Jump to content

பள்ளிகளை நோக்கி 15 பாடல்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்


Recommended Posts

பள்ளிகளை நோக்கி 15 பாடல்கள்! - ஜேம்ஸ் வசந்தன் நேர்காணல்

 

 
ohjpg

ரா

திகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி நடிப்பில் ‘ஓ! அந்த நாட்கள்’ என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன். இதற்கிடையே ‘பள்ளி விழாப் பாடல்கள்’ என்ற தனியிசை ஆல்பம் ஒன்றுக்கும் இசையமைத்து முடித்திருக்கிறார். தற்போது அதை அனைத்துப் பள்ளிகளுக்கும் கொண்டுபோய்ச் சேர்க்கும் வேலையில் இறங்கியிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து…

 

‘பள்ளி விழாப் பாடல்கள்’ இசை ஆல்பம் என்ன சுமந்து வருகிறது?

தொலைக்காட்சி, சினிமா பிரபலம் என முகம் தெரிய ஆரம்பிச்சதுல இருந்து கடந்த 15 வருடங்களா நிறைய நிகழ்ச்சிகள்ல கலந்துக்க வேண்டிய சூழல் உருவாகிடுச்சு. கிராமங்கள், நகரங்கள்னு பாகுபாடு இல்லாமல் மாநிலம் முழுக்கப் பள்ளிக்கூடங்களுக்குப் போய்ட்டு வந்துக்கிட்டிருக்கேன். அப்போல்லாம் நல்ல விஷயங்கள் கண்ணுல படும். அதெயெல்லாம் பாராட்டாம இருக்கவே முடியாது. அதேநேரத்துல பெரும்பாலான பள்ளி விழாக்கள்ல சினிமா பாடல்களை இசைக்கவிட்டுத்தான் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் நடக்கும். அதுல பல பாடல்களில் பள்ளிகள்ல ஒலிக்கவிட முடியாத அளவுக்கு வார்த்தைகளோட அர்த்தங்கள் இருக்கும்.

songsjpg
 

பெற்றோர்கள், ஆசிரியர்கள்கிட்ட கேட்டா, ‘என்ன செய்றது சார், உங்க வருத்தமும் ஆதங்கமும் எங்களுக்கும் இருக்கத்தான் செய்யுது. ஆனா பாடல், ஆடல் போட்டிகள் இல்லாம பிள்ளைகள் மேடையே ஏற மாட்டேங்குறாங்க’ன்னு சொல்றாங்க. அந்த இடத்துல தோணின யோசனைதான் இந்த ஆல்பம். பள்ளிக் குழந்தைகளை மனசுல வச்சு உருவான ஆல்பம். முழுக்க முழுக்க அவங்களுக்காகவே உருவான ஆல்பம்.

இந்தப் பாடல்கள் வழியே என்ன சொல்ல வர்றீங்க?

ஆல்பத்தில் மொத்தம் 15 பாடல்கள். அதுல 13 பாடல்கள் வரிகளோட இருக்கும். இரண்டு பாடல்கள் வாத்திய இசையா இருக்கும். பள்ளிக்கூட குட்டீஸ்களைக் கவரணும், அவங்கக்கிட்ட போகணும்னே சூப்பர் சிங்கர் குட்டீஸ் பாடகர்களை வைத்துப் பாட வைத்தேன். வரவேற்புப் பாடல், ஸ்கூல் ஓபனிங், ஆண்டு விழா, ஆசிரியர் தின விழா, இடையில் நடக்குற கலை நிகழ்ச்சின்னு எல்லாத்துக்குமான ஆல்பமா இது இருக்கும்.

பெற்றோர் கவனிப்பு, ஆசிரியரின் அக்கறை, குழந்தைகளின் கொண்டாட்டம்னு அத்தனை அம்சங்களும் இதுல இருக்கும். இந்த ஆல்பத்தை அரசுப் பள்ளிகளுக்கு முழுவதும் இலவசமாவும், தனியார் பள்ளிங்களுக்கு நியாயமான விலையிலும் அளிக்கலாம்னு களத்துல இறங்கியிருக்கேன். சினிமா வேலைக்கு இடையில இந்த வேலையும் ஓடிக்கிட்டிருக்கு.

இசையமைப்பாளராகத் தரமான பாடல்களைக் கொடுத்தவர் நீங்கள். தற்போதைய திரையிசைச் சூழல் எப்படி இருப்பதாக நினைக்கிறீங்க?

ரொம்பவே மாறிடுச்சுன்னுதான் சொல்லணும். மாற்றத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனா பாசிடிவ்வைவிட நெகடிவ் விஷயங்கள் இப்போ அதிகம் பார்வையில் படுதே. செம ஹிட்னு டாப்ல இருந்த பாடலை அடுத்த ஆறு மாதத்துக்குப் பிறகு எங்கேன்னு தேட வேண்டியதா இருக்கு. பாடலுக்கான லைஃப் ரொம்ப கம்மியாடுச்சு. இது திரையிசைக்கு நல்லதில்ல.

இது மாறணும்னா என்ன செய்யலாம்?

