Jump to content

அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது!-


Recommended Posts

 

அரசியலில் உட்பகை என்பது புற்று நோய், இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது!-

b5aa8ed46c64eb5ac312bb4e4042301e?s=48&d= 

 

C.V.-Wigneswaran.jpgவடமாகாண சபை முதல்வர் வேட்பாளருக்கான போட்டி சுமுகமாக தீர்க்கப்படவேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளதால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வடமாகாண முதலமைச்சர் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் ஆகியோர் உடனடியாக நேரில் சந்தித்துப் பரஸ்பர பேச்சுக்களை நடத்த வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

இது விடிய விடிய இராமாயணம் விடிந்தபின் சீதைக்கு இராமன் என்ன முறை என்று கேட்ட புத்திசாலியின் கதையாக இருக்கிறது.

நெருப்புச் சுடும் என்பதை முட்டாள் கையை வைத்துப் பார்த்துத்தான் தெரிந்து கொள்கிறான். புத்திசாலி நெருப்புச் சுடும் என்பதை மற்றவர்களது பட்டறிவில் இருந்து அறிந்து கொள்கிறான். இதுதான் இருவருக்கும் இடையில் உள்ள வேற்றுமை!

வட மாகாண சபையின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளாராக யாரை நிறுத்துவது என்பது பற்றி இன்னும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோக பூர்வமாக இறுதி முடிவு எதனையும் எடுக்கவில்லை. எனினும் யாரை நிறுத்தக் கூடாது என்பதில் ஒரு முடிவு எட்டப்பட்டுள்ளது.

கடந்த யூன் மாதம் 9 ஆம் நாள் வெளிவந்த காலைக்கதிர் நாளேடு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைச் செயலாளரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ. சுமந்திரன் உடனான நேர்காணல் ஒன்றை வெளியிட்டிருந்தது. இரண்டு பக்கம் நீடித்த அந்த நேர்காணலில் தற்போது முதலமைச்சராக உள்ள விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசின் தலைவராக உள்ள மாவை சேனாதிராசா, இந்த இரண்டு பேரில் அடுத்த முதலமைச்சராக யார் வரக் கூடிய சாத்தியங்கள் உள்ளன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்தாது விட்டால் அவர் தனிக் கட்சி ஆரம்பித்துப் போட்டியிடுவாராயின் அது கூட்டமைப்பின் மீது எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்? என இரண்டு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டன. அந்தக் கேள்விகளும் அதற்கான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன.

காலைக்கதிர் – தற்போது முதலமைச்சராக உள்ள விக்னேஸ்வரன் மற்றும் தமிழரசின் தலைவராக உள்ள மாவை சேனாதிராசா இந்த இரண்டு பேரில் அடுத்த முதலமைச்சராக யார் வரக் கூடிய சாத்தியங்கள் உள்ளன?

சுமந்திரன் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக இனியும் விக்னேஸ்வரனை நிறுத்துவதற்கான சாத்தியம் இல்லை. கூட்டமைப்பு அப்படி நிறுத்தாது என்றும் நான் தெரிவித்திருக்கின்றேன். அதற்கான சாத்தியங்கள் இல்லை என்பது எல்லாருக்கும் தெரிந்த விடயம். ஏனெனில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கூடத் தமிழரசுக் கட்சி கொண்டு வந்திருந்தது. அவர் கட்சியோடு முரண்பட்டு நிற்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆகவே வெளிப்படையாகத் தெரியும் ஒரு விடயம் இருக்கையில் அவருக்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பது தேவையற்றது. அவர் தற்போது தனிக் கட்சி தொடங்கவுள்ளார் எனப் பேசி வருகின்றார். அப்படியான சூழ்நிலையில் அவரை வேட்பாளராக நியமிக்கின்றமையை மானம் மரியாதை உள்ள எந்தக் கட்சியும் சிந்திக்காது.

காலைக்கதிர் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீளவும் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை நிறுத்தாது விட்டால் அவர் தனிக் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவாராயின் அது கூட்டமைப்பின் மீது எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கின்றீர்கள்?

