Jump to content

சினிமா விமர்சனம்: டிக்..டிக்..டிக்..


Recommended Posts

சினிமா விமர்சனம்: டிக்..டிக்..டிக்..

 

தமிழில் விண்வெளியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் படம் என்ற வாசகத்துடன் வந்திருக்கும் படம். 1963ல் எம்.ஜி.ஆர்., பானுமதி நடித்து வெளியான கலை அரசி படத்தில் சில காட்சிகள் விண்வெளியில் நடப்பதாக உண்டு. ஆனால், இந்தப் படத்தின் பெரும் பகுதி விண்வெளியில்தான் நடப்பதாக உள்ளது.

டிக்..டிக்..டிக்..

மிகப் பெரிய விண்கல் ஒன்று வங்கக் கடல் பகுதியில் விழும் என்றும் அதனால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் கடலில் மூழ்கும் என்று கண்டுபிடிக்கப்படுகிறது. அந்த விண்கல்லை விண்வெளியிலேயே அழிக்க 200 டன் வெடிமருந்துள்ள அணு ஆயுதம் தேவைப்படுகிறது. அம்மாதிரி ஒரு அணு ஆயுதத்தை விண்வெளியில் வைத்திருக்கிறது அண்டை நாடு ஒன்று.

ஆகவே அதைத் திருடி, விண்கல்லை தாக்க முடிவுசெய்கிறார்கள். அதற்கு சில உள்ளூர் திருடர்களை பணிக்கு அமர்த்துகிறார்கள் (அணு ஆயுதத்தை விண்வெளியில் திருட லோக்கல் திருடனா என்று கேட்கக்கூடாது). இதற்கிடையில் அந்த அணு ஆயுதத்தை கடத்தி தன்னிடம் தர வேண்டுமென மர்ம குரல் ஒன்று கதாநாயகனுக்கு கட்டளையிடுகிறது. கதாநாயகன், அணு ஆயுதத்தை கடத்தினானா, விண்கல்லை அழித்தானா என்பது மீதிக் கதை.

விண்வெளியிலிருந்து பூமிக்கு மிகப் பெரிய அழிவு ஏற்படும் சூழலில் அரசும் கதாநாயகனும் சேர்ந்து உலகைக் காப்பாற்றும் கதைகள் ஹாலிவுட்டில் பல வந்துவிட்டன. ஆனால், தமிழுக்கு இந்தக் கதை மிகவும் புதிது. ஆனால், அதற்காக விண்வெளி சாகஸக் கதைகளை இப்படி காமெடி ஆக்கியிருக்க வேண்டாம்.

   
திரைப்படம் டிக்..டிக்..டிக்..
   
நடிகர்கள் ஜெயம் ரவி, நிவேதிதா பெத்துராஜ், ரித்விகா, ஜெயப்பிரகாஷ், வின்சன்ட் அசோகன், அர்ஜுன், ரமேஷ்
   
இசை டி. இமான்
   
ஒளிப்பதிவு எஸ். வெங்கடேஷ்
 
இயக்கம் சக்தி சவுந்தரராஜன்

ஒரு விண்கல் இந்தியாவைத் தாக்க வரும்போது, அந்த விவகாரத்தை இஸ்ரோ கையாளாமல், இந்திய ராணுவம் கையில் எடுப்பது ஏன் என்பதே முதலில் புரியவில்லை. அதுபோக, அணு ஆயுதத்தை விண்வெளியில் மிதந்துகொண்டிருக்கும் ஆய்வு நிறுவனத்தில் இருந்து கைப்பற்ற ஆளே இல்லாமல், சென்னை ரிச்சி சாலையில் ஹேக்கர்களாக இருக்கும் இருவரையும் மேஜிக் செய்யும் கதாநாயகனையும் அழைத்து ஐந்து நாள் பயிற்சி கொடுத்து விண்வெளிக்கு அனுப்புகிறார்கள் என்பதெல்லாம் தலைசுற்றவைக்கும் சமாச்சாரம்.

