Jump to content

தாண்டி வா பெண்ணே!


Recommended Posts

 
 
 
தாண்டி வா பெண்ணே!
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
E_1530245483.jpeg
 

வேலை முடிந்து விட்டது. ஆனால், நிமிர்ந்து பார்ப்பதற்கே அச்சமாக இருந்தது. எங்கே வாசு வந்து நிற்பானோ என்று இருந்தது. ஆனால், விழிகள் தன்னிச்சையாக இயங்கின. இரண்டு பக்கமும் அடிப்பார்வையாக அவனைத் தேடின.
''வேலை முடிஞ்சுதா கல்பனா?''
அவன்... அவன்... அவனே தான்... வந்து விட்டான்.
''இல்லே... ஆமா... முடியலே,'' என்று குழறினாள்.
''ரிலாக்ஸ் கல்பனா... நோ டென்ஷன் ப்ளீஸ்... நான் வெயிட் பண்றேன்.''
''ஏன்... ஏன் வெயிட் பண்ணணும்?'' என்றாள் மெல்ல.
''சரி... அப்ப கெளம்பட்டுமா?''
''தாராளமா.''
''உன் மனசு சொல்லட்டும்... அப்ப கெளம்பிடறேன்.''
''என்ன சொல்லணும்?''
''வாசு... நீ போ, வேண்டாம் எனக்குன்னு!''
எப்படி சொல்வது? அய்யோ... ஏன் இந்த பாழும் மனசு பாடாய் படுத்துகிறது? குழப்பமும் தயக்கமுமாகவே ஓடி விடுமா வாழ்க்கை... இவற்றிலிருந்து விடுபட்டு, தன்னுணர்வுடன் செயல்படவே முடியாதா?
கண்ணியமான இடைவெளியில், பக்கவாட்டில் வந்து நின்றான் வாசு.
''ப்ரீயா இரு கல்பனா. எப்ப உனக்கு வீட்டுல சொல்லணும்ன்னு தோணுதோ அப்ப சொல்லலாம். அப்பா, அம்மா சம்மதிச்ச பிறகு உனக்கு ஒண்ணும் தயக்கம் இருக்காது தானே, என்னை சரியா நிமிர்ந்து பார்க்க?'' என்றான் முறுவலுடன்.
''வரேன் கல்பனா... இன்னிக்கு, 'ரோட் ஷோ' இருக்கு... சாலையோர துாரிகைகள்... புதுசா வரைஞ்ச பத்து ஓவியங்களை வைக்கிறேன் கண்காட்சியில... முடிஞ்சா வா... நோ கம்பல்ஷன்... வரேன்.''
கிளம்பி விட்டான். கடைசி படியில் இறங்கியபோது, திரும்பிப் பார்த்தான். அவளும் பார்த்தாள். மெல்லிய இதமான மற்றுமொரு புன்னகையுடன், அவன் உருவம் மறைந்தது.
பெருமூச்சுடன் அவள் கணினியை மூடினாள்.

எப்போதும் போல வீடு அமைதியாக இருந்தது. சாய்வு நாற்காலியில் இருந்தபடி, அப்பா, திருவருட்பா வாசித்துக் கொண்டிருந்தார். துளசிக்கு நீர் வார்த்துவிட்டு, வானத்தில் கருடன் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தாள் அம்மா. அலமாரியில் எல்லா பொருட்களும் அதனதன் இடத்தில் இருந்தன. புத்தகங்கள் வரிசை, ராணுவ ஒழுங்குடன் இருந்தன. நேற்று வாசித்த தினசரியின் ஓரம் கூட மடியாமல் அயர்ன் செய்து வைத்த மாதிரி அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. எப்போதும் வரும் இரண்டு காக்கைகள் கூட வீட்டின் கறார் தன்மையை புரிந்து கொண்டவை போல நேரத்திற்கு வந்து ஒரு பருக்கை கூட சிந்தாமல் சாப்பிட்டுச் சென்றன.
