Jump to content

சினிமா செய்திகள்: இடைவெளிக்கு பிறகு வரும் நடிகை அஞ்சலியின் திட்டம் என்ன?


Recommended Posts

சினிமா செய்திகள்: இடைவெளிக்கு பிறகு வரும் நடிகை அஞ்சலியின் திட்டம் என்ன?

முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள்.

இடைவெளிக்கு பிறகு வரும் நடிகை அஞ்சலியின் திட்டம் என்ன?

சில பிரச்சனைகளால் சினிமாவில் இருந்து விலகியிருந்தவர் நடிகை அஞ்சலி. ஒரு ஆண்டுக்கு மேல் சினிமாவில் நடிக்காமல் இருந்த அஞ்சலி மீண்டும் நடிக்க தொடங்கினார். ஆனால் இரண்டாவது இன்னிங்க்ஸில் அவர் நடித்த எந்த படங்களும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. தற்போது ஹீரோயினுக்கு முக்கியதுவம் தரும் படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அதில் ஏற்கனவே லிசா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார்.

சினிமாபடத்தின் காப்புரிமைFACEBOOK/ANJALIOFFICIAL

இந்த நிலையில் புதுமுக இயக்குனர் பிரவீன் பிகாட் இயக்கும் ஹாரர் படத்தில் அஞ்சலி ஹீரோயினாக நடிக்கிறார். முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியதுவம் கொடுத்து அந்த படம் எடுக்கப்படவுள்ளது. ஹாரர் வகையில் உருவாகவிருக்கும் அஞ்சலியின் படத்திற்கு "ஒ" என்று தலைப்பு வைத்துள்ளனர்.

Presentational grey line

எப்போது வெளியாகும் வட சென்னை?

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வட சென்னை படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது. முதலில் மூன்று பாகங்களாக எடுக்க திட்டமிட்டனர். ஆனால் தற்போது இரண்டு பாகங்களாக குறைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. வட சென்னை படத்திற்கான படப்பிடிப்பு இரண்டு வருடங்களுக்கு மேல் நடைப்பெற்று வருகிறது. இதில் முதல் பாகத்துக்கு தேவையான காட்சிகளை படமாக்கி முடித்த வெற்றிமாறன்.

தனுஷ்படத்தின் காப்புரிமைTWITTER.COM/DHANUSHKRAJA

அதை வெளியிடவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார். அதில் முதல்கட்டமாக போஸ்ட் புரெடெக்‌ஷன் வேலைகளில் இறங்கியுள்ளார். அதை தொடர்ந்து ஜூலை 28ம் தேதி ட்ரைலரையும், செப்டம்பர் மாதம் வட சென்னை படத்தையும் வெளியிட வெற்றிமாறன் திட்டமிட்டுள்ளார்.

Presentational grey line

சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா

சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் உருவாகிவரும் படம் சீமராஜா. காமெடியை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்படுகிறது. அதேசமயம் வரலாற்று நிகழ்வுகளையும் சீமராஜா படத்தில் நிகழ்காலத்தோடு தொடர்பு படுத்தியுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் முடியவிருக்கிறது.

சிவகார்த்திகேயன்

சீமராஜா படத்தில் சமந்தா ஹீரோயினாகவும், சூரி காமெடியனாகவும் நடித்துள்ளனர். அதுவும் சூரி 6 பேக் வைத்து நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் ரஜினி முருகன், ரெமோ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ், சீமராஜா படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவரின் காட்சி வரலாற்று நிகழ்வோடு வரும் என்று கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் சீமராஜா படத்தை வினாயகர் சதூர்த்திக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Presentational grey line

அடங்க மறு படத்தில் ஜெயம் ரவி

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் டிக் டிக் டிக் படம் வரும் 22ம் தேதி வெளியாகவிருக்கிறது. இதை தொடர்ந்து அடங்க மறு என்ற படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இந்தப் படத்திற்கான அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. கார்த்திக் தங்கவேல் என்ற புதுமுக இயக்குனர் இயக்கும் அடங்க மறு படத்திற்கான முதல்கட்ட வேலைகள் நடந்து வந்த நிலையில் வரும் 24ம் தேதி முதல் பார்வையை வெளியிடுகின்றனர். இதன் பின் படத்தின் வேலைகளையும் வேகப்படுத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். ஜெயம் ரவி நடிக்கும் அடங்கமறு படம் ஆக்‌ஷன் பார்முலாவில் உருவாகவுள்ளது.

