Jump to content

நேர்காணல்;அறிவால் எழுதாமல் உணர்வால் எழுதப்படும் எழுத்துகள் தான் பேசப்படும் - புலம்பெயர் படைப்பாளி சௌந்தரி கணேசன்


Recommended Posts

sa4.jpg

 

ர் எழுத்தாளன் தான் பார்த்ததை ரசித்ததை உணர்ந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் வாசகர்களுக்கு புரியும் வண்ணம் சுவைபட எழுத முடிந்தாலே அவன் எழுத்தாளனாவான். ஆனால், ஒரு படைப்பானது உணர்வுகளின் மொழி பெயர்ப்பாக உணரப்படும் போதுதான் அதை வாசகர்களை சென்றடையும்.

அறிவால் எழுதாமல், உணர்வால் எழுதப்படுகின்ற எழுத்துகள் தான் பேசப்படும் எனத் தெரிவிக்கிறார் புலம்பெயர் படைப்பாளி சௌந்தரி கணேசன்.

ஈழத்தில் கரவெட்டியில் பிறந்த இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றார். யாழ் பல்கலைக் கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டமும், வெஸ்டேர்ன் சிட்னி பல்கலைக்கழகத்தில் கணக்கியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர். சாம்பியாத, நியுஸிலாந்து ஆகிய நாடுகளில் கணிதம் மற்றும் இரசாயன ஆசிரியராகவும் பணியாற்றியவர். தற்சமயம் சிட்னியில் கணக்கியல் சார் துறையில் நிர்வாக மேலாளராகப் பணி புரிகிறார்.

கவிதையிலும் சிந்தனை இலக்கியத்திலும் அதிக நாட்டம் கொண்ட சௌந்தரி அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும், பகுதி நேரப் பணியாளராகவும் இருந்து வருகிறார். இவர் தயாரித்து வழங்கும் கவிதை பேசும் நேரம் சிந்தனைச் சிதறல் ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் உலகத் தமிழ் வானொலி நேயர்களின் வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சிகளாகும்.

சிட்னியில் நடைபெறும் இலக்கிய நிகழ்ச்சிகளிலும், பல சமூக அமைப்புகளின் செயல்பாடுகளிலும் இவரது பங்களிப்பு பெருமளவில் இருக்கும். அவருடனான நேர்காணல் வருமாறு:

முதலில் உங்கள் குடும்பம் பற்றியும் வாழ்வுச்சூழல் பற்றியும் சொல்ல முடியுமா?

எனது வளர்ச்சியில் மிகமுக்கிய இடத்தைப்பிடித்திருப்பது எது என்றால் அது எனது இளமைப்பருவம்தான். எனது இளமைக்காலம் மிகவும் அழகானது. நான் பிறந்து வளர்ந்தது வடமராச்சி பகுதியில் உள்ள கரவெட்டி என்ற ஓர் அழகிய கிராமத்தில். எனது வீட்டிலும் எனது கிராமத்திலும் உற்சாகமாகக் கழித்த இனிய நினைவுகள் இப்போதும் எனக்குள் பசுமையாக மலர்ந்து கொண்டிருக்கின்றன.

மிகுந்த செல்வாக்கான குடும்பத்தில் பிறந்து, அளவுக்கு அதிகமான செல்லப்பெண்ணாக வளர்ந்தவள் நான். வீட்டில் கடைக்குட்டி, இரண்டு பெண்களில் ஒருத்தி. அக்கா கௌரி நான் சௌந்தரி அம்மா மகேஸ்வரி அப்பா கணேசன். எனது அப்பாவுக்கும் எனக்கும் இடையில் மிக நெருக்கமான பிணைப்பு இருந்தது. என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தவர். நல்லதோர் நட்புறவை என்னோடு வளர்த்துக் கொண்டவர். அவரிடம் கிடைத்த அந்த அன்பை இதுவரை நான் யாரிடமும் காணவில்லை. நான் வளர்ந்த சூழல், எனது சொந்தங்கள், எனக்குக் கிடைத்த உறவுகள், நான் பழகிய மனிதர்கள், இவர்களினால் உருவாக்கப்பட்டவளே நான்.

உங்களைப்பற்றி சற்று கூறுவீர்களா?

எனது ஆரம்பக்கல்வியை கரவெட்டி விக்னேஸ்வராக் கல்லூரியிலும் பின்பு பருத்தித்துறை மெதடிஸ்ட் பெண்கள் உயர்தர பாடசாலையிலும் கற்றேன். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் சிறப்புப் பட்டத்தை நிறைவு செய்து பின்பு அவுஸ்திரேலியாவில் முதுகலைமாணி பட்டத்தை முடித்து கணக்கியல்துறையில் தற்சமயம் பணிபுரிந்து வருகின்றேன்.