அப்பா, ''ஜானகி,'' என்றார்.
''இதோ ரெடி,'' என்று இரண்டாவது காபி கோப்பையுடன் வந்து நின்றாள் அம்மா.
''வந்தானா அந்த பையன்?'' என்றார் அப்பா, காபியை அருந்திவிட்டு.
''இல்லே... வந்துடுவான் வந்துடுவான்,'' அம்மா வாசல் பக்கத்தில் கண் வைத்தபடியே வேகமாக சொன்னாள்.
''டயம் என்ன?''
''பத்தாகலே இன்னும்.''
''எட்டு மணிக்கு சாப்பிட்டே... ஒன்றரை மணி நேரம் கழிச்சு, ப்ளட் கொடுக்கணும்... இப்படி ரெண்டு மணிக்கு மேல ஆச்சுன்னா வால்யூ எப்படி சரியா காட்டும்? வேண்டாம் அந்த லேப்... போன் பண்ணி வரவேண்டாம்ன்னு சொல்லிடு.''
அம்மாவுக்கு அடித்துக் கொண்டது. 'நடராஜா எங்கே இருக்கிறாய்... இந்த கறார் மனிதன் பற்றி தெரியும் தானே உனக்கு? ஒரு நிமிட தாமதம் கூட ஆகாது. பால் ஆறு மணிக்கு, பேப்பர் ஆறரை மணிக்கு என்று வாழ்க்கையையே கடிகாரத்துக்கு ஒப்புக்கொடுத்த மிலிட்டரி மனிதர். படித்து படித்து சொன்னேனே பாவிப் பயலே...'
கல்பனா கிளம்பினாள்...
''இன்னிக்கு என்னம்மா பத்து நிமிஷம் முன்னாடி கிளம்பறே?'' என்று எதிரில் வந்தார் அப்பா.
''சாலையோர துாரிகைகள்னு ஒரு கண்காட்சி தேரடில... பாத்துட்டு போகலாம்ன்னு.''
''சின்ன வயசுல நீ ரொம்ப அழகா வரைவே கல்பனா... அதுவும் யானை யானையா நுாத்துக் கணக்குல வரஞ்சு தள்ளுவே... அதுக்காகவே உன்னை அடிக்கடி பார்த்தசாரதி கோவில், வடக்கு பெருமாள் கோவில்ன்னு கூட்டிகிட்டு போய் யானைகிட்ட விடுவேன்... தந்தம், தும்பிக்கைன்னு அப்படி ஆசையா தொட்டுப் பாப்பே நீ,'' அப்பா கனிவுடன் அவள் முகம் பார்த்து சிரித்தார்.
அப்படியே ஏன் இருக்க முடியவில்லை... விவரிக்க முடியாத உணர்வுகள் மன ஆழத்திலிருந்து பொங்கி சிலிர்த்தன அவளுக்குள். வாழ்வின் ஆனந்தங்கள் அந்த சிறுமியுடன் முடிந்து விட்டனவா? யானை மேல் உக்கார வையேன் அப்பா என்று சொல்ல முடிந்த சிறுமியால், இன்று மனதில் துளிர் விட்டிருக்கிற காதலை ஏன் வெளிப்படுத்த முடியவில்லை? வீழ்த்தப்பட்ட பறவை போல தனிமை தேடியே ஓடுகிறதே மனது...
''சரிம்மா... கிளம்பு... பத்திரமா போய்ட்டு வா.''
''சரிப்பா.''
''ஒரு நிமிஷம் கல்பனா.''
''என்னப்பா?''
''ஏதோ ஒண்ணு சொல்லணும்ன்னு நினைக்கிறியா... கொஞ்ச நாளாவே பேச்சு குறைஞ்சிருக்கும்மா உன்கிட்ட.''
''ம்... தெரியலப்பா... ஏதோ, 'டென்ஷனா' இருக்கு.''
