Jump to content

இன்­னொரு ஹிட்­லரை அனு­ம­திக்­குமா உலகம்?


Recommended Posts

இன்­னொரு ஹிட்­லரை அனு­ம­திக்­குமா உலகம்?

sama01-b861c9a457879a139f51b4b18734a001a56eeef2.jpg

 

 

கோத்­தா­பய ராஜபக் ஷ இரா­ணுவ ஆட்­சியை – கடும்­போக்கு ஆட்­சியை விரும்­பு­பவர். அத­னையே தனது அடை­யா­ள­மாக நிரூ­பிக்­கவும் எத்­த­னிப்­பவர். இது அவரைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும். 

அதனால் தான், அவ­ரது அந்த அடை­யா­ளத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி, அவரை மேல் மட்­டத்­துக்குக்  கொண்டு வர முனை­கி­றார்கள். 

ஆனால், அர­சியல் என்­பது வேறு. அதற்கும் இரா­ணுவ ஆட்­சிக்கும் ஒரு­போதும் ஒத்­துப்­போ­காது. ஜன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­களை மதிக்­கின்ற வகை­யி­லான, பண்­பு­களைக் கொண்­ட­வர் க­ளுக்குத்தான் அர­சியல்  பொருத்­த­மு­டை­யது 

 

 

ஹிட்­ல­ராக மாறி, இரா­ணுவ ஆட்­சியின் மூலம், நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும் என்று, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு அஸ்­கி­ரிய பீடத்தின் அனு­நா­யக்க தேர­ரான, வண. வெத­ருவே உபாலி தேரர் வழங்­கிய ஆசி, பெரும் பர­ப­ரப்பை தோற்­று­வித்­தி­ருக்­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷவின் 69 ஆவது பிறந்த நாளை முன்­னிட்டு, மிரிஹானயில் உள்ள வீட்டில் நடந்த சமய நிகழ்­வி­லேயே, அனு­நா­யக்க தேரர் இவ்­வாறு ஆசி வழங்­கி­யி­ருக்­கிறார்.

மூன்று பௌத்த பீடங்­க­ளி­னதும் உயர் பிர­தி­நி­தி­களும், மஹிந்த ராஜபக் ஷ, சமல் ராஜபக் ஷ, பசில் ராஜபக் ஷ போன்­ற­வர்­களும் இந்த நிகழ்வில் பங்­கேற்­றி­ருந்­தனர்.

இதன்­போதே, இரா­ணுவ ஆட்சி, ஹிட்லர் போன்ற சொற்­களின் ஊடாக கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு உசார் ஏற்றும் முயற்­சிகள் நடந்­தி­ருக்­கின்­றன. எனினும், ஊட­கங்­களில் வெளி­யா­னவை போன்று, அனு­நா­யக்கர் அவ்­வாறு கூற­வில்லை என்றும், “அவர்கள் உங்­களை ஹிட்லர் என்று அழைத்தால், அப்­போது ஹிட்­ல­ராக மாறி நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­புங்கள்” என்றே அஸ்­கி­ரிய அனு­நா­யக்கர் ஆசி வழங்­கி­ய­தா­கவும் இன்­னொரு தக­வலும் உள்­ளது.

கோத்­தா­பய ராஜபக் ஷ அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வாரா இல்­லையா- அதற்­கான தகு­தி­களை அவர் கொண்­டி­ருக்­கி­றாரா இல்­லையா- என்­பது பற்­றிய வாதங்கள் எல்லாம் ஒரு­புறம் நடந்து கொண்­டி­ருக்கும் நிலையில், அவரை ஒரு கடும்­போக்­கு­வாத ஆட்­சி­யா­ள­ராக உரு­வாக்­கு­வதில் இன்­னொரு தரப்பு ஈடு­பட்­டி­ருக்­கி­றது என்­பது மறுக்க முடி­யாத உண்மை.

முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் கோத்­தா­பய ராஜபக் ஷ அசைக்க முடி­யாத இரும்பு மனி­த­ரா­கவே உலா வந்­தவர். ஜனா­தி­ப­தி­யாக இருந்த மஹிந்த ராஜபக் ஷவே, பல­வே­ளை­களில் கோத்­தா­பய ராஜபக் ஷவின் பேச்­சுக்கு மடங்கிப் போன­தாக கூறப்­ப­டு­வ­துண்டு.

