Jump to content

முல்லைத்தீவில் இராணுவம் சுட்டுக்கொன்ற சிறுத்தையின் இணையா கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்டது?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவில் இராணுவம் சுட்டுக்கொன்ற சிறுத்தையின் இணையா கிளிநொச்சியில் அடித்து கொல்லப்பட்டது?

June 21, 2018
tiger-2-696x392.jpg

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் இன்று(21) காலை ஏழு மணி முதல் மதியம் 12.30 மணி வரை வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்திய சிறுத்தை புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.

இன்று காலை எழு மணியளவில் அம்பாள்குளம் விவேகானந்த வித்தியாலயத்திற்கு பின்புறமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் ஆட்களற்ற காணிகுள் உட்புகுந்த சிறுத்தை மாடுகட்டுவதற்கு சென்ற ஒருவரையும் மற்றொருவரையும் தாக்கியுள்ளது. இதனை தொடர்ந்து கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு பொது மக்களால் அறிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வெறுங்கையுடன் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்தனர். இதனால் பொது மக்களுக்கும் அவர்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் வருவார் என அறிவிக்கப்பட்டது. மதியம் பதினொரு மணியளவில் வனஜீவராசிகள் திணைக்கள மருத்துவர் உட்பட சில அதிகாரிகள் வருகைதந்தனர்.

இதற்கிடையில் எட்டு பேரை சிறுத்தை தாக்கியிருந்தது. பின்னர் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அத் திணைக்கள உத்தியோகத்தர் ஒருவரையும் சிறுத்தை தாக்கியது.

இந்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் கிராம பொது மக்களுக்குமிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டது. வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உரிய நேரத்திற்கு வந்து பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளவில்லை எனக்குற்றம் சாட்டினர்.

ஆனால் தங்களின் நடிவடிக்கைகளுக்கு பொது மக்கள் இடையூறு விளைவித்தனர் எனத் தெரிவித்து வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்து அங்கிருந்து சென்று விட்டனர்.

பின்னர் குறித்த பற்றைக்குள் கிராம பொது மக்கள் பொல்லுகளுடன் சென்று சுற்றி வளைத்து தேடிய போது பற்றைக்குள் இருந்து வெளியேறி சிறுத்தை ஒருவரை தாக்கும் போதும் ஏனைய பொது மக்களால் பொல்லுகளால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது.

 

சம்பவ இடத்தில் கிளிநொச்சி பொலீஸார், கிராம அலுவலர் உட்பட பலரை் இருந்தனர்.

இன்று காலை முதல் பன்னிரண்டு மணி வரை பத்து பேரை சிறுத்தை தாக்கி காயப்படுத்தியது. அவர்கள் அனைவரும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியாலையில் சிகிசை பெற்றுவருகின்றனர்.

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளிற்கு இடையூறு விளைவித்தது மட்டுமின்றி, சிறுத்தையை அடித்து கொன்ற பொதுமக்களின் நடவடிக்கை பரவலான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை இந்த சிறுத்தை, அண்மையில் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுத்தையின் இணையாக இருக்கலாமென்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் கேப்பாபுலவு இராணுவ முகாமின் முன்னரணிற்குள் புகுந்த பெரிய சிறுத்தைப்புலியொன்றை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றிருந்தனர். அந்த விடயம் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று அடித்துக் கொல்லப்பட்ட சிறுத்தையும், கேப்பாபுலவில் சுட்டுக் கொல்லப்பட்ட புலியும் கிட்டத்தட்ட சம வயதுடையவை என்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

IMG_1622-300x200.jpgIMG_1627-300x200.jpgIMG_1653-300x200.jpgtiger-2-300x169.jpgtiger-5-300x169.jpgtiger-7-300x200.jpg

 

http://www.pagetamil.com/9110/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப புலிகளை தமிழனுக்கும் பிடிக்குது இல்லை எல்லாம் நேரம் தான் நான் இந்த சிறுத்தையை சொன்னேன்  அட்டகாசம் காட்டும் யானையிடம் போகட்டும் பார்ப்போம் அது போக புலியென்றால் இப்பவும் கிலி கொள்கிறார்கள் 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காட்டிலிருந்து வந்த புலியும்… நகரிலிருந்த காட்டுமிராண்டித்தனமும்!