இது போதாதென்று, விண்வெளியில் சென்றுகொண்டிருக்கும் ராக்கெட்டில் எரிபொருள் தீர்ந்து நிலவில் விழுந்துவிடுகிறது. பிறகு அங்கிருந்து விமானம் புறப்படுவதுபோல ராக்கெட் புறப்பட்டு மற்றொரு விண்வெளி ஆய்வு மையத்தை அடைகிறது. பூமிக்கு மேலே மிதந்துகொண்டிருக்கும் விண்வெளி ஆய்வு மையத்தை அடையச் செல்லும்போது, வெகுதூரத்தில் இருக்கும் நிலவு எப்படி நடுவில் வந்தது என்ற கேள்விக்கெல்லாம் பதிலே இல்லை.

டிக்..டிக்..டிக்..

விண்வெளி அறிவியலுக்கும் இந்தப் படத்தில் காட்டப்படும் விண்வெளி சம்பவங்களுக்கும் துளிகூட சம்பந்தம் கிடையாது. அதுவும் படத்தின் இறுதிக் காட்சியில், 200 டன் எடையுள்ள அணு ஆயுதத்தை தண்ணீர் குடம் தூக்குவதைப் போல ஜெயம் ரவி தூக்கிக்கொண்டு திரிவதெல்லாம், பயங்கரமான காட்சி. தவிர விண்ணில் சுற்றிக்கொண்டிருக்கும் ஆய்வு நிறுவனத்தில் அடியாட்களை வைத்திருப்பது, அங்குள்ள கம்யூட்டர்களை கதாநாயகனின் நண்பர்கள், சர்வசாதாரணமாக ஹேக் செய்வது என திகைக்க வைக்கிறது படம்.

கதாநாயகனாக வரும் ஜெயம் ரவி படம் நெடுக, சோகம் ததும்ப முறைத்துக் கொண்டேயிருக்கிறார். 'என்ன செய்யறது இப்போ?' என்ற பாணி முகம் நிவேதிதா பெத்து ராஜுக்கு. ஜெயப்பிரகாஷ், வின்சென்ட் அசோகன் என பல நல்ல நடிகர்கள் படத்தில் இருக்கிறார்கள்.

கலை இயக்குனரின் பணியும், கிராஃபிக்ஸ் காட்சிகளும் பாராட்டத்தக்கவை. ஆனால், திரைக்கதையில் சொதப்பியிருப்பதால், ஒரு கட்டத்தில்கூட படத்தோடு சீரியஸாக ஒன்ற முடியவில்லை.

ஆனால், காதல், டூயட், தனியான காமெடி டிராக் போன்றவை இல்லாததால் படம் நேர்கோட்டில் செல்கிறது என்பது ஒரு ஆறுதல். 'சினிமாவுக்கு வந்துவிட்டோம். என்ன சொன்னாலும் நம்புவோம்' என்ற எண்ணத்தோடு ஒன்றினால், ஒரு வேளை ரசிக்க முடியும்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44589403

Link to comment
Share on other sites

"ஏய்ய்ய்ய்ய்ய் ஹாலிவுட்டே.... நிலாவில் கால் வைத்த முதல் இந்தியர்... ஜெயம் ரவி!" - 'டிக் டிக் டிக்' விமர்சனம்

 

தமிழின் முதல் ஸோம்பி படம் கொடுத்த சக்தி செளந்தர் ராஜன் அண்ட் கோ எடுத்திருக்கும் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி இந்தப் படம். - 'டிக் டிக் டிக்' விமர்சனம்.

128548_thumb.jpg
 

மிழின் முதல் ஸோம்பி படம் கொடுத்த சக்தி செளந்தர் ராஜன் அண்ட் கோ எடுத்திருக்கும் இந்தியாவின் முதல் ஸ்பேஸ் மூவி இந்த 'டிக் டிக் டிக்.’

