Jump to content

வட மாகாண வீரர் வியாஸ்காந்த் இலங்கை இளையோர் அணியில்


Recommended Posts

வட மாகாண வீரர் வியாஸ்காந்த் இலங்கை இளையோர் அணியில்

RC-32-696x460.jpg
 

இந்திய இளையோர் அணிக்கெதிராக எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற டெஸ்ட் போட்டித் தொடருக்கான இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் யாழ் மத்திய கல்லூரி அணியின் சகலதுறை வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் முதற்தடவையாக உள்வாங்கப்பட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் கடந்த மாதம் நடைபெற்ற மாகாண அணிகளுக்கிடையிலான 19 வயதுக்கு உட்பட்ட ஒரு நாள் தொடரில் வட மாகாண அணிக்காக விளையாடி திறமைகளை வெளிப்படுத்தியதன் பிரதிபலனாகவே வியாஸ்காந்துக்கு இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது.

எனினும், அவரை மேலதிக வீரராக இணைத்துக் கொள்ள தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வலதுகை சுழல் பந்துவீச்சாளரான வியாஸ்காந்த், அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாண அணிகளுக்கிடையிலான ஒரு நாள் தொடரில் மேல், வட மத்திய மற்றும் வட மேல் மாகாண அணிகளுடனான போட்டியில் பந்துவீச்சில் அசத்தியிருந்ததுடன், வட மாகாண அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாகவும் இருந்தார். அதுமாத்திரமின்றி, அணிக்கு தேவையான நேரத்தில் துடுப்பாட்டத்திலும் அசத்தியிருந்தார்.

இதேநேரம், இம்முறை இடம்பெற்ற 112ஆவது வடக்கின் மாபெரும் சமரில் யாழ். மத்திய கல்லூரியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களில் ஒருவரான வியாஸ்காந்த், முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுக்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனினும், அண்மையில் நிறைவுக்கு வந்த மாகாண ஒரு நாள் தொடரில் வட மாகாண அணியின் தலைவராகச் செயற்பட்ட யாழ் மத்திய கல்லூரியின் வேகப்பந்துவீசும் சகலதுறை வீரரான எஸ். மதுசன் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் இடம்பெறவில்லை. குறித்த போட்டித் தொடரில் அவர் வட மேல் மாகாண அணிக்கு எதிராக 6 விக்கெட்டுக்களையும், துடுப்பாட்டத்திலும் வேகமாக 34 ஓட்டங்களைக் குவித்திருந்தார். மேலும், இவ்வருட வடக்கின் மாபெரும் சமரிலும் அதிரடியாக அரைச்சதம் கடந்து யாழ். மத்திய கல்லூரியின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய வீரராகவும் இருந்தார்.

இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்துள்ள இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணி, நான்கு நாட்கள் கொண்ட உத்தியோகப்பற்றற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

எதிர்வரும் ஜூலை மாதம் 17ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10ஆம் திகதி வரை கொழும்பு, மொறட்டுவை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள இப்போட்டித் தொடருக்கான 15 பேர் கொண்ட இளம் இலங்கை அணி இன்று (12) அறிவிக்கப்பட்டது.

இதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் தலைவராக வென்னப்புவ புனித ஜோசப் வாஸ் கல்லூரியைச் சேர்ந்த சகலதுறை ஆட்டக்காரரான நிபுன் தனஞ்சய பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.

nipun-dhananjaya-2.jpg

 

மத்திய வரிசையில் பிராகாசித்து வருகின்ற சுழல் பந்துவீச்சாளரான நிபுன் தனஞ்சய, முன்னதாக இவ்வருட முற்பகுதியில் நியூசிலாந்தில் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை குழாமிலும் இடம்பெற்றிருந்தார்.

அதேபோன்று, இம்முறை இளையோர் உலகக் கிண்ணப் போட்டித் தொடரில் பிளேட் கிண்ணத்தை வென்ற கமிந்து மெண்டிஸ் தலைமையிலான இலங்கை இளையோர் அணியில் இடம்பெற்றிருந்த மொறட்டுவை மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விக்கெட் காப்பாளர் நிஷான் மதுஷ்க, புனித தோமியர் கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளரான கலன பெரேரா, காலி மஹிந்த கல்லூரியின் வலதுகை மித வேகப்பந்துவீச்சாளரான நிபுன் மாலிங்க மற்றும் மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரியின் மத்திய வரிசை வீரர் நுவனிந்து பெர்னாண்டோ ஆகியோரும் இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளனர்.

இதேநேரம், இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியின் முன்னாள் தலைவரான கமிந்து மெண்டிஸின் சகோதரரான காலி றிச்மண்ட கல்லூரியைச் சேர்ந்த சந்துன் மெண்டிஸும் 15 பேர் கொண்ட இலங்கை அணியில் இடம்பிடித்துள்ளார்.