சுமந்திரன் – கூட்டமைப்புக்கான ஆதரவு தொடர்ச்சியாக இருக்கும். கூட்டமைப்புக்கான ஆதரவு குறையப் போவதும் இல்லை. ஆனால் எவர் பிரிந்து சென்றாலும் வாக்குகள் பிரிவதற்கான சாத்தியங்களும் இருக்கின்றன. அவர் அது குறித்துச் சிந்திக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலிந்து அவரைக் கொண்டு வந்து முதலமைச்சர் ஆக்கியமைக்கு ஒரு நோக்கம் இருந்தது. அதனை நாங்கள் செய்திருந்தோம். ஆனால் அவர் கட்சியோடு இணங்கிப் போகாமல் தனது தனிப்பாதையிலே பயணித்துக் கொண்டிருக்கின்றார். அவ்வாறான நிலையில் அடுத்த தடவையும் தனிப்பாதையில் செல்பவரைக் கட்சி திரும்பவும் நியமிக்குமென அவரும் எதிர்பார்க்க முடியாது.

 

vigneshwaran-sambanthan-news.jpg

உச்ச நீதிமன்ற நீதியரசராக பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் சித்தம் போக்குச் சிவன் போக்கு என்றிருந்தவர் விக்னேஸ்வரன். அவரைச் சம்பந்தன் ஐயா அவர்கள்தான் 2013 இல் அரசியலுக்கு இழுத்து வந்தார். முன்பின் தெரியாத ஒருவரை, அரசியலுக்குப் புதியவரை பல்வேறு எதிர்ப்புக்களுக்கு மத்தியில், வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக் கட்சி மத்திய குழுக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனது பெயரை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் அவகள் முன்மொழிந்தார். பேராசிரியர் சிற்றம்பலம் அவர்கள் “வழிப்போக்கர்களையெல்லாம் கட்சியில் சேர்க்கின்றீர்கள்” என்று எச்சரித்தார். இருப்பினும் அவரையும் சமாதானப்படுத்தி அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எதிர்ப்புக்கு மேலும் ஒரு காரணம் இருந்தது. முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராசா ததேகூ இன் சார்பாக போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட முடிவாகி இருந்தது. தமிழரசுக் கட்சியைவிட பங்காளிக் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் கட்சிகள் முதலமைச்சர் பதவிக்கு மாவை சேனாதிராசாவுக்கே ஆதரவு தெரிவித்தன. சம்பந்தன் ஒருவரே விக்னேஸ்வரனைக் கொண்டுவரக் கடும் முயற்சி எடுத்தார். சம்பந்தன் ஐயாவின் வேண்டுகோளுக்கு இணங்க மாவை சேனாதிராசா பெருந்தன்மையோடு விட்டுக் கொடுத்தார்.

ஓய்வூதியமாக மாதம் கிடைக்கும் ரூபா 30,000  பணத்தில்தான் தனது சீவியம் நடப்பதாக விக்னேஸ்வரன், சம்பந்தன் ஐயாவுக்குத் தெரியப்படுத்திய போது அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம் எனச் சொன்னார். சம்பந்தன் ஐயா கேட்டதற்கு இணங்க விக்னேஸ்வரனது தேர்தல் செலவுக்கு கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் பல இலட்சங்களை நேரடியாக அவரது வங்கிக் கணக்குக்கு அனுப்பி வைத்தது!

மக்களுக்கு யார் என்று தெரியாத ஒருவரை தேர்தல் களத்தில் இறக்கி அவரது வெற்றிக்கு இரவு பகல் பாராது, பசி நோக்காது, கண்துஞ்சாது உழைத்தவர்கள் தமிழ் அரசுக் கட்சித் தலைவர்களும் தொண்டர்களும்தான். ஒரு கட்டத்தில் தான் எங்கே இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டு விடுவேனோ என்ற ஐயம் அவருக்கு வந்த போது, இல்லை அப்படியொன்றும் நடவாது தெம்பாக இருங்கள் என்று அவருக்கு ஆறுதல் சொல்லப்பட்டது.

