Jump to content

யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருவாசக அரண்மனை


Recommended Posts

யாழ்ப்பாணத்தில் சிவபூமி திருவாசக அரண்மனை

 
 
f5.jpg?itok=FJYkQZjm

செல்வநாயகம் ரவிசாந்

சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளருமான செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகனின் பெருமுயற்சியினால் யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் அமைந்துள்ள யாழ்.நாவற்குழியில் ஏ- 9 பிரதான வீதியில் சிவபூமி எனும் பெயரிலான திருவாசக அரண்மனை புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. சுமார் பத்துப் பரப்பு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் திருவாசக அரண்மனையில் வேறெங்கும் காண முடியாத பல்வேறு தனித்துவச் சிறப்புக்கள் உள்ளடங்கியுள்ளன.

திருவாசக அரண்மனையின் மூலவராகத் சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை நான்கரை அடி உயரம் கொண்டதாகக் காணப்படுகின்றது.

இந்தக் கோயிலில் வானுயர்ந்த ஐந்தடுக்கு விமானத்தில் சிவலிங்கங்கள் கவின் மிளிரக் காட்சி தருகின்றன.

சிவதெட்சணா மூர்த்தியின் திருவுருவச் சிலை முன்பாக 21 அடி உயரத்தில் அழகிய கருங்கர் தேர் பல்வேறு கலையம்சங்களுடன் கூடிய வகையில் அழகுற உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த தேருக்கு மேலாகச் சைவசமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் மற்றும் திருவாசகம் அருளிய மாணிக்கவாசக நாயனார் ஆகியோரின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தேரின் முன்பாக கருங்கல்லான பெரிய நந்தி அமைந்துள்ளது.22col----2220180618_183145144928006_5972

திருவாசக அரண்மனைக்குச் செல்லும் அனைத்து அடியவர்களதும் கண்கள் முதலில் கண்டு வழிபடும் வகையில் இந்தத் தெய்வீகக் காட்சிகள் அமைந்துள்ளன.

சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலின் இரு மருங்கிலும் மணிவாசகரால் அருளப்பட்ட 51 திருப்பதிகங்களை உள்ளடக்கிய 658 திருவாசகப் பாடல்களும் கருங்கல்லில் கையால் உளி கொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை வேறெங்கும் காண முடியாத அற்புதக் காட்சியாகும்.

அதுமாத்திரமன்றி கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள் அரண்மனைப் பிரகாரத்தில் பிரதிஸ்டை செய்யப்பட்டுள்ளதுடன் மேற்படி சிவலிங்கங்களுக்கு அடியவர்கள் தங்களின் கரங்களால் அபிஷேகம் செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சிவலிங்கங்கள் ஒவ்வொன்றும் மூன்றடி உயரமும், இரண்டரை அடி விட்டமும் கொண்டவை.

கிளிநொச்சி விவேகானந்தா நகரைச் சேர்ந்த ஆனந்தன் வினோத் என்ற இளைஞர் திருவாசகப் பாடல்கள் முழுவதையும் தனது கையால் உளி கொண்டு செதுக்கியுள்ளார்.இந்தத் திருப்பணி முழுவதும் நிறைவேறுவதற்குச் சுமார் ஒன்றரை வருட காலங்கள் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தியாவைச் சேர்ந்த பிரபல சிற்பக் கலைஞரான புருசோத்தமனும் அவரது குழுவினரும் திருவாசக அரண்மனை வளாகத்தின் முன்பாக நிறுவப்பட்டுள்ள 21 அடி உயரத்திலான கருங்கற் தேர், சிவதெட்சணா மூர்த்தி திருக்கோயிலில் நிறுவப்பட்டுள்ள திருவுருவச் சிலை மற்றும் சிற்பங்களையும் நிறுவியுள்ளார்.

யாழ்.ஊரெழுவைச் சேர்ந்த சண்முகநாதன் குழுவினர் திருவாசக அரண்மனைக் கட்டடத்துக்கான நிர்மாணப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

சிவபூமி-திருவாசக அரண்மனை

அமைவதற்கு வித்திட்ட காரணி

 

 
 

செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் திருவெண்ணாமலை கோயில் வீதியில் இடம்பெற்ற திருமுறை மாநாட்டில் பங்கெடுத்துச் சிறப்புரையாற்றிவிட்டுத் திரும்பிய போது சித்தரொருவரைச் சந்தித்தார். அவர் கலாநிதி ஆறு. திருமுருகனை நோக்கி 'ஈழத்தில் திருவாசகத்தைக் காப்பாற்றுங்கள்... திருவாசகம் உங்களைக் காப்பாற்றும்' எனக் கூறினார்.

அத்துடன் திருவாசகத்தைக் காப்பாற்றுவதற்கான முயற்சியைத் தொடங்கு...எல்லாம் நன்றாக நிறைவேறும் எனவும் குறிப்பிட்ட சித்தர் கூறினார். சித்தரின் கூற்றைத் தெய்வ வாக்காகக் கருதிய கலாநிதி ஆறு.திருமுருகனின் எண்ணத்தில் ஒளிபெற்றதே இந்தத் திருவாசக அரண்மனை.

திருவாசக அரண்மனை உருவாகுவதற்கு உதவியோர்

புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் வாழும் தெல்லிப்பழையைச் சேர்ந்த இதய வைத்திய நிபுணர் மனமோகன் மற்றும் அவரது பாரியாரான வைத்தியகலாநிதி- சிவகெளரி ஆகியோர் திருவாசக அரண்மனை நிர்மாணிப்பதற்கான நிலத்தையும், நிதியையும் வழங்கியுள்ளனர்.

புலம்பெயர்ந்து அமெரிக்கா நாட்டில் வாழும் அராலியைச் சேர்ந்த பொறியியலாளரான அரவிந்தன் கைலாசபிள்ளை குடும்பத்தினர் கருங்கற் தேர் நிர்மாணிப்பதற்கான நிதியை வழங்கியுள்ளதுடன், கருங்கல்லில் திருவாசகம் முழுவதையும் பதிப்பிப்பதற்கு இதய வைத்திய நிபுணர் மனமோகனின் பெரும் நிதிப் பங்களிப்புடன் இலண்டன், கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் அன்பர்களின் நிதியுதவி மற்றும் கலாநிதி- ஆறு. திருமுருகன் வெளிநாடுகளுக்குச் சொற்பொழிவு ஆற்றுவதற்குச் சென்ற போது கிடைத்த நிதி அன்பளிப்புக்கள் என்பன உள்ளடங்கியுள்ளன.

