Jump to content

சுவையான மீன் கறி.. (குழம்பு)


Recommended Posts

தென்னிந்திய மீன் கறி

 
 

sl526864.jpg

என்னென்ன தேவை?

மீன் - 500 கிராம்,
கத்தரிக்காய் - 100 கிராம்,
முருங்கைக்காய் - 1,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
புளிக்கரைசல் - 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
நல்லெண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
சோம்பு - 1 டீஸ்பூன்,
மிளகு - 1/2 டீஸ்பூன்,
தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
தக்காளி - 2,
கொத்தமல்லித்தழை - சிறிது.

தாளிக்க...

நறுக்கிய சின்ன வெங்காயம் - 10,
பூண்டு பல் - 5,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
சோம்பு - 1/4 டீஸ்பூன்,
கடுகு - 1/4 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
நறுக்கிய தக்காளி - 1.

 

எப்படிச் செய்வது?

மீனை நன்றாக கழுவி மஞ்சள் தூள், உப்பு, புளிக்கரைசலை சேர்த்து பிரட்டி வைக்கவும் கடாயில் சிறிது நல் லெண்ணெயை சேர்த்து வெங்காயம், தக்காளியை சேர்த்து வதக்கவும். இத்துடன் தேங்காய்த்துருவல் மற்றும் மசாலாக்களை சேர்த்து நன்கு வதக்கி, ஆறியதும் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் மீதியுள்ள நல்லெண்ணெயை ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, சின்ன வெங்காயத்தை வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும். பின்பு கத்தரிக்காய், முருங்கைக்காயை சேர்த்து வதக்கவும். காய் வெந்ததும் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கி, எண்ணெய் பிரிந்து வரும்போது புளிக்கரைசல் மற்றும் சுடு தண்ணீரை சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் மீன் துண்டுகளை சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதித்ததும், கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

மல்வானி ஃபிஷ் கறி

 

sl526928.jpg

என்னென்ன தேவை?

மீன் - 1/2 கிலோ,
துருவிய தேங்காய் - 2 கப்,
மஞ்சள் தூள் - 1½ ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 8,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - 2 டீஸ்பூன்,
பூண்டு பல் - 6,
வெங்காயம் - 1,
கோகம் புளி - 8 துண்டுகள்,
உப்பு, தண்ணீர் - தேவையான அளவு.

 

எப்படிச் செய்வது?

மீனை சுத்தம் செய்து 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 20 நிமிடம் மாரினேட் செய்யவும். தேங்காய்த்துருவல், 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், காய்ந்தமிளகாய், பாதி வெங்காயம், கொத்தமல்லித்தழை, பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மிக்சியில் நைசாக அரைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து மீதியுள்ள பாதி வெங்காயத்தை நறுக்கி நன்கு வதக்கவும். இத்துடன் அரைத்த விழுது, புளி, உப்பு சேர்த்து நன்கு வதக்கி கொதிக்க விடவும். கொதித்ததும் மீன் துண்டுகளை போட்டு மூடி வைத்து வேகவைக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஏதாவது விசேஷமா ஒரே மீன்குழம்பாய்க் கிடக்கு.....! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, suvy said:

இன்று ஏதாவது விசேஷமா ஒரே மீன்குழம்பாய்க் கிடக்கு.....! ?

துள்ளி விளையாடும் மீன் குழம்பாகிறது வழமைதானே அண்ண:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தனிக்காட்டு ராஜா said:

துள்ளி விளையாடும் மீன் குழம்பாகிறது வழமைதானே அண்ண:)

உங்கட ஊர்ல மீன் துள்ளி விளையாடும், பாடும். இங்கு துள்ளி விழுந்தால் நேரே சட்டிக்குள்தான்.....! ?

Image associée Résultat de recherche d'images pour "fish fry in the pot moving gif"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/8/2018 at 12:34 PM, suvy said:

உங்கட ஊர்ல மீன் துள்ளி விளையாடும், பாடும். இங்கு துள்ளி விழுந்தால் நேரே சட்டிக்குள்தான்.....! ?

 

இன்னும் ஒன்று இருக்கு இங்கே மீன்கள் பாடும் :)

Link to comment
Share on other sites

ஒடிசா மீன் கறி

 

sl52698870.jpg

என்னென்ன தேவை?