June 21, 2018
IMG_1653-696x464.jpg

இன்று கிளிநொச்சியில் மக்கள் குடியிருப்பிற்குள் புகுந்த சிறுத்தையொன்று பொறுப்பற்ற விதத்தில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளது. அந்த சிறுத்தையை அடித்து கொன்ற பொதுமக்களிற்கு காட்டுயிர்கள் பற்றியோ, காட்டுயிர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்புணர்வு பற்றியே போதிய விழிப்புணர்ச்சிகள் இல்லாமல் இருக்கலாம்.

எனினும், வனஜீவராசிகள் திணைக்களத்தின் பொறுப்புணர்வற்ற தன்மை இதில் வெளிப்பட்டுள்ளது.

 

சிறுத்தை காலை 6.30 மணியளவில் மக்கள் குடியிருப்பிற்குள் காணப்பட்டது. அது கொல்லப்படும் போது மதியம் 12.30.

இடைப்பட்ட ஆறு மணித்தியாலத்திற்குள் சிறுத்தையை கிராமத்தை விட்டு அப்புறப்படுத்த முடியாத செயலற்ற நிலையிலா வனஜீவராசிகள் திணைக்களம் உள்ளது?

வடக்கில் பல இடங்களிலும் காணி பிடிப்பதில் வன ஜீவராசிகள் திணைக்களம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த திணைக்களத்தின் அதிகாரியொருவர் பிஸ்டலை காட்டி தன்னை அச்சுறுத்தியதாக சிறிதரன் எம்.பி அண்மையில் குற்றம்சாட்டியிருந்தார். வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தமது பிரதேசங்களை எல்லையிடுவதில் காட்டும் அக்கறையையும், செயல்திறனையும் மிருகங்களை பாதுகாப்பதில் செலுத்துவதில்லையோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆறு மணித்தியாலம் மக்கள் குடியிருப்பிற்குள் நின்ற சிறுத்தையை மயக்க ஊசி மூலமோ, வலை போட்டோ பிடித்து பாதுகாப்பாக அகற்ற முடியவில்லையென்றால், உண்மையிலேயே வனஜீவராசிகள் திணைக்களத்தின் தொழில் நேர்த்தி குறைவையே காண்பிக்கிறது.

 

வனஜீவராசிகள் திணைக்களம்தான் இப்படியென்றால், கிராமத்தவர்களிற்கு காட்டுயிர்கள் தொடர்பான பொறுப்புணர்வு ஏன் இல்லாமல் போனது?

வழிதவறி வந்த சிறுத்தையை சுற்றிவளைத்து கலவரமூட்டினால், அச்சத்தில் அது தாக்கவே செய்யும்.

காடுகள் சுருங்கி, காட்டுயிர்களின் வாழிடங்கள் இல்லாமல் போய்விட்டது. கடுமையான நீர்ப்பஞ்சம் வேறு வாட்டுகிறது. காட்டின் எல்லை கிராமங்களிற்குள் காட்டுயிர்கள் படையெடுப்பதை தவிர்க்க முடியாது. ஏனெனில், அந்த உயிரினங்களின் வாழிடங்களையே நாம் ஆக்கிரமித்துள்ளோம்.

மிகப்பெரிய இந்த வகையான சிறுத்தைகள் வன்னி காடுகளில் மிக அரிதானவையாகவே இருக்கும். விரல் விட்டு எண்ணத்தக்களவானவைதான் இருக்கும். காட்டுயிர்களின் வாழ்க்கையில் மனிதர்கள் குறுக்கறுத்து, அவற்றின் வாழிடங்களை அழித்து, அவற்றிற்கு வாழ்க்கை நெருக்கடியை கொடுத்ததுமல்லாமல், வழிதவறி வரும் காட்டுயிர்களை எப்படி அணுகுவதென்பதை தெரியாமல் இருக்கிறோம் என்பது எவ்வளவு பெரிய அதிர்ச்சியான செய்தி!

