Jump to content

வடக்கு- கிழக்கில் வீடுகளை அமைக்கும் சீனா – சிறிலங்காவிடம் இந்தியா கவலை


Recommended Posts

வடக்கு- கிழக்கில் வீடுகளை அமைக்கும் சீனா – சிறிலங்காவிடம் இந்தியா கவலை

 

india-sri-lanka-300x200.jpgவடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடுகளை அமைக்கும் ஒப்பந்தம், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்திடம் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்னர் சிறிலங்காவில் வீடுகளை அமைத்திராத சீன நிறுவனதுடன்,, கேள்விப் பத்திரம் எதுவும் கோரப்படாமல், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறித்து சிறிலங்காவின் உயர் மட்டத்துக்கு இந்தியா கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

சீன ரயில்வே பெய்ஜிங் பொறியியல் குழும நிறுவனத்தின் சிறிலங்கா பிரதிநிதியான, யப்கா கட்டுமான நிறுவனத்துக்கு, 40 ஆயிரம் வீடுகளை வடக்கு, கிழக்கில் அமைக்கும் திட்டத்தை செயற்படுத்தும் பொறுப்பை ஒப்படைக்கும், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனின் அமைச்சரவைப் பத்திரத்துக்கு  கடந்த மாதம் அமைச்சரவை அங்கீகாரம் அளித்திருந்தது.

மண் சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 ஆயிரம் வீடுகளை கட்டும், ஒப்பந்தமும், இந்த நிறுவனத்துக்கே வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, வடக்கு கிழக்கில் சீன தொழிலாளர்களின் பரம்பல் அதிகரிக்கக் கூடிய நிலையில், சீன நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் தொடர்பாக இந்திய அரசாங்கம் கேள்விகளை எழுப்பியுள்ளதாக அறியப்படுகிறது.

சிறிலங்காவில் இந்த நிறுவனம் இன்னமும் ஒரு வீட்டைக் கூடக் கட்டியிருக்காத நிலையிலும், குறித்த பிரதேசத்துடன் எந்த பரிச்சயமும் இல்லாத நிலையிலும், அதற்கு வீடுகளை அமைக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளமை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அத்துடன்,  காலநிலை மற்றும் மண் தொடர்பான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாமல் இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளமை குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/06/24/news/31541

Link to comment
Share on other sites

10 hours ago, நவீனன் said:

அத்துடன்,  காலநிலை மற்றும் மண் தொடர்பான ஆய்வுகள் எதுவும் செய்யப்படாமல் இந்த ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளமை குறித்தும் இந்தியா கேள்வி எழுப்பியுள்ளது.

போர் முடிந்த கையோடு இந்தியா 50 000 வீடுகளைக் கட்டிக் கொடுக்க முன்வந்து ஒப்பந்தமும் போட்டது. இதில் 49 999 வீடுகளைக் கட்டி மக்களிடம் கையளித்து விட்டார்கள் - மிச்சம் ஒன்றுதான் பாக்கியாம். ???

வைக்கல் பட்டடை Dog / தானும் தின்னாது, மாட்டையும் தின்ன விடாது.

Link to comment
Share on other sites

வட கிழக்கில் சீனாவின் 40,000 வீட்­டுத்­திட்டம்

 

(நமது நிருபர்)

அர­சாங்க உயர்­மட்­டத்­திடம் அதி­ருப்தி வெளியிட்ட இந்­தியா? 

வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்கு சீனா­வுக்கு அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் இந்­தியா இலங்கை அர­சாங்­கத்தின் உயர் மட்­டத்­தி டம் தனது கரி­ச­னையை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தாக ஆங்­கில வார இறுதிப் பத்­தி­ரி­கை­யொன்று செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அதா­வது இதற்கு முன்னர் வீடு­களை நிர்­மா­ணிப்­பது தொடர்பில் அனு­ப­வ­மில்­லாத சீன நிறு­வ­னத்­துடன் இவ்­வாறு வீடு­களை நிர்­மா­ணிக்க அனு­மதி வழங்­கி­யமை தொடர்­பி­லேயே இந்­தியா கரி­சனை வெளி­யிட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.  