அதேநேரம், மருதானை புனித ஜோசப் கல்லூரியைச் சேர்ந்த 15 வயதுடைய இளம் வீரரான துனித் வெல்லாலகேவும் இந்திய அணிக்கெதிரான இலங்கை குழாமில் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணித் தேர்வு மற்றும் பயிற்சிகளை பிரதான பயிற்றுவிப்பாளர் ஹஷான் திலகரத்ன, இலங்கை மகளிர் அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் ஹேமந்த தேவப்பிரிய ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணியில் முதற்தடவையாக இடம்பெற்ற யாழ். மத்திய கல்லூரி மாணவன் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கும், அவரது பயிற்றுவிப்பாளர் மற்றும் பாடசாலை சமூகத்துக்கும்  இணையத்தளம் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.


நான்கு நாள் டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணி விபரம்

நிபுன் தனஞ்சய பெரேரா (அணித் தலைவர் – வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரி), பசிந்து சன்ஜுல சூரிய பண்டார (கொழும்பு றோயல் கல்லூரி), நுவனிந்து கேஷவ பெர்னாண்டோ (மொறட்டுவை புனித செபெஸ்டியன் கல்லூரி), நவோத் தினுஷ்ரி பரனவிதான (காலி மஹிந்த கல்லூரி), நிஷான் மதுஷ்க பெர்னாண்டோ (விக்கெட் காப்பாளர் – மொறட்டுவை மகா வித்தியாலயம்), கமில் மிஷ்ரா (கொழும்பு றோயல் கல்லூரி), துனித் நெத்மிக வெல்லாலகே (காலி புனித ஜோசப் கல்லூரி), சதுன் தாரக்க மெண்டிஸ் (காலி றிச்மண்ட் கல்லூரி), புபுது பண்டார (கண்டி திரித்துவக் கல்லூரி), ஷஷிக்க டில்ஷான் (மாத்தறை புனித செவேர்ஷியஸ் கல்லூரி), நவோத்ய இமேஷ் விஜயகுமார (கண்டி புனித அந்தோனியார் கல்லூரி), கலன விச்சித்ர பெரேரா (கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி), நிபுன் மாலிங்க (காலி மஹிந்த கல்லூரி), கல்ஹார சமிந்த சேனாரத்ன (கடுகஸ்தோட்டை புனித அந்தேனியார் கல்லூரி), நவீன் நிர்மால் பெர்னாண்டோ (நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி)

மேலதிக வீரர்கள் விபரம்

ஷிஹான் கலிந்து (மாத்தறை புனித செவேர்ஷியஸ் கல்லூரி), விஜயகாந்த் வியாஸ்காந்த் (யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி), சொனால் தினுஷ்க (கொழும்பு மஹானாம கல்லூரி), லஷித ரசஞ்சன மனசிங்க (கொழும்பு நாலாந்த கல்லூரி)

போட்டி அட்டவணை

முதலாவது டெஸ்ட் போட்டி ஜுலை 17 முதல் 20 வரை கொழும்பு NCC மைதானம்
இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜுலை 24 முதல் 27 வரை அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ மைதானம்
முதலாவது ஒரு நாள் போட்டி ஜுலை 30 கொழும்பு பி. சரவணமுத்து மைதானம்
இரண்டாவது ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 02 SSC மைதானம்
மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 05 SSC மைதானம்
நான்காவது ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 07 மொறட்டுவை டிரோன் பெர்னாண்டோ மைதானம்
ஐந்தாவது ஒரு நாள் போட்டி ஆகஸ்ட் 10 மொறட்டுவை டிரோன் பெர்னாண்டோ மைதானம்

இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கிடையிலான அனைத்து போட்டிகளும் டயலொக் தொலைக்காட்சி 01 மற்றும் ThePapare.com இணையத்தளத்தின் ஊடாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. அத்துடன், போட்டித் தொடரின் அனைத்து விபரங்களையும் ThePapare.com  ஊடாக பெற்றுக்கொள்ள இணைந்திருங்கள்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • க‌ன‌டாவில் உணவு பொருட்க‌ளிலிருந்து எல்லாம் ச‌ரியான‌ விலை என்று கேள்வி ப‌ட்டேன் பொற்ரோல் விலையும் கூடினால்  ம‌க்க‌ளுக்கு இன்னும் சிர‌ம‌ம்.............................  
    • "பதவி உங்களுக்குப் பெருமை தருவதை விட நீங்கள் தான் அதைப் பெருமை படுத்த வேண்டும்." புறநானுறு 75. அரச பாரம்! [படியவர்: சோழன் நலங்கிள்ளி] "மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப் பால்தர வந்த பழவிறல் தாயம் எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக் குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 5 சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே! மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள் விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர் அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை என்றூழ் வாடுவறல் போல நன்றும் 10 நொய்தால் அம்ம தானே; மையற்று விசும்புஉற ஓங்கிய வெண்குடை முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே," பாடலின் பின்னணி: ஒரு சமயம் நலங்கிள்ளி தன் அரசவை அறிஞர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருந்த பொழுது எத்தகைய அரசு முறை சிறந்தது என்பது பற்றிப் பேச்செழுந்தது. “பரம்பரை பரம்பரையாக மூத்தோர் இறக்க அதற்கு அடுத்து உள்ள இளையோர் அரசுரிமைப் பெற்று பதவி ஏற்க , பதவி பெறுவது ஒன்றும் பெருமை இல்லை . அது யார் கைக்கு வருகிறது என்பதை பொறுத்து தான் அந்த பதவிக்கே மரியாதை / பெருமை வருகிறது . ஆட்சித் திறனின்றி மக்களுக்கு வரிச் சுமையை அதிகமாக்கும் சிறியோனின் கைகளில் சேர்ந்தால் அது நலிவு அடைகிறது . ஆண்மையும் தகுதியும் உடையவன் கையில் வந்தால் அது பொலிவு பெறுகிறது " என்று தன் கருத்தை இப்பாடலில் நலங்கிள்ளி கூறுகிறான். "ஒரேயடியாக உச்சிக்குப் போய் விட வேண்டு மென்று முயற்சி தான் உலகின் பெரும் துன்பங்களுக்குக் காரணமாக அமைகிறது" உச்சிக்குப் போவது அவ்வளவு பெரிதான விடயம் அல்ல ! தொடர்ந்து முயற்சிக்கும் எவருமே உச்சிக்கு ஒரு நாள் போய்விட முடியும். ஆனால் கடினமானது எதுவென்றால், உச்சியிலே தொடர்ந்து இருக்க முயல்வது தான்! இந்த ஒரு கருத்தை நகைச்சுவையோடு தன்னுடைய புத்தகத்தில் "ஜான் மாக்ஸ்வெல்" சொல்லியிருப்ப தாகப் படித்துள்ளேன் அவர் சொல்லும் கதை இது. ஒரு நாள் ஒரு காட்டு வான்கோழியும், எருதும் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தன. எதிரே தெரிந்த உயரமான மரத்தை ஏக்கத்துடன் பார்த்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டே வான்கோழி சொன்னது: "அந்த மரத்தின் உச்சிக்குப் போய்விட வேண்டும் என்ற ஆசை எனக்கிருக்கிறது! ஆனால் அதற்குத் தேவையான சக்தியோ, சத்தோ என்னிடம் இல்லை." எருது சொன்னதாம்! "என்னுடைய சாணியை கொஞ்சம் சாப்பிட்டுத் தான் பாரேன்! அதில் ஏகப்பட்ட சத்து இருக்கிறது!" வான்கோழியும், நம்பிக்கையோடு சாணியைச் சாப்பிட்டுப் பார்க்க ஆரம்பித்ததாம்! எருது சொன்ன மாதிரியே அது ஊட்டச்சத்து மிகுந்ததாகத் தான் இருந்தது. மரத்தின் அடிவாரம் வரை போகக் கூடிய தெம்பு வந்து விட்டது. மறுநாள், இன்னும் கொஞ்சம் சாணியைச் சாப்பிட மரத்தின் கீழ்க் கிளை வரை போக முடிந்தது. அடுத்தநாள், அதற்கும் அடுத்த நாள் என்று சாணியைச் சாப்பிட்டு, நான்காவது நாள் ஒருவழியாக மரத்தின் உச்சிக் கிளைக்குப் போய் உட்கார முடிந்தது. உச்சிக்குப்போய் உட்கார்ந்த பெருமிதத்தோடு வான்கோழி சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே சந்தோஷத்தில் குரல் எழுப்பியதாம்!  காட்டில் வேட்டையாட வந்த ஒருவன் கண்ணில் பட, துப்பாக்கியால் சுட்டானாம்.. வான் கோழி பணால்! உயரத்திலேயிருந்து, ஒரே தோட்டாவில் கீழே வந்தாயிற்று! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  
    • எல்லாம் ப‌ண‌த்துக்காக‌ தான் ஈழ‌ ம‌ண்ணில் சிங்க‌ள‌ ராணுவ‌ம் நாட்டு ப‌ற்றினால் போர் புரிந்த‌வையா இல்ல‌வே இல்லை எல்லாம் காசுக்காக‌ ஈழ‌ ம‌ண்ணில் வ‌ந்து ப‌ல‌ ஆயிர‌ம் சிங்க‌ள‌ இராணுவ‌ம் ப‌லி ஆனார்க‌ள்.........................   ர‌ஸ்சியா விவ‌கார‌த்தில் ஈழ‌ த‌மிழ‌ர்க‌ள் ர‌ஸ்சியா போகாம‌ல் இருப்ப‌து ந‌ல்ல‌ம்......................................
    • சகோதரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.