமாக அல்லாமல் சாதாரண சம்பவம்போல படத்தின் பிற பாத்திரங்களால் பார்க்கப்படுவது உறுத்தலாக இருக்கிறது.

அதே நேரம், ஆணவக் கொலை செய்யும் நபரை வில்லனாக வைத்திருப்பது ஒரு நல்ல உத்தி. இருந்தும் காதாநாயகன் காதலிக்கும் பெண், யதேச்சையாக அவருடைய ஜாதியாகவே இருந்துவிடுகிறார்.

கடைக்குட்டி சிங்கம்படத்தின் காப்புரிமை2D ENTERTAINMENT

படம் முழுக்க குடும்பம் ஒற்றுமையாக இருப்பதையும் விவசாயத்தின் பெருமையையும் வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறார் இயக்குனர். ஆனால், இந்தக் குடும்ப ஒற்றுமைக்கு பெண்கள் விலைகொடுப்பது மேலோட்டமாக கடந்துசெல்லப்படுகிறது.

எத்தனை பேர் வந்தாலும் கதாநாயகன் குணசிங்கம் அடித்து நொறுக்கிவிடுவார் என்பதால், படத்தில் வரும் பயங்கரமான வில்லன் என்ன செய்வாரோ என்ற பதற்றம் ஏற்படவேயில்லை. இடைவேளைக்குப் பிறகு, ஒரே விவகாரம் திரும்பத் திரும்பப் பேசப்படும் போது சற்று அலுப்புத் தட்டுகிறது.

கடைக்குட்டி சிங்கம்படத்தின் காப்புரிமை2D ENTERTAINMENT

இம்மாதிரி கிராமத்துக் கதைகளுக்கென படைக்கப்பட்டவரைப் போலவே இருக்கும் கார்த்தி, அநாயாசமாக இந்தப் பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஜாலியாக லூட்டியடிப்பது, பொறுப்பான மகனாக இருப்பது, சகோதரியின் பாசத்திற்காக உருகுவது என புகுந்துவிளையாடியிருக்கிறார் கார்த்தி.

கார்த்தியின் நண்பனாக வரும் சூரி செய்யும் காமெடிகள் பல சமயங்களில் சிரிப்பை வரவழைக்கவில்லை. ஆனால், அவர் இல்லாமல் போயிருந்தால், இந்தப் படத்தை நினைத்தே பார்க்க முடியவில்லை.

 

 

வனமகன் மூலம் தமிழுக்கு அறிமுகமான சாயிஷாதான் இந்தப் படத்தின் கதாநாயகி. வனமகனில் இவரது நடிப்பு ரொம்பவுமே தனித்துத் தெரிந்தது. ஆனால், இந்தப் படத்தில் ஏகப்பட்ட பாத்திரங்கள் இருப்பதாலோ என்னவோ, சற்று மெருகு குறைந்திருக்கிறது.

குணசிங்கத்தின் முறைப் பெண்களாக வரும் அர்த்தனா பினு, பிரியா பவானிசங்கர் ஆகியோருக்கு படத்தின் பிற்பாதியில் நடிப்பதற்கு சற்று வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால், ஒரே மாதிரியான படங்களைப் பார்த்து அலுத்துப்போயிருக்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடித்துப்போகக்கூடும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44818348

Link to comment
Share on other sites

``ரணசிங்கம், குணசிங்கம் மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காங்க!" - `கடைக்குட்டி சிங்கம்' விமர்சனம்

 

கொஞ்ச நாள்களாகக் கத்தியும் துப்பாக்கியுமாகத் திரிந்துகொண்டிருந்த கார்த்தியை ரத்தமும் சதையுமாகக் குடும்பக் கதைக்குள் கொண்டுவரும் முயற்சியே இந்தக் 'கடைக்குட்டி சிங்கம்.’

``ரணசிங்கம், குணசிங்கம் மற்றும் நம் உறவினர்கள் எல்லாம் வந்திருக்காங்க!
 