''சரிம்மா... எப்ப தோணுதோ சொல்லு.''
''வரேன்ப்பா.''
பித்தோவன் கதை வாசித்தது நினைவில் இருந்தது. பித்தோவனை காதல் தான் மிக மிக சந்தோஷத்திலும், மிக மிக துக்கத்திலும் ஆழ்த்தியதாம். அவளுக்கும் அதேதானா... வாசுவின் பண்பு, கண்ணியம், ஆகாயம் போல பரந்த உள்ளம்... மெல்ல மெல்ல அது எப்படி காதலாக பரிமாணம் பெற்றது... அவளைப் போன்ற ஒரு வாயில்லாத புழுவுக்கு, சிம்மாசன ஆசைகள் ஏன் வந்தன?
'அய்யோ... வாசு ஏன், என்னை தேடி வந்தாய்... உணர்வுகளில் ஏன் நாதஸ்வரம் ஒலிக்க விட்டாய்... வாழைத் தோரணங்களை ஏன் கட்டினாய்... தாலி மணிகள் கோர்த்த பொன்சரடு கையில் பளபளக்க, ஏன் என்னை நெருங்கி வந்தாய் வாசு!'
அடுத்த நாள் அவள் முடிவு செய்து விட்டாள். போதும் இந்த மனச் சித்திரவதை. கோழையிலும் கோழை அவள். அப்பாவின் ராணுவ முகாமில் வாழ்பவள். அம்மாவின் பின் மறைபவள். கனவுலகில் மட்டுமே சஞ்சரிக்கும் தைரியம் கொண்டவள்.
'இல்லை வாசு... வெரி சாரி... விட்டு விடுங்கள்... உங்கள் அபாரமான குணத்திற்கு வன தேவதை போல ஒருத்தி கிடைப்பாள்... பை பை...' என்று சொல்லி விடலாம்.
சுவாசம் இப்போது சீராக வந்தது.
மாலை -
வீடு வெளிச்சமாக இருந்தது. வாசல் பக்கமும், பால்கனியிலும் இன்று விளக்குகள் எரிந்தன. அப்பாவின் குரல் சத்தமாகவும், உற்சாகமாகவும் கேட்டது தான் அவளுக்கு ஆச்சரியமாகவும், நம்ப முடியாததாகவும் இருந்தது.
தயங்கியபடி உள்ளே போனவள், கண்ட காட்சியை கண்டு திடுக்கிட்டு நின்றாள்.
அப்பாவின் எதிரில் அமர்ந்திருந்தான் வாசு. தெளிவான முகம். எப்போதும் போல தன்னம்பிக்கையான புன்னகை. அமைதியான கண்கள்.
அவளை கண்டதும், காத்திருந்தவனாய் மேலும் புன்னகைத்தான்.
அப்பா, ''வாம்மா கல்பனா...'' என்று சிரித்தார்.
''காபி போட்டிருக்கேன். முகம் அலம்பிக்கோ... முறுக்கும், பாதுஷாவும் கொடு அவருக்கு,'' என்று மலர்ச்சியோடு, கை பிடித்து அழைத்து போனாள் அம்மா.
என்ன நடக்கிறது... அவன் எப்படி இங்கே வந்தான்? ஒரு கணம் உடல் நடுங்கியது.
''கல்பனா... வாம்மா,'' என்று அழைத்தார் அப்பா.
''மன்னிச்சுக்கோம்மா அப்பாவை,'' என்றவர் சட்டென்று கண் கலங்கி விட்டார்.
''அய்யோ என்னப்பா இது... என்ன சொல்றீங்க?''
''வாசு மாதிரி ஒருத்தர் உனக்கு மறு வாழ்க்கை கொடுக்க தயாரா இருக்கார் என்கிறதை வந்து என்கிட்ட சொல்ல முடியாதபடி உன்னை பயத்துல வெச்சிருக்கேனே... அதுக்கு.''