சிவபூமி- திருவாசக அரண்மனைக்குச் சிறப்புச் சேர்த்துள்ள விடயங்கள்

திருவாசக அரண்மனைக்கு மென்மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில் சிவபுராணம் சிங்களம், மலையாளம், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிபெயர்ப்புக்கள் கருங்கல்லில் கையால் உளிகொண்டு செதுக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் திருவாசக ஆராய்ச்சி நூல் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூல் நிலையத்தில் திருவாசகம் தொடர்பாக வெளிவந்த அனைத்து நூல்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

திருவாசக ஆராய்ச்சியில் ஈடுபடுவோர் தங்கி நின்று ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கேற்ற விடுதியறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

திருவாசக அரண்மனைத் திறப்பு விழாUntitled-1.jpg

யாழ்ப்பாணம் நாவற்குழியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவபூமி- திருவாசக அரண்மனை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்-04 மணிக்குத் திறப்பு விழாக் காண்கிறது. மேலும் இந்த வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதெட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நாளை திங்கட்கிழமை காலை-09.45 மணி முதல் முற்பகல-10.45 மணி வரையுள்ள சுபவேளையில் இடம்பெறும்.

பன்னிரு திருமுறைகளில் எட்டாம் திருமுறையாக விளங்கும் திருவாசகம் பக்திச் சுவை நனி சொட்டும் வகையில் மாணிக்கவாசக சுவாமிகளால் இயற்றப்பட்டது. திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்பது முதுமொழி. இதனால் தான் தமிழில் சிறந்த இலக்கியங்களின் வரிசையில் திருவாசகத்திற்கும் தனி இடமுண்டு.

இவ்வாறான பல்வேறு சிறப்புக்கள் பொருந்திய திருவாசகத்தைப் பேணிப் பாதுகாப்பதற்கு முதன்முதலாக இலங்கையில் அதுவும் யாழ்ப்பாணத்தில் பிரமாண்டமான திருவாசக அரண்மனை நிர்மாணிக்கப்பட்டுள்ளமை யாழ்ப்பாண மக்கள் திருவாசகத்திற்கு வழங்கிவரும் உயர் கெளரவத்திற்குத் தக்க சான்று என்றால் அது மிகையில்லை.

http://www.vaaramanjari.lk/2018/06/24/பத்திகள்/யாழ்ப்பாணத்தில்-சிவபூமி-திருவாசக-அரண்மனை

Link to comment
Share on other sites

உலகிலேயே தமிழின் உறைவிடமாக மிளிரப்போகும் யாழ்ப்பாணம்!

 

 

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என உணர்ச்சி வயப்பட்டு பல தடவைகள் நாங்கள் பேசுவதுண்டு.

உண்மைதான் தமிழனாக நாம் தலைநிமிர பல காரணங்களை பட்டியலிட முடியும். குறிப்பாக உலகின் சில மொழிகளை ஒவ்வாரு அடைமொழி கொடுத்து சிறப்பாக அழைப்பார்கள். உதாரணமாக ஆங்கிலத்தை சர்வதேச மொழி எனவும் பிரெஞ்சு மொழியை காதலின் மொழி எனவும் அழைக்கும் போது தமிழை பக்தியின் மொழி என அழைப்பார்கள்.

அந்த உயர்ந்த இடத்தை தமிழுக்குப் பெற்றுக்கொடுத்த பெருமை திருவாசகத்துக்குரியது. அதையும் தாண்டி தமிழ் செம்மொழி அந்தஸ்துப் பெற காரணமானவை தமிழின் நீண்ட பாரம்பரிய தொடர்ச்சியான மரபுசார் இலக்கியங்கள்.

அவற்றுள் இன மத மொழி கடந்து உலகின் அத்தனை மனிதர்களையும் ஈர்த்த பெருமை இரண்டு இலக்கியங்களுக்கு உண்டு. ஒன்று உலகப் பொதுமறை திருக்குறள். மற்றையது தேனினும் இனிய திருவாசகம். திருவாசகச் சிந்தனைகள் என்பது மதம் கடந்த பக்தியின் மார்க்கத்துக்கு வழி செய்வன.

அதனாலேயே அறிவு முதிர்ச்சி பெற்ற பல கிறிஸ்தவ மதகுருமார்கூட ஆராதிக்கும் நூலாக திருவாசகம் திகழ்கின்றது. பல தேவாலயங்களில் திருவாசகப் பாடல்கள் சில பிரார்த்தனையுடன் பாடப்படுவதை இன்றும் காணலாம். திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தமை ஒரு குற்றம் எனக் கருதி கிறிஸ்தவப் பாதிரியாரான போப் அடிகள் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது.

கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்ட ஒருவர் சைவ சமயத்தின் ஒரு நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தமை பெரும் சிக்கலை உருவாக்கியது. வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிபதி, 'போப் அவர்கள் மொழிபெயர்த்த நூலை முழுமையாக வாசிக்காது தீர்ப்புக் கூற முடியாது' என வழக்கை ஒத்திவைத்தார்.

தீர்ப்பு வழங்கும் நாளில் நீதிமன்றுக்கு வந்த நீதிபதி எல்லோரும் எழுந்து நிற்க நேரே போப் பாதிரியாரிடம் சென்று அவரை வீழ்ந்து வணங்கினார். இப்படி ஒரு நூலைப் படித்து சுவைத்து மொழிபெயர்த்த பின்னரும் சைவ சமயத்துக்கு மதம் மாறாது இருக்கின்றீர் எனின் தாங்களே உண்மை கிறிஸ்தவன் என மெச்சி வழக்கில் இருந்து அவரை விடுவித்தார். இப்படி திருவாசகம் நிகழ்த்திய அற்புதங்கள் ஏராளம்.

தமிழின் இருப்புக்கும் சைவத்தின் நிலைபேறுக்கும் சவாலான காலம் தற்போது நிலவுவதாக பலரும் அச்சப்படுகின்றோம். இந்த அச்சம் எமக்குத் தேவையற்றது. இயற்கை நீதியையும் நியதியையும் புரிந்து கொள்ளும் பக்குவம் கொண்டவர்களுக்கு இவ் அச்சம் ஒருபோதும் வருவதில்லை. காரணம் காலம் என்பது மிகப்பெரும் நீதிபதி. அது தக்க தீர்மானங்களை அவ்வப்போது எடுத்துக் கொள்ளும். அதன் தீர்மானத்தின் வழி ஒரு விடயத்தை தலைமுறை கடந்தும் பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என தீர்மானிக்கப்பட்டால் அந்த விடயத்தை எவர் நினைத்தாலும் எத்தகைய பலம் கொண்டும் அழித்து விட முடியாது.

இவ்வாறு காலம் பாதுகாத்த விடயங்கள் பலவுண்டு. தமிழ்மொழி என்பது காலம் பாதுகாத்த அரும் பொக்கிசம். அல்லாது போனால் காலத்துக்கு காலம் நடைபெற்ற அந்நியர்களின் படையெடுப்பால் தொடர் பயன்பாடற்றுப் போன தமிழ் மொழியும் அடக்கி அமுக்கப்பட்ட சைவநெறியும் மீண்டும் முனைப்புப் பெற்று இன்னும் பல்வகைச் சிறப்போடும் தனித்துவத்தோடும் இன்று வரை உலகப் பரப்பு எங்கணும் வியாபித்திருக்காது. ஒரு கணம் சிந்தியுங்கள்.