சாத்தியமான எல்லாத் திசைகளிலும் பிரச்சினைக்கான தீர்வுகளைத் தேடுகின்ற ஓர் பெண் நான். அன்பு, கோபம், துடுக்குத்தனம், அழுகை எதையுமே மறைத்து வைக்கத் தெரியாமல் உள்ளதை உள்ளபடியே வெளிப்படுத்திவிடுவது எனது சுபாவம். இதனால் நான் இழந்ததும் அதிகம் பெற்றதும் அதிகம்.

எனது சொந்த தேசத்தில் என்னை நானே அறிமுகப்படுத்தும் அறிமுக நிலையில்தான் நான் தற்போதும் இருக்கிறேன். அதையிட்டு வருத்தமும் உண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பத்தை நான் உருவாக்கிக் கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல அதற்கான வாய்ப்பும் எனக்குக் கிட்டவில்லை. பல்கலைக்கழகப் படிப்பு நிறைவடைந்த கையோடு நான் புலம்பெயர்ந்துவிட்டேன். புலம்பெயர்ந்த தேசங்களில் ஏதோ ஒரு வகையில் எனது முத்திரையைப் பதித்திருக்கின்றேன் என்பதில் பெருமைப்படலாம். சாம்பியா, நியுஸிலாந்து தற்போது அவுஸ்திரேலியா என்று எனது பயணம் தொடர்கிறது.

உங்கள் பல்துறை சார் நிபுணத்துவ உருவாக்கத்தில் உங்கள் இளமைக்காலச் சூழல் செலுத்திய தாக்கம் பற்றிச் சொல்லுங்கள்?

படிப்பதற்கு மட்டுமல்ல படைப்பதற்கும் திறமை வேண்டும் என்பார்கள். எனக்குள்ளிருந்த திறமைகளை புடம்போடச் செய்து படிக்கும் ஆர்வத்தையும், படைக்கும் ஆர்வத்தையும் வளர்ப்பதில் பங்கு வகித்தவர்களில் மிக முக்கியமானவர் எனது தந்தை பண்டிதர் பொன்.கணேசன். என்னை எனக்கே அடையாளம் காட்டி ஓர் ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தந்து தேவையான ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி போன்றவற்றைக் கற்றுக் கொடுத்தவர்.

எனது தந்தை தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகுந்த புலமை வாய்ந்தவர். மிகச்சிறந்த மேடைப் பேச்சாளர். நான் சிறுமியாக இருந்தபோதே அப்பாவின் பட்டி மன்றங்களிற்கு அவரோடு செல்வதும், அப்பா கற்றுக் கொடுக்கும் மாலை நேரத் தமிழ் வகுப்புக்களில் உட்கார்ந்து அவர் சுவைபட சொல்லித்தரும் தமிழ் இலக்கியங்களை செவிமடுப்பதும் எனது பொழுது போக்கு நிகழ்வுகளில் ஒன்று. நான் தமிழை முறையாகப் படித்ததில்லை ஆனால் தமிழாசானின் பேச்சாற்றலையும் மொழியாற்றலையும் பக்கத்திலிருந்தே சுவைத்து வளர்ந்தவள். தமிழ் மொழிமீது ஆர்வம் ஏற்படுவதற்கும் என் தாய் மண்மீது பற்றுதல் ஏற்படுவதற்கும் பிள்ளையார் சுழி போட்டவர் எனது அப்பாதான்.

எது சரி எது தப்பு என்பதைப்பற்றிய ஓர் ஆரோக்கியமான வாதம் எங்கள் வீட்டில் எப்போதும் நடைபெறும். எனது குடும்பச்சூழல் எனக்கு கற்றுக்கொடுத்தவைதான் இன்றும் என்னை வழிநடத்திச் செல்கின்றது.
பாரதி கண்ட புதுமைப் பெண் நிமிர்ந்த நன்நடையும், நேர் கொண்ட பார்வையும், ஞானச்செருக்கும் கொண்டவளாக இருந்தாள். பண்டிதர் பொன் கணேசன் உருவாக்கிய பெண்ணும் அதேபோல் தான், ஆனால் அதையும் தாண்டி தனது மனத்திற்கு எது சரி என்று தோன்றுகின்றதோ அதையும் செய்வதற்கு அவள் தயங்குவதில்லை.

