Jump to content

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சுழல் மன்னன் ஹேரத் விரைவில் ஓய்வு


Recommended Posts

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சுழல் மன்னன் ஹேரத் விரைவில் ஓய்வு

TP-971-1-696x464.jpg
 

டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 400 விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய உலகின் முதலாவது இடதுகை சுழற்பந்து வீச்சாளரான ரங்கன ஹேரத், எதிர்வரும் நவம்பர் மாதத்துடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து ஓய்வு பெறுவதாக பிபிசி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

 

 

இலங்கை அணியின் நட்சத்திர சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் ஓய்வுபெற்ற பிறகு, ரங்கன ஹேரத் 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கை அணியின் துரும்புச் சீட்டாக பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். டெஸ்ட் அரங்கில் இலங்கை அணி அண்மைக்காலமாக சுழற்பந்து வீச்சினால் பெற்ற ஒருசில முக்கிய வெற்றிகளுக்கு காரணமாகவும் அவர் விளங்கினார்.  

இந்த நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நாளை (12) ஆரம்பமாகவுள்ள முதலாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் பிபிசி செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போட்டிகள் தனது இறுதிப் போட்டியாக அமையலாம் என ஹேரத் தெரிவித்தார்.   

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், ”இலங்கை அணிக்காக நீண்ட காலம் விளையாட கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது. எனது 18 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நான் 11 வருடங்கள் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளேன். ஆனாலும், ஏழு வருடங்கள் நான் கிரிக்கெட் கழகங்களுக்காக மாத்திரம் விளையாடி வந்தேன். அப்போது நான் பந்துவீச்சு தொடர்பான பல நுட்பங்களையும், விடயங்களையும் உள்ளூர் பயிற்றுவிப்பாளர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அதன் பிரதிபலனாகவே இலங்கை அணியில் விளையாடும் வாய்ப்பு கிட்டியது.

 

 

எந்தவொரு வீரருக்கும் விளையாட்டை நிறுத்துவதற்கான காலம் வரும். அதேபோன்றதொரு தீர்மானத்தை எடுப்பதற்கான காலம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. தென்னாபிரிக்க அணியுடனான போட்டித் தொடர் நிறைவடைந்த பிறகு இலங்கை கிரிக்கெட் நிறுவனம், தேர்வுக்குழு, பயிற்றுவிப்பாளர் மற்றும் அணித் தலைவருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி எனது இறுதி முடிவை அறிவிக்க எதிர்பார்த்துள்ளேன்.

பெரும்பாலும், எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டித் தொடர் எனது இறுதி சர்வதேச போட்டித் தொடராக அமையும் என நம்புவதாக” அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்காக பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் வலது கையின் இரண்டு விரல்களில் காயம் ஏற்பட்டதன் காரணமாக மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரங்கன ஹேரத் விளையாடவில்லை. தற்போது அவரது உபாதை குறித்து கருத்து வெளியிட்ட போது,

உண்மையில் எனது உபாதை 100 சதவீதம் குணமடைந்துள்ளது. கடந்த ஐந்து நாட்களாக நான் பயிற்சிகளில் ஈடுபட்டேன். எனவே, இந்தப் போட்டித் தொடருக்கு நான் சிறப்பான முறையில் தயாராகியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை அணியில் தற்போது உள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் குறித்து திருப்தியடைகின்றீர்களா என்ற கேள்விக்கு ஹேரத் பதிலளிக்கையில், ”உண்மையில் டில்ருவன் பெரேரா நீண்ட காலமாக இலங்கை அணிக்காக விளையாடி வருகின்றார். அவருடைய அனுபவங்கள் எதிர்வரும் காலங்களில் அகில தனன்ஜய, லக்ஷான் சந்தகென் ஆகிய இளம் வீரர்களுக்கு பயனுள்ளதாக அமையும். அவருடன் இணைந்து இலங்கை அணிக்கு எதிர்காலத்தில் இணையவுள்ள சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும். எனவே, எதிர்காலத்தில் இன்னும் திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் இலங்கை அணியில் உருவாகுவார்கள்” எனத் தெரிவித்தார்.

இதேநேரம், அண்மையில் நிறைவுக்கு வந்த மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் தொடரில் ரங்கன ஹேரத் மற்றுமொரு சாதனை படைத்தார். இலங்கை அணிக்காக அதிக காலங்கள் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டார்.  

இதற்கு முன் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க (18 வருடங்கள் 175 நாட்கள்) இலங்கை அணிக்காக அதிக காலங்கள் விளையாடிய வீரராக முதலிடத்தைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

இறுதியாக, தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டித் தொடர் குறித்து ஹேரத் கருத்து தெரிவிக்கையில், ”நாளை ஆரம்பமாகவுள்ள டெஸ்ட் தொடரானது மிகவும் முக்கியமானது. ஏனெனில், டெஸ்ட் தரவரிசையில் முன்னிலையில் உள்ள அணியுடன் நாங்கள் விளையாடவுள்ளோம். ஆனாலும் நாம் இலங்கையில் விளையாடுகின்ற காரணத்தினால் எமக்கு நிறைய சாதகங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்றார்.

1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணிக்கெதிராக காலியில் நடைபெற்ற போட்டியில் டெஸ்ட் வரம் பெற்றுக்கொண்ட ஹேரத், தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில் 97 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். அதன்போது, ஹேரத் வீசிய பந்தில் ரொமேஷ் களுவிதாரனவின் பிடிகொடுத்து அவுஸ்திரேலிய அணியின் அப்போதைய தலைவர் ஸ்டீவ் வோவ் ஆட்டமிழந்தார். இதுதான் ஹேரத்தின் முதல் டெஸ்ட் விக்கெட்டாகவும் அமைந்திருந்தது.  

தற்போது 40 வயதான ரங்கன ஹேரத், இலங்கை அணிக்காக இன்று வரை 90  டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 418 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளதுடன், இலங்கை அணி சார்பாக முத்தையா முரளிதரனுக்குப் பிறகு 400 டெஸ்ட் விக்கெட்டுக்கள் மைல்கல்லை எட்டிய 2ஆவது வீரராகவும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

http://www.thepapare.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.