Jump to content

சிறுத்தை கொலை : இருவர் கைது


Recommended Posts

சிறுத்தை கொலை : இருவர் கைது

 

 
 

சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி  பொலிஸார் தெரிவித்தனர். 

tiger.jpg

கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பொதுமக்களை தாக்கிய சிறுத்தை ஒன்று அக் கிராமத்தவர்களால் அடித்து கொலைசெய்யப்பட்டது. 

இது தொடபில் சமூக ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்ததையடுத்து குறித்த சிறுத்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த கொலை தொடர்பில் சமூக வளைதலங்களில் வெளியான காணொளிகளை ஆதாரமாகக்கொண்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை தேடும் நடவடிக்கையில் கிளிநொச்சி  பொலிஸார் ஈடுபட்டனர்.

இதனையடுத்து குறித்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கிளிநொச்சி பொலிஸார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/35467

Link to comment
Share on other sites

சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

 

 

சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இருவரையும் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த சந்தேகநபர்களை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது பதில் நீதவான் கிரேஷியன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

மேலும் சிறுத்தை கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் விரைவில் கைது செய்யுமாறு பொலிஸாருக்கும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையை கொலை செய்து துன்புறுத்திய சம்பவம் சமூகவலைத்தளங்களில் காணொளியாக வெளியானதையடுத்து குற்றவாளிகள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிறுத்தையை கொன்ற மற்றுமொருவர் பொலிஸில் சரண் (2ஆம் இணைப்பு)

கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில் இவ்விருவரையும் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சிறுத்தைக் கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சந்தேகநபர்களை தேடும் நடவடிக்கையை பொலிஸார் தீவிரப்படுத்தியுள்ளனர்.

சிறுத்தையை கொன்ற ஒருவர் கைது

கிளிநொச்சி, அம்பாள்புரம் பகுதியில் சிறுத்தையொன்றை துன்புறுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமைக்காரியாலயம் எமது ஆதவன் செய்தி பிரிவுக்கு உறுதிபடுத்தியது.

சந்தேகநபர் நேற்று (சனிக்கிழமை) இரவு மாங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டது.

கிளிநொச்சியில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தையொன்றை அங்குள்ள இளைஞர்கள் அடித்து கொன்றதோடு அதனை துன்புறுத்தி காயப்படுத்தியுள்ளனர்.

இது தொடர்பான ஒளிபடங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் பரவலாக வெளிவந்ததோடு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

மேலும்  சிறுத்தை கொலையுடன் சம்மந்தப்பட்டடவர்களை கைது செய்யுமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் 5 கிராமங்களில் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன. இதனடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

http://athavannews.com/?p=693067/சிறுத்தையை-கொலை-செய்தவர்களுக்கு-விளக்கமறியல்-நீடிப்பு-(3ஆம்-இணைப்பு)/

Link to comment
Share on other sites

சிறுத்தை கொலை; மேலும் நால்வர் கைது

 

கிளிநொச்சி அம்பால்குளம் பகுதியில் சிறுத்தை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 tiger.jpg

அத்துடன் இச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை நேற்றைய தினம் கைதுசெய்த பொலிஸார்,  நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது அவர்களை நீதிவான் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டிருந்தார்.

இந் நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் நான்கு பேரை கைதுசெய்த பொலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.virakesari.lk/article/35493

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.