Jump to content

முல்லைத்தீவில் இராணுவம் சுட்டுக்கொன்ற சிறுத்தையின் இணையா கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்டது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் இராணுவம் சுட்டுக்கொன்ற சிறுத்தையின் இணையா கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்டது?

June 21, 2018
tiger-2-696x392.jpg

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று(21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.

இன்று காலை எழு மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிகுள் உட்புகுந்த சிறுத்தை மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெறுங்கையுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தனர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவார் என அறிவிக்கப்பட்டது. மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர்.

இதற்கிடையில் எட்டு பேரை சிறுத்தை தாக்கியிருந்தது. பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.

இந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம பொது மக்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனக்குற்றம் சாட்டினர்.

ஆனால் தங்களின் நடிவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவித்தனர் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்து அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர் குறித்த பற்றைக்குள் கிராம பொது மக்கள் பொல்லுகளுடன் சென்று சுற்றி வளைத்து தேடிய போது பற்றைக்குள் இருந்து வெளியேறி சிறுத்தை ஒருவரை தாக்கும் போதும் ஏனைய பொது மக்களால் பொல்லுகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.

 

சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலீஸார், கிராம அலுவலர் உட்பட பலரை் இருந்தனர்.

இன்று காலை முதல் பன்னிரண்டு மணி வரை பத்து பேரை சிறுத்தை தாக்கி காயப்படுத்தியது. அவர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிசை பெற்றுவருகின்றனர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிற்கு இடையூறு விளைவித்தது மட்டுமின்றி, சிறுத்தையை அடித்து கொன்ற பொதுமக்களின் நடவடிக்கை பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்த சிறுத்தை, அண்மையில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுத்தையின் இணையாக இருக்கலாமென்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் கேப்பாபுலவு இராணுவ முகாமின் முன்னரணிற்குள் புகுந்த பெரிய சிறுத்தைப்புலியொன்றை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றிருந்தனர். அந்த விடயம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அடித்துக் கொல்லப்பட்ட சிறுத்தையும், கேப்பாபுலவில் சுட்டுக் கொல்லப்பட்ட புலியும் கிட்டத்தட்ட சம வயதுடையவை என்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

IMG_1622-300x200.jpgIMG_1627-300x200.jpgIMG_1653-300x200.jpgtiger-2-300x169.jpgtiger-5-300x169.jpgtiger-7-300x200.jpg

 

http://www.pagetamil.com/9110/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புலிகளை தமிழனுக்கும் பிடிக்குது இல்லை எல்லாம் நேரம் தான் நான் இந்த சிறுத்தையை சொன்னேன்  அட்டகாசம் காட்டும் யானையிடம் போகட்டும் பார்ப்போம் அது போக புலியென்றால் இப்பவும் கிலி கொள்கிறார்கள் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிலிருந்து வந்த புலியும்… நகரிலிருந்த காட்டுமிராண்டித்தனமும்!

June 21, 2018
IMG_1653-696x464.jpg

இன்று கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த சிறுத்தையொன்று பொறுப்பற்ற விதத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. அந்த சிறுத்தையை அடித்து கொன்ற பொதுமக்களிற்கு காட்டுயிர்கள் பற்றியோ, காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வு பற்றியே போதிய விழிப்புணர்ச்சிகள் இல்லாமல் இருக்கலாம்.

எனினும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்புணர்வற்ற தன்மை இதில் வெளிப்பட்டுள்ளது.

 

சிறுத்தை காலை 6.30 மணியளவில் மக்கள் குடியிருப்பிற்குள் காணப்பட்டது. அது கொல்லப்படும் போது மதியம் 12.30.

இடைப்பட்ட ஆறு மணித்தியாலத்திற்குள் சிறுத்தையை கிராமத்தை விட்டு அப்புறப்படுத்த முடியாத செயலற்ற நிலையிலா வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளது?

வடக்கில் பல இடங்களிலும் காணி பிடிப்பதில் வன ஜீவராசிகள் திணைக்களம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த திணைக்களத்தின் அதிகாரியொருவர் பிஸ்டலை காட்டி தன்னை அச்சுறுத்தியதாக சிறிதரன் எம்.பி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது பிரதேசங்களை எல்லையிடுவதில் காட்டும் அக்கறையையும், செயல்திறனையும் மிருகங்களை பாதுகாப்பதில் செலுத்துவதில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆறு மணித்தியாலம் மக்கள் குடியிருப்பிற்குள் நின்ற சிறுத்தையை மயக்க ஊசி மூலமோ, வலை போட்டோ பிடித்து பாதுகாப்பாக அகற்ற முடியவில்லையென்றால், உண்மையிலேயே வனஜீவராசிகள் திணைக்களத்தின் தொழில் நேர்த்தி குறைவையே காண்பிக்கிறது.

