Jump to content

Recommended Posts

திருக்குறளும் கீதையின் நால்வருணமும் - குறள் ஆய்வு-5(பகுதி2)

பேராசிரியர் ந. கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், திருநெல்வேலி.

"பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு!"
- பாவேந்தர் பாரதிதாசன்

 

தமிழ் அந்தணர்களும், தமிழ் பார்ப்பனர்களும் ஆரியர்களின் வேதப் பரப்புரைகளால் கவரப்பட்டார்கள்; தமிழ் அந்தணர்-பார்ப்பனர்களில் சிலரைப் பிராமண சாதிக்கு மாற்றிய ஒன்றை மட்டுமே ஆரியமயமாக்கம் செய்ய முடிந்தது.

தமிழ் மண்ணில் சத்திரியர் இல்லை!

சத்திரியர்கள் என்ற இனம் தமிழ் மண்ணில் எப்போதும் இல்லை; ஜார்ஜ் மன்னர் எவ்வளவு சத்திரியரோ, ஷாஜகான் எவ்வளவு சத்திரியரோ, அலெக்சாண்டர் எவ்வளவு சத்திரியரோ, அவ்வளவே தமிழ் மன்னர்களும் சத்திரியர்கள் ஆவார்கள்.

தமிழ் மண்ணில் வைசியரும்,சூத்திரரும் இல்லை!

வணிகம் எந்த நாட்டிலும் இருக்கும் ஒன்று. உலக நாடுகளின் வணிகர்கள் எவ்வளவு வைசியர்களோ, அவ்வளவே தமிழ் வணிகர்களும் வைசியர்கள்.

மேல்வருணத்தார் மூவருக்கும் பணிவிடை செய்யும் அடிமைத்தொழில் செய்யும் சூத்திரர்கள் என்ற ஒரு வகுப்பார் தமிழ் மண்ணில் எப்போதும் இருந்ததில்லை. அவரவர் பொருளாதார வசதிகளைப் பொறுத்து பல்வேறு தொழில்களைவும், வேலைகளையும் செய்து ஊதியம் பெற்றோர் சூத்திரர்கள் என்று முத்திரை குத்தப்படவில்லை. அவரவர் வாய்ப்பைப் பொறுத்து, வணிகராகவோ, வேளாளராகவோ, தொழில் செய்வோராகவோ பணியாற்றும் எவரும் வாய்ப்பு வசதி, படிப்பு, முயற்சி ஆகியவற்றால் செய்தொழிலை மாற்றிக்கொள்ள எத்தடையும் தமிழகத்தில் இருந்ததில்லை. நாடாளும் மன்னன் வாரிசின்றி இறந்தால், கடைக்கோடி வாழ்க்கைத்தரத்தில் வாழும் மனிதனும் கூட, பட்டத்துயானை மாலையிட்டால் நாடாளும் மன்னன் ஆக்கப்பட்டான்; அப்படி மன்னன் ஆனவன் கரிகால் சோழன்.

தமிழ்ப் பார்ப்பனரும், அந்தணரும் ஆரியப்பிராமண வருணத்தில் இணைந்தனர்!

தமிழர்களைவிட நாகரிகத்தில் பன்மடங்கு கீழ்நிலையில் இருந்து நாடோடிக்கூட்டமாக வடஆரியர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தேறிய காலங்களில்,  அவர்களின் வெள்ளை நிறத்தால் கவரப்பட்ட தமிழர்கள் அவர்தமக்குச் சிறப்பிடம் கொடுத்ததன் விளைவாக, தமிழ் அந்தணர்களையும், தமிழ்ப் பார்ப்பனர்களையும் கூட்டுச் சேர்த்து, ஆரியர்களால் பிராமணர்கள் என்ற ஒரு வருண வகுப்பைத் தமிழ் மண்ணில்  உருவாக்க இயன்றது.

சணலால் பூணூல் அணியும் சத்திரியர் தமிழகத்தில் இல்லை!

ஆனால், மற்ற மூன்று வருணத்தையும் உருவாக்குவதில் தோல்வியையே கண்டனர். தமிழகத்தை ஆண்ட மன்னர்களை அண்டி, அவர்களுக்குச் சத்திரியப் பட்டம் கொடுத்து, வேள்விகளைச் செய்ய வைத்து, தங்கள் நிலையை உயர்த்திக் கொள்ள முடிந்த ஆரியர்களால், மனுவருணப்படி, தமிழ் மன்னர்களுக்கு சணலால் பூணூல் அணிவித்து, ஆரிய சத்திரியர்களாக்க முடியவில்லை.

