Jump to content

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்: யாழ்.மாநகரசபை ஊழலில் ஈ.பி.டி.பியை காப்பாற்ற முயற்சிக்கிறாரா தவராசா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோயில்: யாழ்.மாநகரசபை ஊழலில் ஈ.பி.டி.பியை காப்பாற்ற முயற்சிக்கிறாரா தவராசா?

June 22, 2018
23167799_1960035277577412_13056041127277

யாழ் மாநகரசபையின் முன்னாள் நிர்வாகத்தின் ஊழல் மோசடிகளை பாதுகாக்கும் முயற்சியில் வடக்கு எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஈடுபட்டுள்ளாரா என்ற சந்தேகத்தை குழுவிலுள்ள மற்றைய உறுப்பினர்கள் எழுப்பியுள்ளனர். அந்த சந்தேகத்தை வலுப்படுத்துவதை போன்ற சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

ஈ.பி.டி.பியின் முன்னைய நிர்வாகத்தில் யாழ் மாநகரசபை இருந்தபோது பெருமளவு நிதி மோசடிகள் இடம்பெற்றன என்ற குற்றச்சாட்டு இருந்தது. அப்போதைய முதல்வர் யோகேஸ்வரி பற்குணநாதன் உள்ளிட்டவர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினார்கள்.

 

இந்தநிலையில், மாநாகரசபை ஊழல் குற்றச்சாட்டை விசாரிக்க முதலமைச்சரால் இரண்டு விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டன. ஓய்வுபெற்ற நீதிபதிகள் வசந்தசேனன், அரியரட்ணம் தலைமையிலான அந்த குழுவினர் விசாரணைகளை நடத்தி விசாரணை அறிக்கையை முதலமைச்சரிடம் கையளித்தனர்.

அந்த அறிக்கையின் மீது மேல் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரை செய்ய முதலமைச்சர் ஒரு குழுவை அமைத்தார். அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, முதலமைச்சரின் அமைச்சு செயலாளர் விஜயலக்சுமி, உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன், மற்றும் பாலசுப்ரமணியம் ஆகியோரை கொண்ட இந்த குழு கடந்த சில நாட்களில், சில அமர்வுகளை நடத்தியிருந்தது.

இந்த அமர்வுகளில், முன்னைய ஊழல்களை அப்போதைய ஆணையாளர் யோகேஸ்வரி பற்குணநாதன் மீது சுமத்த முடியாது, அந்த சபையே பொறுப்பேற்க வேண்டுமென சி.தவராசா வலியுறுத்தி வருகிறார். இந்த குழுவில் உள்ள அங்கத்தவர்கள் சிலர் தமது விசனத்தை தமிழ்பக்கத்திடம் தெரியப்படுத்தியுள்ளனர். இது முன்னைய ஊழல் மோசடியாளர்களை காப்பாற்றும் முயற்சியாகும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

இதையடுத்து, இந்த விவகாரத்தில் தமிழ்பக்கம் தேடல்களை மேற்கொண்டபோது- ஈ.பி.டி.பியின் இரண்டாம் நிலை தலைவர்கள் மாநகரசபை ஊழல் குற்றச்சாட்டு அறிக்கை தொடர்பான ற்போதைய நிலைப்பாடு குறித்து, முதலமைச்சர் நியமித்த தற்போதைய குழு உறுப்பினர்களுடன் பேசியதை உறுதிசெய்துள்ளது. அதில் தவராசாவுடம் உள்ளடங்கியிருந்ததாக கூறப்படுகிறது.

மாநகரசபை ஊழல் குறித்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வரும் ஈ.பி.டி.பி, பகிரங்கமாக அது குறித்த சவடால் கதைகளை பேசி வருகிறது. அதேநேரம், விசாரணைக்குழு அறிக்கையை ஆராயும் உறுப்பினர்களை இரகசியமாக தொடர்பு கொண்டு, சமரச முயற்சிக்கும் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. இந்த குழுவில் அரச உத்தியோகத்தர்களும் இடம்பெற்றுள்ளதால், அவர்கள் அரசியல் தலையீட்டிற்கு அடி பணிந்து விடும் அபாயமும் உள்ளது.

மாகாணசபைக்குள்ளும் வெளியிலும் எல்லா விடயத்திலும் நீதி நியாயம் பேசும் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா, ஊழல் மோசடியாளர்களை பாதுகாக்க முயற்சிப்பது மிக மோசமான நடவடிக்கையாகும்.

