Jump to content

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம்


Recommended Posts

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள Time நாளிதழின் அட்டைப் படம்

 

அமெரிக்காவின் Zero Tolerance நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல Time நாளிதழ் வெளியிட்டுள்ள அட்டைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவிற்கு அகதிகளாக குடியேறுபவர்களின் குழந்தைகள் எல்லைப்பகுதிகளிலேயே பிரிக்கப்பட்டு தனி முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

மேலும், அகதிகள் அனைவரும் குற்றவாளிகளாகவும் அந்தக் குழந்தைகள் ஆதரவற்றவர்களாகவும் அறிவிக்கப்பட்டனர்.

Zero Tolerance எனும் அடிப்படையில் அமெரிக்கா எடுத்து வரும் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, இம்முடிவை தளர்த்தும் நிலைக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தள்ளப்பட்டார்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அந்நாட்டின் பிரபல Time நாளிதழ் நாளிதழ், ஜூலை 2 பிரதியின் அட்டைப்படத்தை சமீபத்தில் வெளியிட்டது. இது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பிரபல புகைப்படக்கலைஞர் ஜான் மூர் என்பவர் எடுத்த புகைப்படம் விருதுகளைக் குவித்து வருகிறது.

இதில், ஒரு அகதியின் 2 வயது பெண் குழந்தை அழுதுகொண்டு இருக்கும் அந்தப் புகைப்படத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்-ஐ இணைத்து, ”அமெரிக்கா உங்களை அன்புடன் வரவேற்கிறது” என்ற வாசகத்துடன் தலைப்பிட்டு Time நாளிதழ் வெளியிட்டுள்ளது.

 

trump.jpg

 
 

https://www.newsfirst.lk/tamil/2018/06/பரபரப்பை-ஏற்படுத்தியுள்/

Link to comment
Share on other sites

'கண்ணீர் சிந்தும் சிறுமி தாயிடம் இருந்து பிரிக்கப்படவில்லை'

ஆவணங்கள் இல்லாத குடியேறிகள், அமெரிக்கா-மெக்ஸிகோ எல்லையில் கைதுசெய்யப்படும்போது, பெற்றோர் மற்றும் குழந்தைகள் பிரிக்கப்பட்டு வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்படுவது குறித்த டிரம்பின் கொள்கைக்கு சர்வதேச அளவில் பலத்த கண்டனங்கள் எழுப்பப்பட்டன.

இந்த சிறுமியின் படம் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கியதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇந்த சிறுமியின் படம் டிரம்ப் நிர்வாகத்தின் கொள்கைகளை விமர்சனத்துக்கு உள்ளாக்கியது

அமெரிக்கப் புலம்பெயர்ந்த குடியேறிகள் குடும்பங்கள் சந்தித்த பிரச்சனையை வெளிப்படுத்துவதாக இருந்த ஒரு சிறுமியின் புகைப்படம், அனைவருக்கும் நிலைமையின் தீவிரத்தை புரியவைத்தது. இந்த சிறுமியின் அமெரிக்க எல்லையில் தனது தாயிடமிருந்து பிரிக்கப்படவில்லை என சிறுமியின் தந்தை கூறுகிறார்.

ஒரு இளஞ்சிவப்பு ஜாக்கெட் அணிந்த தளிர் நடை பயிலும் ஹோண்டுரா நாட்டு குழந்தையின் புகைப்படத்தை தனது முகப்புப் பக்கத்தில் வெளியிட்ட டைம் பத்திரிகை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அந்த குழந்தையை பார்த்து: "அமெரிக்கா வரவேற்கிறது" என்று கூறுவதுபோல் சித்தரித்திருந்தது.

ஆனால் உண்மையில் அந்த குழந்தை, பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒருவர் இல்லை.

இந்தப் புகைப்படம் டெக்சாஸின் மெக்கலனில் வசிக்கும் ஜான் மூரே என்ற புகைப்படக் கலைஞர் கெட்டி இமேஜஸ் என்ற செய்தி நிறுவனத்திற்காக எடுத்த புகைப்படம் அது.

புலிட்சர் பரிசு வென்ற ஜான் மூரே பிபிசிக்கு அளித்த பேட்டியில், அந்த தாய் தனது குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய பிறகு ரயோ கிராண்டேவை படகு ஒன்றில் கடந்து வந்தார் என்றும், அதன் பிறகு, அவர்கள் தடுத்து வைத்துப்பட்டதாகவும் தெரிவித்தார். அவர்கள் எல்லை ரோந்து படையினரால் கொண்டுச் செல்லப்பட்டதாக மூரே கூறுகிறார்.

