Jump to content

சம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்

_15877_1530939537_vbg.jpg

அலை ஆடும் கடலோரம் நீர் சுமந்த தென்றலும் ஊர் நனைத்து வனம் புகும் காரும் இங்கே எங்கள் தலை துவட்டி செல்லும். காடும் மெல்ல பசுமை தந்திடும் பல பல அதிசயங்கள் நிறைந்த பூமி சம்பூரணம்.

இயற்கை துறைமுக மின்னொளியில் அலை எழுந்து சம்பூர் கரையோரத்தை மெல்ல முத்தமிடும் அழகை காணின் கொள்ளை போகாத உளம் உண்டோ!கடல் கரைபுரண்டு ஆர்பரித்தாலும் அங்காங்கே எழுந்திருக்கும் மலையன்னையால் வேகமும் தணிந்து அலையாத்தி காடுகளால்  அலையும் குளிர்ந்து பாதுகாப்பரண் கொண்ட மகத்தான ஊர் சம்பூர்.

மூதூர் கிழக்கே சகல வளமுங் குன்றாத கிராமம் சம்பூர். இங்கு கடலோடும் மக்களும், விவசாயம் செய்யும் மானிடர்களும் கால்நடை வளர்ப்போரும் என தனித்தமிழ் மக்கள் வாழும் இக்கிராமம் பல தமிழ்க்கிராம மக்களின் பாதுகாப்பரணாகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு அறுபதிற்கும் மேற்பட்ட குளங்களோடு தொடர் காடுகளையும் கொண்டதாக அமைந்தமையினால், மக்கள் அரச பயங்கரவாத செயல்பாடுகளிலிருந்து தம்மை பாதுகாத்து கொண்டனர்.

1990 காலப்பகுதியில் தமிழர் வாழும் பகுதிகளில் சிறப்பாக கிழப்பகுதியில் அரச பயங்கரவாதமும் முஸ்லிம் தீவிரவாதமும் அப்பாவி தமிழர்களை மிக மிக மோசமாக படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என நீண்டு கொண்டே சென்றது தமிழினப்படுகொலைகள். இதற்கான காரணங்களையோ, நீதியையோ எந்த அரசும் சரி, மனிதவுரிமை அமைப்புக்களும் சரி வழங்க முன்வரவில்லை என்பது தமிழருக்கே கிடைத்த சாபம் என்றால் மாற்றுக்கருத்தில்லை.

அரச இயந்திர பயங்கரவாதமும் முஸ்லிம் தீவிரவாதமும் இணைந்து நடத்திய படுகொலையில் மிக முக்கியமான படுகொலை 07.07.1990 - 09.07.1990 எனும் மூன்று நாளில் ஏறத்தாழ நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சம்பூர் மண்ணில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தப்படுகொலையானது திட்டமிடப்பட்டு நிகழ்ததப்பட்டதோடு, ஒரு பழிவாங்கும் படலமாகவும் அமைந்தது எனலாம். அதாவது மூதூர் எனும் சிறுநகரை தமிழீழ இராணுவத்தினர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர். இதை முறியடிக்க பாரிய நடவடிக்கை ஒன்றை சிங்கள அரசு மேற்கொண்ட போது அந்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து, அனைத்து படையினரையும் வெற்றி கொண்டனர். இதற்கு பழி தீர்க்கவே சிங்கள அரசு தன் முழுப்பலத்தையும் பயன்படுத்தி பாரிய படைநகர்வை சம்பூரை நோக்கி நகர்த்தி அப்பாவி தமிழர்களை படுகொலை செய்தது.

சம்பூர் படுகொலையின் போது பாடசாலை ஆசிரியர், பன்னிரண்டு வயது மாணவன் உட்பட பல மாணவர்கள், சேர்மன் ,பொலிஸ் உத்தியோகத்தர், பாலூட்டும் தாய் என பலரும் படுகொலை செய்யப்பட்டனர்.

சிங்கள அரசின் தமிழின அழிப்பானது தற்போதும் தொடர்நதவண்ணமே இருப்பதே பெருங் கொடுமை எனலாம். சம்பூரில் படுகொலையான மக்களை நினைவு கூர்ந்து ஒர் நடுகல் நட்டு வழிபடக்கூட அனுமதி மறுக்கப்படுவதே மிக மிக வேனை தரும் விடயமாகும்.

