Jump to content

ஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..!


Recommended Posts

ஒருநிமிடக் கதை: தேவைக்குத் தகுந்தது மாதிரி..!


 

 

oru-nimida-kadhai

 

சிவா மிகவும் பதைபதைப்புடன் இருந்தான். அட்ரினல் சுரப்பிகள் ஓவர்டைமில் வேலை செய்து கொண்டிருந்தன. இருப்பா  அல்லது இறப்பா அளவிற்குப் பெரிய விஷயம் இல்லை.

 

ஆனாலும் இருப்பா, கல்தாவா என்பது அந்த முப்பது வயது, வேலை இல்லாமல் இப்போது ஒரு ட்ரெய்னியாக எடுக்கப்பட்டு, இன்னும் சில வாரங்களில் வேலை நிச்சயமாக்கப்படும் நினைப்பில் தெருக் கோடி சாரதாவை அடிக்கடி பார்த்து,  அசட்டுத்தனமாக இளித்து, எதிர்பார்ப்போடு காதலைச் சொல்ல நினைத்தவனுக்குப் பெரிய விஷயமாகத்தான் இருக்கும்.

சென்ற வாரம்தான் தலைமை எடிட்டர் காது குடைந்த சுகத்தில் மூழ்கி இருந்த வேளையில், அவனையும் ராஜாவையும் அழைத்தார். சுகானுபவத்தில் பாதி கிறங்கிய கண்களோடு அவர் வாயிலிருந்து விழுந்த முத்துக்கள் இவை...

" ஏலே ரெட்டப்பயலுகளா.... பப்ளிஷர் முதலாளி ஒரு அசிஸ்டெண்ட் எடிட்டர் போஸ்ட்டுக்கு சம்மதிச்சுட்டான்.. கேட்டீயளா. நான் சொல்லிட்டேன், ஆமாம், புதுசா ஒரு பயலை எடுத்தாரவேண்டாம். போன வாரம் சேர்ந்த இந்த ரெண்டு பயலுக்கும் ஒரு டெஸ்ட்டு வெச்சுப் பாத்து, ஒருத்தனை பர்மனெண்ட் செஞ்சிடுவோம்னு.... "

சிவா ராஜாவைப்பார்க்க, ராஜா சிவாவைப்பார்க்க ஒரு நிமிடம் அங்கே நீயும் நானுமா கண்ணா சீன் அரங்கேற்றியது.

" இந்தா....ரெட்டை பேருக்கும் இத்தான் சவாலு. இந்த வார மேகசீனுக்கான மேட்டர் இந்தா இருக்கு. ரெண்டு பேரும் தனியா இத்த எடிட் செஞ்சு எடுத்தாங்க...அத்த வெச்சு முடிவு செஞ்சிடுவோம்."

அப்போது சுரக்கத்தொடங்கிய அட்ரினல்தான் இதோ இப்போது கைகளில் இருவரின் எடிட்டட் மேட்டரை கைகளில் வைத்தபடி பார்க்கும் சீப் எடிட்டரை பார்க்கும் போது அதிகரித்திருந்தது.

அவனுக்கு நம்பிக்கை இருந்தது, தான்தான் தேர்ந்தெடுக்கப் படுவோம் என்று.

பின்னே... சும்மாவா வேலை செய்திருக்கிறான்.

" அண்ணே ....முனுசாமிண்ணே.... நீங்கதான் இங்க பல வருஷமா இருந்துருக்கீங்க...நம்ம சீப் எடிட்டருக்கு என்ன பிடிக்கும்.... "

" அட.. என்ன பயப்பா நீ...இன்னுமா தெரிஞ்சு வெச்சுக்கல்ல .... தமிழ் தான் ... ஆமாம்பா ... அய்யாவோடு உசிரே தமிழ்லதான் இருக்கு ... தெரியுமில்லை ...."

" நண்பா.. நீ எனக்கு சீனியர்...போட்டோகிராபரா சீப் கூட நிறைய இடத்துக்குப்போயிருக்கே. அவருக்கு என்ன பிடிக்கும்?"

" மச்சி, தமிழ்தான் அவருக்கு ரொம்ப பிடிச்சது. ஆங்கிலம் கலக்காமல் சுத்தமான தமிழ்ல எழுதினா ஆள் க்ளோஸ்..."