தேர்தல் முடிவு வந்தபோது 1,32,255 விருப்பு வாக்குகளைப் பெற்று விக்னேஸ்வரன் முதலிடத்தில் இருந்தார். இரண்டாவது இடத்துக்கு வந்தவரை விட இவருக்கு 44,385 வாக்குகள் கூடுதலாக கிடைத்திருந்தது.

இன்று நிலைமை பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான கதையாகிப் போய்விட்டது! விக்னேஸ்வரனின் இந்தத் தலைகீழ் மாற்றத்திற்குக் காரணம் 2014 ஆம் அண்டு இறுதிப் பகுதியில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மாநாடே என்கிறார் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் அவர்கள். “கட்சியின் தலைமைப் பதவி மாவை சேனாதிராசா அண்ணன் அவர்களுக்குச் சென்றடைந்தமைதான் இதற்கெல்லாம் காரணம். எதிர்பார்ப்புக் கனவாயிற்றே என்பதைச் சகித்துக் கொள்வது கடினம் தான். ஆனால், அத்தகைய எதிர்பார்ப்பு நியாயமானதொன்றல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விக்னேஸ்வரன் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவிக்கும் ஆசைப்பட்டார் என்பது பொதுச் செயலாளர் துரைராசசிங்கம் அவர்கள் கடந்த ஆண்டு டிசெம்பர் 29 அன்று வெளியிட்ட அறிக்கை மூலமாகவே மற்றவர்களுக்குத் தெரிய வந்தது. இந்தச் செய்தியை விக்னேஸ்வரன் இதுவரை மறுக்கவில்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆசை நல்லது ஆனால் அது பேராசையாக இருக்கக் கூடாது. (https://www.universaltamil.com/செயலாளர்-கிருஸ்ணபிள்ளை/)

தேர்தலில் அமோக வெற்றிபெற்ற பின்னர் விக்னேஸ்வரன் என்ன சொன்னார்? ”நான் யாருடைய தயவாலும் வெற்றி பெறவில்லை, மக்களிடம் இருக்கும் எனது சொந்தச் செல்வாக்கினால் வெற்றி பெற்றேன்” என்று பச்சைப் பொய் சொன்னார்! இதற்குத்தான் சொல்வது நரிக்கு நாட்டாமை கொடுத்தால் கெடைக்கு இரண்டு ஆடு கேட்கும் என்று!

17-08-2015 இல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக ஒன்றுக்கு இரண்டு அறிக்கைகளை கொழும்பில் இருந்தவாறு விக்னேஸ்வரன் வெளியிட்டார். தான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவன் அல்ல என. ஒரு புறம் சொல்லிக் கொண்டு மறுபுறம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் வெளியில் வந்து நேர்மையான அரசியல், கொள்கையில் உறுதி, மக்களுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றக் கூடிய மனோபாவம், தூரநோக்குப் பார்வை, எந்தக் கட்டத்திலும் எந்தக் காரணத்திற்காகவும் விலைபோகாத மனோதிடம் கொண்ட அரசியல்வாதிகளே எமக்குத் தேவைப்படுகின்றார்கள். அத்துடன், தமிழர்களின் தனித்துவத்தை உறுதிப்படுத்தி, அவர்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தி, எமது மக்களுக்கான உரிமையையும் நீதியையும் பெற்றுக்கொள்ளக் கூடியவர்களே எமது மண்ணுக்கும் மக்களுக்குமாக இன்றைய காலத்தில் தேவையாக இருக்கின்றார்கள். எனவே திறமையான, மக்களுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடக் கூடிய, விலைபோகாதவர்களை தெரிவு செய்யுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். இதன் உட்பொருள் தமிழ் அரசுக் கட்சி / தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர் என்பதுதான்.