ரில் பெரிய தலைக்கட்டு சத்யராஜ். அவருக்கு விஜி, பானுப்ரியா என இரண்டு மனைவிகள். ஆண் குழந்தை வேண்டுமென்ற அவரின் ஆசையைப் பொய்க்கச் செய்து வரிசையாக ஐந்து பெண் குழந்தைகள் பிறக்கின்றன. கடைக்குட்டியாகப் பிறக்கிறார் 'விவசாயி' கார்த்தி. இரண்டு அம்மாக்கள், ஐந்து அக்காக்கள், போதாக்குறைக்கு இரண்டு முறைப்பெண்கள் எனத் தேவதைகள் சூழ் உலகு கார்த்தியுடையது. ஆனால், ஒருகட்டத்தில் கார்த்தியினாலேயே குடும்பத்துக்குள் பிளவு ஏற்படுகிறது. இருக்கும் பிரச்னைகள் போதாதென்று ஒரு ஜாதிவெறி குரூப் வேறு கார்த்தியைப் போட்டுத்தள்ளத் துடிக்க, மயிரிழையில் தப்பித்துக்கொண்டே இருக்கிறார் ஹீரோ. எதற்காக அந்த ஜாதிவெறி கும்பல் இவரைத் துரத்துகிறது, குடும்பத்துக்குள் ஏற்பட்ட விரிசல் சரியானதா என்பதே மீதிக்கதை.

கடைக்குட்டி சிங்கம்

விவசாயி குணசிங்கமாகக் கார்த்தி. காமெடி, சென்டிமென்ட், உறவுச் சிக்கல்கள் என அவரின் முழு முதல் குடும்பப் படம் இது. ஒரு குறையும் வைக்காமல் சூப்பராக நடித்திருக்கிறார். அத்தைப் பெண்களுடன் பட்டும்படாத ஊடல், அக்காக்களிடம் மிஞ்சிக் கெஞ்சுவது, முறுக்கிக்கொண்டுத் திரியும் மாமன்களின் வெட்டி ஜம்பத்தை அசால்ட்டாக டீல் செய்வது, சத்யராஜிடம் குழைவது என எல்லா ஃப்ரேம்களிலும் கார்த்தி மட்டுமே தெரிகிறார். கொஞ்ச நாள்களாக 'ஏ' சென்டரில் மையம்கொண்டிருந்த அவரை பி, சி சென்டர்களில் கொண்டு சேர்க்கும் முக்கியமான படமாக இது இருக்கும்.

 

 

சயீஷா - கிராமத்து மண்மணத்துக்குப் பொருந்தா அழகோடு வந்தாலும் கண்களை நிறைக்கிறார். எக்கச்சக்க கேரக்டர்கள் உலாவரும் படத்தில் அவருக்கான பங்கு கொஞ்சம்தான் என்றாலும், உறுத்தாத வகையில் நடித்துக்கொடுத்திருக்கிறார். ஃபேஸ்புக் பைத்தியமாக வரும் பிரியா பவானிசங்கரியும் "மாமா! மாமா!" எனச் சுற்றிச் சுற்றிவரும் அர்த்தனா பினுவும் நம் அத்தைப் பெண்களின் சாயலில் லேசாகத் தெறியத்தான் செய்கிறார்கள்.

 
 

 

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கத்தில் கட்டப்பாவின் கெட்டப் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், சீனியர்மோஸ்ட் நடிகருக்கு நடிக்கத்தான் ஸ்கோப் இல்லை. ஒன்றிரண்டு காட்சிகளிலேயே பார்வையாளர்களைத் தன்வசப்படுத்திவிடும் சத்யராஜின் எனர்ஜி இந்தப் படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங். 

முன்பாதியில் ஒன்றிரண்டு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார் சூரி. ஆனா, இன்னும் எத்தன நாளைக்கு இதே வாய் குழறுன மாடுலேஷனுல பேஜிகிட்டு இருக்கப்போறீங்க ஜூரி பாஜு? போரடிக்குது! இரண்டாம் பாதியில் சூரியோடு சேர்ந்து கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள் சரவணனும் இளவரசும். கிராமத்தில் லந்து பண்ணும் பெரியப்பாக்களைப் பார்ப்பது போலவே இருக்கிறது. மெளனிகா, யுவராணி, தீபா, இந்துமதி, ஜீவிதா என ஐந்து அக்காக்களும் தங்களுக்குள் யார் பெஸ்ட் எனப் போட்டி போட்டுக்கொண்டு நடித்திருப்பார்கள் போல! அவ்வளவு இயல்பான நடிப்பு. மாமன்களாக வரும் ஶ்ரீமனும் மாரிமுத்துவும் பாட்டியாக வரும் அம்மாச்சியும் தங்கள் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