எலுமிச்சைச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
முள் மற்றும் தோல் நீக்கப்பட்ட மீன் துண்டுகள் - 8,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
காய்ந்தமிளகாய் - 4,
கடுகு பேஸ்ட் - 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்,
பச்சைமிளகாய் - 4,
தனியாத்தூள் - 2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பிரிஞ்சி இலை - 1,
நறுக்கிய வெங்காயம் - 2 கப்,
இஞ்சி விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
வெங்காய விதை - 1 டீஸ்பூன்.

 

எப்படிச் செய்வது?

மீன் துண்டு களை நன்றாக கழுவி உப்பு, எலுமிச்சைச்சாறு, மஞ்சள் தூள் சேர்த்து 30 நிமிடம் ஊறவைக்கவும். கடாயில் கடுகு எண்ணெயை சேர்த்து மீனை இரண்டு பக்கம் நன்கு பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். மீதியுள்ள எண்ணெயை சேர்த்து கடுகு, வெங்காய விதை, காய்ந்தமிளகாய், பிரிஞ்சி இலை போட்டு வதக்கி, இஞ்சி, பூண்டு விழுதுகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

பின்பு வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, கடுகு பேஸ்ட், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்கவும். பிறகு தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதி வந்ததும், வறுத்த மீன் துண்டுகள், பச்சைமிளகாய் சேர்த்து மீன் மசாலாவுடன் சேர்ந்து வரும்வரை நன்றாக வதக்கி கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

http://www.dinakaran.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடுகு, கடுகு எண்ணெய், கடுகு பேஸ்ட் ஒரே கடுகாய் இருக்கு ....மீனிலும் கடுகு தாராளமாய்....கடுசா மீன்கறி என்று நாமமிட்டாலும் பொருத்தமாய் இருக்கும்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

கடுகு, கடுகு எண்ணெய், கடுகு பேஸ்ட் ஒரே கடுகாய் இருக்கு ....மீனிலும் கடுகு தாராளமாய்....கடுசா மீன்கறி என்று நாமமிட்டாலும் பொருத்தமாய் இருக்கும்.....!  tw_blush:

கடுகு, கடுகு... ? என்று சொல்லி,  கடுப்பேத்தீங்கிறீங்க, பாஸ். ? ? ?

Link to comment
Share on other sites

மீன் குழம்பு //fish stew

 
 
IMG-20180307-WA0015.jpg

சிக்கன் ஸ்டூ போல் தான் மீன் ஸ்டூவும் . பொதுவாக கேரளத்தில் தேங்காய்ப்பால் மட்டும் சேர்ப்பாங்க, இது தவிர நான் ஒரு பொருளும் சேர்த்து செய்தேன் செமை டேஸ்ட்.ஆப்பம்,இடியாப்பத்திற்கு சிக்கன், மட்டன் குழம்பு செய்வோம், மாறுதலாக இதையும் செய்து அசத்தலாம்.


தேவையான பொருட்கள்;
முள்ளில்லாத மீன் துண்டுகள் - 300 கிராம்


மீனில் பிரட்டி வைக்க:-
மிளகாய்த்தூள் - 1/2 -1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் -1/4 தேக்கரண்டி
சீரகத்தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை ஜூஸ் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு.
எண்ணெய் -2 மேஜைக்கரண்டி (பொரிக்க)


இனி தாளிக்க:-
தேங்காய் எண்ணெய் - 2  மேஜைக்கரண்டி
கடுகு - 1 /2 தேக்கரண்டி
நறுக்கிய வெங்காயம் - 100 கிராம் (பெரியது அல்லது சின்ன வெங்காயம்)
கீறிய பச்சை மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
நறுக்கிய பூண்டு பற்கள் - 5
அதே அளவு நறுக்கிய இஞ்சி துண்டு
கருவேப்பிலை 2இணுக்கு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி(விரும்னினால்)
மல்லித்தூள் - 1/2 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
தக்காளி  சிறியது -1
எலுமிச்சை பழம் - பாதி.
உப்பு சுவைக்கு.
தேங்காய்ப்பால் -மூன்றாம், இரண்டாம் தடவை எடுத்தது 2 கப்
முதல் கெட்டி பால் 1 கப்
இது தவிர ஃப்ரெஷ் கிரீம் - 2 -3 மேஜைக்கரண்டி (நான் சேர்த்தது, ஹோட்டலில் ஒரு முறை சாப்பிட்ட பொழுது கீரீம் சுவை தெரிந்தது, அதனால் நானும் சேர்த்தேன், அதன் பின்பு ஸ்டூ கெட்டியாக ஆனது)


 செய்முறை:

 
IMAG2174.jpg

 


மீனை வாங்கி துண்டு போட்டு நன்கு அலசி வைக்கவும்.