சிறுத்தையை அடித்து கொன்று விட்டு, அத்துடன் செல்பி எடுத்த இளைஞர்கள் அனேகர். உயிரிழந்த நிலையிலோ, குற்றுயிரான நிலையிலோ, அந்த சிறுத்தையை கொடுமைப்படுத்தும் இளைஞர்களின் வீடியோ வெளியாகியிருக்கிறது. காட்டுயிர்கள் தொடர்பாக ஒரு துளியும் விழிப்புணர்வும், பொறுப்புணர்வும் இல்லாத ஒரு இளைஞர் சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம் என்பது… நமது சமூக உருவாக்கத்தையே கேள்விக்குட்படுத்துவது.

 

இந்த பூமியில் பொறுப்புணர்வுடன் வாழும் இனமாக தமிழர்கள் இன்னும் பரிணமிக்கவில்லையென்பது மட்டும் கிளிநொச்சி சம்பவத்தின் மூலம் வெளிப்படுகிறது.

 

இரண்டு எதிர்வினைகள்

காட்டிலிருந்து ஒரு சிறுத்தை
நாட்டுக்கு வருகிறது என்றால்
ஓராயிரம் பாலை மரங்களும்
ஓராயிரம் தேக்கு மரங்களும்
ஓராயிரம் முதிரை மரங்களும்
கொள்ளை போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு பேராற்றின் குடும்பமே
இறந்துவிட்டது என்று அர்த்தம்
பத்தாயிரம் பறவைகள்
கடல்கடந்து பறந்துவிட்டன என்று அர்த்தம்
நூறாயிரம் வண்ணத்துப்பூச்சிகளும்
ஆயிரமாயிரம் தேனீக்களும்
செத்துப்போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு போகமல்ல
பல போகங்கள்
பொய்க்கப்போகின்றன என்று அர்த்தம்

 

மோப்பம் பிழைத்து
வழிதவறி
வந்த அச்சிறுத்தையை கொன்ற நாங்கள்
எங்களுடைய குடும்ப
குழந்தைகளையும் பெண்களையும்
உயிரோடு
கொளுத்திக் களித்தோமென்று அர்த்தம்

– நட்சத்திரன் செவ்விந்தியன்

 

——

இலங்கையில் புலிகளுக்கும் இந்தியப்படைகளுக்கும் யுத்தம் தொடங்கியவேளை புலிகளின். 3 ம் இலக்க முகாமில் ஒரு சிறுத்தை குட்டியும் இருந்தது. புலிகள் பின்வாங்கி சென்று கொண்டிருந்தபோது அதனையும் காவிக்கொண்டே சென்றனர். சங்கானைக்கும் சண்டிலிப்பாய் பகுதிக்குமிடையில் திடீரென இந்திய இராணுவத்தோடு மோதல் தொடங்கிவிட. சிறுத்தை மிரண்டு ஓடி விடாமலிருக்க ஒரு சாக்கு பையில் போட்டு கட்டி வைத்து விட்டு சண்டை நடந்தது. பல மணிநேரம் நீண்ட சண்டையில் ஒரு போராளி இறந்தும் செல்வராசா வாத்தி காயமடைந்து போக. இறந்த போராளியின் உடலையும். காயமடைந்தவர் சிறுத்தை குட்டி எல்லாவற்றையும் தூக்கி கொண்டு முற்றுகையை உடைத்து புலிகள் அளவெட்டி பக்கம் போனதும் போராளியின் உடலை புதைத்து விட்டு சிறுத்தைக்கு உணவு கொடுக்க சாக்கு பையை அவிழ்த்தபோது மிரண்டு போயிருந்த சிறுத்தை பலரை விறாண்டி கடித்தும் விட்டது.அதை சுட்டு கொன்றுவிட. ஒரு செக்கன் போதுமானது. ஆனால் அதனை பிடித்து மீண்டும் சாக்கு பையில் போட்டுவிட்டு தொடர்ந்தும் அதனை காவிக்கொண்டு பயணிக்க முடியாது என்பதால் பற்றை காடும் பனை மரங்களும் அதிகமாக இருந்த விளான் பகுதியில் அதனை கொண்டு போய் விட்டு விட்டார்கள். சில காலத்தின் பின்னர். “பிரபாகரன் வளர்த்த செல்லப் பிராணி தெல்லிப்பழையில் இந்திய இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டது விரைவில் பிரபாகரனையும் பிடித்து விடுவோம் என்று இராணுவ அதிகாரி தெரிவித்தார்.” என்று அந்த சிறுத்தை குட்டியின் படத்தோடு செய்தி வெளியாகியிருந்தது. அன்றிரவே தெல்லிப்பழையில் இந்திய இராணுவம் மீது தாக்குதலும் நடந்தது …இன்று கிளி நொச்சியில் அடித்துக் கொல்லப்பட்ட சிறுத்தைக்குட்டியின் படத்தை பார்த்தபோது அந்த சம்பவம் நினைவுக்கு வந்து தொலைத்தது ..