மேலும், இவர்கள் சூத்திரர் ஆக்கக் கருதிய வேளாளர்களில் பலர் சிற்றரசர்கள் ஆக இருந்ததாலும், வேளாளர் சிற்றரசர்களுடன் தமிழக முடிமன்னர்கள் திருமண உறவு கொண்டிருந்த முறைமையையும் மாற்ற ஆரியர்களால் இயலவில்லை.

வேளாளர்கள் பலரும் முடிமன்னர்களின் அவையில் முதலமைச்சர் (பெரியபுராணம் இயற்றிய அநபாய சோழனின் முதலமைச்சர் சேக்கிழார் பெருமான் ஒரு வேளாளர்) உள்ளிட்ட முக்கிய பதவிகளைப் பெறுவதையும் ஆரியர்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை.

வைக்கோல் திரியால் பூணூல் அணியும் வைசியர் தமிழகத்தில் இல்லை!

வணிகர்களுக்கு வைக்கோல் திரியால் ஆன பூணூலை அணிவித்து ஆரிய வைசியனாக ஆக்க பிராமணர்களால் இயலவில்லை. ஆயினும், தொடர்ந்து ஏதேனும் ஒரு வகையில் தமிழக சமூகத்துக்குள் வருண அமைப்பைப் புகுத்தும் தங்கள் முயற்சியை ஆரியர்கள் ஒருபோதும் கைவிட்டதில்லை.

வருணக்கட்டுப்பாட்டுக்கான மூளைச்சலவைக் கருவியே பகவத்கீதையின் இடைச்செருகல் ஸ்லோகங்கள்!

வடநாட்டில், மக்கள் தாமாகவே முன்வந்து நால்வருணக் கட்டுப்பாட்டின்படி, அவரவருக்கு விதிக்கப்பட்ட கருமங்களை மனம் உவந்து ஏற்கும் வகையில், இறைமை என்னும் கோட்பாட்டின் மேல் மூளைச்சலவை செய்து  கட்டிஎழுப்பும் முயற்சியாக, ஆரியப் பிராமணர்கள்,  மகாபாரத இதிகாசத்தில் போர்க்களத்தில் அருச்சுனனுக்கு கிருஷ்ண பகவானால் அறிவுரை சொல்லப்பட்டதாக எழுந்த பகவத்கீதை என்னும் நூலில், தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தும் எண்ணத்தில் பல இடைச்செருகல்களைச் செய்துவிட்டனர்.  

கீதையின் 18.45ம் ஸ்லோகத்தில் "மனிதன் அவனவனுக்கு விதிக்கப்பட்ட கருமத்தைத் தவறாமல் செய்வதன் மூலம் பக்குவம் அடைய முடியும்; தனக்கு விதிக்கப்பட்ட கருமத்தில் ஈடுபட்டு எவ்வாறு பக்குவம் அடைவது என்பதைச் சொல்கிறேன், கேட்பாயாக" என்று கூறுகின்றார் பகவான் கிருஷ்ணர்[8]. இச்சுலோகம் சூத்திரர்கள் என்னும் மனிதர்களை வருண முறைப்படி, விதிக்கப்பட்ட அடிமை உடலுழைப்பைத் தொடர்ந்து செய்விக்க, இறைவன் பெயரால் மூளைச்சலவை செய்ய எழுதப்பட்டது. அடிமையாக இருந்தே இறைவனை அடையும் பக்குவம் என்று ஒன்றை சூத்திரனின் மூளையில் புகுத்திவிட்டால், எந்த அடக்குமுறைக்கும் அவசியம் நேராது, அவனே அடங்கிப் பணி செய்வான் அல்லாவா? அபாரமான திட்டமிடலுடன் ஆரியர்கள் உருவாக்கிய உளவியல் உத்தியே பகவத்கீதை இடைச்செருகல்கள்.   

"கீதையின் 18.46ம் ஸ்லோகத்தில் "ஒரு மனிதன் அவன் பிறந்துள்ள வருணசாதிக்கு* விதிக்கப்பட்டுள்ள கருமத்தைச் செவ்வனே செய்வதன் மூலம் எல்லா உயிர்களின் மூலமும், எங்கும் நிறைந்தவருமான இறைவனை அடைந்து முழுமை அடைய இயலும்[9]." என்கிறார் கிருஷ்ணர்.