உள்ளம் தவித்தது.
''நான் கண்டிப்பு தான்.... ரொம்ப கறார் தான்... ஆனால், ஈரம் இல்லாதவன் இல்லே... ஊர் உலகமெல்லாம் தேடித் தேடி ஒரு வரனை கொண்டு வந்து, என் செல்ல மகளுக்கு பண்ணி வெச்சேன்... ரெண்டே வருஷத்துல எல்லாம் முடிஞ்சு போச்சு... புற்றுநோய்க்கு அவன் பலியாய்ட்டான்... கேஸ் போடு, நஷ்டஈடு கேளுன்னு எல்லாரும் கோபப்பட்டாங்க... என்ன போட்டு என்ன... நாம ஏமாந்துட்டோம், பொண்ணு வாழ்க்கையை நாமளே அழிச்சுட்டோம்ன்னு உள்ளே அழுது அழுது இன்னும் முரடா, அழுத்தமா ஆயிட்டேன்... உன்கிட்ட இருந்தும், அம்மாகிட்ட இருந்தும் விலகிப் போயிட்டேன்... மன்னிச்சுடும்மா கல்பனா,'' மேலே பேச முடியாமல் அழுதார் அப்பா.
வாசு மெல்ல அவர் கைப்பற்றி சொன்னான், ''இல்லே சார்... நீங்க எந்த தப்பும் செய்யலே... நாம எல்லாரும் தான் சார் இதுக்கு பொறுப்பு... பெண், வாயைத் திறந்து ஆசையை சொல்லக் கூடாது, எந்த உணர்வையும் வெளிப்படுத்தக் கூடாது, சத்தமா சிரிக்கக் கூடாதுன்னு நிறைய மனத்தடைகளை போட்டுட்டோம் சார்... கங்கையம்மா, காவிரியம்மா, மாரியம்மான்னு புனிதத் தன்மையை கொடுத்து, அவளை இயல்பா இருக்க முடியாம ஆக்கிட்டோம்... படிச்சு நல்ல வேலைல உட்கார்ந்தாலும், அவள் ஆணுக்கு அடங்கினவள்தான்னு அவளையே நம்ப வெச்சுட்டோம்... இதை விட மோசடி இந்த உலகத்திலேயே இல்லே... பாவம் கல்பனா, அவளால மட்டும் எப்படி சார் மாத்தி யோசிக்க முடியும்?''
அப்பா, அவனை அன்புடன் பார்த்து, ''முடியும் சார்... உங்களை மாதிரி சிறப்பான இளைஞர்களால அந்த மாற்றத்தை கொண்டு வர முடியும்... ஜீவனுள்ள உயிர் தான் என்று உணர வைக்க முடியும்... இப்ப புரியுது வாசு சார்... தேவை எல்லாம் மனசு தான் சார்...''
கல்பனா பிரமித்துப் போய் நின்றாள்.
தனக்காக பேசும் இரு ஆண்கள். இரு உறவுகள். இதைவிட அற்புதம் வேறில்லை. புதிய கதவு திறந்ததைப் போல இருந்தது அவளுக்கு.
தெற்கிலிருந்து இதமான காற்று வந்து முகத்தை வருடி சிலிர்க்க வைத்ததை போலிருந்தது.