நீங்கள் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளர் அதில் எப்படி ஆர்வம் ஏற்பட்டது? நாடகங்களிளும் நடிக்கின்றீர்கள் அந்த வகையில் நாடகம் மேல் ஈர்ப்பு வர ஏதுவாக இருந்த காரணிகள்?

சிறுபராயத்தில் இருந்தே சொற்களுடன் வாழ்கின்ற சந்தர்ப்பம் கிடைத்ததும் மேடைப் பேச்சுக்களை அதிகம் கேட்டு வளர்ந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். புதிய விடயங்களை அறியவேண்டும் என்பதில் எனக்கு நிறைய ஆர்வமும் தேடலுமிருக்கிறது. நாடகத்தில் ஏற்பட்ட ஓர் சிறிய ஈடுபாட்டிற்கு அதுவும் ஒரு காரணமாகும்.

ஊடகங்களில் எனது ஈடுபாட்டிற்கு நான் வாழ்ந்த புலம்பெயர் தேசங்கள்தான் காரணம். கரவெட்டியை விட்டு வெளியில் வந்தபின்பு எனது ஊர் அனுபவம் உலக அனுபவமாக விரிவடைவதற்கு பலவிதமான வாய்ப்புக்கள் இங்கே கிடைத்தன. மொழி ஆளுமையை வளர்ப்பதற்கும், சிந்தனைத் திறனை விரிவாக்குவதற்கும், என்னைப்பற்றிய பரவலான அறிமுகத்தை உருவாக்குவதற்கும் சாதகமான சூழல்கள் அமைந்தன. நியூஸிலாந்து தமிழ்சங்க வானொலியும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனமும் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களில் முக்கியமானவையாகும்.

 படைப்பாளிகள் பிறக்கிறானா? உருவாக்கப்படுகின்றானா?

மனிதனுடன் சேர்ந்து எந்த ஆற்றலும் பிறப்பதில்லை. அவை வளர்க்கப்படுகின்றன. வளர்க்கப்பட வேண்டும். படைப்பாளிகள் உருவாக்கப்படுகிறார்கள். அவர்களுக்குள் இருக்கும் தனிப்பட்ட ஆர்வம், ஈடுபாடு, ஆசை இவற்றின் வெளிப்பாடுதான் படைப்பு.

எழுத்துத்துறையில் நீங்கள் நுழைவதற்கு ஏதுவான காரணிகள் எவை?

எழுத்துத்துறையில் நுழையவேண்டுமென்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. இதுதான் என்னுடைய பாதை இதைத்தான் நான் செய்யப்போகின்றேன் என்று திட்டமிட்டு நான் பயணிப்பதில்லை. நேற்று இருந்ததைவிட, இன்று இருப்பதைவிட, நாளை இன்னும் சந்தோசமாக இருக்கவேண்டும் இதுதான் எனது தாரக மந்திரம். இந்த நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டுதான் நான் பயணிக்கின்றேன்.

பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலிருந்தே எனது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு கவிதையை ஓர் ஊடகமாகப் பயன்படுத்தினேன். அன்றாடம் பார்க்கின்ற, பாதிக்கின்ற விடயங்களை எந்தவித வரையறைகளுமின்றி சாதாரண வார்த்தைகளைப் பயன்படுத்தி எழுதுகின்றபோது எனக்குள் ஏதோ ஓர் திருப்தி கிடைத்தது. எனது அனுபவங்களின் எழுத்து வடிவத்தை மற்றவர்கள் வாசிக்கின்றபோது அவை தமக்கு நெருக்கமானதாக உணர்கின்றார்கள் என்பதை நான் அறிந்தபோது தொடர்ந்தும் எழுதத் தூண்டியது. நான் எழுதுவதை நான் சிந்திப்பதை பொது வெளியிலும் சிலர் கவனிக்கின்றார்கள் என்ற நினைப்பு எனது எழுத்தை மெருகூட்டி மேலும் பொறுப்போடு எழுதவேண்டும் என்ற மனோநிலையை எனக்குள் உருவாக்குகின்றது.

 உங்களுக்குள் எழுத்து மேல் ஈடுபாடு வந்தது பற்றி…

அடிப்படை விடயங்களைத் தேடி ஓடவேண்டிய தேவைகள் எனது வாழ்க்கையில் இருக்கவில்லை. குறிப்பிட்ட காலத்துக்கு முன்னாடியே அனைத்தும் கிடைத்தன. ஆகவே, எனக்குக் கிடைத்த மிகுதி நேரத்தை எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் செலவிட என்னால் முடிந்தது. காலப்போக்கில் எனது வாழ்க்கை அனுபவங்கள் வாயிலாக எழுத்தும் சிந்தனையும் மேலும் மெருகேறியது.

