Jump to content

இயற்கைவழி இயக்கம்


Recommended Posts

இயற்கைவழி இயக்கம்

 
 
 
 
 
 
 
30710445_10156132092339566_3631266847213376729_n.jpg

எமது பாரம்பரிய மரபுசார்ந்த நல்ல விடயங்களை அறிவியல் தளத்துக்கு சமாந்தரமாக எடுத்துச் சென்று எதிர்கால சந்ததியினர் அவற்றை மனித குல மேம்பாட்டுக்கு பயன்படுத்த வேண்டும். அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்புக்களை  வழங்குவதே இயற்கை வழி இயக்கத்தின் நோக்கமாகும். 

எங்களுடைய மரபிலிருந்து கற்றுக்கொண்ட நல்ல விடயங்களை மீண்டும் வாழ்வியல் நடைமுறைக்கு கொண்டுவருவது இதன் பிரதான நோக்கமாகும். இதற்காக பாரியளவிலான செயற்பாட்டுத் தளத்தை நாங்கள் கட்டியெழுப்ப வேண்டியுள்ளது.
 
30697675_10156132092174566_3394210530233843212_n.jpg

மரபுசார்ந்த வாழ்வியலில் அக்கறை கொண்ட நண்பர்கள் குழுவாக இணைந்து கட்டமைத்த இயக்கமே இதுவாகும். இதில் செயற்பாட்டாளர்களே உள்ளனர். ஆரம்பத்தில் வாராவாரம் பண்ணைகளில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன. பின்னர் தொடர்ச்சியாக வாராவாரம் வெள்ளிக்கிழமைகளில் மாலை நேரம் இயற்கை அங்காடி இயங்கி வருகின்றது. அதில் இயற்கையாக விளைந்த மரக்கறிகளை யார் வேண்டுமானாலும் கொண்டு வந்து சந்தைப்படுத்த முடியும். முக்கியமாக இயற்கையாகவே விளைந்த மரக்கறிகள், கீரை, இலை வகைககள், உள்ளூர் உற்பத்தி பொருட்களை  மக்களிடம் கொண்டு சேர்த்து வருகின்றோம். இதன் தொடர்ச்சியாக பல்வேறு வேலைத்திட்டங்களும் இடம்பெற உள்ளன.     அதில் முக்கியமாக இயற்கை வழியில் வீட்டுத் தோட்டம் செய்ய அனைவரையும் ஊக்குவித்து வருகின்றோம்.
 
29541543_10156079005864566_7246992773808427008_n.jpg

எங்களது உணவு, வாழ்வியல் சார்ந்த விடயங்களில் மேலைத்தேயக் கலாச்சாரத்தை பின்பற்றும் போக்கு  அதிகரித்து வருகிறது. அது தான் சரி என்றும்  அது தான் நாகரீகம் என்றும் சொல்கின்ற நிலைமையும் சமீப காலத்தில் வேகமாக  அதிகரித்து இருந்தது. இவ்வாறு இருந்த நிலையில் எங்களது பாரம்பரியங்கள், மரபு சார்ந்த விடயங்கள் அறிவுபூர்வமானவை, முன்னேற்றகரமானவை என்று நம்புகின்ற ஆட்கள் வேகமாக மாறிவரும் இந்த நிலைக்கு எதிராக வேலை செய்ய தொடங்கி விட்டனர்.  அதனால் இப்போது எமது தாயகப் பிரதேசங்களில் கொஞ்சம் கொஞ்சமாக மரபுவழிக்கு திரும்புகின்ற செயற்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

எமது பாரம்பரிய மரபு சார்ந்த விவசாயம், கடற்தொழில், உணவு உற்பத்தி, பண்ணைத்தொழில், உணவு பதப்படுத்தல் எல்லாவற்றிலும் இருந்த திறன்களையும் அது தொடர்பான அறிவு முறைகளையும் நாங்கள் இழந்துவிட்டோம். எங்களின் கூட்டுறவு வாழ்வு சிதைவடைந்து விட்டது. பாரம்பரியமாக எங்களின் துறைசார்ந்த முன்னோர்களிடம் இருந்த தொழிநுட்ப அறிவுகள் அடுத்த சந்ததிக்கு கடத்தப்படவில்லை. ஏற்கனவே துறைசார்ந்த ஒரு தொழிலை செய்து கொண்டிருந்த மக்கள் கூட்டம் பல்வேறு சமூக பொருளாதார காரணிகளால் வேறு தொழிலுக்கு போகும் போது, அந்த ஆற்றல்கள், நிபுணத்துவம் என்பன அடுத்த சந்ததிக்கு கடத்தப்படாமல் போய் விடும் துர்ப்பாக்கிய நிலை இருக்கிறது.  அந்த விற்பன்னங்கள்  ஆவணப்படுத்தப்படவுமில்லை என்பது தான் வேதனையானது. தற்போது அவற்றை எல்லாம் மீளத் தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.

இப்போது தனிப்பட்ட முறையில் இவற்றை புனராக்கம் செய்ய முயற்சிகள் எடுக்கப் படுகின்றன. ஆனால், அதற்குரிய திறன்கள், ஆற்றல்கள் என்பன        இல்லாமல் உள்ளன. அந்தக் குறையை நிவர்த்தி செய்யத்தான் குழுவாக இயங்கவேண்டிய தேவை இருந்தது. இந்நிலையில் சமூக வலைத்தளங்கள், பயிற்சிக் கருத்தரங்குகள் ஊடாக எங்களுடைய மரபுசார்ந்த வாழ்வியலுக்கு திரும்ப வேண்டும் என விரும்பும் தனிநபர்கள் எல்லோரும் ஒரே இடத்தில் இணைந்தனர். அப்பொழுது இயல்பாகச் சேர்ந்த ஒரு குழுவாகத் தான் நாங்கள் இயற்கை வழி இயக்கத்தை பார்க்க வேண்டும்.
 
30740611_1032989436851067_7032504235904117296_n.jpg

இயற்கை வழி இயக்கத்தின் பெரும்பாலான ஆட்கள் இதனை ஒரு வருமானமீட்டும் இடமாக பார்க்கவில்லை. புதிய உலக ஒழுங்கில் வரவேற்பு பெறுகின்ற ஒரு விடயமாகவும் பார்க்கவில்லை. இது ஒரு கடுமையாக கொள்கை சார்ந்து இறுக்கமான நிலைப்பாடு உடைய மரபுசார்ந்த வாழ்வியலாகத் தான் பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் ஏற்பட்ட மரபு சார்ந்த வாழ்வியலில் ஏற்பட்ட  மாற்றங்கள்,   எங்களுடைய மக்களுக்கும் ஒரு உந்துதலாக இருந்தது. வழமையாக எங்கள் பிரதேசங்கள் முற்போக்கான மாற்றங்கள், மேம்பாடுகளில் முன்னிலை வகிக்கின்ற நிலையில், இந்தப் பரப்பை கவனிக்காமல் நாங்கள் பின்னுக்கு நிற்கின்றோமோ என்கிற ஏக்கமும், கேள்வியும் எங்களிடம் இருந்தது. அதன் ஆரம்பமாகவே இயற்கை வழி இயக்கம் ஊடாக தன்னார்வலர்கள் ஒன்று கூடும் நிலை ஏற்பட்டது.

இயற்கை வழி இயக்கத்தில் இணைந்துள்ள தனிநபர்கள், குழுக்கள், ஒழுங்கு செய்யப்பட்ட பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள், தனியார் வியாபாரங்கள் எல்லாமே ஏற்கனவே இயங்கி வந்தவை. அவற்றுக்கிடையில் ஒரு தொடர்பை மேம்படுத்துவது, தோழமை உணர்வைக் கட்டியெழுப்புவது ஊடாக எங்களது செயற்பாடுகளை விரிவுபடுத்துவதே இந்த இயக்கத்தின் நோக்கம்.

அல்லைப்பிட்டியை சேர்ந்த ஒரு இளம் விவசாயி கிரின் மேற்கைத்தேய ஆர்வம் கொள்ளாமல் இயற்கை விவசாய, கால்நடை வளர்ப்பில் தனது முழு நேரத்தையும் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்.  இப்படியான நிலையில் இயற்கை வழி இயக்கத்தின் தேவை எங்கே வருகின்றதென்றால், அவர் இயற்கை விவசாயம் சார்ந்து எதிர்நோக்கும் பிரச்சினைகள், புதிய தொழிநுட்பங்களை பயன்படுத்தல், அதனை ஏனைய மக்கள் மத்தியிலும் பரவலாக கொண்டு செல்லல், அதற்கான விழிப்புணர்வுகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது அது ஒரு வலையமைப்பாக அவரது முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும். தமிழ்நாட்டில் நம்மாழ்வார் போன்ற தனி நபர்கள் விதைத்த விதைகள் தான் இன்று பெரு விருட்சங்களாக மாறியுள்ளன. ஏற்கனவே இயற்கை வழியில் பயணித்துக் கொண்டிருக்கும் பயனாளர்களை வலுவூட்டுவது தான் இயற்கை வழி இயக்கத்தின் பிரதான பணியாகும்.
 
31351424_10156393885477490_3815681969769938944_n.jpg


இயற்கைவழி இயக்கம் என்பது தனியே வேளாண்மைக்கான இயக்கம் அல்ல. இதனை ஒரு முழுமையான மரபுசார்ந்த வாழ்வியலுக்கு திரும்புகின்ற பயணமாகத் தான் பார்க்கின்றோம். மேலைத்தேய பொருளாதாரம் எங்களிடம் அளவுக்கு அதிகமாக நுகரும் கலாச்சாரத்தை கொண்டு வந்துள்ளது. இன்னும் இன்னும் வேண்டும் என்று கேட்கின்ற உச்ச நுகர்வு  கலாச்சாரம் இப்போது வந்துள்ளது. தேவைக்கதிகமாக வாங்கி குவிக்கும் கலாச்சாரம் இப்போது பிரபலமடைந்துள்ளது. நாங்கள் முன்னைய காலங்களில் அப்படி இருக்கவில்லை. எங்கள் தேவைக்கும் குறைவான வளங்களை வைத்துக்கொண்டு நிறைவாக வாழ்ந்த சமூகமாக தான் நாங்கள் இருந்திருக்கிறோம். இப்படி நாம் தற்சார்பு பொருளாதாரத்தை விளங்கி வாழ்ந்து வந்தபடியால் தான் கொடிய போர்க்காலத்திலும் துவண்டு போகாதசமூகமாக நாங்கள் இருந்து வந்திருக்கிறோம்.