 

 

படத்தில் ஏகப்பட்ட நடிகர்கள் என்பதால் ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்லவே இரண்டு நாள்களாகும் போல! ஒவ்வொருவரும் நம் கிராமத்து சொந்தங்களை அப்படியே கண்முன் கொண்டுவருகிறார்கள். இதற்காக மட்டுமல்ல, இயக்குநரை இன்னொரு விஷயத்துக்காகவும் பாராட்டியே ஆக வேண்டும். படத்தில் அனைவருக்குமே தூய தமிழ்ப் பெயர்கள். பெருநாழி குணசிங்கம், கண்ணுக்கினியாள், அதியமான் நெடுங்கிள்ளி, வானவன் மாதேவி எனக் கம்பீரமாக ஒலிக்கின்றன பெயர்கள்.

வேல்ராஜின் கேமரா விவசாய நிலங்களின் வனப்பை அப்படியே கேமராவுக்குள் கொண்டு வந்திருக்கிறது. ஒவ்வொரு ஃப்ரேமும் பச்சையும் பசுமையுமாக.. ஜில்ஜில்! அவருக்கு பக்காவாக ஒத்துழைத்திருக்கிறார் கலை இயக்குநர் வீரசமர். இமானின் இசையில் எல்லாப் பாடல்களும் வழக்கம்போல 'ஆல்ரெடி கேம் ப்ரோ' டோனிலேயே இருக்கின்றன. சண்டைக் காட்சிகள் திலீப் சுப்பராயனின் சாய்ஸா இல்லை இயக்குநரின் சாய்ஸா எனத் தெரியவில்லை. ஒரே மாதிரியான மூன்று ஸ்டன்ட் சீக்வென்ஸ்கள் - ஆடியன்ஸுக்கு கொட்டாவிதான் வருகிறது. முன்பின் ஃபினிஷிங் இல்லாத நிறைய காட்சிகளால் எடிட்டருக்கு எக்கச்சக்க வேலை இருந்திருக்கும்!

கடைக்குட்டி சிங்கம்

வில்லன் சந்துருவுக்கான ஆரம்பகட்ட பில்ஃப் காட்சிகள் விறுவிறு ஆக்‌ஷன் படத்துக்கான டெம்போவை தக்க வைக்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் ஏமாற்றமளிக்கிறார். ஹீரோ விவசாயிதான். அதை நிறுவ படத்திலும் ஏகப்பட்ட காட்சிகள் இருக்கின்றனதான். ஆனால் வில்லனிடம் பன்ச் பேசும்போதுகூட, 'நான் விவசாயிடா' என்பதெல்லாம் ஓவர்டோஸ்! 

படத்தின் முக்கிய மைனஸ் நீளம்தான். கதையின் கனம் முழுக்க இரண்டாம் பாதியில் தங்கியிருப்பதால் முதல்பாதி வீக்காக இருக்கிறது. முதல்பாதியில் அத்தனை உறவுகளையும் அறிமுகப்படுத்தும் காட்சி சற்றே நீளம் என்றாலும் புதுசு. இன்டர்வெல் வரை கேரக்டர்களின் டெஸ்க்ரிப்ஷனிலேயே கவனம் செலுத்தியதாலோ என்னவோ அந்த வீக்னஸ் துருத்தித் தெரிகிறது. 

ப்ரீ க்ளைமாக்ஸும் சரி, க்ளைமாக்ஸும் சரி நிச்சயம் தாய்க்குலங்களை டிஷ்யூ பேப்பர் தேடவைக்கும். அதில் வெற்றி பாண்டிராஜுக்கே! ஆனால், படத்தின் வசனங்களில் அநியாய நாடகத்தன்மை. 'நெல்லு வெதைக்கிறதும் முக்கியம், சொல்லு வெதைக்கிறதும் முக்கியம்', 'உனக்கு பாடம் எடுத்ததுக்கு அவனை பாடைல அனுப்பிட்டீயே!', 'சரி செய்றதை சரியா செய்யணும்', 'உறவுல வேகுறதைவிட வெறகுல வேகலாம்', மொதல்ல அவன் கெத்த சாகடிக்கணும் அப்புறம் அவன் சொத்தை சாகடிக்கணும்' - இப்படி ரைமிங் வசனங்களை வைத்து  எங்களை சோதிக்கிறீங்களே இயக்குநர் சார்? 