ஆனால் தமிழ் மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்காமல் சாரி சாரியாக வெளியில் வந்து சரியான தலைமைக்கு வாக்களித்து விக்னேஸ்வரனது முகத்தில் கரி பூசினார்கள். இதன் பின்னரும் அவர் தமிழரசுக் கட்சித் தலைமையோடு தொடர்ந்து முரண்பட்டுக் கொண்டார். மோதல் போக்கை மேற்கொண்டார். இன்றுவரை இந்தப் போக்குத் தொடர்கிறது.

wig-sam-428x288-1.jpe

மாற்றுத் தலைமை {தனக்கான தலைமை) வேண்டும் என்ற தனது ஆசையை நிறைவேற்ற விக்னேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவை என்ற அமைப்பை டிசெம்பர் 19, 2015 அன்று உருவாக்கினார். எண்ணிப் 17 பேரை யாருக்கும் தெரியாமல், மூடிய அறைக்குள் பேச்சு நடத்தி விட்டு, ஏற்கனவே இரகசியமாக திட்டமிட்டதற்கு அமைய எல்லாவற்றையும் முடித்து விட்டு, அரசியல் சார்புமில்லை, யாருக்கும் எதிரானவர்களுமில்லை என்று விக்னேஸ்வரன் தத்துவம் பேசினார்.

இந்த அமைப்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது, சிவில் அமைப்புக்களை கொண்டது என்று விக்னேஸ்வரன் பறை சாற்றினாலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ் போன்ற அரசியல் கட்சிகள் அதில் இடம்பிடித்தன. இதில் வேடிக்கை என்னவென்றால் தமிழ் அரசுக் கட்சிக்கு மட்டும் அழைப்பு இல்லை! அவரது பார்வையில் அல்லது கணிப்பில் தமிழ் அரசுக் கட்சி ஒரு கட்சியே அல்ல!

ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல தமிழ் மக்கள் பேரவை உள்நாட்டிலும் சரி, பன்னாட்டு அரங்கிலும் சரி இன்றுவரை எதனையும் சாதித்தது கிடையாது. வெள்ளை வேட்டி கட்டிக் கொள்ளும் மேட்டுக் குடியினரது அமைப்பாகவே அது இயங்கி வருகிறது. சாதாரண மக்களுக்கும் அந்த அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

வட மாகாண சபைத் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் ஒரு நாள் பார்த்து விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு ஒப்புக்கேனும் போகவில்லை. அவர் மீது யூன், 2017 இல் 21 வட மாகாண சபை உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு போனபோதுதான் தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அவர் இரண்டாவது தடவை தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் கால் பதித்தார்.

விக்னேஸ்வரன் தமிழ் அரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா அவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் முன்னாள் மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராசா அவர்களது இடத்துக்கு இமானுவேல் ஆர்னோல்ட் அவர்களை நியமிப்பது என உடன்பாடு காணப்பட்டது. அதற்கான கடிதத்தை தருமாறு அவசரப்படுத்தியதன் காரணமாக தமிழ் அரசுக் கட்சிப் பொதுச் செயலாளரே வட மாகாண சபைக்குச் சென்று கடிதத்தை நேரில் கொடுத்தார்.

அனந்தி சசிதரன் அவர்களை அமைச்சராக நியமிக்கும் தன விருப்பத்தை விக்னேஸ்வரன் வெளியிட்ட போது அதற்குப் பதில் அளித்த மாவை சேனாதிராசா அனந்தி மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து வருகிறது எனவே அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

ஆனால் விக்னேஸ்வரன் என்ன செய்தார்? எப்படி நடந்து கொண்டார்? நேர்மையாக நடந்து கொண்டாரா? என தமிழ் அரசுக்கட்சி சார்பாக ஆர்னோல்ட் அவர்களைக் கல்வி அமைச்சராக நியமிக்கச் சம்மதம் தெரிவித்து அதற்கான ஒப்புதல் கடிதத்தை அவசர அவசரமாகக் கேட்டுப் பெற்ற பின்னர் தனது அடிவருடி ஈ.பி.ஆர்.எல்.எவ் உறுப்பினர் சர்வேஸ்வரனுக்கு அந்தப் பதவியைக் கொடுத்து தமிழ் அரசுக் கட்சிக்கு இரண்டகம் செய்தார். அத்தோடு நிறுத்தாமல் விக்னேஸ்வரன் அனந்தியை அமைச்சராக்கி அழகு பார்த்தார்.

