Jump to content

தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்


Recommended Posts

மிஸ்டர் கழுகு: தினகரன் கோட்டையில் விரிசல்... தனி ரூட்டில் தங்க தமிழ்ச்செல்வன்

 
 

 

p44a_1529451713.jpg‘‘தீர்ப்பு வந்த தினத்தில் பெரிய வாக்குவாதம் ஆகிவிட்டது’’ என்றபடி வந்து அமர்ந்தார் கழுகார். வெயிலில் களைப்புடன் வந்து அமர்ந்த அவருக்கு இளநீர் கொடுத்துவிட்டு, ‘‘யாருக்கும் யாருக்கும் வாக்குவாதம்?’’ என்று கேட்டோம்.

‘‘தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும்தான். 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில் இரண்டு நீதிபதிகளும் முரண்பட்ட தீர்ப்பு கொடுத்ததும், ‘இந்த வழக்கிலிருந்தே நான் வாபஸ் பெறப்போகிறேன்’ என்று ஆண்டிபட்டி எம்.எல்.ஏ-வான தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, தொகுதி மக்களிடம் கருத்து கேட்கப் போனார். தினகரன் சம்மதத்துடன் இவை எல்லாவற்றையும் அவர்  செய்வதாக அந்த அணியில் சொல்கிறார்கள். ஆனால், தீர்ப்பு வந்த அன்று தினகரன் வீட்டில் வைத்து இருவருக்கும் வாக்குவாதம் ஆகிவிட்டது.’’

‘‘ஏன்?’’

‘‘முரண்பட்ட தீர்ப்பு வந்து, மூன்றாவது நீதிபதிக்கு விவகாரம் போனதும், தினகரன் பக்கம் இருக்கும் தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் நொந்துபோய் விட்டார்கள். ‘இன்னும் எத்தனை மாதங்களுக்கு இந்த விவகாரம் இழுத்துக்கொண்டு போகுமோ’ என அவர்கள் புலம்ப ஆரம்பித்துவிட்டனர். ஆனால், அப்போதுகூட தினகரன் எந்த சலனமும் இல்லாமல் இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார். இது அனைவருக்கும் ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது எனக் கடந்த முறையே நான் சொல்லியிருந்தேன்.’’

p44_1529451733.jpg

‘‘ஆமாம். நீர் சொன்னதைக் கடந்த இதழில் எழுதியிருந்தோம்.’’

‘‘தினகரனின் இந்த ரியாக்‌ஷனால், தங்க தமிழ்ச்செல்வன் கடுப்பாகிவிட்டாராம். ‘வழக்கு இழுத்துக்கொண்டே போவதில் இவருக்குத் துளிகூட வருத்தம் இல்லை. தகுதிநீக்கம் ரத்து செய்யப்பட்டு நமக்கெல்லாம் பதவி வந்துவிடக் கூடாது என்பதைத்தான் தினகரன் எதிர்பார்க்கிறார். அப்படிப் பதவி வந்தால், நம்மில் பலரும் எடப்பாடி பக்கம் போய்விடுவோம் என அவர் பயப்படுகிறார்’ என்று தங்க தமிழ்ச்செல்வன் கமென்ட் அடித்தார். தீர்ப்பு குறித்து நிருபர்களிடம் தினகரன் பேசியபோது, ‘18 பேரும் எங்களுடன்தான் இருக்கிறார்கள்’ என்பதைத்தான் திரும்பத் திரும்ப வலியுறுத்தினாரே தவிர, தீர்ப்பை அதிகம் கண்டிக்கவில்லை. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வன் நிருபர்களைச் சந்தித்து, ‘நான் வழக்கிலிருந்து வாபஸ் பெறப் போகிறேன்’ என்று அறிவித்தார். அது மட்டுமல்ல... தீர்ப்புக்கு முதல் நாள்தான் ‘தீர்ப்பு எப்படி வந்தாலும் நான் மேல் முறையீடு செய்ய மாட்டேன்’ என்று வேறு அவர் சொல்லியிருந்தார். இதெல்லாம் தினகரனை எரிச்சலில் ஆழ்த்தியது. இதைத் தொடர்ந்து தங்க தமிழ்ச்செல்வனைத் தன் வீட்டுக்குக் கூப்பிட்டார் தினகரன்.’’

‘‘அப்போதுதான் வாக்குவாதம் ஏற்பட்டதா?’’