உங்கள் கவிதை பயணத்தின் ஆரம்ப காலகட்டம் அதன் வளர்ச்சி பற்றிக் குறிப்பிடுங்கள்?

வாழ்க்கை என்பது ஓர் தொடர் பயணம் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. இன்றைக்கு இந்தக் கணத்தில் இப்போதே வாழவேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டவள் நான். வாழுகின்ற ஒவ்வொரு கணத்தையும் உணர்வுகள் சார்ந்து துண்டு துண்டாக அறிகின்ற தன்மை இருப்பதால் அவற்றை வெளிப்படுத்துவதற்கு கவிதை ஓர் சிறந்த வடிகாலாக அமைந்தது. என்னை எனக்கே அடையாளம் காட்டுவதற்கு என்னை நானே அறிந்து கொள்வதற்கு எழுத்தும் ஒருவிதமான முயற்சி என்றே கூறலாம்.

அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் கடந்த 15 வருடங்களாக நிகழ்ச்சி தயாரித்து வழங்குகின்றேன், எனது இலக்கியத் தாகத்தைத் தீர்ப்பதற்கு இந்த வானொலி பாரிய பங்களிப்பை வழங்கிவருகிறது. எனக்குள்ளிருந்த திறமைகளை புடம்போடச் செய்ததில் முக்கிய பங்கு இந்த வானொலியையும் வானொலி நேயர்களையும் சாரும். மேலும் பல பத்திரிகைகள், வார இதழ்கள், முகநூல் மற்றும் இணையத்தளங்கள் போன்றவையும் எனது எழுத்தை பல வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி என்வளர்ச்சிக்கு உதவியிருக்கின்றன.

sa-1.jpg

 

நீர்த்திரை என்ற கவிதைத் தொகுதியை தாங்கள் எழுதுவதற்கு உந்துதல் வழங்கிய காரணி எது?

கவிதை நூலை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருக்கவில்லை. எனது எழுத்துக்கள் பதியப்படவேண்டும், கவிதைகளை முழுத் தொகுதியாகக் கொண்டு வரப்படவேண்டும் அப்போதுதான் அவை அறியப்படும் என்ற நண்பர்களின் நச்சரிப்புத்தான் எனது முதலாவது கவிதைத் தொகுதியான நீர்த்திரையின் உருவாக்கத்திற்கான காரணமாகும்.

 நீங்கள் எழுதிய கவிதைகளில் உங்களை அதிகம் கவர்ந்த கவிதை எது?

அடிப்படையான மனக் கிளர்ச்சியுடன் ஒரு சுரணையுள்ள பெண் சொல்ல நினைப்பவற்றைத்தான் எனது கவிதைகள் கூறுகின்றன. முக்கியமாக எனது சந்தோசங்களை, உளைச்சல்களை, அவஸ்தைகளை, தோல்விகளை வெளிப்படுத்துகின்ற பாமர வார்த்தைகள்தான் எனது கவிதைகள். நான் எழுதிய ஒவ்வொரு கவிதையும் எனது உணர்வுகள் சார்ந்தது. எனது அனுபவம் சார்ந்தது ஆகவே அதை பிரித்துப் பார்த்து எது பிடித்தது எது பிடிக்கவில்லை என்று என்னால் கூறமுடியாது. நான் எழுதியவை எனக்கே பிடிக்கவில்லையென்றால் மற்றவர்களுக்கு எப்படிப் பிடிக்கும். ஆனாலும் தேசிய விடுதலை மற்றும் பொதுப் பிரச்சினைகள் பற்றிய எனது கவிதைகள் எனக்குள் ஆழ்ந்த நிறைவைத் தந்தவை என்று கூறலாம்.

 உங்கள் முயற்சிக்குத் தடையாக அமைந்த சந்தர்ப்பங்கள் உள்ளனவா?

எனது முயற்சிக்கு எதிரான தடை என்றால் அது நானாகத்தான் இருந்திருப்பேன். எந்த ஓர் எழுச்சியும் எந்த ஓர் வீழ்ச்சியும் எனது கையில்தான் இருக்கிறது. யாரையும் சுட்டிக்காட்டுவதில் எனக்கு விருப்பமில்லை. எனக்குள் ஏற்பட்ட பல நல்லமாற்றங்களுக்கு என் எழுத்தும் ஓர் காரணமாக இருந்திருக்கிறது. எனது நினைவுகளின் சேகரிப்பை நான் விரும்புகின்ற வகையில் வெளிப்படுத்த தடைகள் ஏற்பட்டிருந்தால் அதை நான் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டேன்.