கடைக்குட்டி சிங்கம்

'குழந்தைல ஆம்பள என்ன பொம்பள என்ன' எனக் கேட்கிறார் ஹீரோ. 'ஒரு பொண்ணும் பையனும் பேசுனாலே லவ்வா' எனவும் சாட்டை சுழற்றுகிறார்! ஆணவக்கொலை பற்றியும் பேசுகிறார். நல்லது! ஆனால், அப்பாவும் மகனும் போட்டி போட்டுக்கொண்டு, 'நீ ஒரு ஆம்பளன்னா நேர்ல வாடா' என வில்லனிடம் திரும்பத் திரும்ப சொல்கிறார்களே... அதென்ன கணக்கு சார். ஏன் இந்த ப்ரிவிலேஜ் மனநிலை? 

பல கேரக்டர்கள், பலமான பில்டப் எல்லாம் படத்தில் இருக்கின்றன. ஆனாலும், இயல்பான ஏதோவொன்று மிஸ்ஸிங். அனைவரும் சொல்லி வைத்ததுபோல செய்ய வேண்டியதை சரியான சமயத்தில் செய்துவிட்டுப் போகிறார்கள். கூடக்குறைச்சல் இல்லாமல் எல்லாம் அளவாக, அழகாக இருக்கிறது. இதனாலேயே மிக நேர்த்தியான மெகா சீரியல் பார்க்கும் உணர்வு உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை.

வசனங்களில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தி... நீளத்தைக் குறைத்து... இப்படி சில குறைகளும் சொல்லலாம்தான்! ஆனாலும், குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கத்தைப் பார்க்க ஒரு ட்ரிப் போய்விட்டு வரலாம். ரை... ரைட்!

https://cinema.vikatan.com/movie-review/130753-kadaikutty-singam-tamil-movie-review.html

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: கடைக்குட்டி சிங்கம் - என் பணம் வீண்போகல!

 

 
Untitledpng

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்திக், சயிஷா, ப்ரியா பவானி சங்கர், சத்யராஜ், சூரி ஆகியோர் நடிப்பில் கடைக்குட்டி சிங்கம் இந்த வாரம் வெளிவந்துள்ளது. இப்படம் குறித்த தங்கள் விமர்சனத்தை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள் அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்டிஸில்...

Prakash

 

‏#KadaikuttySingam குடும்பங்களுடன் சென்று பார்த்துக் கொண்டாடவேண்டிய படம் பல நாட்கள் கழித்து சொந்தங்களை எண்ணி கண்கலங்கவைத்த படம்.

வில்லாதி   வில்லன்    

‏மனசாட்சி இல்லாம அழ வைக்கிறானுவடா எப்பா  #KadaikuttySingam ✌

KING

‏ குடும்பக் காவியம்.

RO͛ɮ

‏கடைக்குட்டி சிங்கம் ரொம்ப நாள் அப்புறமா ஒரு பக்கா பேமிலி எண்டெர்டெய்னர் #KadaikuttySingam

GuGa

என் குடும்பத்தை miss பண்றேன். 2half என் குடும்பத்துக்குள்ள போன feel கிடைத்தது.

✌543 ✌

விவசாயம்  பத்தி செம்மையா சொல்லியிருக்காங்க.  யாருமே இப்படி

சொன்னதில்ல... என்னைப் பொறுத்தவரைக்கும்..   

Dinesh Kumar M

‏ குடு இன்பம் - குடும்பம்...

இரண்டையும் சரியாகப் பொருத்தி ‌காட்டினீர் அண்ணா... #KadaikuttySingam ஒருநாள் விவசாயியாக ‌இருந்து பார், இல்ல விவசாயிகூட இருந்து பார்... செம மாஸ்...

sakthi Dinakaran

‏அடுத்தவனை சந்தோஷப்படுத்தறவனை தான்

இந்த உலகம் அதிகமாக கஷ்டப்படுத்துது !!!