உலகத்தின் ஆதிக்க சக்தியாக கருதப்படும் கிறிஸ்தவ மதத்தின் பிதாமகர் யேசு போதித்த மார்க்கம் இன்று வரை உலகில் ஆதிக்கம் செலுத்துகின்றது. ஆனால் யேசு பேசிய அவரது தாய்மொழி 'ஹிப்ரு' இன்று உலகில் வழக்கத்தில் இல்லை. ஏன் தேவபாசையாக உயர் அந்தஸ்த்தில் வைத்து போற்றப்பட்ட வடமொழி சமஸ்கிருதம் இன்று வெறுமனே வழிபாட்டுக்குரிய மொழியாக மட்டுமே இருக்கின்றது.

பேச்சு வழக்கிழந்து போகின்றது. அறிவியில் சிந்தனைகளின் ஆரம்ப ஊற்றாக இருந்த இலத்தீன் மொழி இன்று தன் பலத்தை ஆங்கில மேலாதிக்கத்தால் தொலைத்திருக்கின்றது. இப்படி ஒரு காலத்தில் உலகையாண்ட பல மொழிகள் காணாமல் போன போகின்ற வரலாறுகளை ஞாபகப்படுத்தமுடியும். ஆனால் தமிழ் பல்லாயிரம் ஆண்டுகள் காலம் கடந்தும் இன்றும் காலவோட்டத்துக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக்கொண்டு இயல் இசை நாடகம் எனும் முத்தமிழோடு இன்று அறிவியல் தமிழையும் இணைத்துக்கொண்டு இணையமொழியாக என்றும் இளைய மொழியாக தன் இருப்பை உறுதிசெய்துள்ளது.

இன்னும் ஒரு கோணத்தில் சிந்தித்தால் அச்சு இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஆகும். அதற்குப் பின்பே நூல்கள் அச்சு வாகனம் ஏறின. இருந்தும் தமிழின் நீண்ட தொடர்ச்சியான இலக்கியப் பாரம்பரியமிக்க நூல்கள் சற்று சிதைந்து தொலைந்தாலும் கணிசமானளவு காலம் கடந்தும் எங்கள் கைகளுக்கு கிடைத்திருக்கின்றது என்றால் அது காலம் நம் தமிழை காத்ததன்மையினால் அல்லவா? எனவே காலம் தமிழைப் பாதுகாக்கும் தீர்மானத்தை எப்போதோ எடுத்துவிட்டது. அந்த தீர்மானத்தை அது ஒருபோதும் ரத்துச் செய்யாது.

கைவிடவும் மாட்டாது. மாறாக தீர்மானத்தை வலுவாக்கும் காரணிகளை, விடயங்களை தன் இயற்கை வல்லமை கொண்டு தன்னால் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் வழி காலத்துக்கு காலம் ஆற்றியவண்ணமிருக்கும். அப்படி காலத்தால் ஆசிர்வதிக்கப்பட்டவரான கலாநிதி செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் சிந்தனையில் செல்லும் திசையாவும் வெல்லும் அவரது சொல்லுக்கு கட்டுப்படும் கொடைவள்ளல்களின் காருண்யத்தில் காலம் தீர்மானித்த ஒரு விடயம் தான் நாவற்குழி திருவாசக அரண்மனை.

அதனையும் நாவற்குழியில் அமைக்கவேண்டும் என காலம் தீர்மானித்த சூட்சுமம் சற்று ஆழமாகச் சிந்திப்பின் மனதுக்கு ஆறுதல் தரும். யாழ்பாணத்தின் நுழைவாயிலில் நுழைய 'எத்தனிப்பவர்களுக்கும்' உள்வருவோருக்கும் யாழ்ப்பாணம் தமிழின் நிலம் சைவத்தின் தேட்டம் என்பதை உணர்த்தும் காலச் சின்னமாக திருவாசக அரண்மனை என்றும் நிலைக்கும். மதம் கடந்து நாம் தமிழர்கள் என தலைநிமிர வைக்கும் மையப்புள்ளியாக திருவாசகம் எம்மை இயக்கட்டும்.

தமிழர்களாய் நாம் ஒற்றுமைப்பட வேண்டிய காலத்தில் பல்வேறு அடிப்படைகளில் நாம் சிதறுண்டு போகாதிருக்க காலம் நமக்கு காட்டும் சகுனமாக திருவாசக அரண்மனை திகழ்கின்றது. எனவே காலத்தீர்மானத்தை கவனம்கொள்வோமாக..

ரத்னசிங்கம் சர்வேஸ்வரா

Image0

Image1

Image2

https://www.ibctamil.com/srilanka/80/102328

 

 

 

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட -திரு­வா­சக அரண்­மனை!!

20180624_163529-750x430.jpg
 
 

நாவற்­கு­ழி­யில் கருங்­கற்­க­ளால் அமைக்­கப்­பட்ட திரு­வா­சக அரண்­மனை நேற்­றுத் திறந்து வைக்­கப்­பட்­டது.

விநா­யக வழி­பாட்­டு­டன் தவில் நாதஸ்­வர இசை­யு­டன், கருங்­கற்­க­ளில் பொறிக்­கப்­பட்ட 658 பாடல்­களை கொண்ட, 11 மொழி­க­ளில் மொழி பெயர்க்­கப்­பட்ட திரு­வா­ச­கப் பாடல்­களை உள்­ள­டக்­கிய அரண்­மனை விருந்­தி­னர்­க­ளால் திறந்து வைக்­கப்­பட்­டது.

வாச­கம் பொறிக்­கப்­பட்ட அர­ணின் ஒவ்­வொரு தூண்­க­ளின் இடை வெளி­யி­லும் நான்கு சிவ­லிங்­கம் மற்­றும் நான்கு மணி­கள் வீதம் 108 சிவ­லிங்­க­மும் 108 மணி­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. தட்­சணா மூர்த்­திக்கு அமைக்­கப்­பட்ட ஆல­யத்­தின் வழி­பாட்டை தொடர்ந்து 21 அடி­யில் தங்க முலாம் பூசப்­பட்ட பாம்­புச் சிவ­லிங்­கம் இருக்­கும், கருங்­கல்­லில் அமைக்­கப்­பட்ட தேர் திறந்து வைக்­கப்­பட்­டது.

 

அரண்­மனை உரு­வாக்­கு­வ­தற்கு பல­வ­ழி­க­ளும் பாடு­பட்ட சிற்­பக்­க­லை­ஞர், கட்­ட­டக் கலை­ஞர், செப்பு வேலை கலை­ஞர், கருங்­கல் வேலைப்­பா­டுக் கலை­ஞர்­கள் பொன்­னாடை போர்த்தி பதக்­கம் வழங்கி மதிப்­ப­ளிக்­கப்­பட்­ட­னர்.