யானெலாபடத்தின் காப்புரிமைFACEBOOK Image captionடெனிஸ் வலேரா (இடது), சான்ரா சான்சேஸ் (வலது) மற்றும் சிறுமி யானெலா டினைஸ். இந்த தம்பதிக்கு ஹோந்துராஸில் மேலும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ஏப்ரல் மாதம் அமெரிக்க அரசு அறிமுகப்படுத்திய குடியேறிகளின் குழந்தைகளை பெற்றோரிடம் இருந்து பிரித்து வைக்கும் கொள்கைக்கு எதிராக இந்த புகைப்படம் கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியது.

டெக்சாஸை சேர்ந்த அகதிகள் மற்றும் கல்வி மற்றும் சட்ட சேவைகள் குடியேற்ற மையம் என்ற லாப நோக்கற்ற அமைப்பு, பேஸ்புக் மூலம் லட்சக்கணக்கான மக்களிடம் இருந்து 17 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான நிதி திரட்டுவதற்கு இந்த புகைப்படம் உதவியது.

"அமெரிக்க எல்லையில் குழந்தைகளை பிரிக்கும் அமெரிக்க அரசின் நடவடிக்கையின் சின்னமாக என் மகள் மாறிவிட்டார்" என்று டெனிஸ் வலேரா ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

"அதிபர் டிரம்ப்பின் இதயத்தையும் என் மகளின் புகைப்படம் தொட்டிருக்கலாம்."

"அந்த தருணத்தில் அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை உணர்பவர்களின் இதயத்தை உடைப்பதாக அந்த புகைப்படம் இருக்கிறது," என்று அவர் மேலும் கூறினார்.

 
 

We all know how proud @realDonaldTrump is of his @TIME
magazine covers. Will he be proud of his latest one?

 

அடைக்கலம் கோரி அமெரிக்கா சென்ற தனது மனைவியுடன் மகள் இருப்பதாக கூறும் வலேரா, இருவரும் எல்லை நகரான மெக்கலெனில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்.

ஹோண்டுரா நாட்டின் வெளியுறவு துணை அமைச்சர் நெல்லி ஜெரெஜ் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு வலேரா கூறிய செய்தியை உறுதிப்படுத்துகிறார்.

சான்செஸ் மற்றும் அவரது மகளை தடுத்து நிறுத்திய எல்லை ரோந்துப் பணியாளர் கார்லோஸ் ரூயிஸ், பரிசோதனை செய்வதற்காக குழந்தையை கீழே இறக்கிவிடுமாறு தாயிடம் கூறினார்.

"கீழே இறக்கிவிடப்பட்டதுமே குழந்தை அழுகத் தொடங்கினாள்" என்று கூறிய ரூயிஸ், "பிரச்சனை ஒன்றும் இல்லையே, எல்லாம் சரியாக இருக்கிறதா? குழந்தை சரியாக இருக்கிறாளா?" என்று நான் தனிப்பட்ட முறையில் அந்த பெண்ணிடம் கேட்டேன் என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த தாய், "ஆமாம், அவள் களைப்பாகவும் தாகமாகவும் இருக்கிறாள், இப்போது இரவு 11 மணி" என்று சொன்னார்.

அந்த சிறிய குழந்தை இரண்டு வயது யானெலா டெனிஸ் என்று டெய்லி மெயில் பத்திரிகை தெரிவித்தது.

தன்னிடமோ தங்களின் மற்ற மூன்று குழந்தைகளிடமோ எதுவுமே தெரிவிக்காமல், தனது மனைவி சான்செஸ், மகளை அழைத்துக் கொண்டு, ஹோண்டுரா நகரை விட்டு வெளியேறிவிட்டதாக வலேரா கூறுகிறார்.

Yanela Deniseபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅமெரிக்கா - மெக்சிகோ எல்லையில் தனது தாய் சான்ரா உடன் சிறுமி யானெலா

அமெரிக்காவில் வருவாய் ஈட்ட நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்ற எண்ணத்தில் மனைவி அமெரிக்காவுக்கு சென்றிருக்கலாம் என்று நம்புவதாக வலேரா கூறுகிறார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய வலேரா, "தாயிடம் இருந்து குழந்தையை பிரிக்காமல் அவர்கள் நாடு கடத்தப்பட்டாலும் பரவாயில்லை. அவர்களுக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று சொல்கிறார்.

டெய்லி மெயில் பத்திரிகைக்கு அவர் அளித்த பேட்டியில், எல்லையை கடக்க உதவிய கடத்தல்காரனுக்கு சான்செஸ் $ 6,000 தொகையை கொடுத்திருக்கலாம் என்று கருதுவதாக தெரிவித்திருக்கிறார்.

