Jump to content

இராணுவ அதிகாரி அபிவிருத்திக்கு செலவிட்ட நிதி எங்கிருந்து வந்தது?


Recommended Posts

இராணுவ அதிகாரி அபிவிருத்திக்கு செலவிட்ட நிதி எங்கிருந்து வந்தது?

04MAIN20062018Page1Image0003-092517e6f074d2e795950c363f2d5351fd19b2e0.jpg

 

வட­மா­கா­ணத்­திற்­கான நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்­தின் ­மத்­திய அலு­வ­ல­கத்தின் திறப்­பு­ விழா கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கலந்துகொண்ட வடமாகாண முதலமைச்சர்  சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை

 

 வடக்கு மாகாண நீர்ப்­பா­சன திணைக்­க­ளத்தின் மத்­திய அலு­வ­ல­கத்­தின்­ பு­தி­தாக அமைக்­கப்­பட்ட இக் கட்­டிடத் தொகு­தியை திறந்து வைத்து உங்கள் முன் உரை­யாற்­று­வதில் மகிழ்­வ­டை­கின்றேன்.

இது­வரை காலமும் கிளி­நொச்சி நக­ருக்கு அண்­டிய பகு­தியில் செயற்­பட்­டு­வந்த இந்த மத்­திய அலு­வ­லகம் இன்­றி­லி­ருந்து மாங்­குளம் பகு­தியில் அமைக்­கப்­பட்­டி­ருக்கும் இந்தப் புதிய கட்­டடத் தொகு­தியில் இயங்க இருப்­பது வர­வேற்­கத்­தக்­கது.இன்று திறந்து வைக்­கப்­பட்ட இந்த புதிய கட்­டடத் தொகுதி தொடர்­பான விப­ரங்­களை தந்­து­த­வு­மா­று­கோ­ரப்­பட்ட போதும் அதனை சமர்ப்­பித்­த­வர்கள் தமது திணைக்­க­ளத்தின் திட்­ட­முன்­மொ­ழிவு ஒன்றை அனுப்­பி­விட்டு தமது கட­மைகள் முடிந்­து­விட்­ட­தாக அமர்ந்­து­விட்­டார்கள். பொறுப்பு வாய்ந்த திணைக்­கள உத்­தி­யோ­கத்­தர்­களும் அதி­கா­ரி­களும் முனைப்­புடன் செயற்­ப­டு­கின்ற போது அத் திணைக்­களம் வினைத்­திறன் மிக்க திணைக்­க­ள­மாக மிளிரும் என்­பதில் ஐயம் இல்லை.

நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தைப் பொறுத்­த­வ­ரையில் அது வட­மா­கா­ணத்தின் மத்­திய பகு­தி­யாக அடை­யாளம் காணப்­பட்­டுள்ள மாங்­குளம் பகு­தியில் அமைந்­தி­ருப்­பதே சாலச்­சி­றந்­தது என்ற தீர்­மா­னத்தின் அடிப்­ப­டை­யி­லேயே இத் திணைக்­களம் மாங்­குளம் பகு­திக்கு இடம் மாற்­றப்­பட்­டது. யாழில் பிறந்து வளர்ந்த அலு­வ­லர்கள் சிலர் வன்­னிக்குள் காரி­யா­ல­யங்கள் அமை­வது ஒரு வதை என்றே நினைக்­கின்­றார்கள். வாழ்க்கை பூரா­கவும் கூண்­டொன்­றுக்குள் முடங்கிக் கிடக்­கவே ஆசைப்­ப­டு­கின்­றார்கள். அந் நிலை மாற வேண்டும்.