இன்றைய இளைய தலைமுறை உச்சபட்ச நுகர்வு கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. உடலுழைப்பின் முக்கியத்துவம் மறக்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. உதாரணமாக உணவு மருத்துவம் தினசரி செயற்பாடுகள் சார்ந்ததாக இருக்கும். நீரழிவு வருவதற்கான பிரதான காரணம் சீனியை அதிகம் பாவிப்பதல்ல, உடலுழைப்பு இல்லாத எங்கள் வாழ்க்கை முறையும் ஆகும்.  நாங்கள் அசையாமல் கணனிக்கு முன்னால் குந்திக் கொண்டிருக்கின்ற நிலை உருவாகி வருகிறது. ஒருவர் என்ன தொழிலில் இருந்தாலும் வீட்டில் சிறிய வீட்டுத்தோட்டம் இருப்பதனை, கால்நடைகள் வளர்ப்பதனை  உறுதிப்படுத்த வேண்டும்.    மூலிகை தாவரங்களை வீட்டில் வளர்ப்பதன் ஊடாக நோய்களை வருமுன் காப்பதோடு மட்டுமல்லாமல் உடலையும் நல்ல ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதற்கான விழிப்புணர்ச்சியையும் இயற்கை வழி இயக்கம் ஏற்படுத்தி வருகிறது. மொத்தத்தில் இயற்கையோடு இணைந்த முறை என்பது எங்கள் வாழ்வு முறையாக மாற்றமடைய வேண்டும்.

வாழ்வியல் என்று பார்க்கும் போது பல விடயங்கள் இருக்கின்றன. அதற்குள் சிறார்களின் கல்வி முக்கியத்துவம் பெறுகிறது. என்னதான் இன்று கல்வியில் தொழிநுட்பங்கள் வளர்ந்தாலும், 3னு இல் மாணவர்களுக்கு கற்பித்தாலும், கடற்கரைக்குக் கொண்டு போய் கடலை காட்டினால் தான் பிள்ளைகள் அதனை உண்மையாக உணர முடியும். இன்றைய தலைமுறையை சேர்ந்த பெரும்பாலான பிள்ளைகளுக்கு கத்தரிச் செடியையும், வெண்டிச் செடியையும் வித்தியாசம் கண்டுபிடிக்கத் தெரியாது. ஏன் பல பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு கூட இது தெரியாமல் உள்ளது. இதனை அறிவின் மேம்பாடு என்று சொல்வதா? அல்லது அறிவின் குறைபாடா என்று எண்ணத் தோன்றுகிறது.
 
31363329_10156164587309566_5968229970001409261_n.jpg

எங்களுடைய படிப்பு, பட்டம் எல்லாம் நாம் சமூகத்தில் வெற்றிகரமாக வாழ்க்கையை நடாத்துவதற்கும், ஒருங்கிணைந்து வாழ்வதற்குமான ஒரு அடிப்படையாகத் தான் நாங்கள் பார்க்கின்றோம்.   சிறு பிள்ளைகள் இயற்கையில் இருந்து பலவற்றை கற்றுக் கொள்ள பாடசாலைகள் அடிப்படியாக அமைய வேண்டும். பாடசாலைகளிலும் சிறிய அளவிலான மரக்கறித்தோட்டம் அமைவதனால் மாணவர்கள் அங்கே தோட்டம் உருவாக்கல் தொடர்பிலான பயிற்சிகளை பெறக் கூடியதாக இருக்கும்.

சிறுவர்களின் கல்வியை மேம்படுத்த வேண்டுமென்றால் முதலில் அவர்களது உடலை நல்ல செயற்திறன் (Active)) மிக்கதாக வைத்துக் கொள்ள வேண்டும்.         உடலை நல்ல செயற்பாட்டு நிலையில் வைத்திருந்தால் மட்டுமே மனமும் புத்துணர்வு மிக்கதாக இருக்கும். இது பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் தினசரி வாழ்க்கையில் உடலுழைப்பு ரீதியாக ஒரு வேலையும் செய்யாமல் இருந்தோம் என்றால் எங்களுடைய சிந்தனைப்பரப்பு, ஞாபக சக்தி எல்லாமே பாதிக்கப்படும் என நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முன்னைய காலங்களில் அதிகாலையில் தோட்டத்துக்கு சென்று பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி விட்டு படிக்கச் சென்ற எங்களுடைய தலைமுறை பல்வேறு சாதனைகளையும் நிலைநாட்டியிருக்கிறது.

இன்று மாணவர்களை கொண்டுபோய் நீ படிப்பதற்குரிய ஆள் படித்தால் மட்டும் போதும் என்று கூறி பாடசாலையில் விட்டு விடுகிறோம். அப்படியான பலர் 9 ஆம் ஆண்டோடு பள்ளிப்படிப்பை விட்டு விலகிச் செல்வதனை நடைமுறையில் காண்கின்றோம். எங்களினுடைய குடும்ப அமைப்புக்களில் சம்பாதிக்கும் பொறுப்பு குடும்பத் தலைவருக்கு மட்டும் என்று இருக்கவில்லை. உதாரணமாக ஒரு வீட்டில் ஆடு வளர்த்தால் அதற்கு இலை, குழை, கஞ்சி வைப்பதென்று குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாடுபடுவார்கள். பொதுவாக இலைகளை போடுவதில் சிறார்களின் பங்கும் அதிகமாக காணப்படும்.   ஆனால், இப்போது அதெல்லாம் சிறுபிள்ளைகளின் வேலை அல்ல என்பதாக பிழையாக அடையாளப்படுத்தப்படுகின்றன.  இப்போது நாங்கள் மேலைத்தேய கலாச்சாரத்தை பின்பற்றி ஒரு வேலையும் செய்யாமல் இருக்க பிள்ளைகளை பழக்குகிறோம்.  எங்களுடைய மரபு சார்ந்த வாழ்வியலை மீட்டெடுப்பது ஒன்று தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு நல்வழியாகும்.
 
31369540_10156164587564566_7665273692465514843_n.jpg

காலையில் எழுந்ததில் இருந்து பார்த்தோமானால், முன்னைய காலங்களில் வேப்பம் குச்சியும், கருவேல பற்பொடியையும் பயன்படுத்தி வந்தோம். ஆனால் இன்று பற்பசைகளில் வேம்பு, கருவேல பவுடர் கலந்துள்ளதாக கூறி பன்னாட்டு நிறுவனங்கள் விற்கிறார்கள். இப்படி ஒவ்வொரு செயலிலும் மரபுசார்ந்த நல்ல விடயங்கள் இருக்கின்றன. அவற்றை நோக்கி நாம் திரும்ப வேண்டும். அப்படி வாழும் போது செலவுகளும் மட்டுப்படுத்தப்படும். குடும்பத்தில் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் எப்போதும் இருக்கும்.

இப்போது கூடுதலாக பலரும் தனித்தனி வாகனங்களையே பயன்படுத்துகிறார்கள். பொதுப்போக்குவரத்தை ஒரு சிலரே பயன்படுத்துகின்றனர். இது எரிபொருள் பாவனையில் எங்களின் தங்கியிருப்பை அதிகரிக்கிறது.  உதாரணமாக நாங்கள் குடிக்கும் தேனீரிலேயே  எரிபொருளின் பங்களிப்பு கலந்துள்ளது. எப்படியென்றால், உதாரணமாக தேயிலையை மதிப்புக்கூட்டும் இயந்திரங்களில் இருந்து அதனை சந்தைக்கு கொண்டு செல்லும் வரை  எத்தனை ஆயிரம் லீட்டர் எரிபொருளை செலவழிக்கிறோம்.  இதற்காக நாம் தேனிர் குடிப்பதை முற்றாக நிறுத்த வேண்டும் என்பதல்ல.  அதன் பாவனையை மட்டுப் படுத்த வேண்டும் என்பதே அர்த்தம்.  நாங்கள் எங்களுடைய பொருளை உற்பத்தி செய்வதற்கு வெளிநாட்டில் இருந்து வரும் எண்ணையை நம்பி இருப்போமாக இருந்தால், அது ஒருகாலத்தில் தடைப்படுமிடத்து எம் உணவு உற்பத்தி சுழற்சி பாதிக்கப்படும்.

உதாரணமாக எங்களுடைய முழு பொருளாதார சுழற்சிக்குள் சுய சார்பு பொருளாதாரம் இருப்பதனை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தினசரி  பாவிக்கின்ற கைப்பையில் இருந்து நடை, உடை, பாவனை, பொழுதுபோக்கு என அனைத்து அம்சங்களிலும் எம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். இன்று பலரும் ஓய்வை விரும்பி பொழுதுபோக்கு பூங்காவுக்கு செல்கிறார்கள். ஏன் வீட்டுத்தோட்டம் கூட ஆரோக்கியமான ஒரு பொழுதுபோக்கு முயற்சி தான். ஓர் பிரதேசத்தில் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்கும் அதேவேளை அதற்குச் சமமாக அங்குள்ள மக்கள் அனைவரும் சேர்ந்து மாதிரிப் பண்ணை (Community Farming) ஒன்றையும் ஆரம்பிக்கலாம்.  அதுவும் மனதுக்கும் உடலுக்கும் ஆறுதல் அளிக்கும் ஒரு செயற்பாடு தான்.  வாழ்வியலின் அடிப்படையே இது தான். இந்தப் பூமி எங்களுக்கானது மட்டும் அல்ல. எங்களுடைய வாழ்க்கைக் காலத்தில் எந்தவிதத்திலாவது பயன்படுத்திப் போட்டு கழிவுகளை அப்படியே விட்டுச் செல்லும் இடமுமல்ல. அப்படி எங்களின் முன்னோர்கள் சிந்தித்து  இருந்தால் இன்று எங்கள் தலைமுறையே இருந்து இருக்காது.

