Jump to content

வடக்கு, கிழக்கு மக்கள் தெற்குடன் இணைந்து வாழ விரும்புகின்றனரா?


Recommended Posts

வடக்கு, கிழக்கு மக்கள் தெற்குடன் இணைந்து வாழ விரும்புகின்றனரா?

City-Page-03-BlackGMGPage1Image0010-e8244a56dd1005b14914b0186047f616ef5deff8.jpg

 

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

உட­ன­டி­யாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு அவ­சியம் என்­கிறார் ஸ்ரீ­தரன் எம்.பி.

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பையும் தமி­ழர்­க­ளையும் பயன்­ப­டுத்தி இந்த அர­சாங்­கமும் தமது இருப்­பினை தக்­க­வைக்கும் சுய­நல போக்­கினை மட்­டுமே கையாண்டு வரு­கின்­றது. நாம் கேட்கும் தீர்­வுகள் குறித்து சிந்­திக்க அர­சாங்கம் தய­ாராக இல்லை. இந்த நிலைமை தொடர்ந்தால் மீண்டும் தமி­ழர்கள் போரா­ட­வேண்­டிய நிலைமை உரு­வாகும் என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீதரன் தெரி­வித்தார்.  

வடக்கு கிழக்கு மக்கள் தெற்கின் சிங்­கள மக்­க­ளுடன் இணைந்து ஒரே நாட்­டுக்குள் வாழ விரும்­பு­கின்­ற­னரா என்­றதை அறிய உட­ன­டி­யாக சர்­வ­ஜன வாக்­கெ­டுப்பு ஒன்­றினை நடத்­துங்கள் எனவும் அவர் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற 1990 சுவ­செ­ரிய மன்றம் சட்­ட­மூல இரண்டாம் மதிப்­பீடு மீதான விவா­தத்தின் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

  அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

இன்று நாடு முழு­வதும் தபால் சங்க ஊழி­யர்கள் வேலை­நி­றுத்த போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். இந்த நாட்டில் பல்­வே­று­பட்ட தபால் நிலை­யங்­க­ளுக்­கூ­டாக உத­வி­களை பெற்­றுக்­கொள்ளும் மக்கள் இன்று அந்த உத­வி­களை பெற முடி­யாது தவித்­துக்­கொண்­டுள்­ளனர். இன்­றுடன் 12 நாட்­களை கடந்தும் இந்த போராட்­டத்தை நடத்தி வரு­கின்­றனர். இதனால் மாதாந்த உதவிப் பணங்­களை பெரும் மக்கள் அதனை பெற்­றுக்­கொள்ள முடி­யாது தவித்து நிற்­கின்­றனர். இவ்­வா­றான நிலை­மை­க­ளுக்கு ஒரு முடிவை எட்ட முடி­யாது இருப்­பது பார­தூ­ர­மான விட­ய­மாகும். வடக்கு கிழக்கு மக்கள் யுத்­தத்தில் பாதிக்­கப்­பட்­ட­வர்கள். அவர்கள் இந்த மாதாந்த உத­வி­களை பெற்றே வாழ்ந்து வரு­கின்­றனர். ஆகவே அதனைக் கூட பெற்­றுக்­கொள்ள முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஜன­நா­யக ரீதி­யாக ஒரு போராட்டம் நடை­பெ­று­கின்­றது என்றால் அதனை தீர்வு காண அர­சாங்கம் முன்­வந்­தி­ருக்க வேண்டும். ஆனால் அதனை கையாள முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. ஆகவே அத்­தி­யா­வ­சி­ய­மான இந்த பிரச்­சி­னைக்கு உடன் தீர்­வினை காண வேண்டும்.

மேலும் இந்த நாட்டில் மக்­க­ளுக்கு பல்­வேறு பிரச்­சி­னைகள் உள்­ளன. எனினும் எமது மக்­க­ளுக்­கான மிகப்­பெ­ரிய பிரச்­சினை காணாமால் ஆக்­கப்­பட்டோர் பிரச்­சி­னை­யாகும். இன்று கிட்­டத்­தட்ட 500 நாட்­களை எட்­ட­வுள்ள இந்த போராட்டம் மிகப்­பெ­ரிய தாக்­கத்தை செலுத்­தி­யுள்­ளது. வடக்கு கிழக்கில் மக்கள் தொடர்ச்­சி­யாக இந்த போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர் . இந்த நாட்டில் இடம்­பெற்ற யுத்­தத்தின் மூல­மாக பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர், காணமால் போயுள்­ளனர். ஆனால் இந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண இந்த அர­சாங்கம் எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளையும் முன்­னெ­டுக்­க­வில்லை. 500 நாட்கள் இவ்­வாறு போரா­டு­வது என்­பது சாதா­ராண விடயம் அல்ல. இது குறித்து சர்­வ­தேச மன்­னிப்பு சபையும் கூட இலங்­கையின் கடப்­பா­டுகள் குறித்து விமர்­சித்­தி­ருந்­தது. இலங்கை பொறுப்­புக்­களை சரி­யாக நிறை­வேற்­ற­வில்லை என குறிப்­பிட்­டுள்­ளது. நேர்­மை­யான ஒரு பாதையில் அர­சாங்கம் பய­ணிக்­க­வில்லை என்­பதை அர­சாங்­கமும் வெளிப்­ப­டுத்தி வரு­கின்­றனர். இரா­ணு­வத்தை காட்­டிக்­கொ­டுக்­கப்­போ­வ­தில்லை என ஜனா­தி­பதி கூறு­கின்றார், பிர­தமர் வேறு கருத்­தினை கூறு­கின்றார், அமைச்­சர்கள் வேறு ஒரு கருத்­தினை கூறு­கின்­றனர். ஆனால் இழந்­த­வர்கள் இன்றும் அக­தி­க­ளாக அவ­திப்­பட்டு வாழ்­கின்­றனர். தமது போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

