Jump to content

உலகக்கோப்பை கால்பந்து இங்கிலாந்தில் குடும்ப வன்முறையை அதிகரிக்கிறதா?


Recommended Posts

உலகக்கோப்பை கால்பந்து இங்கிலாந்தில் குடும்ப வன்முறையை அதிகரிக்கிறதா?

2018 உலகக்கோப்பை தொடங்கியபோது ஒரு மீம் மிகவும் பரவலாக பகிரப்பட்டது. இதுவொரு வேடிக்கையான அல்லது நகைச்சுவையான மீம் அல்ல.

உலகக்கோப்பை கால்பந்து குடும்ப வன்கொடுமையை அதிகரிக்கிறதா?படத்தின் காப்புரிமைTHOMAS DOWSE

1966ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து வெற்றிபெறவில்லை என்கிற உண்மையான ஏக்கத்தை காட்டும் வரைகலை படமும் அல்ல.

குடும்ப வன்கொடுமை பற்றிய புள்ளிவிவரம்தான் இவ்வாறு மிகவும் அதிகமாக பகிரப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை கால்பந்து விளையாட்டை எல்லாரும் உற்று கவனித்து கொண்டிருந்தபோது, குடும்ப வன்கொடுமை பிரச்சினைக்கு கவன ஈர்ப்பு கொண்டுவருவதற்காக குடும்ப வன்கெொடுமைக்கு எதிரான அறக்கட்டளை ஒன்று இந்தப் புள்ளிவிவரத்தை வெளியிட்டது.

2013ம் ஆண்டு லன்காஸ்டர் பல்கலைகழக ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இருந்து இந்தப் புள்ளிவிபரம் எடுக்கப்பட்டிருந்தது.

தொலைக்காட்சியில் கால்பந்து போட்டி நடைபெறும்போது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் காதலரின் வன்முறையையும், கொடுமையையும் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்" சன்டிரா ஹோர்லே, ரெஃபியுஜ் செயலதிகாரி

2002, 2006 மற்றும் 2010 உலகக்கோப்பை போட்டிகளில் (2014க்கு பிந்தைய தரவுகள் இல்லை) இங்கிலாந்து கால்பந்து அணி தோற்ற தினங்களில் ஆங்கிலேய காவல்துறை பிரிவுகளில் ஒன்றான லன்காஸ்டர் பிரிவில் பதிவான குடும்ப வன்முறை வழக்குகள் வழக்கத்தைவிட 38 சதவீதம் அதிகரித்தது. இங்கிலாந்து அணி வெற்றி பெற்ற அல்லது ஆட்டத்தை சமன் செய்த நாள்களில் குடும்ப வன்கொடுமை 26 சதவீதம் அதிகரித்திருந்தது.

இங்கிலாந்து அணி போட்டியில் விளையாடிய அடுத்த நாளும் குடும்ப வன்கொடுமையில் 11 சதவீதம் அதிகரிப்பு இருந்ததையும் இந்த ஆய்வு கண்டறிந்தது.

 
 

New campaign and research raising awareness about #domesticabuse during the 2018 world cup.

 

இந்த ஆய்வில் ஒரு காவல்துறை பிரிவின் புள்ளிவிவரங்களே எடுத்துகொள்ளப்பட்டாலும், அந்நாட்டிலுள்ள பிற காவல்துறைப் பிரிவுகளும் இந்த உரையாடலில் கலந்து கொண்டு குடும்ப வன்முறையைத் தவிர்க்க வேண்டும் என்று மக்களை கேட்டுக்கொண்டுள்ளன.

கடந்த உலகக் கோப்பை போட்டியின்போது குடும்ப வன்முறையில் அதிகரிப்பு இருந்ததே மக்கள் வன்முறை தவிர்க்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதற்கு காரணமாகும்.

இருப்பினும், பதற்றமானதொரு கால்பந்து போட்டி மட்டுமே குடும்ப வன்கொடுமையை தூண்டுவதில்லை. குடிப்பழக்கம், போதைப்பெருள் மற்றும் சூதாட்டம் ஆகியவை கலந்து உருவாகிற நடத்தைகளாக இவை இருக்கலாம்.

"இவை எல்லாம் குடும்பங்களில் வன்கொடுமை நிகழ செய்யலாம். குறிப்பாக, கால்பந்து ரசிகர் ஒருவர் மது குடித்திருந்தால் அல்லது சூதாட்டத்தில் பணத்தை இழந்துவிட்டால் கொடுமை நடைபெறலாம்" என்று பாத்வே பணித்திட்டத்தில் பெண்களின் பணியாளருமான லெயன்டிரா நேஃபின் கூறுகிறார்.