கருங்­கற்­க­ளால் பொறிக்­கப்­கப்­பட்ட எழுத்து வேலை­களை செய்­த­வர் மாவீ­ரர் துயி­லும் இல்­லங்­க­ளின் பெயர்­களை கருங்­கல்­லில் பெயர் பொறிக்­கும் இளை­ஞன் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. திரு­வா­சக அரண்­மனை நூலும் வெளி­யி­டப்­பட்­டது. இந்த நூலை சிவ­பூமி அறக்­கட்­ட­ளை­யின் பொரு­ளா­ளர் குக­தா­சன் வழங்கி வைக்க நல்லை ஆதீன முதல்­வர் பெற்­றுக்­கொண்­டார்.

நிகழ்­வில் விருந்­தி­னர்­க­ளாக ஆஸ்­தி­ரே­லியா மருத்­துவ நிபு­ணர் கலா­நிதி மன­மோ­கன் மருத்­துவ கலா­நிதி சிவ­கௌரி தம்­ப­தி­யி­னர், கொழும்பு மனித நேய அறக்­கட்­டளை தலை­வர் அபி­ராமி கயி­லா­ச­பிள்ளை, கம்­ப­வா­ரிதி இ.ஜெய­ராஜ், சிதம்­ப­ரம் அண்­ணா­மலை பல்­க­லைக் கழக பேரா­சி­யர் தி.பால­சந்­தர் தேசி­கர் ஆகி­யோர் கலந்து கொண்­ட­னர்.

20180624_160436-300x169.jpg

http://newuthayan.com/story/10/நாவற்­கு­ழி­யில்-கருங்­கற்­க­ளால்-அமைக்­கப்­பட்ட-திரு­வா­சக-அரண்­மனை.html

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

 

புதுப்பொலிவுடன் சிவபூமி திருவாசக அரண்மனை திறப்பு விழா!! | நாவற்குழி யாழ்ப்பாணம்

Link to comment
Share on other sites

திருவாசக அரண்மனை 

 

கடவுளால் அமைக்கப்பட்டதொரு கற்கோயில்.

THIRU-3.jpg?resize=800%2C534

 

வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து – என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே”

என்று திருவாசகத்தின் பெருமை பற்றிப் பாடியிருக்கிறார் வள்ளலார்.

ஆங்கில அறிஞர் G.U . போப்பின் ஆகச் சிறந்த படைப்பாகக் கருதப்படுவது அவரது திருவாசக மொழிபெயர்ப்பு. திருவாசகத்தை போப்பை மொழிபெயர்க்க ஊக்கப்படுத்திய நிகழ்வு நெகிழ்ச்சியானது.தனது முதுமைக் காலத்தில் பிரித்தனியாவுக்குத் திரும்பிச் சென்ற போப் தனது நண்பரோடு பேசிக் கொண்டிருந்தபோது திருவாசகத்தைப் பற்றியும் விவரித்திருக்கிறார்.திருவாசகத்தின் பால் கவரப்பட்ட அவரது நண்பரே திருவாசகத்தை ஆங்கிலத்தில் பதிப்பிக்க வேண்டும் என போப்பை ஊக்குவித்தவர். ஆனாலும் முதலில் போப் அதற்கு உடன்படவில்லை. “அது பாரிய பணியென்றும், நீண்ட காலமாகலாம். அதுவரை நான் உயிரோடு இருப்பேனோ! என்று எனக்குத் தெரியாது என்று கூறி” – தனது முதுமையையும், தள்ளாமையையும் காரணம் காட்டி மறுத்திருக்கிறார். ஆனால் அவரது நண்பர் விடவில்லை. “ஒருவர் தன்னை உன்னதமான பணியில் ஈடுபடுத்திக் கொண்டால் போதும். உற்சாகம் வந்துவிடும். முதுமை காணாமற் போய்விடும்.வாழ்வு நீண்டுவிடும்.இதை அற்புதமாய் செய்து முடிக்க உன்னால்தான் முடியும். அதற்குரிய பக்குவம் உன்னிடம் உண்டு.நிட்சயம் அந்தப் பணியை நிறைவேற்றுவாய்” – என்று சொல்லிக் கொடுத்த ஊக்கத்தால் போப் அவர்கள் தனது எண்பதாவது வயதில் அப் பணியை நிறைவேற்றி இருக்கிறார். இவர் 1837இல் தமிழைப் படிக்கத் தொடங்கியவர் 1900 இல் திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். “என்னுள் இருக்கின்ற ஆழமான உணர்ச்சிகளே இத்தகைய இலக்கியப் பணிகளை எனக்கு நெருக்கமடையச் செய்திருக்கின்றன” என்று குறிப்பிட்ட போப் அவர்கள் – தான் இவ்வுலகை விட்டுச் சென்ற 88 வயதில் 1908 இற்கு முன்னர் அவர் எழுதிய குறிப்பொன்றில் – “ எனது கல்லறையை எழுப்ப செலவாகின்ற தொகையில் ஒரு பகுதியை தமிழரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும். அத்துடன் எனது கல்லறையில் “ஒரு தமிழ் மாணவன்” என்ற குறிப்பும் இடம்பெற வேண்டும்” – என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இப்படி உலகறிந்த திருவாசகத்திற்கு யாழில் ஒரு அரண்மனையை அமைத்திருக்கின்றனர் சைவர்கள். “பல எலிகள் ஒன்று சேர்ந்தால் புற்றெடுக்காது” – என்ற வாசகத்தைப் பொய்ப்பிக்கின்ற வகையில் உலகளாவிய ரீதியில் வாழுகின்ற பல சைவத் தமிழ் பெருமக்கள் ஒன்றிணைந்து இக் கைங்கிரியத்தைச் செய்து முடித்திருக்கின்றனர். அதை முன்னின்று நடத்திச் சென்ற செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகனை நல்லூர் துர்க்காமணி மண்டபத்தில் சந்தித்தேன்.சிவபூமி அறக்கட்டளையினூடாக இன்னொரு பணியையும் முன்னெடுத்திருக்கிறார் அவர்.திருவாசக அரண்மனை என்ற முன்னெடுப்பு ஒரு காலத்தின் கட்டாயம் என்பது பல தமிழ் இலக்கியவாதிகளுடைய கருத்தாக அமைகிறது.

வணக்கம். வழமையாக இது போன்ற கைங்கரியங்கள் “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்ற திருவாசக அடிகளின் உட் கருத்தை அடியொற்றியே நடைபெறுவதா கத்தான் நான் அறிந்திருக்கிறேன்.எனவே இத் திருவாசக அரண்மனையைக் கட்ட வேண்டும் என்ற உந்து சக்திக்குப் பின்புலமாக என்ன உண்டு?என்ன நடைபெற்றது? இறை காட்சி கொடுத்துச் சொன்னதாக… ஏதாவது சம்பவம் இடம் பெற்றதா?