 

வனஜீவராசிகள் திணைக்களம்தான் இப்படியென்றால், கிராமத்தவர்களிற்கு காட்டுயிர்கள் தொடர்பான பொறுப்புணர்வு ஏன் இல்லாமல் போனது?

வழிதவறி வந்த சிறுத்தையை சுற்றிவளைத்து கலவரமூட்டினால், அச்சத்தில் அது தாக்கவே செய்யும்.

காடுகள் சுருங்கி, காட்டுயிர்களின் வாழிடங்கள் இல்லாமல் போய்விட்டது. கடுமையான நீர்ப்பஞ்சம் வேறு வாட்டுகிறது. காட்டின் எல்லை கிராமங்களிற்குள் காட்டுயிர்கள் படையெடுப்பதை தவிர்க்க முடியாது. ஏனெனில், அந்த உயிரினங்களின் வாழிடங்களையே நாம் ஆக்கிரமித்துள்ளோம்.

மிகப்பெரிய இந்த வகையான சிறுத்தைகள் வன்னி காடுகளில் மிக அரிதானவையாகவே இருக்கும். விரல் விட்டு எண்ணத்தக்களவானவைதான் இருக்கும். காட்டுயிர்களின் வாழ்க்கையில் மனிதர்கள் குறுக்கறுத்து, அவற்றின் வாழிடங்களை அழித்து, அவற்றிற்கு வாழ்க்கை நெருக்கடியை கொடுத்ததுமல்லாமல், வழிதவறி வரும் காட்டுயிர்களை எப்படி அணுகுவதென்பதை தெரியாமல் இருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சியான செய்தி!

சிறுத்தையை அடித்து கொன்று விட்டு, அத்துடன் செல்பி எடுத்த இளைஞர்கள் அனேகர். உயிரிழந்த நிலையிலோ, குற்றுயிரான நிலையிலோ, அந்த சிறுத்தையை கொடுமைப்படுத்தும் இளைஞர்களின் வீடியோ வெளியாகியிருக்கிறது. காட்டுயிர்கள் தொடர்பாக ஒரு துளியும் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் இல்லாத ஒரு இளைஞர் சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பது… நமது சமூக உருவாக்கத்தையே கேள்விக்குட்படுத்துவது.

 

இந்த பூமியில் பொறுப்புணர்வுடன் வாழும் இனமாக தமிழர்கள் இன்னும் பரிணமிக்கவில்லையென்பது மட்டும் கிளிநொச்சி சம்பவத்தின் மூலம் வெளிப்படுகிறது.

 

இரண்டு எதிர்வினைகள்

காட்டிலிருந்து ஒரு சிறுத்தை
நாட்டுக்கு வருகிறது என்றால்
ஓராயிரம் பாலை மரங்களும்
ஓராயிரம் தேக்கு மரங்களும்
ஓராயிரம் முதிரை மரங்களும்
கொள்ளை போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு பேராற்றின் குடும்பமே
இறந்துவிட்டது என்று அர்த்தம்
பத்தாயிரம் பறவைகள்
கடல்கடந்து பறந்துவிட்டன என்று அர்த்தம்
நூறாயிரம் வண்ணத்துப்பூச்சிகளும்
ஆயிரமாயிரம் தேனீக்களும்
செத்துப்போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு போகமல்ல
பல போகங்கள்
பொய்க்கப்போகின்றன என்று அர்த்தம்

 

மோப்பம் பிழைத்து
வழிதவறி
வந்த அச்சிறுத்தையை கொன்ற நாங்கள்
எங்களுடைய குடும்ப
குழந்தைகளையும் பெண்களையும்
உயிரோடு
கொளுத்திக் களித்தோமென்று அர்த்தம்

– நட்சத்திரன் செவ்விந்தியன்

 