அசுர வேகத்தில் பறந்து வரும் பிரமாண்ட விண்கல் ஒன்று வங்காள விரிகுடா அருகே விழப்போவதாகக் கணிக்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படி நடந்தால் தென்னிந்திய வரைபடமே மாறிவிடும் என்கிற அளவுக்கு அபாயம். அதை விண்வெளியில் வைத்தே தடுக்க சக்திவாய்ந்த அணு ஆயுதம் தேவை என்பதை அறிந்து, கள்ள மார்க்கெட்டில் அலசுகிறது இந்திய பாதுகாப்புத்துறை. கடைசியில் ஒரே ஓர் இடத்தில் அந்த ஆயுதம் இருப்பதாகத் தெரிய வர, அதைத் திருடவும் விண்கல்லைத் தடுக்கவும் ஜெயம் ரவி உட்பட ஒரு டீம் கிளம்புகிறது. அந்த ஆயுதம் எங்கே, விண்கல்லைத் தடுத்தார்களா இல்லையா என்பதை அதிக திக்திக் தருணங்கள் இல்லாமல் சொல்கிறது, இந்த டிக் டிக் டிக்.

டிக் டிக் டிக்

 

 

விண்கல்லைத் தடுக்கும் ஹீரோவாக ஜெயம் ரவி. ஆட்டம் பாட்டத்தோடு நடிக்கும் வழக்கமான கேரக்டர் இல்லை. வெளியே இறுக்கமாக, அதே சமயம் மகனுக்காக மட்டுமே இளகும் அப்பா வேடம். நிஜ அப்பா - மகன் ஜோடியே நடித்திருப்பதால் கச்சிதமாகப் பொருந்திப் போகிறார்கள். 'பேராண்மை'க்குப் பிறகு முழுக்க முழுக்க சீரியஸான ரோலில் இப்போதுதான் நடிக்கிறார் ரவி. நியாயமும் செய்திருக்கிறார். ஆனால், மேஜிக் மேன், எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட், ஹேக்கர்... என கேரக்டரை குழப்பியடிக்கிறார்கள். தவிர, அவ்வப்போது இந்திய ஸ்பேஸ் ஷிப்பிலும் சரி, விண்வெளியில் இருக்கும் ஆய்வு மையத்திலும் சரி... விண்வெளி வீரருக்குரிய அத்தனை டெக்னிக்கல் விஷயங்களையும் அசால்ட்டாகக் கையாள்கிறார். படத்தில், நிலாவில் கால் வைத்த முதல் இந்தியர் என்ற பெருமையை ஜெயம் ரவிக்குப் பெற்றுத் தந்திருக்கிறார் இயக்குநர். 

 
 

 

நிவேதா பெத்துராஜ் - ரகளைப் பெண்ணாக வலம் வந்தவருக்கு இதில் சீரியஸ் ஆர்மி வுமன் வேடம். முதல் சில நிமிடங்கள் கேரக்டருக்குள் செட் ஆகாமல் தடுமாறினாலும் செயற்கைக்கோள் விண்ணில் வேகம் பெறப் பெற நிவேதாவும் நடிப்பில் தன் ஸ்கோரை ஏற்றுகிறார். முதல் பாதியின் இறுக்கத் தருணங்களை கொஞ்சமே கொஞ்சம் தளர்த்துகிறது ரமேஷ் திலக் - அர்ஜுன் இணை. ஆனால், அர்ஜுன் வைத்திருக்கும் ஹேக்கிங் கருவியை யாருமே கண்டுபிடிக்காதது எட்டாவது அதிசயம்.

எல்லோருக்கும் சூப்பர் சீனியராக ஜெயப்பிரகாஷ். எப்போதுமே நடிப்பில் வெளுத்து வாங்குபவர் ஏனோ இந்தப் படத்தில் டல்லடிக்கிறார். அவரது நோக்கமும் படத்தில் தெளிவாக இல்லை. வின்சென்ட் அசோகனுக்கும் பெரிய ஸ்கோப் இல்லை. இன்டர்நேஷனல் வில்லனாக வரும் ஆரோன் அஸீஸுக்கு அநியாய ஹைப் ஏற்றி வழக்கமான தமிழ்ப்பட வில்லன் ஆக்கியிருக்கிறார்கள். 

