Jump to content

லண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு!


Recommended Posts

லண்டன்: பல முகங்களில் ஒரு வரவேற்பு!

 

 
photo7
photo
photo11
photo12
photo2
photo3
photo6
photo7
photo
 
 
 

விமானப் பயணத்தின்போது இறக்கை பக்கவாட்டிலுள்ள ஜன்னலோர இருக்கைகளைத் தேர்ந்தெடுப்பது என் வழக்கம். இயற்கையில் தனக்கு மறுக்கப்பட்ட ஆற்றல்களைத் தன்னுடைய அசாத்தியமான முயற்சிகளால் எட்டிப்பிடிப்பதில் மனித குலம் காட்டிவரும் இடையறாத யத்தனத்துக்கான அபாரமான குறியீடாக விமானத்தின் இறக்கைகள் தோன்றுவது உண்டு. உச்சத்தில் நிற்கும் சூரியனை நோக்கி ‘உனக்குப் பக்கத்தில் வருவேன் நான்’ என்ற மானுடத்தின் குரலை அவை சொல்லிக்கொண்டே இருக்கின்றன.

 

நீண்ட பயணங்களில் விமானத்தின் ஜன்னலோடு ஒன்றிவிடுகையில் ஏதோ ஒரு கணத்தில் ஜன்னல் வழியே வெளியே நீட்டியிருக்கும் கைகளாக இறக்கைகள் மாறிவிடுவதை ஒவ்வொரு முறையும் உணர்கிறேன். மேகக் கூட்டங்களுக்குள் விமானம் நுழையும்போதெல்லாம், வான் வெளியில் அளையும் விரல் இடுக்குகளில் மேகம் சிக்கிச் செல்வதான உணர்வைத் தருகின்றன இறக்கைகள்.

என் பக்கத்து இருக்கையில் ஒரு இளம் சீக்கியர் அமர்ந்திருந்தார். நல்ல உயரம். வெளுப்பு. அவருடைய இரு கைகளையும் பச்சை டாட்டூக்கள் ஆக்கிரமித்திருந்தன. காதில் இயர்போன் மாட்டியபடி வந்தவர் இசையிலேயே வெகுநேரமாக மூழ்கியிருந்தார். விமானம் மேலெழும்பியபோது ஒரு ஹாய் சொன்னார். இருக்கையில் முதுகை வசதியாகச் சாய்த்துக்கொண்டவர் மீண்டும் கண்களை மூடிக்கொண்டார். நான் மேகக் கூட்டத்துடனான சுவாரஸ்யமான விளையாட்டில் மூழ்கினேன்.

இந்தப் பயணத்தில் அபூர்வமான மேகக்காட்சி ஒன்றைக் கண்டேன். ஐரோப்பிய கண்டத்துக்கு மேல் விமானம் பறந்தபோது, அந்த மேகக் கூட்டத்தினுள் விமானம் நுழைந்தது. மிக நீண்ட வெண்பஞ்சுப் படலம். விமானத்தின் இறக்கைகள் அதைக் கிழித்து முன்னகர்ந்த நீண்ட நேரம் விமானம் தடதடத்துக்கொண்டே இருந்தது. நிலத்திலிருந்து பார்க்க அந்த மேகம் எவ்வளவு பெரிதானதாக, என்ன வடிவிலானதாக, என்ன நிறத்திலானதாக இருக்கும் என்று தோன்றியது.

மேகங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைமைகள் உண்டு. மேகத்தின் தோற்றம் – அதன் அடர்த்தி, வடிவம், வண்ணம், அமைப்பு என்று பல்வேறு அம்சங்கள் அடிப்படையில் இந்த வகைமைப்படுத்தலை மேற்கொள்கிறார்கள். மேகத்தைப் பார்க்கும்போதெல்லாம் பிரிடோர் பின்னி நினைவுக்குவருவார்.

பிரிடோர் பின்னி ஒரு பிரிட்டிஷ்காரர். புதிய வகை மேகம் ஒன்றை அவர் அடையாளம் கண்டார். மேகங்களை வகைமைப்படுத்தும் சர்வதேச வானிலை அமைப்பு இதற்கென மேக அட்லஸ் ஒன்றை வெளியிடுகிறது. தன்னுடைய மேகத்தையும் அது அங்கீகரிக்க வேண்டும் என்று நீண்ட காலம் போராடிவந்தார் பிரிடோர் பின்னி. இயற்கையை அர்த்தப்படுத்துவது என்பது மனித இனம் தன்னையே அர்த்தப்படுத்திக்கொள்வதுதான். நீண்ட காலமாக புதிய வகைமை எதையும் அங்கீகரிக்காத சர்வதேச வானிலை அமைப்பு முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ல் புதிய மேக அட்லஸை வெளியிட்டது. 11 புதிய வகை மேகங்கள் அதில் சேர்க்கப்பட்டிருந்தன. பிரிடோர் பின்னி கண்டறிந்த வகைமையும் அதில் இடம்பெற்றதா என்பது தெரியவில்லை.

விமானப்பெண் வந்தார். “என்ன உணவு வேண்டும்?” என்றார். எல்லாப் பயணங்களிலும் கேட்பதுபோல “மீனுணவு” என்றேன். எல்லாப் பயணங்களிலும் சொல்லப்படுவதுபோல “அது மட்டும் இல்லை” என்றார். விமான நிறுவனங்கள் இணையத்தில் காட்டும் சாப்பாட்டுப் பட்டியலில் ‘மிதப்பன, நடப்பன, பறப்பன’ என எல்லாம் இடம்பெற்றிருந்தாலும், பெரும்பாலும் அவர்களுக்குத் தோதான ஜீவன் கோழி. ஊரில் உள்ள உணவகம் என்றால், நாட்டுக்கோழி வேண்டும் என்பேன். நடுவானில் இந்த அட்டூழியம் எல்லாம் நடக்காது என்பதால் “உங்கள் விருப்பம்” என்றேன்.

சீக்கிய இளைஞர் இப்போது கண் விழித்தார். முன்னதாக மது பரிமாறப்பட்டபோது பிரெஞ்சு ஒயினுக்காக அவர் கண் விழித்தார். மூன்று மடக்கில் கோப்பையைக் கவிழ்த்துவிட்டு அப்படியே சாய்ந் துகொண்டார். இப்போது இயர்போனைக் கழற்றிவிட்டு பேசலா னார். அவருடைய பெயர் சரண்ஜித் சிங். லண்டனில் அவருடைய குடும்பம் இரு தலைமுறைகளுக்கு முன் குடியேறியிருக் கிறது. மருத்துவம் படித்துக்கொண்டிருக்கிறார். பாட்டியாலாவிலுள்ள உறவினர் திருமணத்துக்கு வந்துவிட்டு லண்டன் திரும்புகிறார்.

அவருடைய அறிமுகம் உற்சாகம் தந்தது. உலகம் முழுக்க விரவியுள்ள இந்தியர்களில் இன்று செல்வாக்கான சமூகம் பஞ்சாபிய சமூகம். பிரிட்டனிலும் அவர்களுடைய எண்ணிக்கை அதிகம் – பிரிட்டிஷ் இந்தியர்களில் கிட்டத்தட்ட சரிபாதி. இந்தியாவுக்கு வெளியே கனடாவுக்கு அடுத்து, பஞ்சாபிகள் அதிகம் வாழும் நாடு இன்று பிரிட்டன். அவருடனான உரையாடல் பிரிட்டனிலுள்ள இந்தியச் சமூகத்தின் உள் முகங்களை அறிந்துகொள்ள உதவும் என்று தோன்றியது.

“பிரிட்டிஷ் இந்தியா காலகட்டத்திலேயே பஞ்சாபிகள் பிரிட்டனில் குடியேறுவது தொடங்கிவிட்டது அல்லவா, பிரிட்டனைப் பொறுத்தமட்டில் இன்றைக்கு நாங்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் எல்லாம் சொந்த ஊர்ச் சூழலை உருவாக்கியிருக்கிறோம். லண்டனில் இருக்கும்போது சவுத்தால் பகுதிக்குப் போய் வாருங்கள். பஞ்சாப் சூழல் இருக்கும்.

“1853-ல் மகாராஜா துலீப் சிங் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். அது தொடங்கி பஞ்சாபிகள் வருகை இங்கே அதிகரித்தது. பிரிட்டிஷ் ராணுவத்தில் நியமிக்கப்பட்ட பஞ்சாபிகள் இங்கே குடியேறியபோது கூடவே வீட்டு வேலைக்காக ஒரு பெரும் கூட்டம் வந்தது. அப்புறம், மாணவர்கள் படிக்க வந்தார்கள்.

“1940 -1950 காலகட்டம் இதில் முக்கியமானது என்று சொல்லலாம். உலகப் போருக்குப் பின் பிரிட்டனில் பெரிய தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்தியாவில் பிரிவினை நடந்தது. ஒரு பெரும் தொகுதி பஞ்சாபிகள் இங்கே வர இது வழிவகுத்தது. அடுத்து, 1970-1980 காலகட்டத்தில் கென்யாவும் உகாண்டாவும் சுதந்திரம் அடைந்ததை அடுத்து, கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்த பஞ்சாபிகள் பெருமளவில் குடிபெயர்ந்தார்கள்.

“கீழ்நிலை வேலைகளிலிருந்து கஷ்டப்படுவது என்ற நிலையி லிருந்து கடந்த மூன்று தலைமுறைகளில் வேகமாக வெளியேறி மேல் நோக்கி வருகிறது பஞ்சாபிய சமூகம். இன்று பிரிட்டனில் உள்ள முக்கியமான வணிகச் சமூகங்களில் பஞ்சாபிய சமூகமும் ஒன்று. சொந்த நாட்டு உணர்வுடேனேயே என்னைப் போன்றவர்கள் இன்று பிரிட்டனில் இருக்கிறோம்.”

எந்த விஷயத்தையும் துல்லியமான எண்ணிக்கை விவரங்களோடு அவர் பேசியது எனக்குப் பிடித்திருந்தது. “நீங்கள் உள்ளூரில் வரலாற்றை மறந்துவிட்டு இருக்கலாம். வெளியூரில் வரலாறுதான் உங்களை வடிவமைக்கும்” என்றார்.

“உங்களுடைய இன்றைய நினைப்பில் இந்தியா என்னவாக இருக்கிறது?”

“நான் நினைப்பதை அப்படியே சொல்லலாமா?”

“தாராளமாக.”

“பிரிட்டனிலிருந்து யோசிக்கையில் ஒரு நெருக்கம் தோன்றும். இந்தியா பக்கம் வந்தால் இனி இந்தப் பக்கமே திரும்பக் கூடாது என்றாகிவிடும். இப்போதும் அதே நினைப்பில்தான் திரும்பு கிறேன். சக மனிதர்களைப் பற்றிய அக்கறையே இல்லாதவர்களைக் கொண்ட நாடாக அது இருக்கிறது என்னுடைய பிரதான மான கவலை. உங்களைச் சங்கடப்படுத்தும் இந்தப் பதிலுக்காக நீங்கள் மன்னிக்க வேண்டும்.”

நான் புன்னகைத்தேன். “எனக்கு ஒரு சந்தேகம், இந்தியாவுக்கு வெளியே உள்ள இந்தியச் சமூகத்தைப் பெயரளவில் ஒன்றாகக் குறிப்பிட்டாலும் அதில் பல பிளவுகள் இருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். உதாரணமாக, புலம்பெயர் தமிழ்ச் சமூகம் என்பது இந்தியத் தமிழர் – ஈழத் தமிழர் என்ற வகைமைப்பாட்டில் இயங்குகிறது. இரண்டுக்கும் இடையில் அதிகம் உறவாடல் இல்லை. மிக ஒற்றுமையானதாகக் கருதப்படும் ஈழத் தமிழ்ச் சமூகத்திலும் சாதிப் பிளவுகள் உண்டு. பஞ்சாபி சமூகம் எப்படி?”

“சீக்கியர் – சீக்கியரல்லாதோர் என்ற பிளவுண்டு. சீக்கியருக்குள்ளுமேகூட ஏராளமான சாதிப் பிரிவினைகள் உண்டு. ஓரளவுக்குக் கடக்க முற்படுகிறோம். பாகிஸ்தானிலிருந்து பிரிட்டனுக்குப் புலம்பெயர்ந்த பஞ்சாபியரில் பெருமளவினர் முஸ்லிம்கள். ஆனால், வேறுபாட்டுக்கு அப்பாற்பட்டு பஞ்சாபி அடையாளத்தை வளர்க்க விரும்புகிறோம். மொழிதான் இங்கே இணைப்புச் சங்கிலி. பிரிட்டனில் அதிகம் பேசப்படும் மொழிகளில் இன்று பஞ்சாபி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆங்கிலம் நமக்கு பிழைப்பு மொழி. பஞ்சாபியே அடையாள மொழி - உயிர் உறவு மொழி என்பதை வலிறுத்துகிறோம்.”

“இப்போது எனக்கு ஒரு சந்தேகம். சொந்த நாட்டு உணர்வுடன் உலகுணர்வுக் கலாச்சாரத்துக்கும் பிரிட்டன் போன்ற நாடுகள் இடம் அளிக்கும் சூழலில், ஏன் பிரத்யேக சமூக அடையாளம் ஒவ்வொருவருக்கும் தேவைப்படுகிறது?”

“இது சிக்கல்தான்…” அவர் வாய் விட்டு சிரித்தார். அடுத்தச் சுற்று மது வந்துகொண்டிருப்பதை தள்ளுவண்டி சத்தம் சொன்னது. அவர் மீண்டும் இசைக்குள் ஆழ்ந்தார்.

லண்டன் வான் பரப்பில் நுழைந்த விமானம், உலகின் பரபரப் பான விமான நிலையங்களில் ஒன்றான லண்டன் ஹீத்ரோவில் தரையிறங்க ஆயத்தமானது. ஒரு நகரத்தைக் கொத்தாகப் பார்க்க அருமையான தருணம் இதுதான். தூரத்தில் லண்டன் நகரம் ஜொலித்தது. பிரம்மாண்டம், பிரம்மாண்டம், பிரம்மாண்டம். ஹோவென இரைச்சலோடு இறங்கியது விமானம். ஒரு ஆழ்ந்த துயர் படர்ந்தது. இதுவரை எந்த நகரமும் முதல் முறை தந்திராத ஒரு வலியை நெஞ்சத்தின் ஆழத்தில் உணர்ந்தேன்.

ஹீத்ரோ விமான நிலையத்தில் நுழைந்ததுமே ஒரு நீளமான வரிசை நோக்கி வழிகாட்டினார் காவலாளி. பிரிட்டிஷ் கடவுச்சீட்டர்கள், ஐரோப்பிய ஒன்றிய கடவுச்சீட்டர்கள், ஏனைய நாடுகளைச் சேர்ந்த கடவுச்சீட்டர்கள் என்று நீண்ட அந்த வரிசையில், சீக்கிய இளைஞன் முதல் வரிசை நோக்கிச் செல்ல நான் மூன்றாவது வரிசையில் நின்றேன். எனக்கு முன் நின்றுகொண்டிருந்தவர்களில் ஒருவரின் ஆவணம் சிக்கலுக்கு உள்ளாகிறது. போலியான ஆவணங்களுடன் பிரிட்டனுக்குள் நுழைய முற்பட்ட அகதி அவர். மனைவி, இரு குழந்தைகள் மிரட்சியுடன் பார்த்திருக்க, அவர் போலீஸாரால் தனித்து அழைத்துச் செல்லப்படுகிறார். சற்று நேரத்தில் அவர்களும் அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய ஆவணங்கள் சோதனையிடப்படுகின்றன. விசாரித்தவர் கருப்பின அதிகாரி. கடவுச்சீட்டைச் சரிபார்த்து வாஞ்சையோடு கை குலுக்குகிறார்.

விமான நிலையத்தில் நான் கடந்துவந்த சுவரோர தட்டிகளை அப்போதுதான் கவனித்தேன். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை வரவேற்கும் விதமாக வைக்கப்பட்டிருக்கும் அந்த ‘நல்வரவுப் பதாகைகள்’ ஒவ்வொன்றிலும் புன்னகை பூரிக்க இரு கைகளையும் விரித்தபடி மனிதர்கள் நிற்கிறார்கள். வெவ்வேறு மனிதர்கள். நான் அவற்றின் அருகே சென்று பார்த்தேன்.