THIRU-1.jpg?resize=800%2C534

ஆம்.அது போன்ற ஒரு மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் ஒன்று திருவண்ணாமலையில் நடைபெற்றது.2016 இல் தமிழ் நாட்டு ஓதுவார் சங்கத்தால் நடத்தப்பட்ட திருமந்திர மாநாட்டில் சிறப்புரையாற்றச் சென்றிருந்தேன்.திருவண்ணாமலை ஆலயத்தின் வடக்கு வீதியிலே உள்ள மண்டபத்தில் இரண்டு நாட்களாக அம்மாநாடு நடைபெற்றது.இரண்டு நாட்களும் நான் உரையாற்றினேன்.இரண்டாவது நாள் நான் உரையாற்றிவிட்டு உணவுக்காக வெளியே வந்தவேளை அங்கு காணப்பட்ட படிகளில் ஒன்றில் ஒரு பெரியவர் அமர்ந்திருந்தார்.அவர் என்னைச் சைகை காட்டி அழைத்தார்.அழுக்கு வேட்டி, நீர் காணாத சரீரம் என அவர் புறத்தோற்றம் என்னை ஒரு கணம் சிந்திக்க வைத்தது.இருந்தும் என்னை மீறிய ஒரு சக்தியினால் ஆட்கொள்ளப்பட்டு அவர் அருகே சென்று உட்கார்ந்து கொண்டேன்.திருவாசகத்தைப் பற்றியும், திருமந்திரத்தைப் பற்றியும் பேசத்தொடங்கினார். நான் அன்று அங்கு பேசிய வரிகளைச் சொல்லி மீதி வரிகளையும் தான் சொல்லி, சைவத் தமிழர்களின் போற்றத் தக்க பொக்கிஷங்களில் முதன்மையானது திருவாசகம் என்றும் குறிப்பாக ஈழத் தமிழர் திருவாசகத்தை நேசிப்பது தனக்கு மிக மகிழ்சியைத் தருகிறதுஎன்றும் அத்துடன், “நான் இன்னொன்றையும் கேள்விபட்டிருக்கிறேன். அங்கோ பாடசாலைகளிலே சிவபுராணத்தைப் பாடுகின்றனராம். கோயில்களிலோ திருவாசக முற்றோதல் நிழ்கிறதாம்.எழுத்தறிவில்லாத காலத்திலேயே பாமரமக்கள் கேள்வி ஞானத்தினால் திருவாசகத்தைக் கற்றுச் சிறப்புறப்பாடி வந்திருக்கின்றனராம். ஒருவரின் மரண வீட்டிலும் திருப்பொற் சுண்ணம் எனும் திருவாசகத் தேனைப் பாடியே ஈமக்கிரியைகள் நடைபெறுகின்றனவாம்.எனவே யாழ்ப்பாணம் ஒரு புண்ணிய பூமி ” என்றும் சொன்னார்.அவற்றைக் கேட்டதும் என் மெய்சிலிர்த்தது.

அத்துடன் அவர் விடவில்லை. திருவாசகம் ஒரு தத்துவவியல் என்றும் மேலை நாட்டவர் தற்போது மேலை நாட்டுத் தத்துவவியல் என்றும் தென் கிழக்குத் தேசத் தத்துவவியல் என்றும் இரண்டாகப் பிரிக்கத் தொடங்கிவிட்டனர்.ஆனால் தத்துவத்திற்குக் கடவுளையும், தத்துவத்திற்கு வார்த்தைகளையும் சொன்ன ஒரு உயர்ந்த சமயம் சைவம். எனவே சைவசமயத்தில் ஏராளமான தத்துவ நூல்கள் உண்டு. அவற்றுள் திருவாசகம் ஒரு ஒப்பற்ற தத்துவ நூல். எனவே இந்தத் திருவாசகத்தை இலங்கை மண்ணிலே அழியாது காப்பாற்ற வேண்டும்.இதுவரை காலமும் அழியாது பாதுகாத்துவரும் திருவாசகத்தை அடுத்த சந்ததிக்குக் காப்பாற்றிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உன்னிடம் உண்டு.எனவே அதற்காகச் சில காரியங்களை நீ செய்ய வேண்டும் என்று அந்தப் பெரியவர் சொன்னார். உடனே அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று அவரிடம் கேட்டேன்.அழியாது அவற்றைக் பாதுகாக்க வேண்டும் என்றார்.உடனே நான் சொன்னேன் “யாழ்ப்பாணத்தில் இரண்டு பெரியவர்கள் திருவாசகத்திற்கு உரை எழுதியிருக்கிறார்கள்.பலர் அதனை அச்சில் புத்தகமாகப் பதிப்பித்திருக்கிறார்கள்- என்றேன். அதற்கு அவர் சிரித்துவிட்டுச் சொன்னார் “ நான் நூல் பதிப்பதைச் சொல்லவில்லை.மன்னர்கள் பல முயற்சிகளைச் செய்தார்கள். கருங்கல்லிலே கோயில்களைக் கட்டினார்கள்.கருங்கல்லிலே எழுத்துக்களையும் பதித்திருக்கிறார்கள்.அது போல திருவாசகத்தைக் கல்லிலே பதிக்க வேண்டும்.இயற்கை அனர்த்தத்தினாலோ பிற இன்னல்களினாலோ திருவாகசம் அழியாது அந்த மண்ணிலே நிலையாக இருக்க வழி செய் என்றார். கருங்கல்லிலே பதிக்கச் சொல்லுகிறீர்களே, யாழ்ப்பாணத்திலே கருங்கற்கள் இல்லையே.என்றேன். அதற்கு அவர் பதில் சொல்கிறபோது ,தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜ சோழனுக்குத் தஞ்சையிலே கருங்கற்கள் கிடைக்கவில்லை.ஆனால் அவன் 216அடி விமானத்தை மக்கள் இன்றைக்கும் வியக்கின்றவகையில் வேறொரு இடத்திலிருந்து கற்களைக் கொண்டு வந்து கட்டினான்.ராஜராஜனின் அரண்மனை இன்று இல்லை. அவனின் சமாதி இல்லை.ஆனால் அவன் கட்டிய அந்தக் கற்கோவில் இன்றும் அழியாது காப்பாற்றப்பட்டு இருக்கிறது.எனவே திருவாசகத்தைக் கல்லில் பதிக்க முயற்சி செய்.அது காப்பாற்றப்படும்.முயற்சிக்குப் பலனுண்டு – என்றார்.அவரிடம் விடை பெற்ற அந்தக் கணத்திலேயே திருவாகச அரண்மனை என்ற விடயம் என்னுள் முளைவிடத் தொடங்கிவிட்டது.ஆனால் ஊருக்குத் திரும்பிய சமயந்தொட்டுப் பலரிடம் இந்த விடயத்தைச் சொன்னதும் எவரும் இதைக் கட்டி முடிக்கலாம் என்று சொல்லவில்லை.எதிர்மறைக் கருத்துக்களையே சொன்னார்கள். எவரும் ஆர்வம் காட்டவில்லை.“தற்போது பல வழிகளிலே திருவாசகம் இன்ர நெற்றில் பாதுகாக்கப் பட்டிருக்கிறது.எனவே இது அவசியமற்ற விடயம்” என்று காரணத்தைச் சொன்னார்கள்.இருந்தும் என்னுள் இந்த முயற்சி சுடர்விடத் தொடங்கியது.