——

இலங்கையில் புலிகளுக்கும் இந்தியப்படைகளுக்கும் யுத்தம் தொடங்கியவேளை புலிகளின். 3 ம் இலக்க முகாமில் ஒரு சிறுத்தை குட்டியும் இருந்தது. புலிகள் பின்வாங்கி சென்று கொண்டிருந்தபோது அதனையும் காவிக்கொண்டே சென்றனர். சங்கானைக்கும் சண்டிலிப்பாய் பகுதிக்குமிடையில் திடீரென இந்திய இராணுவத்தோடு மோதல் தொடங்கிவிட. சிறுத்தை மிரண்டு ஓடி விடாமலிருக்க ஒரு சாக்கு பையில் போட்டு கட்டி வைத்து விட்டு சண்டை நடந்தது. பல மணிநேரம் நீண்ட சண்டையில் ஒரு போராளி இறந்தும் செல்வராசா வாத்தி காயமடைந்து போக. இறந்த போராளியின் உடலையும். காயமடைந்தவர் சிறுத்தை குட்டி எல்லாவற்றையும் தூக்கி கொண்டு முற்றுகையை உடைத்து புலிகள் அளவெட்டி பக்கம் போனதும் போராளியின் உடலை புதைத்து விட்டு சிறுத்தைக்கு உணவு கொடுக்க சாக்கு பையை அவிழ்த்தபோது மிரண்டு போயிருந்த சிறுத்தை பலரை விறாண்டி கடித்தும் விட்டது.அதை சுட்டு கொன்றுவிட. ஒரு செக்கன் போதுமானது. ஆனால் அதனை பிடித்து மீண்டும் சாக்கு பையில் போட்டுவிட்டு தொடர்ந்தும் அதனை காவிக்கொண்டு பயணிக்க முடியாது என்பதால் பற்றை காடும் பனை மரங்களும் அதிகமாக இருந்த விளான் பகுதியில் அதனை கொண்டு போய் விட்டு விட்டார்கள். சில காலத்தின் பின்னர். “பிரபாகரன் வளர்த்த செல்லப் பிராணி தெல்லிப்பழையில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம் என்று இராணுவ அதிகாரி தெரிவித்தார்.” என்று அந்த சிறுத்தை குட்டியின் படத்தோடு செய்தி வெளியாகியிருந்தது. அன்றிரவே தெல்லிப்பழையில் இந்திய இராணுவம் மீது தாக்குதலும் நடந்தது …இன்று கிளி நொச்சியில் அடித்துக் கொல்லப்பட்ட சிறுத்தைக்குட்டியின் படத்தை பார்த்தபோது அந்த சம்பவம் நினைவுக்கு வந்து தொலைத்தது ..

சாத்திரி

http://www.pagetamil.com/9128/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி இப்பவும் எழுதுறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

சாஸ்திரி இப்பவும் எழுதுறாரா?

முகநூலில் எல்லோரும் இயங்குவது போல சாத்திரியும் இயங்குகின்றார். ஒவ்வொருவரும் தாமே மட்டுறுத்துனராக இருக்கும் வசதி அங்கு இருக்குத்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை.... பார்க்க, வயிறு பத்தி எரிகின்றது.   
அழிந்து வருகின்ற ஒரு மிருகத்தை... அடித்துக் கொல்ல  இந்தக் காட்டு மிராண்டிகளுக்கு எப்படி மனம் வந்தது?
வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, அதற்கு  மயக்க ஊசி போட்டு,  உயிருடன் பிடித்து...
அது உலாவும்  பாதுகாப்பான காட்டில் விட்டிருக்கலாம்.  

அதனைக்   கொல்லும்  உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது?
பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று சொல்லும், நீதிமான்கள் எங்கே?

இதுவே... ஒரு சிங்கமாக இருந்திருந்தால், அந்தத் தமிழர்கள் புலியை அடித்துக் கொன்ற மாதிரி...
சிங்கத்தை அடித்துக் கொன்று  இருப்பார்களா?

அப்படி சிங்கத்தை அடித்துக் கொன்று இருந்தால்....
புத்த பிக்குகளிருந்து, அரசியல் வாதிகள் வரை.... இந்த காட்டு மிராண்டி தமிழர்களை, அடித்தே... கொன்று இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing and outdoor

35517496_365673567172228_6371033527722442752_n.jpg?_nc_cat=0&_nc_eui2=AeF-bAf6cknNwA2KzbuAQlyFdiFi_6XDmPDOSDJsN04jrPa0mICGTO6xq6iPX3AokS2KX7vhJHamDrhigLBUD90NMYELPVee-XXsQkdUC9GzvQ&oh=96c6da38ca55589f10c21aa221ae6987&oe=5BA69262

###############################################################################################################

Image may contain: one or more people, people standing, tree, outdoor and nature

No automatic alt text available.