சாத்திரி

http://www.pagetamil.com/9128/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாஸ்திரி இப்பவும் எழுதுறாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ரதி said:

சாஸ்திரி இப்பவும் எழுதுறாரா?

முகநூலில் எல்லோரும் இயங்குவது போல சாத்திரியும் இயங்குகின்றார். ஒவ்வொருவரும் தாமே மட்டுறுத்துனராக இருக்கும் வசதி அங்கு இருக்குத்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளியை.... பார்க்க, வயிறு பத்தி எரிகின்றது.   
அழிந்து வருகின்ற ஒரு மிருகத்தை... அடித்துக் கொல்ல  இந்தக் காட்டு மிராண்டிகளுக்கு எப்படி மனம் வந்தது?
வன அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து, அதற்கு  மயக்க ஊசி போட்டு,  உயிருடன் பிடித்து...
அது உலாவும்  பாதுகாப்பான காட்டில் விட்டிருக்கலாம்.  

அதனைக்   கொல்லும்  உரிமையை இவர்களுக்கு யார் கொடுத்தது?
பொது மக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது என்று சொல்லும், நீதிமான்கள் எங்கே?

இதுவே... ஒரு சிங்கமாக இருந்திருந்தால், அந்தத் தமிழர்கள் புலியை அடித்துக் கொன்ற மாதிரி...
சிங்கத்தை அடித்துக் கொன்று  இருப்பார்களா?

அப்படி சிங்கத்தை அடித்துக் கொன்று இருந்தால்....
புத்த பிக்குகளிருந்து, அரசியல் வாதிகள் வரை.... இந்த காட்டு மிராண்டி தமிழர்களை, அடித்தே... கொன்று இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 2 people, people standing and outdoor

35517496_365673567172228_6371033527722442752_n.jpg?_nc_cat=0&_nc_eui2=AeF-bAf6cknNwA2KzbuAQlyFdiFi_6XDmPDOSDJsN04jrPa0mICGTO6xq6iPX3AokS2KX7vhJHamDrhigLBUD90NMYELPVee-XXsQkdUC9GzvQ&oh=96c6da38ca55589f10c21aa221ae6987&oe=5BA69262

###############################################################################################################

Image may contain: one or more people, people standing, tree, outdoor and nature

No automatic alt text available.

 

Image may contain: 4 people, people sitting and outdoor

No automatic alt text available.

 

மனிதம் என்னும் வாழ்வியலுக்கே மோசமான தவறினை நீங்கள் இழைத்துள்ளீர்கள்

“வீரத்தின் விளைநிலம் வன்னி”
உயிருடன் சிறுத்தையைப்பிடித்த பின்னர் தான் கொன்றார்கள் என்று அறியும் போது கோபப்படுவதை விட வேறு என்ன செய்ய முடிகிறது!

ஒரு அரிய உயிரியை கொன்றிருக்கின்றார்கள்,  அதுவும் புலியை. 
அடேய்  புலியை  நாங்களே கொல்லலாமாடா...

காட்டிலிருந்து ஒரு சிறுத்தை
நாட்டுக்கு வருகிறது என்றால்
ஓராயிரம் பாலை மரங்களும்
ஓராயிரம் தேக்கு மரங்களும்
ஓராயிரம் முதிரை மரங்களும்
கொள்ளை போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு பேராற்றின் குடும்பமே
இறந்துவிட்டது என்று அர்த்தம்
பத்தாயிரம் பறவைகள் 
கடல்கடந்து பறந்துவிட்டன என்று அர்த்தம்
நூறாயிரம் வண்ணத்துப்பூச்சிகளும்
ஆயிரமாயிரம் தேனீக்களும் 
செத்துப்போய்விட்டன என்று அர்த்தம்

ஒரு போகமல்ல பல போகங்கள்
பொய்க்கப்போகின்றன என்று அர்த்தம்

மோப்பம் பிழைத்து
வழிதவறி வந்த அச்சிறுத்தையை கொன்று நீங்கள் நடைமுறைத்தவறினை செய்துள்ளீர்கள்.

