Jump to content

``எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்!” ரசிகர்களுக்கு ரொனால்டோ உருக்கமான கடிதம்


Recommended Posts

``எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள்!” ரசிகர்களுக்கு ரொனால்டோ உருக்கமான கடிதம்

 
 
 

கிறிஸ்டியானோ ரொனால்டோ, கால்பந்து உலகில் தவிர்க்க முடியாத பெயர். போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த இவரின் கால்பந்தாட்ட திறமைக்கு உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. இந்த உலகக்கோப்பையிலும் அவரின் விளையாட்டை நாடுகள் கடந்து ரசித்தனர். உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று ரொனால்டோ தனது கால்பந்து வாழ்க்கையில் மிக முக்கிய முடிவு ஒன்றை அறிவித்தார். 

ரொனால்டோ

அதாவது கடந்த 9 ஆண்டுகளாக ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, இனி யுவெண்டஸ் கிளப் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதுதொடர்பாக முன்னரே பல தகவல்கள் வந்தாலும்,  33 வயதான ரொனால்டோ தொடர்ந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுவார் என நினைத்திருந்த வேளையில், அவரின் இந்த முடிவை ரசிகர்கள் ஏற்க மறுத்தனர். அவர்கள் மீண்டும் ரியல் மாட்ரிட் அணிக்கு வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். 

 

 

கடந்த 2009-ம் ஆண்டு மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்கு வந்த ரொனால்டோ கடந்த 9 ஆண்டுகள் ரியல் மாட்ரிட் அணிக்காகப் பல வெற்றிகளைப் பெற்றுத்தந்தார். இதுவரை ரியல் மாட்ரிட்  அணிக்காக 438 போட்டிகளில் விளையாடியுள்ள ரொனால்டோ, 451 கோல்கள் அடித்துள்ளார். மேலும், இரண்டு முறை லா லீகா சாம்பியன், நான்கு முறை சாம்பியன்ஸ் லீக் தொடரின் சாம்பியன், மூன்று கிளப் உலகக்கோப்பைத் தொடரில் சாம்பியன் என அந்த அணியை உச்சம் தொட வைத்தார். தனிப்பட்ட முறையிலும் ரொனால்டோ ரியல் மாட்ரிட்  அணிக்காக விளையாடும்போது பல்வேறு விருதுகளைக் குவித்துள்ளார். இதனால் ரொனால்டோ என்றால், ரியல் மாட்ரிட்  ரியல் மாட்ரிட்  என்றால் ரொனால்டோ என ரசிகர்கள் கொண்டாடினர். இதனால்தான் அவரின் இந்த முடிவை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை
 
இந்நிலையில், ரொனால்டோ ரியல் மாட்ரிட் ரசிகர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``இத்தனை காலம் ரியல் மாட்ரிட் அணியிலும், மாட்ரிட் நகரத்திலும் நான் இருந்ததுதான் எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலம். உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேநேரத்தில் எனது வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கான காலகட்டம் வந்து விட்டதாக நம்புகிறேன். அதனால்தான் இந்த மாற்றம். ரியல் மாட்ரிட் ரசிகர்களிடம் நான் கேட்டுக்கொள்வது ஒன்றைத் தான். எனது முடிவைப் புரிந்துகொள்ளுங்கள். 

 
 

 

ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடிய 9 வருடங்களும் பொற்காலம். இங்கே கால்பந்து விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாடினேன். களத்திலும் ஓய்வு அறையிலும் எனக்குக் கிடைத்த சிறந்த சக வீரர்களுக்கும் நன்றி. ரியல் மாட்ரிட் கிளப், மருத்துவக்குழு, தொழில்நுட்பக்குழு உட்பட அனைவருக்கும் நன்றி” என்றார். 

ரொனால்டோ இத்தாலியன் கிளப் அணியான யுவெண்டஸ் அணிக்காக 112 மில்லியன் யூரோவுக்கு வாங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்திய மதிப்பில் சுமார் 902 கோடி ரூபாய். 

https://www.vikatan.com/news/sports/130449-ronaldo-letter-to-real-madrid-fans.html

Link to comment
Share on other sites

ரியெல் மெட்ரிட் வாழ்வை முடித்து ஜுவண்டஸுடன் இணைந்தார் ரொனால்டோ

AFP-15-696x418.jpg
 

ரியெல் மெட்ரிட் கால்பந்து அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நான்காவது மிக விலை உயர்ந்த வீரர் என்ற பெருமையுடன் ஜுவண்டஸ் கழகத்தில் இணைந்துள்ளார்.

 

ரியெல் மெட்ரிட் அணி தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை வென்ற நிலையில் அதன்…

 

இந்த இரு கழகங்களுக்கும் இடையில் 112 மில்லியன் யூரோ (சுமார் 20 பில்லியன் ரூபாய்) பெறுமதியான ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டிருக்கின்றது. இதன்மூலம் போர்த்துக்கல்லைச் சேர்ந்த முன்கள வீரரான ரொனால்டோ இத்தாலி சம்பியன் அணியுடன் நான்கு ஆண்டுகள் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒன்பது ஆண்டுகள் ரியெல் மெட்ரிட்டில் ஆடிய 33 வயதுடைய ரொனால்டோ நான்கு சம்பியன்ஸ் லீக் கிண்ணங்களை வென்றுள்ளார்.

