Jump to content

புதிய வரலாறு: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன்


Recommended Posts

புதிய வரலாறு: செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற சென்னை சிறுவன்

 

 

 
prag

சென்னை சிறுவன் ஆர். பிரக்னாநந்தா   -  படம்உதவி: பேஸ்புக்

செஸ் போட்டியில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற முதல் இந்தியச் சிறுவன் என்ற பெருமையை சென்னையைச் சேர்ந்த ஆர்.பிரக்னாநந்தா பெற்றுள்ளார்.

ஒட்டுமொத்தமாக உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற 2-வது சிறுவன் எனும் பெருமையையும் ஆர் பிரக்னாநந்தா பெற்றார். பிரக்னாநந்தா தனது 12வயது 10 மாதங்கள், 13 நாட்களில் இந்த பட்டத்தைப் பெற்றுள்ளார்.

 

இத்தாலியில் ஓர்டிசி நகரில் நடந்த கிரிடைன் ஓபன் செஸ் போட்டியில் இறுதிச்சுற்றில் இத்தாலி வீரர் லூக்கா முரானியை வீழ்த்தி இந்தப் பெருமையை பிரக்னாநந்தா பெற்றார். 8 சுற்றுகள் முடிந்த நிலையில் இந்தப் போட்டியில் 6.5 புள்ளிகளை பிரக்னாநந்தா பெற்றுள்ளார்.

கிராண்ட் மாஸ்டர் பட்டம்பெற 2500 புள்ளிகள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் டிராவிசியோ நகரில் நடந்த உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்துக்காக பிரக்னாநந்தா பரிந்துரைக்கப்பட்டார். இரண்டாவது முறையாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிரீஸ் நாட்டில் நடந்த ஹெர்காலியன் பிஸர் நினைவு செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டருக்காக பரிந்துரைப்பட்டு அதில் பிரக்னாநந்தா வெற்றி பெற்றார்.

உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பிரக்னாநந்தா தவறவிட்டார். உக்ரைன் நாட்டைச் சேர்ந்த செர்ஜி கர்ஜாக்கின் தனது 12வயது,7 மாதங்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை 2002-ம் ஆண்டு பெற்றார்.

தற்போது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த சிறுவன் பிரக்னாநந்தா 12 மாதங்கள், 10 மாதங்களில் பெற்றதால், இந்தப் பெருமையைத் தவறவிட்டார்.

இதற்கு முன் இந்தியாவைச் சேர்ந்த பிரம்மராஜன் நெகி தனது 13 வயது 4 மாதங்கள் 22 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரக்னாநந்தா கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதற்கு செஸ் சாம்பியன் விஸ்வநான் ஆனந்த் பாராட்டுத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், பிரக்னாநந்தா என்னை அவரின் விளையாட்டுத் திறமையைல் ஈர்த்துவிட்டார். அவரின் வலிமையான விளையாட்டும், பொறுமையும் திறமையும், எதிர் வீரரை எளிதாக வீழ்த்தும் எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் பிரக்னாநந்தா 10 வயது, 9 மாதங்கள் இருக்கும்போது, சர்வதேச அளவில் இளம் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினார்.

9-ம் வகுப்பு படிக்கும் பிரக்னாநந்தா சென்னையில் பாடியில் வசித்து வருகிறார்.இவரின் தந்தை ரமேஷ், தாயார் நாகலட்சுமி, சகோதரி, ஆர்.வைஷாலி ஆவார்.

pragjpg
 

உலக அளவில் மிகக் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றவர்கள்.

1. செர்ஜி கர்ஜாக்கின்(உக்ரைன்) 12 வயது, 7 மாதங்கள்

2. ஆர். பிரக்னாநந்தா(இந்தியா) 12 வயது, 10 மாதங்கள்

3. நோடிர்பெக் அபுதஸ்த்ரோவ் (உஸ்பெகிஸ்தான்) 13 வயது, ஒரு மாதம்

4. பரிமராஜன் நெகி (இந்தியா) 13 வயது, 4 மாதங்கள்

5. மாக்னஸ் கார்ல்ஸன்(நார்வே) 13 வயது, 4 மாதங்கள்

http://tamil.thehindu.com/tamilnadu/article24245342.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள். இன்னும் பல சாதனைகள் புரிந்து வாழ்க்கையில் உயர்ந்து செல்ல வேண்டும்

Link to comment
Share on other sites

12 வயதில் கிராண்ட்மாஸ்டரான சென்னை சிறுவன் : யார் இந்த பிரக்ஞானந்தா?