Presentational grey line

துல்கர் சல்மானின் 'வான்'

மலையாளத்தில் இருக்கும் முன்னணி நடிகர்கள் துல்கன் சல்மானும் ஒருவர். இவர் நடிக்கும் எல்லா திரைப்படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. மலையாள சினிமாவில் நடித்துவரும் அதேவேலையில் தமிழிலும் சில படங்களில் நடிக்கிறார் துல்கர். ஏற்கனவே இவர் நடிப்பில் வாயை மூடி பேசவும், ஓகே கண்மணி ஆகிய படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த நிலையில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் துல்கர் சல்மான் நடித்து வருகிறார்.

துல்கர்படத்தின் காப்புரிமைTWITTER

இந்த நிலையில் கார்த்திக் என்ற புது முக இயக்குனரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் துல்கர் சல்மான். காதலை மையமாக வைத்து எடுக்கப்படவிருக்கும் அந்த படத்திற்கு வான் என்று தலைப்பு வைத்துள்ளனர். கெனன்யா நிறுவனம் வான் படத்தை தயாரிக்கவுள்ளனர். நடிகர் மற்றும் படத்தின் தலைப்பு பற்றிய விவரங்கள் வெளியான நிலையில் விரைவில் மற்ற நடிகர்கள் பற்றி அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.