http://www.dinamalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண் எங்க தாண்டினாள்.... வாசுதான் வாசல் தாண்டி வந்து நிக்கிறான்.....! tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
    • சூறையாடப்படுகின்றது வடக்கின் கடல் வளம் – வடபகுதி கடற் றொழிலாளா் இணைய செயலாளா் March 29, 2024     இந்திய மீனவா்களின் அத்துமீறலால் வடபகுதி மீனவா்கள் தமது வாழ்வாதாரங்களை இழந்துள்ளாா்கள். கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான மீன்கள் தினசரி வடக்கிலிருந்து தமிழக மீனவா்களால் அபகரித்துச் செல்லப்படுகின்றது. இது தொடா்பாக வடபகுதி கடற்றொழிலாளா் இணையத்தின் செயலாளா் முகமத் ஆலம் தாயகக் வழங்கிய நோ்காணல்.   கேள்வி – இந்திய மீனவா்களின் அத்துமீறல் காரணமாக வட பகுதி மீனவா்கள் பெரும் பொருளாதார இழப்புக்களை சந்தித்து வருகின்றாா்கள். இந்தப் பிரச்சினை தீா்வின்றித் தொடா்வதற்கு யாா் காரணம்? இலங்கை அரசாங்கமா? இந்திய அரசாங்கமா?   பதில் – இந்திய மீனவா்களின் இந்த ஆக்கிரமிப்பு பல வருடங்களாகத் தொடரும் ஒரு விடயமாக இருக்கின்றது. இதனைக் கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கே இருக்கின்றது. ஏனெனில் இறைமையுள்ள ஒரு நாடென்ற வகையில், மற்றொரு நாட்டின் மீனவா்கள் உள்நுளையும் போது அவா்களைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் கடமை. இலங்கை அரசின் கடற்படை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றாா்கள். அவா்களையும் மீறி இந்திய மீனவா்கள் உள்ளே வருகின்றாா்கள் என்றால், அதற்குப் பொறுப்புக் கூற வேண்டியவா்களாக இலங்கை அரசாங்கம்தான் இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களின் இவ்வாறான அத்துமீறல் காரணமாக வடபகுதி கடற்றொழிலாளா்கள் அண்மைக்காலத்தில் தொழில் ரீதியாக, பொருளாதார ரீதியாக எவ்வாறான பிரச்சினைகளை எதிா்கொள்கின்றாா்கள்? பதில் – இந்திய மீனவா்களின் அத்துமீறல் வடபகுதி மீனவா்களின் ஜீவனோபாயத்திலும், தொழிலிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. அவா்களின் வாழ்வாதார, ஜீவனோபாய மற்றும் அனைத்து வகையான கட்டமைப்புக்களையும் இது பாதித்திருக்கின்றது. அவா்களுடைய பல கோடி ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணங்கள், கடலில் இருக்கின்ற பல கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான வளங்களையும் இவ்வாறு அத்து மீறி வரும் இந்திய மீனவா்கள் அழித்திருக்கின்றாா்கள். அதாவது, இதனால் மிகப் பெரிய இழப்பு இந்த நாட்டுக்கும், மீனவா் சமூகத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது. கேள்வி  – அமைச்சா் டக்ளஸ் தேவானந்த இதற்கான தீா்வு ஒன்றை அண்மையில் முன்வைத்திருந்தாா். அதாவது, கடற் சாரணா் பிரிவு ஒன்றை அமைப்பதன் மூலம் இந்த அத்துமீறலை கட்டுப்படுத்தக்கூடியதாக இருக்கும் என்று தெரிவித்திருந்தாா். இது குறித்து உங்கள் கருத்து என்ன? பதில் – மீனவா்கள் விடயத்தில் அமைச்சா் டக்ளஸ் தேவானந்த நீண்டகாலமாகவே அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றாா் என்பதை காணக்கூடியதாக இருந்துள்ளது. பழைய பஸ்களை கடலில் போட்டு