அன்றாட வாழ்வியலில் மேலும் பார்த்தால், பிளாஸ்டிக் இன் பாவனை அதிகரித்து வருகிறது.  இன்றைய உலகில் பிளாஸ்டிக் பாவனை முற்றாகத் தவிர்க்கப் படக்கூடியதல்ல. உதாரணமாக, தொழில்நுட்பச் சாதனங்களுக்கும் மருத்துவத் துறைக்கும் பிளாஸ்டிக் இன்றியமையாத ஒன்றாக மாறி விட்டது.  அதற்காக பிளாஸ்டிக்கை எல்லாத் துறைகளிலும் பாவிப்பதென்பது சூழலை மாசுபடுத்துவதிலேயே கொண்டு சென்று நிறுத்தும். மேலும் பிளாஸ்டிக் பாவனையை இயன்றளவு தவிர்ப்பது பிராந்திய பொருளாதார அபிவிருத்தியை கொண்டு வருவதற்கும் உதவும். உதாரணமாக நாங்கள் ஒவ்வொருவரும் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் மேசை கதிரைகளை கூட பிளாஸ்டிக்கில் வாங்குவதில்லை என்ற முடிவை எடுக்க வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட தளபாடங்களையே வாங்குவேன் என உறுதியெடுத்துக் கொண்டால் நாளை இது ஒவ்வொரு இடமாக பரவி இறுதியில் சமூக மாற்றமாக மலரும். யப்பானுக்கு சென்று அமெரிக்க பொருளொன்றை விற்றால், அது எவ்வளவுதான் விலை குறைவாகவும் சிறந்ததாகவும் இருந்தாலும் அதற்கு மாற்றாக யப்பானிய பொருள் கிடைக்குமாயின் கூடுதலாக அதனையே யப்பானியர்கள் வாங்குவார்கள். ஏனெனில் யப்பானியர்கள் தற்சார்பு பொருளாதாரத்தில் கூடுதல் அக்கறை உள்ளவர்கள்.

எங்களுக்கு பிறகு வரும் சந்ததிகளும் தொடர்ச்சியாகவும் நிறைவாகவும் இந்தப் பூமியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னுமொன்றையும் யோசிக்க வேண்டும். பூமியானது மனிதர்களுக்கு மட்டுமல்ல இங்குள்ள சகல உயிரினங்களுமான பொதுவான வாழ்வியல் சூழல் ஆகும். எமது செயற்பாடுகளால் அவ்வுயிரினங்கள் வாழும் சூழலை மாசு படுத்துவோமாக இருந்தால் அவை அழிவின் விழிம்புக்குத் தள்ளப் படும். இதனால் அவற்றால் எதிர்காலத்தில் எமக்குக் கிடைக்கக்கூடிய நன்மைகளை நாம் இழக்க நேரிடும்.  சூழலை மாசுபடுத்தலைத் தவிர்த்தால் மட்டும் போதாது.  அவ்வுயிரினங்களும் நாமும் வாழ்வதற்கான வாழ்வாதாரங்களையும் நியாயமான முறையில் பங்கிட பழகிக் கொள்ள வேண்டும். உதாரணமாக கிழக்கு மற்றும் வன்னியின் சில பகுதிகளில் யானை புகுந்து மனிதர்களின் வாழ்விடத்தை அழிப்பதாக கேள்விப்படுகிறோம்.   யானைகள் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வந்த தடங்களில் எல்லாம் வீடுகளை கட்டி வைத்து அதன் வாழ்விடங்களை குறுக்கி விட்டு யானை வந்து அடிக்கிறது என்று கவலைப்படுகிறோம். இது யாருடைய தவறு?  அதேவேளை மட்டக்களப்பில் சில கிராமங்களில் பனைவடலிகளை நட்டு இயற்கை வழியில் யானைகளால் ஏற்படும் அழிவைத் தடுக்க முயற்சிகள் எடுக்கப் படுவதை இங்கு குறிப்பிட வேண்டும்.

எங்களுடைய மரபு சார்ந்த விடயங்களில் அறிவியல் சார்ந்த தொடர்புகளை கண்டுபிடித்து அதனை மேம்படுத்தி ஏனைய இனங்களோடும் பகிர்ந்து கொள்ள வேண்டும். எம் சமூகத்தில் ஒரு தேக்கநிலை காணப்படுகிறது. அது என்னவென்றால் இன்றைய இளம் சந்ததியினர் பெரும் பரப்பில் வேலை செய்வதற்கான திறனற்று உள்ளார்கள். அல்லது அக்கறையற்று  இருக்கிறார்கள்.எல்லாவற்றையும் நாங்கள் எங்களுக்குள்ளேயே வைத்திருக்கப் பார்க்கிறோம். ஏனையவர்களோடும் பகிர்ந்து வேலை செய்யும் நிலையிலும் இல்லை. எங்களிடம் இருக்கின்ற தொழிநுட்பங்களை வெளியாட்களுக்கும் சொல்லிக் கொடுக்க வேண்டும். பல்கலைக்கழக ஆய்வுத்துறையை சேர்ந்த மாணவர்கள் தங்கள் படிப்புக்கு ஆய்வு செய்யும் போது கூட இதனால் சமூகத்துக்கு ஏதேனும் உபயோகம் இருக்கா? இது பொருளாதாரத்தை அல்லது அரசியல் ஸ்திரமின்மையை அதிகரிக்குமா என்பது தொடர்பிலும் கூடுதல் கவனமெடுக்க வேண்டும். வருங்காலத்தில் இயற்கை வழி இயக்கம் மரபுசார்ந்த வேளாண்மையில் ஆய்வுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு அது தொடர்பிலான அறிவையும் ஏனையவர்களுடன் பகிர்ந்து கொள்ளவும்  உதவும்.

தமிழ்நாட்டில் செயற்படுத்தப்படும் விடயங்களை இன்னும் ஒரு படி மேலே சென்று அதனை ஆராய்ந்து அதனை ஒழுங்குபடுத்தி இன்னும் பலருக்கும் படிப்பிக்கக் கூடிய மாதிரி செயற்றிட்டங்களை வகுக்க வேண்டும். உதாரணமாக பஞ்சகாவியாவை எப்படி வர்த்தக நோக்கில் பெருவிவசாயத்துக்கு பயன்படுத்தலாம் என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். லீகுவான்யூ 70 களில் சொன்ன விடயத்தையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும். இலங்கை அரசு வடக்கு கிழக்கு தமிழர்களை புறக்கணித்து பொருளாதார ரீதியாக முன்னேற முடியாது. ஏனெனில் தமிழர்கள் கடுமையான உழைப்பாளிகள் மட்டுமல்ல, புத்தாக்க சிந்தனை உள்ளவர்கள், எதையும் ஆய்வு ரீதியான மனப்பாங்கில் பார்க்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். வேலணையில் ஒரு விவசாயி பஞ்சகாவியாவில் 5 விதமான கலவைகளை உருவாக்கி, அதனை தனித்தனியே பயிர்களுக்கு உபயோகித்து அதன் வளர்ச்சி, பூச்சி தாக்கு திறன்களை தனித்தனியே ஆய்வு ரீதியில் தினமும் அவதானித்து பதிவு செய்து பல நல்ல முடிவுகளையும் பெற்றுள்ளார். அரசாங்கமோ, துறைசார்ந்த பல்கலைக்கழகமோ, ஆய்வு நிபுணர்களோ  செய்யவேண்டிய வேலையை அந்த விவசாயி மட்டுமே பார்க்கிறார். இவ்வாறான விவசாயிகளை எதிர்காலத்தில் பல்கலைக்கழகங்கள், துறைசார்ந்த நிபுணர்களுடன் ஒன்றிணைக்கும் ஒரு தளமாக இயற்கை வழி இயக்கம் இயங்கும்.

இன்றைய காலத்தில் இளம் பிள்ளைகளிடம் பிழையான சிந்தனைகள் புகுத்தப்படுகின்றன. ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டும் என்று சொன்னால் அது தகவல் தொழிநுட்பத்தில் வளர்ந்தால் மட்டும் தான் வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது. ஆனால் இன்று அவுஸ்திரேலியாவின் பொருளாதாரம் பால்மாட்டை நம்பி இருக்கிறது. நோர்வேயின் பொருளாதாரம் மீனை நம்பி இருக்கிறது.

 ஜேர்மனியின் பொருளாதாரம் சிறுகைத்தொழில்களிலேயே பெரிதும் தங்கியிருக்கிறது.  சீனா ஜப்பான் கூட அடிப்படைக் கைத்தொழில்களை நம்பியே உள்ளன. அமெரிக்கா கூட தகவல் தொழிநுட்பம் சார்ந்த வேலைகளை புறநிறைவேற்று (outsourcing) அடிப்படையில் இந்தியாவிடம் கொடுக்கிறது. ஆனால் விவசாயத்தையும், இதர அடிப்படை தேவைகளையும் தானே நிறைவேற்றிக் கொள்கிறது. பெருமளவு உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்கிறது. எங்களின் உணவை எம்மால் உற்பத்தி செய்ய முடியாமல், எல்லோரும் கணனிக்கு முன் அமர்ந்து வேலை செய்தால் ஒரு காலத்தில் தகவல் தொழிநுட்ப வேலை வாய்ப்புக்கள் இல்லாமல் போகும் சந்தர்ப்பங்களில் உணவு இறக்குமதிக்கும் பெரும் பணம் தேவைப்படும் நிலையேற்பட்டால் எம் பிரதேசங்களில் உயிர்வாழ்ப்பவர்களின் நிலை என்ன? ஆனால் தகவல் தொழிநுட்ப துறையை சேர்ந்தவரராக இருந்தாலும், ஒரு சிறிய நிலத்தை ஒதுக்கி வார இறுதிநாள்களில் ஆவது வீட்டுத் தோட்டப்  பயிர்செய்கைளை மேற்கொண்டு எம் சுய மரக்கறித் தேவைகளை ஆவது பூர்த்தி செய்து கொள்ளலாம்.

போசனைப் பெறுமானங்கள் என்கிற பெயரில் எமது உணவு திருடப்பட்டு வருகிறது. காலை உணவின் முக்கியத்துவம், உணவின் ருசியை அனுபவித்து சாப்பிடுகின்ற நிலை இன்று இல்லை. இயற்கையாகவே விளையும் கீரைவகைகள், இலைவகைகள், முட்டை, மீன் போன்றவற்றில் உள்ள போசனைக் கூறுகளை விடவா மருந்தகங்களில் விற்கப்படும் பன்னாட்டு சத்து மாக்களில் அதிகம் இருந்துவிடப் போகிறது.  குழந்தைகளுக்கு ஒரு மா, கர்ப்பிணி அம்மாவுக்கு ஒரு மா, வயோதிபர்களுக்கு ஒரு மா என்று பல கோடிகளில் புரளும் பலதேசிய நிறுவனங்களின்  குப்பைக்கூடையாக எமது பிரதேசங்கள் விளங்குகின்றன.