எனது வாழ்வில் புதிய நிலை ஒன்றை ஆரம்பிப்பதற்கு நேரம் வந்து விட்டது, அதனாலேயே என்னை பரிமாற்றம் செய்யும்படி கழகத்தை கேட்டுக்கொண்டேன் என்று ரொனால்டோ அறிவித்துள்ளார்.

உலகின் மிக விலை உயர்ந்த வீரராக பிரேசில் முன்கள வீரர் நெய்மார் கடந்த ஆண்டு ஓகஸ்டில் பார்சிலோனா கழகத்தில் இருந்து பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திற்கு 222 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தமானார். அதேபோன்று, பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்திற்காக சோபித்த பிரான்ஸ் முன்கள வீரர் கைலியன் ம்பாப்பே இரண்டாவது அதிக தொகையாக கடந்த மாதம் அந்த கழகத்தில் 180 மில்லியன் யூரோவுக்கு நிரந்தர ஒப்பந்தமானார்.

 

‘எனது தாய் குளிர்சாதனப் பெட்டிக்கு அருகில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தது இன்றும் எனது மனதில் அப்படியே இருக்கிறது’ என்று…

 

அதேபோன்று, பிரேசில் மத்தியகள வீரர் பிலிப் கோடின்ஹோவை பார்சிலோனா கழகம் கடந்த ஜனவரியில் 142 மில்லியன் யூரோவுக்கு ஒப்பந்தம் செய்தது.

இந்நிலையில், ரொனால்டோவின் பரிமாற்றம் குறித்த அறிவிப்பை ஐரோப்பாவின் இரு பிரமாண்ட கழகங்களும் செவ்வாய்க்கிழமை (10) வெளியிட்டன. ஐந்து முறை உலகின் சிறந்த வீரர் விருதை வென்ற ரொனால்டோ 2008 ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடெட் அணியில் இருந்து அப்போதைய மிகப்பெரிய தொகையான 106 மில்லியன் டொலர்களுக்கு ரியெல் மெட்ரிட்டில் ஒப்பந்தமானார்.

அது தொடக்கம் அவர் ஸ்பெயின் கழகத்திற்காக அனைத்து போட்டிகளிலும் 451 கோல்களுடன் அதிக கோல்கள் பெற்றவராக பதிவானதோடு இரண்டு லா லிகா பட்டங்கள் மற்றும் நான்கு சம்பியன்ஸ் லீக் பட்டங்களை அந்த கழகத்திற்காக வென்று கொடுத்துள்ளார்.

இந்நிலையில், சம்பியன்ஸ் லீக்கில் கடந்த ஆறு பருவங்களில் அதிக கோல் பெற்றவராக இருந்து வருபவரும் நடப்பு பல்லோன் டிஓர் வெற்றியாளருமான ரொனால்டோவை தன்னகப்படுத்திக் கொண்டிருப்பது இத்தாலி கழகத்தின் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

ஜுவண்டஸ் அணி 2012 தொடக்கம் இத்தாலியின் பலம்மிக்க கழகமாக இருந்து வருகின்றபோதும் 1996 தொடக்கம் அந்த அணியால் ஐரோப்பாவின் உயரிய பட்டத்தை வெல்ல முடியவில்லை.  

இதன்படி ஸ்பெயினின் பிரதான தொடரான லா லிகா நெய்மாரை அடுத்து இரண்டாவது உலக நட்சத்திர வீரரையும் இழந்துள்ளது.

சம்பியன்ஸ் லீக்கில் அதிக கோல் பெற்றவரான ரொனால்டோவுக்கு விடைகொடுக்கும் வகையில் ரியெல் மெட்ரிட் தனது இணையதளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வீரர் பரிமாற்றத்திற்கு ரொனால்டோ கேட்டுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளது.

உலகக் கால்பந்திலும் எமது கழக வரலாற்றிலும் மிகச் சிறப்பான ஒரு யுகத்தை தந்து உலகில் மிகச் சிறந்தவர் என நிரூபித்த வீரர் ஒருவருக்கு ரியல் மெட்ரிட் இன்று தனது நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறது என்று அந்த கழகம் குறிப்பிட்டுள்ளது.

 

நான்கு ஆண்டுகளுக்கு முன் 2014 உலகக் கிண்ணத்தில் நைஜீரிய அணிக்கு எதிராக ஈரான் தனது முதல் போட்டியில் ஆடியபோது அந்த…

ஐரோப்பிய பிரீமியர் லீக்கில் ஆதிக்கம் செலுத்தியபோதும் ரியல் மெட்ரிட் உள்நாட்டு தொடரில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த லா லிகா பருவத்தில் சம்பியனான பார்சிலோனாவை விடவும் அந்த அணி 17 புள்ளிகள் பின்தங்கியமை குறிப்பிடத்தக்கது.   

இந்நிலையில் 33 தடவைகள் லா லிகா கிண்ணத்தை வென்றிருக்கும் ரியல் மெட்ரிட் அதன் புதிய முகாமையாளர் ஜூலன் லொபடிபுயின் கீழ் மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.