எனது மேற்படிப்பும் அதை சார்ந்த சில விடயங்களும் எழுத்துக்கான நேரத்தை சிறிதளவு குறைத்திருந்தது. ஆனால் எதுவும் பெரிதாக தடையாக அமையவில்லை. என்னைச் சுற்றியுள்ளவர்கள் எப்போதும் ஊக்கம் தரக்கூடியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.

 ஒரு எழுத்தாளன் அறிஞராக அல்லது கல்வியாளராக இருக்க வேண்டிய அவசியம் இருக்கின்றதா?

ஆளுமை கொண்ட மனிதர்கள் என்னை சுலபமாக ஆக்கிரமிப்பார்கள். ஒரு மனிதன் தனது ஆளுமையை எப்படி வளர்த்துக் கொள்கிறான் என்பதில் தான் எல்லாம் தங்கியிருக்கிறது. கல்வியா, அனுபவமா, சூழலா எது எமது ஆளுமையை வளர்க்கிறது. எவரிடம் தேடல் அதிகமாக இருக்கிறதோ எவரிடம் சிந்தனை அதிகமாக இருக்கிறதோ அவர் கல்வியாளராகவும் இருந்தால் அவர் அறிந்தவை அல்லது படித்தவை அவரிடம் ஓர் மாற்றத்தை ஏற்படுத்தும். தேடுதலற்ற ஆர்வமற்றவர்களிடம் உள்ள கல்வியறிவு பொதுவெளியில் பிரயோசனமற்று வேறாகத் தனித்து நிற்கும்.

ஓர் எழுத்தாளன், தான் பார்த்ததை ரசித்ததை உணர்ந்ததை தனக்குத் தெரிந்த மொழியில் வாசகர்களுக்குப் புரியும் வண்ணம் சுவைபட எழுதமுடிந்தாலே அவன் எழுத்தாளனாவான். ஆனால் ஒரு படைப்பானது உணர்வுகளின் மொழிபெயர்ப்பாக உணரப்படும்போதுதான் அவை வாசகர்களை சென்றடையும்.

அறிவால் எழுதாமல் உணர்வால் எழுதப்படுகின்ற எழுத்துக்கள்தான் பேசப்படும். அப்படிப்பட்ட எழுத்தை வளர்த்தெடுப்பதற்கும், செழுமைப்படுத்துவதற்கும் சரியான சிந்தனையும் சரியான பார்வையும் தொடர்ச்சியான உழைப்பும் வேண்டும். அதற்கு கல்வியறிவு ஓர் ஊக்கியாக அமையலாம் என்றே நம்புகிறேன்.

 ஒரு எழுத்தாளனின் / கலைஞர்களின் முக்கிய அடையாளமாக எதை நினைக்கிறீர்கள்?

அவனது மொழிப்பற்று, சமூகப்பற்று, சுய அடையாளத்தை தன் இனம் சார்ந்து உணர்ந்து கொள்வது, எங்கு இருந்தாலும் தனது பண்பாட்டு விழுமியங்களை பேணுவதிலும் வளர்ப்பதிலும் காட்டும் அக்கறை, இவற்றையெல்லாம் தனது படைப்புக்கள் வழியே வெளிக்கொண்டுவருகின்ற தார்மீகம் போன்றவை ஓர் எழுத்தாளனை சமூகத்தில் அடையாளப்படுத்தும்.

 உங்களுக்கு மிகவும் விருப்பமான எழுத்தாளர்கள் பற்றி சொல்லுங்கள்?

மனிதர்களின் தேடல்களும் அவர்களது வாழ்க்கை அனுபவங்களும் மாறுபட்டவை. இன்னுமொருவரின் படைப்பை படித்து இன்னுமொருவரின் சிந்தனையை விரும்பி உள்வாங்குவதென்பது மிக இனிமையான அனுபவம். அவை சாதாரணமாக அமைந்துவிடுவதில்லை. ஏதோ ஓர் விதத்தில் புதிய சிந்தனைகளை எனக்குள் உருவாக்கும் எந்த எழுத்தாளர்களையும் நான் விரும்பி வாசிப்பேன்.