அந்த பத்திரிகை வெளியிட்ட செய்தியின்படி, வலேராவுக்கு 14, 11 மற்றும் 6 வயதில் மேலும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

"நடப்பதை குழந்தைகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு என்ன நடக்கும் என்று குழந்தைகள் கவலைப்படுகின்றனர். ஆனால் நான் அதை அதிகரிக்க முயற்சி செய்யவில்லை. தாயும், சகோதரியும் இப்போது பாதுகாப்பாக இருப்பது அவர்களுக்கு தெரியும்."

https://www.bbc.com/tamil/global-44582073

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
    • 28 MAR, 2024 | 12:32 PM   அமெரிக்காவின் இல்லினோய்சில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதலில் மருத்துவ உதவியை கோரி அழைப்புகள் வந்தன. பின்னர் காவல்துறையினரும் துணை மருத்துவபிரிவினரும் அழைக்கப்பட்டனர். அந்த பகுதிக்கு காவல்துறையினர் சென்றவேளை மூவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார் என காவல்துறை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வேறு சந்தேகநபர் இருப்பதாக நாங்கள் கருதவில்லை இந்த படுகொலைக்கு என்ன காரணம் என்பதும் இதுவரை தெளிவாக தெரியவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் தகவல் ஏதாவது கிடைக்கின்றதா என அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளின் சிசிடிவி கமராக்களை ஆராயவேண்டும் என காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 22 வயது நபர் வீட்டிற்குள் புகுந்து தாக்குதலில் ஈடுபட்டவேளை  இளம் பெண் ஒருவர் அங்கிருந்து தப்பியோடினார். அந்த பெண்ணின் கையிலும் முகத்திலும் கத்திக்குத்து காயங்கள் காணப்பட்டன அவர் ஆபத்தான நிலையில் காணப்பட்டார். அந்த வழியால் வந்த ஒருவர் அந்த பெண்ணிற்கு உதவினார் என ஷெரீவ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179892
    • நான் குறுக்கே மறுக்க எழுதவில்லை,...நீங்கள் தான் அப்படி எழுதுகிறீர்கள்,    ......உதாரணமாக 8% வாக்குகள் எடுத்திருந்தால். சீமான் கட்சி அங்கீகாரம் பெற்றுயிருக்கும் என்கிறீர்கள்  யார் அங்கீகரிப்பது  தேர்தல் ஆணையம் இல்லையா?? ஆனால்   6.75%   வாக்குகள் பெற்ற கட்சி  சட்டப்படி அங்கீகரிக்க முடியாது   இதையும் நீங்கள் சொல்லுகிறீர்கள். அப்படி நடக்கும் தேர்தல் ஆணையம்   மோடி ஆணையம் என்றும் நீங்கள் தான் சொல்வது    இது குறுக்க மறுக்க ஆக தெரியவில்லையா ??   மற்றும் சீமான்  இந்தியாவையே ஏன் ஆளக்கூடாது??   என்பது தான் எனது கவலை   இந்த சின்ன தமிழ்நாட்டை  ஆங்கிலம் படிக்கும் தமிழர்கள் நிறைந்த தமிழ்நாட்டின்  முதல்வர் ஆக ஏன்  ஆசைப்படுகிறாரோ??  அவரது திறமைக்கு இந்தியா பிரதமர் பதவி தான் சிறந்தது  😀
    • மொஸ்கோ தாக்குதல் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன்: ரஷ்யா புதிய குற்றச்சாட்டு ரஷியாவின் தலைநகர் மொஸ்கோவில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 139 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது. இதற்கிடையே இத்தாக்குதலில் உக்ரைனுக்கு தொடர்பு இருப்பதாக ரஷிய ஜனாதிபதி புதின் குற்றம் சாட்டினார். அதை உக்ரைன் திட்டவட்டமாக மறுத்தது. இந்த நிலையில் மொஸ்கோவில் நடத்தப்பட்ட தாக்குதல் பின்னணியில் உக்ரைன், அமெரிக்கா, இங்கிலாந்து இருப்பதாக ரஷியாவின் உளவுத்துறை தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகோவ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, “மொஸ்கோவில் நடந்த தாக்குதலின் பின்னணியில் அமெரிக்கா, இங்கிலாந்து, உக்ரைன் நாடுகள் இருக்கின்றன. எங்களிடம் உள்ள உண்மை தகவலின் அடிப்படையில் இதை தெரிவிக்கிறோம். இந்த நாடுகள் ஏற்கனவே கடந்த காலங்களில் ரஷியாவிடம் இதுபோன்ற தாக்குதல்களை நடத்தியுள்ளன. மேற்கத்திய நாடுகளும், உக்ரைனும் ரஷியாவில் அதிக பாதிப்பை ஏற்படுத்த விரும்புகின்றன” என்றார். https://thinakkural.lk/article/297406
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.