 சீன ரயில்வே பீஜிங் பொறி­யியல் குழும நிறு­வனம் வடக்கு, கிழக்கில் 40 ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்­திற்கு கடந்த மாதம் மீள்­கு­டி­யேற்ற அமைச்சு அனு­ம­தியைப் பெற்­றி­ருந்­தது. இந்த நிறு­வ­னமே மண்­ச­ரிவில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு 10 ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்­காக அனர்த்த முகா­மைத்­துவ அமைச்­சினால் தெரி­வு­செய்­யப்­பட்­டி­ருந்­தது.

எப்­ப­டி­யி­ருப்­பினும் இது­வரை ஒரு வீட்­டைக்­கூட இலங்­கையில் நிர்­மா­ணிக்­காத இந்த சீன நிறு­வ­னத்­திடம் எவ்­வாறு இந்த அனு­ம­தியை வழங்க முடியும் என்­பது குறித்தும் இதன்­மூலம் வடக்கு, கிழக்கில் சீன பணி­யா­ளர்­களின் வருகை அதி­க­ரிக்கும் என்றும் இந்­தியா கரி­சனை வெளி­யிட்­டி­ருப்­ப­தாக ஆங்­கில வார இறு­திப்­பத்­தி­ரிகை செய்தி வெளி­யிட்­டி­ருக்­கின்­றது.

பரந்­து­பட்ட ரீதியில் ஆய்வு செய்­யப்­ப­டா­மலும் குறித்த பகு­தியின் மண் மற்றும் கால­நிலை தொடர்பில் அறிந்­தி­ருக்­காத நிலை­யிலும் இருக்­கின்ற ஒரு நிறு­வ­னத்­திடம் எவ்­வாறு இந்த வீடு­களை நிர்­மா­ணிக்கும் அனு­ம­தியை வழங்க முடியும் எனவும் இந்­தியா கேள்வி எழுப்­பி­யி­ருப்­ப­தாக தெரி­கி­றது.

 இதே­வேளை பதுளை மாவட்­டத்தில் 10 ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்கு குறித்த சீன நிறு­வ­னத்­திற்கு இலங்கை அர­சாங்கம் அனு­மதி வழங்­கி­யுள்ள நிலையில் அதனை ஒரு­கா­ர­ண­மாக கொண்டு வடக்கு, கிழக்கில் இவ்­வாறு 40ஆயிரம் வீடு­களை அமைப்­ப­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

இது இவ்­வா­றி­ருக்க கடந்த மார்ச் மாதம் தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் நான்கு உறுப்­பி­னர்கள் பதுளை மாவட்­டத்­திற்கு விஜயம் செய்து சீன நிறு­வனம் முன்­னெ­டுக்­க­வுள்ள வீட்­டுத்­திட்­டத்தின் மாதி­ரி­வீ­டு­களை பார்­வை­யிட்­டனர். அதனை அடுத்து தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் குறித்­த­வீட்­டுத்­திட்டம் தொடர்பில் திருப்தி அடை­வ­தாக மீள் குடி­யேற்ற அமைச்சர் டி.எம். சுவா­மி­நா­த­னுக்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்தார்.

எனினும் அந்த நேரத்தில் அது சீன நிறு­வ­னத்தின் திட்டம் என தமக்கு அறி­விக்­கப்­ப­ட­வில்லை என இரா. சம்­பந்தன் தற்­போது கூறி­யுள்­ள­தாக ஆங்கில வார இறுதிப்பத்திரிகை தெரிவித்துள்ளது.

 இந்தியா ஏற்கனவே வடக்கு, கிழக்கில் 46 ஆயிரம் வீடுகளையும் மலையகத்தில் 4ஆயிரம் வீடுகளையும் அமைப்பதற்கு நிதி உதவி அளித்ததுடன் மலையகத்தில் மேலும் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு வாக்குறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-25#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.