Jump to content

கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும்


Recommended Posts

கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும்

கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும்

மரணம்படத்தின் காப்புரிமைREUTERS

எதிர்வரும் நாட்களில் ஆஸ்திரேலிய குழந்தைகள், பள்ளியில் கணிதம், அறிவியல் வரலாறு போன்ற பாடங்களோடு மரணம், இறப்பு போன்றவற்றையும் ஒரு பாடமாக படிப்பார்கள்.

இதுதொடர்பான முன்மொழிவை ஆஸ்திரேலியாவின் குவின்ஸ்லெண்ட் மெடிக்கல் அசோஸியேஷன், அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

பள்ளிக் கல்வியில், பிறப்பு, கணிதம், அறிவியல், உடற்கூறு என பல்வேறு பாடங்கள் கற்பிப்பது போலவே வாழ்க்கையின் முடிவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும், அதைப் பற்றி வெளிப்படையாக பேச வேண்டும் என அந்த அமைப்பு கூறுகிறது.

மேம்பட்ட சிறந்த மருத்துவ முறைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மக்களின் வாழ்நாள் அதிகரிப்பது மகிழ்ச்சியளிப்பது ஒரு புறம் என்றால், முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது குடும்பங்களிடையே பலவித சிக்கல்களையும் ஏற்படுத்தியுள்ளது.

டாக்டர் ரிச்சார்ட் ரீட் கூறுகிறார், "பள்ளியில் பாடங்கள் கற்றுக் கொடுப்பது அவர்களின் வாழ்க்கையில் பயன்படுத்துவதற்காகத்தான். தங்கள் பெற்றோர் மற்றும் வாழ்வின் அந்திமக் காலத்தில் இருக்கும் குடும்பத்தில் உள்ள பெரியவர்களை இயல்பாக நடத்துவது பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளியில் பாடமாக கற்றுக் கொள்வது அவர்களின் வாழ்க்கைக்கு உதவும்."

டாக்டர் ரிச்சார்ட் ரீட் Image captionபெற்றோர் மற்றும் முதியவர்களை இயல்பாக நடத்துவது பற்றி இளைஞர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் டாக்டர் ரிச்சார்ட் ரீட்

"தற்போது, சிறுவர்களுக்கு மரணத்தைப் பற்றி தெரிந்திருப்பது தேவையில்லை என்ற மனப்போக்கு நிலவுகிறது. எனவே, இளைஞர்கள் இதுபோன்ற சிக்கல் நிறைந்த விஷயங்களைப் பற்றி பேச முடியாத சூழல் நிலவுகிறது. சிறுவர்களுக்கு இதுபற்றிய தகவல்கள் தெரியவேண்டாம் என்பது போன்ற மனத்தடைக்களால், அவர்களது நெருங்கிய உறவினர்களின் மரணம் மருத்துவமனைகளில் நிகழ்கிறது."

"இதுபோன்ற வாழ்வியல் சூழல்களை சிறுவயதில் இருந்தே இயல்பாக எதிர்கொள்ளும் வகையில் பள்ளிகளில் மரணம் என்றால் என்ன, என்பது போன்ற பாடங்களை கற்பிக்கலாம் என்று பல்வேறு கோணங்களில் ஆலோசித்து அதன் முடிவை அரசின் முன் வைத்திருக்கிறோம்."

வாழ்க்கையின் இறுதித் தருணம்

மரணம் தொடர்பான சட்டங்கள், தார்மீக கடமைகள், தவிர்க்க வேண்டியவை, கருணைக் கொலை, விருப்ப மரணம் போன்றவற்றை வகுப்பறையில் பாடங்களாக நடத்தும்போது, அவர்களுக்கு மரணம் தொடர்பான புரிந்துணர்வு ஏற்பதும். அதோடு, வாழ்க்கையில் யாரும் தவிர்த்திட முடியாதது என்ற விழிப்புணர்வு மாணவப் பருவத்திலேயே ஏற்படுவதால், அது மனோரீதியாக ஆக்கபூர்வமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது ஆஸ்திரேலிய மருத்துவர்கள் முன்வைக்கும் வாதம்.

வாழ்க்கையின் இறுதித் தருணத்தில் முடிவு எடுப்பதில் மாணவர்களுக்குத் தெளிவு ஏற்படுத்துவதில், மரணம் தொடர்பான பாடம் உதவியாக இருக்கும் என்கிறார் டாக்டர் ரிச்சர்ட்.