 

உலகில் மிக இளம் வயதில் செஸ் விளையாட்டில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்ற இரண்டாவது நபராகியுள்ளார் சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. 12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்றதன் மூலம் இந்தியாவின் மிக இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் சாதனையையும் படைத்துள்ளார்.

பிரக்ஞானந்தாபடத்தின் காப்புரிமைRAMESHBABU/BBC Image captionபிரக்ஞானந்தா

கோடி பேர் புழங்கும் சென்னையில் இருந்து சென்று, இத்தாலி நாட்டில் சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாயகமாக இருக்கும் ஊர்டிஜெய் எனும் சிறு ஊரில் நடந்த நான்காவது க்ரெடின் ஓபன் 2018 தொடரில், இறுதிச் சுற்றில் விளையாடுவதற்கு முன்னரே கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று அசத்தியிருக்கிறார் பிரக்ஞானந்தா.

க்ரெடின் ஓப்பனில் 16 வயது இரான் வீரர் கொலாமி ஆர்யனை அபாரமாக வென்ற பின்னர் எட்டாவது சுற்றில் இத்தாலியைச் சேர்ந்த 17 வயது கிராண்ட் மாஸ்டர் மோரொனி லூகாவை வென்றார். இதன் மூலம் ஒன்பதாவது சுற்றில் 2482 ரேட்டிங் மேல் வைத்துள்ள வீரரை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் மூன்றாவது முறையாக கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான அனைத்து விதிகளையும் பூர்த்தி செய்து தகுதி பெற்றார்.

நெற்றியில் பட்டை, எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான முகம் - எளிமையான முகத்தோற்றமும் பெருஞ்சாதனைகளுக்கும் மிகச்சிறிய புன்னகையை வெளிப்படுத்தும் சிறுவன் பிரக்ஞானந்தா.

கடந்த சனிக்கிழமை உலகிலேயே இரண்டாவது இளவயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றார். பதின் பருவத்தை எட்டுவதற்கு முன்னதாக கிராண்ட் மாஸ்டர் ஆனது உலகிலேயே இருவர்தான். ஒருவர் பிரக்ஞானந்தா, மற்றொருவர் உக்ரைனைச் சேர்ந்த செர்கே கர்ஜாகின்.

கடந்த 2002-ம் ஆண்டு தனது 12 வருடம் ஏழு மாதத்தில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்று உலகின் மிகக் குறைந்த வயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றார் செர்கே கர்ஜாகின். அவரது சாதனையை உடைக்க பிரக்ஞானந்தாவுக்கு நல்ல வாய்ப்பு கிடைத்தது. எனினும் முந்தைய தொடரில் கிடைத்த தோல்வியை பொருட்படுத்தாமல் நம்பிக்கையுடன் இத்தாலி க்ரெடின் ஓபன் 2018 தொடரை எதிர்கொண்டதன் மூலம் இரண்டாவது இளைய கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தையும் இந்தியாவின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தை வைத்திருந்த பரிமார்ஜன் நெகியின் சாதனையையையும் தகர்த்துள்ளார்.

சென்னை சிறுவனின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர்களில் மிகவும் முக்கியமானவர் போலியோவால் பாதிக்கப்பட்ட அவரது தந்தை ரமேஷ்பாபு.

நடுத்தர குடும்பத்தில் பிறந்த ரமேஷ்பாபு தமிழக அரசின் கூட்டுறவு வங்கியில் 23 வயதில் பணிக்குச் சேர்ந்தார். தற்போது சென்னையிலுள்ள கொரட்டூரில் கூட்டுறவு வங்கி கிளையொன்றின் மேலாளராக பணிபுரிகிறார்.

ரமேஷ்பாபு - நாகலட்சுமி தம்பதிக்கு இரு குழந்தைகள். இவர்களது பெண் வைஷாலியும் செஸ் போட்டியில் அசத்திக்கொண்டிருக்கிறார்.