ஒவ்வொரு படத்தின் கீழும் சம்பந்தபட்டவரின் பெயர், பணி விவரம். ‘டிம் பீக் - விண்வெளி வீரர்; ராகுல் - வாடிக்கையாளர் சேவை முகவர்; தான்யா மூடி - நடிகை; ஜோ ஹவுஸ்டன் - விமானி; ஸ்டீபன் வில்ட்ஷிர் - இசைக் கலைஞர்;ஆலன் மியாட் - தண்டோராக்காரர்; விக்கி ஃபைஸன் - விலங்குப் பராமரிப்பாளர்; கிறிஸ் ஓ நைல் - பூக்கடைக்காரர், டாம் வின்ஸி - டாக்ஸி ஓட்டுநர்.’

ஒவ்வொரு முகமும் ஒரு நகரம் எத்தனை உயிர்களால் உயிரூட்டப்படுகிறது என்கிற பணிநிலைகளை மட்டும் அல்லாமல், லண்டன் வந்து பிரிட்டன் சமூகத்தின் அங்கமாகிவிட்ட அமெரிக்க, ஆசிய, ஆப்பிரிக்க கண்டங்களின் வெவ்வேறு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. நம்மூர் விமான நிலையங்களில் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருக்கும் டெல்லி தலைவர்கள், இந்தி நடிகர்களின் முகங்கள் மனதுக்குள் தோன்றி மறைந்தன. நம் விமான நிலையங்களில் என்றைக்கு ஒரு தமிழ் விவசாயி, காஷ்மீர் படகுக்காரர் முகத்தைப் பார்க்க முடியும் என்ற கேள்வி எழுந்தது.

இதற்குள் இந்தப் பயணத்தில் டெல்லியிலிருந்து வந்து என்னைக் கோத்துக்கொள்ளவிருக்கும் பிரிட்டிஷ் தூதரக அதிகாரி யும் நண்பருமான ஆஸாத் என்னைப் பார்த்துவிட்டார்.

“வந்ததும் வராததுமாக என்ன இப்படி இந்தத் தட்டிகளைப் பார்த்துக்கொண்டு நிற்கிறீர்கள்?”

“ஆஸாத், எத்தனை விதமான முகங்கள்! இந்தத் தட்டிகளில் எழுதப்பட்டிருக்கும் ‘நல்வரவு’ எழுத்து வடிவங்களைக் கவனித்தீர்களா? ஒவ்வொருவர் ஆகிருதிக்கும் ஏற்றபடியான பிரத்யேகமான எழுத்து வடிவங்கள். பன்மைத்துவம் – கூடவே தனித்துவம்.”

ஆஸாத்துடன் நின்றிருந்த இன்னொரு அதிகாரி சொன்னார், “நண்பரே, நீங்கள் விரும்பினால், அதை எழுதிய ஓவியருடனேயே உங்களைப் பேசவைக்கிறேன். நிறைய ஆச்சரியங்கள் உங்களுக்கு இங்கு காத்திருக்கின்றன. சாமுவேல் ஜான்சனின் பிரபலமான மேற்கோள் இது, ‘லண்டன் ஒருவருக்கு அலுத்துவிட்டது என்றால் வாழ்க்கையே அலுத்துவிட்டது என்று பொருள். வாழ்க்கையில் ஒருவருக்குத் தேவைப்படும் அனைத்தும் லண்டனில் உண்டு.’ லண்டன் உங்களை வரவேற்கிறது!”

(வெள்ளிதோறும் பயணிப்போம்…)

- சமஸ், தொடர்புக்கு: samas@thehindutamil.co.in

http://tamil.thehindu.com/opinion/columns/article24347683.ece

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

லண்டன்: மிட்டாய்க்குள் கிராமம்

 

 

 
fcf17f41P1441791mrjpg

குளிர் அப்பிக்கொண்டது. கைகளை இறுகக் கட்டிக்கொண்டேன். இந்தியாவில் எவ்வளவோ சுற்றியிருக்கிறேன் என்றாலும், இந்தக் குளிர் அந்நியமாக இருந்தது. விரல்கள் ஐஸ் வில்லைகள் மாதிரி இருந்தன. ஹெலன் கை குலுக்கினார். “ஒரு காபியோடு நாம் இங்கிருந்து புறப்படலாம். குளிருக்கு ஈடு கொடுக்கும்!” என்றார். பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பயண வழிகாட்டலுக்கு அனுப்பப்பட்டிருந்தவர் இவர். கல்லூரி மாணவிபோல இருந்தார். பிரிட்டன் வரலாறு, பிரிட்டிஷ் சமூகவியலைச் சொல்வதில் மிகுந்த தேர்ச்சியுடன் இருந்தவர் பகுதிநேரப் பணியாக பயண வழிகாட்டியாகப் பணியாற்றுவதாகச் சொன்னார். குறுகிய நாட்களில் பிரிட்டிஷ் வாழ்க்கையைக் கொஞ்சம் ஊடுருவிப் புரிந்துகொள்வதற்கு ஹெலனுடனான சம்பாஷனைகள்தான் பெரிய அளவில் உதவின.

ஹீத்ரோவிலிருந்து வெஸ்ட்மினிஸ்டர் சென்றடைய வேண்டும். அங்குதான் தங்கவிருந்த விடுதி இருந்தது. முதல் நாள் பங்கேற்கவிருந்த கூட்டம் ஒயிட் ஹாலில் நடைபெறவிருந்தது. உலகின் மிக அதிகாரமிக்க இடங்களில் ஒன்று ஒயிட் ஹால். நாடாளுமன்ற சதுக்கம் வரை நீளும் இந்தச் சாலையில்தான் பிரிட்டிஷ் அரசின் முக்கியமான பல அலுவலகங்களும், அமைச்சகங்களும் அமைந்திருக்கின்றன. பிரிட்டிஷ் அதிகாரப் பீடத்தின் இன்னொரு பெயர் என்றும் சொல்லலாம்.

 

வண்டி புறப்பட்டது. கண்ணாடிக்கு வெளியே அகல விரிந்துகொண்டேயிருந்தது லண்டன். வீதியின் இரு பக்கமும் உள்ள பிரமாண்ட கட்டிடங்களையும் விரையும் சாலையையும் வெளிச்சத்தால் அதைப் போர்த்தியிருக்கும் மின் விளக்குகளையும் பார்க்கிறேன். ஒரே வீதி, ஒரே நேரத்தில் வெவ்வேறு நூற்றாண்டுகளுக்குள் இருக்கிறது. மனதுக்குள் ஆழமாக காந்தியின் வார்த்தைகள் வந்து சென்றன. “பிரிட்டன் இந்தச் செழிப்பை அடைய இந்தப் பூமியின் பாதியளவு வளம் அதற்குத் தேவைப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், இந்தியா மாதிரி ஒரு நாட்டுக்கு எத்தனை கோள்கள் தேவைப்படும்?”

ஒரு வாரத்துக்குள் ஒரு நாட்டையோ, ஊரையோ, மக்களையோ அறிந்துகொள்ள முற்படுவது சாத்தியமே அற்றது. இந்தக் குறுகிய நாட்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கவனம் செலுத்தினால், மேல் பார்வையிலிருந்து அதைப் பற்றி கொஞ்சம் எழுத முடியும். தொடக்கத்திலேயே அதற்கேற்ப திட்டங்களை வகுத்துக்கொள்வது முக்கியம். வண்டியில் ஏறியதுமே ஹெலனிடம் பயணத் திட்டத்தைப் பேசிவிட்டேன். “காமன்வெல்த் செய்தியாளர் கூடுகை நீங்கலாக தனிப்பட்ட வகையில் ஒரு செயல்திட்டம் இருக்கிறது. தொழில்மயமாக்கல் பிரிட்டனில் ஏற்படுத்திய தாக்கம்; தொழில்மயமாக்கல் பின்னணியில் சுற்றுச்சூழலையும் எளிய மக்களையும் பாதுகாத்தல்... இதுகுறித்த பிரிட்டனின் அணுகுமுறையைத் தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமாக நீர்நிலைகள் - வனம் மேலாண்மை, சாலைகள் - பொதுப் போக்குவரத்து மேலாண்மை, உற்பத்தி – குப்பை மேலாண்மை இவை மூன்றையும் தெரிந்துகொள்ள வேண்டும். எளிய மக்களுக்கான சமூக நலத் திட்டங்களை அறிந்துகொள்ள வேண்டும்.”

ஹெலன் சிரித்தார். “சுவாரஸ்யமான ஒன்று சொல்லட்டுமா? நாளைய உங்கள் கூட்டம் எங்கு நடக்கிறது தெரியுமா? இந்தியா ஆஃபிஸ். பொதுவாக லண்டன் வரும் பலரும் அதிகம் பிரிட்டனைப் பற்றி தெரிந்துகொள்ள விரும்புவார்கள். நீங்கள் பிரிட்டனிலிருந்து இந்தியாவைப் பற்றிப் புரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள் என்று நினைக்கிறேன். இந்தியா ஆஃபிஸைக் காட்டிலும் அதற்கு மிகச் சிறந்த தொடக்கம் ஒன்று இருக்க முடியாது.”

எனக்கு இது பெரும் சந்தோஷத்தைத் தந்தது. இந்தியா ஆஃபிஸைப் பற்றி வாசித்திருக்கிறேன். இன்றைய இந்திய வரலாற்றோடு மிக முக்கியமான தொடர்புகளைக் கொண்ட, இந்தப் பயணத்தில் வெளியிலிருந்தேனும் பார்த்துவிட நினைத்திருந்த இடம் அது. சாதாரண பயணியாக அங்கே நுழைவது எளிதான காரியம் அல்ல. இப்போது வாய்ப்பு தானாகத் தேடி வருகிறது.

சிப்பாய்ப் புரட்சிக்குப் பின் கிழக்கிந்திய கம்பெனியின் ஆளுகையிலிருந்து தன்னுடைய நேரடி ஆளுகைக்குக் கீழ் இந்தியாவை 1858-ல் கொண்டுவந்தது பிரிட்டிஷ் முடியாட்சி. அடுத்த பத்தாண்டுகளுக்குள் இந்த அலுவலகத்தைக் கட்டினார்கள். ‘இந்தியா ஆஃபிஸ் கவுன்சில் சேம்பர்’ என்பது அப்போது அதன் பெயர். சுருக்கமாக ‘இந்தியா ஆஃபிஸ்’. 1868 முதல் 1947 வரை இந்திய விவகாரங்கள் ஒவ்வொன்றும் இந்த அலுவலகத்தில்தான் கூடி விவாதித்து முடிவெடுக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அந்த இடத்தை பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சகம் தனதாக்கிக்கொண்டது.

“நீங்கள் இன்னும் காபியைக் குடிக்கவில்லை.” ஹெலன் நினைவூட்டினார். புட்டிக்குள் அடைபட்டிருந்த காபி அதற்குள் சூடிழந்து ஐஸ்காபிபோல் ஆகியிருந்தது. “லண்டனிலிருந்து புறப்படும் வரை நீங்கள் சூடான காபியை மறந்துவிட வேண்டும். பொதுவாக, இந்த மாதத்தில் கோடை தொடங்கிவிட வேண்டும். அப்படித் தொடங்கியிருந்தால் காபி கொஞ்சம் சூடு தாங்கும். பருவநிலை மாற்றம் எல்லாவற்றையும் சீர்குலைத்துக்கொண்டிருக்கிறது.”

“ஒரு அறிதலுக்காகக் கேட்கிறேன். பருவநிலை மாற்றம் ஒரு முக்கியமான பிரச்சினை பிரிட்டிஷ் பொதுச் சமூகத்தில் எப்படியான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறது?”

“இயல்பிலேயே இங்கே மேற்கில் பருவநிலை குறித்த அக்கறைகள் அதிகம். ஒரு நாளைக்கு நான்கைந்து முறை விட்டுவிட்டு மழை பெய்யும், பெரும்பாலான நாட்கள் குளிர் நிலவும் ஊர் இது. அப்படியென்றால், நீங்கள் வெளியே புறப்படுவது என்றாலே பருவநிலையை யோசித்துதான் முடிவெடுக்க வேண்டும், இல்லையா? வானிலை முன்கணிப்புகள் திட்டமிடலுக்கு மிக அவசியம். ஆனால், இப்போது கணிப்புகள் மாறுகின்றன. வெறுமனே மழை, வெயில், பனி மாற்றம் என்றில்லை; பெரிய அழிவுகள் தொடங்கிவிட்டன. வேளாண்மைச் சூழலே மாறிக்கொண்டிருக்கிறது – சாகுபடி, விளைச்சல் எல்லாமே பாதிக்கிறது என்கிறார்களே? விவசாயத்தை நம்பி பெரிய மக்கள்தொகை உள்ள இந்தியாவுக்குமே இது பெரிய பாதிப்பு இல்லையா?”

“ஆமாம், இந்தியாவிலும் பாதிப்புகள் தொடங்கிவிட்டன. ஆனால், இன்னும் வெகுமக்களுடைய அன்றாட விவாதத்துக்குள் பருவநிலை மாற்றம் வரவில்லை. பெயரில் ஒன்றாக இருந்தாலும் நிலத்தில் நூறாக இருக்கிறது இந்தியா. இன்னும் நவீன தொழில்களின் பலன்கள் சென்றடைந்திராத கிராமங்களையும் அதற்குள் தொழில்மயமாக்கலின் சீரழிவுகள் சூழ்ந்துவிட்டன.”

“ராட்சதத்தனமான வாழ்க்கையைக் கட்டிக்கொண்டுவிட்டோம். அதை விட முடியவும் இல்லை. தொடர முடியவும் இல்லை. பெரிய சவால்தான்... ஆனால், இங்கே ராட்சதனைக் கொஞ்சம் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறோம்.”

அதன் பிறகு, பிரிட்டிஷார் எதிர்கொள்ளும் பருவநிலைப் பிரச்சினைகளை ஹெலன் விவரிக்கலானார். அவர் முடித்தபோது வண்டி விடுதியை அடைந்திருந்தது. பெயர் பதிவு, அடையாள அட்டை சரிபார்ப்பு, புகைப்படப்பிடிப்புக்குப் பிறகு ஒரு மிட்டாயை விடுதி வரவேற்புப் பெண் தந்தார். மிட்டாய்த்தாள் சுற்றப்பட்டிருந்த விதமே அலாதியாக இருந்தது. “கிராமப்புற பிரிட்டனிலிருந்து வரும் மிட்டாய் இது. லண்டன் எப்போதும் கிராமங்களை மனதின் மையத்தில் வைத்திருக்கும். இது பிரிட்டன் கிராமங்களின் நினைவை என்றும் உங்களுக்குத் தரும்” என்றார்.

விடுதியிலிருந்த வெப்பச்சாதனம் கொடுத்த கதகதப்பில் படுக்கையில் விழுந்த வேகத்தில் தூங்கிப்போனேன். காலையில் ‘இந்தியா ஆஃபிஸ்’ புறப்பட்டோம். ஒரு நகரம் ஒவ்வொரு வேளைக்கும் எப்படியெல்லாம் உருமாறுகிறது! சாலையின் இரு பக்கங்களிலும் நீள கோட் அணிந்து, கையில் குடையுடன் சாரைசாரையாக நடந்து கடக்கிறார்கள் மக்கள். சாலைகளில் கார்கள், பஸ்களுக்கு இணையாக சைக்கிள்கள் தென்படுகி ன்றன. பருவநிலையைத் தாண்டி மனிதர்கள் சார்ந்தும் நகரத்தின் முகத்தோற்றங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்று தோன்றுகிறது. முந்தைய இரவு பார்த்த லண்டன் காலையில் வேறாக இருந்தது.

பிரமாண்டமான கட்டிடங்கள் அணிவகுத்திருந்த சாலையில் பிரிட்டன் பிரதமரின் வீட்டுக்கு அருகில் வண்டி நிற்கிறது. அடுத்த திருப்பத்தில் இந்தியா ஆஃபிஸ் இருக்கிறது. “நாம் இங்கிருந்தே நடக்கலாம்; நடந்து செல்லும் உணர்வே வேறாக இருக்கும்” என்றார் ஹெலன். இந்தியாவிலிருந்து எங்களுடன் வந்திருந்த பிரிட்டிஷ் தூதரக அதிகாரியான ஆசாத்தும் அதையே ஆமோதித்தார்.

நாங்கள் ‘இந்தியா ஆஃபிஸ்’ வளாகத்துக்குள் நுழைந்தோம். “இதை வடிவமைத்தவர் மேத்யூ டிக்பி வயாட். 1861-1868 காலகட்டத்தில் கட்டி முடித்தார். ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு வரலாறு உண்டு. உதாரணமாக, இந்தக் கட்டிடத்தின் புகைபோக்கி சிற்பி மைக்கேல் ரிஸ்பிராக் உருவாக்கியது. 1867-ல் இந்தக் கட்டிடம் தயாராவதற்கு முன் இதன் முற்றத்தில் துருக்கி சுல்தானுக்கு ஒரு விருந்து கொடுத்தார்களாம். அப்போதெல்லாம் இங்கு பயன்படுத்தப்பட்ட எல்லாப் பாத்திரங்களும் தங்கத்தால் செய்யப்பட்டவையாம்.” ஒவ்வொரு இடத்தையும் கடக்கையில் ஒவ்வொரு கதையாகச் சொல்லிக்கொண்டுவந்தார் ஹெலன்.

