Jump to content

தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா?


Recommended Posts

தாராளமற்ற சனநாயக எழுச்சியும் கிழக்கு வல்லரசுகளும்: உலக விதியை நிர்ணயிக்குமா இந்தியா?

JUL 10, 2018by புதினப்பணிமனைin கட்டுரைகள்

india-china-300x200.jpgஅண்மைய காலங்களில் சர்வதேச அளவில் சனநாயகம் வீழ்ச்சி கண்டு வருவது குறித்து தாராள சனநாயக சித்தாந்த ஆதரவாளர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளனர். அரசியல் சுதந்திரம், சனநாயகம், திறந்த சந்தை, திறந்த சமூக அமைப்பு என கவலையற்ற நிலையில் இனிமேல் மேலைத்தேய தாராள சனநாயகம் வாழ்ந்திருக்க முடியாத நிலை உருவாகி வருகிறது.

இந்த அம்மணமான உண்மையை மறுக்க முடியாதுள்ளது என்ற சர்வதேச சனநாயக நெறிமுறைகள் குறித்த கவலையை அவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.

கடந்த ஜூன் 22ஆம் திகதி டென்மார்க் தலைநகரான கொப்பனேகனிலே ஒரு ஆய்வு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு முன்னைய நாள் டென்மார்க் பிரதமரும் முன்னைநாள் நேட்டோ பொதுச்செயலருமான Anders Fogh Rasmussen தலைமையில்,  அமெரிக்க முன்னைநாள் பதில் அதிபர் Joseph Biden, கனேடிய முன்னைநாள் பிரதமர் Stephen Harper, ஸ்பானிய முன்னைநாள் பிரதமர் Jose Maria Aznar என மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த சனநாய சார்பு மாநாட்டில் உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் எழுச்சிகண்டு வரும் சனநாயகத்தின் வீழ்ச்சி குறித்து ஆராயப்பட்டது. முன்பு ஒருபோதும் இல்லாத அளவு தாராள சனநாயக நாடுகளிலும் கூட சனநாயகம் மக்களுக்கானஅடிப்படை பாதுகாப்பை கொடுக்கவில்லை என்பது இவர்களது பார்வையாகும்.

மேலும் மேலைத்தேய சனநாயகத்தின்  சர்வதேசஅத்திவாரம் எதேச்சாதிகாரத்தாலும் தாராளப் போக்கு அற்ற அரசுகளாலும் சனநாயக நெறிகளின் நிழலிலே லாவகமாக கையாளப்பட்டு வருகிறது. தனிப்பட்ட அரசியல் இலாபம் தேடும், போலித்தனமான தேசியவாத போக்குகளினால் அத்திலாந்திக் கரை நாடுகளின் கூட்டு இன்று கேள்விக்கிடமானதாக ஆக்கப்பட்டுள்ளதாக அம் மாநாட்டில் அறிவித்தனர்.

இத்தகைய ஆய்வுகள் பல்வேறு சர்வதேச ஆய்வு கூட்டங்களிலும் இன்றைய காலப்பகுதியில் ஆய்வு செய்யப்பட்டு வருவது கவனிக்கத்தக்கதாகும்.donald-trump.jpg

அண்மையில் சீன தலைவர், வாழ்நாள் முழுவதும் தாமே சீனாவின் தலைவராக இருக்கக்கூடிய வலுவை சீன கம்யுனிச கட்சியின் தலைமையில் பெற்று கொண்டார். அதுமட்டுமல்லாது, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புட்டின் மீண்டும் ஒருமுறை அதிபராக தெரிவு செய்யப்பட்டார். இவை மட்டும் இத்தகைய ஆய்வுகளிற்கு காரணமாக அமையவில்லை.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து பிரிந்து போவதன் ஊடாக ஐரோப்பிய நாடுகளின் ஒற்றமை சிதைவுறுகிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் தற்காப்பு பொருளாதார போக்கும் அவரது அதிபர் தெரிவில் ரஷ்ய இணையதள தொழில்நுட்ப செல்வாக்கு  இணைந்திருப்பதான பார்வையும் கவனிக்கத்தக்கதாகும்.