‘‘ஆமாம். ‘நான் ஒன்று சொன்னால், நீங்கள் வேறு ஏதாவது பேசி தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறீர்கள். இப்படிப் பேசினால் என்ன அர்த்தம்? எங்கள் அணியில் பிரச்னை இல்லை என்று நான்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் இப்படிப் பேசினால் நான் என்ன செய்வது? தீர்ப்பை விமர்சித்துப் பேசினால் பிரச்னையாகும், ஜெயிலுக்குப் போக வேண்டியிருக்கும் என்பது தெரியாதா?’ என்று தினகரன் கோபமாகக் கேட்டாராம். ‘நீங்கள் விமர்சனம் செய்திருந்தால், நான் ஏன் பேசப்போகிறேன்?’ என்று தங்க தமிழ்ச்செல்வன் பதிலுக்குக் கேட்டாராம். ‘வழக்கை வாபஸ் வாங்குகிறேன் என ஏன் பேசினீர்கள்?’ என்று தினகரன் கேட்க, உடனே தங்க தமிழ்ச்செல்வன், ‘நீங்கள் ஆர்.கே.நகர்... ஆர்.கே.நகர் என உங்கள் தொகுதிக்காக எப்போதும் பேசுகிறீர்கள். எனக்கு ஓட்டு போட்ட ஆண்டிபட்டி மக்களுக்காக நான் பேசக்கூடாதா?’ என்று கேட்டிருக்கிறார். ‘நீங்க இப்போ அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ இல்லை. உங்களைத் தகுதிநீக்கம் செய்துட்டாங்க என்பதை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசுங்க’ என்று குத்தலாகச் சொல்லியிருக்கிறார் தினகரன்.’’

p44aaa_1529451770.jpg

‘‘அதற்கு தங்க தமிழ்ச்செல்வன் என்ன சொன்னாராம்?’’

‘‘இரண்டு ஃப்ளாஷ்பேக் சம்பவங்களைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார் அவர். ‘ஆரம்பத்தில் உங்கள் பக்கம் 20 எம்.எல்.ஏ-க்கள் இருந்தோம். முதல்வர் எடப்பாடிமீது நம்பிக்கை இல்லை என கவர்னரிடம் கடிதம் கொடுக்கலாம் என்று நீங்கள் சொன்னபோது, தோப்பு வெங்கடாசலம் விலகிப் போனார். ‘இப்படி ஒரு கடிதம் கொடுத்தால் எம்.எல்.ஏ பதவி போய்விடும்’ என்று எங்கள் எல்லோரையும் எச்சரித்தார். பதவி போய்விடும் என்று தெரிந்தேதான் நாங்கள் அந்தக் கடிதத்தைக் கொடுத்தோம்’ என்று சத்தமாக தினகரனைப் பார்த்துச் சொன்னாராம் தங்க தமிழ்ச்செல்வன்.’’

‘‘அவர் சொன்ன இன்னொரு சம்பவம் என்ன?’’

‘‘ஜக்கையன் விவகாரம்தான் அது. கவர்னரிடம் கடிதம் கொடுத்தது 19 பேர். அதன்பின், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன் மட்டும் சபாநாயகரிடம் போய் விளக்கம் அளித்து, தகுதிநீக்கத்திலிருந்து தப்பித்துக்கொண்டார். அவரைக் குறிப்பிட்ட தங்க தமிழ்ச்செல்வன், ‘நாம யார் பக்கம் இருக்கிறோம் என்பது ரெண்டாவது விஷயம். ஆனால், பதவியில் இருக்கணும். இப்போதைக்கு சபாநாயகரிடம் கடிதம் கொடுத்து, நடவடிக்கை யிலிருந்து தப்பிக்கப் பாருங்க’ என எங்கள் 18 பேரிடமும் ஜக்கையன் மன்றாடினார். அதையெல்லாம் செய்யாமல் தான், பதவியை இழந்து உங்கள் பக்கம் இருக்கிறோம்’ என்று தினகரனிடம் சொல்லிவிட்டு வந்திருக்கிறார்.’’

‘‘அப்படியானால் தங்க தமிழ்ச்செல்வன் தினகரன் பக்கமிருந்து விலகுவாரா?’’