 
 

1/2 Give Domestic Abuse the Red Card

Officers are issuing a robust warning that domestic abuse
will not be tolerated before, during or after the #WorldCup

During the last World Cup, 897 domestic incidents were reported to us. Read more about it here: https://bit.ly/2y4FPLz 

 

2006/2017ம் ஆண்டில் இங்கிலாந்திலும், வேல்ஸிலும் 16 முதல் 59 வயது வரை 7 லட்சத்து 13 ஆயிரம் ஆண்களும், 12 லட்சம் பெண்களும் என சுமார் 1.9 மில்லியன் வயதுவந்தோர் குடும்ப வன்கொடுமைகளை அனுபவித்துள்ளனர்.

அத்தகைய வன்கொடுமையை அனுபவித்தவர்களில் ஒருவர்தான் பென்னி. அவர் தன்னுடைய காதலரோடு 2 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்தபோது, வீட்டில் கொடுமைகளை அனுபவித்ததாக பிபிசியிடம் தெரிவித்தார்.

தொலைக்காட்சியில் கால்பந்து போட்டி விளையாடப்படும் சத்தம் கேட்கிறபோது, காதலரிடம் இருந்து மிகவும் தொலைவில் இருக்க முயல்வதுதான் அவரது எதிர்வினையாக அமைந்தது.

அவர்கள் ஓர் அறையுடைய குடியிருப்பில் வாழ்ந்ததால், அவ்வாறு தொலைவில் இருப்பது எளிதாக இருக்கவில்லை.

 
 

There's never an excuse for domestic abuse! If you're suffering at the hands of an abusive or violent partner, or know someone who is, then call us on 101 or in an emergency 999. Discover what advice and support is available locally here ➡http://ow.ly/HEge30kspfW  #NoExcuse

 

தன்னுடைய காதலருக்கு வேறு நண்பர்கள் இருக்கவில்லை என்று நினைவுகூரும் பென்னி, அவருடைய பொழுதுபோக்கை பகிர்ந்துகொள்ளும் வகையில், உடனிருந்து விளையாட்டை பார்ப்பதை விரும்புவார் என்கிறார்.

அவ்வாறு பென்னி உடனிருக்கும்போது, காதலரின் கால்பந்து அணி (செல்சா) வெற்றியடைய வேண்டும் என்று எண்ணிக்கொண்டு அமைதியாக இருப்பாராம். அந்த அணி தோல்வியடைந்து விட்டால் என்ன நிகழும் என்பது அவருக்குத் தெரியும்... உடல் மற்றும் உணர்ச்சி ரீதியாக அவர் அனுபவிக்கும் கொடுமைகள் அதிகரிக்கும் என்கிறார்.

"இதைப் பற்றி திரும்பவும் எண்ணி பார்க்கையில், கால்பந்து என்பது வெறுமனே ஒரு சாக்குப்போக்குதான்," என்று பென்னி குறிப்பிடுகிறார்.

"குளிர்சாதனப் பெட்டியில் பொருட்களை நான் தவறாக வைத்துவிட்டாலும், என் காதலர் என்னிடம் அப்படித்தான் நடந்து கொள்வார்" என்று கூறுகிறார் பென்னி.

பென்னியின் காதலரின் கால்பந்து அணி தோல்வியடைந்துவிட்டால், கொடுமைகள் மிகவும் அதிகமாகும்.

"நான் என்ன சொன்னாலும், என்னோடு சண்டையிட்டு கொண்டு அமைதியாக 4 அல்லது 5 நாட்களுக்கு என்னை முற்றிலும் கண்டுகொள்ளவே மாட்டார். அப்போது இரவு சாப்பாட்டை சமைப்பது போன்ற செயல்களை செய்யும் அவர், அதில் தனக்கு எதுவும் கொடுக்கமாட்டர்" என்று பென்னி தெரிவித்திருக்கிறார்.

'உமன்ஸ் எய்டு' அறக்கட்டளையின் கூற்றுப்படி இது உணர்ச்சி ரீதியிலான கொடுமை. 2015ம் ஆண்டு குற்றமாக மாறிய 'பலவந்த கட்டுப்பாடு' என்ற வரையறையின் கீழ் இந்த கொடுமை வருகிறது.

உலகக்கோப்பை கால்பந்து குடும்ப வன்கொடுமையை அதிகரிக்கிறதா?படத்தின் காப்புரிமைTHOMAS DOWSE

பிறரை கட்டுப்படுத்தி, ஆதிக்கம் செலுத்த கொடுமையாளர் பயன்படுத்தும் உத்தி இதுவாகும்.

பென்னியின் கதையை இவ்வாறான பல நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்கலாம்.

ஆனால், பரவலாக பகிரப்பட்ட உலகக்கோப்பை புள்ளிவிவரம் செய்திருப்பது, இந்த அழகான விளையாட்டுக்கும், இத்தகைய வன்கொடுமைகளுக்கு இடையிலான தொடர்பை குறித்துகாட்டியிருப்பது மட்டுமல்ல. குடும்ப வன்கொடுமையின் சிக்கலான பிரச்சனையை அதிக விரிவாக சுட்டிக்காட்டியுள்ளது.