சுமார் 42.55 மில்­லியன் ரூபா செலவில் அமைக்­கப்­பட்ட இந்தக் கட்­ட­டத்­திற்­கான அடிக்கல் நாட்டும் நிகழ்­வுகள் எமது முன்­னைநாள் விவ­சாய அமைச்சர் பொ.ஐங்­க­ர­நேசன் விவ­சாய அமைச்­ச­ராக இருந்த காலத்தில் நடை­பெற்­ற­தாக ஞாபகம். நீர்ப்­பா­சனத் திணைக்­க­ளத்தைப் பொறுத்த வரையில் அதன் அமை­விடம் மாங்­கு­ளத்தில் இருப்­ப­தே­சா­லப்­பொ­ருத்­த­மா­னது.ஏனெனில் இப் பகு­தி­யில் ­நீர்ப்­பாசனக் குளங்கள் அதி­க­மாகக் காணப்­ப­டு­கின்­றன.

கிளி­நொச்­சியில் இர­ணை­மடு குளம் நீர்ப்­பா­ச­னத்­திற்­காக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற போதும் மாங்­குளம் பகு­தி­யில்­பல குளங்கள் நீர்ப்­பா­சனக் குளங்­க­ளாக காணப்­ப­டு­வதால் அவற்றை நேரில் சென்று பார்­வை­யி­டு­வ­தற்கும் நீர்ப்­பா­சன செயற்­பா­டுகள் முறை­யாக நடை­பெ­று­கின்­றதா என்­ப­தனை பார்­வை­யி­டு­வ­தற்கும் இவ்­வி­டம்­ இ­ல­கு­வான­தாக அமையும் என எண்­ணு­கின்றேன்.

இன்­றைய எமது சீதோஷ்ண நிலை­க­ளுக்கு அமை­வாக வட­ப­கு­தியில் பெறப்­படு­கின்ற ஒவ்­வொரு துளி நீரும் முறை­யாகப் பயன்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­டாய சூழ்­நி­லையில் நாம் இருக்­கின்றோம். வட­ப­கு­திக்கு வரு­டாந்தம் கிடைக்கப் பெறு­கின்ற சுமார் 1250 மில்­லி­மீற்றர் மழை வீழ்ச்சி கூட தற்­போது கிடைக்கப் பெறு­வ­தில்லை என தர­வுகள் தெரி­விக்­கின்­றன. இந்த நிலையில் கிடைக்­கின்ற நீரை முறை­யாகத் தேக்கி வைக்­காது வீணாக கடலில் சேர அனு­ம­திப்­பது மிகக் குறு­கிய காலத்தில் எமது பகு­திகள் வரண்ட பிர­தே­சங்­க­ளா­க­மா­று­வ­தற்கு நாமே வழி­ச­மைத்­த­தாக அமையும். முன்­னரே மன்னன் பராக்­கி­ர­ம­பாகு ஒரு சொட்டு நீரைக் கூட கடலில் கலக்க விடா­தீர்கள் என்று சொல்லிச் சென்று விட்டான். ஆனால் இன்­றைய கால­கட்­டத்தில் நாங்கள் பழ­மை­யையும் மதிப்­ப­தில்லை நவீன ஆலோ­ச­னை­க­ளையும் பின்­பற்­று­வ­தில்லை. பின்­ன­ணியில் சிலரின் சுய­நலம் காணப்­ப­டு­கின்­றது என்று புலப்­ப­டு­கி­றது.