தமிழ் அரசுக் கட்சி அமைச்சர்கள் குருகுலராசா மற்றும் சத்தியலிங்கம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் வைக்காத போதும் அவர்களைப் பதவி நீக்கம் செய்ய ஆணைக்குழு எந்தப் பரிந்துரையையும் செய்யாத போதும் அவர்கள் இருவரும் தங்கள் பதவியைத் துறக்க வேண்டும் என்று சொல்லி சின்னத்தனமாக ஒற்றைக் காலில் நின்றவர் விக்னேஸ்வரன். சத்தியலிங்கத்தை மாட்ட முடியாதா என்று தான் உருவாக்கிய ஆணைக் குழு உறுப்பினர்களையே கேட்ட ‘உத்தமர்’ விக்னேஸ்வரன்!

2018 இல் நடந்த உள்ளுராட்சி தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த போது ததேகூ க்கு இது நிலநடுக்கத்தை உண்டாக்கியுள்ளது என்று விக்னேஸ்வரன் சொல்லி மகிழ்ந்தார். புளகாங்கிதம் அடைந்தார்.

மொத்தத்தில் விக்னேஸ்வரன் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர். ஏறிய ஏணியை எட்டி உதைத்தவர். அன்னமிட்ட வீட்டுக்குக் கன்னம் வைத்தவர்.

சரி, அரசியலில் விக்னேஸ்வரன் ஒரு இரண்டகர் என்பதை மறந்து விடுவோம். அவரது நிருவாகம் எப்படிப்பட்டது? வட மாகாண சபையை வினைத்திறனோடு ஆட்சி செய்தாரா? அப்படி எதுவும் இல்லை. வினைத்திறனற்ற சபை என்பதே பலரது மதிப்பீடாக இருந்தது.

2015 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதத்தில் யூஎன்டிபியின் கொழும்பு வதிவிடப் பிரதிநிதி சுபினே நந்தி (Subinay Nandi)ன வட மாகாணத்தில் வாழும் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கு Peacebuilding Commission (PBC) என்ற திட்டத்தின் கீழ் அ.டொலர் 150 மில்லியன் (ருபா225 கோடி) நிதியை கொடுக்க முன்வந்தார். அ.டொலர் 150 மில்லியன் என்பது கொஞ்சநஞ்சப் பணம் அல்ல. 2017 ஆம் ஆண்டில் மத்திய அரசு வட மாகாண சபையின் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ஒதுக்கிய நிதி ரூபா 6013.48 மில்லியன் (ருபா 601.34 கோடி) மட்டுமே. வாராது வந்த இந்த நிதியை விக்னேஸ்வரன் ஓடோடிச் சென்று இரு கையாலும் நன்றியோடு பெற்றுக் கொண்டிருப்பார் என்றுதான் பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நடந்தது என்ன? அது ஒரு சோகக் கதை.

விக்னேஸ்வரன் தனது தனிச் செயலாளராக பணியில் இருந்த தனது மருமகன் கார்த்திகேயன் நிமலனை அந்தத் திட்டத்தில் மாதம் அ.டொலர் 5,000 (ரூபா 750,000 இலட்சம்) சம்பளத்தில் ஒரு சிறப்பு ஆலோசகராக யூஎன்டிபி நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த யூஎன்டிபி கொழும்பு வதிவிடப் பிரதிநிதி “யாரை நியமிப்பது அல்லது நியமியாது விடுவது எங்களுடைய பொறுப்பு. அதனைச் செய்ய எங்களுக்கு சட்ட திட்டங்கள் இருக்கிறது” எனத் தெரிவித்தார். மேலும் ” ……குறித்த சிறப்பு ஆலோசகரின் (நிமலன் கார்திகேயன்) அதீத ஆதரவு திரட்டல் காரணமாக ஐ.நா அந்த நியமனம் பற்றி எண்ணிப்பார்ப்பதே சாத்தியம் இல்லாமல் போய்விட்டது (….the excessive canvassing by the proposed Special Advisor made it even more untenable for the UN to rconsider such an appointment”) என நந்தி கடித மூலம் தெரிவித்தார். இன்று அந்த நிதியில் பாதி முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நடத்தும் ஒரு தொண்டு நிறுவனத்துக்குக் கொடுக்கப்பட்டுவிட்டது!