 

Image may contain: 4 people, people sitting and outdoor

No automatic alt text available.

 

மனிதம் என்னும் வாழ்வியலுக்கே மோசமான தவறினை நீங்கள் இழைத்துள்ளீர்கள்

“வீரத்தின் விளைநிலம் வன்னி”
உயிருடன் சிறுத்தையைப்பிடித்த பின்னர் தான் கொன்றார்கள் என்று அறியும் போது கோபப்படுவதை விட வேறு என்ன செய்ய முடிகிறது!

ஒரு அரிய உயிரியை கொன்றிருக்கின்றார்கள்,  அதுவும் புலியை. 
அடேய்  புலியை  நாங்களே கொல்லலாமாடா...

காட்டிலிருந்து ஒரு சிறுத்தை
நாட்டுக்கு வருகிறது என்றால்
ஓராயிரம் பாலை மரங்களும்
ஓராயிரம் தேக்கு மரங்களும்
ஓராயிரம் முதிரை மரங்களும்
கொள்ளை போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு பேராற்றின் குடும்பமே
இறந்துவிட்டது என்று அர்த்தம்
பத்தாயிரம் பறவைகள் 
கடல்கடந்து பறந்துவிட்டன என்று அர்த்தம்
நூறாயிரம் வண்ணத்துப்பூச்சிகளும்
ஆயிரமாயிரம் தேனீக்களும் 
செத்துப்போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு போகமல்ல பல போகங்கள்
பொய்க்கப்போகின்றன என்று அர்த்தம்

மோப்பம் பிழைத்து
வழிதவறி வந்த அச்சிறுத்தையை கொன்று நீங்கள் நடைமுறைத்தவறினை செய்துள்ளீர்கள்.

-லோகன் சுப்பிரமணியம்.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுத்தை புலியை கொலை செய்தோரை கைது செய்ய நடவடிக்கை

June 22, 2018

IMG_1653.jpg?resize=717%2C479கிளிநொச்சியில் சிறுத்தை புலியை கொலை செய்தோரை கைது செய்வதற்கான நடவடிக்கையை தேசிய வன ஜீவராசிகள் தொடர்பான குற்றவியல் தடுப்பு பிரிவு மேற்கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் நேற்றையதினம் வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து சிறுத்தை புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சிறுத்தை புலியை அடித்துக் கொலை செய்தோரை கைது செய்வதற்கான நடவடிக்கையை தேசிய வன ஜீவராசிகள் தொடர்பான குற்றவியல் தடுப்பு பிரிவு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

http://globaltamilnews.net/2018/84684/

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

கிளிநொச்சியில் சிறுத்தை புலியை கொலை செய்தோரை கைது செய்வதற்கான நடவடிக்கையை தேசிய வன ஜீவராசிகள் தொடர்பான குற்றவியல் தடுப்பு பிரிவு மேற்கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒருசில நாடுகளுக்கு முன்னர் அண்மித்த பகுதியில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சிறுத்தைப் புலி பற்றி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மௌனமாக உள்ளது.

ஆனால், தமது ஜீவனோபாயத்துக்கு அச்சுறுத்தலாக, சிறுவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக  இருந்த சிறுத்தைப் புலியை தற்பாதுகாப்புக்காக கொன்ற தமிழ் இளைஞர்கள் மீது கையாலாகாத வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்த காடையர்கள் நடவடிக்கையாம்.  

உண்மையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட வேண்டும். அதிலுள்ள சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் சிறைகளில் அடைக்கப்பட வேண்டும்.

மக்களை பாதுகாக்க முனவந்த தமிழ் இளைஞர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுத்தையைக் கொல்ல இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1. மக்கள் குடியிருப்புக்கு வந்து தொந்தரவு செய்த சிறுத்தையைக் கொன்று அதனைக் கொல்லும் காட்சியை சமூகவலைத் தளங்களில் பரவி பரபரப்பையும் மற்றையோரின் கவனத்தையும் பெறும் நோக்கம்.