இன்று மக்கள் மத்தியில் சிறுதானியப் பயன்பாடு அறவே குறைந்துள்ளது. எம் முன்னோர்களின் ஆரோக்கியத்தில் குரக்கன், சாமை, வரகு போன்ற சிறுதானியங்களின் பங்கு அதிகம். பீட்ஸா, கே.எப்.சி ஐ நோக்கி ஓடும் எம் இளைய தலைமுறை எம் பாரம்பரிய உணவுகளை கூட மறந்து வருகிறது. ஆனால் இப்படியான நிலையிலும் வடக்கு விவசாய அமைச்சால் செயற்படுத்தப்படும் அம்மாச்சி உணவகங்கள் மீண்டும் இயற்கையை நோக்கி திரும்புகின்ற நிலையை ஊக்குவித்து வருகின்றன. அங்கே எங்கள் பாரம்பரிய உணவுகள் விற்கப்படுகின்றன. அதனை மக்கள் முண்டியடித்து வாங்கி உண்டு வருகின்றார்கள்.

எங்களுக்கு நன்மை செய்கின்ற நுண்ணங்கிகளோடு இணைந்த வாழ்வியல் தான் எம்மத்தியில் முன்பு இருந்தது. வீட்டு முற்றத்தில் அம்மாக்கள் சாணத்தால் மெழுகும் போது நன்மை செய்யும் கிருமிகள் தீமை செய்யும் கிருமிகளை அண்டவிடாமல் செய்யும் நிலை இருந்தது. இன்று அதனை  effective micro organism technology என்று சொல்கிறார்கள். இது தொடர்பில் பெரும் ஆய்வுகள் எல்லாம் ஜப்பான் உட்பட பல நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அது போன்று எமது நாட்டிலும் ஆய்வுகள் நடத்தப் படவேண்டும். தனியே விழிப்புணர்வு மட்டுமல்லாமல், கிராமிய, பிரதேச சபையில் இருந்து அரச உயர்மட்டம் வரையும் அதனையும் தாண்டி பிராந்திய நாடுகளின் கொள்கை முடிவெடுக்கப்படும் இடங்களிலும் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் படவேண்டும். கட்டமைப்புக்கள் உருவாக்கப் படவேண்டும். உதாரணமாக இந்துசமுத்திர கடல்வளத்தின் நிலை பெறுகையை உறுதிப்படுத்துவது என்பது அதன் எல்லைகளோடு சம்பந்தப்பட்ட எல்லா நாடுகளுடையதும் பிரச்சினை. இலங்கை அரசு இழுவை மீன்பிடியை தடை செய்வதாக ஒரு சட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனால் ஏதும் நன்மை விளையப் போகின்றதா என்றால் இல்லை என்றே சொல்லலாம். ஏனெனில், இந்திய அரசும் அப்படியானதொரு சட்டத்தை நடைமுறைப்படுத்தினால் தான் உண்மையில் மாற்றம் வரும்.  பிராந்திய மட்டத்தில் இணைந்து செயற்பட்டால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்.        
கொள்கைகள் எனப்படுபவை துறைசார்ந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, அரசியல்வாதிகளால் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட வேண்டும்.  அவற்றினுடைய நன்மை, தீமைகள் மக்கள் மத்தியில் ஆராயப்பட்டு அந்த ஆராய்ச்சியின் பெறுபேறுகளே கொள்கைகளாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். கொள்கைகளை தான்தோன்றித்தனமாக தீர்மானிக்கின்றவர்களாக அரசியல்வாதிகள் இருக்க முடியாது. யாழ்மாவட்டத்தில் நீரியல் வளர்ப்புக்கென 3000 ஹெக்டேயர் கடற்பரப்பை அரசு ஆக்கிரமித்துள்ளது. மாகாணத்தில் இருக்கின்ற யாருடனும் இது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அது ஒரு விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்படுகின்றது. எங்களுடைய அரசியல்வாதிகளுக்கும் இது தொடர்பில் தெரியாது. பத்தோடு பதினொன்றாக சட்டமாக்கப்பட்டுக் கொண்டே போகின்றது. இப்படியான முடிவுகள் தொடர்பில் மக்கள் மத்தியில் இருந்து கருத்துக்களை அறிந்து கொள்வது தொடர்பில் கருத்துக் களங்கள் பல்வேறு மட்டங்களில் உருவாக்கப்பட வேண்டும். அரசு சார்ந்த, தனியார் சார்ந்த நிகழ்வுகளிலிலும் இயற்கை வழி இயக்கத்தை சேர்ந்தவர்களின் பங்குபற்றுதல் அவசியமானது. எங்களுடைய கருத்துக்களை அங்கே கூற அது வசதியாக இருக்கும்.

இயற்கை வழி இயக்கம் கொள்கைகளை இறுக்கமாக பேணுவதற்கும், செயற்பாடுகளை விரிவுபடுத்திக் கொள்வதற்கும் வருமான வழி முக்கியமானது. இயற்கை அங்காடி, களப்பயணங்கள், கருத்துக் பகிர்வுகள், விதைப்பயணம், வேளாண் காடாக்கம், இயற்கை வழி ஆய்வு செயற்பாடுகள் என்பனவற்றுக்கு நிதி வேண்டும்.  கூட்டுப்பண்ணை, சில நிறுவனங்களை நடாத்தல் போன்றன மூலமாக சிறிய வருமானங்களை பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். அரசு, அரசு சார்பற்ற நிறுவனங்களின் நிதியை மட்டும் நம்பிச் செயற்படும் ஒரு அமைப்பாக இருந்தால் அது காலப்போக்கில் தனது குரலை உயர்த்துவதற்கான தன்மையை இழந்து போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

வடிவமைப்பில் நாங்கள் எப்படி இயற்கையின் உதாரணங்களை பின்பற்றலாம்? புதிய தொழிநுட்பங்களை உருவாக்குவதில் இயற்கையில் இருக்கும் உதாரணங்களை எவ்வாறு நாம் பிரயோகிக்கலாம்? இவ்வாறான செயற்பாடுகளை எவ்வாறு மாணவர் மத்தியில் தூண்டுவது? சூரிய மின்கலன்களை பெரிய அளவில் எப்படி பொருத்துவது என்ற கேள்வி துபாயில் எழுந்த போது, பலரும் பல்வேறு ஒழுங்கமைப்புக்களை கொண்டு வந்தார்கள். ஒருவர் வட்டவடிவ இலை ஒழுங்கு, ஒன்று விட்ட இலை ஒழுங்கு என நான்கு செடிகளை பிடுங்கிக் கொண்டு வந்து இரண்டே நிமிடங்களில் சூரிய மின்கலங்களை எவ்வாறு ஒழுங்கமைக்க வேண்டுமென விளக்கினார். மற்றவர்கள் எல்லோரும் சொன்னதை விட இது மிகச்சரியாக இருந்தது. மற்றைய வடிவங்களை விட தாவரங்களின் இலை ஒழுங்கில் சூரிய மின்கலம் பொருத்தப்பட்டு பார்த்த போது மற்றைய ஒழுங்கமைப்புகளை விட  பல மடங்கு சூரிய ஒளியை நுகரும் ஆற்றலை அது பெற்றிருந்தமை கண்டுபிடிக்கப்பட்ட்து. உச்ச அளவில் சூரிய ஒளியை பயன்படுத்துவது தான் சூரிய மின்கலத்தின் நோக்கம். இயற்கையிடம் இருந்து மனிதன் கற்றுக்கொள்ள பல விடயங்கள் இருக்கின்றன. மழை நீரை எப்படி உச்ச வினைத்திறனுடன் சேமிப்பது? தொடர்பிலும் யோசிக்கலாம். மாணவர்களிடையே பிரச்சினைகளை கொடுத்து அதற்கு இயற்கையிடம் இருந்து தீர்வைக் கொண்டுவரும்படி கூறலாம். இவற்றை போட்டியாக கூட வைக்கலாம். மாணவர்களிடையே கலை, காலாச்சார அம்சங்கள் ஊடாக விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கலாம் .

சுழற்சிப் பொருளாதாரம், நேர்கோட்டுப் பொருளாதாரம் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். கூடுதலாக பலதேசிய பெரு நிறுவனங்கள் முன்னெடுப்பது நேர்கோட்டுப் பொருளாதாரம். அதன்படி தன்னுடைய உச்ச இலாபத்தை எடுக்க வேண்டும். குறித்த உற்பத்தியால் வரும் குப்பை கழிவுகளை எல்லாம் அடுத்தவரின் சூழலுக்குள் வீசிவிட்டு தன்னுடைய இடத்தை மட்டும் சுத்தமாக வைத்துக் கொள்ளும் போக்கையும் காணலாம்.

சுழற்சி முறை பொருளாதாரத்தில் நான் தேவையானதை மட்டும் அளவாக பெற்றுக் கொண்டு எதிர்கால சந்ததியினர், பூமிக்கு எவ்வித கெடுதல்களை ஏற்படுத்தாத மாதிரி எனக்குரிய பங்களிப்புக்களை அடுத்தவர்களிடம் இருந்து எடுத்துக் கொள்ளாமல், அடுத்தவர்களுக்கான பங்களிப்புக்களை நான் கொடுக்கிறேன் என்பதனை உறுதிப்படுத்தி வாழ்வியலை அமைத்துக் கொள்வதே  சுழற்சி முறை பொருளாதாரமாகும்.

நாங்கள் சின்ன சின்ன விடயங்களை செய்து கொண்டு போவதற்கான அடித்தளம் எங்கிருந்து வருகிறது என்றால், பெரிய பெரிய கொள்கை வகுப்புத்திட்டங்களில் இருந்து தான் வருகிறது.  தத்துவார்த்தம் என்பது முக்கியமானது. இதைத் தான் இயற்கை வழி இயக்கம் செய்யப்போகிறது. சுயசார்புப் பொருளாதாரமே அதன் தத்துவம். பிராந்திய ரீதியில் பல்வேறு செயற்பாட்டுக் குழுக்களுடனும் இணைந்து வேலை செய்யலாம். நுகர்வு போக மித மிஞ்சிய உற்பத்திகளை தான் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படும். சுழற்சிப் பொருளாதாரத்தை பின்பற்றுவது தான் சிறப்பானது.  எது எங்கள் பொருளாதாரக் கொள்கை? எம் தேசத்தின் அபிவிருத்தி எவ்வாறு திட்டமிடப் பட வேண்டும்? எப்படிப்பட்ட சுற்றுலாத்துறை வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும்? எப்படிப்பட்ட கடல் சார் தொழில் வளர்த்தெடுக்கப்பட்ட வேண்டும் என்ற விடயங்களில் எல்லாம் இந்த தத்துவமே அடிப்படையாக இருக்கும்.