‘‘தங்க தமிழ்ச்செல்வனுக்கு தினகரனைப் பிடிக்கவில்லை; தினகரனுக்கு தங்க தமிழ்ச்செல்வன், பெங்களூரு புகழேந்தி ஆகிய இருவரையும் பிடிக்கவில்லை. ‘இவர்கள் போனால் பரவாயில்லை என்ற மனநிலைக்கு தினகரன் வந்துவிட்டார். ஆனால், இன்னும் சில தகுதிநீக்க எம்.எல்.ஏ-க்களையும் தங்க தமிழ்ச்செல்வன் கூட சேர்த்து அழைத்துக்கொண்டு போனால் என்ன செய்வது என்பதுதான் தினகரனின் கவலை. அதற்கு ஏற்றார் போல, தங்க தமிழ்ச்செல்வனுடன் சிலர் தொடர்பில் இருக்கிறார்கள். அதனால்தான், தன் சம்மதத்துடன் தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிபட்டியில் மக்கள் கருத்து கேட்பது போல தினகரன் பேசிவருகிறார்’ என்கிறார்கள் தங்க தமிழ்ச்செல்வனுக்கு நெருக்கமானவர்கள்.’’

‘‘இந்த இருவர்மீது மட்டும் தினகரனுக்கு ஏன் கோபம்?’’

‘‘தினகரன் அணியில் இருக்கும் மற்ற யாரும் பெங்களூரு சிறைக்குத் தனியாகப் போய் சசிகலாவைப் பார்க்க முடியாது. ஆனால், இவர்களால் அது முடியும்!’’

‘‘புரிகிறது. தங்க தமிழ்ச்செல்வன் இனி தனி ரூட்டில் போவாரா?’’

‘‘ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் இடத்துக்கு அவரால் போகமுடியாது. அ.தி.மு.க-வில் பிரச்னை வந்தபோது, பல மாவட்டங்களில் இருக்கும் அ.தி.மு.க கட்சி அலுவலகங்கள் எடப்பாடி அணியின் வசம் வந்துவிட்டன. ஆனால், தேனி மாவட்ட அலுவலகம் மட்டும் இன்னமும் தங்க தமிழ்ச்செல்வன் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது. எடப்பாடி பழனிசாமியுடன் நினைத்த நேரத்தில் செல்போனில் பேச முடிகிற மிகச் சிலரில் தங்க தமிழ்ச்செல்வன் ஒருவர். ‘ஐந்து பேரையாவது சேர்த்துக்கொண்டு வந்துவிடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டுமோ, அதைச் செய்கிறோம் என்று தங்க தமிழ்ச்செல்வனுக்கு எடப்பாடி ஆசை காட்டியிருக்கிறார். அதனால்தான், அவர் ஏதேதோ பேசி குழப்பம் ஏற்படுத்தப் பார்க்கிறார். தகுதிநீக்க வழக்கை ஒன்றுமில்லாமல் செய்வதற்கு அவரைப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார் எடப்பாடி’ என்று தினகரனுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். ஆனால், ‘துரோகம் செய்ய மாட்டேன் என்று சசிகலாவிடம் சிறையில் சத்தியம் செய்துகொடுத்திருக்கிறேன். அதை மீற மாட்டேன்’ என தங்க தமிழ்ச்செல்வன் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.’’

‘‘ஆண்டிபட்டி தொகுதியில் அவர் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தினாரே?’’

p44c_1529451826.jpg

‘‘ஆமாம். கட்சிக்காரர்கள் புடை சூழ, டிராக்டர் வண்டியில் நின்றுகொண்டு பேசினார் தங்க தமிழ்ச்செல்வன். ‘நான் வழக்கை வாபஸ் வாங்கி, பதவியை ராஜினாமா செய்யலாமா?’ என அவர் கேட்டதும், பலரும் ‘செய்யுங்கள், செய்யுங்கள்’ என்றனர். ‘சரி, பின்னர் இடைத்தேர்தலைச் சந்திக்கலாமா?’ என்று கேட்டார். அதற்கு, ‘சந்திக்கலாம், சந்திக்கலாம்’ என்றனர். ‘நீதிமன்றத்தையும் அதன் தீர்ப்பையும் கண்டிப்பதற்காகவே இதைச் செய்கிறேன். வழக்கறிஞர் குழுவிடம் பேசி, இறுதி முடிவு எடுத்த பின்னர், இதேபோல் உங்களிடம் வந்து எனது முடிவைச் சொல்வேன்’ என்று சொல்லி முடித்தார். தங்க தமிழ்ச்செல்வன் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லை. ‘சுமார் ஒரு வருடமாக என் தொகுதி, எம்.எல்.ஏ இல்லாமல் இருக்கிறது. தண்ணீர் இல்லை, சாலை இல்லை, பல இடங்களில் சரியாக மின்சாரம் இல்லை. தொகுதி மக்கள் வந்து சொல்லும்போது, மனசு வலிக்கிறது. என் தொகுதி மக்களை நினைத்துதான் இந்த முடிவுக்கு வந்தேன். இடைத்தேர்தல் வரட்டும் நாங்கள் யார் என்று காட்டுகிறோம்’ என்று நிருபர்களிடம் சொன்னார் அவர். அது மட்டுமல்ல, ‘18 எம்.எல்.ஏ-க்களும் ராஜினாமா செய்துவிட்டு இடைத்தேர்தலை சந்தித்தால் அனைவரும் வெற்றி பெறுவார்கள்’ என்றும் சொன்னார்.’’