இச்சுலோகத்தின் மூலம், பிராமணரைத் தவிர, ஏனைய வருணத்தாருக்கு, இறைவனை அடையும் வழியாக அவனனவன் பிறந்த வருணத்தின் தொழிலையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற உளவியல் ரீதியான மனமாற்றத்தையும், ஈடுபாட்டையும் ஆரியப்பிராமணர்கள் உருவாக்கினார்கள்; தொடர்ந்து இந்நிலையைத் தக்கவைக்க முயற்சி செய்கிறார்கள். .

"கீதையின் 18.47ம் ஸ்லோகத்தில் "ஒருவனுக்குத் தகுதியுடன் கூடிய ஆற்றல் இருந்து, பிற வருணத்தாருக்கு விதிக்கப்பட்ட கருமங்களை மிக நேர்த்தியாகச் செய்வதைவிட, தனது வருணத்துக்கு  விதிக்கப்பட்ட சுயதருமக் கருமங்களை, நேர்த்தியாகச் செய்ய இயலாவிட்டாலும், செய்வதே சிறந்தது." என்கிறார் பகவான்[10].

இச்சுலோகத்தின் மூலம், பிராமணரைத் தவிர, ஏனைய வருணத்தார்கள், அவரவருக்கு விதிக்கப்பட்ட தொழில்களை மட்டுமே செய்யவேண்டும்; பிற வருணத்தாருக்கு விதிக்கப்பட்ட தொழில்களுக்கு மாறக்கூடாது, குறிப்பாகப், பிராமணர்களின் வேதக் கல்விக்கோ, வேள்வித் தொழிலுக்கோ முயற்சி செய்யக் கூடாது என்ற உளவியல்ரீதியான மனத்தடையைச் செவ்வனே உருவாக்க இச்சுலோகம் மூலம் ஆரியப்பிராமணர்கள் உருவாக்கினார்கள்.   

"கீதையின் 18.48ம் ஸ்லோகத்தில் " நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பது போலவே, எந்த முயற்சியும் ஏதேனும் ஒரு குற்றத்தால் சூழப்பட்டிருக்கின்றது. எனவே குந்தியின் மகனே! குற்றம் நிறைந்ததாக இருந்தாலும்கூட, தனது உடன்(வருணத்துடன்) தோன்றிய கருமங்களை ஒருவன்  துறக்கக்கூடாது" என்கிறார் பகவான்[11]".

இச்சுலோகத்தின் மூலம், பிராமணனைத் தவிர்த்த ஏனைய மூன்று வருணத்தாரும் குற்றம், பாவம் உள்ளிட்ட எக்காரணத்தைக் கொண்டும், தங்களுக்கு விதிக்கப்பட்ட தொழிலை விட்டுவிட்டுச் செல்லக்கூடாது என்ற உளவியல்ரீதியான மனத்தடையை ஆரியப்பிராமணர்கள் இறைவனின் பெயரால் உருவாக்கினார்கள்.

குறிப்பாக, ஒரு சூத்திரன் தனது எஜமானன் கொலையே செய்யச் சொன்னாலும், கொலை பாவம் என்று கருதி, தனது எஜமானன் ஏவிய செயலைச்செய்யாமல் இருந்துவிடக் கூடாது என்ற கீழ்ப்படியும் ஒழுங்கைக் கடவுளின் பெயரால் சுயகருமம் என்று நிலைநிறுத்தவே எழுதினார்கள்.

அடிமைத்தொழிலை அர்ப்பணிப்புடன் செய்தாலே துறவின் பயனான மோட்சம் என்னும் மோசடி உத்தரவாதம்!

"கீதையின் 18.49ம் ஸ்லோகத்தில் "துறவின் பலன்களை புலனடக்கம், ஜட விஷயங்களில் பற்றின்மை, ஜட சுகங்களில் நாட்டமின்மை இவற்றாலேயே அடைந்துவிட முடியும். இதுவே துறவின் உயர் பக்குவ நிலை[12]" என்கிறார் பகவான்.

