Jump to content

உடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு


Recommended Posts

உடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வு

உடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

உடல் துர்நாற்ற பிரச்னைக்கு தீர்வு காண சிறந்த வழியை தாங்கள் கண்டுபிடித்து விட்டதாக நம்புகின்றனர் நிபுணர்கள்.

தோலில் உள்ள பாக்டீரியா அக்கிளில் இருந்துகொண்டு எப்படி துர்நாற்றத்தை உருவாக்குகிறது என்பது தெரிந்துவிட்டாலே இப்பிரச்னைக்கு தீர்வு கண்டுபிடித்துவிடலாம் என்கின்றனர் அவர்கள்.

யார்க் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களை சேர்ந்த இரு குழுவினர் இந்த ஆய்வில் மூலக்கூறு பகுப்பாய்வின் முதல் படியை தாண்டியுள்ளதாக கூறுகின்றனர்.

இது வியர்வை துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் புதிய தலைமுறை டியோடரன்ட் எனப்படும் துர்நாற்ற நீக்கியை உருவாக்குவதற்கான பாதையாக அமையக் கூடும். இத்தகவல் ’இ லைஃப்’ என்ற இதழில் கூறப்பட்டுள்ளது.

வியர்வை

தோலில் உள்ள இரு வகைச் சுரப்பிகளால் வியர்வை உருவாகிறது.

  • உடற்பயிற்சி செய்யும்போது உடலெங்கும் சுரக்கும் வியர்வை எக்ரின் என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. துர்நாற்றம் அற்ற இந்த வியர்வை உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது.
  • முடி நிறைந்த தோள் பகுதி அக்கிளிலும், பிறப்பு உறுப்பு பகுதிகளிலும் சுரக்கும் வியர்வை அபோக்ரின் என்ற சுரப்பி மூலம் உருவாகிறது. இவ்வியர்வையில் புரதம் உள்ளிட்ட சிக்கல் நிறைந்த பல மூலக்கூறுகள் உள்ளன. இவை மணமற்று இருந்தாலும் பாக்டீரியாக்கள் இவற்றை துர்நாற்றம் கொண்டதாக மாற்றுகின்றன.

டியோடரன்ட்டா அல்லது ஆன்ட்டிபெர்ஸ்பிரன்ட்டா?

துர்நாற்ற நீக்கிகள் என்பவை உண்மையில் துர்நாற்றத்தை மறைக்க உதவுபவை. மேலும் அவை எத்தனால் அல்லது பாக்டீரியா எதிர்ப்பு பொருள் மூலம் பாக்டீரியாவை அழிக்கின்றன.

ஆன்ட்டிபெர்ஸ்பிரன்ட் என்பவை அலுமினியம் குளோரைடு கொண்டவை. இவை தோலில் உள்ள வியர்வையை வெளியிடும் நுண்ணிய துளைகளை அடைத்து வெளியாகும் வியர்வையின் அளவை குறைக்கின்றன.

நவீன கால டியோடரன்ட்டுகளை கை இடுக்கிற்குள் உள்ள அணுகுண்டை போன்றே பார்க்க முடியும் என்கிறார் யார்க் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியரும் கட்டுரையை இணைந்து எழுதியவருமான டாக்டர் கேவின் தாமஸ்.

உடல் துர்நாற்ற பிரச்னைக்கு உருவாகிறது தீர்வுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES

துர்நாற்றத்தை போக்க பல பாக்டீரியாக்களை செயலிழக்க செய்வது அல்லது அழித்தொழிக்கும் பணியை இந்த டியோடரன்ட்டுகள் செய்வதாக கூறுகிறார் கேவின் தாமஸ்.

ஆனால் நமது அக்கிளிலுள்ள பல பாக்டீரியாக்களில் சிலவை மட்டுமே உடல் துர்நாற்றத்திற்கு காரணமாகின்றன என்கிறார் தாமஸ்.

ஸ்டாஃபிலோகாக்கஸ் ஹோமினிஸ் எனப்படும் இவ்வகை பாக்டீரியா வியர்வையிலுள்ள உடல் துர்நாற்றத்துக்கு காரணமான சில கூட்டுப்பொருட்களை கண்டறிந்து அவற்றை விழுங்கும் நகரக்கூடிய புரதத்தை பயன்படுத்துவதாக கூறுகின்றனர் நிபுணர்கள்.

உடல் துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான நுட்பத்தை கண்டறிவதற்கான முதல் படிக்கல்லாக இந்த ஆய்வு முடிவை பயன்படுத்தமுடியும் என்கின்றனர் கேவின் தாமஸும் அவரது உடன் பணிபுரிபவர்களும்.

நகரக்கூடிய புரதங்களை தடுத்து நிறுத்தும் பொருட்களை கொண்ட தெளிப்பான் அல்லது உருளும் தன்மை கொண்ட ஒரு கண்டுபிடிப்பாக அது இருக்கும் என்கின்றனர் அவர்கள். உயிரி தொழில் நுட்பம் மற்றும் உயிரி அறிவியல் ஆராய்ச்சிக்குழு மற்றும் யூனிலீவர் நிறுவனத்தின் தொழிற்கொடை வாயிலாக இதற்கான ஆய்வுகள் நடக்கின்றன.

இதற்கெல்லாம் முன்பாக உடல் துர்நாற்றத்தை தடுக்க சில எளிய வழிகள் உள்ளன.

வியர்வையை தடுத்து நிறுத்துங்கள்

  • தினமும் சுத்தமாக இருத்தல்
  • அக்கிளை பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை உள்ள சோப் உதவியுடன் கழுவுங்கள்
  • டியோடரன்ட் அல்லது ஆன்டிபெர்ஸ்பெர்ஸ்பிரன்ட் பயன்படுத்தவும்
  • வியர்வை விரைவில் காயும் வகையில் அக்கிளிலுள்ள முடிகளை நன்கு மழிக்கவும்.
  • உடலில் நன்கு காற்று படும்படியான பருத்தி ஆடைகளை அணியவும்.
  • தூய்மையான ஆடைகளை அணியவும்.

https://www.bbc.com/tamil/science-44749460

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.