இப்படியான எல்லாப் பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக் கூடிய மாதிரி  துறை சார்ந்த நிபுணர்களை     கொண்டமைந்த ஒரு குழுவாக எதிர்காலத்தில் இயற்கைவழி இயக்கம் வளரும். கொள்கை என்பது, இது சாத்தியமா இல்லையா என்பதை யோசித்து எடுக்கும் முடிவல்ல. மக்களுக்கான கொள்கையை துறைசார் நிபுணர்களின் ஒத்துழைப்புடன் வகுத்து அதனை நோக்கி எல்லாவற்றையும் வளைப்பதே எம் நோக்கமாகும்.


வைத்தியகலாநிதி நடராஜா பிரபு 
நிமிர்வு  வைகாசி 2018 இதழ்

http://www.nimirvu.org/2018/05/blog-post_31.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவிற்கு அழைத்துச் சென்றது. 1972-ஆம் ஆண்டு டிசம்பர் வரை அப்பல்லோ பயணத்திட்டங்களின் மூலம் மேலும் 10 அமெரிக்க ஆண்கள் சந்திரனில் தரையிறங்கினர். அதன் பின்னர், அமெரிக்கா மனிதர்களை சந்திரனுக்கு அனுப்பும் திட்டத்தை நிறுத்தி வைத்தது. தற்போது, அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இந்த திடீர் முயற்சி ஏன்? கடந்த 1960-களில் மேற்கொள்ளப்பட்ட விண்வெளி ஆய்வுகளிலிருந்து இது எவ்வாறு வேறுபடுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,லூனா-3 (Luna-3) என்ற சோவியத் செயற்கைக்கோள் நிலவுக்கு அருகில் சென்று, அதனை முதன் முதலில் புகைப்படம் எடுத்து பூமிக்கு அனுப்பியது (படத்திலிருப்பது லூனா-3இன் மாதிரி) 'நிலவின் உலக அரசியல்' சோவியத் ஒன்றியம் (USSR) 1961-இல் யூரி ககாரினை பூமிக்கு வெளியே விண்வெளிக்கு சாதனை படைத்தது. அதற்குப் போட்டியாக, அமெரிக்கா நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை மேற்கொண்டது. நிலவில் தரையிறங்கியது ஒரு மாபெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. இது உலகளாவிய கவனத்தைப் பெற்ற வலுவான அரசியல் நடவடிக்கையாக இருந்தது. "எங்களால் என்ன செய்ய முடியும் என்று சொல்வது கடினம். காரணம், சொல்வதை விட நாங்கள் செய்வது அற்புதமானதாக இருக்கும். இந்த பூமியிலிருந்து மனிதர்களை கூட்டி சென்று நிலவில் வைப்போம்," என்று 'தி எகனாமிஸ்ட்' சஞ்சிகையின் மூத்த ஆசிரியர் மற்றும் 'தி மூன், எ ஹிஸ்டரி ஃபார் தி ஃப்யூச்சர்’ நூலின் ஆசிரியர் ஆலிவர் மார்டன் கூறினார். நிலவில் அடுத்ததாகத் தரையிறங்க போவது யார் என்பது, புவிசார் அரசியல் மற்றும் அதன் வளங்களைப் பயன்படுத்துவதற்கான ஆசையால் தீர்மானிக்கப்படும். பல்வேறு நாடுகள், தனியார் நிறுவனங்கள் என அனைவரும் வெவ்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றனர். ரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை நிலவின் மேற்பரப்பில் ஆளில்லா விண்கலங்களை அல்லது ரோவர்களை வெற்றிகரமாக தரையிறக்கியுள்ளன. ஆனால் மனிதர்களை அனுப்பியதில்லை. நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது. "இது புவிசார் அரசியலால் இயக்கப்படும். எனவே அமெரிக்கா மற்றும் சீனா தலைமையிலான குழுக்கள் சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் பயணத்திட்டத்தை அறிவித்துள்ளன. இந்த இரு நாடுகளும் சர்வதேசப் பங்காளிகளாக ஒப்பந்தம் செய்ய உள்ளனர். மேலும் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிலவுக்கு செல்லும் முயற்சியை மேற்கொண்டுள்ளனர்,” என்று ஆர்ஸ் டெக்னிகாவின் (Ars Technica) பத்திரிகையின் மூத்த விண்வெளித்துறை ஆசிரியர் எரிக் பெர்கர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நிலவில் யார் தரையிறங்குவது என்ற போட்டி, தற்போது அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவுகிறது இதற்கு என்னென்ன தேவை? நிலவுக்கான முதல் பயணத்திட்டம் உருவாக்கப்பட்டது ஆராய்ச்சி செய்வதற்காக அல்ல, சந்திரனில் தரையிறங்க வேண்டும் என்பதற்காகத் தான். ஆனால் தற்போது வகுக்கப்படும் நிலா பயணத் திட்டம், மனிதர்கள் அங்கு தங்குவதற்கான முயற்சியாகும். அதற்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகின்றனர். "மனிதர்கள் பூமியின் உயிரினங்கள். சிலர் செய்ய விரும்புவது என்னவென்றால், செவ்வாய் கிரகத்தில் குடியேற்றங்களை உருவாக்கி விரிவுபடுத்தவும், சந்திரனில் குடியேற்றங்களை உருவாக்கவும், விண்வெளியில் செயற்கை குடியிருப்புகளை உருவாக்கவும் விரும்புகிறார்கள். நான் இங்கு பேசுவது அறிவியல் புனைகதை போலத் தோன்றலாம்,” என்று பிரிட்டனில் உள்ள நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தில் விண்வெளிச் சட்டம் மற்றும் கொள்கைத் துறையின் பேராசிரியர் கிறிஸ்டோபர் நியூமன் கூறுகிறார். அவர் மேலும் பேசுகையில், "மனித இனம் பேரழிவில் இருந்து தப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, பூமிக்கு அப்பால் குடியிருப்புகளை உருவாக்குவது சிலருக்கு லட்சியமாக உள்ளது,” என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அப்பல்லோ 11 பயணத் திட்டம், 1969-ஆம் ஆண்டில், பஸ் ஆல்ட்ரின் மற்றும் நீல் ஆம்ஸ்ட்ராங் ஆகியோரை நிலவின் மேற்பரப்பிற்கு அழைத்துச் சென்றது 'செவ்வாய் கிரகத்துக்கான வழியில் நிலவு ஒரு இடைநிறுத்தம்' தற்போது நிலவுக்குச் செல்லும் அமெரிக்காவின் திட்டம் மேலும் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டுள்ளது. "நிலவில் தரையிறங்க நினைப்பதற்கு உண்மையான காரணம், அங்கே ஒரு தளத்தை நிறுவ வேண்டும் என்பது. செவ்வாய் கிரகத்திற்குச் செல்வதற்கான பாதையில் ஒரு இடைநிறுத்தமாக அந்தத் தளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது," என்று பிரிட்டனில் உள்ள அரிசோனா ஸ்டேட் யுனிவர்சிட்டியில் உள்ள தண்டர்பேர்ட் ஸ்கூல் ஆஃப் குளோபல் மேனேஜ்மென்ட்டில் பேராசிரியர் நம்ரதா கோஸ்வாமி விளக்குகிறார். "நிலவில் ஈர்ப்புவிசை குறைவாக இருப்பதால், குறைவான எரிபொருள் செலவிட்டு ராக்கெட்டை அங்கிருந்து ஏவ முடியும். பூமியில் இருந்து ராக்கெட்டை ஏவினால் அதிக எரிபொருள் செலவாகும். அதனால்தான் உலக நாடுகள் நிலவை ஒரு சொத்தாக பார்க்கின்றன,” என்று அவர் மேலும் கூறினார். சந்திரனின் சில பகுதிகள் மீது தொடர்ந்து சூரிய ஒளி படுவதால், அங்கு சூரிய சக்தியை உருவாக்கும் சாத்தியமும் உள்ளது. பெரிய செயற்கைக்கோள்கள் மூலம் அந்த ஆற்றலை பூமிக்கு மாற்றுவதும், மைக்ரோவேவ் மூலம் பூமிக்கு அனுப்புவதும் யோசனையின் ஒரு பகுதியாக உள்ளது. பூமியின் தாழ்-புவி சுற்றுப்பாதை (Low Earth orbit) 1,200 மைல்கள் அல்லது அதற்கும் குறைவான உயரத்தில் பூமியை மையமாக கொண்ட சுற்றுப்பாதைகளை உள்ளடக்கியது என்கிறது நாசா. சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் துத்தநாகம், அலுமினியம் மற்றும் பிற தனிமங்கள் இருப்பதை இந்தியாவின் நிலவு பயணத் திட்டங்கள் உறுதி செய்துள்ளன. தற்போது அங்கு வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை வழங்கக்கூடிய மற்றொரு முக்கிய விஷயத்தைக் கண்டுபிடிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. "நீர் மற்றும் பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால் அங்கு மனித குடியேற்றத்தைத் தக்க வைத்துக் கொள்ள நீர் மற்றும் பனி தேவைப்படும். ஏனென்றால் அவற்றை ஆக்ஸிஜனாக மாற்ற முடியும்," என்று கோஸ்வாமி விளக்குகிறார். "முதன்முதலில் சந்திரனில் தரையிறங்கிய மகிழ்ச்சிக்குப் பிறகு, 1960-களின் பிற்பகுதியில் நட்சத்திரங்களை அடைவது பற்றிய பேச்சு கூட எழுந்தது. ஆனால் அது விரைவில் நடக்கப் போவதில்லை. குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் மனிதர்கள் செல்லக்கூடிய உறுதியான இடமாக நிலவு உள்ளது, அங்கு குறைந்த ஈர்ப்பு விசை உள்ளது. எனவே இலக்கை அடைவது ஒப்பீட்டளவில் எளிதானது. சந்திரனுக்குச் செல்ல மூன்று நாட்கள் ஆகும். ஆனால் செவ்வாய் கிரகத்தை அடைய ஆறு முதல் எட்டு மாதங்கள் ஆகும். எனவே, மனிதர்கள் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது அடுத்த இலக்கு தான்," என்கிறார் பெர்கர்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பல்வேறு நாடுகள் நிலவை அடையும்போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி தொழில்நுட்ப சவால்கள் என்ன? நிலவுக்குச் செல்வதில் முதலில் சில தொழில்நுட்பத் தடைகளைக் கடக்க வேண்டும். விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவும், கதிர்வீச்சிலிருந்து