சில சந்­திப்­பு­களின் போது, இயல்­பாக பேசிக்­கொண்­டி­ருக்கும் மஹிந்த ராஜபக் ஷ, கோத்­தா­பய ராஜபக் ஷ வரு­கிறார் என்­றதும் பேச்சை மாற்றிக் கொண்­ட­தா­கவும் கூட பலரும் கூறி­யி­ருக்­கி­றார்கள்.

கோத்­தா­பய ராஜபக் ஷ இரா­ணுவ ஆட்­சியை ஒத்த ஒரு கட்­ட­மைப்பை ஏற்­ப­டுத்தி வைத்­தி­ருந்தார். மஹிந்த ராஜபக் ஷவிடம் இருந்த நிறை­வேற்று அதி­காரம் என்ற கவ­சத்தை, அதற்குச் சாத­க­மாகப் பயன்­ப­டுத்திக் கொண்டார்.

கொழும்பு நகரை அழ­கு­ப­டுத்­தி­யது உள்­ளிட்ட சில விட­யங்­களில் அவ­ரது கடும்­போக்கும், எடுக்கும் முடி­வு­களை பின்­வி­ளை­வு­களைப் பற்றி யோசிக்­காமல் நடை­மு­றைப்­ப­டுத்தும் குணமும், பல­ராலும் ஆத­ரிக்­கப்­ப­டு­கி­றது.

ஆனால், நடை­முறை அர­சி­யலில் அவர் ஒரு ஜன­நா­யக ஆட்­சியை நடத்தக் கூடிய இயல்­பு­டை­யவர் அல்ல என்­பது, அவ­ரது பெரும் பல­வீ­ன­மாகப் பார்க்­கப்­ப­டு­கி­றது.

கோத்­தா­பய ராஜபக் ஷ இரா­ணுவ ஆட்­சியை – கடும்­போக்கு ஆட்­சியை விரும்­பு­பவர். அத­னையே தனது அடை­யா­ள­மாக நிரூ­பிக்­கவும் எத்­த­னிப்­பவர். இது அவரைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.

அதனால் தான், அவ­ரது அந்த அடை­யா­ளத்தை முன்­னி­லைப்­ப­டுத்தி, அவரை மேல் மட்­டத்­துக்குக் கொண்டு வர முனை­கி­றார்கள்.

ஆனால், அர­சியல் என்­பது வேறு. அதற்கும் இரா­ணுவ ஆட்­சிக்கும் ஒரு­போதும் ஒத்­துப்­போ­காது. ஜன­நா­யகப் பாரம்­ப­ரி­யங்­களை மதிக்­கின்ற வகை­யி­லான, பண்­பு­களைக் கொண்­ட­வர்­க­ளுக்குத் தான் அர­சியல் பொருத்­த­மு­டை­யது.

மஹிந்த ராஜபக் ஷவை அமெ­ரிக்கா எதேச்­சா­தி­காரி என்று குறிப்­பிட்­டி­ருந்­தாலும், அவர் தேர்­தல்­களை ஒழுங்­காக நடத்தி, தான் ஜன­நா­யக ஆட்­சியை நடத்­து­வ­தாக காட்டிக் கொண்­டவர்.

ஆனாலும், அவ­ரது ஆட்­சியை, தனது முரட்­டுத்­த­ன­மான இரா­ணுவ போக்கில் நாட்டை வழி­ந­டத்திச் சென்று, மேற்­கு­ல­கினால் எதேச்­சா­தி­கார ஆட்சி என்ற விமர்­ச­னங்­களை தோற்­று­விக்க கார­ண­மாக இருந்­தவர் கோத்­தா­பய ராஜபக் ஷ.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்­சியின் போது, இவர் எடுக்கும் முடி­வு­களே பெரும்­பாலும் இறு­தி­யா­ன­தாக இருந்து வந்­தது. கடும்­போக்கு வாதமும், இறுக்­க­மான இரா­ணுவ நிர்­வாகம் போன்ற கெடு­பி­டி­களும், இரா­ணுவ ஆட்சி நடக்கும் நாடு போன்ற தோற்­றப்­பாட்டை உரு­வாக்­கி­யது. அதனைத் தான் மீண்டும் அஸ்­கி­ரிய அனு­நா­யக்கர் போன்­ற­வர்கள் எதிர்­பார்க்­கி­றார்கள். அனு­நா­யக்கர் மாத்­தி­ர­மன்றி, கோத்­தா­பய ராஜபக் ஷவைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்­களும் அதனைத் தான் விரும்­பு­கி­றார்கள். 