இதற்கு, சுவாமி பக்தி வேதாந்த பிரபுபாதா அவர்கள் தரும் விளக்கம்: பகவானின் அங்க உறுப்பாகத் தன்னை எப்போதும் நினைப்பதே துறவின் உண்மையான பொருளாகும். எனவே, பகவானின் அங்க உறுப்பான ஒருவன் தனது செயல்களின் பலனை(த் தானே நுகர்வதற்கு எவ்வித உரிமையும் இல்லை;) பகவானாலேயே அனுபவிக்கப்படவேண்டும். இதுவே கிருஷ்ண உணர்வு. துறவு நிலை. இத்தகு மனோநிலையால் பரமனுக்காகவே செயல்படுவதால், ஒருவன் திருப்தியுறுகிறான். இவ்வாறு ஜடனிலையிலான எதிலும் அவன் பற்றற்றவன் ஆகிறான். இறைத்தொண்டினால் கிட்டும் தெய்வீக ஆனந்தத்தைத் தவிர வேறு சுகம் எதுவும் காணாமல் இருப்பதற்கு அவன் பழகிவிடுகிறான். ஒரு துறவி தனது முந்தைய செயல்களின் விளைவுகளிலிருந்து விடுபட்டவனாகக் கருதப்படுகின்றான். ஆனால், கிருஷ்ண உணர்வில் இருப்பவனோ, துறவு ஏற்காமலேயே துறவின் பக்குவத்தை அடைகிறான். இதுவே யோகத்தின் பக்குவநிலை ஆகும்." என்கிறார்.

ஆரிய நலனுக்கான பிராமண சுயநலத்தின் உந்துதலால் சுவாமி பிரபுபாதா உதிர்த்த 'யோகத்தின் பக்குவநிலை'யைப் புரிந்து கொள்ள பின்வரும் விளக்கம் உதவும். துப்புரவுத் தொழிலாளி வீட்டில் பிறந்த ஒருவனுக்கு கல்வி கற்று, உயர்நிலை பெறவேண்டும் என்று ஆசை வரவே கூடாது; ஏனெனில், அவன் சுயகருமத்தை விடக்கூடாது என்னும் கட்டாயம் இருகிறது. ஆயினும், அந்தச் சூத்திரனுக்கு மனத்தளவில் ஏற்பட்ட ஆசை அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. பிறருக்குத் தெரியாமல், அவன் தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முயற்சி செய்யக் கூடும்.

இராமராஜ்ஜியத்தில், சம்பூகன் என்னும் சூத்திரன் மோட்சமடையத் தவம் செய்து, இராமபிரானால் தலைவெட்டப்பட்டு இறந்த உத்தர இராமாயணக் கதை இதற்குத் தலைசிறந்த உதாரணம். இத்தகைய முயற்சிகளை தரும சாத்திர நீதிநூற்கள் இயற்றிச் சொல்லும் சட்டத்தாலோ, அடக்குமுறையாலோ முழுவதும் அடக்கமுடியாது. ஆனால், பக்தி என்னும் உளவியல் ரீதியலான போதையை ஊட்டிவிட்டால், முழுவதுமாகத் தடுத்துவிடலாம் என்று திட்டம் தீட்டிய ஆரியப் பிராமணர்கள் செருகிய விதியே கீதையின் 18.49ம் ஸ்லோகத்தில் சொல்லப்பட்டது. இது எவ்வாறு வேலைசெய்யும் என்பதைப் பின்வரும் உதாரணம் விளக்கும்.

'யோகத்தின் பக்குவநிலை' என்னும் கருமாந்திரத்தின் மோசடியை விளக்கும் கதை!