இப்படி நிறைய ஹோம்வொர்க் செய்து அவன் தெரிந்து கொண்டது.... சுத்தமான , அழகான, ஆங்கிலம் கலக்காமல் பேசினால் அல்லது எழுதினால் சீப் எடிட்டரை இம்ப்ரெஸ் செய்யமுடியும்.

இரண்டு நாட்கள் இரவு தூங்காமல் எடிட் செய்யக்கொடுத்த செய்திகளை மிக அழகாகத் திருத்தி, பத்தியில் இட்டு, பத்திரிகையின் முப்பது பக்கத்துக்குள் அடக்கினான்.

அதுதான் இப்போது சீப் எடிட்டர் பார்வையில்.

" அட ரெட்டப்பயலுங்களா... இப்படி என்ன அவஸ்தையிலே விட்டுட்டீங்களே... நா என்னா முடிவெடுக்க...?"

சிவா ராஜாவின் பக்கங்களை கையில் எடுத்தான்.

" சார்.... இங்க பாருங்க... இந்த கதையோட டைட்டில்.. இரண்டு வார்த்தைக்கு நடுவே ஒற்றுமிகும் "ப்" விட்டுப் போயிருக்குது.."

சீப் எடிட்டர் சடாலென்று அதைப் பிடித்துக்கொண்டார்.

" ஆமாம்ல....அட..இது தப்புதான்னேன்..."

ராஜா மெதுவாகச் சொன்னான்.

" அய்யா... இது தெரியாம நடக்கலை... இந்த ஒற்று எழுத்தைப்போட்டா மேலே இடம் நிறைய தேவைப்படுது. அதான் எடுத்துட்டேன். அங்க ஒரு பத்தி சோப்பு விளம்பரம் சின்னதாப் போடலாம்.. இதப்போலவே உள்ளேயும் செஞ்சிருக்கேன்...அதுலேயும் விளம்பரம் போட முடியும்.... "

சீப் எடிட்டர் முகம் மலர்ந்தார்..

" இதுல்ல புது திங்கிங் ...பாரு, விளம்பரம் அதிகமானா நம்ம ப்ரேக் ஈவன் லைனைத்தாண்டி எங்கியோ இல்ல மார்ஜின் போயிடும்.... அட... இந்த ஒற்றெழுத்து இப்போ யாரும் போடுதில்ல தெரியுமோ .... அதான் அர்த்தம் புரியுதுல்ல அது இல்லாமலே. . அப்புறம் அது இன்னாத்துக்கு ?"

சிவாவிற்குப்புரிந்தது  வேலை யாருக்கு என்று . மற்றுமொன்றும் புரிந்தது ...மொழிக்கான சேவையும் தேவையை ஒட்டியே....!!!

https://www.kamadenu.in

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Similar Content

  • Topics

  • Posts

    • பிளவை நோக்கிச் செல்லும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ஜனாதிபதி தேர்தலில்  கட்சியின் வேட்பாளரை நிறுத்தவேண்டும் என ஒரு தரப்பினரும் ஜனாதபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் என மற்றைய தரப்பினரும்  உறுதியாக நிற்பதன் காரணமாக ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன பிளவுபடும் நிலை உருவாகியுள்ளதாக டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ராஜபக்ச குடும்பத்திற்கு ஆதரவான தரப்பினர் கட்சி தனது சொந்தவேட்பாளரை நிறுத்தி தேர்தலில் போட்டியிடவேண்டும் என  தெரிவித்துள்ளனர். கட்சியின் நிறைவேற்றுகுழுவின் கூட்டத்தில் இந்த கருத்து வெளியாகியுள்ளது - எனினும் தேர்தல் திகதி அறிவிக்கப்படாததால் இது குறித்து கட்சி இன்னமும் தீவிரமாக ஆராயவில்லை. இதேவேளை அரசாங்கத்தில் அமைச்சரவை பதவிகளை வகிக்கும்  பொதுஜனபெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் அவருக்கே ஆதரவளிக்கவேண்டும் என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளனர். R   https://www.tamilmirror.lk/செய்திகள்/பிளவை-நோக்கிச்-செல்லும்-ஸ்ரீலங்கா-பொதுஜனபெரமுன/175-335341
    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.