சுவரின் மேல் சுற்றிலும் பதிக்கப்பட்டிருந்த சிலைகளை அவர் காட்டினார். ஆசியாவை உருவகப்படுத்தும் பெண் ஒட்டகத்திலும் ஆப்பிரிக்காவை உருவகப்படுத்தும் பெண் சிங்கத்திலும் சவாரி செய்துகொண்டிருந்தார்கள். தேம்ஸ் நதி ஒரு தேவதையாக நின்றாள். விதானம், தூண்கள், திரைச்சீலைகள் என்று எல்லா வகையிலும் மூச்சுமுட்டவைத்தது அந்தக் கட்டிடம். ஒவ்வொரு அறையின் நீள, அகல, உயரமும் வேலைப்பாடுகள் மிக்க மரக் கதவுகளும் சாளரங்களும் தரை விரிப்புகளும் எந்த ஒரு சாமானியனையும் மலைக்க வைக்கும். கூடவே அச்சத்தையும் தரும். பிரமாண்ட இடங்கள் மனிதர்களுடைய பகட்டை மட்டும் அல்ல; மக்கள் இடையே ஒரு தாழ்வுணர்வை உண்டாக்கும் உளவியலையும் குழைத்தே கட்டப்படுகின்றன என்று தோன்றியது.

எந்த இருக்கைகளில் உட்கார்ந்து இந்தியாவின் முடிவுகளை பிரிட்டிஷார் எடுத்தார்களோ அதே இருக்கைகளில் இந்தியாவின் செய்தியாளர்கள் அமர கூட்டம் தொடங்கியது. பிரிட்டன் தன் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள இப்போதும் அதற்கு இந்தியா தேவைப்படுகிறது. அந்த அறையின் மையத்தில் சர் அயர் கூட் படம் இருந்தது. சரியாக, அந்தப் படத்துக்கு முன்பிருந்த இருக்கை எனக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. “உங்கள் சென்னையில் காலமானவர் கூட். தெரியும் இல்லையா?” என்றார் ஹெலன்.

கிழக்கிந்தியக் கம்பெனியின் படையில் முக்கியமானதளபதிகளில் ஒருவர் கூட். 1756-ல் ராபர்ட் கிளைவுடன் சேர்ந்துகொண்டார். பிளாசி போர் வெற்றி இங்கு அவருடைய தொடக்கம் ஆயிற்று. அடுத்து, மலபார் கடற்கரையிலும் வந்தவாசியிலும் புதுச்சேரியிலும் நடந்த சண்டைகளில் பிரெஞ்சுப் படைகளை அவர் வென்றார் . முன்னதாக ஆர்க்காட்டுப் போரில் முதல் வெற்றியைப் பெற்று ஆங்கிலேயே ஆட்சிக்கு ராபர்ட் கிளைவ் வித்திட்டிருந்தாலும், தென்னிந்தியாவை பிரிட்டிஷார் தக்கவைத்துக்கொள்ள கூட் பெரிய காரணமாக இருந்தார். பின்னாளில் இந்தியாவின் தலைமை தளபதி ஆனார். 80,000 வீரர்களைக் கொண்ட படையுடன் நின்ற ஹைதர் அலியை 10,000 வீரர்களைக் கொண்ட படையைக் கொண்டு கூட் தோற்கடித்ததை அவருடைய பெரிய போராகச் சொல்வார்கள்.

அடுத்த மூன்று நாட்கள் ஒயிட் ஹால் பகுதியின் வெவ்வேறு கட்டிடங்களில் கூட்டங்கள் நடந்தன. சர்வதேசம் ஒவ்வொரு நாட்டையும் எப்படி அணுகுகிறது; பிரச்சினைகள் அவரவர் பார்வையிலிருந்து அணுகப்படுகையில் எப்படியான பரிமாணத்தை அடைகின்றன என்பதை மிக நெருக்கமாகப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு அது என்று சொல்லலாம். பின்னர் எழுதுகிறேன்.

கூட்டம் முடிந்ததும் சாலையில் நடந்தே விடுதிக்குச் சென்றுவிட முடிவெடுத்தோம். அப்போதுதான் அதைக் கவனித்தேன். லண்டனில் திரும்பிய பக்கமெல்லாம் மரங்கள் நின்றன. “விடுதி வரவேற்பாளர் சொன்னது நினைவிருக்கிறதா, லண்டன் எப்போதும் கிராமங்களை மனதின் மையத்தில் வைத்திருக்கும்” என்று கேட்ட ஹெலனிடம் சொன்னேன், “நான் இந்த மரங்களின் கதையை முதலில் எழுத வேண்டும்!”

-சமஸ்,

https://tamil.thehindu.com/opinion/columns/article24469201.ece

Link to comment
Share on other sites

லண்டன்: காட்டுக்குள் ஒரு பெருநகரம்

 

 
d5f6da8bP1444002mrjpg

அன்று அதிகாலையிலேயே எழுந்துவிட்டேன். மரங்களுக்காக அந்த ஒரு முழு நாளை ஒதுக்கிக்கொள்வது என்று முந்தைய இரவில் முடிவெடுத்தேன். ஏழு நாள் லண்டன் பயணத்தில், மரங்களுக்காக ஒரு நாள் எனும் திட்டம் யோசித்தபோது மனதுக்குத் திருப்தி அளிப்பதாக இருந்தது. அது எவ்வளவு பெரிய அசட்டுத்தனம் என்பது விடுதியை விட்டுக் கிளம்பி சாலையில் கால் வைத்ததும் புரிந்தது. விடுதியைச் சுற்றியே இப்போது ஏராளமான மரங்கள் நின்றன. பெரிய பெரிய மரங்கள். நிறைய வயதான மரங்கள். எப்படி முதல் நாள் முழுமையிலும் கண்ணில் படாமல் போயின!

அன்றைக்கு மழை இன்னும் தொடங்கியிருக்கவில்லை. இரவு மழை பெய்த தடம் காற்றில் கலந்திருந்தாலும் மண்  உலர்ந்திருந்தது. வானம் கருநீலம் பூத்திருந்தது. மேகங்கள் கிழக்கு நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. லண்டனிலிருந்து கடல் தூரம். ஆனால், காற்றில் கடல் வாடையடித்தது. ஒருவேளை இதுவரை அறிந்திராத ஏதேனும் ஒரு மரத்திலிருந்து வெளிப்படும் மணமாகவும் இருக்கலாம். அதிகாலைகளை மரங்கள் தங்களுடையதாக மாற்றிவிடுகின்றன. கருத்த, வெளுத்த, பழுப்பேறிய, சாம்பல் பூத்த மரங்களை ஒவ்வொன்றாகக் கடந்தேன். இன்னும் வெளிச்சம் முழுவதுமாகச் சூழாத அந்த அதிகாலையிலேயே நகரம் சுறுசுறுப்பாகியிருந்தது.

 
 

விக்டோரியா பூங்காவுக்கு வரச்சொல்லியிருந்தார் ஹெலன். அங்கிருந்து ஒவ்வொரு பூங்காவாகப் பார்க்கலாம் என்று திட்டம். வாழ்க்கையை எவ்வளவு எளிமையாகத் திட்டமிட்டுவிடுகிறது ஒரு தமிழ் மனம்? மூன்று பூங்காக்களைப் பார்த்த மாத்திரத்தில் திட்டத்தின் அபத்தம் பல் இளித்தது. நகரம் எங்கிலும் மொத்தம் 3,000 பூங்காக்கள். பூங்கா என்பது பெயர்தான். எல்லாம் சிறு, குறு காடுகள். 35,000 ஏக்கருக்கு இவை பசுமை போர்த்தியிருக்கின்றன. சொல்லப்போனால், லண்டன் பெரிய நகர்ப்புறக் காட்டைத் தன்னுள்ளே உருவாக்கிக்கொண்டிருக்கும் பெருநகரம் என்று அதைச் சொல்லலாம் அல்லது வளர வளரப் பெருக்கும் ஒரு பெருநகரத்தைத் தன்னுள் உள்ளடக்கி  விரித்துக்கொண்டேயிருக்கும் காடு என்றும் அதைச் சொல்லலாம். ஹெலன் சிரித்தார்.

“இங்குள்ள மரங்களைப் பார்க்க உங்களுக்கு ஒரு ஆயுள் போதாது சமஸ். லண்டனில் இன்றுள்ள மரங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 84 லட்சம். இன்றைய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட ஒவ்வொரு லண்டன்வாசிக்கும் ஒரு மரம். மக்கள்தொகை ஏறஏற இந்த எண்ணிக்கையையும் அதிகரிக்க முயற்சி நடக்கிறது. இந்த மரங்கள் அத்தனையையும் ஒரே இடத்தில் தொகுத்தால் நகரின் 20% இடங்கள் மரங்களால் மட்டும் நிறைந்திருக்கும்.”

d5f6da8bP1444003mrjpg

“எனக்கு உண்மையாகவே பெரிய பிரமிப்பாக இருக்கிறது ஹெலன். லண்டனைக் காட்டிலும் விகிதாச்சார அடிப்படையில் கூடுதலான பசுமைப் பரப்பைக் கொண்ட நகரங்கள் ஐரோப்பாவில் உண்டு என்பதை அறிவேன். ஆனாலும், லண்டனில் இவ்வளவு மரங்கள் ஆச்சரியம்தான். தொழில்மயமாக்கலை உலகுக்கு அறிமுகப்படுத்திய நாட்டின் தலைநகரம். அதன் எல்லாச் சீரழிவுகளையும் பார்த்த நகரம். உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாக வளர்ந்த நகரம். இன்னும் விரிந்துகொண்டேயிருக்கும் நகரம். உங்களால் மரங்களைத் தொடர்ந்து  காக்க முடிகிறது?”

“தொடர்ந்து பாதுகாத்தோம் என்று சொல்ல முடியாது. நீங்கள் குறிப்பிட்ட விஷயம்தான். தொழில்மயமாக்கல் காலகட்டம் பெரிய நாசத்தை லண்டனில் உருவாக்கியது. கணிசமான மரங்களை இழந்தோம். நீர்நிலைகள் நாசமாயின. சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. லண்டனில் பனி நாட்களில் தொழிற்சாலைப் புகையால் மக்கள் வெளியவே வர முடியாத சூழல் எல்லாம் இருந்திருக்கிறது. நான் சொல்வதெல்லாம் நூறு, இருநூறு வருடங்களுக்கு முன்பு. தொழில்மயமாக்கல் தொடங்கியே இருநூற்றைம்பது வருடங்கள் தொடுகின்றன, அல்லவா? 1950-களில்கூட நிலைமை சீரடைந்தது என்று சொல்ல முடியாது. ஆனால், மரங்கள் மீது கை வைப்பது என்பது ஏதோ ஒருவகையில் புனிதத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறது. வருடத்தில் மரங்களைக் கொண்டாட மட்டும் லண்டனில் 60 நிகழ்ச்சிகள் நடக்கும்.”

d5f6da8bP1444005mrjpg

“எங்கள் தமிழ்க் கலாச்சாரத்திலும் மரங்களுக்குப் பெரிய இடம் உண்டு. சொல்லப்போனால், தலவிருட்சம் என்ற பெயரில் கோயிலுக்குக் கோயில் தனி மரங்கள் உண்டு. நாட்டார் மரபில் மரங்களே கடவுளாக வணங்கப்படுவதும் உண்டு. நெடிய கிராமியப் பண்பாடு எங்களுக்கு உண்டு என்பதை நீங்கள் படித்திருப்பீர்கள். அதற்கு இணையான இரண்டாயிரம் வருட நகரியப் பண்பாடும் உண்டு. என்னை எடுத்துக்கொண்டால், என்னுடைய சொந்த ஊரான மன்னார்குடி, ஒரு சிறுநகரம். கிட்டத்தட்ட ஆயிரம் வருடப் பழமையான ஊர். கச்சிதமாகத் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று அது. சின்ன ஊரில் நூறு குளங்கள் இருந்தன. ஊர் எல்லையில் சிறுவனங்கள் பராமரிக்கப்பட்டன. வரலாற்றின் ஏதோ ஒரு கணத்தில் இவ்வளவும் சடசடவென்று மக்களின் மறதிக்குள் போய்விட்டன. இன்று எல்லாம் மாறிவிட்டது. மரங்களை வெட்டுவது மிகச் சாதாரணமாகிவிட்டது. ‘வளர்ச்சி’, ‘விரிவாக்கம்’ என்ற பெயரில் ஒவ்வொரு நாளும் எங்கோ மரங்கள் கீழே வீழ்ந்தபடியே இருக்கின்றன.”

“மேம்பாடு என்பது வேண்டியதுதான். ஆனால், எதைக் கொடுத்து எதை வாங்குகிறோம் என்று ஒரு கேள்வி இருக்கிறது இல்லையா?”

“மனித வாழ்க்கையில் மிக முக்கியமான கேள்வி அது. எதைக் கொடுத்து எதை வாங்குகிறோம்? அது ஒன்றை ஞாபகத்தில் வைத்திருந்தால் பல பிரச்சினைகளுக்குத் தேவையே இல்லையே! காந்தி இதைத்தான் ஆழமாகக் கேட்டார். பிரிட்டனையே இந்த விஷயத்தில் கடுமையாக அவர் விமர்சித்திருக்கிறார். அதேசமயம், இங்கு வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் குடிமைப் பண்பை மெச்சவும் செய்திருக்கிறார். மக்கள்தொகை பிரச்சினையை எப்படி எதிர்கொள்கிறீர்கள்? வளரும் மக்கள்தொகைக்கு ஏற்ப நகரத்தை விஸ்தரிக்கும்போது மரங்களை எப்படிப் பாதுகாக்கிறீர்கள்?”

“இரண்டாயிரம் வருட வரலாற்றில் லண்டன் எல்லாக் காலங்களிலும் வளர்ந்தபடியே வந்திருக்கிறது. 1750-லேயே பிரிட்டனின் மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கினர் – 6.75 லட்சம் பேர் - லண்டனில் இருந்தார்கள். உலகில் முதலில் ஒரு மில்லியன் மக்கள்தொகையைத் தொட்ட ஐந்து நகரங்களில் ஒன்று இது. ஐம்பது லட்சம் மக்கள்தொகையைக் கடந்த முதல் நகரமும் இதுதான்.  தொழில்மயமாக்கல் காலகட்டத்தில் லீட்ஸ், மான்செஸ்டரில் ஏராளமான மக்கள் குவிந்தார்கள். அவ்வளவு தொழிற்சாலைகள் இங்கிருந்தன என்று சொல்லத்தக்க அளவுக்கு லண்டன் சூழல் இல்லை என்றாலும், லண்டனில் மக்கள் குவிவது நிற்கவே இல்லை. இன்றும் ஒரு சின்ன  அறைக்குள் வாழ்பவர்கள் அவ்வளவு பேர் இருக்கிறார்கள். ஆனால், நகரம் காங்கிரீட் மேடாக மாறிவிடக் கூடாது என்ற எண்ணம் மட்டும் மக்களிடம் இருக்கிறது. அப்புறம் ஒரு பட்ட மரத்தைக்கூட முன் அனுமதியில்லாமல் இங்கே வெட்டிவிட முடியாது. நீங்கள் அறிந்தே ஒரு மரம் சேதமடையக் காரணமாக இருந்திருக்கிறீர்கள் என்றால், 20,000 பவுண்டுகள் வரை அபராதம் உண்டு. ஒருவேளை ஒரு மரத்தை வெட்ட அனுமதி அளிக்கப்பட்டாலும் அதற்கு மாற்றாக இன்னொரு மரத்தை வளர்க்க வேண்டும்.”

d5f6da8bP1444001mrjpg

“இதற்காகவே லண்டன்வாசிகளுக்குப் பெரிய சலாம் போடுவேன் நான்!”

“உங்கள் பாராட்டை நீங்கள் லண்டன் மேயரை நேரில் சந்திக்கும்போது சொன்னால் அவர் சந்தோஷப்படுவார். ஏனென்றால், அடுத்தடுத்து வரும் மேயர்கள் எல்லோருமே மரம் வளர்ப்பில் எவ்வளவு அக்கறையைக் காட்டினாலும், ‘இதெல்லாம் போதாது’ என்றே பெரும்பான்மை லண்டன்வாசிகள் நினைக்கிறார்கள். நான் உட்பட. விளைவாக, காற்று மாசை எதிர்கொள்ள மரம் வளர்ப்பு நீங்கலாக செயற்கை மரங்களை இப்போது நகரத்தின் முக்கியப் பகுதிகளில் அமைக்கிறார்கள்.”