THIRU-4.jpg?resize=800%2C534

ஒரு வீடு கட்டி முடிப்பதற்குள் பல இடர்பாடுகளை எதிர் நோக்குகின்ற இக் காலகட்டத்தில், பல லட்சங்களை அல்ல, பல கோடி பெறுமதியான பொருட் செலவில் இக் கைங்கரியம் நடைபெற்றிருக்கிறது. பலபேர் ஒத்து நின்றாலும் இதை முதலில் நீங்கள் உங்களது மனக் காட்சியிலே வடித்த பின்னரே நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதாக அறிந்தோம்.இது எப்படிச் சாத்தியமாயிற்று?

2015 இல் அவுஸ்திரேலியாவுக்குச் சொற்பொழிவுக்காகச் சென்றபோது, எனது சொற்பொழிவைக் கேட்பதற்கு வருகின்ற வைத்திய கலாநிதி வயிரமுத்து மனமோகன் மற்றும் அவர் பாரியார் திருமதி.சிவகௌரி மனமோகன் ஒரு நாள் என்னைச் சந்தித்தபோது, தங்களுக்குரிய 10 பரப்புக் காணி ஒன்று நாவற்குழி A9 பாதையில் உண்டென்றும் தாம் அதைச் சிவ பூமி அறக்கட்டளைக்கு எழுதப் போவமதாகவும் அதில் தென்னந் தோட்டத்தை அமைத்தால் நலம் என்று சொல்லியிருந்தனர்.ஆம் என்று கேட்டுவிட்டு அப்படியே விட்டுவிட்டேன். பின்பு நான் திருவண்ணாமலையில் இருந்து திரும்பி வந்த வேளை அகில இலங்கை இந்துமாமன்றத் தலைவர் ப. நீலகண்டன் அவர்கள் விபுலானந்தர் விழாவுக்காக யாழ்ப்பாணம் வந்திருந்தார்.வைத்திய கலாநிதி வ. மனமோகன் கொடுக்கச் சொன்னதாக உறுதிகளைக் கொண்டு வந்து தந்தார். அவை சிவ பூமி அறக்கட்டளைக்கு மாற்றப்பட்டிருந்தது.தான் அவுஸ்திரேலியா சென்ற சமயம் அதைத் தன்னிடம் தந்து சிவபூமி அறக்கட்டளைக்கு மாற்றுவதற்கான தத்துவத்தையும் தந்ததாகச் சொன்னார். காணி கிடைத்ததும் மீண்டும் திருவாசக அரண்மனைக்கான முயற்சிகள் மனதில் சுடர்விடத் தொடங்கிவிட்டன.

சித்தர் சொன்னது தொடக்கம் ஆரம்பித்த திருவாசக அரண்மனை என்ற ஆர்வம் என்னைத் துரத்திக் கொண்டிருந்தது. எல்லோருக்கும் தெரியும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்னர் நான் ஆரம்பித்த சிவ பூமி அறக்கட்டளையின் மூலம் கோண்டாவிலில் மற்றும் கிளிநொச்சியில் இரு மனவிருத்தி குன்றிய பிள்ளைகளுக்கான பாடசாலைகள், முதியோருக்கான முதியோர் இல்லம், கீரிமலையில் ஒரு யாத்தீரிகர் மடம், குப்பிளானில் ஆச்சிரமம் இவற்றுடன் திருகோணமலையிலும் ஒரு யாத்தீரிகர் மடத்துடன் மன விருத்தி குன்றியோருக்கான பாடசாலை என்று பல தருமப் பணிகளை முன்னெடுத்து வருகிறேன். இவற்றை நிருவகிக்கச் சிரமமிருக்கின்றதொரு நிலை காணப்படுகின்றபோது திருவாசக அரண்மனை என்ற விடயம் சாத்தியமாகுமா?என்று எனக்கு நானே கேள்வி கேட்டுக் கொண்டேன். இருந்தும் எனது எண்ணங்களை வரைபடமாகக் கீறிக் கையில் வைத்துக் கொண்டேன்.அந்த நேரத்திலே மீண்டும் அவுஸ்திரேலியா விலுள்ள அபயகரம் என்ற அறக்கட்டளை என்னை உரையாற்ற அழைத்திருந்தனர். அங்கு போனபோது சிட்னி முருகன் ஆலயத்தில் மூன்று நாள் சொற்பொழிவு நிகழ்த்தச் சந்தர்பம் கிடைத்தது. அங்கே எனது பேச்கைச் கேட்க வைத்தியர் மனமோகனும் அவரது பாரியார் சகிதம் வந்திருந்தார்.வழமை போல ஒரு இராப்போசன விருந்துக்கு அழைத்தனர். போய் உணவருந்திக் கொண்டிருந்த வேளை “அந்த நாவற்குழி நிலத்தில் என்ன செய்யப் போகிறீர்கள் ?” என்று கேட்டனர். கையில் வைத்திருந்த வரைபடத்தைக் காட்டிப் பல லட்சம் செலவாகும் என்ற விடயத்தைச் சொன்னபோது, தாங்கள் அப் பணியை முன்னெடுப்பதாக மகிழ்சியோடு சொன்னார்கள்.நாடு திரும்பியதும், உள்ளூர் ஒப்பந்தக்காரர் ஊரெழுவைச் சேர்ந்த கனகரட்ணம் சண்முகநாதன் என்பவரிடம் கட்டுமானப் பணியைக் கொடுத்தேன். அவர் அதனை முழுமைபடுத்தித் தந்து இருக்கிறார்.

THIRU-5.jpg?resize=800%2C534

அங்கு காணப்படுகின்ற கருங்கற்களில் பதித்த திருவாசகம் மிகவும் அருமையாகக் காணப்படுகிறது.எழுத்துக்கள் அச்சிட்டதைப் போலவும், ஒரேமாதிரியானவையாக வும் எப்படி கைகளால் செதுக்க முடிந்தது.அதற்குப் பல சிரமங்களை எதிர் நோக்கியதாகப் பேசிக் கொண்டனர். அதைப் பற்றி உங்கள் அனுபவம்..?