அதேபோல் காணாமல் ஆக்­கப்­பட்டோர் குறித்து 351 நபர்­களின் விப­ரங்­களை காணாமால் போனோர் அமைப்பு வெளி­யிட்­டுள்­ளது. பல்­வேறு ஆய்­வு­களின் அடிப்­ப­டையில் அவர்கள் இந்த ஆதா­ரங்­களை வெளி­யிட்­டுள்­ளனர். அதேபோல் விடு­தலைப் புலி­களின் சில முக்­கிய உறுப்­பி­னர்கள் குடும்­பத்­துடன் சர­ண­டைந்த புகைப்­ப­டங்கள் இன்று வெளி­வந்­துள்­ளன. ஆனால் இவை எது­வுமே நடை­பெ­றாத வகையில் தான் நகர்­கின்­றது. இலங்­கையில் தமிழர் இனம் மிகக் கொடூ­ர­மான வகையில் கொன்­றொ­ழிக்­க­பட்­டனர் . ஜனா­தி­பதி கிளி­நொச்­சியில் நான்­கா­யிரம் குழந்­தை­க­ளுக்கு விழா எடுக்க வந்தார், ஆனால் நான்கு வயது குழந்­தையின் மன­நி­லையை புரிந்­து­கொள்ள முடி­யாத ஒரு தலை­வ­ராக உள்ளார். ஆகவே இந்த நாட்டில் நீதி நியாயம் எவ்­வாறு கிடைக்­கப்­பெ­று­கின்­றது, யாருக்கு நீதி கிடைக்­கப்­போ­கின்­றது, நாட்டின் உண்­மை­யான பிரச்­சி­னைக்கு முகங்­கொ­டுக்கும் தமிழ் தேசி­யத்தின் அடை­யா­ளத்தை அழிக்கும் நட­வ­டிக்­கையே இடம்­பெற்று வரு­கின்­றது. திட்­ட­மிட்ட இன அழிப்பு, திட்­ட­மிட்ட நில அப­க­ரிப்பு என்ற இரண்­டுமே இடம்­பெற்று வரு­கின்­றன.

முன்னாள் ஆட்­சியில் கோத்­த­பாய ராஜபக் ஷவின் ஊடாக சிங்­கள ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்­றன, எனினும் சர்­வே­தேச அழுத்தம் கார­ண­மாக அது தடுக்­கப்­பட்­டது. இன்று இந்த கூட்­டாட்­சியில் மீண்டும் சிங்­கள குடி­யேற்­றங்கள் கட்­சி­த­மாக நடத்­தப்­பட்டு வரு­கின்­றன. தமிழர் இன பரம்­பலை திட்­ட­மிட்டு அழிக்­கின்­றனர். அம்­பாறை, வவு­னியா , மன்னார், கிளி­நொச்சி என அனைத்து பகு­தி­யிலும் மாற்று இனக் குடி­யேற்­றங்கள் இடம்­பெற்று வரு­கின்­றன. தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு இன பிரச்­சி­னைக்­கான தீர்வு ஒன்றை அடைய அர­சாங்­கத்­துக்கு பல தட­வைகள் ஒத்­து­ழைப்­பு­களை வழங்­கி­யுள்­ளது. ஆனால் அர­சாங்கம் எங்­களை ஏமா­ளி­க­ளாக மாற்றி அர­சாங்­கத்தின் சுய­நல செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கின்­றனர். அர­சியல் அமைப்பு என்ற பேச்­சுக்கே இன்று இட­மில்லை. ஆகவே இவ்­வா­றான நிலையில் தீர்வு எங்­கி­ருந்து வரப்­போ­கின்­றது. தமி­ழர்­களை பயன்­ப­டுத்தி அர­சாங்கம் தங்­களை தக்­க­வைத்துக் கொள்­கின்­றது.