-லோகன் சுப்பிரமணியம்.-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுத்தை புலியை கொலை செய்தோரை கைது செய்ய நடவடிக்கை

June 22, 2018

IMG_1653.jpg?resize=717%2C479கிளிநொச்சியில் சிறுத்தை புலியை கொலை செய்தோரை கைது செய்வதற்கான நடவடிக்கையை தேசிய வன ஜீவராசிகள் தொடர்பான குற்றவியல் தடுப்பு பிரிவு மேற்கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி அம்பாள்குளம் கிராமத்தில் நேற்றையதினம் வன ஜீவராசி திணைக்கள உத்தியோத்தர் ஒருவர் உட்பட பத்து பேரை தாக்கிய காயத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்து சிறுத்தை புலி பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டிருந்தது.

இந்தநிலையில் சிறுத்தை புலியை அடித்துக் கொலை செய்தோரை கைது செய்வதற்கான நடவடிக்கையை தேசிய வன ஜீவராசிகள் தொடர்பான குற்றவியல் தடுப்பு பிரிவு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 

http://globaltamilnews.net/2018/84684/

Link to comment
Share on other sites

7 hours ago, கிருபன் said:

கிளிநொச்சியில் சிறுத்தை புலியை கொலை செய்தோரை கைது செய்வதற்கான நடவடிக்கையை தேசிய வன ஜீவராசிகள் தொடர்பான குற்றவியல் தடுப்பு பிரிவு மேற்கொண்டுள்ளது. அது பற்றிய விபரங்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒருசில நாடுகளுக்கு முன்னர் அண்மித்த பகுதியில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ள சிங்கள-பௌத்த இராணுவப் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட சிறுத்தைப் புலி பற்றி வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மௌனமாக உள்ளது.

ஆனால், தமது ஜீவனோபாயத்துக்கு அச்சுறுத்தலாக, சிறுவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தலாக  இருந்த சிறுத்தைப் புலியை தற்பாதுகாப்புக்காக கொன்ற தமிழ் இளைஞர்கள் மீது கையாலாகாத வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தை சேர்ந்த காடையர்கள் நடவடிக்கையாம்.  

உண்மையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்யப்பட வேண்டும். அதிலுள்ள சிங்கள-பௌத்த பயங்கரவாதிகள் சிறைகளில் அடைக்கப்பட வேண்டும்.

மக்களை பாதுகாக்க முனவந்த தமிழ் இளைஞர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறுத்தையைக் கொல்ல இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
1. மக்கள் குடியிருப்புக்கு வந்து தொந்தரவு செய்த சிறுத்தையைக் கொன்று அதனைக் கொல்லும் காட்சியை சமூகவலைத் தளங்களில் பரவி பரபரப்பையும் மற்றையோரின் கவனத்தையும் பெறும் நோக்கம்.

2. புலிகளின் மீதான ஆழ்மனதில் உறைந்திருக்கும் பயமும் காழ்ப்பும் ஆயுதம் இல்லாமல் வந்த சிறுத்தை மேல் காட்டப்பட்டிருக்கலாம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"புலியை கொலை செய்யுமளவுக்கு, தமிழர்களிடம் மனிதாபிமானம் அற்றுப்போயுள்ளது"

கிளிநொச்சியில் நேற்று இளைஞர்கள் ஒன்று திரண்டு ஒரு சிறுத்தைப் புலியை அடித்து கொலை செய்து அதன்மூலம் மகிழ்ச்சியை அனுபவிக்கின்றனர். இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணி தலைவர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
 
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
 
இந்த நாட்டில் இராணுவ ஆட்சியை கொண்டு வரும் அளவுக்கு என்ன தேவை உள்ளது? இன்றைய இளைஞர்கள் சுதந்திரத்தையே விரும்புகின்றனர்.
 