இப் பகு­தி­களில் கூடு­த­லான நிலங்கள் விவ­சாயத் தேவை­க­ளுக்கு பயன்­ப­டுத்தக் கூடி­ய­தாக காணப்­ப­டு­கின்ற போதும் மத்­திய அரசின் கட்­டுப்­பாட்டின் கீழ் இயங்கும் வன­இ­லாகா, வன­ஜீ­வ­ரா­சிகள் பாது­காப்புத் திணைக்­களம், கனிய வளத் திணைக்­களம்,கட­லோரப் பாது­காப்­புச்­சபை போன்ற திணைக்­க­ளங்கள் கூட்­டாக இணைந்து பல செயற்­திட்­டங்­க­ளுக்கு முட்­டுக்­கட்­டைகள் கொடுத்து வரு­கின்­றன. அரச கொள்­கை­க­ளுக்கு அமை­வாக பல காணி­கள்­ கா­டு­க­ளாக பரா­ம­ரிப்­ப­தற்­கான திட்­டங்கள் முன்­மொ­ழி­யப்­பட்­டுள்­ள­தாக அறி­யப்­ப­டு­கின்­றது. காடுகள் பல வகைப்­படும். அவற்றுள் சர­ணா­ல­யங்கள் இருக்­கலாம். தேசியப் பூங்­காக்கள் இருக்­கலாம். வெறும் அடர் காடு­களும் இருக்­கலாம். சர­ணா­ல­யங்­க­ளுக்கு ஊடாக மக்கள் செல்­லலாம். ஆனால் தேசிய பூங்­காக்­களுள் நுழை­வ­தென்றால் அனு­மதி பெற வேண்டும். வன இலாகா தேசிய பூங்­காக்­களை எமது பிர­தே­சங்­களில் ஏற்­ப­டுத்தி எமது மக்­களை அவற்றுள் உள் நுழைய விடாமல் தடுக்­கப்­பார்ப்­ப­தாகத் தெரி­கின்­றது. இத் திணைக்­க­ளத்தின் நட­வ­டிக்­கை­களின் நிமித்தம் எமது காடு­களும் சர­ணா­ல­யங்­களும் தேசியப் பூங்­காக்­களும் அவற்றின் அதி­கா­ரமும் கட்­டுப்­பாடும் மத்­திய அரசின் கட்­டுப்­பாட்­டுக்குள் தொடர்ந்து இருந்து வரு­கின்­றன. எமது காடு­களில் என்ன நடக்­கின்­றது என்­பது எமக்குத் தெரி­வ­தில்லை. அண்­மையில் வெலி ஓயா எனப்­படும் மண­லாறு பிர­தே­சத்தின் காட்­டுக்குள் அணை­யொன்று கட்டி இருப்­பது கட்டி பல மாதங்­க­ளுக்குப் பிறகே எமக்குத் தெரிய வந்­துள்­ளது. யார் கட்­டி­னார்கள் என்­பது புதி­ராக இருக்­கின்­றது என்று அறி­கின்றேன்.

ஒரு நாட்டில் காணப்­ப­ட­வேண்­டிய காடு­களின் அள­வுகள் அதன் நிய­மங்கள் என்­பன முறை­யாக கடைப்­பி­டிக்­கப்­படல் வேண்டும். எனினும் நாட்டின் ஏனைய பகு­தி­க­ளுக்­கு­மான காடு­களை வட­ப­கு­தியில் பாது­காத்து வைத்­தி­ருக்க அர­சாங்கம் முனை­கின்­றது.மற்­றைய மாகா­ணங்­களில் பல காடுகள் வெட்­டப்­ப­டு­கின்­றன. வடக்கில் அவ்­வாறு இல்­லாது இழந்த காடு­களை ஈடு செய்ய எமது காணிகள் மற்றும் வனங்கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இது இப் பகு­தியில் வாழு­கின்ற மக்­களின் சுய உரி­மை­களை மீறு­வ­தா­கவும் அமை­கின்­றது. எமது காடுகள், காணிகள் ஆகி­யன எமக்கே உரி­யவை. அவை முழு­மை­யாக எமது மக்­க­ளுக்கே கைய­ளிக்­கப்­பட வேண்டும். எமது காடு­க­ளையும் வன ஜீவ­ரா­சி­க­ளையும் பாது­காக்­கவும் பரி­பா­லனம் செய்­யவும் மாகா­ணத்­திற்கு வெளியில் இருந்து அலு­வ­லர்­களைக் கொண்­டு­வ­ரு­வதை அர­சாங்கம் நிறுத்த வேண்டும்.