தயாரிப்பாளர்கள் கேட்குறதாலதான் இந்த மாதிரி பாடல்களை நாங்க கொடுக்குறோம்னு சில டெக்னீஷியன்கள் சொல்றாங்க. இன்னைக்கு மட்டும்தான் தயாரிப்பாளர்கள் அப்படிச் சொல்றாங்களா என்ன? எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி 80, 90 -களில் வெளியான ரஜினி, கமல் படக் காலத்து தயாரிப்பாளர்கள்கூட கமர்ஷியலா நிக்கணும்னுதான் விரும்பினாங்க. அப்போ மட்டும் எப்படித் தரமான பாடல்களைக் கொடுக்க முடிந்தது. அதனால முதல்ல தயாரிப்பாளர் கேட்குறார், இயக்குநர் விரும்புறார்ங்கிற நொண்டிச் சாக்கை இசையமைப்பாளர் தூக்கிப் போடணும். அப்படித் தூக்கிப்போடுற கலைஞர்கள்கிட்ட இருந்து இப்பவும் ஒண்ணு, ரெண்டு நல்ல பாடல்கள் வரவும் செய்யுது. அதை நினைச்சு சந்தோஷப்பட்டுப்பேன்.

29chrcjJamesVasanthan

ஜேம்ஸ் வசந்தன்

சத்தமே இல்லாமல் உங்களது இரண்டாவது படத்தை இயக்கி முடித்திருக்கிறீர்களே?

ஆமாம். ‘ஓ! அந்த நாட்கள்’ படத்துக்கான கதை தோன்றியதும் முதல்ல சுஹாசினியைப் போய்ப் பார்த்தேன். அவங்கள பார்த்ததுக்கு இரண்டு காரணங்கள். ஒண்ணு என்னோட குடும்ப நண்பர். இன்னொன்னு ரைட்டர், இயக்குநர்னு பக்கா கிரியேட்டர். அதோட மூன்றாவதும் ஒரு முக்கிய காரணம் உண்டு. இந்தக் கதையில வர்ற முக்கியமான கதாபாத்திரம் ஒன்றை அவங்க மட்டும்தான் நடிக்க முடியும்.

‘சிந்து பைரவி’ படத்துல சங்கீத மேதை ஜேகேபியின் தீவிர ரசிகையாவும் பள்ளிக்கூட மியூசிக் டீச்சராவும் அவங்க ஏற்று நடிச்ச சிந்து, ‘ரெட்டவால் குருவி’ படத்துல ராதிகா மேடம் ஏற்று நடிச்ச ராதா, ‘மன்னன்’ படத்துல குஷ்பு மேடம் ஏற்று நடிச்ச மீனா, ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்துல ஊர்வசி மேடம் ஏற்று நடிச்ச திரிபுர சுந்தரி, தமிழ் ரசிகர்கள் மனசைவிட்டு நீங்காத கதாபாத்திரங்கள் பட்டியல்ல, இந்த கேரக்டர்களுக்கும் பசுமையான இடமிருக்கு. இந்தக் கதாபாத்திரங்களும் 25 வருஷங்களுக்குப் பிறகு சந்திச்சா எப்படி இருக்கும். அதுதான் படத்தோட கதை.

ஒரு பள்ளி விழால அவங்க சந்திக்கிறாங்க. படத்தோட பெரும்பகுதி ஆஸ்திரேலியால ஷூட் பண்ணியிருக்கேன். ரொமாண்டிக் காமெடி வகைப் படம். நாலு பேரும் என்ஜாய் பண்ணி நடிச்சிருக்காங்க. படத்தோட இறுதிகட்ட வேலைகள்ல இருக்கேன்.

ராதிகா, ஊர்வசி, சுஹாசினி மூவரையும் நடிக்க வைத்தது சரி. சமீப காலமாக குஷ்பு சொந்த நிறுவனப் படங்களில்கூடச் சிறப்புத் தோற்றத்தில் வருவதோடு நிறுத்திக்கொள்கிறார். அவரிடம் எப்படிச் சம்மதம் வாங்கினீங்க?

அந்தக் கட்டுப்பாட்டைத் தளர்த்திக்கொள்ள வைத்ததே இந்தக் கதைதான். இந்தக் கதையைச் சொன்னதும் நேரா கமல்கிட்டதான், ‘இது சரியா இருக்குமா?’ன்னு அவங்க கேட்டிருக்காங்க. ‘கான்சஃப்ட் நல்லா இருக்கு நடி’ன்னு சொல்லியிருக்கார். அதுக்கு பிறகுதான் ஷூட்டிங் வந்தாங்க. படத்துக்காக 2 மாதங்கள் ஆஸ்திரேலியாவுலயே தங்கி ஷூட் பண்ணினோம். கதை, வசனம், இயக்கம், இசைன்னு பெரிய பொறுப்பு இருந்தது. நல்ல குழு என்பதால் வேலைகளை ஸ்மூத்தா முடிச்சோம்.

இசையமைப்பாளர்கள்ல பலர் இப்போ நடிகர்கள். உங்கள் முகம் ஏற்கெனவே பரிச்சயப்பட்டது. இருந்தும் ஏன் நடிக்க வரல?

நடிப்புல எனக்கு அந்த ஆர்வம் இருந்ததில்ல. மற்ற மற்ற விஷயங்கள்ல நிறைய சாதிக்கணும்னு கனவு இருக்கு. இந்த ‘பள்ளி விழாப் பாடல்கள்’ ஆல்பம் மாதிரி இன்னும் நிறைய செய்யணும். நம்ம பயணம் அதை நோக்கியதாக இருக்கட்டுமே.

http://tamil.thehindu.com/cinema/cinema-others/article24280704.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.