ஹாங்காங் மரணத் திருவிழாபடத்தின் காப்புரிமைDALE DE LA REY/AFP/GETTY IMAGES

சிறுவயதிலேயே மரணம் பற்றிய புரிதல்கள் ஏற்பட்டுவிட்டால், பெரியவர்களாகும்போது தங்கள் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் செய்ய வேண்டியவை என்ன என்பதை தெரிந்துக் கொள்வதோடு, மரணத்தை இயல்பானதாக பாவிப்பது எப்படி போன்ற விழிப்புணர்வு ஏற்படும்.

அதுமட்டுமல்ல, நோய்வாய்ப்பட்ட குடும்பத்தினருக்கோ அல்லது உறவினர்களுக்கோ எந்தவிதமான சிகிச்சைகளை கொடுக்கலாம் என்பது போன்ற முடிவுகள் எடுப்பதையும் மரணம் பற்றிய பாடம் எளிதாக்கும்.

"21 வயது இளைஞர்கள்கூட இதுபோன்ற விஷயங்களில் முடிவெடுப்பதற்கு சிரமப்படுவதை பார்த்திருக்கிறேன்" என்கிறார் டாக்டர் ரிச்சர்ட்.

"தங்கள் அன்புக்குரியவர்களின் நலனுக்காக என்ன செய்வது, சட்டத்தில் அதற்கு இடமிருக்கிறதா என்பது போன்றவை உயர் கல்வி பயின்றவர்களுக்குக்கூட தெரிவதில்லை" என்கிறார் டாக்டர் ரிச்சர்ட்.

மரணம்

மரணம் பற்றி பேசுவதை தவிர்க்கும் மனோபாவம், சரியான நேரத்தில் முடிவு எடுக்கத் தெரியாமல் திண்டாட வைக்கிறது. இதனால் முடிவெடுப்பதில் கால தாமதமும், வேறு பல சிக்கல்களும் ஏற்படுகிறது.

அதேபோல் குடும்பத்தின் பெரியவர்களுக்கு நோய்கள் ஏற்படும்போது எதுபோன்ற சிகிச்சை அளிக்கவேண்டும், வயதானவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அவர்களுக்கு ஏற்படும் நோய்கள், மன சிக்கல்கள் போன்றவற்றை இளைஞர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.

எனவே, இதுபோன்ற சூழல்களை எதிர்கொள்ள இளைஞர்களை தயார்படுத்துவது காலத்தின் கட்டாயம். அதுவும் மருத்துவத் துறையில் பல்வேறு கண்டுபிடிப்புகள், நவீன சிகிச்சை மற்றும் தொழில்நுட்பங்களின் காரணமாக முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இதுபற்றி பேசப்படுவதும், அவை சரியான தளத்தில் புரிந்துக் கொள்ளப்படுவதும் அவசியம்.

மரணம் என்பதை கல்வியில் பாடமாக வைக்கும்போது, அதில் மரணத்துடன் தொடர்புடைய சட்ட அம்சங்கள், கருணைக்கொலை, வயதானவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள், எதிர்காலத்தில் சிகிச்சைகள் வழங்குவதற்கான சாத்தியங்கள், அது தொடர்பான விழிப்புணர்வு, மரணம் நிகழும் முறை போன்றவற்றை பாடத்திட்டத்தில் சேர்க்கலாம்.

கலாசாரத்தின் பங்கு

மேலே குறிப்பிடப்பட்ட தலைப்புகள் அனைத்தும் உயிரியல், மருத்துவம், சட்டம் மற்றும் தத்துவம் போன்ற பாடங்களின் ஒரு பகுதியாகவும் கற்பிக்கப்படலாம்.

மரணம் பற்றிய பாடங்கள் பள்ளிக்கல்வியில் சேர்க்கப்பட்டால், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் மெக்சிகோவின் அடிச்சுவடுகளை பின்பற்றும் நாடுகளாகும் என்று சொல்கிறார் டாக்டர் கிட்.

மரணத்திற்கு கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கும் மெக்சிகோவில் கொண்டாடப்படும் மரணத் திருவிழாபடத்தின் காப்புரிமைNINA RAINGOLD/GETTY IMAGES Image captionமரணத்திற்கு கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கும் மெக்சிகோவில் கொண்டாடப்படும் மரணத் திருவிழா

மரணத்திற்கு கலாசார ரீதியாக முக்கியத்துவம் கொடுக்கும் நாடு மெக்சிகோ. அங்கு மரணம் கொண்டாடப்படுகிறது. மரணத்தை கொண்டாடும் வகையில் அங்கு மரணத் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது.