அவர்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் சக்தி வாய்ந்த ராக்கெட் தேவை. அடுத்த சவால், சந்திரனின் மேற்பரப்பில் பாதிப்பு ஏற்படுத்தாத ஒரு இலகுவான தரையிறக்கம் செய்ய வேண்டும், அதன் பின்னர் தான் விண்வெளி வீரர்கள் திரும்பி வர முடியும். தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அவர்களுக்கு எந்த வெளிப்புற உதவியும் இல்லை அல்லது பணியை நிறுத்துவதற்கான வழிகளும் இல்லை. நிலவில் இருந்து திரும்பும் விண்வெளி வீரர்கள், விண்வெளி ஊர்தியில் பூமியின் வளிமண்டலத்திற்குள் அதிவேகத்தில் நுழைவார்கள், அதாவது வினாடிக்கு பல கிலோமீட்டர்கள் வேகத்தில் அந்த ஊர்தி வரும். குறைந்த புவிச் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பி வருவதை ஒப்பிடுகையில், நிலவில் இருந்து திரும்பி வரும் போது வேகம் அதிகரிக்கும்,” என்று பெர்கர் விளக்குகிறார். பல்வேறு நாடுகள் நிலவை அடையும் போது, அதன் வளங்களுக்கு என்ன நடக்கும் என்பதும் ஒரு முக்கியமான கேள்வி. விண்வெளியில் எந்த நாடும் இறையாண்மை, உரிமையை கோர முடியாது என்பதை 1967-இன் அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தம் உறுதி செய்கிறது, ஆனால் உண்மை வேறுவிதமாக மாறக்கூடும். "நிலவில் தரையிறங்கும் திறன் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே முதன்மை நன்மைகள் இருக்கும். எனவே நிலவில் உள்ள வளங்கள் எப்படி பகிரப்படும் என்பது குறித்த சட்ட விதிமுறைகள் இன்று நம்மிடம் இல்லை," என்கிறார் கோஸ்வாமி.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது விண்வெளிப் போட்டி சீனா 2030-களில் நிலவில் நிரந்தரமாக ஒரு தளத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அந்த காலக்கெடுவை நெருங்க நெருங்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. மற்றொரு புறம் அமெரிக்கா, 2028-க்குள் நிலவு விண்வெளி நிலையத்தை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கிறது. ஆனால் அதன் செயல்திட்டம் ஏற்கனவே பின்தங்கிவிட்டது. அமெரிக்காவின் வெற்றியானது, கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மற்றும் அவரது ஆய்வு நிறுவனமான 'ஸ்பேஸ் எக்ஸ்' உருவாக்கி வரும் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் திறனை பொறுத்தது. இந்தியாவும் அடுத்த ஆண்டு, முதன்முதலில் மனிதர்களுடன் விண்வெளி விமானங்களை இயக்கத் திட்டமிட்டுள்ளது. 2035-ஆம் ஆண்டுக்குள் அங்கு விண்வெளி நிலையத்தை அமைத்து, 2040-ஆம் ஆண்டு நிலவுக்கு விண்வெளி வீரரை அனுப்புவதை இலக்காகக் கொண்டுள்ளது. "சீன விண்வெளித் திட்டத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைச் சந்திக்கும் அவர்களின் திறன். விண்வெளி ஆராய்ச்சிப் பயன்பாடு மற்றும் நிரந்தர அடிப்படை மேம்பாடு ஆகியவற்றுடன் 21-ஆம் நூற்றாண்டில் சந்திரனில் தரையிறங்க கூடிய முதல் நாடாக சீனா இருக்கும் என்று திடமாக நான் கூறுவேன்,” என்று கோஸ்வாமி முடிக்கிறார். (இந்தக் கட்டுரை பிபிசி உலக சேவை வானொலி நிகழ்ச்சியான 'தி என்கொயரி'யை அடிப்படையாகக் கொண்டது) https://www.bbc.com/tamil/articles/c97zz3q775lo
    • Published By: VISHNU   14 MAY, 2024 | 09:26 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு கொண்டு வராமலிருந்தால்  தென்னாசியாவில் தமிழீழம் தோற்றம் பெற்றிருக்கும். அது இஸ்ரேல் போல் மாற்றமடைந்திருக்கும், காஸாவின் இன்றைய நிலை எமக்கு ஏற்பட்டிருக்கும். இஸ்ரேலுக்கு ஆயுதத்தை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்கா முதலை கண்ணீர் வடிக்கிறது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற  பலஸ்தீன விவகாரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதலினால் பலஸ்தீனர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலை குறித்து நாங்கள் கவலையடைகிறோம். பலஸ்தீனர்கள் இன்று எதிர்கொண்டுள்ள நிலைமைக்கும், இலங்கையின் நிலைமைக்கும் இடையில் பரஸ்பர ஒற்றுமை காணப்படுகிறது. இரண்டாம் உலக மகா யுத்தம் தீவிரமடைந்த போது யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருதற்கு பெரிய பிரித்தானியா யூதர்களுடன் ஒப்பந்தம் செய்தது. யுத்தம் முடிந்தவுடன் தமக்கு ஒரு நாடு அல்லது இராச்சியம் வேண்டும் என யூதர்கள் பெரிய பிரித்தானியாவிடம் வலியுறுத்தினார்கள். இரண்டாம் உலக மகா யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர்  பெரிய பிரித்தானிய பலஸ்தீனர்களுக்கு சொந்தமான பூர்வீக பூமியில் யூதர்களை குடியமர்த்தி பிரச்சினைகளை தோற்றுவித்தது. தமிழர்கள் உலகெங்கிலும் வாழ்கிறார்கள். அவர்கள் தென்னிந்திய திராவிட மொழியை அடிப்படையாகக் கொண்டவர்கள் ஆகவே அவர்களுக்கு இலங்கைக்குள் ஒரு தனித்த நாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக பெரிய பிரித்தானியா போலியான சுதந்திரத்தை வழங்கி இலங்கையில் வாழ்ந்த தமிழ் தலைவர்களிடம் குறிப்பிட்டது. இதன் பின்னரே 50 :50 அதிகாரம் பற்றி பேசப்பட்டது. 50:50 அதிகாரம் என்பது தோல்வியடைந்த நிலையில் யுத்தம் தோற்றம் பெற்றது. இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளை அழித்து யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வராமல் இருந்திருந்தால் தென்னாசியாவில் தமிழ் ஈழம் தோற்றம் பெற்றிருக்கும். அவ்வாறான நிலை தோற்றம் பெற்றால் தென்னாசியாவில் காஸாவை போன்ற நிலைமை எமக்கு ஏற்பட்டிருக்கும். தமிழ் ஈழம் இஸ்ரேல் போல் செயற்பட்டிருக்கும். பலஸ்தீனர்களின்  இன்றைய நிலையை  நாங்கள் எதிர்கொண்டிருப்போம். விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை பாதுகாப்பதற்கு அமெரிக்காவின் மெராய்ன் படையின் கப்பல் இலங்கையின் கடல் பரப்புக்கு அப்பாற்பட்ட சர்வதேச கடல் எல்லைக்கு வருகை தந்திருந்தது. பிரபாகரனை உயிருடன் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அப்போதைய அரசாங்கத்திடம் வலியுறுத்தியது. ஆனால் அதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடமளிக்கவில்லை. அதேபோல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பிரபாகரனை உயிருடன் கோரின. பிரிவினைவாத யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கம் மேற்குலக நாடுகளிடம் இருக்கவில்லை. தமிழ் ஈழத்துக்காகவே உலக நாடுகளும் குரல் கொடுத்தன. இலங்கையில் தமிழ் ஈழத்தை உருவாக்க பெரிய பிரித்தானிய முன்னெடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன. ஆனால் பலஸ்தீனத்தில் அவர்களின் நோக்கம் வெற்றிப் பெற்றன. இரண்டாம் உலக யுத்தத்தின் போது உலகில் நாடற்றவர்களாக இருந்த யூதர்களுக்கு பலஸ்தீன நிலத்தை ஆக்கிரமித்து நாடு உருவாக்கிக் கொடுக்கப்பட்டது. காலப் போக்கில் யூதர்களான இஸ்ரேலியர்கள் முழு பலஸ்தீனத்தையும் ஆக்கிரமித்து  பலஸ்தீனர்களின் அடையாளத்தை அழிக்க முயற்சிக்கிறார்கள். தமது உரிமைக்காக பலஸ்தீனியர்கள் போராடுகிறார்கள், ஆகவே பலஸ்தீனர்களின் நிலைமையை எம்மால் உணர்வுபூர்வமாக விளங்கிக் கொள்ள முடிகிறது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி விட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருமாறு அமெரிக்க முதலை கண்ணீர் வடிக்கிறது. யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபைக்கு பிரேரணை கொண்டு வரும் போது அமெரிக்க தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி  பிரேரணைகளை தோற்கடிக்கிறது. ஆகவே இலங்கைக்கு எதிராக செயற்படுத்தும் போலியான மனித உரிமைகளை  பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்காக உண்மையுடன் செயற்படுத்துமாறு உலக நாடுகளிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/183560
    • புலிகள் இருந்தாலும் ஆயிரம் பொன் இல்லா விட்டாலும் ஆயிரம் பொன்.