‘‘திவாகரன் சத்தமே காணோமே?’’

‘‘மன்னார்குடியில் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்திய திவாகரன், ஓய்வுபெற்ற அதிகாரிகள் இரண்டு பேருடன் டெல்லி சென்றார். கட்சிப் பெயரைத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்காகத்தான் சென்றதாகச் சொல்லப்பட்டது. ஐந்து நாள்கள் டெல்லியிலேயே முகாமிட்டார் திவாகரன். ஜூன் 16-ம் தேதி சென்னை வந்தார். தன் ஆதரவாளர்களிடம், ‘நாம் நினைத்தது நடக்க ஆரம்பித்திருக்கிறது. தங்க தமிழ்செல்வன் தினகரனுக்கு எதிராகக் காய்களை நகர்த்த ஆரம்பித்திருக்கிறார். இன்னும் சிலர் அவரைப் பின்தொடர்வார்கள். தகுதிநீக்கம் செய்யபட்ட எம்.எல்.ஏ-க்கள் குறித்த வழக்கு இன்னும் இரண்டு மாதங்களில் முடிவுக்கு வரும். தினகரனின் கோட்டையில் விரிசல் விழுந்திருக்கிறது’ என்று சிரித்தபடியே சொன்னாராம்.’’

p44e_1529451804.jpg

‘‘மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் செல்லத்துரையின் நியமனத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதே?’’

‘‘ஆமாம். ‘என் பதவியைக் காப்பாற்றுங்கள்’ என்று அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், மாஃபா பாண்டியராஜன் முதல், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வரை செல்லத்துரை உதவி கேட்டுள்ளார். ஆனால், அவருக்கு யாருமே சாதகமான பதில் தரவில்லை. இந்நிலையில், உயர்கல்வித் துறை செயலாளர் சுனில் பாலிவால் ஜூன் 16-ம் தேதி மதுரை வந்தார். அவர் தலைமையில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க சட்டத்துறை செயலாளர் பூவலிங்கம், சட்டக்கல்வி இயக்குநர் சந்தோஷ்குமார், சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோரைக் கொண்ட கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டது. உயர் கல்வித்துறையின் அதிரடி நடவடிக்கைகள் செல்லத்துரையைக் கலங்க வைத்துள்ளது. ‘இந்தப் பொறுப்புக்கு வருவதற்கு நிறைய இழந்துள்ளேன். திடீரென்று கழற்றி விடுகிறார்கள்’ என்று புலம்ப ஆரம்பித்து விட்டாராம். முன்பு துணைவேந்தர் கல்யாணி மதிவாணனுக்கு இதே நிலை ஏற்பட்டபோது, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா பெரிய வழக்கறிஞரை நியமித்தார். ஆனால், செல்லத்துரைக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்யும் நிலையில் இப்போது உயர்கல்வித் துறை இல்லை. ‘எங்களைச் சிக்க வைத்ததற்குத்தான் இப்போது செல்லத்துரை இப்போது அனுபவிக்கிறார்’ என்று சிறையில் இருக்கும் நிர்மலாதேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் கூறி வருகிறார்களாம்’’ என்ற கழுகார் பறந்தார்.