பிரக்ஞானந்தாபடத்தின் காப்புரிமைRAMESHBABU/BBC Image captionதற்போதைய நம்பர் 1 வீரர் கார்ல்சன் உடன் பிரக்ஞானந்தா

பிரக்ஞானந்தா செஸ் மேதையானதன் பின்னணி

செஸ் விளையாட்டுக்கும் ரமேஷ்பாபுவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. தனது மகன் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார் எனும் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்தார் பிரக்ஞானந்தாவின் தந்தை ரமேஷ் பாபு.

'' எனது மகள் வைஷாலியை செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன். அவள் நன்றாக விளையாடினாள். ஆனால் செஸ் விளையாட்டு போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். குடும்ப சூழ்நிலை பொருளாதார சூழ்நிலை எல்லாம் கருத்தில் கொண்டு எனது மகனை செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது என்றுதான் திட்டமிட்டேன். ஆனால் நான்கு வயது இருக்கும்போதே அக்காவுடன் செஸ் போர்டில் நிறைய நேரத்தை செலவிட்டார் பிரக்ஞானந்தா.

தன் வயது சிறுவர்களுடன் நேரத்தை செலவிடாமல் 64 கட்டங்களின் மேல் என் மகன் கொண்டிருந்த காதல் எனது எண்ணத்தை மாற்றியது'' என்கிறார் ரமேஷ் பாபு.

வைஷாலிக்கும் பிரக்ஞானந்தாவுக்கும் சுமார் நான்கு வயது வித்தியாசம் இருக்கிறது. பிரக்ஞானந்தா செஸ் விளையாட்டின் அடிப்படையை தனது அக்காவிடம் இருந்து கற்றுக் கொண்டதாகச் சொல்கிறார், சென்னை புறநகரான பாடியில் ஒரு சிறிய வீட்டில் மிடில் கிளாஸ் வாழ்க்கை நடத்தும் ரமேஷ் பாபு.

'' போலியோவால் பாதிக்கப்பட்டதால் என்னால் பெரிய பயணங்கள் செல்ல முடியாது. எனது மனைவி நாகலட்சுமிதான் அயல்நாடுகளுக்கு எனது பிள்ளைகளை அழைத்துச் செல்வார். செஸ் விளையாட்டில் இருவரும் உள்ளூரில் நன்றாக விளையாடியதால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அங்கேயும் வெற்றியை குவித்து இந்திய அரசின் உதவி மற்றும் செஸ் அகாடமியின் ஏற்பாடுகளில் ஆசிய அளவிலான செஸ் டோர்னமெண்ட் விளையாட்டில் பங்கேற்றனர்.

எனது மகன் தனது திறமையிலேயே நிதி உதவியோடு அயல்நாடுகளில் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றாலும் மகனுடன் செல்லும் எனது மனைவியின் பயண செலவுகள் உள்ளிட்டவற்றை நான் பார்த்துக்கொண்டேன். தொடக்க காலகட்டங்களில் பொருளாதார ரீதியாக சிரமமாக இருந்தாலும் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றில் கடன் பெற்று சமாளித்தோம். பிள்ளையின் கனவுகளுக்கு அவை ஓர் தடையாக இருக்கக்கூடாது என எண்ணினேன்'' என விவரிக்கிறார் பிரக்ஞானந்தாவின் தந்தை.

பிரக்ஞானந்தாபடத்தின் காப்புரிமைRAMESHBABU/BBC

சென்னை புறநகரில் நான்கு அறை கொண்ட ரமேஷ் பாபுவின் வீட்டில் அதிகம் இருக்கும் பொருள் கோப்பைகளே. பெரும்பாலானவை சர்வதேச போட்டிகளில் அக்காவும் தம்பியும் வென்ற கோப்பைகள். இதில் 2015 டிசம்பர் சென்னை வெள்ளத்தில் சில கோப்பைகளை பறிகொடுத்துவிட்டதாக ரமேஷ்பாபு தந்தை கூறுகிறார்.

எட்டு வயதுக்குட்பட்டோர் மற்றும் பத்து வயதுக்குட்பட்டோருக்கான ஆண்கள் உலக இளம் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2013 மற்றும் 2015 வருடங்களில் பிரக்ஞானந்தா சாம்பியன் டைட்டில் வென்றிருந்தார்.

இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே பிரக்ஞானந்தா இந்திய நாளிதழ்களில் விளையாட்டுப் பக்கங்களில் பெரிய அளவில் இடம்பிடித்துவிட்டார். ஐந்து வயதில் இருந்தே செஸ் விளையாட்டில் ஆதிக்கம் செலுத்தத் துவங்கியவர் கடந்த 2016-ம் ஆண்டு உலகின் யங் இன்டர்னேஷனல் மாஸ்டர் (ஐ எம்) எனும் சிறப்பைப் பெற்றார்.

ஹங்கேரியைச் சேர்ந்த பிரபல செஸ் வீராங்கனை ஜூடிட் போல்கரின் 27 ஆண்டுகால சாதனையான உலகின் யங் ஐஎம் எனும் சாதனையை உடைத்த பின்னர், தற்போதைய முன்னணி செஸ் வீரர் செர்கே கர்ஜாக்கினின் உலகின் யங் கிராண்ட் மாஸ்டர் சாதனையை நெருங்கி வரலாற்று சாதனை படைக்கத் தவறிவிட்டாலும் தொடர் முயற்சியால் இரண்டாவது இடத்துக்கு வந்திருக்கிறார் இந்தச் சென்னை பையன்.

யங் இன்டர்நெஷனல் மாஸ்டர் எப்படி கிராண்ட் மாஸ்டர் ஆனார்?

பிரக்ஞானந்தாவுக்கு செஸ் போட்டியின் நுணுக்கங்களை கற்றுத்தந்தவர் இந்திய செஸ் அணியின் பயிற்சியாளரும் கிராண்ட்மாஸ்டருமான ஆர்.பி ரமேஷ்.

''யங் இன்டர்நெஷனல் மாஸ்டர் பட்டம் வென்றதற்கு பிறகு மூன்று தொடர்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கான தகுதியை அடைய வேண்டும் என்பது பிரக்ஞானந்தாவின் இலக்காக இருந்தது. கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் எனில் சில விதிமுறைகள் உள்ளன. அதன்படி குறிப்பிட்ட ரேட்டிங் மற்றும் மூன்று வெவ்வேறு தொடர்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான தகுதியை அடைந்து சான்றிதழ் பெற வேண்டும்.''

''கடந்த ஆண்டு நவம்பரில் இத்தாலியில் நடந்த உலக ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் முறையாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான விதிகளை பூர்த்தி செய்து சான்றிதழ் வென்றார். இரண்டாவதாக ஏப்ரல் 2018-ல் ஹெர்க்லியோன் பிஷர் நினைவு கிராண்ட்மாஸ்டர் நார்ம் டோர்னமென்ட்டில் இறுதி ரவுண்ட் ராபின் போட்டியில் வென்றதன் மூலம் இரண்டாவது முறையாக கிராண்ட்மாஸ்டருக்கான தகுதியை பூர்த்தி செய்தார். மூன்றாவது முறையாக கிரெடின் ஓப்பனில் கிராண்ட் மாஸ்டருக்கான விதிகளை பூர்த்தி செய்துள்ளார்.

பிரக்ஞானந்தாபடத்தின் காப்புரிமைRAMESHBABU/BBC Image captionவிஸ்வநாதன் ஆனந்தத்துடன் பிரக்ஞானந்தா

மேலும் FIDE ரேட்டிங்கும் 2500க்கு மேல் வைத்துள்ளார். இதனால் கிராண்ட் மாஸ்டர் பட்டம் சாத்தியமாகியுள்ளது'' என்கிறார் பயிற்சியாளர் ரமேஷ்.

பிரக்ஞானந்தாவின் பிரதான யுக்தி குறித்து கேட்டபோது ''கிரிக்கெட்டை போலவே செஸ் ஆட்டத்தில் ஓபனிங் , மிடில், இறுதிப் பகுதி முக்கியமானவை. பிரக்ஞானந்தாவின் யுத்தியை பொறுத்தவரையில் நடு மற்றும் இறுதிப் பகுதியில் அவர் வலுவானவர். தொடக்கத்தில் சமாளித்துவிட்டால் ஆட்டத்தின் இறுதிப் பகுதியில் அவர் அசத்தலாக விளையாடுவார். அதுதான் இத்தொடர்களில் நடந்துள்ளது'' எனக் கூறுகிறார் ரமேஷ்.