 
 
IMAG2177.jpg
 
 
 
 மேற்கூறிய படி பொருட்கள் சேர்த்து மீனை அரை மணி நேரம் பிரட்டி வைக்கவும்.
IMAG2178.jpg
 
 
 
 பின்பு பக்குவமாக பொரித்து எண்ணெய் வடித்து எடுத்து வைக்கவும்.
IMAG2180.jpg
 
 

 கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு கருவேப்பிலை பொரியவிட்டு நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு ,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
மஞ்சள் தூள், மல்லித்தூள் சேர்க்கவும், நன்கு வதக்கவும்.
இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப்பால் விட்டு, உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு கொதித்த பின்பு பொரித்த மீன் சேர்க்கவும்.

 

 

IMAG2183.jpg
 
IMAG2184.jpg
 
 
நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.சூப்பராக இருக்கும் எடுத்துச் சாப்பிட. நன்கு கொதிக்க விடவும்.
IMAG2185.jpg
 
 
 மீன் தேங்காய்ப்பால் சேர்த்த பொருட்களோடு சேர்த்து நன்கு கொதி வரட்டும்.மிளகுத்தூள் காரம் தேவைப்பட்டால் சேர்க்கவும்.
IMAG2186.jpg
 
 
 
 
 இறுதியாக முதல் தேங்காய்ப்பால் சேர்க்கவும். நுரை கூடும்.
IMAG2189.jpg
 
 
 
 ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து விடவும். ஒரு கொதி வரவும் அடுப்பை அணைக்கவும்.பாதி எலுமிச்சைப் பிழிந்து அடுப்பை அணைக்கவும்.மேலே
நறுக்கிய கருவேப்பிலை சேர்க்கலாம்.
IMG-20180307-WA0015.jpg
 
 
சுவையாக சூப்பராக தயாராகிவிட்டது. ஆப்பம், இடியாப்பம், வெறுஞ்சோறு உடன் பரிமாறலாம்.
IMAG2193.jpg
 
 
பரிமாறி அசத்துங்க.
IMG-20180307-WA0017.jpg

http://asiyaomar.blogspot.com/

Link to comment
Share on other sites

தோசைக்கு அருமையான வஞ்சிரம் மீன் கிரேவி

 
அ-அ+

தோசை, இட்லி, சூடான சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வஞ்சிரம் மீன் கிரேவி. இன்று இந்த கிரேவியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

 
 
 
 
தோசைக்கு அருமையான வஞ்சிரம் மீன் கிரேவி
 
தேவையான பொருட்கள் :

வஞ்சிரம் மீன் - 500 கிராம்,
சின்ன வெங்காயம் - 200 கிராம்,  
நாட்டுத் தக்காளி - 200 கிராம்,
பெரிய வெங்காயம்100 கிராம்,
பூண்டு - 1,
புளி எலுமிச்சை அளவு,
காய்ந்த மிளகாய் - 4,
கறிவேப்பிலை - சிறிதளவு,
நல்லெண்ணெய் - 100 மி.லி,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு, சோம்பு, மஞ்சள் தூள் - தேவையான அளவு,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
தேங்காய் - பாதி

201807191514552734_1_vanjaram-fish-gravy._L_styvpf.jpg

செய்முறை :

தக்காளி, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

புளியை கரைத்து கொள்ளவும்.

வஞ்சிரம் மீனை நன்றாக கழுவி வைக்கவும்.

பெரிய வெங்காயத்தை விழுதாக அரைத்து கொள்ளவும்.

தேங்காயை விழுதாக அரைத்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, வெந்தயத்தை போட்டு பொரிந்ததும், கடுகு, சோம்பு மற்றும் வெங்காய விழுதைச் சேர்த்து வதக்கவும்.