"உணர்ச்சி, பெருமை, வலுவான இளைஞரின் கலாசாரம் அனைத்தும் கலந்ததுதான் கால்பந்து விளையாட்டு" என்கிறார் லெயன்டிரா.

இந்த நிலைமையில் இளம் பெண்கள் பெரிதும் பாதிக்கப்படலாம்.

குடும்ப வன்கொடுமையை அனுபவித்துள்ளதாக கூறும் அளவுக்கு வயதுவந்தவர்களாக இருக்கிறபோதிலும், 16 முதல் 19 வயதுக்குள்ளான பெண்கள் இந்தப் பிரச்சனைக்கு உள்ளாகும்போது, அடைக்கலம் தேடுவது அல்லது சமூகத்தின் பாரம்பரிய உதவிகளை நாடுவது மிகவும் குறைவாகும்.

இணைய சேவைகளை எளிதாக பெற்றுகொள்வோராக இருப்பதால் இவ்வாறு இருக்கலாம்.

உலகக்கோப்பை கால்பந்து குடும்ப வன்கொடுமையை அதிகரிக்கிறதா?படத்தின் காப்புரிமைTHOMAS DOWSE

17 வயதான இளம் பெண் தன்னுடைய 21 வயதான ஆண் நண்பருடன் சுற்றுலாவுக்கு சென்ற சம்பவம் தமக்குத் தெரியும் என்று லெயன்டிரா என்பவர் கூறுகிறார்.

"அவர்கள் இங்கிலாந்து ஆடிய கால்பந்து போட்டி ஒன்றை பார்த்து ரசித்தார்கள். இந்த அணி தோல்வியடைந்துவிட்டது. அன்று மாலை, காதலர் உடல் ரீதியாக கொடுமைப்படுத்தியதால், இளம் பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டியதாயிற்று" என்று அவர் தெரிவிக்கிறார்,

இதுபோல காதலரின் கால்பந்து அணி போடுகின்ற ஒவ்வொரு கோலும் பென்னிக்கு நிவாரணமாக அமையும். சிவப்பு அட்டை கொடுத்து வீரர் வெளியேற்றப்படுவதும், கோல் அடிக்கும் வாய்ப்பை தவற விடுவதும் கொடுமைகளை அனுபவிக்க செய்யும் தொடக்கமாகிவிடும்.

செல்சியா அணி விளையாடாதபோது, தன்னுடைய காதலர் ஆத்திரத்தை காட்டுவதற்கு பிற வழிமுறைகளை கையாள்வார் என்று பெற்றி தெரிவிக்கிறார்.

வேலையில் இருந்து வீட்டுக்கு வருகிறபோது, சமையலறை கத்திகள் எல்லாம் பக்கத்தில் இருக்கும் அல்லது கண்ணாடியில் கேலி வசனங்கள் எழுதப்பட்டிருக்குமாம்.

அதோடு முடிந்துவிடவில்லை. வேலையில் இருந்து திரும்பி வருகிறபோது அல்லது இரவு வெளியே சென்றுவிட்டு வருகிறபோது, எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டிருக்கும். வீடு முழுவதும் இருளாக இருக்கும். ஆனால் அவரது காதலர் அங்கு ஒளிந்து, மறைந்து இருப்பாராம்.

உலகக்கோப்பை கால்பந்து குடும்ப வன்கொடுமையை அதிகரிக்கிறதா?படத்தின் காப்புரிமைTHOMAS DOWSE

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகளில் இங்கிலாந்து அணியின் நிலை எவ்வாறு சிலரை எதிர்மறையாக பாதிக்கிறது என்பதை எண்ணி பார்க்க இந்த விரிவான உரையாடல் உதவுகிறது.

ஆனால், கால்பந்து விளையாட்டும், மதுப்பழக்கமும்தான் குடும்ப வன்கொடுமைக்கான காரணங்கள் என்று எண்ணிவிடக் கூடாது என்று பென்னி வாதிடுகிறார்.

எல்லா குடும்ப வன்கொடுமைகளும் குடிப்பழக்கத்தால் ஏற்படும் வன்முறை அல்லது 'ஆண் கலாசாரம்' என்று எளிதாக இனங்காணக் கூடாது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

கால்பந்துதான் குடும்ப வன்கொடுமைக்கு ஆணிவேர் என்று குறிப்பிட்டு காட்டுவது, எதற்கும் உதவப்போவதில்லை. தவறாகவே வழிநடத்தும் என்று 'ரிஃபுஜ்' அறக்கட்டளையின் குடும்ப வன்கொடுமைக்கான தலைமை செயலதிகாரி சன்டிரா ஹோர்லே தெரிவிக்கிறார்.