https://www.bbc.com/tamil/arts-and-culture-44507416

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொடர்ச்சியாக ஒரு மாத காலமாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு குறைவடைந்து வருகின்றதை அவதானிக்க முடிகின்றது. தினசரி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ நாணயமாற்று விகித அறிவித்தலின் படி, செவ்வாய்க்கிழமை (19) தரவுகளின் பிரகாரம், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் கொள்முதல் பெறுமதி ரூ.299.29 ஆகக் காணப்பட்டது. இந்தப் பெறுமதி ஒரு மாத காலப்பகுதிக்கு முன்னர் சுமார் 322-325 ரூபாய்களுக்கு இடைப்பட்டதாகக் காணப்பட்டது. இவ்வாறு ரூபாயின் மதிப்பு தொடர்ந்தும் உயர்வடைவது தொடர்பில் போது மக்கள் மத்தியில் தெளிவற்ற ஒரு மனநிலை காணப்படுவது புலனாகின்றது. பொதுவில் சந்தையில் மிகையாகக் காணப்படும் டொலர்களை இலங்கை மத்திய வங்கி கொள்வனவு செய்து, தனது இருப்பை அதிகரித்துக் கொள்ளும். அத்துடன், நாட்டில் இறக்குமதி வீழ்ச்சி ஏற்பட்டு, டொலர்களுக்கான கேள்வி குறைவடைந்திருக்கும். சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்படுவதால், நாட்டினுள் டொலர் வரத்து அதிகரித்திருக்கும் போன்ற பல்வேறு காரணிகள் முன்வைக்கப்படலாம். எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பில் பரவலாகப் பேசப்படும் நிலையில், அதை இலக்காகக் கொண்டு இந்த ரூபாய் மதிப்பு உயர்வு நடவடிக்கை திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்றதா என்ற எண்ணமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக, அண்மைய வாரங்களில் பரவலாகப் பேசப்பட்ட, மத்திய வங்கி ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பான விடயத்தைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் அடங்கலாக, மத்திய வங்கியின் செயற்பாடுகள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையில் ஒருவிதமான பின்னடைவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அந்த பிரச்சினையைச் சீர் செய்யும் வகையில், அரசாங்கத்துக்கு அதன் பிரபல்யத் தன்மையை அதிகரிக்கச் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் போது மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய ஒரு கட்டாயத்திலுள்ளார். குறிப்பாக தேர்தல் காலம் என்பதால், அடுத்தமாதம் வரவுள்ள பண்டிகைகளை போது மக்கள் கொண்டாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில், இந்த நகர்வு மேற்கொள்ளப்படுகின்றதா அல்லது இந்த பெறுமதி உயர்வு உண்மையில் நிலைபேறானதா? தேர்தலின் பின்னர் கடந்த காலங்களைப் போன்று, டொலரின் பெறுமதி சடுதியாக 400 ரூபாயை தொட்டுவிடுமா போன்ற கேள்விகளும் இல்லாமல் இல்லை. அத்துடன், வெளிநாட்டுக் கடன்கள் மீளச் செலுத்துவது இன்னமும் ஆரம்பிக்கப்படாத நிலையில், அவற்றை செலுத்த ஆரம்பிக்கையில், இந்தப் பெறுமதிக்கு என்ன நடக்கும் போன்ற தெளிவுபடுத்தல்களை மக்களுக்கு வழங்க வேண்டிய மத்திய வங்கியின் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அத்துடன், ஜனவரி மாதம் முதல் அதிகரிக்கப்பட்ட பெறுமதி சேர் வரி மீண்டும் அடுத்த மாதம் முதல் 15 வீதமாக குறைக்கப்படவுள்ளமை தொடர்பிலும் அரசாங்க தரப்பிலிருந்து தகவல்கள் வெளியிடப்படுகின்றன. இவ்வாறான தீர்மானம் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெளிவுபடுத்த வேண்டியது கட்டாயமானதாகும். தேர்தல் கண்துடைப்பாக இருந்துவிடக்கூடாது, மக்கள் முன்னரை விட தற்போது அதிகம் தெளிந்துள்ளமையை அரசியல்வாதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.     https://www.tamilmirror.lk/ஆசிரியர்-தலையங்கம்/ரபயன-மதபப-வணடமனற-கறககபபடகனறத/385-334940
    • இந்த திரியில் சரியாக ஒரு கிழமைக்கு பின் வந்து கருத்து எழுதுகிறேன்.
    • நான் எழுதுவது அல்லது எழுத போவதாக சொல்வது 4ம் தர சரோஜாதேவி கதைகளோ, படங்களோ அல்லவே அண்ணை? ஆகவே அனுமதி தேவையில்லை. ஊக்குவிப்புக்கு நன்றி🤣 ஓம்….இன்னும் கனக்க இருக்கு….அண்ணனின் டகால்டி வேலைகளை …… விடிய விடிய பேசிக்கொண்டே இருக்கலாம்🤣
    • பதவிக்கு வரும் முன்னே இவ்வளவு தில்லாலங்கிடி - இவரை நம்பி ஆற்றையும், மலையையும் கொடுத்தால்? போன தடவை தேர்தல் பத்திரத்தில் எத்தனை குளறுபடி? பதவிக்கு வர முன்னம் கருணாநிதி கூட இப்படித்தான் இருந்தார். இதை மக்கள் புரிந்தபடியால்தான் 2016 இல் இருந்து சத்துணவு முட்டையை மட்டும் கொடுக்கிறார்கள். நீங்கள் இவரை லிஸ்டில் சேர்கிறீர்களோ இல்லையோ அதில் ஒரு பலனுமில்லை. தமிழக மக்கள் இவரை அந்த லிஸ்டில் சேர்த்து கனகாலம். அடுத்த தேர்தலில் விஜை முதுகில் சவாரி செய்ய ஆசைபடுகிறார். பார்ப்போம்.  வட்டுக்கோட்டை!🤣
    • செந்தமிழன் சீமான் அண்ணா இம்முறை போட்டியிட்ட மக்களவைத் தொகுதி எது?  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.