ஆட்சி மாற்­றத்­துக்குப் பின்னர் ராஜபக் ஷவி­ன­ருடன் அதிகம் ஒட்டிக் கொண்டு செயற்­படும்- கோத்­தா­பய ராஜபக் ஷவுடன் இணைந்து எலிய அமைப்பை உரு­வாக்­கி­யதில் முன்­னின்று செயற்­பட்ட கலா­நிதி தயான் ஜய­தி­லக அண்­மையில் விடுத்த எச்­ச­ரிக்கை இதனைச் சார்ந்­த­தா­கவே இருந்­தது.

கோத்­தா­பய ராஜ­பக்ச பய­ணிக்கும் வழி தவ­றா­னது, பண முத­லை­களும், முன்னாள் இரா­ணுவ அதி­கா­ரி­க­ளான கடும்­போக்­கா­ளர்­க­ளுமே அவரைச் சுற்­றி­யி­ருக்­கி­றார்கள் என்ற தொனியில் அவர் கருத்து வெளி­யிட்­டி­ருந்தார்.

கோத்­தா­பய ராஜபக் ஷ இவ்­வா­றான போக்கில் நீடித்தால், சர்­வ­தேச மட்­டத்தில் அவரால் ஆத­ரவைப் பெற முடி­யாமல் போகும் என்ற கருத்தை முன்­வைத்து தான், தயான் ஜய­தி­லக இந்தக் கருத்தை வெளி­யிட்­டி­ருந்தார்.

அதா­வது கோத்­தா­பய ராஜபக் ஷ அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் கள­மி­றங்­கு­வ­தானால், அதற்கு முன்னர் அவர் தன்னை ஒரு ஜன­நா­ய­க­வா­தி­யாக- சிவில் ஆட்­சியை நடத்தக் கூடிய நிர்­வா­கி­யாக இருப்பார் என்­பதை நிரூ­பிக்க வேண்டும் என்று தயான் ஜய­தி­லக போன்­ற­வர்கள் எதிர்­பார்ப்­ப­தாக தெரி­கி­றது.

ஆனால், கோத்­தா­பய ராஜபக் ஷவினால் இது­வ­ரையில் அந்த தகை­மையை நிரூ­பிக்­கவும் முடி­ய­வில்லை. அவரைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்கள் நிரூ­பிக்­கவும் விடப் போவ­தில்லை.

அஸ்­கி­ரிய அனு­நா­யக்கர் போன்­ற­வர்­களும் சரி, றியர் அட்­மிரல் சரத் வீர சேகர போன்­ற­வர்­களும் சரி, கோத்­தா­பய ராஜபக் ஷவை ஒரு ஹிட்­ல­ராக- இரும்பு மனி­த­ராக, இரா­ணுவ ஆட்­சியை ஒத்த ஒரு நிர்­வா­கத்தை ஏற்­ப­டுத்தக் கூடி­ய­வ­ராக உரு­வாக்­கு­வ­தி­லேயே குறி­யாக இருக்­கி­றார்கள்.

அதற்­கான தூண்­டு­தல்­களைக் கொடுத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். இதன் மூலம் தான் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பலாம் என்று அவரை நம்ப வைக்க முனை­கி­றார்கள்.

அவர்கள் அவ்­வாறு நம்­பு­வது ஒற்­றை­யாட்­சியை இரும்­புக்­க­ரங்­களால் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்ற அடிப்­ப­டை­யி­லா­னது.

அதி­காரப் பகிர்வு முயற்­சி­களைத் தோற்­க­டித்து, வடக்­கையும், கிழக்­கையும், இறுக்­க­மான பிடியில் வைத்துக் கொண்டு, தமி­ழர்­களை அடக்­கி­யாள வேண்டும் என்ற பேரி­ன­வாதச் சிந்­த­னையின் அடிப்­ப­டை­யி­ன­லா­னது.

கோத்­தா­பய ராஜபக் ஷவை வைத்தே அதனைச் செய்­யலாம் என்று அவர்கள் நினைக்­கி­றார்கள். ஆனால், அவர்­க­ளுக்கு ஒன்று மட்டும் புரி­யாமல். இருக்­கி­றது.

நவீன உலகம், சர்­வா­தி­கா­ரி­க­ளையோ, இரா­ணுவப் பாணி ஆட்­சி­யா­ளர்­க­ளையோ விரும்­பு­வதும் இல்லை, விட்டு வைப்­பதும் இல்லை.