ஒருவன் சூத்திர துப்புரவுத் தொழிலாளி வீட்டில் பிறக்கிறான்; எனவே, அவனது சுயதருமம் துப்புரவுத் தொழில் ஆகிவிடுகிறது. கிருஷ்ண உணர்வுடைய அவன் தன்னைப் பகவானின் அங்கமாக உணர்கிறான்; அவன் பகவானுக்காகவே மலம் அள்ளுவதாகக் கருதுவதால், மலத்தின் துர்நாற்றம் அவனைப் பாதிக்காமல், கீதையில் பகவான் உறுதியளித்தபடி பகவானையே சென்றடைகின்றது; மலம் அள்ளும் கருமாந்திரத்தை அவனால் எளிதில் செய்ய முடிகிறது. (கிருஷ்ண உணர்வற்ற ஏனைய மலம் அள்ளும் சூத்திரர்கள் மலத்தின் துர்நாற்றத்தைச் சகித்துக்கொள்ள பட்டைச்சாராயம் குடித்துத் தங்கள் உடல்நலனை இழக்கிறார்கள் என்பதை இங்கு வாசகர்கள் கவனிக்க வேண்டும்.) இப்படி, பகவானுக்காக மலம் அள்ளும் இறைத்தொண்டினால் கிட்டும் தெய்வீக ஆனந்தத்தைத் தவிர வேறு சுகம் எதுவும் காணாமல் இருப்பதற்கு அவன் பழகிவிடுகிறான்.  மலம் அள்ளும்போதே கிருஷ்ண உணர்வில் இருப்பதால், துறவு ஏற்காமலேயே துறவின் பக்குவத்தை அடைகிறான். பட்டைச் சாராயத்தின் உதவியில்லாமல் இத்தகைய "யோகத்தின் பக்குவநிலை" அடையும் 'கருமாந்திர'த்துக்குக் கிருஷ்ண உணர்வே துணை. உடல் நலமும் காக்கப்படும்.

மதம் ஒரு அபின் போன்ற போதைப்பொருள்  என்னும் மார்க்சின் தத்துவத்தை விளக்கும் பிரபுபாதா!

"மதம் ஒரு 'அபின்' போன்ற போதைப் பொருள்", என்று காரல் மார்க்ஸ் சொன்ன தத்துவத்துக்கு இதுவரை எனக்குப் புரியாமல் இருந்தது; காரல் மார்க்ஸ் தத்துவத்துக்கான சரியான விளக்கத்தை பிரபுபாதா அவர்களின் பகவத்கீதை விளக்கம் தருகின்றது.

இறுதியாக, சம்ஸ்கிருத சாஸ்திரங்களின் மொத்த உண்மை உருவமாக பகவத்கீதை இருக்கிறது என்பது சரிதான்; பக்தி என்னும் இனிப்பு தடவிய நால்வருண நஞ்சை நயமான சொற்களில் வார்த்தெடுத்து, அடிமைகள் தாமாகவே முன்வந்து, ஆரியப்பிராமணர்களின் வருணதர்மத்தைக் காக்கும் வகையில் பின்னப்பட்டுள்ள நூல் பகவத்கீதை.

திருக்குறளின் உயர்வும், பகவத்கீதையில் செருகப்பட்ட கீழ்மை ஸ்லோகங்களும்!

இறைவன் மனிதனுக்குச் சொன்னதாக, "பிறப்பின் அடிப்படையில் நால்வருணங்களை இறைவனாகிய நானே உருவாக்கினேன் (சாதுர்வர்ண்யம் மயாஸ்ருஷ்டம்)", என்று இறைவன் திருப்பெயரால், பகவத்கீதையில் ஸ்லோகங்களை இடைச்செருகல்கள் செய்து, ஆரியர்கள் முழங்கும் கீழ்த்தரமான சுயதரும சித்தாந்தத்தை நோக்கும்போது, மனிதரான திருவள்ளுவர் தம் சகமனிதர்களுக்குச் சொன்ன உயிர் சமத்துவத் தத்துவம் பேசும் 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்னும் திருக்குறள் அறம்,  ஞாலத்தினும் மாணப் பெரியது; முற்றிலும் உயர்ந்தது.

"ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!" என்று என்னதான் திருநாவுக்கரசர் போன்ற அருளாளர்கள் இறைவனின் திருப்பெயரால் சமாதான அறிவுரை சொன்னாலும், ஆரியம் மட்டுமே உயர்ந்தது, தமிழ் ஆரியத்தின் அங்கம் என்று கீழ்மைப்படுத்தும், செரித்து விழுங்கத்துடிக்கும் நாகசாமிகள் போன்ற ஆரிய இனவாதிகள்  முளைத்துக் கொண்டேதான் இருப்பார்கள்; போரிட்டுத் தோற்றுக் கொண்டேதான் இருப்பார்கள்.

தன் முயற்சியில் மனம் தளராத விக்கிரமாதித்தன் கதையில் வரும் முருங்கை மரம் ஏறும் வேதாளத்தைப் போல, தமிழ்ப் பண்பாட்டையும், மெய்யியலையும் விழுங்கத் துடிக்கும் ஆரியர்களின் விடா முயற்சி தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். உலகவழக்கு அழிந்து ஒழிந்த, எழுத்து வடிவமில்லாத ஆரிய மொழிக்குச் சொந்தக்காரர்கள், என்றும் சிதையா சீரிளமை கொண்ட தமிழன்னையைக் கண்டு பொறாமை கொள்வதும்போரிடுவதும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.    

