Jump to content

The return of the English Disease? உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

The return of the English Disease? உலககோப்பை கால்பந்து போட்டியும் அதன் பின் உள்ள ஆபத்து அரசியலும்

“காலடியில் வந்து சேரும் பந்து என்னுடையதல்ல, அது என் குழுவினுடையது என்று எப்போதும் நினை. நீதான் கோல் போட வேண்டுமென ஒரு போதும் நினைக்காதே. உனக்குப் பெரும் தடைகள் சூழ்ந்து வரும்போது, பந்தை மேல் எடுத்துச் செல்ல வசதியுடன் உன் சக ஆட்டக்காரர்கள் காத்துக் கொண்டிருப்பதை ஒரு கணமும் மறக்காதே”.  - சுந்தரராமசாமி ( ஜே.ஜே. சில குறிப்புக்களில்) - 


football2.jpg

மீண்டும் உலக கால்பந்து போட்டியொன்று ஆரம்பமாகியுள்ளது. உலகின் பெரும்பாலான மக்கள் அதனால் பின்னப்பட்ட மாய வலையின் பிரமிப்பிலிருந்து விடுபடாமல் குடும்பங்கள், வேலைகள், நோய்கள், கடன் சுமைகள் என அனைத்து பிரச்சினைகளையும் மறந்து அதில் லயிக்க ஆரம்பித்து விட்டனர். சாதாரண அடித்தட்டு மக்கள் மட்டுமன்றி, படித்தவர்கள், அறிவு ஜீவிகள், சமூக அக்கறையுள்ளவர்கள் கூட அதன் பிடியில் சிக்குண்டு ஒரு வித போதையுணர்வோடு தமக்கு பிடித்தமான அணியின் வெற்றி தோல்விகளுக்கு பின்னான களிப்பிலும் கலக்கத்திலும் மாள்ந்து போயுள்ளார்கள்.
கால்பந்து – ஆதியில் ஆயிரம் வருடங்களுக்கு முன்பே சீனாவில் ஆரம்பிக்கப் பட்டு பின்பு இங்கிலாந்தில் நவீனமயப்படுத்தப் பட்டு இன்று People Game  என்று சொல்கின்ற அளவிற்கு உலகின் பெரும்பாலான மக்களின் வாழ்வில் (அமெரிக்கா, இந்தியா போன்ற ஒரு சில நாடுகளைத் தவிர) பின்னிப் பிணைந்துள்ள ஒரு அற்புதமான விளையாட்டு ஆகும். ஆயினும் இம் மக்கள் விளையாட்டானது இன்று முற்று முழுதாக வணிகமயப் படுத்தப்பட்டு பன்னாட்டு நிறுவனங்களினதும் பல வணிக நிறுவனங்களினதும் கைகளுக்குள் சிக்குண்டு அதன் தனித் தன்மையை இழந்து வருகின்றது. அத்துடன் ஊழல் மிகுந்த பல அரசியல்வாதிகளினதும் அதிகாரிகளினதும் கறை இதற்குப் பின்னால் எவ்வளவு தூரம் உள்ளன என்பதுவும் இன்று மக்கள் மத்தியில் கொஞ்சம் கொஞ்சமாக வெளிப்படத் தொடங்கியுள்ளன. இதற்கு உதாரணமாக 2022 உலக பந்து தொடரிற்காக Qatar தெரிவு செய்யப்பட்ட முறையும் அதன் பின்னால் நடை பெற்ற பல்லாயிரக்கணக்கான கோடி டொலர்கள் ஊழலையும் நாம் குறிப்பிடலாம். இதன் காரணமாக உலக கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில் இருந்து அதன் தலைவர்  Sepp Platter  அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டமையும் நாம் அறிந்தவையே.

இம்முறை இங்கிலாந்து அணியானது பல தடைகளையும் தாண்டி மிகவும் இலகுவாக கால் இறுதி ஆட்டத்திற்கு நுழைந்துள்ளது. இன்னும் எவ்வளவு தூரம் இவர்கள் முன்னேருவார்களோ தெரியாது. ஆனால் இங்கிலாந்து கால்பந்து ரசிகர்களின் வன்முறையும் இனவாதச் செயல்களும் நிறவெறிக் கூச்சல்களும் என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இங்கிலாந்து கால் பந்து ரசிகர்கள் சங்கங்களும் அணிகளும் ஏற்கனவே 1985 இல் Heysel Stadium disaster, 1989 இல் Hillsborough disaster என பல நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலி கொண்ட, பல கறுப்பு அத்தியாயங்களை தனது வரலாறாக கொண்டுள்ளது. இதனால் பல வருடக் கணக்காக பல நாடுகளிலும் தடை செய்யப்பட்ட சம்பவங்களும் வரலாற்றில் நிறையவே உண்டு. இன்றும் இவர்களால் கறுப்பு விளையாட்டு வீரர்கள் குரங்குகளாக எள்ளி நகையாடப்படுகிரார்கள். அவர்கள் மீது வாழைப்பழத்தோல்கள் வீசப்படுகின்றன. இனவாதத்தை கக்கும் Anti Semitism சுலோகங்களும் ஆசியர்களுக்கு எதிரான சுலோகங்களும் இன்னமும் பாடப்படுகின்றன.  