அடுத்து அதில் சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

பிறகு, மிளகாய்த் தூள், தனியா துள், மஞ்சள் தூள், நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.

தக்காளி நன்றாக வதங்கி ஓரங்களில் எண்ணெய் பிரிந்து வரும் போது அரை டம்ளர் தண்ணீர்விட்டு வதக்கவும்.

அடுத்து புளியைக் கரைத்து ஊற்றி, கலவை கிரேவியானதும், தேங்காயை அரைத்துச் சேர்க்கவும்.

அடுத்து அதில் கழுவிய மீன் துண்டுகளை போட்டு, ஐந்து நிமிடங்கள் கொதிக்கவிடவும். கிரேவி திக்கான பதம் வந்தவுடன் இறக்கவும்.

பரிமாறுவதற்கு முன், கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்துப் பறிமாறவும்.

https://www.maalaimalar.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை இப்பதான் சாமி கும்பிட்டுட்டு வாறன்.....அருமையான டிஷ் தயாராகுது. பேஷ் ....பேஷ்.....!  tw_blush:

இப்ப ஒரு பருப்போ ,பயித்தங்காயோ போடவேணும் சொல்லிப்போட்டன்......!  ? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, suvy said:

வெள்ளிக்கிழமை இப்பதான் சாமி கும்பிட்டுட்டு வாறன்.....அருமையான டிஷ் தயாராகுது. பேஷ் ....பேஷ்.....!  tw_blush:

இப்ப ஒரு பருப்போ ,பயித்தங்காயோ போடவேணும் சொல்லிப்போட்டன்......!  ? 

வெள்ளிகிழமையெண்டால் சாம்பாரோடையும் சாம்பிடலாமெல்லோ...பருப்பு பயித்தங்காய் தனித்தனியாய் வேணுமெண்டு அடம்பிடிக்கப்படாது கண்டியளோ....tw_blush:

 

எவ்வளவு பக்குவமா சொல்லிதாறா பாருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

22 hours ago, குமாரசாமி said:

எவ்வளவு பக்குவமா சொல்லிதாறா பாருங்கோ...

பக்குவமாகத்தான் சொல்லித்தாறா  ஆனாலும் குமாரசாமி ஒரு சின்னப் பிரச்சினை. புளி விட்டால் காய்கறி வேகுமா என்ற கேள்விக்கு அவர் பதில் ஏன் தராமல் போனார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kavi arunasalam said:

 

பக்குவமாகத்தான் சொல்லித்தாறா  ஆனாலும் குமாரசாமி ஒரு சின்னப் பிரச்சினை. புளி விட்டால் காய்கறி வேகுமா என்ற கேள்விக்கு அவர் பதில் ஏன் தராமல் போனார்?