அப்படியான மரம் ஒன்றையும் ஹெலன் எனக்குக் காட்டினார். ‘சிட்டி ட்ரீ’ என்று அந்தக் கட்டுமானத்தைச் சொல்கிறார்கள். நான்கு சாலைச் சந்திப்பு ஒன்றில் அதைப் பார்த்தேன். செங்குத்தான புதர் வேலிப் பலகையை நிற்கவைத்ததுபோல அது காட்சியளிக்கிறது. பார்க்க பச்சைப்பசேலென்று இருக்கிறது. ஒருவகை பாசியில் செய்கிறார்களாம். அதில் உள்ள ஈரப்பசை காற்றில் கலந்து வரும் மாசுத்துகள்களையும் கெடுதல் செய்யும் கிருமிகளையும் ஈர்த்துக்கொள்ளுமாம். சுமார் 275 மரங்கள் உறிஞ்சும் அளவுக்கு இணையான மாசை இந்த ‘சிட்டி ட்ரீ’ ஒவ்வொன்றும் உறிஞ்சுகிறதாம். லண்டன்வாசிகளின் மனநலன் சார்ந்து மட்டும் ஆண்டுக்கு 260 கோடி பவுண்டுகளைச் செலவிடுகிறார்கள். இப்படி ஒவ்வொரு நோய்க்கான காரணத்தையும் செலவையும் சுற்றுச்சூழலோடு பொருத்திப்பார்க்கிறார்கள். ஒவ்வொரு மரமும் இந்த வகையில் விலைமதிப்பற்றதாக மாறிவிடுகிறது.

பசுமை லண்டனுக்காகக் குரல்கொடுப்பவர்கள் சிலரைப் பற்றி ஹெலன் என்னிடம் சொன்னார். அவர்களில் டேனியல் ரேவன் எல்லிசன் என்னை ஈர்த்தார். புவியியல் ஆசிரியரான இவர், குழந்தைகள் – மாணவர்களிடம் ஏன் ஒரு நகரம் பசுமையாக இருக்க வேண்டும் என்பதையும் என்னென்ன வழிகளில் எல்லாம் லண்டனை மேலும் பசுமையாக்கலாம் என்றும் தொடர்ந்து பேசிவருகிறார்.

“மரங்களால் நகரின் பொருளாதாரத்துக்கு மறைமுகப் பலன் அதிகம். காற்றில் கலக்கும் கரியமில வாயுவை வெளியேற்றி பிராண வாயுவை மரங்கள் வாரி வழங்குகின்றன. நகரில் மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படாமல் காக்கின்றன. நகரின் வெப்பத்தைத் தணிக்கின்றன. மேய்ச்சல் நிலங்களைக்காட்டிலும் மரங்கள் அடர்ந்த பகுதியின் நிலம் மழை நீரை அறுபது மடங்கு அதிகம் உறிஞ்சிக்கொள்கிறது. முக்கியமாக நச்சுக்காற்றால் மோசமாகாமல், மக்களுடைய சுகாதாரம் பாதிக்கப்படாமல் மரங்கள் தணிக்கின்றன. இதன் மதிப்பு மட்டும் ஆண்டுக்கு 1,327 லட்சம் பவுண்டுகள் என்று சொல்வேன். குழந்தைகளிடம் நான் முக்கியமாகச் சொல்வதே லண்டனில் 13,000 வகை ஜீவராசிகள் இருக்கின்றன. இந்த 13,000 ஜீவராசிகளில் மனிதனும் ஒன்று என்ற புரிதல் நமக்கு வேண்டும் என்பதைத்தான். இன்று உலகில் இறக்கும் ஏழு பேரில் ஒருவர் காற்று மாசினால் இறக்கிறார்; பிரிட்டனை எடுத்துக்கொண்டால் வருடத்துக்கு 40,000 பேர் காற்று மாசினால் இறக்கிறார்கள். மரங்களை வெட்டுபவர்கள் ஒருவகையில் கொலையாளிகள்” என்கிறார் ரேவன் எல்லிசன்.

ஆயிரம் வருடங்களைக் கடந்த பல மரங்கள் லண்டனில் இருப்பதாகச் சொன்னார் ஹெலன். டாட்டரிட்ஜ் யியூவில் உள்ள மரம் மிகப் புராதனமானது என்றார். அந்திரேயர் தேவாலய வளாகத்தில் உள்ள இந்த மரம் 2,000 வருடங்கள் பழமையானதாம். “ஐயாயிரம் வருடப் பழமையான மரங்கள் அமெரிக்கக் கண்டத்தில் இருக்கின்றன. அந்த வகையில் பார்த்தால் நாங்கள் ஏழைகள்” என்றார்.

“ரொம்ப ஏழைகள்தான்”  என்றேன்.

அன்று மாலை கொஞ்சம் சீக்கிரமாகவே ஹெலன் விடைபெற்றுக்கொண்டார். நன்கு இருட்டியும் விடுதிக்குத் திரும்ப மனமில்லாமல் வீதிகளில் சுற்றிக்கொண்டேயிருந்தேன். அநேகமாக எல்லா வீடுகளை ஒட்டியும் மரங்கள் நிற்கின்றன. வீட்டின் வாசலில், மாடி பால்கனியில் கொடிகளைப் படரவிட்டிருக்கிறார்கள். வீட்டுக்குப் பின்புறம் சின்ன தோட்டம். சாலைகளில் மரங்கள். மழைத் தூறல்கள் விழுந்தன. குடையை விரிக்க மனமில்லை. உடலும் குளிரவில்லை. இலக்கின்றி நடந்துகொண்டிருந்தேன். நெஞ்சமெல்லாம் குற்றவுணர்வு அப்பிக்கொண்டிருந்தது. எதை வாங்க இப்படி எல்லாவற்றையும் பறிகொடுத்துக்கொண்டிருக்கிறோம்?

- சமஸ்

 

(வெள்ளிதோறும் பயணிப்போம்...)

https://tamil.thehindu.com/opinion/columns/article24528628.ece

Link to comment
Share on other sites

லண்டன்: இயந்திரமும் விலங்கும்

 

 
a441071dP1445893mrjpg

லண்டனில் அதிகம் கூட்டம் குவியும் ‘ப்ரைமார்க்’ பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருந்தேன். ஆச்சரியமூட்டும் வகையில், நான் கையில் எடுத்துப் பார்த்த எந்த ஒரு துணி, பொருளும் பிரிட்டன் தயாரிப்பு இல்லை. சீன, இந்திய, வங்கதேச தயாரிப்புகள்  ஆக்கிரமித்திருந்தன. “ஒரு உடையால் கிடைக்கும் லாபத்தைவிட அந்த உற்பத்தியால் ஏற்படும் சூழல் இழப்பு அதிகம் என்றால் அதைத் தவிர்த்துவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு மேற்குலகம் வந்து வெகு நாட்கள் ஆகின்றன” என்று சொன்னார் ஆசாத்.நண்பர்களிடமிருந்து இரவு உணவுக்கான அழைப்பு வந்தது. அன்று மால்ட்பீ வீதிக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார் ஆசாத். பிராட்வே, பெர்விக், ப்ராக்லி, கேம்டன், மால்ட்பீ இவையெல்லாம் லண்டனில் சாலையோரக் கடைகளுக்குப் பிரசித்தமான சந்தை வீதிகள். உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஆயிரம் வகை உணவுகள் இந்த வீதிகளில் ஒரே இடத்தில் கிடைக்கும். மால்ட்பீ வீதியிலுள்ள மெக்ஸிகன் உணவகம் ஒன்றில் சால்மன் மீன் வறுவல் விசேஷம் என்று சொன்னார் ஆசாத். வழக்கத்துக்கு மாறாக எனக்கு வெளியே எங்கும் செல்ல அன்று மனதில்லாமல் இருந்தது. தாமதமாக விடுதி திரும்பியவன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். மனம் இருநூற்றைம்பது வருடங்கள் பின்னோக்கி தொழில்மயமாக்கல் காலகட்டத்தில் நிலைகொண்டிருந்தது.

இன்று நாம் எதிர்கொண்டுவரும் எத்தனையோ பிரச்சினைகளுக்கான வேர்கள் தொழில் புரட்சியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. மனிதகுல வரலாற்றிலேயே பெரும் திருப்புமுனையை உண்டாக்கிய தொழில் புரட்சியானது, அளவில் சின்னதான பிரிட்டனை வேறு எந்த நாட்டைவிடவும் செல்வாக்கும் அதிகாரமும் கொண்டதாக மாற்றியதோடு மட்டும் நிற்கவில்லை; ஒட்டுமொத்த உலகின் போக்கையும் திருப்பியது. உலகின் எல்லாக் கலாச்சாரங்கள், விழுமியங்கள் மீதும் மோதியது. நவீனத்துவத்தை ஏகாதிபத்தியமாக்கியது.

 

ரஷ்யப் புரட்சி, பிரான்ஸ், ஜெர்மனியின் எழுச்சி, அமெரிக்காவின் பாய்ச்சல், இரு உலகப் போர்கள் தந்த பின்னடைவு, சீனாவின் விஸ்வரூபம் இவற்றுக்கெல்லாம் பிறகு இன்று பிரிட்டன் சிறுத்துவிட்டிருக்கலாம். ஆனால், அது முன்னெடுத்த பாதையைத் தனக்கேற்பக்   கட்டமைத்துக்கொள்வதன் வாயிலாகவே நவீனப் பேரரசுகள் உருக்கொள்கின்றன. பிரிட்டன் உருவாக்கிய கற்பனையிலிருந்து உலகத்தால் விடுபடவே முடியவில்லை. தொழில்மயமாகும் எல்லா நாடுகளும் தங்களுக்கான நியாயத்தை வளர்ச்சிவாதத்திலிருந்தே பெறுகின்றன.

தேம்ஸ் நதிக்குச் சென்றிருந்தபோது ஹெலன் சொன்னார், “சமஸ், இந்த தேம்ஸ்தான் லண்டனின் ஆதாரம். பிரிட்டன் தொழில்மயமாக்கலுக்குள் நுழைந்தபோது, வளர்ந்து கொண்டேயிருந்த பொருளாதாரமும் பணமும்தான் எல்லோர் நினைவுகளையும் ஆக்கிரமித்திருந்தது. தேம்ஸ்தான் எங்கள் தலையில் தட்டி தொழில்மயமாக்கலின் இன்னொரு முகத்தைச் சுட்டிக்காட்டியது. ‘இந்த நதி செத்துவிட்டது’ என்று சொல்லும் அளவுக்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 150 வருடங்கள் இது மாசுபட்டுக் கிடந்தது.  தேம்ஸில் செல்லும் படகுகளை எலும்புக்கூடுகள் ஓட்டிச்செல்வதான படங்களாக வரைந்தார்கள் ஓவியர்கள். இன்று நதியை நிறைய மீட்டெடுத்திருக்கிறோம். தொழில்மயமாக்கல் உச்சத்தில் இருந்த நாட்களில் லண்டன் நகரம் புகை மண்டலமாகவும் தேம்ஸ் சாக்கடையாகவும் இருந்தது. இன்றைக்கும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று தேம்ஸ் சொல்லிக்கொண்டே இருக்கிறது.”

பிரிட்டனில் 1700-களின் மத்தியில், முதலில் வேளாண் துறையில் பெரும் மாற்றம் நடந்தது. வேளாண் துறைக்குள் கொண்டுவரப்பட்ட புதிய வகை விதைகள், புதிய தொழில்நுட்பங்கள், அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திரங்கள் இவை எல்லாமும் கூடி விளைச்சலை அதிகரித்தன. அதேசமயம், விவசாயத்திலிருந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையையும் குறைத்தன. உலகின் பல பகுதிகளிலும் தங்கள் காலனியாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டிருந்ததன் மூலம் பிரிட்டனுக்கு அன்று சாத்தியமாகியிருந்த தங்கு தடையில்லா கச்சாப்பொருள், அடுத்தடுத்து அறிமுகமான புதிய கண்டுபிடிப்புகள், ஒரு புதிய பெருக்கத்துக்குத் துடித்துக்கொண்டிருந்த மூலதனம் எல்லாம் சேர்ந்து பிரிட்டனைத் தொழில்மயமாக்கலில் இறக்கியபோது கிராமப்புறத்தின் வேலைவாய்ப்பின்மையே அதற்கான சமூக நியாயம் ஆனது. கிராமப் புத்துயிர்ப்புக்கான கற்பனை ஆவியாகியிருந்தது.

அதுவரை உள்ளூர் அளவிலானதாக வீடுகளிலும் சமூகங்களிலும் நடந்துவந்த உற்பத்தி பொது இடம் நோக்கி நகர்ந்தது. தொழிற்சாலைகள் உருவான இடங்கள் நகரங்கள் ஆயின. நகரங்கள் பெருநகரங்களாக விரிந்தன. மக்களை இந்த நகரங்கள் அலையலையாக இழுத்தன. 1750-ல் விவசாயப் பண்ணைகளில் இருந்த பிரித்தானியர்களின் எண்ணிக்கை 80%; 1850-களில் இது 50% ஆகக் குறைந்தது. தொழில்மயமும் நகரமயமும் ஒன்றை ஒன்று ஆரத்தழுவி வளர்த்துக்கொண்டன. உலக அளவில், கிராமப்புற மக்கள்தொகையைவிட நகர்ப்புற மக்கள்தொகை அதிகம் என்ற நிலை 2009-ல் உருவாகியிருப்பதை ஐநா சபை அறிவித்தது.

வரலாற்றில் எது ஒன்றையும் முழுக்க கருப்பு அல்லது வெள்ளையாக அணுக முடியாது. முரணியக்கத்திலேயே வரலாறு பயணிக்கிறது.

சுதந்திரப் பொருளாதாரம், அரசு தலையீடற்ற தொழில் – பொருளாதாரச் சூழலுக்கான முதலாளித்துவச் சித்தாந்தங்கள் இவையெல்லாம்தான் தொழில் புரட்சியின் பின்சக்திகளாகத் திகழ்ந்தன. முதலாளிகளின் ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டல், தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட அடிமை நிலை, கொடுங்கோன்மைச் சூழல் இவற்றிலிருந்து பீறிட்டெழுந்த உணர்வுகளும் குரல்களும் சமூக இயக்கங்களுக்கு வித்திட்டன. தொழிலாளர் உரிமைக்கான இயக்கங்கள், பெண்ணுரிமைக்கான இயக்கங்கள், சமத்துவத்துக்கான இயக்கங்கள் எல்லாம் தொழில் புரட்சியின் தொடர் விளைவுகளாகத் தோன்றியவை. பிரிட்டனுக்கும் ஜனநாயகத்தை அதுவே கொண்டுவந்தது. தொழிலாளர் உரிமைக்கான குரல் கூடவே ஜனநாயகத்துக்கான குரலாகவும் விரிந்தது.

சிக்கல் என்னவென்றால், தொழில்மயமாக்கல் எனும் இயந்திரத்தைக் கையாள மனித குலத்தால் முடியவில்லை. மாறாக, அது மனிதகுலத்தையும் இயற்கையையும் தன் கையில் எடுத்துக்கொண்டது. பிரிட்டனிலேயே அப்படிதான் அது தொடங்கியது. இன்றைக்குத் தொழில்மயமாக்கலில் சீனாவும் இந்தியாவும் இருக்கும் இடத்தில் பிரிட்டன் இருந்த நாட்களில் பிரிட்டனின் தொழில்பட்டறையாக இருந்தது மான்செஸ்டர் நகரம். அப்போது பிரிட்டன் முழுவதும் மக்களின் சராசரி ஆயுள் காலம் 41 ஆண்டுகள். மான்செஸ்டரிலோ 27 ஆண்டுகள். உயிருக்கும் பணத்துக்குமான தொடர்பு அப்போதே துலக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் இருந்த நிலையை அன்றைய பத்திரிகைகளைப் படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. “கருமேகம்போல நகரத்தைச் சூழ்ந்திருக்கிறது ஆலைகளின் புகை. காற்றில் கலந்திருக்கும் அமிலங்கள் நகரத்துக் கட்டிடங்களிலும், பாலங்களிலும் சிலைகளிலும் உள்ள உலோகங்களை உருக்கின, பாறைகளை அரிக்கின்றன. இந்த மாசு தங்களுடைய உடம்பையும் அரிக்கும்; உருக்கும் என்பதை உணராதவர்களா லண்டன்வாசிகள்? மூச்சுத்திணறலும், நெஞ்செரிச்சலும், கண்ணெரிச்சலும் எந்த ஆலைகளிலிருந்து உற்பத்தியாகின்றன என்பது புரியாதவர்களா லண்டன்வாசிகள்?”