அதேபோல் அயர்லாந்திலும் மரணம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. மரணத்தைப் பற்றி வெளிப்படையாக பேச ஆரம்பித்தால், மரணம் என்பது சுமையாக இல்லாமல் இயல்பானதாக தோன்ற ஆரம்பிக்கும். அது மனிதர்களின் மனதில் இறுதிக்காலத்தைப் பற்றிய சிக்கலான சிந்தனைகளை எளிமைப்படுத்தும்.

ஆஸ்திரேலிய மக்களில் பெரும்பான்மையானவர்களின் மரணம் மருத்துவமனைகளில் நிகழ்கிறது. ஆனால், இறக்கும்போது வீட்டில் இருப்பதையே மக்கள் விரும்புகின்றனர்.

இறப்பை இயல்பானதாக நினைக்கத் தொடங்கிவிட்டால், அது தொடர்பான திட்டங்கள், இறக்க விரும்பும் இடங்களை தேர்ந்தெடுப்பது போன்றவற்றை நோக்கி மனிதர்களை இட்டுச் செல்லும்.

"15% மக்களே தங்களின் இறுதிக் கணங்களை தங்கள் வீட்டில் கழிக்கின்றனர். ஆனால் பெருமளவிலான மக்களின் மரணம் மருத்துவமனையில் சற்று சங்கடமான மனோநிலையிலேயே நிகழ்கிறது" என்கிறார் டாக்டர் கிட்.

மருத்துவம்படத்தின் காப்புரிமைROBERT CIANFLONE/GETTY IMAGES

வாழ்வுக்கும் சாவுக்குமான சவால்கள்

நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னதாக மரணம் என்பது வீடுகளில் நிகழ்வது இயல்பானதாக இருந்தது. ஆனால் நவீன சிகிச்சை முறைகள் அறிமுகமானபிறகு, மனிதர்களின் ஆயுள் அதிகரிக்கத் தொடங்கியது. மிகவும் தீவிரமாக நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் மருத்துவ உபகரணங்களின் உதவியால் சிகிச்சை பெறுகின்றனர்.

சில நேரங்களில் மருத்துவ சிகிச்சைகள் பலனளிக்காமல் மரணம் ஏற்படுகிறது. பல நேரங்களில் மாதக்கணக்காக உபகரணங்களின் உதவியால் ஆயுளை நீட்டித்தாலும் பயன் ஏதும் ஏற்படாமல் போகிறது.

குறிப்பிட்ட காலம் சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு, நோய் குணமாகாத நிலையில் இறுதிக் கணங்களை வீட்டில் கழிக்கலாமென்று நோயாளிகள் விரும்பினாலும், அது பற்றி முடிவெடுப்பதில் குடும்ப உறுப்பினர்கள் தடுமாறுகின்றனர்.

மரணம் என்பது பாடமாக கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டால், எந்த நோய்க்கு எத்தனைக் காலம் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம் என்பது பற்றியும், வீட்டில் வைத்து சிகிச்சையளிக்க வேண்டிய நோய்கள் எவை என்பது குறித்தும் இளம் வயதிலேயே புரிதல் ஏற்படும்.

இறுதிக்கணங்களை எப்படி வாழவேண்டும் என்று முடிவெடுப்பது ஒருவரின் உரிமை என்பதை குடும்பத்தினர் புரிந்துக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇறுதிக்கணங்களை எப்படி வாழவேண்டும் என்று முடிவெடுப்பது ஒருவரின் உரிமை என்பதை குடும்பத்தினர் புரிந்துக்கொள்ள வேண்டுமென்று மருத்துவர்கள் கூறுகின்றனர்

மரணத்தை பாடத்திட்டத்தில் சேர்ப்பது குறித்த குவின்ஸ்லெண்ட் மெடிக்கல் அசோஸியேஷனின் முன்மொழிவு, ஆஸ்திரேலியா கல்வி அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தி உலகின் பிற நாடுகளையும் இதுபற்றி சிந்திக்கவைக்கும் என்று டாக்டர் கிட் நம்பிக்கை தெரிவிக்கிறார்.

குடும்பத்தினர் ஒன்றாக அமர்ந்து பேசும்போது இதுபோன்ற விஷயங்கள் இயல்பாக பேசப்படவேண்டும். இப்படி சொல்வது எளிதானதாக இருந்தாலும், உண்மையில் சிரமமானதுதான். ஆனால் வாழ்வா சாவா என்ற சவாலை எளிதாக எதிர்கொள்ள மரணம் பற்றிய கல்வி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

https://www.bbc.com/tamil/science-44744754

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.