Jump to content

நான் மிகவும் விரும்பும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: கமல்ஹாசன் ட்விட் பதிவு


Recommended Posts

நான் மிகவும் விரும்பும் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: கமல்ஹாசன் ட்விட் பதிவு

 

 
hqdefault

கமல் விஜய் கோப்புப் படம்

ட்விட்டரில் நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள நடிகர் கமல்ஹாசன் தான் மிகவும் விரும்பும் தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் #AskKamalHaasan @ikamalhaasan கமல்ஹாசனிடம் கேளுங்கள் என்ற தலைப்பில் ட்விட்டரில் கேள்வி கேட்பவர்களுக்கு பதிலளிக்கிறார். அதிக கேள்விகள் உள்ளதால் இன்று பிக்பாஸ் ஷூட்டிங்கின் இடையிடையே பதிலளிப்பதாக தெரிவித்திருந்தார்.

 
 

அதன் அடிப்படையில் சில கேள்விகள் அவர் பதிலளித்ததில் சுவாரஸ்யமாக இருந்தது. அவை பற்றிய தொகுப்பு:

தமிழ் கலைமகன் என்பவர் கமலிடம் நீங்கள் படித்த நூலில் உங்களை மிகவும் பாதிப்பை உண்டாக்கிய நூல் எது கமல்ஹாசன் ஐயா? என்று கேட்டதற்கு நல்ல நூல்களை பற்றி மேற்கோள் காட்டாமல் பூணூலைப்பற்றி கமல் பதிலளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கமலின் பதில் “நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்.” என பதிவிட்டுள்ளார்.

பத்ரி நாராயணன் என்பவர் நீங்கள் எப்போதாவது உலகப்புகழ் பெற்ற சத்யஜித்ரே, ஷியாம் பெனகல் ஆகியோருடன் இணைந்து பணியாற்றாமல் போனது குறித்து வருந்தியுள்ளீர்களா? உங்களை சத்யஜித்ரே ஒரு படத்தில் நடிக்க அழைத்ததாக அறிந்தேன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன் “துரதிருஷ்டவசமாக இருவருமே என்னை அழைக்கவில்லை, தனிப்பட்ட முறையில் அவர்களை எனக்கு தெரியும், ஆனால் தற்போது காலங்கடந்து விட்டது. சத்யஜித்ரே மறைந்துவிட்டார், நானும் வருங்காலத்தில் படத்தில் நடிப்பதில்லை என முடிவெடுத்துவிட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜிரா என்பவர் அதிக அளவில் கேரளாவிலிருந்து மருத்துவ கழிவுகள் தமைழகத்தில் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன, சமீபத்தில்கூட ஒரு லாரியை பிடித்தார்கள், நீங்கள் இது குறித்து உங்கள் நண்பர் கேரள முதல்வரின் கவனத்திற்கு கொண்டுச்சென்று இதற்கு முற்றுப்புள்ளி வைக்கலாமே? என்று கேட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன் இதுகுறித்து நண்பர் கேரள முதல்வரிடம் ஏற்கெனவே பேசியுள்ளேன், இனியும் பேசுகிறேன். இரண்டு மாநிலங்களும்சேர்ந்து இதற்கான தீர்வை கண்டுபிடிப்போம் என்று பதிலளித்துள்ளார்.

அடுத்து சசிகுமார் என்பவர் “உங்களின் தம்பி @actorvijay அண்ணண் அரசியலுக்கு வந்தால் நீங்கள் வரவேற்பீகளா? என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்துள்ள கமல்ஹாசன் “எனது அனைத்து தம்பிகளையும் வரவேற்கிறேன், அதுவும் இவர் எனக்கு மிகவும் பிடித்த தம்பி, எனக்கு மட்டுமல்ல, அனைவருக்குமே பிடித்த தம்பி, கண்டிப்பாக வரவேற்கிறேன்.” என்று பதிலளித்துள்ளார்.

ரஜினி கமலுக்கு அடுத்து பிரபலமாக இருக்கும் நடிகர் விஜய் அரசியலில் குதிக்கும் ஆர்வத்தில் இருக்கிறார். அப்படி குதித்தால் பலத்த போட்டியாளராக விளங்குவார் என்ற நிலையில் வரவேற்று கமல் ட்விட்டரில் பதில் அளித்துள்ளது அரசியல் நாகரீகத்தை எடுத்து காட்டுவதாக அமைந்துள்ளது.

இதே போல் ட்விட்டரில் பலரும் ஏகப்பட்ட கேள்விகளை கமலை நோக்கி கேட்டுள்ளனர்.

http://tamil.thehindu.com/tamilnadu/article24300795.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

தெரியாத தொழிலுக்கு ஏன் தான் போகிறார்களோ தெரியவில்லை. ஒரு வேளை கவுண்டமணி சொன்னது போல் யார் தான் தெரிந்த வேலை செய்கிறார்கள் என்பதாக இருக்குமோ??

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.