வெள்ளம் போல் தமிழர் கூட்டம்!
வீரங்கொள் கூட்டம்!  அன்னார்
உள்ளத்தால் ஒருவரே! மற்
றுடலினால் பலராய்க் காண்பார்!
கள்ளத்தால் நெருங்கொணாதே
எனவையம் கலங்கக் கண்டு
துள்ளும் நாள் எந்நாளோ! - புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்!

குறளறம் தொடர்ந்து பேசுவோம்!

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஆய்வுக் குறிப்புகள் - Research References (continuation . . .)


8. स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः।
स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु।।18.45।।

ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: ஸம்ஸித்திம் லபதே நர:।
ஸ்வகர்மநிரத: ஸித்திம் யதா விந்ததி தச்ச்ருணு॥ 18.45 ॥
sve sve karmaṇy abhirataḥ saḿsiddhiḿ labhate naraḥ
sva-karma-nirataḥ siddhiḿ yathā vindati tac chṛṇu
Translation of Bhagavad Gita 18.45: By following his qualities of work, every man can become perfect. Now please hear from Me how this can be done.
9. यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम्।
स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः।।18.46।।

யத: ப்ரவ்ருத்திர்பூதாநாம் யேந ஸர்வமிதம் ததம்।
ஸ்வகர்மணா தமப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மாநவ:॥ 18.46 ॥
yataḥ pravṛttir bhūtānāḿ yena sarvam idaḿ tatam
sva-karmaṇā tam abhyarcya siddhiḿ vindati mānavaḥ

Translation of Bhagavad Gita 18.46: By worship of the Lord, who is the source of all beings and who is all-pervading, a man can attain perfection through performing his own work.
Commentary by Sri Adi Shankaracharya of Advaita Sampradaya:
18.46 Manavah, a human being; vindati, achieves; siddhim, success, merely in the form of the ability for steadfastness in Knowledge; abhyarcya, by adoring, worshipping; svakarmana, with his own duties stated above, as allotted to each caste; tam, Him, God; yatah, from whom, from which God; comes pravrttih, origin,-or, from which internal Ruler comes the activities; ;bhutanam, of creatures, of living beings; and yena, by whom, by which God; is tatam, pervaded; sarvam, all; idam, this world.

Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya:
As stated in the Fifteenth Chapter, all living beings are fragmental parts and parcels of the Supreme Lord. Thus the Supreme Lord is the beginning of all living entities.
This is confirmed in the Vedanta-sutra—janmady asya yatah [SB 1.1.1]. The Supreme Lord is therefore the beginning of life of every living entity. And as stated in the Seventh Chapter of Bhagavad-gita, the Supreme Lord, by His two energies, His external energy and internal energy, is all-pervading. Therefore one should worship the Supreme Lord with His energies. Generally the Vaishnava devotees worship the Supreme Lord with His internal energy. His external energy is a perverted reflection of the internal energy. The external energy is a background, but the Supreme Lord by the expansion of His plenary portion as Paramatma is situated everywhere. He is the Super soul of all demigods, all human beings, all animals, everywhere. One should therefore know that as part and parcel of the Supreme Lord one has his duty to render service unto the Supreme. Everyone should be engaged in devotional service to the Lord in full Krishna consciousness. That is recommended in this verse.
Everyone should think that he is engaged in a particular type of occupation by Hrishikesha, the master of the senses. And by the result of the work in which one is engaged, the Supreme Personality of Godhead, Sri Krishna, should be worshiped. If one thinks always in this way, in full Krishna consciousness, then, by the grace of the Lord, he becomes fully aware of everything. That is the perfection of life. The Lord says in Bhagavad-gita (12.7), tesham aham samuddharta. The Supreme Lord Himself takes charge of delivering such a devotee. That is the highest perfection of life. In whatever occupation one may be engaged, if he serves the Supreme Lord he will achieve the highest perfection.