சம்பூர் படுகொலை போல் எத்தனையோ அப்பாவி தமிழர் படுகொலைகள் மூடி மறைக்கப்பட்டவண்ணம் உள்ளன. இவற்றை வெளிக்கொணர்ந்து தகுந்த நீதியை பெற்றுக் கொடுக்கவேண்டியது ஊடகங்களின் தலையாய கடமையாகும்.

எனவே படிகொலையான மக்களுக்கான நீதி கிடைக்கவும், அவர்களை நினைத்து நடுகல் நட்டு வழிபடவும் சுமந்திர காற்றை சுவாசிக்கவும் உலக மனிதாபிமான அரசுகள் உதவ்வேண்டும் என்ற மிகப்பெரிய ஆற்றுப்படுத்தை எதிர்தோக்கியவாறு இன்றைய தமிழர் சமூகம் காத்திருக்கின்றது என்பதே மறுக்கப்படாத உண்மையாகும்.

ஞா. ரேணுகாசன்

_____________________________________________________________________

நடுகல் வழிபாடு ஒன்றே துயரத்தோடு வாழும் தமிழுருக்கு சிறந்த ஆற்றுப்படுத்தல் *********************************************
சங்ககால இலக்கியங்கள் யாவும் காதல், வீரம் மற்றும் கொடை பற்றி சிறப்பாக பாடியிருந்த போதும், வீரத்திற்காக பலதரப்பட்ட பாக்கள் பாடப்பட்டன. அதனடிப்படையில் களத்தில் வீரமரணம் தழுவிய வீரனின் நினைவாக ஒர் புனிதமான இடத்தில் ஒரு கல்லை நட்டு, அந்த மாவீரனை நினைத்துருகுவதோடு, படையலிட்டு வணங்கியதாகவும் அக்கால இலக்கியங்கள் விளக்குகின்றன. அகநானூறு, புறநானூறு என்பன இவ்வழிபாட்டை சிறப்பித்து பின்வருமாறு விளக்குகின்றது.

.  “நடுகற் பீலி சூட்டித் துடிப்படுத்துத்  தோப்பிக் கள்ளொடு துரூஉப்பலி கொடுக்கும்”  (அக நானூறு – 35)     

“நெடு நிலை நடுகல் நாட்பலிக் கூட்டும்  சுரனிடை விலங்கிய மரனோங்கு இயவு”  (அக நானூறு – 289)     

“மரல்வகுத்துத் தொடுத்த செம்பூங் கண்ணியொடு  அணிமயிற் பீலிசூட்டிப் பெயர் பொறித்து  இனி நட்டனரே கல்லும்”  (புற நானூறு – 264)  

இதன் தொடர்ச்சியாகவே ஈழவிடுதலை போராட்டத்திலும் வீரமரணம் அடைந்த மாவீர்களுக்கு நடுகல் நட்டு வழிபட்டமை குறிப்பிடத்தக்கது.  

சங்ககால இலக்கியங்கள் வீர புருசர்களை சிறப்பித்து பாடினாலும், ஈழத்தில் சிங்க அரச பயங்கரவாத்த்தால் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை நினைத்து நினைவுக்கல் நட்டு வழிபடுதலும் எம் உறவுகளின் பிரிவால் வாடும் மக்களை ஆற்றுப்படுத்தலும் ஒருவகை வழிபாடே எனலாம்.

சம்பூர் பெருநிலப்பரப்பில் 07.07.1990 இல் நடந்தேறிய அப்பாவி தமிழர்களின் படுகொலையை எண்ணிகையில் இன்றும் அந்த மரணவலி நெஞ்சத்தை நசுக்குகிறது. ஒன்றுமறியாத மக்கள், தாம் எதற்காக கொல்லப்படுகிறோம் என அறியாத மக்களின் அவலச்சாவுக்கு எங்கு போனாலும் நீதி இல்லாது நீண்டு செல்லும் துயரம் மிக கொடியது.

சம்பூர் பெருநிலப்பரப்பு பல கிராம மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த தாய்நிலம். இங்கு ஒருவேளை உணவுண்டாலும் நிம்மதியான வாழ்வை சுவாசித்த மக்களுக்கு இடி வீழ்ந்தது போல் கொடும் இடுக்கன் படை கொண்டு பலியெடுக்க வந்தான். தடுத்திட முடியாத மக்கள் காடுகளில் தஞ்சம் புகுந்தனர்.