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, ஈ.ஜெ.நந்தகுமார்
அட்டை ஓவியம்: கார்த்திகேயன் மேடி, பிரேம் டாவின்ஸி


p44d_1529451850.jpgdot_1529451872.jpg தமிழக பெண் வி.ஐ.பி ஒருவரின் திடீர் திருமணம், பெரும் சர்ச்சையாக வெடித்தது. அதையும்மீறி கைகோத்தனர். ஆனால், ஓரிரு மாதங்களிலேயே  மணவாழ்க்கை கசந்துவிட்டதாம். வீட்டுக்கு எதிரே இருந்த தோட்டத்தில் கடந்த வாரம் வாக்கிங் போனபோது, தம்பதிக்குள் காரசார வாக்குவாதம். ஒரு கட்டத்தில் வி.ஐ.பி மனைவி, கணவரைச் சாத்தி எடுத்துவிட்டாராம். புதுக் கணவர், இதுவரை வீடு திரும்பவில்லை. யார் மனசுல யாரோ.

dot_1529451872.jpgகடந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க தோற்கக் காரணமானவர்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்து, அவர்களைக் களையெடுத்து வருகிறார் ஸ்டாலின். இப்போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் அமைச்சர்களின் பதவிகளில் கைவைக்கப் போகிறாராம். ‘அவர்களின் உறுப்பினர் கார்டையே புதுப்பிக்காமல், விரட்டி விடப் போகிறார்’ என்கிறார்கள் அறிவாலய வட்டாரத்தில்!

dot_1529451872.jpg18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கில், உச்ச நீதிமன்றத்தை நாட முடிவு செய்திருக்கிறார்கள் தினகரன் அணியினர். ‘இந்தத் தொகுதிகளில் எம்.எல்.ஏ-க்கள் இல்லாததால் மக்கள் அவதிப்படுகிறார்கள். எனவே, வழக்கை விரைவாக முடிக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப் போகிறார்கள். ஜெயலலிதா ஆட்சியில் அட்வகேட் ஜெனரலாக இருந்த       கே.சுப்பிரமணியத்திடம் இதுபற்றி தினகரன் டீம் பேசியிருக்கிறது.

dot_1529451872.jpgகடந்த வருட எம்.பி.பி.எஸ் அட்மிஷனில், வெளி மாநிலங்களைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவர்கள் சிலர், தமிழகத்தில் வசிப்பதாக போலியாக நேட்டிவிட்டி சான்றிதழ் வாங்கி இடம்பிடித்தனர். இது சர்ச்சையாகி, நான்கு மாணவர்கள் சிக்கினர். ஆனால், அதேபோல இந்த வருடமும் நேட்டிவிட்டி சான்றிதழ் கேட்டு தாசில்தார் அலுவலகங்களைச் சில புரோக்கர்கள் வட்டமடித்துவருகிறார்கள்.


மீண்டும் நிற்க முடியாது!

ழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக, சட்ட நிபுணர்கள் சிலரிடம் தங்க தமிழ்ச்செல்வன் பேசியிருக் கிறார். ‘‘வழக்கை வாபஸ் பெற்றாலும், இப்போதுள்ள சட்டமன்றத்தின் ஆயுள்காலம் முடியும்வரை நீங்கள் ஏற்கெனவே ஜெயித்த தொகுதியில் மீண்டும் போட்டியிட முடியாது என்று கருதுகிறோம். ஒருவேளை போட்டியிட்டால், அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் செல்லமுடியும். அந்த வழக்கும் இழுக்கும். எனவே, வேறு ஒருவரைத்தான் ஆண்டிபட்டியில் நிறுத்தவேண்டிவரும்’’ என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள். இதைப் பற்றியும் யோசித்து வருகிறார் தங்க தமிழ்ச்செல்வன். 

தினகரனின் வலதுகரமான பெரம்பூர் தொகுதியின் எம்.எல்.ஏ வெற்றிவேல், ‘‘வழக்கை வாபஸ் வாங்குவது என்கிற பேச்சுக்கே இடமில்லை. அப்படிச் செய்தால், சபாநாயகர் அவரது வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி ஜெயித்துவிட்டார் என்று ஊர்ஜிதமாகிவிடும். சபாநாயகரின் தீர்ப்பு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எக்காரணம் கொண்டும் சபாநாயகரை ஜெயிக்கவிடக்கூடாது. நீதிமன்றத்தில் ஜெயித்த பிறகு சட்டசபைக்குள் வெற்றிகரமாக நுழையவேண்டும் என்று காத்திருக்கிறேன்’’ என்கிறார்.

மூன்றாவது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள விமலா எடுக்கும் முடிவில் இவர்களின் அரசியல் எதிர்காலம் இருக்கிறது.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.