வடக்கில் ஊழல் மோசடிகளிற்கு எதிராக அழுத்தம் கொடுக்க “முன்னோக்கி நகர்வோம்“ என்ற அமைப்பை எதிர்க்கட்சி தலைவர் அண்மையில் ஆரம்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

http://www.pagetamil.com/9206/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தவ(றான)ராசா  ஏற்கெனவே.... ஈ.பி.டி.பீயில் இருந்த ஆள் தானே... ✔️
இப்ப.. என்னத்தை, கண்டு பிடித்து விட்டாராம்? ?
லண்டனிலை   இருந்த,   இந்த ஆளை... ஊருக்கு  "எலக்சன்"  ?️ கேட்க கூப்பிட்டு.... 
நாற  வைத்தது,  டக்ளஸ்  தேவானந்தா தான்.  ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் தாயக பூமி என்பது சொறீலங்காவை அல்ல.. தமிழீழத்தை. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உங்கள் மகிழ்ச்சி நிலைக்க வேண்டும். 
    • Copy Cat அனிருத் க்கு ஒரு keyboard ம் ஒரு  laptop ம் வாய்த்ததுபோல தங்களைத் தாங்களே சிரித்திரன் சுந்தருக்கு ஈடாக கற்பனை செய்துகொள்ளும்  சிலருக்கு laptop  கிடைத்திருக்கிறது.  உயர உயரப் பறந்தாலும்  ஊர்க் குருவி பருந்தாகாது.   
    • போருக்குப் பின் இப்படியொரு வார்த்தையை முதன் முதலாக நீங்கள் குறிப்பிட்டதில் மகிழ்சி அடைகிறோம். 🙂
    • திருடர்கள். திருடர்களிடம் கப்பம் வாங்கியவர்களும் திருடர்கள் தான். அதற்காக தமிழ் மண்ணின் விசேட இயற்கை சொத்துக்களான... சந்தன மரங்களை அழித்ததை தவறில்லை என்று சாதிக்கப்படாது. அதேவேளை சந்தன மரங்கள் கண்டவர்களாலும் களவாடப்படும் நிலை அன்றில்லை... இன்றிருக்குது. அந்த வகையில்.. வீரப்பனின் காட்டிருப்பு.. காட்டு வளம் அதீத திருட்டில் இருந்து தப்பி இருந்தது என்பதும் யதார்த்தம் தான். 
    • ஐந்தாவது நாளாகவும் தொடரும் கல்முனை போராட்டம் : நிர்வாகம் எடுக்கப்போகும் முடிவு என்ன கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன்படி, போராட்டத்தின் ஐந்தாவது நாளான இன்றும் (29) கவனயீர்ப்புப் போராட்டம் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தின் முன்பு இடம்பெற்று வருகிறது. குறித்த பிரதேச செயலகத்தின் முன்பு கடந்த திங்கட்கிழமை (25) பொதுமக்கள் பல்வேறு சுலோகங்களை உள்ளடக்கிய பதாகைகள் தாங்கிய வண்ணம் அமைதி வழியில் ஒன்றுகூடி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். 30 வருட காலமாக அதன் தொடர்ச்சியாக 5வது நாளான இன்றும் பல்வேறு சுலோகங்களை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய 5ம் நாள் போராட்டத்தில் சேனைக்குடியிருப்பு விதாதா தையல் பயிற்சி நிலைய மாணவிகள் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த காலங்களில் உதவி அரசாங்க அதிபர் பிரிவாகச்செயற்பட்டு வந்த இந்த பிரதேச செயலகம் 1988 களில் தனியான பிரதேச செயலகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து 1993ம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் பெற்று தனியான பிரதேச செயலகமாக கடந்த 30 வருட காலமாக இயங்கி வருவதாகவும் ஊடகங்களிடம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். நிர்வாக அடக்குமுறை இருந்த போதிலும், ஒரு சில அரசியல்வாதிகள் தொடக்கம் உயரதிகாரிகள் வரை குறித்த பிரதேச செயலகத்தின் மீது நிர்வாக அடக்குமுறைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதன் காரணமாக பொதுமக்களாகிய தாங்கள் இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்துக்கு எதிராக இடம்பெற்று வரும் சூழ்ச்சிகளையும் நிர்வாக அடக்குமுறைகளைக் கண்டித்தும் திட்டமிடப்பட்டு பிரதேச செயலக உரிமைகளை ஒடுக்கும் நிருவாக அடக்குமுறைகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்க முடியாதெனவும் அரசாங்கம் இன்னும் வாக்குறுதிகளை வழங்கி காலத்தை இழுத்தடிக்காது உடன் தீர்வை தரும் வரை தமது அமைதிப் போராட்டம் தொடரும் எனவும் மேலும் மக்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   https://akkinikkunchu.com/?p=272438
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.