அன்­பார்ந்த உத்­தி­யோ­கத்­தர்­களே,அதி­கா­ரி­களே! இன்­றைய நிலையில் தமிழ் மக்­களைப் பொறுத்த வரையில் அவர்­களின் தேவைகள் அனைத்தும் போராடிப் பெற­வேண்­டிய ஒரு கட்­டா­யத்­தி­லேயே அவர்­கள் ­வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்­க­ளுக்கு கிடைக்க வேண்­டிய முறை­யான உரித்­துக்­களைக் கூட கைய­ளிப்­ப­தற்கு பின்­நிற்­கின்­றார்­கள்­ அ­ர­சாங்­கத்­தினர்.ஒவ் ­வொரு சாதா­ரண விட­யங்­க­ளுக்குக் கூட போரா­டியே எமது உரி­மை­களை பெற­வேண்­டிய நிலையில் நாம் இருந்து வரு­கின்றோம். இந் நிலையில் எமது மக்­க­ளுக்கு எம்மால் வழங்­கப்­ப­டக்­கூ­டிய சேவை­க­ளை­யா­வது அவர்கள் திருப்­திப்­ப­டக்­கூ­டிய வகையில் அவர்­களின் எதிர்­பார்ப்பை விஞ்­சி­ய­தாக நீங்கள் வழங்க உங்­களை தயார்ப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும் என இச் சந்­தர்ப்­பத்தில் வின­ய­மாக வேண்டிக் கொள்­கின்றேன்.

-அண்­மையில் பத்­தி­ரி­கை­யிலும் ஊட­கங்­க­ளிலும் வெளிவந்த ஒரு செய்­தியில் இரா­ணுவத் தள­பதி ஒரு­வரின் செயலை பாராட்டிக் கௌர­வித்து அவ­ருக்கு மலர் மாலைகள் அணி­வித்து பல்­லக்கில் ஏற்­றி­ வந்­து­விடை கொடுத்து அனுப்­பி­ய­தாக செய்­திகள் வெளிவந்­தன.

அவர்கள் அவ்­வாறு நடந்­து­கொள்­வ­தற்கு இயல்­பா­கவே அந்த அலு­வ­லர்­அவ்­வா­றான நல்ல குண­ந­லன்­க­ளைக்­கொண்­டி­ருந்­தா­ரா­அல்­லது அவ்­வாறு இயங்­கு­மாறு பணிக்­கப்­பட்ட அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமைய அவர்கள் செயற்­பட்­டார்­களா என்­பது பற்றி எனக்கு எதுவும் தெரி­யாது. ஆனால் அவரால் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­விருத்திப் பணி­க­ளுக்கு செல­வி­டப்­பட்ட நிதிகள் எங்­கி­ருந்து வந்­தன என்­பன பற்றி எது­வுமே கூறப்­ப­ட­வில்லை. முன்­பள்ளி ஆசி­ரி­யர்களுக்கு எம்மால் ரூபா 6,000 வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. CSD ரூபா 30,000 க்கு மேலாக வழங்கி வந்­துள்­ளது. இந் நிதி­ இ­தற்­கென இரா­ணு­வத்­திற்கு ஒதுக்கி வைத்த பண­மாக இருக்க முடி­யாது. இவ்­வா­றான செல­வு­களில் வெளிப்­படைத் தன்மை இல்­லா­ததால் இரா­ணுவம் திட்­ட­மிட்டே ஐந்து மடங்கு சம்­பளம் கொடுத்து எமது மக்­களை விலைக்கு வாங்­கு­கின்­றதோ என்று எண்­ண­வேண்­டி­யுள்­ளது. அவர்­க­ளுக்­கான மேல­திக பணம் எங்­கி­ருந்து கிடைக்­கப்­பெற்­றுள்­ளது என்­பதை இரா­ணுவம் விப­ரிக்க வேண்டும். இந்த நிதிகள் வட­மா­காண சபைக்கு வழங்­கப்­பட்­டி­ருப்பின் அல்­லது வட­மா­காண சபையின் ஒத்­தி­சை­வோடு மத்­திய அர­சினால் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருப்பின் எம் மக்­களை விலைக்கு வாங்கும் ஒரு கைங்­க­ரி­ய­மாக அது அமைந்­தி­ருக்­காது.