ஆனால் இராணுவ ஆட்சி, சர்வாதிகார ஆட்சி போன்ற பிரச்சாரங்கள் செய்யப்படுவதன் காரணமாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
 
கிளிநொச்சியில் நேற்று ஒரு புலியை அடித்து கொன்றுள்ளார்கள். அந்த புலியிடம் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின் பல வழிமுறைகள் இருக்கின்றன.
 
அதை விடுத்து அந்த இளைஞர்கள் சேர்ந்து புலியை கொலை செய்யும் அளவுக்கு மனிதாபிமானம் அற்றுப்போய் உள்ளது.
 
இந்த நிலைக்கு இவ்வாறான பிரச்சாரங்களே காரணமாக இருக்கலாம் என சாந்த பண்டார சந்தேகம் வெளியிட்டுள்ளார்
 
 

மறவன்புலவு சச்சிதானந்தன் எங்கே..?

கிளிநொச்சியில் கிராமம் ஒன்றிற்குள் புகுந்த சிறுத்தையை அடித்துக் கொலை செய்தவர்களுக்கு எதிராக அரசாங்கம் விசாரணைகளை நடத்துவதாக சபை முதல்வர், அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறினார். 
 
இன்று பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் வழங்கும் போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 
 
சிறுத்தையை அடித்துக் கொலை செய்தமை சம்பந்தமாக சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொறுப்புக் கூற வேண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று புத்த சாசன அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரராவும் கருத்து வௌியிட்டார். 
 
அதேநேரம் சிறுத்தையை கொலை செய்தவர்களுக்கு எதிராக சட்ட ரீதியாக உரிய தண்டனை வழங்குவதாக வனஜிவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கூறியுள்ளார்.
 
எங்க இந்த இந்த மறவன்புலவு ஐயாவ காணோம்....
ஓ ... மாடுகள கொல்லுறத மட்டும் தான் அவர் எதிர்ப்பார் போல..
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்காவில் மனிதர்களையே மதிப்பதில்லை. சிறுத்தையை மதிப்பார்களா.

சொறீலங்கா இராணுவத்திடமும் சரி.. சொறீலங்கா வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்திடமும் சரி விலங்குகளை பிடிக்க அடிக்கும் மயக்க மருந்து ஊசி துவக்கு இல்லையா..

மிச்ச எல்லாத் துவக்கும் இருக்குது. கிளஸ்டர் வேற கொடுத்தவைக்க.. ஏன் இதுகளைக் கொடுக்கல்ல. ?

Link to comment
Share on other sites

வனவிலங்குகளிற்கு பொறுப்பான பகுதிக்கு மக்கள் சிறுத்தையின் பிரசன்னம் பற்றி அறிவித்து இருக்கின்றார்கள். இந்தவகையில் மக்கள் தமது கடமையை செய்து உள்ளார்கள். வனவிலங்குகள் பரிபாலனை செய்யும் பிரிவு தமது கடமைகளில் இருந்து தவறி உள்ளது போல தெரிகின்றது.

மக்கள் அவர்களது வேலையை செய்வதற்கு தடங்கலாக இருந்தால் காவல்துறையை உதவிக்கு நாடி இருக்கலாம். இதைவிடுத்து அங்கிருந்து சிறுத்தையை விட்டு அகன்று சென்றது மிகப்பெரிய தவறு.

காரணம்1: சிறுத்தையினால் மக்களிற்கு ஏற்படக்கூடிய ஆபத்தை உதாசீனம் செய்து இருக்கின்றார்கள்

காரணம்2: மக்கள் பகுதியில் இருந்து சிறுத்தையை அகற்றாமல் சிறுத்தையை மக்கள் வாழும் பகுதியில் கைவிட்டு சென்று இருக்கின்றார்கள்.

இப்படியான ஒரு நிலமையில் மக்கள் சிறுத்தையை கொன்றதை நிச்சயம் தவறாக கூறமுடியாது.

சிறுத்தையின் செயற்பாட்டினால மக்கள் கலவரம் அடைந்து இருக்கலாம். இங்கு சாதாரண  மனநிலையில் இருந்து யாரும் என்னவும் எழுதலாம். பக்கத்தில் ஒரு சிறுத்தையோ அல்லது பாம்போ வந்தால்தான் தெரியும் எங்கள் மனம் எப்படி கலவரம் அடையும் என்று.