வெந்துடும் எண்டு சொல்லுறாங்...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தெரிந்த வரையில் அளவான நீரில் காய்கறி வெந்தபின் புளிக்கரைசல் விட வேண்டும். பின் அது நன்றாக கொதித்து பச்சை வாசம் போனபின் மீன் துண்டுகளைப் போட்டு கொதிக்க விட வேண்டும். மீன் விரைவில் வெந்து விடும்......!   ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • புதிய ஆடுகளம் அமைத்து தானே அதில் சுருண்டு பலியாகிவிட்டதா குஜராத் அணி? ஏன் இந்த மோசமான தோல்வி? பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4வது ஓவர் தொடக்கத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி, 169 ரன்கள் வரை சேர்க்கும் என்று கணினியின் முடிவுகள் கணிக்கப்பட்டது. இது 6-வது ஓவரில் திடீரெனக் குறைந்து 120 ரன்களாகக் குறைந்தது. முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனிலேயே குறைந்தபட்ச ஸ்கோருக்கு ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தது. 2022ம் ஆண்டு இந்த ஐபிஎல் தொடருக்குள் வந்தபின் குஜராத் டைட்டன்ஸ் அணி சேர்த்த மிகக்குறைந்த ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 125 ரன்களில் சுருண்டிருந்தது குஜராத் அணி. அதைவிட இந்த ஆட்டத்தில் மோசமாகும். ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 32-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி கேபிடல்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியால் டெல்லி கேபிடல்ஸ் அணி 7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருந்தது, 6-வது இடத்துக்கு முன்னேறியது. குறைந்த ஓவரில் வெற்றி வெற்றி பெற்றதால் நிகர ரன்ரேட்டும் மைனஸ் 0.975 லிருந்து மைனஸ் 0.074 ஆக முன்னேறிவிட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES நிகர ரன்ரேட் மோசமாக இருந்தநிலையில் தற்போது பாசிட்டிவ் நோக்கி டெல்லி அணி நகர்ந்துள்ளது. அடுத்ததாக ஒரு வெற்றி பெற்றால், நிகரரன்ரேட் பிளஸ்குக்குள் சென்றுவிடும். அதேசமயம், குஜராத் டைட்டன்ஸ் அணி அடுத்தடுத்து தோல்விகளைச் சந்தித்துள்ளது.7 போட்டிகளில் 3 வெற்றி, 4 தோல்விகள் என 6 புள்ளிகளுடன் 6-வது இடத்திலிருந்து 7-வது இடத்துக்கு சரிந்துள்ளது. நிகர ரன்ரேட்டும் மைனஸ் 1.303 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்த குறைந்தபட்சம் அடுத்த இரு போட்டிகளில் பெரிய வெற்றியை குஜராத் அணி பெற்றால்தான் முன்னேற்ற முடியும். டெல்லி கேபிடல்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கியக்காரணம், ஹீரோக்களாக இருந்தவர்கள் பந்துவீச்சாளர்கள்தான். 6 பந்துவீச்சாளர்கள் பந்துவீசியதில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு. 4.50 ரன்களுக்கும் குறைவாகவே வழங்கினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இதுவரை 79 டி20 போட்டிகளில் விளையாடி 177 பந்துகளை மட்டுமே வீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் ஸ்டப்ஸ் ஒரு ஓவர் மட்டும் சுழற்பந்துவீசி 11 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES கலீல் அகமது 4 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இசாந்த் சர்மா 2 ஓவர்கள் வீசி 8ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முகேஷ் குமார் 2.3 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்ஸர் படேல் 4ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதில் விக்கெட் வீழ்த்தாமல் இருந்தது குல்தீப் யாதவ் மட்டும்தான். குறிப்பாக இந்த ஆட்டத்திஸ் ஸ்டப்ஸ் தவிர மற்ற 5 பந்துவீச்சாளர்களும் உள்நாட்டு பந்துவீச்சாளர்களை வைத்தே டெல்லி கேபிடல்ஸ் விளையாடியது. கடந்த ஆட்டத்திலும் இதேபோன்று வெளிநாட்டு பந்துவீச்சாளர்கள் உதவி இல்லாமல் உள்நாட்டு வீரர்களை வைத்தே டெல்லி அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் இரு முக்கிய கேட்ச்கள், இரு முக்கிய ஸ்டெம்பிங்குகள் ஆகியவற்றுடன்16 ரன்கள் சேர்த்த டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.   