யுத்த காலப் பகுதியில் எமது உறவுகளை முதியவர், குழந்தைகள், பெண்கள், இளைஞர், யுவதிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் என்ற எதுவித வேறுபாடுகளோ தயவுதாட்சண்யமோ இன்றி கொத்துக் கொத்தாக கொன்று குவித்த நிகழ்வுகளை நேரில் பார்த்த எவருக்கும் அவை மறந்து போய்விட ஞாயமில்லை. அவ்வளவு உயிர்களையும் காவு கொள்வதற்கு தாம் சார்ந்த ஒரு அமைப்பு காரணமாக இருந்ததே என்ற கவலை குறித்த இராணுவ அலுவலருக்கு இருந்ததோ நான் அறியேன். இருந்திருந்தால் அந் நினைவு வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.அதனடிப்படையில் தமது தவறுகளை சீர் செய்வதற்கும் அல்லது இறைமன்றாட்டம் மேற்கொள்வதற்குமாக இவ்வாறான தார்மீக சிந்தனைகள் அந்த அலுவலரிடம் தோற்றம் பெற்றிருக்கக் கூடும் என்பதை நாம் உணர வேண்டும்.

இன்று திறந்து வைக்கப்படுகின்ற இந்த மத்திய அலுவலகத்தை நடத்தப் போகும் நீர்ப்பாசனத் திணைக்களம் எமது மக்களுக்காக அர்ப்பணிப்­புடனான சேவையை ஆற்றுவதற்கு எச்சந்தர்ப்­பத்திலும் தயாராக இருக்க வேண்டும் எனத் தெரிவித்து உங்கள் அனைவரையும் வாழ்த்தி விடைபெறுகின்றேன்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-21#page-4

Link to comment
Share on other sites

20 hours ago, நவீனன் said:

-அண்­மையில் பத்­தி­ரி­கை­யிலும் ஊட­கங்­க­ளிலும் வெளிவந்த ஒரு செய்­தியில் இரா­ணுவத் தள­பதி ஒரு­வரின் செயலை பாராட்டிக் கௌர­வித்து அவ­ருக்கு மலர் மாலைகள் அணி­வித்து பல்­லக்கில் ஏற்­றி­ வந்­து­விடை கொடுத்து அனுப்­பி­ய­தாக செய்­திகள் வெளிவந்­தன.

அவர்கள் அவ்­வாறு நடந்­து­கொள்­வ­தற்கு இயல்­பா­கவே அந்த அலு­வ­லர்­அவ்­வா­றான நல்ல குண­ந­லன்­க­ளைக்­கொண்­டி­ருந்­தா­ரா­அல்­லது அவ்­வாறு இயங்­கு­மாறு பணிக்­கப்­பட்ட அறி­வு­றுத்­தல்­க­ளுக்கு அமைய அவர்கள் செயற்­பட்­டார்­களா என்­பது பற்றி எனக்கு எதுவும் தெரி­யாது. ஆனால் அவரால் மேற்­கொள்­ளப்­பட்ட அபி­விருத்திப் பணி­க­ளுக்கு செல­வி­டப்­பட்ட நிதிகள் எங்­கி­ருந்து வந்­தன என்­பன பற்றி எது­வுமே கூறப்­ப­ட­வில்லை. முன்­பள்ளி ஆசி­ரி­யர்களுக்கு எம்மால் ரூபா 6,000 வழங்­கப்­பட்டு வரு­கின்­றது. CSD ரூபா 30,000 க்கு மேலாக வழங்கி வந்­துள்­ளது. இந் நிதி­ இ­தற்­கென இரா­ணு­வத்­திற்கு ஒதுக்கி வைத்த பண­மாக இருக்க முடி­யாது. இவ்­வா­றான செல­வு­களில் வெளிப்­படைத் தன்மை இல்­லா­ததால் இரா­ணுவம் திட்­ட­மிட்டே ஐந்து மடங்கு சம்­பளம் கொடுத்து எமது மக்­களை விலைக்கு வாங்­கு­கின்­றதோ என்று எண்­ண­வேண்­டி­யுள்­ளது.

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.