டிக் டிக் டிக்

படத்தின் மிகப்பெரிய ப்ளஸ் சி.ஜி! 'கிராவிட்டி', 'இன்டர்ஸ்டெல்லார்' போன்ற பிரமாண்டங்களே தமிழ் ரசிகர்கள் பார்வைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் நிலையில், கொஞ்சம் ஏமாற்றினாலும் படம் தள்ளாடிவிடும் என்ற நிலைமைதான். ஆனால், கிராஃபிக்ஸ் அவுட்புட் படத்தில் சிறப்பாக வந்திருக்கிறது. வாழ்த்துகள் டீம்! சூப்பரான ஒளிப்பதிவு இல்லாமல் இந்தக் கிராஃபிக்ஸ் வெற்றி பெறாது. எனவே, ஒளிப்பதிவாளர் வெங்கடேஷுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள். கலை இயக்குநர் மூர்த்தியின் பங்களிப்பும் அபாரம். அந்த வகையில் இந்தப் படம் டெக்னிக்கலாகப் புதிய கதவுகளைத் திறந்துவிட்டிருக்கிறது. இரண்டாம் பாதியில் மட்டும் எடிட்டர் பிரதீப் ராகவ் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது.

 
 

 

ஸ்பேஸ் மூவி... ஓகே! ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்... ஓகே! ஆனால், இந்தப் புரொமோஷனும் மாயாஜாலமும் மட்டும் போதாதே ஒரு படத்துக்கு! ஜெயம் ரவி படத்தில் செய்யும் முக்கால்வாசி விஷயங்களுக்கு லாஜிக்கே இல்லை. தமிழ் சினிமா டெக்னிக்கலாக அடுத்தகட்டம் நோக்கிப்போகிறதோ இல்லையோ தமிழ் சினிமாவில் வரும் டெக்கீகள் வேற லெவல் அட்ராசிட்டி செய்கிறார்கள். இந்தப் படத்தில் ஜெயம் ரவி அண்ட் கோ ஹேக் செய்யாத ஒரே விஷயம், விண்கல் மட்டும்தான். எடுங்க... ஆனா, நம்புறமாதிரி படம் எடுங்க!

டிக் டிக் டிக்

இமானின் இசையில் 'குறும்பா' பாடல் படமாக்கப்பட்டவிதம் நன்றாக இருக்கிறது. அதற்காக விண்வெளியில் ஜெயம் ரவி மிதந்தால், நடந்தால், திரும்பினால் எல்லாம் தீம் மியூசிக் போட்டு அதிரடிப்பது நியாயமில்லை சாரே! ஜெயம் ரவியை மிரட்டும் திடீர் வில்லன், மருந்துக்குக்கூட இஸ்ரோ உள்ளிட்ட எந்த விண்வெளி ஆய்வதிகாரிகளையும் காட்டாதது, எதற்கென்றே தெரியாத ஒரு கொலை முயற்சி, பிம்பிலிக்கா பிலாப்பி மேஜிக் வித்தைகள்... என திரைக்கதையில் எக்கச்சக்க ஓட்டைகள். குறிப்பாக, முதல் 30 நிமிடங்கள் அநியாய செயற்கைத்தனம். கொஞ்சம் கதையிலயும் கவனம் செலுத்தியிருக்கலாம் சக்தி ப்ரோ!

'ஸ்பேஸ் மூவி' என்பதில் ஸ்பேஸுக்கு முடிந்த அளவுக்கு நியாயம் செய்திருக்கிறது படக்குழு. ஆனால், ஒரு திரைப்படமாக கனமான கதை இல்லாததால் ஏமாற்றமளிக்கிறது 'டிக்டிக்டிக்’.

https://cinema.vikatan.com/movie-review/128548-tik-tik-tik-movie-review.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.