இதற்காகப் பல பேரைச் சென்று சந்திக்க வேண்டி இருந்தது. பலர் மறுத்துவிட்டார்கள். ஒருவர் தான் கணனி மூலம் செய்து தருவதாகச் சொல்லி 3X2 அடிக்கு ரூபா.50 ஆயிரம் செலவாகுமென்று ஒரு கல்லைப் பதித்துத் தந்தார். அது எனக்குத் திருப்தியாக இல்லை.இன்னொருவர் ஒரு கல்லைப் பதித்துத் தருவதாகச் சொல்லிச் செய்த கல்லில் முதல் நாலு அடிகளில் மூன்று பிழைகள் காணப்பட்டன.ஆனால் நான் முயற்சியை விடவில்லை. ஒரு நாள் மட்டக்களப்பு மயிலம்பாவையிலுள்ள காமாட்சி கோயிலுக்குத் தரிசனத்திற்காகச் சென்றபோது அங்குள்ளவர்களிடம் இது பற்றி விசாரித்தேன். அங்கு நின்ற அன்பர் முகுந்தன் என்னிடம் ஒரு தொலைபேசி இலக்கத்தைத் தந்து ஆனந்தன் வினோத் என்ற இளைஞன் கிளிநொச்சி விவேகானந்த நகரில் இருப்பதாகச் சொல்லி அவர் தான் மாவீரர் மயானத்திலிருந்த கற்கள் அத்தனைக்கும் பெயர்களையும்வெட்டிக் கொடுத்தவர் , அவரைச் சென்று பாக்குமாறு சொன்னார். அவரை அழைத்தேன்.மாதிரிக்கு ஒன்றை வெட்டிக் கொடுத்தார். ககைவிரல்களினால் உளி கொண்டு எந்த வித அச்சுப் பிழைகளின்றிச் செதுக்கியவை. மிகவும் அச்சிட்டதைப்போன்றிருந்தது.அவரை ஒப்பம் செய்தேன்.கொழும்பிலும் நாவலப்பிட்டியிலும் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு அங்குலத் தடிப்பான கருங்கற்களில் பாடல்கள் பதிவு பெற்றிருக்கிறது.மொத்தம் 22 இளைஞர்கள் பல மாதம் தங்கியிருந்து திருவாசகத்திலுள்ள மொத்தம் 658 பாடல்களையும் செதுக்கி உதவியிருக்கிறார்கள். இதைவிட திருவாசகத்தின் பதினொரு மொழிபெயர்ப்புக்கள் டிஜிரல் மூலம் அச்சிட்டு அங்கே தொங்கவிடப் பட்டிருக்கின்றன.ஆனால் இதுவரை மொத்தம் இருபத்தியொரு மொழிகளிலே திருவாசகம் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதாம். அதுவும் சீன மொழியில் இற்றைக்கு 85 ஆண்டுகளுக்கு முன்னர் மொழி பெயர்க்கப்பட்டு விட்டது.அதற்கு முன்னர் தங்கோல் என்ற தாய்லாந்து மொழியில் மொழிபெயர்ப்பாகிவிட்டதாம்.இதைவிட இறைவன் குருவடிவிலே மாணிக்க வாசகரை ஆட்கொண்டதனால் குருவுக்கு அங்கே கோயில் அமைத்திருக்கின்நோம். இதைவிட இருபத்தியொரு அடியிலான கருங்கல்லாலான ரதம் ஒன்றையும் அமைத்து அதில் பஞ்சலோகத்திலான சிவலிங்கம் ஒன்றையும், மணிவாசகரையும் பிரதிஷ்டை செய்திருக்கின்நோம்.இதை திருமதி. அபிராமி கைலாசபிள்ளை அவர்கள் அமைத்துக் தந்திருக்கிறார். அரண்மனை வளாகத்தில் 108 சிவலிங்கங்களும் அவை ஒவ்வொன்றிற்கு மேலாக ஒவ்வொரு மணி என்று 108 மணிகளையும் அமைத்திருக்கிறோம்.இதைவிட கல்வி சார்ந்த நடவடிக்கையாக திருவாசகம் சார்ந்த அனைத்து விடயங்களும் அடங்கிய ஒரு ஆராய்ச்சி நூல் நிலையத்தை அமைத்திருக்கிறோம். திருவாசகத்தை, திருமுறைகளை மற்றும் சைவ சித்தாந்த நடவடிக்கைகளை ஆய்வுக்குட்படுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக இருக்கும் என்றது எனது கருத்து. அத்துடன் கருங்கல் எழுத்து வடிவங்கள், சிற்பங்கள், இரதம் என்பன பற்றிய ஆய்வாளர்களுக்கும் இது ஒரு பொருத்தமான களமாகலாம் – என்கிறார் ஆறு திருமுருகன்.சைவ அடையாளங்கள் மறைக்கப்படுகின்ற காலகட்டத்தில் காலத்தின் தேவை கருதி கடவுளால் அமைக்கபட்ட அரண்மனை இது என்றும் கருதலாமோ?

THIRU-6.jpg?resize=800%2C534

http://globaltamilnews.net/2018/88340/

Link to comment
Share on other sites

எல்லாவற்றிற்கும் ஒரு அளவு உள்ளது. அளவுக்கு அதிகமாக மதங்களுடன் அதிக நேரத்தை செலவிடுவது மனிதர்களின் முன்னேற்றத்திற்கு தடை.  தமிழர்களின் முன்னேற்றத்துற்கு தடையாக இருப்பது இந்த அளவுக்கு அதிகமாக கோவில்களுடன் பொன்னான நேரத்தை விரயம் செய்யும் மனப்பாங்கு தான்.

பொதுவாக உலக வரலாற்றில் யுத்தங்களின் பின்னரான காலம் மக்கள் சிந்தனைகளை நவீனமயப்படுத்தி பதிய பாய்ச்சலுக்கும்  முன்னேற்றத்திற்கும் ஏற்றவாறு மாறுவது வழக்கம். முதலாம், இரண்டாம் உலக போர் களின் பின்னர்  இது ஐரோப்பாவில் நடந்தது. ஆனால் தமிழர்களை பொறுத்தளவில் எல்லாம் தலைகீழாக நடக்கிறது. யுத்தமுடிவில் மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தும் சமூக பொருளாதார விடயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து  கோவில்களை புனரமைத்து போன நூற்றாண்டுலேயே தூக்கி எறிந்திருக்க வேண்டிய மூடப்பழக்கங்களை கலாச்சாரம் என்ற போர்வையில் ஊக்குவிக்குகும் முட்டாள்தனமாக எமது படித்தவர்கள் கூட ஈடுபடுகிறார்கள். 

சமீபத்தில் ஒரு  தமிழ்த்தொலைக்காட்சிக் காணொளி பார்ததேன். வன்னி மன்னர்களும் தமிழ் பக்த கோடிகளும் போற்றி பாதுகாத்த வற்றாப்பளை அம்மன் கோவிலை போத்துக்க்கேயர்கள்  இடிக்க வந்த போது ஆலய முன்றலில் நின்ற பன்னிச்சை மரம் அம்மன் அருளால் தனது  காய்களை போத்துககேயர்களை நோக்கி வீசி எறிந்து கோவிலை இடிக்க விடாமல் தடுத்த வற்றாப்பளை அம்மன் என்று அம்பாள் புகழ்  பாடியிருந்தார்கள்.தன் கோவிலை ஆக்கிரமிக்க விடாமல் காப்பாற்றிய அம்பாளால் கோவிலை பராமரித்த வன்னி மன்னர்களையும் பக்தர்களையும் போத்துக்கேய ஆக்கிரமிப்பில் இருந்து ஏன் காப்பாற்ற முயலவில்லை எற்று கல்விச்சமூகம் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் எந்த தமிழ் கல்வியாளரும் இதுவரை கேள்வி எழுப்பவில்லை.  இப்படிப்பட்ட அடி முட்டாள்த் தனமான கதைகளை தமிழ்ப்படித்த ஆசிரியர் சமுதாயம் கூட  இந்த 21 ம் நூற்றாண்டிலும் பரப்பிவருவது  கவலைக்குரியது. 