பாண்டிராஜ் As usual Your Dialogues          

sakthi Dinakaran

‏ரொம்ப நாள் ஆயிடுச்சுயா இந்த மாதிரி நல்ல குடும்பப் படம் பார்த்து.      

Tamilselvan

‏#KadaikuttySingam நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு சிறந்த திரைப்படம். கட்டாயம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம். உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் திரைப்படம்

Mohamed Haja Kamil

‏100% தரமான குடும்பச் சித்திரம்.

 உறவுகளின் பாலம்.......

விவசாயிகளின் வாழ்க்கை....

கடைக்குட்டி சிங்கம்.

தேவா

எவன் சொல்றதையும் காதுல வாங்காதீங்க. படத்த தியேட்டர்ல பாருங்க. உங்களையே அறியாம சொந்தத்தைத் தொலைச்ச ஏக்கத்தோடதான் வெளிய வருவீங்க...

rishnan

‏அருமை. தரமான கதைக்களத்தில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்துவதில் திறமையானவர்  கார்த்தி. இயல்பான கதைக்களத்தில் எதார்த்த வசனங்களில் எளிமையானவர் பாண்டிராஜ். குடும்பங்கள் கொண்டாடும் நிறைவான திரைப்படம்.

Ranjith

‏#KadaikuttySingam சிம்பிளா சொல்லணும்னா . படம்னா இதுதான் படம். விவசாயம் மற்றும் குடும்பப் படமாக்கியிருக்கிறார்கள்...நன்றி. என் பணம் வீண்போகல.

RRM SRI RISHIKHESHEN

‏ரொம்ப நாள் கழித்துப் பார்த்து ரசித்த ஒரு அருமையான குடும்ப கதைக்களம் கொண்ட திரைப்படம். அரங்கை விட்டு வரும் போது ஆத்மார்த்தமான திருப்தி.

meenakshisundaram

உணர்ச்சிப்பூர்வமான நடிப்பால், ரசிகர்களை அழ வைக்க முடியும் என கடைக்குட்டி சிங்கத்தில்  நிரூபித்து இருக்கிறார் கார்த்தி. சூரி காமெடியும் ரசிக்க வைக்கிறது.

ᗰᖇ. ᕼOᑎEᔕTY™   

‏குடும்பம்  

விவசாயம்  

காமெடி  

ஆனா செகண்ட் ஹாஃப் கொஞ்சம் ஸ்பீடா இருந்திருக்கலாம் மத்தபடி ஓகேஸ்

தமிழும் நானும்

‏சிறந்த படைப்பு சார்!! (கடைக்குட்டி சிங்கம்) பின்னிட்டீங்க...

வாழ்த்துகள்..!

நகரத்துல்ல இருக்குற பிள்ளைங்ளை கிராமத்தை நோக்கி இழுக்கணும் - விவசாயி

சங்கிலி 

‏பாண்டிராஜ்  சல்யூட் தலைவா. உங்க படத்தப் பாத்த அப்பறம் கூட்டுக் குடும்பமா வாழ்றவுங்க சந்தோஷப்படுவாங்க. தனியா இருக்கவுங்க ஒண்ணா வாழ ஆசைப்படுவாங்க !!!

எம்.ஜி.ஆர்.தாசன்

‏ரொம்ப  நாளைக்கு அப்புறம்  ஒரு  நல்ல மிகச்சிறந்த  குடும்பப்  படம்  பார்த்த மகிழ்ச்சி  கடைக்குட்டி  சிங்கம்  படம் மூலமா  கிடைச்சது

 Kettavan  

‏சூர்யாவுக்கு ஒரு வேல்

கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம்..

ரொம்ப நாள் மிஸ் பண்ணிய ஃபேமிலி சப்ஜெக்ட்.

JSK.GOPI

‏கடைக்குட்டிசிங்கம் மிக அருமையான திரைப்படம்

தமிழ் சினிமாவில் நீண்ட நாள் கழித்து வந்துள்ள பந்த பாசம் நிறைந்த குடும்பத் திரைப்படம்

சொத்து சேர்க்குறதுமட்டும் பெருசு இல்ல, சொந்தத்தையும் சேர்க்கணும் அதான் பெருசு:-இந்த வசனத்தை எழுதியவருக்கும் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனதுபாராட்டுகள்.