போலியான பார்வையோடு வெற்றுக் கருத்துக்களை எழுதிக் குவிக்கும் சமூக அக்கறையற்ற எந்த எழுத்தின்மீதும் எனக்கு நம்பிக்கை கிடையாது. சமூக வலைத்தளங்களின் நன்மையால் எவரும் தங்களுக்கு பிடித்தவற்றை தங்களுடைய போக்கில் எழுதலாம். எனக்குப் பிடித்தவற்றை நான் தரம்பிரித்து வாசிக்கின்றேன். பிடிக்காதவற்றை வாசிக்காமல் விடுகின்றேன். நல்லவை நிலைக்கும் அல்லாதவை நிலைகாமல் போகும் அல்லது நிலைப்பதற்கான மாற்றத்தை தனக்குள் ஏற்படுத்தும்.

 யாருடைய புத்தகங்களை அதிகம் வாசிப்பீர்கள்?

இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில் ஆறஅமர இருந்து வாசிப்பது என்பதே மிகப்பெரிய விடயம். கற்பனை இலக்கியங்களைவிட யதார்த்த எழுத்துக்கள்மீது நாட்டம் அதிகம். மண்வாசனை மாறாத ஈழத்து எழுத்துக்கள் என்னை அதிகமாக கவர்பவை. என் உணர்வுகளின் விம்பங்களை பிரதிபலிக்கின்ற எந்தப் படைப்பும் என்னைக் கவரும். எனது அனுபவங்களின் ஊடாக நான் அறிந்தவற்றை நான் உணர்ந்தவற்றை நான் எழுத மறந்தவற்றை மற்றயவர்களின் எழுத்துக்கள் பிரதிபலிக்கும்போது அவற்றை நான் மிகவும் விரும்பிப் படிப்பேன்.

தமிழரின் கலை, கலாசார பண்பாடுகளைப் பாதுகாப்பதில்,இன்றைய நவீன, நாகரீக வளர்ச்சி எவ்வகையான ஆதிக்கத்தினைச் செய்கின்றது என நினைக்கின்றீர்கள்?

மாற்றம் ஒன்றே மாறாதது. கலாசாரம் பண்பாடு போன்றவை தொடர்ச்சியான மாற்றத்திற்கு உட்பட்டவைதான். சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் வகையில் மனதைப் பழக்கப்படுத்த வேண்டும். ஆனால் அதற்காக பாதிப்பைத் தருகின்ற மாற்றங்களை ஊக்கப்படுத்த முடியாது. பண்பாடும் கலாசாரமும் எமது அடையாளம் அவற்றை நாகரீகம் என்ற போர்வைக்குள் தொலைத்துவிடக் கூடாது.

நெருக்கடிகளைப் பதிவு செய்வதில் உங்களின் பங்கு பற்றி கூறுவீர்களா?

அக உலகம் சார்ந்த கவிதைகளில் ஆர்வம் அதிகமாக இருந்தாலும், இன உணர்வு, மொழி உணர்வு பற்றி ஈழத்தமிழர்கள் பேசவேண்டிய தேவையிருக்கிறது. ஆதலால் எமது வாழ்க்கையை, எமது பிரச்சினைகளை, எமது மனோபாவங்களை எடுத்துச் சொல்வது எனது கடமை என்றே கருதுகிறேன். எந்தவிதமான ஒப்பனையுமின்றி எனது வழமையான மொழியில் தேவையானதை தேவையான நேரத்தில் பேச நான் தயங்கியதில்லை. மறதி என்ற போர்வைக்குள் தம்மை மறைத்துக் கொள்ளும் மனிதர்களையும் தமது சுயநலத்தை தக்கவைக்க அர்த்தமற்ற பொருந்தாத நியாயங்களை முன்வைக்கும் மனிதர்களையும் அவ்வப்போது எனது கவிதைகளும் எழுத்தும் சாடியிருக்கின்றன.

போருக்குப் பிற்பட்டு படைப்பாளிகளின் உளவியல் நிலை பற்றி?

சௌந்தரி : அடுத்த மனிதனின் துயரம் கண்டு உணர்வுபூர்வமாக அதில் பங்கு கொள்ள முடியாதவன் மனிதனாக கருதமுடியாது. போருக்குப் பிற்பட்ட படைப்பாளிகளின் படைப்பில்தான் அவர்களது சுயம் வெளிப்படுகின்றது என்று கூறலாம். எமது நிலமும் எமது மக்களும் பேரினவாதத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு நிற்கின்றபோது ஏற்படும் சலிப்பு, இறுக்கம், கோபம், ஏக்கம் போன்ற பல உணர்வுகளை இன்றைய படைப்பாளிகளின் எழுத்துக்கள் பேசுகின்றன. அவற்றில் படைப்பாளிகளின் மனஉளைச்சல் விரவிக் கிடக்கிறது. துரோகத்தின் நிழல் பரவி ஏமாற்றப்பட்டு கசந்து போய் வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் பயத்துடன் எதிர்கொண்ட மனிதர்களின் உளவியல் நிலையை எதைக்கொண்டு எடுத்துக் கூறுவது. அவை காலத்தால் ஆறாத வடுக்களாகும்.