1952-ல் ‘கொலைப் புகைமூட்டம்’ என்று வர்ணிக்கப்பட்ட மோசமான புகை ஐந்து நாட்களுக்கு லண்டன் நகரைச் சூழ்ந்திருந்திருக்கிறது. “காற்றில் மாசு கலந்திருப்பதால் வெளியில் செல்ல வேண்டாம், குழந்தைகள், பெரியவர்கள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் கதவுகளை இறுக மூடிவிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கவும்” என்று அரசு பொது அறிவிப்பு செய்யும் அளவுக்கு மாசு சூழ்ந்திருக்கிறது. இதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் பல நூற்றுக்கணக்கானோர் காற்று மாசால் உயிரிழந்திருக்கின்றனர். இப்படியான தொடர் பாதிப்புகள், மரணங்கள், இழப்புகள் எல்லாம் சேர்ந்து படிப்படியாக பிரிட்டனை வேறு ஒரு பாதை நோக்கித் திருப்பியிருப்பதை உணர முடிகிறது. ஒருபுறம், தீவிரமான மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களையும் மாசு

தவிர்ப்புச் செயல்திட்டங்களையும் முன்னெடுக்கிறார்கள். மறுபுறம், அதிக லாபமற்ற உற்பத்தியைத் தவிர்க்கிறார்கள்.

லண்டனில் அதிகம் கூட்டம் குவியும் ‘ப்ரைமார்க்’ பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருந்தபோது இதை உணர முடிந்தது. சென்னையிலுள்ள ‘சரவணா ஸ்டோர்ஸ்’ அங்காடியுடன் ஒப்பிடத்தக்க எல்லா விலையிலும் எல்லாம் உள்ள அங்காடி இது. ஆச்சரியமூட்டும் வகையில், நான் கையில் எடுத்துப் பார்த்த எந்த ஒரு துணி, பொருளும் பிரிட்டன் தயாரிப்பு இல்லை. சீன, இந்திய, வங்கதேசத் தயாரிப்புகள்  ஆக்கிரமித்திருந்தன. “ஒரு உடையால் கிடைக்கும் லாபத்தைவிட அந்த உற்பத்தியால் ஏற்படும் சூழல் இழப்பு அதிகம் என்றால் அதைத் தவிர்த்துவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு மேற்குலகம் வந்து வெகு நாட்கள் ஆகின்றன. இன்றைக்கும் ஐரோப்பாவில் அதிகம் மாசு உண்டாக்கும் தொழிற்சாலைகளின் பட்டியலில் பிரிட்டன் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. ஆனால், பிரிட்டனின் மாசை சீனாவின் மாசுடனோ, இந்தியாவின் மாசுடனோ ஒப்பிட முடியாது” என்று சொன்னார் ஆசாத். எனக்குத் திருப்பூரின் வருமானப் பெருக்கமும் நொய்யல் நதியின் சாவும் கண்ணில் தோன்றி மறைந்தன.

விளைவுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. உலகிலேயே நிலக்கரியை இன்று அதிகம் வெட்டியெடுக்கும், நுகரும் நாடு சீனா. ஆண்டுக்கு ஒரு கோடி டன் நிலக்கரிச் சாம்பலையும், ஒன்றரைக் கோடி டன் சல்பர் டை-ஆக்சைடு வாயுவையும் சீன ஆலைகள் காற்றில் கலக்கவிடுகின்றன. அப்படியென்றால், லண்டன் காற்றைவிட சீனக் காற்று நூறு மடங்கு அசுத்தமாகத்தானே இருக்க முடியும்?

உலகிலேயே அதிகமாக மாசால் உயிரிழப்பவர்கள் சீனர்கள். அடுத்த இடத்தில் இந்தியர்கள் இருக்கிறோம். ஆண்டுக்கு 25 லட்சம் உயிர்கள் இங்கே மாசால் போகின்றன.  பிரிட்டன் தொழில்மயமாக்கலை முன்னெடுத்தபோது அதற்கு முன்னுதாரணம் கிடையாது. விளைவாகப் பெரும் சேதத்தை விலையாகக் கொடுத்தது. பிரிட்டன் தொடங்கி சீனா வரை ஏராளமான வரலாறுகள் நம் கண் முன்னே இருக்கும்போதும் பாடம் கற்க ஏன் நாம் மறுக்கிறோம்? மேற்குலகு தன்னிடம் நஞ்சைக் குறைத்துக்கொள்ளும் ஒரு உத்தியாக மூன்றாம் உலக நாடுகளைப் பயன்படுத்துகின்றன. நாம் ஒருவேளை நான்காம் உலக நாடுகளை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோமா?

தன் உடலைத் தானே தின்னும் ஒரு விலங்கு கண் முன்னே உலவுகிறது!

 

 

(வெள்ளிதோறும்  பயணிப்போம்)

https://tamil.thehindu.com/opinion/columns/article24589293.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

லண்டன்: நீர்நிலைதான் சமூக வாழ்வின் அளவுகோல்!

 

 
downloadjpg

அன்றாடம் இரவு தூங்கச்செல்வது சவாலான ஒரு காரியமாகிக்கொண்டிருந்தது. மெல்லிய தூறல் விழும் பகல்கள், ரம்மியமான வானிலை, பிடித்தமான குளிர், புதுப்புது மனிதர்கள் - அனுபவங்கள், பிரகாசமான நினைவுகள் இவ்வளவையும் தாண்டி அடையாளம் தெரியாத ஓருணர்வு நெஞ்சில் ஊடுருவியிருந்தது. ஒவ்வொருநாளும் அதன் அடர்த்தியின்  சுமை அதிகமானபடி இருந்தது. இரவில் வீதியில் படர்ந்திருந்த மஞ்சள் விளக்கொளி வேறொரு காலகட்டத்துக்கு, வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்றது. கண்ணுக்குப் புலப்படாத ஒரு இழை வேறொரு வெளியோடு பிணைத்திருந்தது.

அன்றைய தினம் இரவு முழுவதுமாகவே உறங்கவில்லை. ஜன்னலின் வழியே விடியலின் கிரணங்களை எதிர்நோக்கியிருந்தேன். அதிகாலையில் முதல் கீற்று தென்பட்டபோது, ஜன்னல் திரைச்சீலைகளை விலக்கி கண்ணாடியைத் திறக்கிறேன். உள்ளே குத்தீட்டிகள்போல பாயும் குளிர்க்காற்று. தேம்ஸ் நதி நோக்கி அது அழைத்தது. 

 

அந்த அதிகாலையில் நீளமான கருநீல கோட் அணிந்த ஒரு முதிய தம்பதி என் கார் நிறுத்தப்பட்ட இடத்தில், பாலத்தின் கைப்பிடியைப் பற்றி ஓடி விரையும் தண்ணீரைப் பார்த்தபடி நின்றிருந்தார்கள். அதிகாலை நேர தேம்ஸ் சூழல் ஒரு ஓவியம்போல இருந்தது. ஆமாம், ஓவியத்துக்குள் நுழைவது மாதிரிதான் அது இருந்தது.

சுமார் அரை மணி நேரம் இருக்கும். அந்தத் தம்பதி புறப்பட்டனர். பெரியவர் என்னைக் கடந்தபோது அவருக்கு வணக்கம் தெரிவித்தேன். என்னைப் பற்றி அவர் விசாரித்தார். “தேம்ஸைத் தெரிந்துகொள்ள அருங்காட்சியகம் செல்லுங்கள். அங்குள்ள பொருட்கள் தேம்ஸை மட்டும் அல்லாது மனித நாகரிக வளர்ச்சியைப் புரிந்துகொள்ளவும் உங்களுக்கு உதவியாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு கை குலுக்கினார்.

அன்று பகலில் ஹெலனைச் சந்தித்தபோது இதைச் சொன்னேன். தேம்ஸுக்குள் அவர் அழைத்துச்சென்றார். தேம்ஸிலிருந்து கண்டெடுத்த சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்களை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கிறார்கள். நதி அடித்துக்கொண்டுவந்த, நதியில் வீசப்பட்ட, கைவிடப்பட்ட, தொலைத்த பொருட்கள். நதியைத் தூர் வாரும்போதும், பாலங்கள் கட்டுமானத்தின்போதும் நதிக்குள் இறங்கிய தொழிலாளர்கள் கண்டெடுத்த பொருட்கள். லண்டன் உருவாவதற்கு முந்தைய புதிய கற்காலத்திலிருந்து, கிட்டத்தட்ட ஐயாயிரம் வருஷ வரலாற்றுக் கதைகளை அவை தமக்குள் வைத்திருக்கின்றன.

இங்கிலாந்தின் நீளமான நதி தேம்ஸ். ஆக்ஸ்போர்டு, ரீடிங், விண்ட்ஸர் வழியாக 346 கி.மீ. நீளத்துக்குப் பாயும் தேம்ஸ் நன்னீராகப் பயணிக்கும் இடங்களும் உண்டு, கடல் நீர் அளவுக்கு உப்புநீராகப் பயணிக்கும் இடங்களும் உண்டு. சில இடங்களில் நதியில் இருபது அடி உயரம் அளவுக்கு அலைகள் எழுந்தடங்குகின்றன.  “ஆயிரக்கணக்கான கவிஞர்களும் எழுத்தாளர்களும் ஓவியர்களும் கலைஞர்களும் தங்கள் படைப்புகளில் அள்ளிக்கொண்ட நதி தேம்ஸ். மாபெரும் வரலாற்று சாட்சியம். ஜூலியஸ் சீஸர் இரண்டு முறை தேம்ஸ் வழியாகப் பயணித்திருக்கிறார். தேம்ஸ் நதிக்கரையில்தான் ஜான் மன்னரால் கொண்டுவரப்பட்ட ‘மாக்னா கார்ட்டா’ மகா சாசனம் கையெழுத்தானது.

பிரிட்டிஷ் வாழ்க்கையின் அளவுகோல் என்று தேம்ஸைச் சொல்லலாம். தேம்ஸ் நன்றாக இருந்தால் எங்கள் வாழ்க்கையும் தரமாக இருக்கிறது என்று அர்த்தம். தேம்ஸ் பொலிவிழந்தால் எங்கள் வாழ்க்கையும் நாசமாகிக்கொண்டிருக்கிறது என்று அர்த்தம். சொல்லப்போனால், நம்மைச் சுற்றியுள்ள நீர்நிலைகள்தான் நாம் வாழும் ஊரின் வாழ்க்கைத்தரத்துக்கும் நாம் வாழும் காலத்தின் மனப்போக்குக்கும் நேரடி சாட்சியம்” என்றார் ஹெலன்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தேம்ஸ் அடைந்துவந்திருக்கும் மாற்றங்களை பிரிட்டிஷார் தொடர்ந்து பதிவுசெய்திருக்கிறார்கள். 1683-84-ல் தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு தேம்ஸ் நதி பனியாக உறைந்திருக்கிறது. ‘தி க்ரேட் ஃப்ராஸ்ட்’ என்று அதை நினைவுகூர்கிறார்கள். 1814 பனிக்காலத்தில் இதேபோல நதி மீண்டும் உறைந்திருக்கிறது. ஆனால், இம்முறை ஐந்தாவது நாளில் அது உருகி ஓடியிருக்கிறது.

1858 கோடைக்காலத்தில், தேம்ஸில் கலந்த கழிவுநீர் கடும் நாற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. அந்த சமயத்தில் நாடாளுமன்றக் கூட்டத்தையே இந்தக் காரணத்தால் ஒத்திவைக்க வேண்டியிருந்ததாம். அப்போது உருவான விவாதமே, 1865-ல் ஜோஸப் பாஸல்கேட் லண்டன் சாக்கடைத் திட்டத்தை உருவாக்க வழிவகுத்திருக்கிறது. எல்லாவற்றையும் ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த லண்டனுக்கும் ஜீவாதாரமாகவும் வடிகாலாகவும் தேம்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட நதி, இடையில் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு உயிரற்று இருந்திருக்கிறது. வீடுகளிலிருந்து, வணிக நிறுவனங்களிலிருந்து, தொழிற்சாலைகளிலிருந்து கழிவுநீர் நதிக்குள் சென்றிருக்கிறது. குப்பைகளும் கழிவுகளும் நதியில் கலந்தன.

“லண்டன் மாநகரின் அடையாளங்களில் ஒன்றான தேம்ஸ் நதி உயிரியல்ரீதியாக செத்தேவிட்டது” என்று பத்திரிகைகள் எழுதியிருக்கின்றன. “மிக மோசமாக நிர்வகிக்கப்படும் சாக்கடையாகிவிட்டது தேம்ஸ்” என்றும், “லண்டன் பாலத்துக்கு மேலும் கீழும் பல மைல்களுக்கு ஆக்சிஜனே இல்லை” என்றும் எழுதியிருக்கிறது ‘கார்டியன்’.

தூய்மையான நீரில் மட்டுமே ஜீவித்திருக்கக்கூடியதும் தேம்ஸின் அடையாளங்களில் ஒன்றானதுமான சால்மன் மீன்கள் ஒருகாலகட்டம் நெடுகிலும் தேம்ஸிலிருந்து அற்றுப்போயிருக்கின்றன. 1833-க்குப் பிறகு ஒரு நீண்ட காலத்துக்கு தேம்ஸில் சால்மன் மீன்களே இல்லை. ஐம்பதாண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட தேம்ஸ் எந்த உயிரினமும் வாழத் தகுதியற்றதாகவே இருந்திருக்கிறது.

நதியை மீட்டெடுக்கும் தீவிரமான முயற்சிகளுக்குப் பின், 1974-ல் ஒரு சால்மன் மீன் தேம்ஸில் தென்பட்டிருக்கிறது. பிறகு, உயிரினங்கள் பெருகியிருக்கின்றன. இப்போது நூற்றுக்கும் மேற்பட்ட மீன் இனங்களோடு, கடல் பன்றிகள், நீர் நாய்கள், ஓங்கல்கள் என்று நூற்றுக்கும் மேற்பட்ட உயிரினங்கள் தேம்ஸில் இருக்கின்றன. திமிங்கலங்கள்கூட எப்போதாவது தென்படுகின்றன என்கிறார்கள்.

தேம்ஸ் மட்டும் அல்ல; பிரிட்டனின் பெரும்பாலான நதிகள் தொழில்மயமாக்கல் காலகட்டத்தில் சாக்கடைத் தோற்றத்துக்குச் சென்றே இன்று மெல்ல மேம்பட்ட நிலைக்குத் திரும்பிக்கொண்டிருக்கின்றன. மெர்சிசைடு - கிரேட்டர் மான்செஸ்டர் பகுதிகளில் பாயும் மெர்சி நதி, நியூகேசல் பகுதியில் பாயும் டைன் நதி என்று முக்கிய நதிகள் பலவும் புது வாழ்க்கையைப் பெற்றிருக்கின்றன.

இந்த மாற்றத்தைப் பற்றி ஹெலனிடம் கேட்டேன். “இன்றும்கூட பிரிட்டனில் பாயும் ஆறுகளில் நான்கில் ஒரு பகுதி நதி நீர் மட்டுமே தரமானதாக இருப்பதாகச் சொல்கிறார்கள். நான்கில் இரு பகுதி நீரின் தரம் பரவாயில்லை என்று சொல்லத்தக்க நிலையிலும் ஒரு பகுதி நீரின் நிலை மோசம் என்றும் சொல்கிறார்கள். முக்கியமான மாற்றம், சூழலைக் கெடுக்கும் நிலக்கரி, ரசாயனப் புகை, சாம்பல் தூள்களை வெளியேற்றும் பழைய பாணி தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன.

நதியையும் நதிக்கரையையும் பராமரிக்கும் அமைப்பு தன்னாட்சியுடன் செயல்படுகிறது. வீடுகள், தொழிலகங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள், குப்பைகளைச் சுத்திகரிக்கவும் நதிகளில் இவை கலக்காமல் இருக்கவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. நீர்நிலைகள் பாதுகாப்பு சமூகக் கடமை என்ற எண்ணம் உருவாக்கப்பட்டிருக்கிறது” என்றார்.

எனக்கு மேலும் ஒரு விஷயம் கண்ணில் பட்டது. மக்களுக்கும் ஏனைய உயிரினங்களுக்கும் இடையிலான உறவில் அங்கு ஒரு நெருக்கம் இருப்பதாகத் தோன்றியது. லண்டனில் பல இடங்களில் செந்நிற நரிகளைப் பார்க்க முடிந்தது. சில இடங்களில் நடைபாதைகளில் அவை மனிதர்களோடு மனிதர்களாக நடந்து கடந்ததையும், கடப்பவர்கள் தரும் உணவை அமர்ந்து சாப்பிடுவதையும் பார்த்தேன். பூங்காக்களில் திரியும் மான்கள் நகர வாழ்க்கைக்கு நன்கு பழக்கப்பட்டவையாகத் தெரிந்தன.