2. புலிகளின் மீதான ஆழ்மனதில் உறைந்திருக்கும் பயமும் காழ்ப்பும் ஆயுதம் இல்லாமல் வந்த சிறுத்தை மேல் காட்டப்பட்டிருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புலியை கொலை செய்யுமளவுக்கு, தமிழர்களிடம் மனிதாபிமானம் அற்றுப்போயுள்ளது"

கிளிநொச்சியில் நேற்று இளைஞர்கள் ஒன்று திரண்டு ஒரு சிறுத்தைப் புலியை அடித்து கொலை செய்து அதன்மூலம் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
 
இந்த நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வரும் அளவுக்கு என்ன தேவை உள்ளது? இன்றைய இளைஞர்கள் சுதந்திரத்தையே விரும்புகின்றனர்.
 
ஆனால் இராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுவதன் காரணமாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
 
கிளிநொச்சியில் நேற்று ஒரு புலியை அடித்து கொன்றுள்ளார்கள். அந்த புலியிடம் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் பல வழிமுறைகள் இருக்கின்றன.
 
அதை விடுத்து அந்த இளைஞர்கள் சேர்ந்து புலியை கொலை செய்யும் அளவுக்கு மனிதாபிமானம் அற்றுப்போய் உள்ளது.
 
இந்த நிலைக்கு இவ்வாறான பிரச்சாரங்களே காரணமாக இருக்கலாம் என சாந்த பண்டார சந்தேகம் வெளியிட்டுள்ளார்
 
 

மறவன்புலவு சச்சிதானந்தன் எங்கே..?

கிளிநொச்சியில் கிராமம் ஒன்றிற்குள் புகுந்த சிறுத்தையை அடித்துக் கொலை செய்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை நடத்துவதாக சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். 
 
இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 
 
சிறுத்தையை அடித்துக் கொலை செய்தமை சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று புத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரராவும் கருத்து வௌியிட்டார். 
 
அதேநேரம் சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக உரிய தண்டனை வழங்குவதாக வனஜிவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கூறியுள்ளார்.
 
எங்க இந்த இந்த மறவன்புலவு ஐயாவ காணோம்....
ஓ ... மாடுகள கொல்லுறத மட்டும் தான் அவர் எதிர்ப்பார் போல..
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் மனிதர்களையே மதிப்பதில்லை. சிறுத்தையை மதிப்பார்களா.

சொறீலங்கா இராணுவத்திடமும் சரி.. சொறீலங்கா வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடமும் சரி விலங்குகளை பிடிக்க அடிக்கும் மயக்க மருந்து ஊசி துவக்கு இல்லையா..

மிச்ச எல்லாத் துவக்கும் இருக்குது. கிளஸ்டர் வேற கொடுத்தவைக்க.. ஏன் இதுகளைக் கொடுக்கல்ல. ?

Link to comment
Share on other sites

வனவிலங்குகளிற்கு பொறுப்பான பகுதிக்கு மக்கள் சிறுத்தையின் பிரசன்னம் பற்றி அறிவித்து இருக்கின்றார்கள். இந்தவகையில் மக்கள் தமது கடமையை செய்து உள்ளார்கள். வனவிலங்குகள் பரிபாலனை செய்யும் பிரிவு தமது கடமைகளில் இருந்து தவறி உள்ளது போல தெரிகின்றது.

மக்கள் அவர்களது வேலையை செய்வதற்கு தடங்கலாக இருந்தால் காவல்துறையை உதவிக்கு நாடி இருக்கலாம். இதைவிடுத்து அங்கிருந்து சிறுத்தையை விட்டு அகன்று சென்றது மிகப்பெரிய தவறு.

காரணம்1: சிறுத்தையினால் மக்களிற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உதாசீனம் செய்து இருக்கின்றார்கள்

காரணம்2: மக்கள் பகுதியில் இருந்து சிறுத்தையை அகற்றாமல் சிறுத்தையை மக்கள் வாழும் பகுதியில் கைவிட்டு சென்று இருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு நிலமையில் மக்கள் சிறுத்தையை கொன்றதை நிச்சயம் தவறாக கூறமுடியாது.

சிறுத்தையின் செயற்பாட்டினால மக்கள் கலவரம் அடைந்து இருக்கலாம். இங்கு சாதாரண  மனநிலையில் இருந்து யாரும் என்னவும் எழுதலாம். பக்கத்தில் ஒரு சிறுத்தையோ அல்லது பாம்போ வந்தால்தான் தெரியும் எங்கள் மனம் எப்படி கலவரம் அடையும் என்று.

இங்கே சிறுத்தையின் உயிருக்கா அல்லது மனித உயிருக்கா முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று பார்க்கவேண்டும். சிறுத்தையினால் தாக்கப்பட்டு யாராவது இறந்தால் அதற்கு யார் பொறுப்பு?

