Jump to content

தாண்டி வா பெண்ணே!


Recommended Posts

 
 
 
தாண்டி வா பெண்ணே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1530245483.jpeg
 

வேலை முடிந்து விட்டது. ஆனால், நிமிர்ந்து பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது. எங்கே வாசு வந்து நிற்பானோ என்று இருந்தது. ஆனால், விழிகள் தன்னிச்சையாக இயங்கின. இரண்டு பக்கமும் அடிப்பார்வையாக அவனைத் தேடின.
''வேலை முடிஞ்சுதா கல்பனா?''
அவன்... அவன்... அவனே தான்... வந்து விட்டான்.
''இல்லே... ஆமா... முடியலே,'' என்று குழறினாள்.
''ரிலாக்ஸ் கல்பனா... நோ டென்ஷன் ப்ளீஸ்... நான் வெயிட் பண்றேன்.''
''ஏன்... ஏன் வெயிட் பண்ணணும்?'' என்றாள் மெல்ல.
''சரி... அப்ப கெளம்பட்டுமா?''
''தாராளமா.''
''உன் மனசு சொல்லட்டும்... அப்ப கெளம்பிடறேன்.''
''என்ன சொல்லணும்?''
''வாசு... நீ போ, வேண்டாம் எனக்குன்னு!''
எப்படி சொல்வது? அய்யோ... ஏன் இந்த பாழும் மனசு பாடாய் படுத்துகிறது? குழப்பமும் தயக்கமுமாகவே ஓடி விடுமா வாழ்க்கை... இவற்றிலிருந்து விடுபட்டு, தன்னுணர்வுடன் செயல்படவே முடியாதா?
கண்ணியமான இடைவெளியில், பக்கவாட்டில் வந்து நின்றான் வாசு.
''ப்ரீயா இரு கல்பனா. எப்ப உனக்கு வீட்டுல சொல்லணும்ன்னு தோணுதோ அப்ப சொல்லலாம். அப்பா, அம்மா சம்மதிச்ச பிறகு உனக்கு ஒண்ணும் தயக்கம் இருக்காது தானே, என்னை சரியா நிமிர்ந்து பார்க்க?'' என்றான் முறுவலுடன்.
''வரேன் கல்பனா... இன்னிக்கு, 'ரோட் ஷோ' இருக்கு... சாலையோர துாரிகைகள்... புதுசா வரைஞ்ச பத்து ஓவியங்களை வைக்கிறேன் கண்காட்சியில... முடிஞ்சா வா... நோ கம்பல்ஷன்... வரேன்.''
கிளம்பி விட்டான். கடைசி படியில் இறங்கியபோது, திரும்பிப் பார்த்தான். அவளும் பார்த்தாள். மெல்லிய இதமான மற்றுமொரு புன்னகையுடன், அவன் உருவம் மறைந்தது.
பெருமூச்சுடன் அவள் கணினியை மூடினாள்.