 போர் கால வரலாறுகளை பதிவிடுவது பற்றி உங்கள் கருத்து?

வேறு நாடுகளில் இருந்தாலென்ன தாய் நாட்டில் இருந்தாலென்ன ஈழத்தமிழர்களின் படைப்புக்கள் போர்க் கால வரலாற்றை பதிவதில் பின்னிற்கவில்லை. போர்க்கால இலக்கியம் தருகின்ற அனுபவம் தனித்துவமானது. தனது இனத்தின் பிரச்சினைகளை, வலிகளை சரியாக விளங்கி, அந்த அனுபவங்களை முழுமையாக உள்வாங்கி படைக்கப்படும் எந்த ஒரு படைப்பையும் நான் பெரிதும் மதிக்கின்றேன். படைப்பின் உருவாக்கத்தில் தவறுகள் இருக்கலாம், படைப்பின் தரத்தில் குறைகள் இருக்கலாம் ஆனாலும் எனது இனம் எனது உறவு என்ற உணர்வு அவர்களது படைப்பின் ஊடாக வெளிப்படுகின்றது. அந்த உணர்வுகளின் தனித்தன்மைக்கு நிகரானது வேறெதுவுமில்லை.

 விமர்சனங்கள்அல்லது எதிர்மறை கருத்துக்களை எப்படி பார்க்கிறீர்கள்?

காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்வைக்கப்படும் எதிர்மறையான விமர்சனங்களையோ, போலித்தனமான கூச்சல்களையோ நான் கணக்கில் எடுப்பதில்லை. ஆனால், ஓர் விடயம் சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்களை நான் விரும்பி ஏற்றுக் கொள்கின்றேன். சுட்டிக்காட்டப்படும் பிழைகளை சீர்செய்வதற்கு அவை உதவும் என்று நம்புகிறேன்.

எது என்னை மகிழ்விக்கிறதோ அதை நான் செயல்படுத்துகின்றேன். ஆர்வமில்லாத எதையும் கடமைக்காக செய்வது கிடையாது. எனது மகிழ்ச்சி எனது ஆற்றல்களின் ஊடாக வெளிவருவதால் அவற்றால் பயனடைபவர்களும் மகிழ்கிறார்கள். அதனால்தான் பாராட்டுபவர்களும், தட்டிக்கொடுப்பவர்களும் என்னைச் சுற்றி நிறைய இருக்கின்றார்கள்.

எதிர்மறையான விமர்சனங்களும் வராமல் இல்லை. எந்த ஓர் விடயத்தில் ஈடுபட்டாலும் அதில் மிகத் தெளிவாகவும் சந்திக்கப்போகின்ற விளைவுகளை ஏற்றுக்கொள்ளும் முடிவோடும் இருப்பதால் எதிர்மறையான விமர்சனங்கள் என்னை ஒன்றும் செய்வதில்லை. விமர்சனங்களை கேட்க விருப்பமில்லை என்றால் எதையுமே செய்யாமல்தான் இருக்கவேண்டும். அப்படி என்னால் இருக்கமுடியாது. இப்படியும் அப்படியும் பேசுகின்ற அவன்களையும் அவள்களையும் நான் கணக்கில் எடுப்பதில்லை

.sa2.jpg

 

பெண் ஊடகவியலாளர்கள் சுயமாக இயங்கக்கூடியவகையில் இன்றைய தமிழ்ச்சூழல் இருக்கிறதா?

 

தமிழ் சமூகத்தில் ஓர் பெண் ஊடகத்துறையில் நிலைத்திருப்பதென்பது சுலபமானதல்ல. அவளை முழுமையாக புரிந்து கொள்வதற்கும் யாரும் தயார் நிலையிலுமில்லை. ஆனாலும் எனது மனதில் ஒருபோதும் சலிப்பு ஏற்பட்டதில்லை. அவ்வப்போது என் சார்ந்த விடயங்கள் பேசப்படுவதும் பின்னால் ஒன்றுமில்லாமல் போய்விடுவதும் காணமுடிகிறது. ஆழமான எதிர்வினைகளை சந்திக்காவிட்டாலும் அவதானிக்கக்கூடிய அளவில் சிக்கல்களை சந்தித்திருக்கிறேன். கண்டனம், விமர்சனம் இவற்றிற்கு மத்தியில்தான் என் குரல் இன்னும் வலிமையாக உயரும் என்ற நம்பிக்கையில் பயணிக்கின்றேன். ஆரம்பத்தில் கூறியதுபோல் என்னைச் சுற்றி நல்லவர்கள் அதிகமாக இருப்பது எனது பலம் என்று கருதுகிறேன்.