மேலும் மேலைத்தேய ஆய்வாளர்களின் பார்வையில் அமெரிக்கா பாதுகாப்பு மற்றும் பொருளாதார முதன்மை என்ற பெருமையை இழந்து நிற்கிறது,

இதற்கும் மேலாக மத்திய ஐரோப்பிய நாடுகளிலும் தேசியவாதம், சனரஞ்சக வாதம், இனவாதம் என பல்வேறு சனநாயகத்திற்கு எதிரான சக்திகள் எழுச்சி கண்டுவருவது கணிப்பிடப்பட்டுள்ளது. இது Xenophobia எனப்படும், இடம்பெயர்ந்து வாழும் வெளிநாட்டவர்கள் மீதான ஒரு பயம் தான் என்ற கருத்து ஆய்வாளர்கள் மத்தியில் பொதுவாக உள்ளது.

ஆசிய, ஆபிரிக்க,மத்திய கிழக்கு, கரீபியன் நாடுகளில் இடம்பெற்ற யுத்த நிலைமைகள் காரணமாக இடப்பெயர்வை சந்தித்த மக்கள் மேலைநாடுகளை நோக்கி புலம்பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் உள்ளுர் தேசியவாத சக்திகள் இதனை சாதகமாக பயன்படுத்தி அரசியல் இலாபம்பெறும் போக்கில் கையாளுகின்றன..

தமது தனித்துவமான பொருளாதார கலாச்சார வரலாற்றில் புதிய இனங்களின் தலையீடுகள் குறித்து தம்மை பாதுகாத்து கொள்ளும் பொருட்டு உள்ளுர்வாசிகள் தேசியவாதத்தையும் சனரஞ்சகவாதத்தையும், இனவாதத்தையும் தம்மைப் பாதுகாக்கும் வழிமுறையாக பார்க்கின்றனர்.

உதாரணமாக ருமேனியா, ஹங்கேரி, போலந்து போன்ற நாடுகளில் அண்மைக்காலத்தில் தாராளமற்ற சனநாயகத்தின் எழுச்சியும் எதேச்சாதிகார அரசியலின் வளர்ச்சியும் முக்கியமாக கவனத்தில் எடுத்து கொள்ளப்படுகிறது.

அதேபோலமெக்சிக்கர்களின் இடப்பெயர்வை முன்வைத்து அதிபர் ட்ரம்ப் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரத்தில் பெரும் வரவேற்பை பெற்று கொண்டார்.

mahinda-xi-board.jpgமுன்பு எப்போதும் இல்லாத வகையில் இரண்டாம் உலகப்போரின் பின்பு ஜேர்மனியப் நாடாளுமன்றத்தில் Bundesshaus அதீத தேசியவாதிகள் தமது நிலையை எடுத்துள்ளனர்.

இத்தகைய நிலையானது, அரச அதிகாரத்தில் உயர்மட்ட ஆட்சி குழுக்களும் மோசடி ஆட்சியும் ஆதிக்கம் செலுத்தும் நிலையை உருவாக்கி வருகிறது. மேலும் சனநாயக வழிமுறைகள் மூலம் தமது குரல்கள் வெளிக்கொண்டு வரப்படும் என்பதில் மக்கள் நம்பிக்கை குறைந்து வருவது கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

மேலைத்தேயம் முதலாளித்துவ தாராள சனநாயக சித்தாந்த நம்பிக்கையை பாதுகாக்க எத்தனித்து நிற்கும் அதேவேளை, கீழைத்தேய ஆய்வாளர்கள் மேற்கு நாடுகள் தமது உலக ஒழுங்கை கையாளும் வகையிலான முதன்மையை ஏற்கனவே இழந்து விட்டன என்ற பார்வையை கொண்டுள்ளனர்.