ஜன­நா­யக அர­சி­ய­லுக்கு ஒத்­து­வ­ரா­த­வர்­களை, அதி­கா­ரத்­துக்கு வர­வி­டாமல் தடுப்­ப­தையும், அவ்­வாறு வந்­த­வர்­களை விரட்­டு­வ­தையும் சர்­வ­தேச அர­சியல் ஒரு ஒழுக்­க­மா­கவே பின்­பற்றி வரு­கி­றது.

அண்­மையில், மஹிந்த ராஜபக் ஷவு­ட­னான சந்­திப்பின் போது, அமெ­ரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கூறி­ய­தாக சொல்­லப்­ப­டு­கின்ற விட­யங்­களில் இதுவும் ஒன்று.

பயங்­க­ர­வா­தத்தை இரும்­புக்­கரம் கொண்டு நசுக்­கு­வது வேறு, ஜன­நா­யக அர­சி­யலை அதற்­கு­ரிய மாண்­புகள், பண்­பு­க­ளுடன் கொண்டு நடத்­து­வது வேறு என்று, குறிப்­பிட்டே, கோத்­தா­பய ராஜபக் ஷ பொருத்­த­மற்ற வேட்­பாளர் என்­பதை மஹிந்­த­விடம் அமெ­ரிக்கத் தூதுவர் விளக்­கி­ய­தாக சொல்­லப்­ப­டு­கி­றது.

ஆனாலும், கோத்­தா­பய ராஜபக் ஷவை ஒரு இரா­ணுவ ஆட்­சி­யா­ள­ராக- ஹிட்­ல­ராக, உரு­வாக்கி விடும் முனைப்­புகள் தான் தெற்கில் தீவி­ர­ம­டைந்­தி­ருக்­கின்­றன.

இத்­த­கைய உசுப்­பேற்­றல்­க­ளுக்கு கோத்­தா­பய ராஜபக் ஷவும், அடி­மைப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறார் போலவே தோன்­று­கி­றது.

ராஜபக் ஷவி­னரின் தரப்­பினால், ஜனா­தி­பதி வேட்­பாளர் இவர் தான் என்று, அவர் இன்­னமும், உறு­தி­யா­கவும் அதி­கா­ர­பூர்­வ­மா­கவும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.

ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வ­தற்கு அடிப்­படைத் தேவை­யான- அமெ­ரிக்­காவின் இரட்டைக் குடி­யு­ரி­மை­யையும் அவர் துறக்­க­வில்லை.

அதற்­குள்­ளா­கவே, அவரை முன்­னி­றுத்தி ஒரு இரா­ணுவ ஆட்­சிப்­பா­ணி­யி­லான, ஹிட்­ல­ராட்­சியை ஏற்­ப­டுத்த வேண்டும் என்று ஒரு குறு­கிய சிந்­தனை கொண்ட கூட்டம் கிளம்­பி­யி­ருக்­கி­றது.

கடந்த ஆட்­சிக்­கா­லத்தில், மஹிந்த ராஜபக் ஷவை தோற்­க­டிப்­பதில் ஞான­சார தேரரின் பொது பல­சேனா முக்­கிய பங்­காற்­றி­யது. கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு நெருக்­க­மாக இருந்த பொது பல­சே­னாவின் நட­வ­டிக்­கை­களால் அதி­ருப்­தி­ய­டைந்த முஸ்­லிம்கள், மஹிந்த ராஜபக் ஷவிடம் இருந்து வில­கி­னார்கள்.

அதே­போன்­ற­தொரு நிலை இப்­போது உரு­வாகி வரு­வது போலுள்­ளது. கோத்­தா­பய ராஜபக் ஷவைச் சுற்­றி­யி­ருப்­ப­வர்கள், அவரை ஒரு சர்­வா­தி­கா­ரி­யாக உரு­வாக்கப் போவ­தாக கிளப்பி விடும் மாயை, ஜன­நா­யக அர­சியல் சக்­தி­க­ளையம் சாதா­ரண மக்­க­ளையும் அச்­சத்­துக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது.

இது, கோத்­தா­பய ராஜபக் ஷவுக்கு எதி­ரான ஓர் அலையைத் தோற்­று­விக்கும் சூழலை உரு­வாக்­கலாம்.