    • பிளே ஸ்டேஷன், எக்ஸ் பாக்ஸ் தளங்களை முடக்கி கேமிங் உலகை பதறச் செய்த 'ஹேக்கர்' சிக்கியது எப்படி? பட மூலாதாரம்,EUROPOL படக்குறிப்பு,ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற ஜூலியஸ் கிவிமாக்கி கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ டைடி பதவி, சைபர் நிருபர், பிபிசி உலக சேவை 35 நிமிடங்களுக்கு முன்னர் ஹேக்கிங்கில் கைத்தேர்ந்த பிரபல ஹேக்கர் ஒருவர், 33,000 மனநல சிகிச்சை நோயாளிகளின் தனிப்பட்ட சிகிச்சை குறிப்பை திருடி, அதை வைத்து அவர்களை மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவராக அவரின் பெயர் அறிவிக்கப்பட்டது. ஜூலியஸ் கிவிமாக்கி பதின் பருவத்தில் இருந்தே ஹேக்கிங் மீது ஆர்வம் கொண்டவர். 13 வயதில் ஒரு டீனேஜ் ஹேக்கிங் கும்பலின் அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்று பிரபலமடைந்த போது அவரின் ஹேக்கிங் ஆர்வம் மேலும் அதிகரித்தது. தற்போது சிறை தண்டனை கிடைத்திருப்பது ஜூலியஸின் 11 வருட ”அடாவடித்தனமான ஹேக்கிங்” செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டினா, சனிக்கிழமை இரவு தன் வழக்கமான பணிகளுக்கு பிறகு ஓய்வெடுத்து கொண்டிருந்த போது அலைபேசி ஒலித்தது. அவருக்கு அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது, அதில் டினாவின் முழுப் பெயர், சமூகப் பாதுகாப்பு எண் மற்றும் பிற தனிப்பட்ட விவரங்கள் இருந்தன. "அந்த மின்னஞ்சல் மிகவும் கண்ணியமான முறையில் எழுதப்பட்டிருந்தது. அதன் இனிமையான தொனியால் நான் ஈர்க்கப்பட்டேன்," என்று டினா நினைவு கூர்கிறார். "அன்புள்ள டினா பரிக்கா" என்று ஆரம்பித்த அந்த மின்னஞ்சலில், ”நீங்கள் மனநல சிகிச்சை பெற்ற உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து உங்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்றேன். நோயாளிகளின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டது என்ற உண்மையை நிறுவனத்திடம் சொன்ன போது அவர்கள் புறக்கணித்து விட்டனர். எனவே உங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டேன். மன்னிக்கவும்” என்று மின்னஞ்சலில் எழுதப்பட்டிருந்ததாக டினா விவரித்தார். டினா இரண்டு வருடங்களாக மனநல சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை அமர்வுகளின் போது அவர் தன்னை பற்றிய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தையும் பகிர்வது வழக்கம். அவை சிகிச்சை மையத்தின் இணைய பதிவேட்டில் பதிவு செய்யப்படும். இவ்வாறு பதிவான டினாவின் தனிப்பட்ட தகவல்களை மர்ம நபர் ஒருவர் ஹேக் செய்து திருடி இருக்கிறார். சிகிச்சை அமர்வுகளின் போது சொன்ன தனிப்பட்ட விஷயங்கள் அனைத்தும் ஒரு பிளாக்மெயிலர் கைகளில் சிக்கி இருப்பதை உணர்ந்த டினா பேரதிர்ச்சி ஆனார். 24 மணி நேரத்திற்குள் கேட்கும் தொகையை தராவிட்டால் அவை அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்படும் என்றும் மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டிருந்தது. "அதிர்ச்சியில் நான் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டேன். எனது தனிப்பட்ட உலகத்தை யாரோ திரை விலக்கி பார்த்துவிட்டனர். எனது வாழ்க்கையின் கருப்பு பக்கங்களை வைத்து யாரோ பணம் சம்பாதிக்க முயற்சிப்பதை உணர்ந்தேன்." என்றார். தான் மட்டும் தனியாக பாதிக்கப்படவில்லை என்பது டினாவுக்கு தெரிய வந்தது. மொத்தம் 33,000 நோயாளிகளின் பதிவுகளும் திருடப்பட்டிருந்தன, ஆயிரக்கணக்கானோருக்கு அச்சுறுத்தும் மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. பின்லாந்து வரலாற்றில், ஒரு கிரிமினல் வழக்கில் 30,000த்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.   பட மூலாதாரம்,JESSE POSTI, DIGILIEKKI படக்குறிப்பு,டினா பரிக்கா `வாஸ்டாமோ’ (Vastaamo) உளவியல் சிகிச்சை மையத்திலிருந்து திருடப்பட்ட இணைய தரவுத்தளத்தில் குழந்தைகள் உட்பட உளவியல் சிகிச்சை எடுத்த அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளின் மிகவும் தனிப்பட்ட ரகசியங்கள் உள்ளன. திருமணத்தை தாண்டிய உறவின் குற்றவுணர்ச்சி, குற்றங்களின் ஒப்புதல் வாக்குமூலம் என பல்வேறு உணர்ச்சிகரமான உரையாடல்கள் பேரம் பேசும் விஷயமாக மாறியிருந்தது. இந்த சைபர் தாக்குதலை ஆய்வு செய்த பின்லாந்து இணைய பாதுகாப்பு நிறுவனமான வித் செக்யுரைச் (WithSecure) சேர்ந்த மைக்கோ ஹைப்போனென், இந்த நிகழ்வு நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது மற்றும் பல நாட்கள் தலைப்பு செய்திகளாக பதிவு செய்யப்பட்டது என்கிறார். "மிகப்பெரிய அளவிலான இந்த ஹேக்கிங் குற்றச்செயல், பின்லாந்துக்கு ஒரு பேரழிவாகும்" என்று அவர் கூறுகிறார். இது அனைத்தும் 2020 இல் கொரோனா தொற்றுநோயால் உருவான லாக்டவுன் சூழலின் போது நடந்தது. இந்த வழக்கு சைபர்-பாதுகாப்பு உலகத்தை அதிர்ச்சியில் உறைய வைத்தது. மேலும் மின்னஞ்சல்களின் தாக்கம் பேரழிவை ஏற்படுத்தியது. வழக்கறிஞர் ஜென்னி ரைஸ்கியோ, பாதிக்கப்பட்டவர்களில் 2,600 பேர் சார்பில் வாதிட்டவர். நோயாளியின் சிகிச்சை பதிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்ட பின்னர் பலர் தற்கொலை செய்து கொண்டதாக அவர்களின் உறவினர்கள் ஜென்னியின் நிறுவனத்தை தொடர்பு கொண்டதாக கூறினார். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் சிறிது நேரம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. ”ransom_man” என்று மட்டுமே தன்னை இணையத்தில் அறிமுகப்படுத்தி கொண்ட பிளாக்மெயிலர், பாதிக்கப்பட்டவர்கள் அவருக்கு 24 மணி நேரத்திற்குள் €200 யூரோக்கள் (இந்திய மதிப்பில் ஏறக்குறைய ரூ.18,000 ) செலுத்த வேண்டும். இல்லையெனில் அவர்களின் தகவல்களை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டல் விடுத்தார். குறிப்பிட்ட நேரத்துக்குள் பணம் செலுத்தவில்லை என்பதால் அந்த தொகையை €500 ஆக உயர்த்தினார். பாதிக்கப்பட்டவர்களில் 20 பேர் பணம் செலுத்தினர். ஆனால் அதற்குள் ransom_man தவறுதலாக முழு தகவல்களையும் டார்க் நெட்டில் (dark net)உள்ள ஒரு தளத்தில் பகிர்ந்து விட்டார். அனைவரின் தனிப்பட்ட சிகிச்சை பதிவுகளும் இணையத்தில் கசிந்தன. தற்போது வரை அந்த தகவல்கள் இணையத்தில் உள்ளன. மிக்கோ மற்றும் அவரது குழுவினர் தகவல்களை கசியவிட்ட நபரை தொடர்ந்து கண்காணித்து, காவல்துறைக்கு உதவ முயன்றனர். மேலும் அந்த ஹேக்கர் பின்லாந்தை சேர்ந்தவராக இருக்கலாம் என்று யூகிக்கப்பட்டது. நாட்டின் கிரிமினல் வழக்கு வரலாற்றின் மிகப்பெரிய விசாரணை சூடுபிடித்தது. சைபர்-கிரைம் உலகில் ஏற்கனவே பிரபலமான ஒரு பின்லாந்து இளைஞர் மீது ஒட்டுமொத்த காவல்துறையின் கவனமும் திரும்பியது. பட மூலாதாரம்,SKY NEWS படக்குறிப்பு,2014 இல் ஸ்கை நியூஸ் நேர்காணலில் கிவிமாக்கி தன்னை ரெயான் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். குற்றச்செயல்களை விரும்பும் ஜீகில் (Zeekill) கிவிமாக்கி, தன்னை ஜீ-கில் என அடையாளப்படுத்தி கொண்டார். பதின் வயது முதலே ஹேக்கிங் செய்து வரும் ஜீகில், டீன் ஏஜ் ஹேக்கராக தன் அடையாளத்தை வெளிபடுத்தாமல் கவனமாக இருந்ததன் மூலம் அவர் பிரபலமான நபராக மாறவில்லை. ஒரு இளைஞனாக, அவர் ஹேக்கிங், மிரட்டி பணம் பறித்தல் ஆகியவற்றை செய்து வந்தார். ஜீகிலுக்கு தற்பெருமை காட்டுவது பிடிக்கும். ஹேக்கர் அணிகளான லிசார்ட் ஸ்குவாட் மற்றும் ஹேக் தி பிளானட் ஆகியவற்றுடன் இணைந்து, 2010 களின் மிகவும் சுறுசுறுப்பான டீனேஜ் ஹேக்கராக இருந்தார். ஹேக்கிங் செய்து மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதில் புளகாங்கிதம் அடைந்தார். கிவிமாக்கி ஒரு முக்கிய ஹேக்கராக உருவெடுத்தார். 17 வயது வரை பல உயர்மட்ட சைபர் தாக்குதல்களை நடத்தினார், 2014 இல் கைது செய்யப்பட்டார், பின்னர் 50,700 ஹேக்கிங் குற்றங்களில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிறையில் அடைக்கப்படவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இரண்டு வருடங்களுக்கு சிறைத் தண்டனை ஒத்திவைக்கப்பட்டது. இணைய பாதுகாப்பு உலகில் பலரால் விமர்சிக்கப்பட்டது. இதன் மூலம் கிவிமாக்கியும் அவரது நண்பர்களும் பல்வேறு சைபர் குற்றங்களை செய்யக்கூடும் என பலர் அஞ்சினர். இந்த கொந்தளிப்பான சூழலில், காவல்துறை கிவிமாக்கி மீது நடவடிக்கை எடுக்கும் போதும் அவர் பல்வேறு குற்றச் செயல்களை மேற்கொண்டார். கைது செய்யப்பட்டு, தண்டனை விதிக்கப்படும் அந்த இடைக்காலத்தில், கிவிமாக்கி தன் டீனேஜ் ஹேக்கிங் கும்பலுடன் இணைந்து ஒரு துணிச்சலான தாக்குதல் ஒன்றை நடத்தினார்.   