பனிப்போர் முடிவிலிருந்து 2008ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்காலம் வரை இருந்த அமெரிக்க அரசியல் பொருளாதார பலம் இன்றைய காலப்பகுதியில் இல்லை என்பது இவர்களது விவாதமாகும்.  பனிப்போர் முடிவில் மிகப்பெரும் வெற்றிப் பெருமிதம் கொண்ட மேற்கு நாடுகள் இந்திய -சீன வளர்ச்சியை கண்டுகொள்ளவில்லை என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

2001 ஆண்டில் சீனாவின் உலக வர்த்தக அமைப்புடன் இணைந்து கொண்ட பொழுது 800 மில்லியன் புதிய தொழிலாளர்கள் மேற்கு நாடுகளின் தேவையை நிவர்த்தி செய்யும் வகையில் புகுத்தப்பட்டனர்.

இதனால் மேலை நாடுகளில் வேலைவாய்ப்பின்மை ஏற்பட்டதன் காரணத்தாலேயே தேசியவாத, சனரஞ்சகவாத, இனவாத தலைமைகளின் விவாதங்களை மேற்கு நாடுகளில் உள்ள மக்கள் கிரகிக்க வேண்டிய தன்மை ஏற்பட்டதாக கிழக்கு நாடுகளின் சார்பான ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

உலக வர்த்தக அமைப்புடன் சீனா இணைந்தமை சர்வதேச வர்த்தகத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வந்திருந்த போதிலும்- சீன பொருட்கள் மேற்கு நாடுகளில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரின் வருமானத்திற்கு ஏற்ற வகையில் வாழ்க்கைத்தரத்தை  கொண்டு செல்ல கூடியதாக இருந்தது.

ஆனால் சுமார் நாற்பது வருடங்களாக எந்தவித முன்னேற்றமும் அற்ற வாழ்க்கையை கொண்டிருப்பது முக்கியமானதாகும். இந்த நிலை உலகில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கான காரணமாக பார்க்கப்படுகிறது

Narendra-Modi.jpgடென்மார்க் தலைநகரான கொப்பனேகனிலே இடம்பெற்ற ஆய்வு மாநாட்டின் அடிப்படைகளான தாராள சனநாயக நெறிமுறைகளின் வீழ்ச்சியும், கீழைத்தேய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியும், அவற்றின் மேலைத்தேய சர்வதேச அரசியல் சட்டதிட்டங்களை பின்பற்றும் தன்மை (play within rule) என்னும் பதத்திற்கு ஏற்ப சீன, இந்திய நாடுகள் வரைமுறைகளுக்குள் வளர்ச்சி என்பது மேலும் மேலைத்தேய தலைமைத்துவத்திற்கு பெரும் சவாலாகவே இருக்கும் என்பது கீழைத்தேய ஆய்வாளர்களது பார்வையாக உள்ளது.

இங்கே நாம் கவனிக்க வேண்டிய விடயம் என்னவெனில்  இன்னும் பத்து வருடங்களுக்குள் சீனா உலகின் முதலாவது வல்லரசாக மாறும்நிலை ஏற்படும் பொழுது இந்தியாவின் முக்கியத்துவம் மிக வலிமையானதாக மாறும் என்று ஆய்வாளர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

கீழைத்தேய, மேலைத்தேய இழுபறிக்கு மத்தியில், சீன – அமெரிக்க போட்டி மிக வலிமையானதொரு நிலையை எட்டும்பொழுது இந்தியாவின் மேலைத்தேய போக்கு சீனாவுக்கு மேலான அமெரிக்க யதார்த்தவாத சித்தாந்தத்தின் அடிப்படையில் செயற்பட முற்படுமாயின் அபாயகரமான பொறிக்குள் உலகம் சிக்குண்டு போவது தவிர்க்க முடியாததாகி விடும்

http://www.puthinappalakai.net/2018/07/10/news/31802

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.