மூன்று நாள் சாப்பாடு தண்ணீரின்றிய அவல வாழ்வில், அவலமிகு சாவும் எம்மை சூழ்ந்தே நசுக்கியது. சிங்கள பௌத்த இராணுவத்தோடு முஸ்லீம் தீவிரவாத இயக்கமும் இணைந்து அப்பாவி தமிழர்களை படுகொலை செய்தனர். இது வரைக்கும் அதற்கான நீதி எம்மக்களுக்கு கிடைக்கவில்லை.

உறவுகளை இழந்த மக்கள் இந்நாளில் படும்வேதனை சொல்லித்தீராத வலி, அவர்களை ஆற்றுப்படுத்த யாருமில்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலை, இந்த உறவுகள் இன்றும் படுகொலை செய்யப்பட்ட தம் உறவுகளை ஏங்கி தேம்பி அழுதவண்ணமே உள்ளனர். இவர்களை ஆற்றுப்படுத்த ஓர் நினைவுத்தூபி அமைத்து சுதந்திரமாக விளக்கேற்றி வழிபட வழிசமைத்தல் தமிழர்களாகிய எமது கடமையல்லவா!

ஆயுதம் ஏந்தாத, எந்தவொரு புரட்சியிலும் ஈடுபடாத பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களை தென்தமிழீழத்தில் அரச பயங்கரவாதமும், முஸ்லீம் தீவிரவாதமும் படுகொலை செய்ததும் 1990 காலப்பகுதிகளிலே எனலாம். இதுவரை 200 க்கும் மேற்பட்ட படுகொலைகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

சிங்கள அரசாலும், அவர்களோடு இயங்கிய முஸ்லீம் தீவிரவாத அமைப்பாலும் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டோர் எண்ணிக்கையை சரியாக கணக்கிட முடியாது, அவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றி எந்த ஆவணமுமின்றி தமிழ் தாய் உறவுகள் 500 ஆவது நாளையும் தாண்டி போராடுகின்றார்கள். ஆனால் ஒன்று மட்டும் உண்மை இந்த சிங்கள பௌத்த அரசு இவர்களை பாதுகாப்பாக வைத்திருக்காது என்பது கசப்பான உண்மை.

அண்மையில் மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர் மனித புதைகுழிகளில் துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்ட உடல்கூறுகள் பேசினால் மட்டுமே! காணாமல் ஆக்கப்பட்டோரின் உண்மை நிலை புரியும், இதைப்போல் தமிழர் வாழ்ந்த பகுதிகளில் பல மனித புதைகுழிகள் காணப்படலாம், இவற்றை மிக நுட்பமான முறையில் அகழ்வாராய்ச்சி செய்திட தமிழர் தரப்பிலும், அவர்களின் அரசியியலிலும் பலமற்ற தன்மையின் காரணமாகவே தமிழினம் இன்னமும் துன்பத்தில் வாழ்கின்றது.

உண்மையில் படுகொலை செய்யப்பட்டவர்கள் மீண்டும் வரப்போவதில்லை, அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்களை நினைத்து மனமாற அழுது, மனதில் குடிகொண்ட துன்பம் நீங்க தொழுதாலே! தமிழினம் சற்று அமைதிகொள்ளும். இன்றைய காலத்தில் தமிழின மக்களுக்கு உரிய முறையிலான ஆற்றுப்படுத்தல் இல்லாமலேயே! பல இன்னல்களுக்கும் தற்கொலைகளுக்கும் காரணமாக அமைந்துள்ளது.

தமிழின மக்கள் சொல்லொணா துயரை அனுபவித்த வண்ணமே உள்ளனர், அவற்றுக்கான தகுந்த நிவாரணத்தை வழங்கும் தகுதியில் சிங்கள பௌத்த அரசோ! அல்லது சர்வதேச அரசுகளோ! அல்லது தமிழர் தரப்பு அரசியியலோ! இல்லாமல் இருப்பது மிகுந்த கவலை தரும் விடயமாகும்.