மக்களும் நரிகளையோ, மான்களையோ கண்டால் அஞ்சவில்லை, அவற்றை விரட்டவில்லை. சிரித்தபடி, அவற்றுடன் விளையாடியபடி கடந்தனர். மனிதர்களுக்கானது மட்டும் இல்லை நகரம் என்ற உணர்வை வெளிப்படுத்துவதுபோல இருந்தது அவர்களுடைய செயல்பாடு. மேலும், மேற்கத்திய நாடுகளின் இன்றைய சூழல் மேம்பாடு அவர்களுடைய அரசியலுணர்வோடும், ஜனநாயக மதிப்பீடுகளோடும் பிணைக்கப்பட்டிருப்பதாகவும் தோன்றியது.

ஹெலன், “இது ஒரு சுவாரஸ்யமான வாசிப்பு” என்றார். “பொதுவாக, கிராமப்புற நரிகளைவிட லண்டன் நகர்ப்புற நரிகள் துணிச்சலானவை” என்றவர், “ஒருமுறை நாடாளுமன்றத்திலேயே நுழைந்த ஒரு நரி, அலமாரியில் படுத்து சுகமாகத் தூங்கிக்கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாலும் இதையெல்லாம் விரும்பவே செய்கின்றனர். கூர்ந்து கவனித்தால் பாதையை சகஜமாகக் கடக்கும் பல ஜீவராசிகளை நீங்கள் பார்க்க முடியும்” என்றார்.

“பிரிட்டன் நதிகள் இன்று கடந்தகாலத்தில் இல்லாத வேறொரு பிரச்சினையை எதிர்கொண்டிருக்கின்றன. எங்கும் நிறைந்துவரும் பிளாஸ்டிக் கழிவுதான் அது. ஆண்டுதோறும் கழிவுநீர்ப் பாதையிலிருந்து 25,000 டன் அளவுக்குக் குப்பைகள் வாரப்படுகின்றன. இப்போது பிளாஸ்டிக் பிரச்சினையிலும்கூட உயிரினங்கள் எப்படியெல்லாம் வதைபடுகின்றன என்பதை விவரித்துதான் மக்களிடம் விழிப்புணர்வை உண்டாக்க முற்படுகிறது அரசாங்கம்” என்றார்.

பிரிட்டனின் கிராமங்களைப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. “ஆமாம், நீங்கள் அவசியம் கிராமப்புற பிரிட்டனைப் பார்க்க வேண்டும். உங்கள் கிராமங்களிலிருந்து எங்கள் கிராமங்கள் வேறுபட்டவை என்றாலும், கிராமங்கள் வெறிச்சோடுவதை இங்கும் தவிர்க்கவே முடியவில்லை.

நம் பாதையில் பெரிய கோளாறு இருப்பதையும் நாம் தோற்றுக்கொண்டே இருப்பதையும் நம்முடைய கிராமங்கள்தான் நமக்குச் சொல்கின்றன” என்றார். “நம்முடைய நகர்ப்புற வாழ்க்கை தரமாக இருக்க வேண்டும் என்றால்கூட கிராமத்தைப் பற்றிய புரிதலினூடாகவே அது சாத்தியம். நாமோ கிராமத்துக்கு வெளியிலிருந்து கிராமங்களைக் கையாள முனைகிறோம்” என்றேன் நான்.

(வெள்ளிதோறும் பயணிப்போம்…)

https://tamil.thehindu.com/opinion/columns/article24767881.ece

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

லண்டன்: நடப்பதற்கு ஒரு நகரம்

 

 
6d9a72d5P1505534mrjpg

ஒரு ஆரோக்கியமான மாற்றம் உருவாகியிருந்தது. லண்டன் வந்தது முதலாக அன்றாடம் சுமார் 20 கி.மீ. தூரம் வரை நடக்க ஆரம்பித்திருந்தேன். நடை, மிகுந்த விருப்பத்துக்குரியதாக ஆகியிருந்தது. மரங்களின் நிழல் தரித்த, மேடு பள்ளங்கள் - குறுக்கீடுகள் அற்ற, அகல விரிந்த நடைபாதைகள் மேலும் மேலும் நடக்கும் உத்வேகத்தை அளித்தன. உடலைத் துளைக்கும் குளிரானது நடையில் அபாரமான ஒரு வேகத்தைக் கூட்டியிருந்தது. கதகதப்பான கோட்டும், எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தக்கூடிய மழையை எதிர்கொள்ள கையில் ஒரு குடையும் இருந்தால் நாளெல்லாம் நடந்துகொண்டே இருக்கலாம்போல் இருந்தது.

நகரம் சில்லிட்டிருந்தது. நகரின் கடைவீதிகளைச் சுற்றிவர அன்றைய மதியப் பொழுதைத் தேர்ந்தெடுத்திருந்தேன். நண்பகலுக்குப் பிந்தைய, சாயங்காலத்துக்கு முந்தைய, இந்த இரண்டுக்கும் இடைப்பட்ட பொழுதானது கடைகளை வேடிக்கைபார்த்தபடி நடக்கவும், விருப்பமான கடைகளில் சடாரென்று உள்ளே நுழைந்து ஒரு பார்வையிட்டுத் திரும்பவும் வசதியானது. எந்த நகரின் கடைவீதியும் சோம்பல் முறிக்கும் நேரம் அது.

 

வாடிக்கையாளர்கள் சாலையை வேடிக்கைபார்த்தபடி சாப்பிட ஏதுவாக உணவு விடுதியின் வாசல் பகுதியில் போடப்பட்டிருந்த மர மேஜை ஒன்றின் முன் அமர்ந்தேன். நடைபாதையை ஆக்கிரமிக்காமல், தங்களுடைய கடைகளின் முன் பகுதியிலேயே இடம் ஒதுக்கி, நடைபாதையின் ஒரு பகுதிபோல இப்படி மேஜை நாற்காலிகளை அவர்கள் போட்டிருந்த விதம் பிடித்திருந்தது. ஒரு காபி சொல்லிவிட்டு சாலை அமைப்பைக் கவனிக்கலானேன். தற்செயலாகக் கண்கள் சந்திக்க நேர்ந்த, எதிரே உட்கார்ந்திருந்த பெண் ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அவள் முன்னிருந்த பிஷ் அண்ட் சிப்ஸை சாப்பிடலானாள்.

சாலையின் இரு மருங்கிலும் மரங்கள். நடைபாதைகளையும் சாலைகளையும் பிரிக்கும் இடத்தில் சின்னத் தடுப்புகள். பல பிரிவுகளாகத் தடம் பிரிக்கப்பட்ட சாலைகளில், சைக்கிள் ஓட்டிகளுக்கான தடம் தீர்க்கமாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. இது தவிர இரு புறமும் விரிந்திருக்கும் நடைபாதைகளில் மனிதர்கள் வேக வேகமாக நடந்து கடக்கிறார்கள். கடைவீதி நடைபாதைகளில் பூக்கள் - பூங்கொத்துகள் விற்பவர்கள், முந்திரி பாதாம் பருப்பு வறுவல் விற்பவர்கள், உடைகள் விற்போர், கைவினைப் பொருட்களை விற்போர் எல்லோருக்கும் இடம் இருக்கிறது. இவ்வளவு பேரையும் தாண்டி இடையூறின்றி நடப்பதற்கு நடைபாதையில் தாராளமான இடம் இருக்கிறது. பெரிய வீதிகளில் ஒரு பஸ் செல்லும் அளவுக்கு, சின்ன வீதிகளில் ஒரு கார் செல்லும் அளவுக்கு நடைபாதைகள் அகலமாக இருக்கின்றன.

6d9a72d5P1505533mrjpg

பாதசாரிகளின் சொர்க்கம் என்று லண்டனைச் சொல்ல முடியாது. “ஐரோப்பாவின் பல நாடுகளில், குறிப்பாக ஸ்காண்டிநேவியன் நாடுகளில் பாதசாரிகளுக்கு உள்ள வசதிகளோடு ஒப்பிட்டால் லண்டன் சாலைகளில் பாதசாரிகளுக்கு உருவாக்கப்பட வேண்டிய வசதிகள் இன்னும் அதிகம்; அதேபோல, ஏனைய பல ஐரோப்பிய நகரங்களுடன் ஒப்பிட லண்டன்வாசிகள் நடப்பது குறைவு” என்று நண்பர்கள் சொன்னார்கள். ஆனால், மக்கள்தொகை பெருக்கமும் போக்குவரத்து நெரிசலும் மிக்க இந்திய நகரங்கள் லண்டனிடமிருந்தே நிறைய பாடங்களைப் பெற முடியும் என்று எனக்குத் தோன்றியது.

இப்படி நினைக்க இரண்டு முக்கியமான காரணங்கள் உண்டு. ஸ்காண்டிநேவியன் நகரங்களைப் போல அல்லாமல் மக்கள் நெருக்கடிமிக்க நகரம் லண்டன் - உலகிலேயே அதிகமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் ஒன்று. அடுத்து, இரண்டாயிரம் வருடப் பழமையான நகரம் அது.

லண்டன் நகரின் மையப் பகுதியிலுள்ள பல சாலைகள் பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சூழலுக்கேற்றபடி அமைக்கப் பட்டவை. நகரில் மேற்கொள்ளும் எந்தச் சீரமைப்பையும் மேம்பாட்டையும் பழைய கட்டுமானங்களினூடாக இருக்கும் குறுகலான சாலைகள் வழியாகவே மேற்கொள்கிறார்கள். இந்திய நகரங்கள் எதிர்கொள்ளும் சவால்களுடன் நெருக்கமானது இது. தொழில்மயமாக்கல் காலகட்டத்திலேயே உலகின் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நகரம் என்ற இடத்துக்கு லண்டன் நகர்ந்துவிட்டதால், அதற்கேற்ப பொதுப் போக்குவரத்து வலையமைப்பை விஸ்தரிக்கும் வேலைகளை நூறாண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டது பிரிட்டன்.

உலகிலேயே முதன்முதலாக - 150 ஆண்டுகளுக்கு முன்னரே - நிலத்துக்கு அடியில் ஓடும் மெட்ரோ ரயில் திட்டம் லண்டனில்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகின் மிகப் பெரிய பஸ் சேவைக் கட்டமைப்பும் லண்டனுடையது. படகு, ரயில், பஸ், கேபிள், டிராம், விமானம் என்று அத்தனை சாத்தியங்களும் நகருக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. 1933-ல் உருவாக்கப்பட்ட லண்டன் பயணியர் போக்குவரத்து வாரியத்தில் ரயில்கள், டிராம்கள், பஸ்கள் அனைத்தும் இணைக்கப்பட்டது பொதுப் போக்குவரத்து இயக்கத்தில் முன்னோடிச் செயல்பாடு. இவ்வளவையும் தாண்டி மக்களிடம் நடையை ஊக்குவிக்கவே பிரதான கவனம் அளிப்பதாகத் தெரிவித்தார் லண்டன் மேயர் சாதிக் கான்.

ஒவ்வொரு பிரிட்டிஷ்காரரும் குறைந்தபட்சம் 10,000 அடிகள் - தோராயமாக ஐந்து மைல்கள் - அன்றாடம் நடப்பது சூழலை மேம்படுத்துவதுடன் வலுவான உடல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும் என்று பிரிட்டிஷ் அரசின் தேசிய சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது. அலுவலகம், பள்ளி கல்லூரி, கடைகளுக்குச் செல்வதற்காக அன்றாடம் பதினைந்து மைல்கள் வரை நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்களை நான் சந்தித்தேன். “வருஷத்துக்குப் பத்தாயிரம் பேர் வரை காற்று மாசால் லண்டனில் உயிரிழக்கிறார்கள். தவிர்க்க முடியாத சூழலின்றி மோட்டார் வாகனத்தில் ஒரு தனிநபர் கை வைப்பது கொலைபோலவே தோன்றுகிறது” என்றார்கள்.

நடையை ஊக்குவிப்பது எதிர்காலப் போக்குவரத்தை எதிர்கொள்வதற்கான சிறந்தச் செயல்திட்டம் என்பதைத் தாண்டி பெரிய நிதியாள்கைத் திட்டமும் ஆகும் என்று பொருளாதார ஆய்வறிஞர்கள் தெரிவித்தனர். “லண்டனில் வசிக்கும் ஒவ்வொருவரும் அன்றாடம் வெறும் 20 நிமிஷங்கள் நடந்தாலே, அடுத்த 25 ஆண்டுகளில் அரசின் தேசிய சுகாதார சேவைக்கான செலவில் 100 கோடி பவுண்டுகளை மிச்சப்படுத்தலாம். அதாவது, நடப்பதை வழக்கமாக்கிக்கொண்டால் அடுத்த 25 ஆண்டுகளில் 85,000 பேருக்கு இடுப்பு எலும்பு முறிவு, 19,200 பேருக்கு நினைவிழத்தல், 18,800 பேருக்கு மன அழுத்த நோய்கள் வராமல் தடுத்துவிடலாம்” என்று அவர்கள் மதிப்பிடுகிறார்கள்.

6d9a72d5P1505532mrjpg

உலகிலேயே நடப்பதற்கு மிகவும் எளிதான நகரமாக லண்டனை மாற்றும் செயல்திட்டத்தை இப்போது லண்டன் மாநகராட்சி மேற்கொண்டிருக்கிறது. “பத்தாண்டுகளுக்குள் பாதசாரிகள் இடையே மேலும் பத்து லட்சம் நடைகளை அதிகரிக்க வேண்டும் என்பது லண்டன் மாநகர நிர்வாகத்தின் இலக்கு. இதற்கேற்ப சாலைகள் மறுவடிவமைக்கப்படும், நிர்வகிக்கப்படும். நடைபாதைகள் மேலும் அகலப்படுத்தப்பட்டு, நடப்பவர்களுக்கான வழிகாட்டும் அமைப்புகள், வசதிகள் யாவும் மேம்படுத்தப்படும். இன்று லண்டன்வாசிகளில் 60% பேர் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துகிறார்கள். இதை 25 ஆண்டுகளுக்குள் 80% ஆக உயர்த்தத் திட்டமிட்டிருக்கிறோம். இதற்கெனவே 200 கோடி பவுண்டுகளை முதலீடு செய்கிறோம்; நடைபாதைகளை இதயத்துக்கு நெருக்கமானதாக மாற்றவிருக்கிறோம்” என்றார் நகரின் நடைபாதைத் திட்டங்களுக்கான ஆணையர் வில் நார்மன்.

எனக்கு லண்டனைச் சுற்றிக்காட்டிய டாக்ஸி ஓட்டுநர் ஜான் பிலிப், “எதிர்காலத்தில் நகருக்குள் டாக்ஸி நீங்கலாக காரே இல்லாமல் அரசாங்கம் செய்துவிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை” என்றார். இப்படிச் சொன்னவர், “நாளை டாக்ஸிகளுக்குத் தடைவிதிக்கப்பட்டாலும்கூட நான் வரவேற்கவே செய்வேன். தனிப்பட்ட வகையில் எனக்கு அது சிக்கல். நான் வேறு வேலை தேட வேண்டி இருக்கும். ஆனால், பொது நன்மைக்கு இது அவசியம். காற்று மாசு வருஷந்தோறும் அத்தனை பேர்களைக் கொல்கிறது” என்றார். கேட்க சந்தோஷமாக இருந்தது.

லண்டனில் தனியார் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ஏராளமான நடவடிக்கைகளை அரசு ஏற்கெனவே எடுத்திருக்கிறது. அவற்றையெல்லாம் ஜான் பிலிப் சொல்லிக்கொண்டே வந்தார். மத்திய லண்டன் பகுதியில் வாகனப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த ‘நெரிசல் கட்டணம்’ என்று ஒரு நாளைக்கு 10 பவுண்ட் வசூலிப்பதை 2003-ல் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். சாலைப் போக்குவரத்தில் 10% வாகனங்களைக் குறைக்கும் என்று எதிர்பார்த்து எடுக்கப்பட்ட இந்நடவடிக்கை அடுத்த சில ஆண்டுகளில் ஆச்சரியமூட்டும் வகையில் மூன்றில் ஒரு பங்கு வாகனங்களைக் குறைத்திருக்கிறது. “இதற்கெல்லாம் கார் உரிமையாளர்களிடமிருந்து எதிர்ப்பு இல்லையா?” என்று கேட்டேன். “முதலில் எதிர்த்தார்கள். ஆனால், நாளாக நாளாகப் புரிந்துகொண்டார்கள். அரசாங்கம் வெறும் கட்டுப்பாடுகளை மட்டும் கொண்டுவருவதில்லை. மக்களிடம் பிரச்சினைகளை விளக்கவும் செய்யும்” என்றார் ஜான் பிலீப்.