“நான் யூதர்களை வெறுக்கிறேன். ஆனால் இந்தியருடனும் பாகிஸ்தானியுடனும் ஒப்பிடும்போது அவர்கள் பரவாயில்லை”

போன்ற இனவாத சுலோகங்கள் இன்னமும் பாடப்படுகின்றன. இதனை அரசுகளும் அதிகாரிகளும் வெறும் வேடிக்கைதான் பார்க்கின்றனர். ஒரு சில பத்திரிகைகள் மட்டும் இவை கொஞ்சம் அதிகமாகப் போகும்போதும் எல்லைகளை மீறும்போதும் மேற்குறித்த தலைப்பில் The Return of the English Disease  என்ற செய்தியினை மட்டும் பகிர்ந்து விட்டு பேசாமல் இருந்து விடுகின்றன.

நேற்று ( 07.07.2018) நடந்த காலிறுதி ஆட்டத்தில் சுவீடன் அணியினரை வென்ற பின்பு இவர்கள் நடாத்திய வன்முறையின் உச்சக்கட்டம் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த பல Ikea நிறுவனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்டன. சுவீடனின் தேசியக்கொடியின் கலராகிய மஞ்சள் நிறத்தைக் கொண்டிருந்த ஒரேயொரு காரணத்திற்காக ஒரு அம்புலன்ஸ் வண்டியொன்று அடித்து நொறுக்கப்பட்டது. எவ்வளவு பாமரத்தனம்? இது எமது மக்களுக்கு சேவை செய்யும் எமது மக்களின் உயிரைக் காக்கும் ஒரு வாகனம் என்ற அடிப்படை அறிவு கூடவா இவர்களுக்கு இல்லை.  

இன்று இங்கு இங்கிலாந்தில் மட்டுமல்ல அநேகமான ஐரோப்பிய நாடுகளில் நியோ நாசிக்கட்சியினரும் நிறவாத, இனவாதக் குழுக்களும் கால் பந்து ரசிகர்களாக உருவாக்கப்பட்டு உள்வாங்கப்பட்டு தமது இனவாத, நிறவெறிப் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். ரஷ்சியா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, மற்றும் பல கிழக்கைரோப்பிய நாடுகளில் இதன் உக்கிரம் மிக அதிகமாக உள்ளது. 2081 உலக கோப்பைத் தொடர் ரஷ்சியாவில் நடைபெறும் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற அணிகளில் விளையாடும் பல கறுப்பு அணி வீரர்கள், தாம் ரஷ்சியாவில் நடைபெறும் போட்டியில் பங்கு கொள்ளப் போவதில்லை என்று அறிவித்திருந்தனர். பின்பு அவர்களுக்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுக்குரிய உறுதி மொழிகள் அறிவிக்கப்பட்ட பின்பே அவர்கள் இன்று அங்கு கலந்து கொள்கிறார்கள் என்பதுவும் குரிப்பிடந்தக்கது.  

இதே போன்றே ஜெர்மனி ரசிகர்களின் இனவாத, நிறவெறி வன்முறைச் செயற்பாடுகளும் உலகம் அறிந்தவை.

“அவர்கள் உள்ளிப் பூண்டை உண்டு கொண்டு இங்கு வருகிறார்கள். அவர்கள் தொடுவதெல்லாம் அசுத்தமாகின்றன.”  

போன்ற வெளிநாட்டவர்க்கு எதிரான நிறவெறி சுலோகங்களை அவர்கள் பகிரங்கமாக பாடுகிறார்கள். வெளிநாட்டவர்கள் மீதான தாக்குதல்களையும் எந்த வித தடைகளுமின்றி மேற்கொள்ளுகிறார்கள்.

football1.jpg

உலகெங்கிலும் நிலைமை இவ்வாறு மோசமடைந்து செல்கின்ற போதிலும் அரசுகளும் அதிகாரங்களும் இதைத் தடுக்கின்ற அல்லது இல்லாமற் செய்கின்ற நடவடிக்கைகள் எதனையும் மேற்கொள்வதில்லை. அவர்களைப் பொறுத்தவரை கால்பந்து என்பது பல கோடிகளைப் போட்டு அதனிலும் பன்மடங்கு கோடிகளைச் சம்பாதிக்கும் ஒரு வியாபார சூதாட்டம். மக்கள் மீதான அக்கறை எவரிடமும் இல்லை.  