அதன்மூலமாக இந்திய மீனவா்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்துவதற்கு முயன்றாா். அதன் பின்னா் இந்திய மீனவா்களின் அத்துமீறல்கள் குறித்து அவா் அக்கறையாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற போதிலும், மீனவா்களின் ஏனைய விடயங்களில் அவா் போதிய கவனம் செலுத்தவில்லை. உள்ளுரில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழிலை நிறுத்துவது போன்றவற்றில் அவா் கவனம் செலுத்தவில்லை. இந்திய இழுவை மடிப் படகுகள் விடயத்தில் அவா் கவனம் செலுத்துவது புரிகிறது. கடல் சாரணியா் என்ற ஒரு அமைப்பின் மூலமாக இதனைத் தடுப்பது என்பது சாத்தியமற்றது. ஏற்கனவே ஒரு தீா்மானம் இருக்கின்றது. 2015 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை மீனவா் பேச்சுவாா்த்தையில் ஒரு உடன்பாடு எட்டப்பட்டது. இரு தரப்பு மீனவா்களையும் பயன்படுத்தி கடலை ரோந்து செய்வது என்பதுதான் அந்தத் தீா்மானம். இரண்டு நாட்டு மீனவா்களையும், இரண்டு நாட்டு அரசுகளையும் கொண்டுதான் இதனைச் செய்ய வேண்டும் என்றுதான் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயுதம் தாங்கிய கடற்படை ஒன்று இலங்கை அரசிடம் இருக்கும் போது, ஒரு தரப்பை மட்டும் உள்ளடக்கியதாக சாரணா் என்ற அமைப்பை உருவாக்கி வெறும் கையுடன் சென்று செயற்படுவது முடியாது. பாரிய படகுகளில் வரும் இந்திய மீனவா்களை இவா்கள் எவ்வாறு தடுக்கப்போகின்றாா்கள்? இது சாத்தியமாகுமா? இது வெறுமனே இரு தரப்பு மீனவா்களையும் மோத விடும் செயற்பாடாக மட்டுமே முடிந்துவிடும். இரண்டு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் தமிழ் என்ற வகையிலான அந்த உறவு இந்தச் செயற்பாட்டினால் முறிந்து நாசமாகிவிடலாம். இவ்வாறு பல பிரச்சினைகள் இதில் உள்ளது. கேள்வி – எல்லையைத் தாண்டி வருவது சட்டவிரோதம், அவா்வாறு வந்தால் கைது செய்யப்படலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், இந்திய மீனவா்கள் துணிந்து வருவதற்கு காரணம் என்ன? பதில் – தமது நாட்டில் இருக்கக்கூடிய வளங்களை அவா்கள் ஏற்கனவே அழித்துவிட்டாா்கள். அதனால், அவா்களுடைய கடற்பகுதிக்குள் மீனினம் இல்லாத ஒரு நிலை ஏற்பட்டுவிட்டது. இவ்வாறான நிலையில்தான் இலங்கையின் கடற் பகுதிக்குள் இருக்கக்கூடிய மீன்களைப் பிடிப்பதற்காக அவா்கள் இங்கு வருகின்றாா்கள். அத்துடன் இலங்கைக் கடற்பகுதிக்குள் இருக்கக்கூடிய கடல் வளங்களைக் கொண்டு செல்வதும் அவா்களுடைய நோக்கங்களில் ஒன்றாக இருக்கின்றது. கேள்வி – இந்திய மீனவா்களுடைய அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கு உங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில் – இரு தரப்பு மீனவா்களுக்கும் இடையிலான பேச்சுவாா்த்தை மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக் காணமுடியும் என நாம் நம்புகின்றோம். இந்த அத்துமீறலைத் தடுத்து நிறுத்துவதற்கான அழுத்தங்களை இந்தியாவுக்குக் கொடுப்பதற்கான வலு இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை. எனவே, மீனவா்களுக்கு இடையிலான புரிந்துணா்வின் மூலமாகவே இந்தப் பிரச்சினைக்குத் தீா்வைக்காணக்கூடியதாக