கிராண்ட் மாஸ்டர் பட்டத்தால் என்ன கிடைக்கும்?

'' செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் என்பது முனைவர் பட்டம் பெறுவது போன்றது. மிகவும் இளம் வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்வது எளிதில் சாத்தியமல்ல. கடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் கார்ல்சனுடன் விளையாடிய செர்கே கர்ஜாக்கின் தான் உலகின் யங் கிராண்ட் மாஸ்டர்.

கார்ல்சனும் 13 வருடம் 4 மாதத்தில் கிராண்ட் மாஸ்டர் ஆனவராவர். ஆகவே தொடர்ந்து சிறப்பாக விளையாடினால் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு செஸ் உலக அரங்கில் பெருமை தேடித்தரும் வீரராக உருவாக பிரக்ஞானந்தாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது''.

''செஸ் தொடர்களை பொறுத்தவரையில் திறந்த வகை, மூடிய வகை என இரு பிரிவு டோர்னமெண்ட் உண்டு. ஓபன் செஸ் டோர்னமென்ட்டில் உலக செஸ் கூட்டமைப்பில் இருக்கும் வீரர்களில் யார் வேண்டுமானாலும் பணம் கட்டி விளையாடலாம். ஆனால் குளோஸ்டு டோர்னமென்ட் எனச் சொல்லப்படும் தொடர்களில் குறிப்பிட்ட ரேட்டிங் பெற்ற சில வீரர்களை மட்டுமே அழைத்து போட்டி போடச் செய்வார்கள்.

கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதால் பிரக்ஞானந்தாவுடன் விளையாடுவதற்கு உலகின் பல வீரர்களும் போட்டி போடுவார்கள். இதனால் உலகின் முன்னணி வீரராக உருவாக பிரக்ஞானந்தாவுக்கு சிறப்பான வாய்ப்புகள் அமையக்கூடும்'' என விவரித்தார் ரமேஷ்.

பிரக்ஞானந்தாபடத்தின் காப்புரிமைPRAGGNANANDHAA R./ FACEBOOK Image captionபிரக்ஞானந்தா மற்றும் அவரது தாய்

பிரஞ்ஞானந்தா மற்றும் வைஷாலி இருவரின் வெற்றிக்கு பின்னால் இருப்பது அவர்களது தாய் நாகலட்சுமி. '' உடல் உபாதைகளையும் தாங்கி உணவு, வெப்ப நிலை வேறுபாடுகளை பொறுத்துக் கொண்டு தொடர்ச்சியாக வெவ்வேறு நாடுகளுக்கு செஸ் டோர்னமென்ட்டுக்கு தனது பிள்ளைகளை அழைத்துச் சென்றுவருகிறார்'' எனக் குறிப்பிடுகிறார் பிரஞ்ஞானந்தாவின் தந்தை.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஒன்பதாவது சுற்றில் நெதர்லாந்தைச் சேந்த 28 வயது ப்ருய்ஜர்ஸ் ரொலாண்டையும் வீழ்த்தியுள்ளார் பிரஞ்ஞானந்தா. இத்தாலியில் இதே க்ரெடின் ஓப்பனில் இரண்டாவது முறையாக கிராண்ட்மாஸ்டர் பட்டம் வெல்வதற்கான தகுதிகளை பூர்த்தி செய்துவிட்டார் பிரஞ்ஞானந்தாவின் மூத்த சகோதரி வைஷாலி. மூன்றாவது முறையாக தகுதிகளை பூர்த்தி செய்யும்பட்சத்தில் வைஷாலியும் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவின் இளம் கிராண்ட் மாஸ்டர் ஆகியிருக்கும் பிரக்ஞானந்தா, செஸ் களத்தில் அக்காவை வெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் சிறு வயதில் விளையாடத் துவங்கினார். ''இப்போது அவரது குறிக்கோள் உலகின் செஸ் சாம்பியன்ஷிப். அது மிகப்பெரிய இலக்கு'' என்கிறார் ரமேஷ் பாபு.

https://www.bbc.com/tamil/sport-44596188

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.