அன்றும் தமிழ் மக்கள் இனப்­ப­டு­கொலை செய்­யப்­பட்­டனர், இன்று எஞ்­சி­யுள்ள மக்­க­ளையும் கொடு­மைப்­ப­டுத்தும் நட­வ­டிக்­கை­களை இந்த அர­சாங்கம் முன்­னெ­டுத்து வரு­கின்­றது. வெறு­மனே சட்­டங்­களை கொண்­டு­வ­ரு­வதன் மூலமோ, வாக்­கு­று­தி­களை கொடுத்தோ தீர்­வுகள் கிடைக்­கப்­போ­வ­தில்லை. தீர்­வு­களை உட­ன­டி­யாக பெற்­றுத்­தர வேண்டும். தமி­ழர்கள் உறு­தி­யான தீர்­வையே எதிர்­பார்க்­கின்றார். அவ்­வா­றான ஒரு தீர்வு கிடைக்­க­வில்லை என்றால் மீண்டும் தமிழர் தமது உரி­மைக்­காக போரா­ட­வேண்­டிய நிலைமை உரு­வாகும். காணி­களை அப­க­ரிக்­கின்­றனர், இரா­ணு­வங்­களை குவிக்­கின்­றனர். முழுமையாக இராணுவ ஆட்சியை வடக்கில் நிகழ்த்துகின்றனர். காணமால் ஆக்கப்பட்ட விடயத்தில் அரசாங்கம் மௌனம் காக்கின்றனர். நீதி நியாயம் நிலைநாட்டப்படவேண்டும் என்றால் உடனடியாக அரசியல் தீர்வு ஒன்றினை எட்ட வேண்டும். வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் தெற்கில் வாழும் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியுமா என்பதை ஆராய பகிரங்க வாக்கெடுப்பிற்கு அரசாங்கம் தயாராக வேண்டும். உடனடியாக பொதுசன வாக்கெடுப்பை அரசாங்கம் நடத்த வேண்டும். யுத்தத்தால் பதிக்கப்பட்ட மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழ முடியுமா இல்லையா என்பதை பொதுசன வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-22#page-3

Link to comment
Share on other sites

பல வருடங்களுக்கு  முன்  பேசப்பட வேண்டிய பேச்சை இப்போ பேசுகின்றார் சிறிதரன். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் .........! ஆண் : உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு உயிரே உயிரே என்னை உன்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு நிலவே நிலவே இந்த விண்ணோடு கலந்துவிடு காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு ஆண் : என் சுவாசக் காற்று வரும்பாதை பாா்த்து உயிா்தாங்கி நானிருப்பேன் மலா்கொண்ட பெண்மை வாராமல் போனால் மலைமீது தீக்குளிப்பேன் என் உயிா் போகும் போனாலும் துயாில்லை கண்ணே அதற்காகவா பாடினேன் வரும் எதிா்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே அதற்காகத்தான் வாடினேன் முதலா முடிவா அதை உன் கையில் கொடுத்துவிட்டேன் ஆண் : காதல் இருந்தால் எந்தன் கண்ணோடு கலந்துவிடு காலம் தடுத்தால் என்னை மண்ணோடு கலந்துவிடு உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு நினைவே நினைவே எந்தன் நெஞ்சோடு கலந்துவிடு பெண் : ஓா் பாா்வை பாா்த்தே உயிா்தந்த பெண்மை வாராமல் போய்விடுமா ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன் கண்ணாளன் முகம் பாா்க்கவே என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன் கண்ணா உன் குரல் கேட்கவே அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே பெண் : மழைபோல் மழைபோல் வந்து மண்ணோடு விழுந்துவிட்டேன் மனம்போல் மனம்போல் உந்தன் ஊனோடு உறைந்துவிட்டேன் உயிரே உயிரே இன்று உன்னோடு கலந்துவிட்டேன் நினைவே நினைவே உந்தன் நெஞ்சோடு நிறைந்துவிட்டேன் .......! --- உயிரே உயிரே வந்து என்னோடு கலந்துவிடு ---
    • ஏன் பழனிச்சாமி வாக்குகளைப் பிரிக்கிறார் என்றும் சொல்லலாம்தானே. இந்த முறை நிரந்த சின்னம் கிடைக்குமளவுக்கு வாக்கு சதவீதம் இருக்கும். யாழ்கள திமுக ஆதரவாளர்களுக்கு இது எரிச்சலாக இருக்கும். எதற்கும்  பான் ஓன்று வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
    • உன்மேலே கொண்ட ஆசை .......!  😍
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் புல‌வ‌ர் அண்ணா🙏🥰.................................................................
    • ம்....ம்...ம் சொந்த மண்ணினத்தவெனையே பாகுபாடு பார்க்கும் தமிழ்நாட்டில்  இலங்கை பொண்ணு வாக்களிச்சு எத சாதிக்கப்போகுதாம்? 🤣 கவனம். உயிராபத்து நிறைந்த விடயம். 😎
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.