எப்போதும் போல வீடு அமைதியாக இருந்தது. சாய்வு நாற்காலியில் இருந்தபடி, அப்பா, திருவருட்பா வாசித்துக் கொண்டிருந்தார். துளசிக்கு நீர் வார்த்துவிட்டு, வானத்தில் கருடன் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. அலமாரியில் எல்லா பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தன. புத்தகங்கள் வரிசை, ராணுவ ஒழுங்குடன் இருந்தன. நேற்று வாசித்த தினசரியின் ஓரம் கூட மடியாமல் அயர்ன் செய்து வைத்த மாதிரி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் வரும் இரண்டு காக்கைகள் கூட வீட்டின் கறார் தன்மையை புரிந்து கொண்டவை போல நேரத்திற்கு வந்து ஒரு பருக்கை கூட சிந்தாமல் சாப்பிட்டுச் சென்றன.
அப்பா, ''ஜானகி,'' என்றார்.
''இதோ ரெடி,'' என்று இரண்டாவது காபி கோப்பையுடன் வந்து நின்றாள் அம்மா.
''வந்தானா அந்த பையன்?'' என்றார் அப்பா, காபியை அருந்திவிட்டு.
''இல்லே... வந்துடுவான் வந்துடுவான்,'' அம்மா வாசல் பக்கத்தில் கண் வைத்தபடியே வேகமாக சொன்னாள்.
''டயம் என்ன?''
''பத்தாகலே இன்னும்.''
''எட்டு மணிக்கு சாப்பிட்டே... ஒன்றரை மணி நேரம் கழிச்சு, ப்ளட் கொடுக்கணும்... இப்படி ரெண்டு மணிக்கு மேல ஆச்சுன்னா வால்யூ எப்படி சரியா காட்டும்? வேண்டாம் அந்த லேப்... போன் பண்ணி வரவேண்டாம்ன்னு சொல்லிடு.''
அம்மாவுக்கு அடித்துக் கொண்டது. 'நடராஜா எங்கே இருக்கிறாய்... இந்த கறார் மனிதன் பற்றி தெரியும் தானே உனக்கு? ஒரு நிமிட தாமதம் கூட ஆகாது. பால் ஆறு மணிக்கு, பேப்பர் ஆறரை மணிக்கு என்று வாழ்க்கையையே கடிகாரத்துக்கு ஒப்புக்கொடுத்த மிலிட்டரி மனிதர். படித்து படித்து சொன்னேனே பாவிப் பயலே...'
கல்பனா கிளம்பினாள்...
''இன்னிக்கு என்னம்மா பத்து நிமிஷம் முன்னாடி கிளம்பறே?'' என்று எதிரில் வந்தார் அப்பா.
''சாலையோர துாரிகைகள்னு ஒரு கண்காட்சி தேரடில... பாத்துட்டு போகலாம்ன்னு.''
''சின்ன வயசுல நீ ரொம்ப அழகா வரைவே கல்பனா... அதுவும் யானை யானையா நுாத்துக் கணக்குல வரஞ்சு தள்ளுவே... அதுக்காகவே உன்னை அடிக்கடி பார்த்தசாரதி கோவில், வடக்கு பெருமாள் கோவில்ன்னு கூட்டிகிட்டு போய் யானைகிட்ட விடுவேன்... தந்தம், தும்பிக்கைன்னு அப்படி ஆசையா தொட்டுப் பாப்பே நீ,'' அப்பா கனிவுடன் அவள் முகம் பார்த்து சிரித்தார்.
அப்படியே ஏன் இருக்க முடியவில்லை... விவரிக்க முடியாத உணர்வுகள் மன ஆழத்திலிருந்து பொங்கி சிலிர்த்தன அவளுக்குள். வாழ்வின் ஆனந்தங்கள் அந்த சிறுமியுடன் முடிந்து விட்டனவா? யானை மேல் உக்கார வையேன் அப்பா என்று சொல்ல முடிந்த சிறுமியால், இன்று மனதில் துளிர் விட்டிருக்கிற காதலை ஏன் வெளிப்படுத்த முடியவில்லை? வீழ்த்தப்பட்ட பறவை போல தனிமை தேடியே ஓடுகிறதே மனது...
''சரிம்மா... கிளம்பு... பத்திரமா போய்ட்டு வா.''
''சரிப்பா.''
''ஒரு நிமிஷம் கல்பனா.''
''என்னப்பா?''
''ஏதோ ஒண்ணு சொல்லணும்ன்னு நினைக்கிறியா... கொஞ்ச நாளாவே பேச்சு குறைஞ்சிருக்கும்மா உன்கிட்ட.''
''ம்... தெரியலப்பா... ஏதோ, 'டென்ஷனா' இருக்கு.''
''சரிம்மா... எப்ப தோணுதோ சொல்லு.''
''வரேன்ப்பா.''
பித்தோவன் கதை வாசித்தது நினைவில் இருந்தது. பித்தோவனை காதல் தான் மிக மிக சந்தோஷத்திலும், மிக மிக துக்கத்திலும் ஆழ்த்தியதாம். அவளுக்கும் அதேதானா... வாசுவின் பண்பு, கண்ணியம், ஆகாயம் போல பரந்த உள்ளம்... மெல்ல மெல்ல அது எப்படி காதலாக பரிமாணம் பெற்றது... அவளைப் போன்ற ஒரு வாயில்லாத புழுவுக்கு, சிம்மாசன ஆசைகள் ஏன் வந்தன?
'அய்யோ... வாசு ஏன், என்னை தேடி வந்தாய்... உணர்வுகளில் ஏன் நாதஸ்வரம் ஒலிக்க விட்டாய்... வாழைத் தோரணங்களை ஏன் கட்டினாய்... தாலி மணிகள் கோர்த்த பொன்சரடு கையில் பளபளக்க, ஏன் என்னை நெருங்கி வந்தாய் வாசு!'