ஏனென்றால் ஜனா­தி­பதி தேர்தல் என்­பது, தனியே சிங்­கள மக்­களின் வாக்குகளால் தீர்மானிக்கப்படுவதல்ல. தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளும் முக்கியமானவை.

அதனைக் கருத்தில் கொள்ளாமல், கோத்தாபயவைக் கொண்டு ஓர் இராணுவ ஆட்சியை, ஏற்படுத்தி, அவரை ஒரு ஹிட்லராக மாற்றி சிங்களப் பேரினவாத கனவுகளை நனவாக்கலாம் என்று எதிர்பார்த்தால் அது முட்டாள்தனம்.

நாட்டை மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்குள் செல்வதற்கு அனுமதியேன் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதும், இதனை அடிப்படையாக வைத்துத் தான்.

ஆனாலும், கோத்தாபய ராஜபக் ஷவைச் சுற்றி சிங்கள பௌத்த கடும்போக்காளர்கள் கட்டியெழுப்பி வரும் கோட்டை அவர்களுக்கே ஆபத்தானது. இது மஹிந்த ராஜபக் ஷவுக்கு தெரியாத சூத்திரம் அல்ல.

இருந்தாலும் அவர் இதனை விட்டுப் பிடிக்க நினைக்கிறார் போலும், ஏனென்றால், கோத்தாபய ராஜபக் ஷ தன்னை மிஞ்சியவராக வளருவதை அவரும் விரும்பவில்லை.