இருக்கும். தமிழக மீனவா்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள தமிழ் பேசும் மக்கள் – தொப்புள் கொடி உறவுகள் – இந்திய நாட்டின் மீது ஒரு எதிா்பாா்ப்போடு உள்ள மக்கள் அவா்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இங்குள்ள வளங்கள் இங்குள்ள மக்களின் பயன்பாட்டுக்குத் தேவை என்பதையும் அவா்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதனை வெறுமனே அரசியலாக்குவதற்கோ, அல்லது அரசியல் காரணங்களுக்காக இரு நாட்டு மக்களின் உறவுகளையும் முறித்துக்கொள்ள இங்குள்ள – வடபகுதி மக்கள் விரும்பவில்லை. இவ்வாறான நிலையில் தமிழக மீகவா்களும் சிந்திக்க வேண்டும் என்பதே எமது எதிா்பாா்ப்பு. பேச்சுவாா்த்தை என்று வரும்போது இரு தரப்பு மீனவா்களும் விட்டுக்கொடுத்துப் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றாா்கள். ஆனால், தமிழகத் தரப்பில் இருந்துதான் சந்தேகமான பாா்வை தொடா்ந்தும் இருக்கின்றது. ஏனெனில் தொடா்ச்சியான பேச்சுவாா்த்தைகளை நீண் காலமாக நாம் நடத்திவந்திருக்கின்றோம். ஆனால் அடிமடி வலை என்ற தொழில் முறையிலிருந்து மாறுவதற்கு அவா்கள் முன்வைக்கின்ற நிபந்தனைகள் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை. இரண்டு வருடம் தாருங்கள், நான்கு வருடம் தாருங்கள் இந்த தொழிழ் முறையிலிருந்து நாங்கள் மாறிக்கொள்கிறோம் என்ற விடயத்தை முன்வைத்துப் பேசுவதால் இந்தப் பேச்சுவாா்த்தைகளில் தீா்வைக் காண முடியாத ஒரு நிலை தொடா்கிறது. ஆனால், நாம் தமிழக மீனவா்களுடன் பேசுவதற்குத் தயாராக இருக்கின்றோம். ஆனால், அவா்கள் ஒரு உறுதியான நிலையில் இருக்க வேண்டும். இழுவை மடித் தொழிலை நிறுத்துவதற்கு அவா்கள் முதலில் தயாராக வேண்டும். அதன்பின்னா் அவா்களுடன் பேசுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம். அவா்கள் பயன்படுத்துகின்ற தொழில்முறைதான் பிரச்சினையே தவிர எமக்கும் அவா்களுக்கும் இடையில் வேறு பிரச்சினைகள் எதுவும் இல்லை. மீனுக்கு எல்லை இல்லை என்று சொல்வா்கள். மீன் செல்லும் திசையில்தான் மீனவா்களும் செல்கின்றாா்கள். ஆனால், பலாத்காரமாக வரமுடியாது. இந்த வளங்களை எவ்வாறு பங்கிட்டுக்கொள்வது என்பது தொடா்பாகப் பேசுவதற்கு நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். அதனை அரசாங்க மட்டத்தில் பேசி நாங்கள் தீா்த்துக்கொள்ளலாம் முதலில் இந்த இழுவை மடித் தொழிலை நிறுத்த தாம் தயாா் என அவா்கள் அறிவித்தால், வட பகுதி மீனவா்கள் தயாராகவே இருக்கின்றாா்கள் அவா்களுடன் பேசுவதற்கு. https://www.ilakku.org/the-sea-resources-of-the-north-are-being-plundered/
    • எத்தனையோ தேசங்களுக்கு போயிருக்கேன்.. என் தாயக பூமியில் தான் கடற்கரை முள்ளு வேலிக்குள் அடைபட்டுக்கிடக்குது காண்கிறேன். உங்களுக்கு அதன் வலி புரிய வாய்ப்பில்லை. உக்ரைனுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க. அப்பவே விளங்கிட்டுது இப்படி கருத்து வருமுன்னு. கண்டுகொள்ளவதில் பயனில்லை. ஏனெனில்.. எல்லாத்தையும் சகித்துப் போகிற.. கூட்டத்துக்குள் நீங்கள் வந்து கனகாலம். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.