Αrυη

‏நீண்ட நாட்களுக்குப் பிறகு பல இடங்களில் மனதைத் தொட்ட படம்...!

INDIAN         

‏வாழையும் காளையும் வீட்டின் ஒருவராக சித்தரித்ததற்கு நன்றி.

“பில்டிங் ஸ்ட்ராங்... பேஸ்மென்ட் வீக்...” - ரக்‌ஷிதா ‘கலகல’ பேட்டி

http://tamil.thehindu.com/opinion/blogs/article24419066.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 3.3 மில்லியன் அல்ல.. 3.3 பில்லியன்.. அமெரிக்க டொலர்... சொலவாகியுள்ளது.. ஈரானின் வான்வழி ஏவு கலன்களை அழிக்க. 
    • கூலிக்கு மார் அடிக்கும்சிங்களவன் என்று சொல்லப்படாது...இது எங்களது சகோதரயாக்களின் தூர நோக்கு அரசியல் பார்வை(ராஜதந்திரம்.சாணக்கியம்) என்ற கோணத்தில் நீங்கள் பார்க்க வேணும் இன்று சிறிலங்கா அமேரிக்கா .இந்தியா போன்ற நாடுகளின் ஆதிக்கத்தினுள் வர போகின்றது இதை தடுத்து நிறுத்த ரஸ்யா,சீனா போன்ற  நாடுகளில் சகோதரயாக்கள் இராணுவ பயிற்சி எடுக்க வேணும்....இதில் மாற்று கருத்து ஒன்றுபட்ட சிறிலங்கா அம்பிகளுக்கு இருக்காது...அமெரிக்கா வந்து இறங்க ரஸ்யாவில் பயிற்சி பெற்ற தளபதிகள் எங்கன்ட லங்கா மாதாவை காப்பாற்றுவார்கள்
    • சில வேளைகளில் அமெரிக்கா ஈரானுடனான தன் வெற்றிக்காக ரஷ்யாவுடன்  உக்ரேனை பேரம் பேசப்படலாம். ரஷ்யாவும் அதற்கு சில வேளைகளில் சம்மதிக்கலாம். அமெரிக்காவிற்கு உக்ரேனை விட இஸ்ரேலும் மத்திய கிழக்கு அமைதியும் மிக முக்கியம் . பலஸ்தீன விடுதலை இரண்டாம் பட்சம்.😎 இப்படியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பழைய கதைகள் உண்டுதானே. 😂
    • மின்னம்பலம் மெகா சர்வே: தஞ்சாவூர்… வெற்றி கோபுரத்தில் யாருடைய கலசம்? Apr 16, 2024 16:24PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தஞ்சாவூர் தொகுதியில் திமுக சார்பில் முரசொலி களமிறங்கியுள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் பி.சிவநேசன் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் எம்.முருகானந்தம்போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஹூமாயூன் கபீர் போட்டியிடுகிறார். திமுக, தேமுதிக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன? மக்களின் வாக்குகள் யாருக்கு? என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தஞ்சாவூர் பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலானவாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சமவிகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான தஞ்சாவூர், மன்னார்குடி, திருவையாறு, ஒரத்தநாடு,  பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…   திமுக வேட்பாளர் முரசொலி 50% வாக்குகளைப் பெற்று தஞ்சாவூர் தொகுதியில் முன்னிலையில்நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவநேசன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் எம்.முருகானந்தம் 18% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹூமாயூன் கபீர் 5% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, தஞ்சாவூர் தொகுதியில் இந்த முறை முரசொலி வெற்றி பெற்று திமுகவின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/dmk-candidate-murasoli-won-thanjavur-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/ மின்னம்பலம் மெகா சர்வே: கடலூர்… கரையை கடப்பது யார்? Apr 16, 2024 17:09PM IST  2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் கடலூர் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில்எம்.கே.விஷ்ணுபிரசாத் களமிறங்கியுள்ளார்.  அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  பாஜக கூட்டணியில் பாமக சார்பில் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் வே.மணிவாசகன் போட்டியிடுகிறார். காங்கிரஸ், தேமுதிக, பாமக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக கடலூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும்தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திட்டக்குடி,  விருத்தாச்சலம்,  பண்ருட்டி,  நெய்வேலி,  குறிஞ்சிப்பாடி மற்றும் கடலூர்  பகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்அடிப்படையில், காங்கிரஸ் வேட்பாளர் எம்.கே.விஷ்ணுபிரசாத் 47% வாக்குகளைப் பெற்று கடலூர் தொகுதியில்முன்னிலையில் நிற்கிறார். தேமுதிக வேட்பாளர் பி.