அடுத்த நாள் அவள் முடிவு செய்து விட்டாள். போதும் இந்த மனச் சித்திரவதை. கோழையிலும் கோழை அவள். அப்பாவின் ராணுவ முகாமில் வாழ்பவள். அம்மாவின் பின் மறைபவள். கனவுலகில் மட்டுமே சஞ்சரிக்கும் தைரியம் கொண்டவள்.
'இல்லை வாசு... வெரி சாரி... விட்டு விடுங்கள்... உங்கள் அபாரமான குணத்திற்கு வன தேவதை போல ஒருத்தி கிடைப்பாள்... பை பை...' என்று சொல்லி விடலாம்.
சுவாசம் இப்போது சீராக வந்தது.
மாலை -
வீடு வெளிச்சமாக இருந்தது. வாசல் பக்கமும், பால்கனியிலும் இன்று விளக்குகள் எரிந்தன. அப்பாவின் குரல் சத்தமாகவும், உற்சாகமாகவும் கேட்டது தான் அவளுக்கு ஆச்சரியமாகவும், நம்ப முடியாததாகவும் இருந்தது.
தயங்கியபடி உள்ளே போனவள், கண்ட காட்சியை கண்டு திடுக்கிட்டு நின்றாள்.
அப்பாவின் எதிரில் அமர்ந்திருந்தான் வாசு. தெளிவான முகம். எப்போதும் போல தன்னம்பிக்கையான புன்னகை. அமைதியான கண்கள்.
அவளை கண்டதும், காத்திருந்தவனாய் மேலும் புன்னகைத்தான்.
அப்பா, ''வாம்மா கல்பனா...'' என்று சிரித்தார்.
''காபி போட்டிருக்கேன். முகம் அலம்பிக்கோ... முறுக்கும், பாதுஷாவும் கொடு அவருக்கு,'' என்று மலர்ச்சியோடு, கை பிடித்து அழைத்து போனாள் அம்மா.
என்ன நடக்கிறது... அவன் எப்படி இங்கே வந்தான்? ஒரு கணம் உடல் நடுங்கியது.
''கல்பனா... வாம்மா,'' என்று அழைத்தார் அப்பா.
''மன்னிச்சுக்கோம்மா அப்பாவை,'' என்றவர் சட்டென்று கண் கலங்கி விட்டார்.
''அய்யோ என்னப்பா இது... என்ன சொல்றீங்க?''
''வாசு மாதிரி ஒருத்தர் உனக்கு மறு வாழ்க்கை கொடுக்க தயாரா இருக்கார் என்கிறதை வந்து என்கிட்ட சொல்ல முடியாதபடி உன்னை பயத்துல வெச்சிருக்கேனே... அதுக்கு.''
உள்ளம் தவித்தது.
''நான் கண்டிப்பு தான்.... ரொம்ப கறார் தான்... ஆனால், ஈரம் இல்லாதவன் இல்லே... ஊர் உலகமெல்லாம் தேடித் தேடி ஒரு வரனை கொண்டு வந்து, என் செல்ல மகளுக்கு பண்ணி வெச்சேன்... ரெண்டே வருஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு... புற்றுநோய்க்கு அவன் பலியாய்ட்டான்... கேஸ் போடு, நஷ்டஈடு கேளுன்னு எல்லாரும் கோபப்பட்டாங்க... என்ன போட்டு என்ன... நாம ஏமாந்துட்டோம், பொண்ணு வாழ்க்கையை நாமளே அழிச்சுட்டோம்ன்னு உள்ளே அழுது அழுது இன்னும் முரடா, அழுத்தமா ஆயிட்டேன்... உன்கிட்ட இருந்தும், அம்மாகிட்ட இருந்தும் விலகிப் போயிட்டேன்... மன்னிச்சுடும்மா கல்பனா,'' மேலே பேச முடியாமல் அழுதார் அப்பா.
வாசு மெல்ல அவர் கைப்பற்றி சொன்னான், ''இல்லே சார்... நீங்க எந்த தப்பும் செய்யலே... நாம எல்லாரும் தான் சார் இதுக்கு பொறுப்பு... பெண், வாயைத் திறந்து ஆசையை சொல்லக் கூடாது, எந்த உணர்வையும் வெளிப்படுத்தக் கூடாது, சத்தமா சிரிக்கக் கூடாதுன்னு நிறைய மனத்தடைகளை போட்டுட்டோம் சார்... கங்கையம்மா, காவிரியம்மா, மாரியம்மான்னு புனிதத் தன்மையை கொடுத்து, அவளை இயல்பா இருக்க முடியாம ஆக்கிட்டோம்... படிச்சு நல்ல வேலைல உட்கார்ந்தாலும், அவள் ஆணுக்கு அடங்கினவள்தான்னு அவளையே நம்ப வெச்சுட்டோம்... இதை விட மோசடி இந்த உலகத்திலேயே இல்லே... பாவம் கல்பனா, அவளால மட்டும் எப்படி சார் மாத்தி யோசிக்க முடியும்?''
அப்பா, அவனை அன்புடன் பார்த்து, ''முடியும் சார்... உங்களை மாதிரி சிறப்பான இளைஞர்களால அந்த மாற்றத்தை கொண்டு வர முடியும்... ஜீவனுள்ள உயிர் தான் என்று உணர வைக்க முடியும்... இப்ப புரியுது வாசு சார்... தேவை எல்லாம் மனசு தான் சார்...''
கல்பனா பிரமித்துப் போய் நின்றாள்.
தனக்காக பேசும் இரு ஆண்கள். இரு உறவுகள். இதைவிட அற்புதம் வேறில்லை. புதிய கதவு திறந்ததைப் போல இருந்தது அவளுக்கு.
தெற்கிலிருந்து இதமான காற்று வந்து முகத்தை வருடி சிலிர்க்க வைத்ததை போலிருந்தது.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் எங்க தாண்டினாள்.... வாசுதான் வாசல் தாண்டி வந்து நிக்கிறான்.....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.