எம்முன்னோர்களின் பெருமைகளை போற்றி பாதுகாப்பது நல்லதுதான் அதற்காக எம்முன்னோர்கள் எனபதற்காக அவர்களின் முட்டாள்த்தனங்களையும்  முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த தமிழ படித்த அதிமேதாவிகளின் பொருள் நேரவிரயம் எமது மக்களின் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளை தீர்ககப் போவதில்லை. 

இதற்கு செலவிட்ட பணத்தைக் கொண்டு மக்கள் ரிலாக்கசாக தமது நேரத்தை செலவிட தமக்கு பிடித்த உடற்பயிற்சி மற்றும் இளைய தலைமுறையின் விளையாட்டை திறனை ஊக்குவிக்க அதற்கேற்ற வசதிகளுடன்  ஒரு அழகான கடற்கரை ஓரத்தை அமைத்திருந்தாலும் மக்களின் மன உள வள வளரச்சிக்கு உதவி இருக்கும்.  தாம் வசிக்கும் முன்னேற்றமான நாடுகளில் இவற்றைப் பார்ததும் அதைப்பற்றி  சிந்திக்காது கோவில்களுக்கு வாரி இறைத்து பணத்தை விரயமாக்கும் தமிழப்படித்தவர்களுக்கு நிகர் இந்த பரந்த உலகில அவர்களே தான். 

Link to comment
Share on other sites

1 hour ago, tulpen said:

எம்முன்னோர்களின் பெருமைகளை போற்றி பாதுகாப்பது நல்லதுதான் அதற்காக எம்முன்னோர்கள் எனபதற்காக அவர்களின் முட்டாள்த்தனங்களையும்  முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த தமிழ படித்த அதிமேதாவிகளின் பொருள் நேரவிரயம் எமது மக்களின் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளை தீர்ககப் போவதில்லை. 

 மக்கள் தமக்கு ஆர்வமுள்ள விடயங்களுக்கே பொருளுதவி செய்வதும் அந்த விடயங்களை முன்னெடுக்க கடின முயற்சி செய்வதும் மனித இயற்கை. திருவாசகங்கள் சைவ தமிழ் மக்களுக்கு முக்கியமானவை.  அவற்றிற்கு வரலாற்றில் நிலைத்து நிற்கத்தக்க ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கி யாழ்ப்பாணத்தில் வைத்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி. 

எமது மக்களின் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளை தீர்கக விருப்பமானவர்கள் அதை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் இப்படி செய்திகளில் வருமளவுக்கு இந்த முயற்சிகளில் ஈடுபடுபவர்களின் ஆற்றலோ அன்பளிப்புகளோ இல்லை. அதற்காக திருவாசகத்துக்கு அரண்மனை கட்டியவர்களை குறைசொல்வது நியாயம் இல்லாதது.

Link to comment
Share on other sites

8 hours ago, Jude said:

 மக்கள் தமக்கு ஆர்வமுள்ள விடயங்களுக்கே பொருளுதவி செய்வதும் அந்த விடயங்களை முன்னெடுக்க கடின முயற்சி செய்வதும் மனித இயற்கை. திருவாசகங்கள் சைவ தமிழ் மக்களுக்கு முக்கியமானவை.  அவற்றிற்கு வரலாற்றில் நிலைத்து நிற்கத்தக்க ஒரு நிரந்தர இடத்தை உருவாக்கி யாழ்ப்பாணத்தில் வைத்து இருப்பது மிகவும் வரவேற்கத்தக்க முயற்சி. 

எமது மக்களின் அரசியல் சமூக பொருளாதார பிரச்சனைகளை தீர்கக விருப்பமானவர்கள் அதை செய்ய முயற்சிக்கிறார்கள். ஆனால் இப்படி செய்திகளில் வருமளவுக்கு இந்த முயற்சிகளில் ஈடுபடுபவர்களின் ஆற்றலோ அன்பளிப்புகளோ இல்லை. அதற்காக திருவாசகத்துக்கு அரண்மனை கட்டியவர்களை குறைசொல்வது நியாயம் இல்லாதது.

திருவாசக அரண்மனை என்று குறிப்பாக இதனை  நான் குற்றம் சாட்டவில்லை. எமது மக்களின் பொதுவான மனப்பாங்கையே குறிப்பிட்டேன். தாமே ஒன்றிணைந்து தீர்க்க முடியுமான பல பிரச்சனைகள்  இருக்க தமது நேரத்தையும் பணத்தையும் கோவில்களுக்கு வாரி இறைத்துவிட்டு நாடு சிங்கப்பூர ஆகும் என்று மூடத்தனமாக கனவு காணும் மனப்பாங்கு வரவேற்க்க தக்கதல்ல. கலதோன்றி மண் தோன்றாகாலத்து தமிழர்கள் கற்கால மனிதர்களாகவே வாழ வேண்டியதுதான். மக்களின் மதவிடயங்களிலான அதீத ஆரவமே தவறானது என்பதே எனது வாதம். மேற்கில் மத்திய காலத்தில் கிறிஸ்தவ மத ஆளுமை முழுமையாக இருந்த காலங்களில் மக்கள் மூடபழக்களில மூழகி இருந்ததை வரலறு கூறுகிறது. பின்னர  15 ம் நூற்றாண்டின் பின்னர் அமிலிருந்து விடுபட்டு  ஏற்பட்ட அறிவியல் கண்டு பிடிப்புக்களினூடான வளரச்சியே இன்றைய உலக முன்னேற்றத்திற்கான அடிப்படையாக அமைந்தது. 

தங்களையும்  தமது தலைமுறையையும் அடிமைகளாக நடத்தும் எந்த  அந்நிய அரசாயினும்  அல்லது சொந்த அரசாயினும் தமது ஊர் கோவில் மணிமண்டபம் கட்ட உதவி செய்து விட்டால் அதைக் கண்டு புள காங்கிதம் அடைந்து அந்த அடிமைத்தனத்து ஏற்றுகொள்ளும் மன நிலையிலேயே தமிழர்கள் வாழ்கிறார்கள்.  

வரலாற்று கலத்தில் இருந்து  இதை தான் நடக்கிறது. அக்கால சோழ மன்னரகள் கூட  உழைக்கும்ம மக்களின் பணத்தை எடுத்து கோவில் கட்டவே பணத்தை நாசமாக்கினார்கள்.இலங்கை அரசு கூட இந்து கலாச்சார அமைச்சு ஒன்றை உருவாக்கி தோழர் டக்லஸ் மூலம் அதைத்தான் செய்தார்கள். 

கல்வி அறிவு என்பது மக்களின்நவீன சிந்தனைகளை ஊக்குவிக்க வேண்டும். மூடத்தனத்தை வளர்கக உதவக்கூடது.

Link to comment
Share on other sites

  • 8 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.