6d9a72d5P1505531mrjpg

நம்முடைய ஆட்சியாளர்கள் கவனிக்க வேண்டிய அம்சம் இது. இந்தியா வேகவேகமாக நகர்மயமாக்கலைச் சுவிகரீத்துக்கொண்டிருக்கிறது. பீதியூட்டும் வகையில் நம்முடைய நகரங்கள் வளர்கின்றன. நகரங்களை மக்கள் ஆக்கிரமிக்கிறார்கள். ஆனால், நகரக் கலாச்சாரம் ஒன்றை இந்திய அரசு வளர்த்தெடுத்திருக்கிறதா?

டெல்லிக்கு முதல் முறை செல்கிறேன். காசியிலிருந்து டெல்லி செல்லும் ரயில் அது. கோடைகாலம். சீக்கிரமே விடிந்துவிட்ட காலை. ரயில் ஜன்னல்வழி கோதுமை வயல்களை வேடிக்கைபார்த்தபடி உட்கார்ந்திருக்கிறேன். டெல்லியின் புறநகர்ப் பகுதியில் ரயில் நுழைந்துகொண்டிருக்கிறது. பாதையின் இருமருங்கிலும் மலம் கழித்தபடி மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். கையில் பிளாஸ்டிக் பாட்டிலில் தண்ணீர். முந்தைய வாரம் நெடுகிலும் கிராமங்களில் நான் பார்த்த காட்சிக்கும் இதற்கும் ஒரே வேறுபாடுதான் இருந்தது. கிராமப்புற இந்தியாவில் சொம்பு. நகர்ப்புற இந்தியாவில் பாட்டில்.

இந்திய அரசு தொழில்மயமாக்கலில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறது. அதையொட்டியும் ஒரு ஆழமான கேள்வியை நாம் எழுப்பிக்கொள்ள முடியும். தொழில்மயமாக்கலை நோக்கி மக்களைத் தள்ளும் அரசு எந்த அளவுக்குத் தொழில் சிந்தனையை மக்களிடம் உருவாக்குகிறது? அதற்கேற்ற சூழலை உருவாக்க முனைகிறது? மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு, அச்சங்களுக்குப் பதில் அளிக்க முற்படுகிறது?

பிரிட்டனில் தொழில்மயமாக்கல் நடந்த காலகட்டத்தில் காபி ஹவுஸ்களில் நிகழ்த்தப்பட்ட தொழில்மயமாக்கல் குறித்த விளக்கவுரைகள், அறிவியல் செயல்விளக்கங்களை இங்கே நினைவுகூரலாம். தொழில்மயமாக்கல் காலகட்டத்தில்தான் அங்கே கல்வி, சுகாதாரத்துக்கான பொதுச் செலவுகள் அதிகமாக்கப்பட்டிருக்கின்றன. தொழில் அறிவொளிக்கும் அறிவியல் புத்தொளிக்குமான காலகட்டமாகவும் தொழில்மயமாக்கல் காலகட்டமே அங்கு இருந்திருக்கிறது. இங்கே நடப்பதென்ன? கல்வி, சுகாதாரத்துக்கான செலவினங்கள் குறைக்கப்படுகின்றன. அறிவியல் ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு குறைந்திருக்கிறது. தொழில்மயமாக்கலைக் கேள்விக்குள்ளாக்குபவர்கள் தேச விரோதிகளாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். அதிவேக கார்களுக்காக எட்டு வழிச் சாலைகள் அமைக்கப்பட சாமானியர்களுக்கான நடைபாதைகளோ மேலும் மேலும் சுருங்கி ஆவியாகின்றன.

எங்கு தொடங்கும், எங்கு அறுந்துபோகும் என்று தெரியாத, காலோடு ஆளை வாரி இழுத்துவிடக்கூடிய பள்ளங்கள் நிறைந்த, மரங்களும், மின் கம்பங்களும், அரசியல் கட்சிகளின் விளம்பரப் பதாகைகளுக்கான அடிக்கம்பங்களும், பாலங்களின் தூண்களும் குறுக்கிடக்கூடிய, நடக்க முற்படும் ஒரு சாமானியனை எந்த நேரத்திலும் கொன்றுவிடும் அபாயம்மிக்க நம்மூர் நடைபாதையை நினைத்துப்பார்க்கையில், அது வெறுமனே நம்முடைய ஆளும் வர்க்கத்தின் அறியாமையாகவோ, அசட்டையாகவோ தெரியவில்லை. ஒட்டுமொத்த இந்தியக் குடிமைச்சமூக மனநிலைக்கான, சாதாரண மக்களின் மீதான நம்முடைய அலட்சியத்துக்கான ஒரு குறியீடுபோலவே தெரிகிறது!

(இனி திங்கள்தோறும் பயணிப்போம்…)

https://tamil.thehindu.com/opinion/columns/article24913665.ece

Link to comment
Share on other sites

சாலையில் முன்னுரிமை மனிதர்களுக்கா, வாகனங்களுக்கா?

 

 

gbhjpng

லண்டனை சைக்கிளில் சுற்ற விரும்பினேன். இந்தப் பயணத்தில் அந்த ஆசை கைகூடவில்லை. நண்பர்கள் அனுமதிக்கவில்லை. சாலைகளில் சைக்கிள்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த தடங்களில் உற்சாகம் பொங்க கடந்த சைக்கிளோட்டிகளைப் பார்க்கும்போது ஏக்கமாக இருந்தது. நகரில் சைக்கிள்களுக்கான அதிவேகத் தடம் அமைப்பதில் இப்போது உத்வேகமாக இருக்கிறார்கள். “நீங்கள் விரும்பினால், விக்டோரியா வீதி, வால்டிங் வீதி, ப்ரெட் வீதி வழியே ஒரு சுற்றுச் சுற்றி வரலாம். சிலிர்ப்பை உணர வேண்டும் என்று விரும்பினால், ‘சிஎஸ்3’ அதிவேகத் தடத்தில் சைக்கிள் ஓட்ட வேண்டும். டவர்ஹில்லில் கிளம்பி வெஸ்ட்மினிஸ்டர் வரைக்குமான பாதையில் ஒருமுறை பயணித்தால் அந்த அனுபவத்தை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டீர்கள்” என்றார் ஹெலன்.

மனிதக் கண்டுபிடிப்புகளில் சைக்கிள் ஒரு எளிய அற்புதம். நிதானப் பயணத்துக்கு ஏற்ற, சூழலைப் பெரிதாக நாசப்படுத்தாத, ஆபத்துகள் அதிகம் விளைவிக்காத, எவ்வளவு எளிமையான வாகனம். ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திருச்சியில் இருந்தபோது ஒரு நாளைக்கு 20 கி.மீ. சைக்கிள் மிதித்தேன். சென்னை வந்த பிறகு அது 25 கி.மீ. ஆக உயர்ந்தது. நீண்ட நாளைக்கு அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. பெருகிவரும் மோட்டார் வாகன நெரிசலானது இப்போதெல்லாம் அருகிலுள்ள கடைவீதிக்குச் சென்று திரும்புவதோடு சைக்கிளுடனான உறவைச் சுருக்கிவிட்டது.

 

சென்னையில் சைக்கிள் ஓட்டுவது என்பது இன்றைக்கு உயிரைப் பணயம் வைத்து நடத்தும் ஒரு சாகசம். இந்தியாவில் மோட்டார் வாகனப் பெருக்கம் மிகுந்த நகரங்களில் முன்னிலையில் இருக்கிறது சென்னை. தமிழர்கள் இதற்காகப் பெருமை கொள்ள முடியாது. அதிகரிக்கும் மோட்டார் வாகனங்களின் அடர்த்தி சுற்றுச்சூழலிலும் சுகாதாரத்திலும் எவ்வளவு மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதை வருஷம் முழுக்க ஊடகங்கள் பேசுகின்றன. ஆட்சியாளர்கள் காதில் எது விழுகிறது?

பொதுவாகவே நம்முடைய சமூகத்தில், எந்தப் பாதிப்பையும் நாம் தனிநபர்கள் சார்ந்ததாகச் சுருக்கிவிடுகிறோமோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. வீட்டில் குழந்தைக்கு மூச்சிரைப்பு இருக்கும். அதற்குத் தனியே சிகிச்சை நடக்கும். நகரைச் சூழும் காற்று மாசு குறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகும். இந்த வாசிப்பு தனியே நடக்கும். இரண்டையும் பொருத்திப் பேசவோ, சுயமாற்றம் தொடர்பில் பரிசீலிப்பதோ நடக்காது. தீபாவளி அன்று மூச்சிரைப்புக் குழந்தை உள்ள வீட்டிலும் பட்டாசுகள் வெடிக்கும்.

கென் லிவிங்ஸ்டோனைச் சந்திக்க விரும்பினேன். நேரம் அமையவில்லை. லண்டன் மேயராக இருந்தபோது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் பெரும் அக்கறை காட்டியவர் இவர். லண்டன் நகர வாடகை சைக்கிள் திட்டம் லிவிங்ஸ்டோன் எண்ணத்தில் உருவானது. இவருக்கு அடுத்து மேயராக வந்த போரீஸ் ஜான்ஸன் அதை அறிமுகப்படுத்தினார். நகரத்தில் ஜனசந்தடி மிக்க 70 இடங்களில் சைக்கிள் நிறுத்தகங்களை அமைத்திருக்கிறார்கள். இந்த நிறுத்தங்களில் எங்கு வேண்டுமானாலும் வண்டியை எடுக்கலாம், விடலாம். பத்தாயிரம் சைக்கிள்கள் இப்படி ஓடுகின்றன. நாள் வாடகை இரண்டு பவுண்டுகள். முதல் அரை மணிப் பயன்பாட்டுக்கு வாடகை ஏதும் கிடையாது. பத்தாண்டுகளில் 7.35 கோடிப் பயணங்கள் நடந்திருக்கின்றன என்கிறார்கள்.

பிரிட்டனின் சைக்கிள் வரலாற்றில் இந்த ஆண்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. பிரிட்டன் சாலைகளில் தன்னுடைய இருநூறாவது வருஷத்தை இந்த ஆண்டில் முடித்திருக்கிறது சைக்கிள். 1818-ல் லண்டனில் முதல் சைக்கிள் ஓடியது. இன்று ஒவ்வொரு பத்தாவது விநாடியிலும் பிரிட்டன் வீதியில் ஒரு புது சைக்கிள் இறங்குகிறது. “சைக்கிள் வாங்க மக்கள் ஒரு பவுண்டு செலவிட்டால் பிரிட்டனின் பொருளாதாரத்துக்கு அது நான்கு பவுண்டுகள் வலு சேர்க்கிறது. சாலைகளில் நெரிசல் குறைகிறது. நகர மக்களுக்குக் கிடைக்கும் சுத்தமான காற்றின் அளவு அதிகரிக்கிறது. மக்களுடைய சுகாதாரம் மேம்படுவதால், நாட்டின் மருத்துவச் செலவு குறைகிறது. ஆண்டுக்கு 1,000 கோடி பவுண்டுகள் இதன் மூலம் மிச்சமாகும் என்று கணக்கிடுகிறார்கள். ஆகையால், 2025-க்குள் சைக்கிள் பயன்பாட்டை இரட்டிப்பாக்க அரசு திட்டமிடுகிறது. சைக்கிள்களுக்கான தடங்கள் அமைப்பதற்காகவே 770 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியிருக்கிறார் இன்றைய மேயர் சாதிக் கான்” என்று ஹெலன் சொன்னார்.

ஒரு நகரத்தின் முகத்தை சைக்கிள்கள் எப்படி வேகமாக மாற்றுகின்றன என்பதைச் சமீபத்திய ஆண்டுகளில்தான் பிரிட்டன் மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். லண்டன் மாநகரவாசிகள் 88 லட்சம் பேரில் 6.5 லட்சம் பேர் - 7 சதவீதத்தினர் - மட்டுமே தினமும் சைக்கிள் ஓட்டுகின்றனர் என்றாலும், அதுவே சூழலில் நல்ல தாக்கத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார்கள். சைக்கிளோட்டம் அதிகரிக்கத் தொடங்கிய பத்தாண்டுகளில் லண்டன் நகரில் நெரிசல் நேரத்தில் இயக்கத்தில் இருந்த கார்களின் எண்ணிக்கை 86,000 என்பதிலிருந்து 64,000 ஆகக் குறைந்திருக்கிறது. “சைக்கிள் ஓட்டுவதை நிறையப் பேர் விரும்புகின்றனர். ஆனால், உள்ளும் புறமுமாக நிறையத் தடைகள் இருக்கின்றன. வெளியே நாடு முழுக்க சைக்கிளோட்டிகளுக்கான பாதுகாப்பான சூழல் சாலைகளில் உருவாக்கப்பட வேண்டும். உள்ளே சைக்கிள் ஓட்டுவது ஒன்றும் அந்தஸ்து குறைவில்லை என்ற எண்ணம் மக்களிடம் உருவாக வேண்டும். லண்டனை எடுத்துக்கொண்டால் சைக்கிளோட்டிகளில் ஆண்கள், வெள்ளையர்கள், உயர் மத்திய தர வர்க்கத்தினரே அதிகம். பெண்கள், கருப்பர்கள், புலம்பெயர்ந்தவர்கள், அடித்தட்டு வர்க்கத்தினர் எண்ணிக்கை குறைவு” என்றார் ஹெலன். ஆனால், சூழலை மேம்படுத்துவதற்காக ஒலிக்கும் குரல்கள் உத்வேகம் அளிக்கின்றன.

இந்தப் பயணத்தினூடாக அறிந்துகொண்ட சுவாரஸ்யமான சில மனிதர்களை அவ்வப்போது எழுத நினைக்கிறேன். பொதுப் போக்குவரத்து மேம்பாட்டுக்காகக் குரல் கொடுத்துவரும் ரோஸ்லின் அவர்களில் ஒருவர். “சூழலுக்கு உகந்த நகரமாக லண்டன் உருமாற சைக்கிளோட்டிகளுக்கேற்ப சாலைகளை வடிவமைப்பதே ஒரே வழி” என்பவர் இவர். “லண்டன் நகரத்தில் வெறும் 3% சாலைகளில் மட்டுமே சைக்கிள்களுக்கு இன்று தனித்தடம் இருக்கிறது. அதேசமயம், கார்களை நிறுத்த 68 கார் நிறுத்தங்கள் உள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பளவு 78.5 ச.கி.மீ. ஒவ்வொரு நகரத்திலும் கார்கள் இப்படி எடுத்துக்கொள்ளும் பரப்பைக் கணக்கிடுங்கள். சாலைகளை மட்டும் அல்ல; நம்முடைய நகரங்களையும் கார்கள் ஆக்கிரமித்திருப்பது உங்களுக்குப் புரியவரும். ஒரு சாலையில் ஒரு மணி நேரத்துக்கு 2,000 கார்கள் போக முடியும் என்றால், அதே நேரத்தில் 14,000 சைக்கிள்கள் எளிதில் கடந்துவிட முடியும். கார்கள் மூலம் நடக்கும் ஆக்கிரமிப்பு நகர்ப்புற வாழ்க்கையில் பெரிய வன்முறை” என்கிறார் ரோஸ்லின்.

ஹெலனிடம் பேசிக்கொண்டு வந்தபோது டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில், இந்த ஆண்டில் கார்களின் எண்ணிக்கையை சைக்கிள்களின் எண்ணிக்கை மிஞ்சியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். “கோபன்ஹேகனில் இன்று 62% பேர் சைக்கிளிலேயே வேலைக்குச் செல்கின்றனர். அந்த நகரின் சாலைகள் - கார்களுக்காக அல்ல - சைக்கிள்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. விளைவாக நகரில் கார்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சைக்கிள்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கிறது. 2018 மே கணக்குப்படி கோபன்ஹேகனில் கார்கள் எண்ணிக்கை 2.52 லட்சம். சைக்கிள்கள் எண்ணிக்கை 2.65 லட்சம். லண்டனிலும் அப்படியான சூழலை உருவாக்க வேண்டும்” என்றார்.

முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் இன்று இது தொடர்பில் தீவிரமாக யோசிக்கிறார்கள். “நகரின் மையப் பகுதிக்கு இனி கார்கள்-டாக்ஸிகள் வரக் கூடாது” என்று அயர்லாந்தின் டப்ளின் நகர நிர்வாகம் அறிவித்திருக்கிறது. “2019 முதல் நகரில் கார்களுக்கு இடம் இல்லை” என்று முடிவெடுத்திருக்கிறது நார்வேயின் ஆஸ்லோ நகர நிர்வாகம். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், “பிரதானமான மைய வீதிகளுக்குள் சொந்த வீட்டுக்காரர்களைத் தவிர மற்றவர்கள் கார்கள் வரக் கூடாது” என்று தடை விதித்திருக்கிறார்கள். எல்லோருக்குமே ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் மீது ஒரு தனிக் கவனம் இருக்கிறது. ஆம்ஸ்டர்டாமில் சைக்கிளோட்டிகள்தான் ராஜாக்கள். நகரின் எல்லாப் பகுதிகளும் சைக்கிள் ஓட்டும் பாதைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. 1973 யோம்கிப்பூர் போரின்போது இஸ்ரேலை ஆதரித்த மேற்கு நாடுகளுக்கு பெட்ரோல்-டீசலை விற்க மாட்டோம் என்ற முடிவை அரபு நாடுகள் எடுத்தன. எண்ணெய் விலை நான்கு மடங்கு உயர்ந்தபோது, தனியார் போக்குவரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்த பிரதமர் டென் உய்ல், ஒரு மாற்றுச் செயல்திட்டமாக சைக்கிள் பயணத்தை முன்வைத்தார். இன்று ஹாலந்தில் 22,000 மைல் நீளத்துக்கு சைக்கிள் ஓட்டும் தனிப்பாதைகள் உள்ளன.

ஹெலன், “ஜெர்மனி விஷயம் கேள்விப்பட்டீர்களா?” என்றார். “தெரியும், நான் எங்கள் ஊரைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்றேன். சாலையோரத்தில் ஒரு பிரெஞ்சுக்காரர் அபாரமாக வயலின் வாசித்துக்கொண்டிருந்தார். சுற்றி நின்ற கூட்டத்தோடு தன்னைக் கரைத்துக்கொண்டார் ஹெலன். சூரியன் பரிபூரணமாகக் கீழே இறங்குவதுபோல இருந்தது. குளிரைத் துளைத்துக்கொண்டு வந்த சூரியக் கதிர்கள் உடலுக்குள் ஊடுருவிப் பரவின. தங்கள் தொப்பிகளைக் கழற்றி வெயிலை உள்வாங்கிய இரு குழந்தைகள் பாதையில் எதிர்ப்படுவோருக்கு வணக்கம் சொன்னபடி கடந்தனர். சைக்கிள்களில் செல்பவர்களிடம் பரவும் வெயில் உற்சாகம் வாகனத்தில் வேகம் கூட்டுகிறது. ஜெர்மனி மட்டும் அல்ல; மேற்கின் பல நாடுகள் இப்போது சைக்கிளோட்டிகளுக்கான அதிவேகப் பாதைகளை அமைப்பதில் தீவிரமான கவனத்தைச் செலுத்திவருகின்றன. இந்தியாவிலோ நாம் மோட்டார் வாகனப் பெருக்கத்தை ஊக்குவிக்க எட்டு வழி அதிவேகச் சாலைகளைத் திட்டமிடுகிறோம்!

திங்கள்தோறும் பயணிப்போம்...

https://tamil.thehindu.com/opinion/columns/article24965425.ece

Link to comment
Share on other sites

லண்டன்: பூனைக்கால் சிங்கங்கள்

 

 
0b26ca09P1535205mrjpg

சமஸ்மத்திய லண்டன் பகுதியைக் கடக்கும்போதெல்லாம் டிரஃபால்கர் சதுக்கம் தன்னை நோக்கி இழுத்தது. பிரெஞ்சு, ஸ்பானிய கடற்படைகளை 1805-ல் ஸ்பெயின் நாட்டின் டிரஃபால்கர் முனையில் பிரிட்டிஷ் கடற்படை தளபதி நெல்சன் தோற்கடித்ததன் ஞாபகார்த்த சதுக்கம் இது. நெல்சனுக்கு ஒரு பெரிய நினைவுத் தூணும் அமைத்திருக்கிறார்கள். பீடத்தில் நான்கு பிரமாண்ட சிங்கங்கள் சுற்றி அமர்ந்திருக்க 169 அடி உயரத்தில் நிற்கிறார் நெல்சன்.

குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. இருவரும் சதுக்கத்தை நோக்கி நடந்தோம். சதுக்கக் கதைகள் சொன்னபடி வந்தார் ஹெலன். “இந்த இடத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. மக்கள் கூடும் ஒரு கலாச்சாரத் திடலாக இது இருக்க வேண்டும் என்று 1812-ல் இதைப் பொது இடமாக மேம்படுத்தினார் கட்டுமானவியலாளர் ஜான் நாஷ். 1830-ல் இதற்கு டிரஃபால்கர் சதுக்கம் என்று பெயரிட்டார்கள். 1838-ல்  நெல்சனுக்குச் சிலை அமைக்கும் பணி தொடங்கியது. பீடத்தின் நான்கு புறங்களிலும் சிங்கங்களைச் சேர்க்கும் பணி 1867-ல் முடிந்தது. இந்தச் சிங்கங்கள் ஒவ்வொன்றின் எடையும் ஏழு டன்கள். சிங்கத்தின் கால் விரல்களைக் கவனியுங்கள். வித்தியாசமாக இருக்கும். இவை சிங்கத்தின் கால்கள் அல்ல; பூனையின் கால்கள் என்ற பேச்சு இங்குண்டு. உலகப் போரில் லண்டனைக் கைப்பற்றினால் இந்தச் சிலைகளை அப்படியே ஜெர்மனிக்குக் கொண்டுசெல்லும் திட்டம் ஹிட்லரின் படைகளுக்கு இருந்திருக்கிறது.”

 

பூனைக்கால் சிங்கங்களைப் பார்த்தேன். ஏனோ அவை மிகுந்த பரிதாபத்துக்குரியவையாகத் தோன்றின. வருடிக்கொடுத்தேன். பரிச்சயமான தமிழ் முகம் ஒன்றை அப்போது கண்டேன். இயக்குநர் கே.வி.ஆனந்த். நடிகர் சூர்யாவை வைத்து இயக்கும் படப் பணிகளுக்காக வந்திருப்பதாகச் சொன்னார். கொஞ்ச நேரம் அளவளாவிவிட்டு கலைந்தோம். சதுக்கத்தில் ஒரு இளைஞர் குழு நடனமாடி காசு வசூலித்துக்கொண்டிருந்தது. ஹல்க் வேஷத்தில் தரையில் கால்கள் படாமல் நின்றபடி காசு வாங்கிக்கொண்டிருந்தார் ஒரு பெண். எல்லா நாட்டுக் கொடிகளையும் தரையில் வரைந்திருந்தார் ஒரு இளைஞர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவரவர் நாட்டு கொடிக்கு அருகில் காசு போட்டார்கள்.

டிரஃபால்கர் சதுக்கம் அமைந்திருக்கும் இடம் பல நூற்றாண்டு காலம் அரசக்குடியினர் வாழிடமாக இருந்திருக்கிறது. பிற்பாடு போர் வெற்றியை   நினைவுகூரும் சதுக்கம். இன்று அது ஜனநாயகக் குரல்கள் ஓங்கி ஒலிக்கும் களம். நகரில் ஜனசந்தடி மிக்க இங்கு புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு இணையாகப் போராட்டங்களும் கொண்டாட்டமாக நடக்கும் என்றார் ஹெலன்.

“பிளடி சண்டே பேரணி, முதலாவது ஆல்டர்மாஸ்டன் பேரணி, போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் என்று பிரிட்டனின் வரலாற்றுப் புகழ் மிக்க பல போராட்டங்கள் இங்கேதான் நடந்தன. எப்போதெல்லாம் போராட்டங்கள் நடக்கின்றனவோ அப்போதெல்லாம் நெல்சனையும் போராட்டக்காரர்கள் தங்கள் ஆளாக மாற்றிவிடுவார்கள். நெல்சன் சிலையின் கைகளில் தங்கள் போராட்டப் பதாகையைக் கட்டிவிடுவார்கள். அவர் மீது போராட்டக் கொடியைப் போர்த்திவிடுவார்கள். லண்டனில் காற்று மாசைத் தடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் நெல்சன் சிலைக்கு சுவாசக்கவசத்தை அணிவித்துவிட்டார்கள்.” தன்னுடைய செல்பேசியிலிருந்து அப்போது எடுக்கப்பட்ட படங்களை ஹெலன் காட்டினார்.

“போராட்டக்காரர்களை பிரிட்டன் அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளும்?”

“இரு தரப்புகளுமே கூடுமானவரை கண்ணியம் காப்பார்கள். ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையில் இறங்குவது இங்கே அரிது. அதேபோல, மக்களுடைய போராட்ட உரிமையில் அரசும் குறுக்கிடாது. ஒருமுறை இளவரசர் சார்லஸின் காரை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்துவிட்டார்கள். சார்லஸின் கார் மீதே ஒருவர் பாய்ந்தார். அப்போதும்கூட காவல் துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை விலக்கி அகற்றினார்களே தவிர வன்முறையைப் பிரயோகிக்கவில்லை. நெல்சன் சிலைக்கு சுவாசக் கவசம் அணிவித்தார்கள் என்று சொன்னேன் இல்லையா, அந்தச் சமயத்தில் நீங்கள் வந்திருக்க வேண்டும். நகரத்திலுள்ள பெரும்பான்மை தலைவர்களின் சிலைகள் அப்போது போராட்டக்காரர்கள் அணிவித்த சுவாசக் கவசத்தோடு நின்றன. சர்ச்சில் முகத்தைப் பார்க்க பெரிய வேடிக்கையாக இருந்தது. எங்கும் சுற்றிலும் பெருங்கூச்சல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும் இடத்தில் ஆட்சியாளர்களை அசைக்க சாமானிய மக்களுக்கு இப்படியான அணுகுமுறைகளைத் தாண்டி வேறு என்ன வழி இருக்கிறது? சரி, உங்கள் ஊரில் எப்படி?”

மக்களில் ஒரு பிரிவினர்தான் போராட வருகிறார்கள். போராட்டக்காரர்கள் வேறு;  மக்கள் வேறு என்பதுபோல இரு தரப்புகளாகப் பிரித்து, மக்கள் கூடும் இடங்களில் போராட்டங்கள் கூடாது என்று சொல்லி, போராட்டங்களுக்கு என்று ஒதுக்குப்புறமான இடங்களை ஒதுக்கி, போராட்டக்காரர்களை அந்நியப்படுத்தி, அவர்களை சமூகவிரோதிகளாகவும் சித்திரித்து, அச்சத்தை நிறுவனமயமாக்கிக்கொண்டிருக்கும் நம்மூரின் இன்றைய கலாச்சாரத்தைப் பற்றி பெருமையாகப் பேச என்ன இருக்கிறது? மௌனமானேன். என்னுடைய மௌனத்தை உடைப்பதுபோல “காந்தி நடத்திய சத்தியாகிரகப் போராட்டங்கள் இன்றும் பிரிட்டனில் நினைவுகூரப்படுகின்றன” என்றார்.

“ஒரு நாடு ஜனநாயகத்தைப் பழகக்கூட ஒரு நீண்ட பயணம் தேவைப்படுகிறது இல்லையா?”

“உண்மைதான், பிரிட்டனில் இன்று நிலவும் ஜனநாயகச் சூழலுக்குப் பின் ஆயிரம் வருஷப் பயணம் இருக்கிறது. 1215-ல் இங்கு ‘மாக்னா கார்டா’ மகா சாசனம் வெளியிடப்பட்டது. மன்னரிடத்தில் குவிந்திருந்த அதிகாரங்களைப் பரவலாக்கி ஜான் மன்னர் விஸ்தரித்தது முக்கியமான முதல் படி. 1376-ல் மக்களவையைப் பிரதிநிதிப்படுத்துவதற்கு நிரந்தரமாக முதல் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்து, 1688 பெரும் புரட்சி. அதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே மக்கள் போராட்டம் முடியாட்சியை ஒன்றுமில்லாமல் ஆக்கியிருந்தது. அதைத் தொடர்ந்து, அதன் மிக பலவீனமான வடிவத்தை, அதாவது அரசியலமைப்பில் மட்டுமே பெயரளவுக்கு முடியாட்சியை ஏற்றுக்கொண்டது படிப்படியாக இன்று நாட்டின் உண்மையான அதிகாரத்தை நாடாளுமன்றத்திடம் கொண்டுவந்திருக்கிறது.”

“நாம் அவ்வளவு தூரம் செல்ல வேண்டாம். பிரிட்டனில் தொழில் புரட்சி நிகழ்ந்த அந்த அரை நூற்றாண்டு காலகட்டம் எவ்வளவு முக்கியமானது? பிரிட்டனில் தொழில் புரட்சி நடந்துகொண்டிருக்கும் அதே காலகட்டத்தின் இடையில்தான் உங்களுக்கு மிக அருகில் பிரெஞ்சு புரட்சி நடக்கிறது. தொழில் புரட்சியினூடாகவே பிரிட்டனில் அறிவொளி புரட்சியும் நடந்தது முக்கியமான ஒரு சேர்க்கை. எல்லாவற்றுக்கும் மேல் உலகெங்கிலுமிருந்து நீங்கள் சேர்த்த செல்வம், பெரும் உபரி உங்களிடம் இருந்தது. பிழைப்பிக் கவலையைத் தாண்டும்போதுதானே ஒரு சமூகம் விழுமியங்களைப் பற்றி யோசிக்க ஆரம்பிக்கிறது?”

ஹெலன் ஆமோதிப்பதுபோல தலையசைத்தார். “வரலாற்றில் எல்லாம் ஒன்றோடு ஒன்றாகத்தான் பிணைந்திருக்கின்றன. எங்கள் ஜனநாயக வரலாற்றைப் பேசும்போது ஏகாதிபத்தியத்தின் சுரண்டல் வரலாற்றையும் பேசத்தான் வேண்டும்.  சரி, இந்தியாவில் சுதந்திரப் போராட்டக் காலத்தினூடாகவே ஜனநாயகத்துக்கான போராட்டங்களும் நடந்தன அல்லவா?”

“அப்படி இரண்டையும் ஒன்றாக்கிவிட முடியாது. விரிவான பொருளில் நாம் பேச வேண்டும் என்றால், ஜனநாயகத்துக்கான போராட்டங்கள் நடந்தன. ஆனால், சுதந்திரம், சுயாட்சி என்ற முழக்கங்கள் சென்றடைந்த அளவுக்கு ஜனநாயகத்துக்கான குரல்கள் சாமானிய மக்களைச் சென்றடையவில்லை. சொல்லப்போனால், 1951 தேர்தலுக்குப் பிறகுதான் பெரும்பான்மை மக்களை ஜனநாயகம் என்ற சொல்லே சென்றடைந்தது. ஒரு பத்தாண்டு காலம் நல்ல முன்னகர்வு இருந்தது என்று சொல்லலாம். 1963-ல் கொண்டுவரப்பட்ட பிரிவினைவாதத் தடைச் சட்டம், 1975-ல் கொண்டுவரப்பட்ட நெருக்கடிநிலை இரண்டும் காலாகாலத்துக்குமான பாதிப்புகளை உண்டாக்கிவிட்டன. அரசியல் கட்சிகளின் சுதந்திர வெளியையும், கற்பனைகளையும், உரிமைக் குரல்களையும் இவை இரண்டும் சுருக்கிவிட்டன. 1991-ல் கொண்டுவரப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கை ஜனநாயகத்தை வேறொரு தளத்துக்கு நகர்த்தியது. இந்தப் புதிய தொழில்மயமாக்கல் காலகட்டம் அமைப்புரீதியாக ஜனநாயக விழுமியங்களை வளர்த்தெடுப்பதற்கான காலகட்டமாக அமைந்திருக்க வேண்டும். நேர் எதிராக நடந்தது துயரம். ஆனால், இப்போது ஒரு புதிய காலகட்டத்துக்குள் நுழைந்திருக்கிறோம். புதிய தலைமுறை ஜனநாயகத்தை வேறொரு இடம் நோக்கிக் கொண்டுசெல்கிறது!”

ஒரு சிறுமி எங்கள் கைகளில் ஒரு துண்டறிக்கையைக் கொடுத்துவிட்டு நின்றாள். “நீங்கள் விரும்பினால் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் ஏன் விலகக் கூடாது என்பதை உங்களுக்கு விளக்குவேன்” என்றாள். அவள் பேச முழுமையாகக் கேட்டேன். “நான் உலகமே ஏன் ஒரு ஒன்றியமாக இருக்கக் கூடாது என்று யோசிப்பவனம்மா” என்று சொல்லி அவளுக்கு விடை கொடுத்தேன்.

- சமஸ்,

(திங்கள்தோறும் பயணிப்போம்...)

https://tamil.thehindu.com/opinion/columns/article25025496.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.