Jump to content

இரட்டைச்சதம் விளாசிய யாழ் மத்தியின் 15 வயதுடைய சன்சயன்


Recommended Posts

இரட்டைச்சதம் விளாசிய யாழ் மத்தியின் 15 வயதுடைய சன்சயன்

Sanushyan
 

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் நடாத்தும் பாடசாலைகளுக்கிடையிலான 15 வயதின் கீழ்ப்பட்ட பிரிவு 3 இற்கான (டிவிஷன் III) கிரிக்கெட் தொடரின் இந்தப் பருவகாலத்திற்கான முதல் சுற்றுப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகின்றன.

அணிக்கு இரண்டு இன்னிங்ஸ்களாக அமையும் இந்த ஒரு நாள் போட்டித் தொடரில், யாழ்ப்பாண மத்திய கல்லூரிக்காக ஆடி வரும் மதீஸ்வரன் சன்சயன், கனகரத்தினம் மத்திய வித்தியாலயத்திற்கு (ஸ்டான்லி கல்லூரி) எதிரான போட்டியில் இரட்டைச் சதம் விளாசியுள்ளார்.

 

 

வலதுகை துடுப்பாட்ட வீரரான சன்சயன் கடந்த திங்கட்கிழமை (18) யாழ்ப்பாண மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய (ஸ்டான்லி கல்லூரி) அணிக்கு எதிரான குறித்த போட்டியில், முதலில் துடுப்பாடிய தனது கல்லூரிக்காக வெறும் 138 பந்துகளை மாத்திரம் சந்தித்தே இந்த 200 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

குறித்த போட்டியில் சன்சயனின் இரட்டைச்சத உதவியோடு யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணி முதல் இன்னிங்ஸிற்காக 61.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 366 என்ற வலுவான நிலையில் காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தினை இடைநிறுத்திக் கொண்டது.

யாழ். மத்திய கல்லூரியினை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் ஆடிய கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அணியினர் 100 ஓட்டங்களுடன் தமது அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்திருந்தனர்.

கனகரத்தினம் மகா வித்தியாலய அணியின் முதல் இன்னிங்சுடன் போட்டியின் ஆட்ட நேரம் முடிவுக்கு வர முதல் இன்னிங்ஸ் அடிப்படையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி வெற்றி பெற்றுக் கொண்டது.

இந்தப் போட்டி தவிர சன்சயன் தான் கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டு சதங்கள் விளாசியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு சதங்களும் ஸ்கந்தவரோதயாக் கல்லூரிக்கு (115) எதிராகவும், வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கு (107) எதிராகவும் பெறப்பட்டிருந்தது. இந்த இரண்டு சதங்களின் போதும் சன்சயன் ஆட்டமிழக்காது நின்று தனது தரப்பு முதல் இன்னிங்ஸின் அடிப்படையில் வெற்றிபெற காரணமாகவும் அமைந்தார்.  

துடுப்பாட்ட வீரர் என்பதோடு மட்டுமில்லாது சன்சயன் வலதுகை வேகப்பந்து வீச்சாளராக செயற்படும் ஆற்றலையும் கொண்டிருக்கின்றார். இதுதவிர சன்சயன் நல்ல ஒரு களத்தடுப்பாளர் என்பதும் குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

சன்சயனின் தொடர்ச்சியான சிறப்பாட்டத்தோடு, இந்த பருவகாலத்திற்கான டிவிஷன் – III கிரிக்கெட் தொடரில் யாழ்ப்பாண மத்திய கல்லூரி அணியானது அவர்களது குழுவில் புள்ளிகள் அட்டவணையில் முதலிடத்தில் காணப்படுகின்றது.  

மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்டு வரும் யாழ் மாவட்ட கிரிக்கெட்டில், தற்பொழுது மற்றொரு சாதனையாக இவ்வாறு ஒரு இரட்டைச் சதம் மற்றும் இரண்டு சதங்களைப் பெற்றுள்ள இந்த இளம் வீரருக்கு இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.comஉம் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.