இங்கே சிறுத்தையின் உயிருக்கா அல்லது மனித உயிருக்கா முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என்று பார்க்கவேண்டும். சிறுத்தையினால் தாக்கப்பட்டு யாராவது இறந்தால் அதற்கு யார் பொறுப்பு?

இங்கு விசாரணைக்கு முன்னிறுத்தப்படவேண்டியது வனவிலங்குகள் பரிபாலன அமைப்பு/அதற்கு பொறுப்பானவர்களே ஒழிய மக்கள் அல்ல. இவர்களுக்கு வனவிலங்குகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு தேவையான போதியளவு பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் தமது பணியை செவ்வனே செய்வதற்கு தேவையான உபரகரணங்களும் வழங்கப்பட்டு இருக்கவேண்டும். அத்துடன் சனக் கூட்டத்தை இப்படியான சூழ்நிலையில் எப்படி கையாளவேண்டும் என்கின்ற முகாமைத்துவ போதனையும் கொடுக்கப்பட்டு இருக்கவேண்டும். இவை எல்லாம் இல்லாத நிலையில் இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்திலும் நடைபெறலாம்.

வன்னிக்காட்டுக்கு அருகாய் உள்ள கிராமங்களில் சிறுத்தைகள் தினமும் வந்து மாடுகளை பிடித்துக்கொண்டு போவதாய் அறிந்துள்ளேன். தினமும் மாடுகள் சிறுத்தைகளினால் கொல்லப்படுகின்றன. மாட்டுக்கு காப்புறுதி செய்தால் இழப்பீடு கிடைக்கும் என அறிந்தேன். ஆனால், சிறுத்தைகள் மாடுகளை பிடிக்காமல் தடுக்க வனவிலங்குகளுக்கு பொறுப்பான அமைப்பு மட்டத்தில் எதுவித உக்திகளும் கையாளப்படுவதாக தெரியவில்லை. இவை எல்லாம் கவனிக்கப்படாமல் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

No automatic alt text available.

இலங்கைத்தீவின் சிறுத்தைகள் வித்தியாசமான கூர்ப்பினமாகும்.

தமிழீழத்தின் தேசியவிலங்கு: சிறுத்தை
*******************************

தமிழீழத்தின் தேசியச்சின்னங்கள் 2003ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் தேசியவிலங்காக 'சிறுத்தை' பிரகடனப்படுத்தப்பட்டது.

சிறுத்தை பெரும்பூணை குடும்பத்தின் சிறிய விலங்காகும். கிழக்கு மற்றும் தெற்காசியாவை பூர்வீகமாகக்கொண்ட சிறுத்தை உலகின் பலபாகங்களிலும் பரந்துள்ளது. தற்போது அழிவடைந்துவரும் இனமாக இனங்காணப்பட்டுள்ளது.

இலங்கைத் தீவில் அதிகளவாய் உள்ள சிறுத்தை இனம் உலகளாவியரீதியில் சிறப்பினமாகப் பார்க்கப்படுகின்றது. இலங்கைச் சிறுத்தைகள் பழுப்பு மஞ்சள் தோலில் கரும் புள்ளிகள் இந்தியாச் சிறுத்தையைவிட சிறிய, நெருக்கமாக ரோசா மலர்கள் போன்ற அமைப்பினைக் கொண்டுள்ளது. இலங்கையில் காணப்படும் சிறுத்தைகள் ஏனைய நாடுகளில் காணப்படும் சிறுத்தைகளிலிருந்து பல விதங்களில் வேறுபடுகின்றன. இந்தியாச் சிறுத்தைகளிலிருந்து கடலினால் பிரிக்கப்பட்டிருப்பதனால் இலங்கைத்தீவை சேர்ந்த சிறுத்தைகள் வித்தியாசமான முறையில் கூர்ப்பு அடைந்திருப்பதாக விலங்கியலாளர்கள் கருதுகின்றனர். எனவே இவற்றை அவர்கள் உப இனமொன்றாகப் பாகுபடுத்தி உள்ளனர். வர்த்தகரீதியில் இச் சிறுத்தைகளுக்கு உலகளாவியரீதியில் பெருமதிப்புள்ளது.