10. श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात्।
   स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम्।।18.47।।

ஷ்ரேயாந்ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத்ஸ்வநுஷ்டிதாத்।
ஸ்வபாவநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பிஷம்॥ 18.47 ॥
śreyān sva-dharmo viguṇaḥ para-dharmāt sv-anuṣṭhitāt
svabhāva-niyataḿ karma kurvan nāpnoti kilbiṣam॥ 18.47 ॥

Translation of Bhagavad Gita 18.47: It is better to engage in one’s own occupation, even though one may perform it imperfectly, than to accept another’s occupation and perform it perfectly. Duties prescribed according to one’s nature are never affected by sinful reactions.
11. सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत्।
सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः।।18.48।।

ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோஷமபி ந த்யஜேத்।
ஸர்வாரம்பா ஹி தோஷேண தூமேநாக்நிரிவாவ்ருதா:॥ 18.48 ॥
saha-jaḿ karma kaunteya sa-doṣam api na tyajet
sarvārambhā hi doṣeṇa dhūmenāgnir ivāvṛtāḥ:॥ 18.48 ॥
Translation of Bhagavad Gita 18.48: Every endeavor is covered by some fault, just as fire is covered by smoke. Therefore one should not give up the work born of his nature, O son of Kunti, even if such work is full of fault.
Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya:
In conditioned life, all work is contaminated by the material modes of nature. Even if one is a brahmana, he has to perform sacrifices in which animal killing is necessary. Similarly, a kshatriya, however pious he may be, has to fight enemies. He cannot avoid it. Similarly, a merchant, however pious he may be, must sometimes hide his profit to stay in business, or he may sometimes have to do business on the black market. These things are necessary; one cannot avoid them. Similarly, even though a man is a shudra serving a bad master, he has to carry out the order of the master, even though it should not be done. Despite these flaws, one should continue to carry out his prescribed duties, for they are born out of his own nature.
A very nice example is given herein. Although fire is pure, still there is smoke. Yet smoke does not make the fire impure. Even though there is smoke in the fire, fire is still considered to be the purest of all elements. If one prefers to give up the work of a kshatriya and take up the occupation of a brahmana, he is not assured that in the occupation of a brahmana there are no unpleasant duties. One may then conclude that in the material world no one can be completely free from the contamination of material nature. This example of fire and smoke is very appropriate in this connection. When in wintertime one takes a stone from the fire, sometimes smoke disturbs the eyes and other parts of the body, but still one must make use of the fire despite disturbing conditions. Similarly, one should not give up his natural occupation because there are some disturbing elements. Rather, one should be determined to serve the Supreme Lord by his occupational duty in Krishna consciousness. That is the perfectional point. When a particular type of occupation is performed for the satisfaction of the Supreme Lord, all the defects in that particular occupation are purified. When the results of work are purified, when connected with devotional service, one becomes perfect in seeing the self within, and that is self-realization.

 12. असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः।
नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति।।18.49।।

அஸக்தபுத்தி: ஸர்வத்ர ஜிதாத்மா விகதஸ்ப்ருஹ:।
நைஷ்கர்ம்யஸித்திம் பரமாம் ஸம்ந்யாஸேநாதிகச்சதி॥ 18.49 ॥
asakta-buddhiḥ sarvatra jitātmā vigata-spṛhaḥ
naiṣkarmya-siddhiḿ paramāḿ sannyāsenādhigacchati ॥ 18.49 ॥

Translation of Bhagavad Gita 18.49: One who is self-controlled and unattached and who disregards all material enjoyments can obtain, by practice of renunciation, the highest perfect stage of freedom from reaction.
Commentary by Sri A.C. Bhaktivedanta Swami Prabhupada of Gaudiya Sampradaya: Real renunciation means that one should always think himself part and parcel of the Supreme Lord and therefore think that he has no right to enjoy the results of his work. Since he is part and parcel of the Supreme Lord, the results of his work must be enjoyed by the Supreme Lord. This is actually Krishna consciousness. The person acting in Krishna consciousness is really a sannyasi, one in the renounced order of life. By such a mentality, one is satisfied because he is actually acting for the Supreme. Thus he is not attached to anything material; he becomes accustomed to not taking pleasure in anything beyond the transcendental happiness derived from the service of the Lord. A sannyasi is supposed to be free from the reactions of his past activities, but a person who is in Krishna consciousness automatically attains this perfection without even accepting the so-called order of renunciation. This state of mind is called yogarudha, or the perfectional stage of yoga. As confirmed in the Third Chapter, yas tv atma-ratir eva syat: one who is satisfied in himself has no fear of any kind of reaction from his activity.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.