சிவக்கொழுந்து 25% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் 21% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வே.மணிவாசகன் 6% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, கடலூர் தொகுதியில் இந்த முறை எம்.கே.விஷ்ணுபிரசாத் வெற்றி பெற்று காங்கிரசின் கொடிபறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-cuddalore-constituency-congress-vishnuprasad-wins-dmdk-second-place/ மின்னம்பலம் மெகா சர்வே: சிவகங்கை சீமையை வெல்வது யார்? Apr 16, 2024 18:21PM IST 2024 மக்களவை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில்  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? சிவகங்கை தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி?  என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  இந்த தேர்தலில் சிவகங்கை தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கார்த்தி சிதம்பரம் மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் சேவியர்தாஸ் போட்டியிடுகிறார். பாஜக சார்பில் தேவநாதன் யாதவ் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சார்பில் வி.எழிலரசி போட்டியிடுகிறார். காங்கிரஸ், அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டிஇருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக சிவகங்கை பாராளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம். இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.  18-30 வயது வரையிலானவாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் எனமூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.  சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  சிவகங்கை,  திருமயம்,  ஆலங்குடி, காரைக்குடி,  திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை (தனி) பகுதிகளில்  நடத்தப்பட்டகருத்துக்கணிப்பின் அடிப்படையில்  காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் 50% வாக்குகளைப் பெற்று சிவகங்கை தொகுதியில் மீண்டும்முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் சேவியர்தாஸ் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தேவநாதன் யாதவ் 15% வாக்குகளைப் பெறுவார் என்றும்.  நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வி.எழிலரசி 8% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள்வெளியாகியுள்ளன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக…, சிவகங்கை தொகுதியில் இந்த முறை கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்று காங்கிரசின் கொடி பறக்கவே  பிரகாசமான வாய்ப்புள்ளது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/congress-candidate-karthi-chidambaram-won-sivagangai-loksabha-constituency-in-minnambalam-mega-survey-2024/   மின்னம்பலம் மெகா சர்வே : திருப்பூர்… மக்களின் டாலர் யாருக்கு? Apr 16, 2024 19:02PM IST  சூடுபிடிக்கிறது அரசியல் களம்…  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள்..? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வரும் நிலையில்,  நம் மின்னம்பலம் மக்களிடம் மெகா கருத்துக்கணிப்பு நடத்தியது.  மக்கள்  மனதை வென்றவர்கள் யார்..? திருப்பூர் தொகுதியில் பறக்கப்போவது யாரின் கொடி? என்று ஆய்வு நடத்தினோம்.  தமிழ்நாட்டில் இருந்து உலகமே அறியும் வகையில் தொழில் நகராக உருவெடுத்துள்ளது டாலர் சிட்டியானதிருப்பூர். இங்கே தொழிலோடு விவசாயமும் சம அளவில் நடைபெறுகிறது. திருப்பூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சிட்டிங் எம்பி சுப்பராயனே  மீண்டும் களமிறங்கியுள்ளார். அதிமுக சார்பில் அருணாசலம்  போட்டியிடுகிறார். பாஜக சார்பில்ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி நிற்கிறார். திமுக கூட்டணி, அதிமுக, பாஜக இவற்றுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவும் திருப்பூர் களத்தின்இறுதி  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு– என்பதை  நேரடியாக அறிந்து கொள்ள இதுபற்றிய கருத்துக்கணிப்பைமுன்னெடுத்தது மின்னம்பலம். உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிமக்களிடம் முன்வைத்தோம்.   இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத்தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என 600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  திருப்பூர்  நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான  திருப்பூர் வடக்கு, திருப்பூர்தெற்கு மற்றும் ஈரோடு மாவட்டத்தில் அமைந்திருக்கும் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில்…  திமுக கூட்டணியின் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் சுப்பராயன் 43% வாக்குகளைப் பெற்று மீண்டும்முந்துகிறார்.   அதிமுக வேட்பாளர் அருணாசலம் 36%  வாக்குகளைப் பிடித்து இரண்டாம் இடத்தில் இருக்கிறார். பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தம் 14% வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 6% வாக்குகளை பெறுகிறார். 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக… தொழிலாளர்கள் நிறைந்த திருப்பூர் தொகுதியில் இந்த முறையும் கம்யூனிஸ்ட் கொடியே  வேகமாக பறக்கிறது. https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-tiruppur-constituency-cpi-subburayan-wins-admk-came-second-place/   மின்னம்பலம் மெகா சர்வே: தென் சென்னை Apr 16, 2024 19:46PM IST 2024 மக்களவைத் தேர்தலில்  தமிழ்நாட்டில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்றப் போகிறார்கள் என்று நம் மின்னம்பலம் மக்களிடம்  மெகா சர்வே நடத்தியது. இந்த தேர்தலில் தென்சென்னை தொகுதியில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன் மீண்டும்களமிறங்கியுள்ளார்.  அதிமுக சார்பில் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார்.  தெலுங்கானா, புதுச்சேரி ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வந்திருக்கிற தமிழிசை செளந்தர்ராஜன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சியின் சார்பில் தமிழ்செல்வி போட்டியிடுகிறார். திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று வேட்பாளர்களுக்கும் இடையில் கடுமையான போட்டி இருப்பதாகசொல்லப்பட்டு வந்த நிலையில்,  களத்தின் நிலவரம் என்ன..? மக்களின் வாக்குகள் யாருக்கு என்பதை  நேரடியாக அறிந்து கொள்ளஇதுபற்றிய கருத்துக்கணிப்பை முன்னெடுத்தது மின்னம்பலம்.  உங்கள் மனதை வென்ற வேட்பாளர் யார் என்ற கேள்வியினை பரவலாக தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி மக்களிடம் முன்வைத்தோம்.  இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தலா 100 வாக்காளர்கள் என600 பேரிடம் ஆய்வு செய்தோம்.   18-30 வயது வரையிலான வாக்காளர்கள், 30-50 வயது வரையிலான வாக்காளர்கள், 50 வயதிற்கு மேற்பட்டவாக்காளர்கள் என மூன்றாகப் பிரித்து ஆண்– பெண் என சம விகிதத்தில் இந்த கருத்துக்கணிப்புநடத்தப்பட்டது.  தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள  6 சட்டமன்றத் தொகுதிகளான விருகம்பாக்கம், சைதாப்பேட்டை,  தியாகராய நகர்,  வேளச்சேரி,  மயிலாப்பூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 41% வாக்குகளைப் பெற்று மீண்டும் தென்சென்னைதொகுதியில் முன்னிலையில் நிற்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 26% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடிப்பார் என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 25% வாக்குகளைப் பெறுவார் என்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 7% வாக்குகளைப் பெறுவார் என்றும் முடிவுகள் கூறுகின்றன. 1% பேர் கருத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆக, தென்சென்னை தொகுதியில் இந்த முறையும் தமிழச்சி தங்கபாண்டியன் வெற்றி பெற்று மீண்டும் திமுகவின் கொடி பறக்கவே பிரகாசமான வாய்ப்புள்ளது.   https://minnambalam.com/2024-election-mega-survey-results/minnambalam-mega-survey-2024-south-chennai-dmk-thamilachi-thangapandiyan-wins-admk-jayavardhan-second-place/
    • க‌ருணாவுட‌ன் இருந்த‌ ப‌டிப்பு அறிவு இல்லாத‌ பிள்ளையான் அர‌சிய‌லில் பெரிய‌ இட‌த்தில் இருக்கும் போது  கூலிக்கு மார் அடிக்கும் சிங்க‌ள‌வ‌ன் ராங்கிக்குள் ஏறி இருந்து கொண்டு  வ‌ட்டின‌ அமுக்கிற‌து  சின்ன‌ வேலை புத்த‌ன் மாமா🤣😁😂.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.