வலிய வந்த சீதேவியை விக்னேஸ்வரன் தனது மருமகனுக்கு பதவி கொடுக்கவில்லை என்ற காரணத்துக்காக உதைத்துத் தள்ளினார். இதன் மூலம் வட மாகாண ஏழை விவசாயிகளது வயிற்றில் அடித்தார். உண்மையில் நரகம் என்று ஒன்றிருந்தால் அங்கே விக்னேஸ்வரனுக்கு சிறப்பிடம் ஒதுக்கப்படும்!

ஒரு எள்முனை அளவு தன்மானம் உள்ள தமிழ் அரசுக் கட்சிக்காரன் விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் பதவிக்கு நியமனம் கொடுக்கச் சம்மதிக்க மாட்டான். ஒரு கட்சிக்குக் கட்டுப்பாடு தேவை. கொள்கை, கோட்பாடு தேவை. இது உலகெங்கும் காணப்படும் நடைமுறையாகும். அவை தேவையில்லை என்பவர்கள் மட்டுமே விக்னேஸ்வரனும் சம்பந்தன் ஐயா அவர்களும் சந்தித்துப் பேச வேண்டும் என்று கேட்பார்கள்! இருவரும் பேசினால் ஈர மண்ணும், சுட்ட மண்ணும் ஒட்டிவிடும் என நினைக்கிறார்கள்!

வட மாகாண சபையின் அடுத்த முதல்வராக யாரை நியமிப்பது என்பதை இலண்டனில் நாலு பேர் கூடிப் பேசி முடிவு எடுக்க முடியாது. அதிலும் புலம் பெயர் தமிழர்கள் சார்பில் நிச்சயம் முடிவு எடுக்க முடியாது. “வி்க்னேஸ்வரனுக்கு ஆலோசனை வழங்கிய சிலரால் விட்ட தவறை உணர்ந்து வடமாகாண சபையின் அபிவிருத்திக்காக உழைப்பேன் என்று உறுதியளித்து வருகின்றார்” என்கிறார் ஒருவர். விக்னேஸ்வரன் எப்போது? எங்கே? உறுதி அளித்தார்? அவர் தனிக்கட்சி தொடங்கிப் போட்டியிடப் போவதாக அல்லவா நாளும் சொல்லிக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை அப்படி அவர் உறுதியளித்திருந்தால் அது கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்தவன் கதை போன்றது!

விக்னேஸ்வரன் தனிக் கட்சி தொடங்குவதற்கான முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளார். அதற்கு முன்னோடியாக வட கிழக்கில் உள்ள இளைஞர்கள் ,யுவதிகளைஅழைத்து அடுத்த மாதம் மாநாடு நடத்த ஏற்பாடு செய்து வருகிறார்.

கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில ஊடகம் ஒன்று “எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரன் தனியாகக் கட்சி ஆரம்பித்து போட்டியிடுவாரா?” என எழுப்பப் பட்ட கேள்விக்கு விக்னேஸ்வரன் பதில் அளித்துள்ளார்.