சங்ககால தமிழர் மரபானது ஆற்றுப்படுத்தலை திறம்பட நிகழ்த்தி இச்சமூகத்தினரை ஆரோக்கியமான பாதையில் கொண்டு சென்றுள்ளது என்பது அக்கால பாக்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. எனவே நாமும் எமது உறவுகளை இழந்து வாழும் உறவுகளுக்காக ஆற்றுப்படுத்தல் எனும் புனிதமான செயலை முன்னெடுத்து நடுகல் வழிபாடு என்ற தொன்மை வழிபாட்டை திறம்பட செய்தலே எமது உறவுகளுக்கான ஆறுதலாக அமையும்.

 

http://www.battinaatham.net/description.php?art=15877

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் தொடர்பில் வெளியான தகவல்கள்! 16 APR, 2024 | 11:03 AM   இலங்கையின் தென் கடற்பரப்பில் கடந்த 12ஆம் திகதி  இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட  சுமார் 380 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள், துபாயில் உள்ள இலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரால் அனுப்பப்பட்டமை  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட புலனாய்வு நடவடிக்கையின்போது இலங்கை கடலோரக் காவல்படையின் ‘சமுத்ரரக்க்ஷா’ என்ற கப்பலினால் 133 கடல் மைல் தொலைவில் ஆழ்கடலில் இந்த ஹெரோயின் மற்றும் ஐஸ்  கைப்பற்றப்பட்டுள்ளன.   கைப்பற்றப்பட்ட போதைப்பொருளில் 179 கிலோ 906 கிராம் ஐஸ் மற்றும் 83 கிலோ 582 கிராம் ஹெரோயின் அடங்குகின்றன. அத்துடன், இந்தப் போதைப்பொருளைக் கொண்டு வந்த மீன்பிடிப் படகு கைப்பற்றப்பட்டதுடன் 6 பேரையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். https://www.virakesari.lk/article/181204
    • Published By: DIGITAL DESK 3 16 APR, 2024 | 10:39 AM   பல முக்கிய நீர் மற்றும் எரிசக்தி திட்டங்களை திறந்து வைப்பதற்காக இம் மாதம் 24 ஆம் திகதி ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டயரபா மற்றும் புஹுல்பொல ஆகிய இரண்டு அணைக்கட்டுகளை உள்ளடக்கிய உமா ஓயா பல்நோக்கு திட்டம் மற்றும் 25 கிலோ மீற்றர் நீர்ப்பாசன  சுரங்கப்பாதையும்  ஜனாதிபதி திறந்து வைக்கவுள்ளார்.  இந்தத் திட்டத்தில் தலா 60 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களும் நிர்மாணிக்கபட்டுள்ளன. உமா ஓயா பல்நோக்கு திட்டம் இலங்கையில் ஈரானிய நிறுவனங்களின் மிகப்பெரிய தொழில்நுட்ப மற்றும் பொறியியல் சேவை திட்டங்களில்  ஒன்றாக கருதப்படுகிறது. இந்த திட்டம் இலங்கையின் தென்கிழக்கில் கொழும்பு நகரிலிருந்து 200 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. 5,000 ஏக்கர் விவசாய நிலங்களுக்கான நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவதும், 145 மில்லியன் கனமீற்றர் நீரினை நீரினை கொண்டு செல்லல், ஒரு வருடத்தில் 290 மெகாவோட்  மின்சாரத்தை உற்பத்தி செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும். https://www.virakesari.lk/article/181192
    • கல்முனை வடக்கு பிரதேச செயலகம் : பிரதமர் தினேஷுக்கு கஜேந்திரன் எம்.பி. கடிதம் 15 APR, 2024 | 04:09 PM ஆர்.ராம் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் எம்.பி. கடிதமொன்றை அனுப்பியுள்ளார். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகத்தில் முறைகேடுகளால் பொது மக்கள் முகங்கொடுக்கும் நீண்டகாலப் பிரச்சினைகளை கவனத்துக்குக் கொண்டு வருவதற்காகவும் அக்கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மூன்று தசாப்தங்களாக கல்முனை வடக்கு தமிழ் சமூகம் தீர்க்கப்படாத சவால்களை எதிர்கொண்டுள்ளது. இது அவர்களின் அத்தியாவசிய அரசாங்க சேவைகளைப் பெறுவதற்கான திறனை கணிசமாகத் தடுக்கிறது. இதனால் அவர்களின் அன்றாட வாழ்க்கையில் நெருக்கடியான நிலைமைகளை எதிர்கொள்கின்றனர். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பகுதி மக்கள் பல தசாப்தங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.  பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்களும் அவ்வாறே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றோம். இருந்தும் கணக்காளர் நியமனம் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. காலங்காலமாக எமது கோரிக்கைகள் மதிக்கப்படாத நிலையில், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரமிறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப காரியாலயமாக தரம் தாழ்த்துவதற்கான நோக்கத்தினாலும் கல்முனை தெற்கு பிரதேச செயலாளரின் ஜனநாயக விரோத மற்றும் சட்ட விரோதமான செயற்பாடுகளினாலும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் முறுகல் நிலை உருவாகியுள்ளது. கல்முனை தெற்கு பிரதேச செயலகச் செயற்பாடுகளுக்கு உரிய அதிகாரிகள் அனுசரணையாக செயற்படுவதால் தமிழ் சமூகம் மத்தியில் அச்சமும் பதற்றமும் அதிகரித்துள்ளது. கல்முனை வடக்கு பிரதேசத்தில் உள்ள 29 கிராம சேவையாளர் பிரிவுகளில் வசிக்கும் தமிழ் மக்கள், கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு கோரியும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமிறக்குவதை நிறுத்துமாறு கோரியும் தொடர்ச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமைதியான போராட்டத்தின் மூலம் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவர்கள் தொடர்ந்து முயற்சித்து வந்த போதிலும் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அவர்கள் 20 நாட்களைக் கடந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில், எந்தவொரு அரச அதிகாரியும் அங்கு செல்லவில்லை அல்லது அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நிலைமையை சீர்செய்ய உடனடியாக தாங்கள் தலையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் வினைத்திறனான அரச சேவைகளுக்கான அணுகல் இல்லாமை, முறையான நிர்வாக ஆதரவைப் பெறுவதற்கான அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதைப் பிரதிபலிக்கிறது. இவ்விடயத்தில் தாங்கள் உடனடி கவனம் செலுத்துமாறும் கல்முனை வடக்கில் வசிப்பவர்களின் குறைகளுக்கு முன்னுரிமை வழங்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன். எங்கள் சமூகத்தின் நல்வாழ்வையும் செழிப்பையும் உறுதி செய்வதில் உங்கள் தலையீடு முக்கியமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181136
    • Published By: DIGITAL DESK 7   15 APR, 2024 | 04:06 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளரை களமிறக்குவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் தவத்திரு வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் யாழ்ப்பாணம் சிவகுரு ஆதீன தவத்திரு வேலன் சுவாமிகளை தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளர் சி.வி.விக்னேஸ்வரன் கோரியுள்ளார். எனினும் அரசியல் செயற்பாடுகளில் கட்சி சார்ந்து தான் செயற்படுவதற்கு விரும்பவில்லை என்று வேலன் சுவாமிகள் பதிலளித்துள்ளார். இருப்பினும் அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டிணைந்து பொதுவேட்பாளர் விடயத்தில் செயற்படுவதற்குரிய சாத்தியமான நிலைமைகள் இருப்பதால் தாங்கள்(வேலன் சுவாமிகள்) கட்சி சார்ந்த நபாராக அடையாளப்படுத்த மாட்டீர்கள் என்று சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து குறித்த விடயம் சம்பந்தமாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு சிலநாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வேலன் சுவாமிகளை வேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன்,  விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு கால அவகாசததினை கோரியுள்ளார். https://www.virakesari.lk/article/181134
    • பகுதி 1 Spelling NIST 2024 competition இற்கு 200 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களின் திறமையை பாராட்டி சுழிபுரம் பிரதேசசபை மண்டபத்தில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் யாழ் மருத்துவபீட துறைத் தலைவர் பேராசிரியர் Dr R.Surenthirakumaran, Victoria college Vice Principal B.Ullasanan and Meikandan Mahavidyalaya Principal V.Vimalan ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தது மாணவர்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுத்துள்ளது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவு வழங்கியவர்களுக்கும் VK NIST நன்றியையும் புது வருட வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.