இங்கு விசாரணைக்கு முன்னிறுத்தப்படவேண்டியது வனவிலங்குகள் பரிபாலன அமைப்பு/அதற்கு பொறுப்பானவர்களே ஒழிய மக்கள் அல்ல. இவர்களுக்கு வனவிலங்குகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேவையான போதியளவு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் தமது பணியை செவ்வனே செய்வதற்கு தேவையான உபரகரணங்களும் வழங்கப்பட்டு இருக்கவேண்டும். அத்துடன் சனக் கூட்டத்தை இப்படியான சூழ்நிலையில் எப்படி கையாளவேண்டும் என்கின்ற முகாமைத்துவ போதனையும் கொடுக்கப்பட்டு இருக்கவேண்டும். இவை எல்லாம் இல்லாத நிலையில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் நடைபெறலாம்.

வன்னிக்காட்டுக்கு அருகாய் உள்ள கிராமங்களில் சிறுத்தைகள் தினமும் வந்து மாடுகளை பிடித்துக்கொண்டு போவதாய் அறிந்துள்ளேன். தினமும் மாடுகள் சிறுத்தைகளினால் கொல்லப்படுகின்றன. மாட்டுக்கு காப்புறுதி செய்தால் இழப்பீடு கிடைக்கும் என அறிந்தேன். ஆனால், சிறுத்தைகள் மாடுகளை பிடிக்காமல் தடுக்க வனவிலங்குகளுக்கு பொறுப்பான அமைப்பு மட்டத்தில் எதுவித உக்திகளும் கையாளப்படுவதாக தெரியவில்லை. இவை எல்லாம் கவனிக்கப்படாமல் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

இலங்கைத்தீவின் சிறுத்தைகள் வித்தியாசமான கூர்ப்பினமாகும்.

தமிழீழத்தின் தேசியவிலங்கு: சிறுத்தை
*******************************

தமிழீழத்தின் தேசியச்சின்னங்கள் 2003ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் தேசியவிலங்காக 'சிறுத்தை' பிரகடனப்படுத்தப்பட்டது.

சிறுத்தை பெரும்பூணை குடும்பத்தின் சிறிய விலங்காகும். கிழக்கு மற்றும் தெற்காசியாவை பூர்வீகமாகக்கொண்ட சிறுத்தை உலகின் பலபாகங்களிலும் பரந்துள்ளது. தற்போது அழிவடைந்துவரும் இனமாக இனங்காணப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் அதிகளவாய் உள்ள சிறுத்தை இனம் உலகளாவியரீதியில் சிறப்பினமாகப் பார்க்கப்படுகின்றது. இலங்கைச் சிறுத்தைகள் பழுப்பு மஞ்சள் தோலில் கரும் புள்ளிகள் இந்தியாச் சிறுத்தையைவிட சிறிய, நெருக்கமாக ரோசா மலர்கள் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. இலங்கையில் காணப்படும் சிறுத்தைகள் ஏனைய நாடுகளில் காணப்படும் சிறுத்தைகளிலிருந்து பல விதங்களில் வேறுபடுகின்றன. இந்தியாச் சிறுத்தைகளிலிருந்து கடலினால் பிரிக்கப்பட்டிருப்பதனால் இலங்கைத்தீவை சேர்ந்த சிறுத்தைகள் வித்தியாசமான முறையில் கூர்ப்பு அடைந்திருப்பதாக விலங்கியலாளர்கள் கருதுகின்றனர். எனவே இவற்றை அவர்கள் உப இனமொன்றாகப் பாகுபடுத்தி உள்ளனர். வர்த்தகரீதியில் இச் சிறுத்தைகளுக்கு உலகளாவியரீதியில் பெருமதிப்புள்ளது.

பாய்ச்சல் திறன்மிக்க சிறுத்தைகள் சராசரி மணிக்கு 58 km தூரத்தை பாய்ந்து எட்டக்கூடியவை. இலங்கைத்தீவில் தமிழீழப்பகுதிகளின் மன்னார்காடுகள் அதிகளிவில் சிறுத்தைகள் காணப்படுகின்றன. பாய்ச்சல்திறனும் இலங்கைத்தீவின் சிறப்பினமாகவும் பார்க்கப்படும் சிறுத்தை தமிழீழத்தின் தேசியவிலங்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
-இணுவையூர்  மயூரன்.-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌ல‌ம் முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.