இன்று இந்த விளையாட்டில் பரபரப்பும் விறுவிறுப்பும் இருக்கின்றதோ இல்லையோ இதற்கு வெளியேதான் அதிக சுவாரஷ்யமான போட்டிகள் நடைபெறுகின்றன. வீரர்களை விலை கொடுத்து வாங்குதல், விளம்பர உரிமைகளைப் பெறுதல், தொலைக்காட்சி ஒலிபரப்பு உரிமங்களை பெறுதல், சூதாட்டங்கள் என்று இதற்கு வெளியே நடக்கு அப்பட்டமான வியாபாரங்கள் அவமானகரமானவைகள். ஆயினும் அது பற்றி யாரும் கண்டு கொள்வதேயில்லை. ஏனெனில் பணத்தை எவ்வழியிலும் சம்பாதிக்கலாம் என்ற தாரக மந்திரத்தை கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனங்களில் ஏற்றுவதும் இவர்கள் வித்தைகளில் ஒன்று.

ஆயினும் அற்புதமான இந்த குழு விளையாட்டானது ஒரு பக்கம் கோடி கோடியாக பணத்தைக் குவித்தாலும் மறுபக்கம் மிகவும் நலிவடைந்து வருவதையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. பல விளையாடுக் கழகங்கள் பல கோடி கடன்களில் சிக்கித்தவித்து மீளும் வழி தெரியாமல் திகைத்து நிற்கின்றன. பல உள்ளூர் அரசாங்க மானியத்தை மட்டும் எதிர்பார்த்து அதுவம் கிடைக்காமல் கையறு நிலையில் இருக்கின்றன. எனவே உலக அரங்கில் உன்னதமான விளையாட்டாக உலகின் அனைத்து தரப்பு மக்களாலும் விளையாடப்படும் இந்த Peopel Game இணை நிறவெறியர்களிடமிருந்தும் இனத்துவேஷிகளிடம் இருந்தும் ஊழல் மிகுந்த வியாபார நிறுவனங்களிடம் இருந்தும் மீட்டெடுத்து மீண்டும் மக்களின் கைகளில் ஒப்படைக்க வேண்டிய அவசியமான சூழல் ஒன்று இன்று உருவாகியுள்ளது.  

யார் நிறைவேற்றுவார்???

 

http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=4615:the-return-of-the-english-disease-&catid=46:2012-01-21-04-40-43&Itemid=61

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இங்கிலாந்து இன்டைக்கு தோற்க்கோணும்...குரேசியா கப் தூக்கினால் மகிழ்ச்ச்சி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

 

இங்கிலாந்து இன்டைக்கு தோற்க்கோணும்...குரேசியா கப் தூக்கினால் மகிழ்ச்ச்சி 

 

அதை நீங்களோ அல்லது நானோ ஏன் விளையாடுபவர்கள் கூட முடிவெடுக்க முடியாது உங்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பெட்டிங் சென்றரில் யார் வெல்வார்கள் என்று அதிக பணம் கட்டபடுகின்றதோ அவர்கள் தான் தோல்வி அடைவார்கள் மற்றபடி யார் யோசியமும் இங்கு பலிக்காது . உண்மையான விளயாட்டு காணாமல் போய் கனகாலம் ஆகி விட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

 

இங்கிலாந்து இன்டைக்கு தோற்க்கோணும்...குரேசியா கப் தூக்கினால் மகிழ்ச்ச்சி 

 

குரவேசியா வெல்லும் எண்டு பெற்றிங் காசு எறிஞ்சு இருக்கிறியள் போல கிடக்குது. 

ஒரு நண்பன் போன ஒக்டோபர் இரண்டு டிக்கட் £235 படி செமி பைனலுக்கு வாங்கி வைத்தவர்

இப்ப £4,000 க்கு ஒரு ரிக்கற் வாங்க சனம் அடிபடுது. இங்கிலாந்து எண்டில்ல, செமி பைனலுக்கு, பைனலுக்கு வருர எந்த நாட்டுக்காரரும் வாங்கத்தான் நிப்பினம். இது பெற்றிங்கிலும் பார்க்க நல்ல காசெல்லோ.

அடுத்த வோல்ட்கப் கத்தார் ரிக்கற் வாங்கி வைக்கோனும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎11‎/‎2018 at 5:00 AM, Nathamuni said:

குரவேசியா வெல்லும் எண்டு பெற்றிங் காசு எறிஞ்சு இருக்கிறியள் போல கிடக்குது. 

ஒரு நண்பன் போன ஒக்டோபர் இரண்டு டிக்கட் £235 படி செமி பைனலுக்கு வாங்கி வைத்தவர்

இப்ப £4,000 க்கு ஒரு ரிக்கற் வாங்க சனம் அடிபடுது. இங்கிலாந்து எண்டில்ல, செமி பைனலுக்கு, பைனலுக்கு வருர எந்த நாட்டுக்காரரும் வாங்கத்தான் நிப்பினம். இது பெற்றிங்கிலும் பார்க்க நல்ல காசெல்லோ.

அடுத்த வோல்ட்கப் கத்தார் ரிக்கற் வாங்கி வைக்கோனும்.

 

நான் சூதாடுவதில்லை ?
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.