Jump to content

புலிக் கொடி விவகாரம்: பிரதான சந்தேகநபர் கைது


Recommended Posts

புலிக் கொடி விவகாரம்: பிரதான சந்தேகநபர் கைது

 

Killi-720x450.png

 

முல்லைத்தீவு, ஒட்டுச்சுட்டான் பகுதியில் 15 கிலோ கிளைமோர் குண்டு மற்றும் புலிக் கொடிகள் என்பவற்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே நால்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பிரதான சந்தேகநபர் தப்பியோடியிருந்தார். இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை) இரவு மாங்குளம்  பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபரிடம் பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான், பேராறு பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோது 15 கிலோ கிளைமோர் குண்டு, 120 ரி-56 ரக தோட்டாக்கள், வெடிபொருட்கள், தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான 2 கைக்குண்டுகள், 6 தொலைவுக் கட்டுப்பாட்டுக் கருவிகள், புலிக்கொடிகள் மற்றும் உடைகள் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/?p=693126/புலிக்-கொடி-விவகாரம்:-பிரதான-சந்தேகநபர்-கைது/

Link to comment
Share on other sites

வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதை அடுத்து 5 பேர் இதுவரை கைது

 

ltte-ammunitions-1-300x200.jpgஒட்டுசுட்டானில் விடுதலைப் புலிகளின் வெடிபொருட்கள், சீருடைகள், கொடி என்பன முச்சக்கர வண்டி ஒன்றில் எடுத்துச் செல்லப்பட்ட போது கைப்பற்றப்பட்ட சம்பவத்தை அடுத்து, இதுவரையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும், பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

முச்சக்கர வண்டியில் இருந்து தப்பியோடிய செல்வலிங்கம் என்ற முன்னாள் போராளி, சிறப்பு அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

இவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படாதவர் என்றும், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் தீவிரமான உறுப்பினராக இருந்தவர் என்றும் காவல்துறை வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலில் கைது செய்யப்பட்ட இருவரும், விடுதலைப் புலிகளின் தங்கம் மறைத்து வைக்கப்பட்டுள்ள இடம் தனக்குத் தெரியும் என்று செல்வலிங்கமே அழைத்துச் சென்றார் என்றும், அந்த  இடத்தை தோண்டிய போதே, வெடிபொருட்கள் கிடைத்தன என்று விசாரணைகளின் போது கூறியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்களின் அந்த வாக்குமூலங்களை தீவிரமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை என்றும் சிறிலங்கா காவல்துறையினர் கூறியுள்ளனர்.

அதேவேளை, கடைசியாக மாங்குளத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி பற்றிய பல்வேறு பெயர்கள் கூறப்படுகின்றன. ஏகாம்பரம், வெள்ளைச்சாமி, செல்வலிங்கம் என்று பல்வேறு பெயர்கள் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே மேற்படி சம்பவத்தை அடுத்து, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் தேடுதல்கள் நடத்தப்பட்டு வருவதுடன், பலர் விசாரணைகளுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

http://www.puthinappalakai.net/2018/06/25/news/31565

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.