படக்குறிப்பு,லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கர்ஸ் குழுவின் குறியீட்டு படம் கிறிஸ்துமஸ் தினத்தில், கிவிமாக்கி, லிசார்ட் ஸ்குவாட் ஹேக்கிங் குழு உடன் இணைந்து இரண்டு பெரிய கேமிங் தளங்களை செயலிழக்கச் செய்தார். பிளேஸ்டேஷன் நெட்வொர்க் மற்றும் எக்ஸ்பாக்ஸ் லைவ் ஆகிய தளங்களும் செயலிழந்தன. சேவை மறுப்பு தாக்குதல் என்று சொல்லப்படும் `Distributed Denial of Service attack’ என்னும் சக்தி வாய்ந்த செயல்முறையில் சைபர் தாக்குதல் நடத்தினர். இதனால் பல்லாயிரக்கணக்கான கேமர்களால் கேம்களைப் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. புதிய கன்சோல்களைப் பதிவு செய்யவோ அல்லது ஆன்லைனில் தங்கள் நண்பர்களுடன் விளையாடவோ முடியவில்லை. உலக ஊடகங்களின் கவனம் தன் மீது திரும்புவதை கிவிமாக்கி ரசித்தார். மேலும் ஸ்கை நியூஸிற்காக என்னுடன் ஒரு தொலைக்காட்சி நேர்காணலுக்கும் ஏற்றுக்கொண்டார், நேர்காணலில் அவர் நிகழ்த்திய சைபர் தாக்குதலுக்கு சிறிதளவும் வருத்தமோ குற்றவுணர்ச்சியோ காட்டவில்லை. ஜீகில்லின், லிசார்ட் ஸ்குவாட் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஹேக்கர் ரெயான் பிபிசியிடம் பேசுகையில், ”கிவிமாக்கி பழிவாங்கும் உணர்வுடைய இளைஞர். அவர் இணையத்தில் தன் கேமிங் போட்டியாளர்களை பழிவாங்கவும் ஆன்லைனில் தனது திறமைகளை காட்டவும் விரும்பினார்” என்கிறார். (ரெயான் காவல்துறையில் சிக்கவில்லை என்பதால் அவர் முழுப் பெயரை சொல்ல விரும்பவில்லை ) "அவர் என்ன செய்தாலும் அதனை நேர்த்தியுடன் செய்யும் திறமையானவர். விளைவுகளைப் பற்றி கவலைப்பட மாட்டார். அவர் மீது போலீஸ் கவனம் இருந்த போதிலும், பயமின்றி தன் சொந்த குரலிலேயே வெடிகுண்டு மிரட்டல் விடுவார்.” என்று ரெயான் விவரித்தார். கிவிமாக்கி காவல்துறையிடம் சிக்கி, தண்டனை பெற்ற பிறகு சில சிறிய அளவிலான ஹேக்கிங் குற்றச் செயல்களை மட்டும் செய்து வந்தார். பல ஆண்டுகளாக வெளி உலகிற்கு தெரியாமல் இருந்தவர், வாஸ்டாமோ உளவியல் நோயாளிகள் மீதான சைபர் தாக்குதலுக்கு பிறகு வெளிச்சத்துக்கு வந்தார். பட மூலாதாரம்,POLICE OF FINLAND படக்குறிப்பு,கிவிமாக்கியின் ஆதாரத்தை போலீஸார் சமர்பித்தனர் சிவப்பு அறிக்கை வெளியீடு கிவிமாக்கிக்கு எதிராக இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு (Red Notice), வழங்குவதற்கான ஆதாரங்களை சேகரிக்க ஃபின்லாந்து காவல்துறைக்கு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆயின. அவர் ஐரோப்பாவின் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் ஒருவரானார். ஆனால் 25 வயதான அவர் எங்கே இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் பாரிஸில் உள்ள காவல்துறைக்கு ஒரு குடியிருப்பு பகுதியில் இருந்து பொய்யான தகவல்களுடன் தொலைபேசி அழைப்பு வந்தது. போலீஸ் நேரில் சென்று ஆய்வு செய்த போது, அங்கு கிவிமாக்கி வசிப்பது தெரிய வந்தது. அவர் போலியான பெயரில் போலி அடையாள ஆவணங்களுடன் அங்கு வசித்து வந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர் பின்லாந்துக்கு நாடு கடத்தப்பட்டார். அங்கு அந்நாட்டு வரலாற்றில் மிக உயர்ந்த எண்ணிக்கையிலான பாதிக்கப்பட்டவர்களை கொண்ட விசாரணையை போலீஸ் தொடங்கியது. சைபர் கிரைம் விசாரணைகளின் துப்பறியும் தலைமை ஆய்வாளர் மார்கோ லெபோனன், மூன்று ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கை நடத்தினார். இது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய வழக்கு என்று கூறுகிறார். " நாங்கள் 200 க்கும் மேற்பட்ட அதிகாரிகளைக் கொண்டிருந்தோம், இவ்வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் மிக தீவிரமான வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது" “கிவிமேகியின் விசாரணை நாட்டிற்கு ஒரு முக்கிய செய்தியாக மாறியது. ஒவ்வொரு நாளும் இங்கு நிருபர்கள் மற்றும் சர்வதேச ஊடகங்கள் விசாரணையை பார்வையிட்டு சென்றனர். அவர் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டபோது உடனிருந்தனர். நீதிமன்றத்தில் அவரது வழக்கின் முதல் நாள் நான் அங்கிருந்தேன். அவர் தனது அப்பாவித்தனத்தை வெளிப்படுத்தினார். கனிவாகவும், அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசினார். ஆனால் அவருக்கு எதிரான சாட்சியங்கள் மிகப்பெரியவை. அவரின் பேச்சு எடுபடவில்லை.” என்றார். விவரித்த அவர் ``திருடப்பட்ட தரவைப் பதிவிறக்கப் பயன்படுத்திய சர்வருடன் கிவிமேகியின் வங்கிக் கணக்கை இணைப்பது மிகவும் கடினமான செயல் முறையாக இருந்தது. ஆன்லைன் புனைப்பெயரில் அவர் வெளியிட்ட புகைப்படத்திலிருந்து கிவிமாக்கியின் கைரேகையைப் பிரித்தெடுக்க எங்களின் அதிகாரிகள் புதிய தடயவியல் நுட்பங்களையும் பயன்படுத்தினர்.” என்கிறார். "இணையத்தில் ஹேக் செய்யப்பட்ட தரவுகளை பதிவிட்ட மர்ம நபர் கிவிமாக்கி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிக்க மிகவும் சிரமப்பட்டோம். பல்வேறு தொழில்நுட்ப செயல்முறைகளை கையாண்டு அவரை கண்டுபிடித்தோம்" என்று லெபோனன் கூறினார். பின்லாந்து தலைநகரான ஹெல்சிங்கியில் ஏப்ரல் மாத இறுதியில், கிவிமாக்கி மீதான வழக்குகளின் இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியில், நீதிபதிகள், "கிவிமாக்கி குற்றவாளி” என்று தீர்ப்பளித்தனர்.   பட மூலாதாரம்,JOE TIDY படக்குறிப்பு,எல்சிங்கியில் நடைபெற்ற கிவிமாக்கி மீதான விசாரணை அந்நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாகும் நீதிமன்றத்தின் கூற்றுப்படி, கிவிமாக்கி 30,000 க்கும் மேற்பட்ட குற்றச்செயல்களை செய்திருக்கிறார். இவரால் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவரது செயல் ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் பாதித்துள்ளதால், ஒவ்வொன்றும் தனித்தனி வழக்காகவே கருதப்படுகிறது. தரவு திருடுதல், மோசமான அச்சுறுத்தல் முயற்சி, தனிப்பட்ட வாழ்க்கையை மீறும் தகவல்களை பரப்புதல் ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு அதிகபட்சம் ஆறு ஆண்டுகள் மற்றும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் ஏற்கனவே சிறையில் இருந்தால் பின்லாந்தின் நீதி அமைப்பின் படி தண்டனை காலம் குறைக்கப்படலாம். டினா போன்ற பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த தீர்ப்பு போதுமானதாக இல்லை. "இதனால் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், பலர் தற்கொலை செய்து கொண்டனர் - மேலும் எங்கள் ஆரோக்கியத்தை பாதித்துள்ளது. " என்று அவர் கூறுகிறார். இதற்கிடையில், பாதிக்கப்பட்டவர்கள் இந்த வழக்கில் இருந்து ஏதேனும் இழப்பீடு கிடைக்குமா என்று எதிர்பார்க்கின்றனர். கிவிமாக்கி, பாதிக்கப்பட்ட ஒரு சிலருடன் நீதிமன்றத்திற்கு வெளியே வைத்து பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண கொள்கையளவில் ஒப்புக்கொண்டார். ஆனால் மற்றவர்கள் அவருக்கு எதிராகவும் வஸ்டாமா சிகிச்சை மையத்திற்கு எதிராகவும் சிவில் வழக்குகள் போட திட்டமிடுகின்றனர். உளவியல் சிகிச்சை நிறுவனம் இப்போது மூடப்பட்டுவிட்டது. நோயாளியின் தரவைப் பாதுகாக்கத் தவறியதற்காக அதன் நிறுவனருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிவிமாக்கி தனது பிட்காயினில் எவ்வளவு பணம் வைத்துள்ளார் என்பதை போலிஸாரிடம் தெரிவிக்கவில்லை. அவர் தனது டிஜிட்டல் வாலட் விவரங்களை மறந்து விட்டதாக கூறுகிறார். ரைஸ்கோ என்பவர் கூறுகையில், "அரசு மேலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று நம்புகிறேன். ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கிலும் எவ்வளவு தீங்கு விளைவித்தார் என்பதை மதிப்பிடுவதற்கு பல மாதங்கள் ஆகலாம். எதிர்காலத்தில் இதுபோன்ற வெகுஜன ஹேக் வழக்குகளை சமாளிக்க சட்டத்தில் மாற்றம் கொண்டு வரவேண்டும். இது உண்மையில் பின்லாந்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது” என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/c51nly4deqpo
    • இந்தியாவிலிருந்து நன்மையானது ஏது வரக் கூடுமோ?  😏 எரியுண்ட சடலங்களைப் புசிக்கும் நரமாமிச பட்சணிகளை வணங்கும் நாட்டிலிருந்து எதை எதிர்பார்க்க முடியும்?  😏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.