பட மூலாதாரம்,SPORTZPICS ரிஷப் பந்த் கூறியது என்ன? டெல்லி கேபிடல்ஸ் ரிஷப் பந்த் கூறுகையில் “ ஏராளமான நேர்மறையான அம்சங்கள் நடந்தன. சாம்பியன் மனநிலையோடு எங்கள் அணி விளையாடியது. ஐபிஎல் சீசனில் சிறந்த பந்துவீச்சாக இருக்கும். தொடர்ந்து நாங்கள் எங்களை முன்னேற்றி வருகிறோம். நிகர ரன்ரேட்டை இழந்துவிட்டதால் இனிமேல் அதை உயர்த்த கவனம் செலுத்தவோம். பந்துவீச்சாளர்கள் அவர்கள் பணியை ரசித்துச் செய்தனர், அதனால்தான் வெற்றி எளிதாகியது” எனத் தெரிவித்தார் குஜராத் அணியின் பேட்டிங் நேற்று படுமோசமாக இருந்தது. சுருக்கமாகக் கூறினால், குஜராத் அணியின் பேட்டர்கள் களத்தில் சந்தித்ததே 17.3 ஓவர்கள்தான். அதில் பேட்டர்கள் டாட் பந்துகளாகச் சந்தித்தது 63 பந்துகள். ஏறக்குறைய 10 ஓவர்களுக்கு எந்த பேட்டர்களும் ரன்கள் ஏதும் சேர்க்கவில்லை. ஆக 7.3 ஓவர்களில்தான் 89 ரன்கள் சேர்த்தனர். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே ஒரு ஆட்டத்தில் குறைந்தபட்சமாக குஜராத் அணி ஒரே ஒரு சிக்ஸர் மட்டுமே நேற்று அடித்தது. குஜராத் அணியில் காயத்திலிருந்து மீண்டு டேவிட் மில்லர் அணிக்கு திரும்பி இருந்தார், இம்பாக்ட் ப்ளேயராக ஷாருக்கான் சேர்க்கப்பட்டிருந்தார். குஜராத் அணியில் 8-வது வரிசைவரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள்தான் இருந்தனர். ஆனால், நேற்று ரஷித் கான் சேர்த்த 24 பந்துகளில் 31 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோர். மற்ற எந்த பேட்டரும் பெரிதாக ரன்கள் சேர்க்கவில்லை.   பட மூலாதாரம்,GETTY IMAGES சாய் சுதர்சன்(12), திவேட்டியா(10) ரஷித்கான்(31) ஆகிய 3 பேட்டர்கள் மட்டும்தான் இரட்டை இலக்க ரன்கள் சேர்த்தனர். மற்ற பேட்டர்களான சுப்மான் கில்(2), சாஹா(8), மில்லர்(2) அபினவ் மனோகர்(8), ஷாருக்கான்(0), மோஹித் சர்மா(2), நூர் அகமது(1) என 7 பேட்டர்கள் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே சேர்த்து மோசான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். ரஷித்கான் தவிர வேறு எந்த பேட்டரும் களத்தில் 15 பந்துகளைக் கூட சந்திக்காமல் தேவையின்றி டெல்லி பந்துவீச்சாளர்களிடம் விக்கெட்டை வழங்கி வெளியேறினர். ஆடுகளத்தின் தன்மை என்ன, பந்து எப்படி பேட்டை நோக்கி வருகிறது என்பது குறித்த எந்தப் புரிதலும் இல்லாமல், பொறுமை இல்லாமல் மோசமான ஷாட்களை ஆடியே ஒட்டுமொத்தமாக விக்கெட்டுகளை இழந்தனர். அதிலும் இசாந்த் சர்மா வீசிய 5வது ஓவரில் சுதர்சன் 12 ரன்னில் ரன்அவுட் ஆக, அதே ஓவரின் கடைசிப்பந்தில் மில்லர் 2 ரன்னில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். இதேபோல டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய 9-வது ஓவரில் 3வது பந்தில் அபினவ் மனோகர் 8ரன்னில் ரிஷப்பந்தால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார், அடுத்த பந்தைச் சந்தித்த இம்பாக்ட் ப்ளேயர் ஷாருக்கானும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். இரு முறை ஒரே ஓவர்களில் 2 விக்கெட்டுகள் என குஜராத் அணி இழந்தது. முதல் விக்கெட்டை 11 ரன்களில் இழந்த குஜராத் அணி, அடுத்த 36 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் குஜராத் ஒட்டுமொத்தமாக இழந்தது.   பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் சரிவுக்கு ஆடுகளம்தான் காரணமா? ஆமதாபாத்தில் போட்டி நடந்த ஆடுகளம் இதற்கு முன் நடந்த சீசன்களில் பயன்படுத்தப்படாத புதிய விக்கெட்டாகும். ஆடுகளத்தில் பந்து பிட்ச் ஆனதும் பேட்டரை நோக்கி மெதுவாகவே வரக்கூடிய ஸ்லோ பிட்சாகும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் பந்து வேகமாகத் திரும்பாமல் மெதுவாகத் திரும்பக்கூடிய ஆடுகளம். இதனால் மோசமான ஷாட்களை தேர்ந்தெடுத்து குஜராத் பேட்டர்கள் வெளியேறினர். அதிலும் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் வீசிய ஒரு ஓவரில் அடுத்தடுத்த பந்தில் மனோகர், ஷாருக்கான் இருவரும் ஸ்டெம்பிங் செய்யப்பட்டனர். இவர்கள் இருவருமே பந்து இந்த அளவு டர்ன் ஆகும் என நினைத்திருக்கமாட்டார்கள். பந்து வருவதற்கு முன்பே பேட்டர்கள் பேட்டை சுழற்றியதும், ஸ்லோ பந்துகளில் பெரிய ஷாட்களை அடிக்க முற்பட்டதும் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்த உதவியது. ஆனால் புதிய ஆடுகளத்தால் தங்களுக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று சுப்மான் கில் கூறினார். தோல்விக்குப் பிறகு அவர் கூறுகையில் “ எங்கள் பேட்டிங் சராசரியாகவே இருந்தது. விக்கெட் ஓரளவுக்கு நன்றாகத்தான் இருந்தது. விக்கெட் மோசம் என்று நான் கூறவில்லை. எங்கள் வீரர்கள் ஆட்டமிழந்த விதத்தைப் பார்த்தால், குறிப்பாக நான்ஆட்டமிழந்ததற்கும் ஆடுகளத்துக்கும் தொடர்பில்லை. சாஹா ஆட்டமிழந்தது, சாய் சுதர்சன் ரன்அவுட் ஆகியவையும் பிட்சுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. என்னைப் பொருத்தவரை மோசமான பேட்டிங், மட்டமான ஷாட் தேர்வுகள்தான் தோல்விக்கு காரணம்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால், குஜராத் பேட்டர் டேவிட் மில்லர் ஆடுகளத்தை குற்றம்சாட்டினார். அவர் கூறுகையில் “ விக்கெட் மிக மெதுவாக இருந்தது. எந்த அணியும் இதுபோன்று மோசமாக குறைந்த ஸ்கோரில் ஆட்டமிழந்தது இல்லை. அதிலும் ஒரு முன்னாள் சாம்பியன் அணி ஆட்டமிழந்தது இல்லை. இரு விக்கெட்டுகள் திடீரென அடுத்தடுத்து பறிபோனது அதிர்ச்சியளித்தது.” “சுப்மான் கில் கவர் ட்ரைவ் ஷாட்களை பந்து வரும்முன்பே ஆடிவிட்டார். பந்து ஆடுகளத்தில் நின்று மெதுவாக பேட்டரை நோக்கி வந்ததை புதிய பேட்டராக வருபவரால் கணிக்க முடியவில்லை அதனால்தான் 90 ரன்களுக்குள் ஆட்டமிழந்தோம். இந்த உலகத்திடம் ஆயிரம் மன்னிப்புகள் கேட்கலாம். ஆனால், இறுதியில் பார்த்தால் நாங்கள் மோசமான கிரிக்கெட்டைத்தான் விளையாடியிருக்கிறோம். 120 ரன்கள் சேர்த்திருந்தால்கூட பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்ய உதவியிருக்கும். ஆனால்,90 ரன்கள்கூட வரவில்லை. ரஷித்கான் அணியை பெரிய ஸ்கோருக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் பேட் செய்ததால்தான் ஓரளவுக்கு ஸ்கோர் கிடைத்தது. இல்லாவிட்டால் மோசமாகி இருந்திருக்கும் ” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqqny66krveo
    • @goshan_che எழுதிய தாயக பயண அனுபவங்கள் என்ற இந்த பயண கட்டுரைக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைப்பதால் அவரின் அனுமதியுடன் இந்த தாயக இளைஞர்களின் முயற்சிகள் தொடர்பான  காணோளியை இணைக்கிறேன்.    பி. கு அனுமதி பெறாமலே😂
    • ஆம் இது உண்மை எனக்கு பலமுறை இப்படி ஏற்பட்டது. இது ஒரு புதிய யுக்தி. பெரெரா அன்ட் சன்ஸ் இல் சாப்பிட்டு கொண்டிருக்கும்போது இப்படி அடிக்கடி நடக்கும். கடை வாசலுக்கு முன் வந்து சாப்பிட்டு கொண்டிருப்பவரை பர்ர்த்து, கெஞ்சி மன்றாடி உணவ வாங்கி கேட்பது, அலுப்பு கொடுப்பது அடிக்கடி நடக்கும்.
    • வைகாசி மாதம் என்றால்  அகம் குளிரும் அன்னையின் முகம் காணும் ஆசைவரும்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.