குடும்ப வன்கொடுமைக்கு மதுவையும், விளையாட்டையும் அல்லது இவை இரண்டையும் காரணமாக காட்டுவது, கொடுமை செய்வோரை இந்த செயல்பாட்டில் இருந்து விலக்கி வைக்கிறது மற்றும் அவர்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்பதை தடுக்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.

ஒரு மீட்புதவியாளர் இறந்த நிலையில் குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணிகள் தீவிரம்

 

ஒரு மீட்புதவியாளர் இறந்த நிலையில் குகையில் சிக்கிய சிறாரை மீட்கும் பணிகள் தீவிரம்

கால்பந்து, குடிப்பழக்கம், போதை மருந்து அல்லது சூதாட்டம் ஆகியவை குடும்ப வன்முறைக்கு காரணங்கள் அல்ல. வெறும் சாக்குப்போக்கு மட்டுமே என்று சான்டிரா மேலும் கூறுகிறார்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் முடிந்த பின்னரும், ஒவ்வொரு நாளும் தங்களின் காதலர்களால் வன்முறையையும், கொடுமைகளையும் பெண்கள் அனுபவித்து வருகின்றனர்.

தொலைக்காட்சியில் கால்பந்து போட்டிகளை பார்க்கும்போது மட்டுமே இது நடைபெறுவதில்லை என்பதை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்,

இதனை பென்னி ஒப்புக்கொள்கிறார். இந்த ஆண்டு உலகக்கோப்பை போட்டிகளை அவர் மகிழ்சியாக பார்த்தபோது, சில நடத்தைகள் குடும்ப வன்கொடுமைகளுக்கு தூண்டுதலாக வருவதை அவர் கண்டுள்ளார்.

மது குடித்திருக்கும்போது, அல்லது முரடனாக இருக்கும்போது மற்றும் பெருமகிழ்ச்சி ஏற்பட்டுவிட்டால், குடும்ப வன்கொடுமைகள் எளிதாக நிகழ்வதை மக்கள் மனதில் கொள்ள வேண்டியது முக்கியமானது என்று பென்னி குறிப்பிடுகிறார்.

ஒரு புள்ளிவிபரம் இவ்வளவு பெரிய விழிப்புணர்வை உருவாக்கியிருப்பதால் பென்னி மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது மிகவும் நல்ல விடயம். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெறும்போது அதிக மக்கள் காவல்துறையினரை தொலைபேசியில் அழைப்பதை நீங்கள் பார்த்தால், குடும்ப வன்கொடுமை மிகவும் அதிகமாகிறது என்று எண்ண மறந்து விடாதீர்கள். இவ்வாறு சொல்வதன் மூலம், முன்னால் இந்தப் பிரச்சனை நிலவவில்லை அல்லது கால்பந்து போட்டிகள் முடிந்த பின்னர் இவை நிகழாது என்று பொருளில்லை என்று பென்னி கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/global-44808540

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையன்,  இந்த 800 ரூபா  வீடியோ post செய்யப்பட்டது 10.04.2024 என்று tim tense இன் யூருப் தளத்தில் உள்ளது. நீங்கள் எப்படி இந்த வீடியோவை சென்ற  வருடம் மே மாதத்தில்  பார்திருப்பீர்கள்?  காலப்பயணம்(time travel) சென்றீர்களா? 
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator CSK 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் Virat Kohli 11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Yusvendra Chahal 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) SRH 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • பையன்.... பத்திரிகைகள் எல்லாம் அண்மையில் நடந்த செய்தியாகத்தான் குறிப்பிடுகின்றன. அத்துடன்  இரண்டு வருடத்துக்கு முன்பு வந்த செய்தி  என்றால்,  "வடை மாத்தையா"வை 😂  அப்போ கைது செய்யாமல் இப்போ ஏன் கைது செய்துள்ளார்கள். அந்த நேரம்  இவை ஏன், சமூக வலைத்தளங்களில் அலசப் படவில்லை போன்ற கேள்விகள் எழுகின்றன.
    • நேரங்கெட்ட நேரத்தில சனியன் தலைக்கேறுவதுபோல ஈரானிய சனாதிபதி இலங்கைக்கு போகப்போகிறார். அங்கே நம்ம நானாக்கள் "இஸ்ரேலுக்கே ஏவுகணை ஏவிய எங்கள் ஈரானிய சனாதிபதிக்கு ஜெயவேவா "" சொல்லுவதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கேள்வி.  😁
    • வ‌ண‌க்க‌ம் மோக‌ன் அண்ணா என‌து பெய‌ரை (வீர‌ப்ப‌ன் பைய‌ன்26 ) மாற்றி விடுங்கோ    ந‌ன்றி🙏🥰.......................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.