தனது விருப்பங்களுக்கு அப்பால் கோத்தாபய ராஜபக் ஷவை சுற்றி உருவாக்கப்பட்டு வரும் ஒளிவட்டத்தை மஹிந்த இரசிக்கவில்லை. அதனால் தான் அவர் அமைதியாக இருக்கிறார்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-06-24#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
    • ஆண்ட‌ருக்கு தான் வெளிச்ச‌ம்.............................. யாழை விட்டு பொது யூடுப் த‌ள‌த்தில் காணொளிக்கு கீழ‌ போய் வாசியுங்கோ த‌மிழ் நாட்டு ம‌க்க‌ளின் ம‌ன‌ங்க‌ளில் தேர்த‌ல் ஆணைய‌ம் எப்ப‌டி இருக்கின‌ம் என்று.....................நீங்க‌ள் யாழில் சீமானை ப‌ற்றி தேவை இல்லா அவ‌தூற‌ ப‌ர‌ப்புவ‌தை நிறுத்தினால் ந‌ல்ல‌ம்   உத‌ய‌நிதிக்கு தூச‌ன‌ம் கெட்ட‌ சொல்ட்க‌ள் தெரியாது தானே ந‌ல்ல‌ வ‌ளப்பு......................................................    
    • இப்படி எல்லாம் செய்து 39 தொகுதியில் எத்தனையில் பிஜேபி வெல்வதாக அறிவிப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ——————————————————— வாக்கு பதிவு சதவீதம் பற்றிய இரு வேறுபட்ட தலவல்கள் வந்ததன் பிண்ணனி. 👇 ———————————— 24 மணி நேரம் கழித்து.. வெளியான தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம்.. இந்தளவுக்கு தாமதம் ஆக என்ன காரணம் VigneshkumarPublished: Saturday, April 20, 2024, 20:16 [IST]   சென்னை: தமிழ்நாட்டில் நேற்று லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், சுமார் 24 மணி நேரத் தாமதத்திற்குப் பிறகு இன்று மாலை தான் இறுதி வாக்கு சதவிகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏற்பட என்ன காரணம் என்பதைப் பார்க்கலாம். வாக்குப்பதிவு: அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நேற்று தமிழகத்தில் பதிவான வாக்குகள் எத்தனை என்பதில் குழப்பமே நிலவி வந்தது. நேற்று மாலை முதலில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு மாநிலத்தில் 72.09% வாக்குகள் பதிவானதாக அறிவித்தார். ஆனால், நள்ளிரவில் வெளியான மற்றொரு டேட்டாவில் வாக்கு சதவிகிதம் 69.46% என்று கூறப்பட்டு இருந்தது. இதுவே பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், இறுதி வாக்குப்பதிவு சதவிகிதம் இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இருப்பினும், இரண்டு முறை இது குறித்த செய்தியாளர் சந்திப்பு தள்ளிப்போனது. 12, 3 இரண்டு முறை தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தனது செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்தார். இது பல வித கேள்விகளை எழுப்பியது. தாமதம்: எப்போதும் தேர்தல் முடிந்து மறுநாள் காலையே இறுதி நம்பர் வந்துவிடும். ஆனால், இந்த முறை வாக்குப்பதிவு முடிந்து 24 மணி நேரம் கழித்து இன்று மாலை தான் இறுதி டேட்டா வந்தது. அதன்படி தமிழ்நாட்டில் 69.45% வாக்குகள் பதிவாகி இருக்கிறது. அதிகபட்சமாகத் தருமபுரியில்81.48% வாக்குப்பதிவும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91% வாக்குகள் பதிவாகி உள்ளது. இந்தளவுக்குத் தாமதம் ஏன் என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. மாவட்ட ரீதியான தகவல்களைப் பெறுவதில் தாமதம் ஆனதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. கடந்த தேர்தல்களில் நள்ளிரவில் ஒரு டேட்டா வரும். தொடர்ந்து காலை இறுதி நம்பர் வரும். தொலைதூர கிராமங்கள் மற்றும் மலைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் இருந்து இறுதி டேட்டா வர தாமதம் ஆகும். அதுவே இறுதி வாக்கு சதவிகிதம் மறுநாள் வரக் காரணமாக இருக்கும். அதுவும் கூட ஓரிரு சதவிகிதம் மட்டும் மாறுபடும்.. அதுவும் இறுதி நம்பர் அதிகரிக்கவே செய்யும். ஆனால், இந்த முறை குறைந்துள்ளது. என்ன காரணம்: இந்த இறுதி நம்பர் என்பது நள்ளிரவில் வெளியான டேட்டாவுடன் கிட்டதட்ட ஒத்துப் போய் தான் இருந்தது. ஆனால், மாலை வெளியான டேட்டா உடன் ஒப்பிடும் போது தான் பெரியளவில் முரண்பாடு இருந்தது. காரணம் projecton எனப்படும் அனுமானத்தை வைத்து மாலையில் இறுதி நம்பரை கொடுத்ததே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. தாமதம் ஏன்: வாக்குப்பதிவுக்கு புதிய செயலியை அவர்கள் பயன்படுத்திய நிலையில், அதில் இருந்த டேட்டாவை வைத்து புரோஜக்ஷன் அடிப்படையில் வாக்கு சதவிகிதத்தைக் கொடுத்ததே டேட்டா தவறாகக் காரணமாக இருந்துள்ளது. ஏற்கனவே இப்படி ஒரு முறை தவறு நடந்துவிட்டதால்.. மீண்டும் தவறு நடக்கக்கூடாது என்பதற்காகவே மாவட்ட வாரியாக பெற்ற தகவல்களை ஒரு முறைக்கு இரண்டு முறை உறுதி செய்துவிட்டு இறுதி செய்துவிட்டு வாக்குப்பதிவு சதவிகிதத்தை வெளியிட்டுள்ளனர். இதுவே தாமதத்திற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. https://tamil.oneindia.com/news/chennai/what-is-the-reason-behind-delay-in-final-polling-percentage-number-in-tamilnadu-599947.html
    • நேற்று 72 ச‌த‌வீம் என்று சொல்லி விட்டு இன்று 69 ச‌த‌வீத‌மாம் 3ச‌த‌வீத‌ வாக்கு தேர்த‌ல் ஆணைய‌ம் அறிவித்த‌து பிழையா..................ஈவிம் மிசினில் குள‌று ப‌டிக‌ள் செய்ய‌ முடியாது ஆனால் நேற்று ஒரு அறிவிப்பு இன்று ச‌த‌வீத‌ம் குறைஞ்சு போச்சு என்று அறிவிப்பு நாளை என்ன‌ அறிவிப்போ தெரிய‌ல‌ நேற்று அண்ணாம‌லை சொன்னார் ஒருலச்ச‌ம் ஓட்டை காண‌ வில்லை என்று அண்ணாம‌லைக்காண்டி பிஜேப்பிக்கான்டி தேர்த‌ல் ஆணைய‌ம் இப்ப‌வே பொய் சொல்லித் தான் ஆக‌னும் அப்ப‌ 12ல‌ச்ச‌ ஓட்டு குறைந்து இருக்கு  நாமெல்லாம் ந‌ம்பி தான் ஆக‌னும் தேர்த‌ல் ஆணைய‌ம் ச‌ரியாக‌ ந‌டுநிலையா செய‌ல் ப‌டுகின‌ம் என்று😏....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.