தனக்கு அடுத்த முறை போட்டியிட வாய்ப்பளிக்கப் படமாட்டாது எனச் சிலர் கூறுகிறார்கள். தம்முடன் இருக்குமாறு பெருமளவு மக்கள் தன்னிடம் கேட்கிறார்கள். முதலாவதாக கட்சி (தமிழ் அரசுக் கட்சி?) எனக்குப் போட்டியிட இடமளிக்கும் வாய்ப்பு உள்ளது. இல்லாவிட்டால், தான் இன்னொரு கட்சியில் இணைந்து போட்டியிட வேண்டியிருக்கும். இல்லையேல், தனிக்கட்சியை ஆரம்பிக்க வேண்டும். (தமிழ்வின்)

விக்னேஸ்வரன் அளித்திருக்கும் பதில்கள் அவர் அரசியலைச் சந்தையில் பேரம் பேசி மாடு வாங்குகிற வியாபாரமாகப் பார்க்கிறார் என்பது தெரிகிறது. தமிழ் அரசுக் கட்சி தான் போட்டியிட வாய்ப்புத் தரவேண்டும். அப்படி வாய்ப்புத் தராவிட்டால் இன்னொரு கட்சியில் இணைந்து போட்டியிடுவேன். இரண்டும் சாத்தியம் இல்லாவிட்டால் தனிக் கட்சி தொடங்கிப் போட்டியிடுவேன்!

இப்படி ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தோணிகளில் பயணம் செய்ய நினைக்கும் அல்லது மனப்போக்குடைய ஒருவரை தமிழ் அரசுக் கட்சி மட்டுமல்ல வேறெந்த மானமுள்ள கட்சியும் தேர்தலில் போட்டிபோட நியமனம் வழங்காது.

ஒற்றுமை வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் அது கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் கட்டியெழுப்பப் படவேண்டும். அரசியல் கட்சி என்பது ஆண்டிகள் மடம் அல்ல. அது மக்களின் தலைவிதியை மாற்றவல்ல அமைப்பு. ஆனால் அரசியலில் உட்பகைக்கு உள்ளான கட்சி அரத்தால் தேய்க்கப்பட்ட இரும்பு போல் அழியும். எள்ளின் பிளப்பைப் போல் சிறியதாக இருந்தாலும் அதனால் கெடுதி மிகுதியாகும். உட்பகை புற்று நோய் போன்றது. இன்று அந்த நோய் விக்னேஸ்வரன் வடிவத்தில் வந்திருக்கிறது.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. (குறள் 890)

மனப்பொருத்தம் இல்லாதவரோடு ஒருவன் ஒரு வீட்டில் கூடி வாழ்வது, ஒரு குடிசையுள் ஒருவன் பாம்போடு வாழ்வது போலாகும் என்கிறார் வள்ளுவர். இங்கே பாம்பு யார் என்பதை யாரும் சொல்லிக் காட்டத் தேவையில்லை.

அடுத்து வரும் வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் அரசுக் கட்சி/தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் போட்டியிடும். முதலமைச்சராக ஒருவரை முன்னிறுத்தும். ஆனால் அது நிச்சயமாக விக்னேஸ்வரன் ஆக இருக்க மாட்டாது. இருக்கக் கூடாது.

 

http://www.newsuthanthiran.com/2018/06/23/அரசியலில்-உட்பகை-என்பது/

Link to comment
Share on other sites

Quote

 உண்மையில் நரகம் என்று ஒன்றிருந்தால் அங்கே விக்னேஸ்வரனுக்கு சிறப்பிடம் ஒதுக்கப்படும்!

 

அரசியல் நேர்மை உள்ள மேற்கத்தையவர்கள் தான் சொன்ன வார்த்தைக்கு மன்னிப்பு கேட்பார்கள். சுமந்திரனிடம் அதனை எதிர்பார்க்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சருக்கு கூட்டணி திரும்பவும் கூப்பிடுமோ என்ற எண்ணம் இருந்தது.இந்த பேட்டியுடன் திடமான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அந்த‌ மூன்று பேரில் நானும் ஒருவ‌ர் என்ர‌ த‌லைவ‌ர் என‌க்குமேல‌ நிப்பார் நான் க‌ட‌சி இட‌த்தை பிடிப்ப‌து உறுதி😂😁🤣....................................
    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.