 உங்கள் படைப்புகளில் காலம் தாண்டி நின்று நிலைக்கக் கூடியதாக எதைக் கருதுகிறீர்கள்?

சமூக அங்கீகாரம் என்பது என்னை மிகவும் கவர்ந்த ஓர் விடயம். சமூகம் சார்ந்த சமூக நலன் வேண்டிய செயல்பாடுகளில்தான் எனது கவனம் அதிகம். பகுதிநேரமாகத்தான் நான் கலை இலக்கியங்களில் பங்கெடுக்கின்றேன். எனது படைப்புகள் காலம் தாண்டிப் பேசப்பட வேண்டும் என்ற எண்ணத்தைவிட நான் தொடர்ந்தும் படைப்பூக்க நிலையில் இருக்கவேண்டும் என்றே பிரியப்படுகின்றேன். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்தும் கவனமெடுக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

 உங்களைப் போன்ற இளம் எழுத்தாளர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

சிநேகபூர்வமான கருத்து ஒன்று. இலக்கியம் மற்றும் கலை உணர்வுகள் பல அனுபவங்களைப் பெற்றுத் தரும். கிடைக்கின்ற வாய்ப்பைப் பயன்படுத்தி அல்லது புதியவாய்ப்புக்களை உருவாக்கி இலக்கியப்பயணத்தை ஆர்வத்துடன் தொடருங்கள். உங்களுக்கான ஓர் தனியான இடத்தை உடனடியாக அடையமுடியாமல் போனாலும் அதன் மூலம் கிடைக்கின்ற அனுபவம் கூர்மையானதும் விரிவானதுமாகும். புதிய கருத்துக்கள், புதிய உத்திகள், புதிய முயற்சிகள் இவற்றோடு பயணிக்கின்றபோது ஓர் பூரணத்துவத்தை உணரலாம்.

அடுத்த கட்டமாக ஏதேனும் முயற்சியில் ஈடுபடவுள்ளீர்களா?

பல நாடுகளில் வாழ்ந்தாலும் அவுஸ்திரேலியாதான் எனது தேடலுக்கு நிறைய தீனி போடுகின்றது. உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் உற்றுப்பார்க்கக்கூடிய பல அழகான உறவுகளையும் இலக்கிய ஆளுமைகளையும் நான் இங்கே சந்திக்கின்றேன். நான் வாழுகின்ற இந்த சமூகத்தை நான் அதிகமாக நேசிக்கிறேன். அதனாலோ என்னவோ எனது ஆர்வங்களும் திறமைகளும் தொய்வில்லாமல் வளர்கின்றன. எனது இரண்டாவது கவிதைத் தொகுதியான அகத்தி மிகவிரைவில் வெளிவரவுள்ளது. தொடர்ந்தும் எழுத வேண்டும் என்பதே எனது விருப்பம்.

 நிறைவாக என்ன சொல்லிட விரும்புகின்றீர்கள்?

தமிழ் இலக்கியக்கடலில் நான் வெகு சாதாரணம். மிகமிகச்சிறிய அலகு. எனக்கு என் தகைமை புரியும் என்னை அளவிடும் வகையும் தெரியும். என்னை ஓர் கவிதாயினி என்றோ ஓர் எழுத்தாளினி என்றோ அடையாளப்படுத்துவதையோ அல்லது அங்கீகாரம் கிடைப்பதையோ நான் எதிர்பார்க்கவில்லை, அதற்கான முயற்சியையும் நான் மேற்கொள்ளவில்லை. எனது எழுத்தின் மூலம் என்னை நான் அடையாளம் காண்கிறேன். எனது விடுதலையை எனது சுதந்திரத்தை எனது எழுத்தின்மூலம் சாத்தியமாக்க முயற்சிக்கிறேன்.அதற்காக நான் தொடர்ந்து எழுதிக்கொண்டிருப்பேன். எனதுசின்னச்சின்ன அழகான குணங்களுடன் வாழ்க்கையை முழுமையாக ரசிக்கின்ற ஓர் சாதாரண பெண்ணாகவே என்னை வகைப்படுத்த விரும்புகின்றேன்.

http://thinakkural.lk/article/11398

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.