பாய்ச்சல் திறன்மிக்க சிறுத்தைகள் சராசரி மணிக்கு 58 km தூரத்தை பாய்ந்து எட்டக்கூடியவை. இலங்கைத்தீவில் தமிழீழப்பகுதிகளின் மன்னார்காடுகள் அதிகளிவில் சிறுத்தைகள் காணப்படுகின்றன. பாய்ச்சல்திறனும் இலங்கைத்தீவின் சிறப்பினமாகவும் பார்க்கப்படும் சிறுத்தை தமிழீழத்தின் தேசியவிலங்காகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
-இணுவையூர்  மயூரன்.-

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன. ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும். முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம். (16. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...
    • இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம். தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம். கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும். (17. 04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!
    • முடிவாய் ரணிலையும் விடுறதாக இல்லை , அவர் பணக்கார வீட்டு  பிள்ளை , சந்து பொந்தெல்லாம் போகாமலா  இருந்திருப்பார் . பழம் இருக்கிறவன் அதன் சுவையை ருசிக்கிறான் ....அம்புட்டுதான் 
    • என்ன இது எங்க போனாலும் கொழுவி இழுக்க பார்க்கிறிங்க.  சுமா வை பற்றி தெரியும் என்றால் ஏன் கோத்திரத்தை அப்படி என்று எடுக்கிறீர்கள்.  என்ன பொறுத்தவரை உயர்ந்த குலமா அப்படியா இல்லையா என்பதல்ல ஏன் ஆதங்கம். பொறுக்கித்தனம் செய்பவனை பொறுக்கி என்பதுபோல தான் இது.  தப்பான பழக்கங்களை செய்கின்ற ஆள் தப்பான குலம் அவ்வளவு தான். 
    • பிரிதலும் புனிதமானது : சிவபாலன் இளங்கோவன் மார்ச் 2024 - சிவபாலன் இளங்கோவன் · உளவியல்   சஞ்சய்குமாருக்கு அவனது அத்தைப்பெண்ணான மீராவுடன் சிறு வயதிலிருந்தே காதல். சிறுவயதென்றால் பத்தாவது, பதினொன்றாவது படிக்கும் வயதிலிருந்தே. மீரா சென்னையில் இருந்து சஞ்சயின் கிராமத்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சஞ்சய் ஏகாந்த மனநிலையில் இருப்பான்.  மீராவின் அப்பா சென்னையில் வங்கி மேலாளராக இருக்கிறார். சஞ்சய்க்கு அத்தனை வசதியில்லை. மீராவிற்குச் சிறு வயதில் சஞ்சயைப் பார்க்கபோவது மகிழ்ச்சியானதாகவே இருந்தது. இருவரும் கல்லூரி செல்லும் வரை அது ஓர் இளம் பிராயத்துக் காதலாகவே தொடந்து வந்தது. மீரா கல்லூரிப் படிப்பிற்காக டெல்லி சென்றாள். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாகச் சஞ்சயைத் தவிர்த்து வந்தாள். சஞ்சயால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அடிக்கடி அவளிடம் சண்டை போட்டான். முதலில் பொறுமையாக விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தவள் அதன் பிறகு அவன் ஏதாவது பேச ஆரம்பிக்கும்போதே தொடர்பைத் துண்டித்துவிடச் செய்தாள். அதன் பிறகு எத்தனை முறை அவன் கால் செய்தாலும் அழைப்பை ஏற்க மாட்டாள், இன்னொரு பொழுது அவன் அழைத்தால் எதுவும் நடந்த மாதிரியே காட்டிக்கொள்ளாமல் பட்டும் படாமல் பேசுவாள். இப்படியே மூன்று வருடங்கள் சென்றது. டெல்லியில் அவள் படிப்பை முடித்து வந்தபோது சஞ்சய் ஒரு சாதாரண கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவள் வந்தவுடன் அவளிடம் திருமணம் செய்துகொள்ளலாம் எனப் பேசினான். அவள் அலட்சியமாகச் சிரித்தாள். “உனக்கு என்ன பைத்தியமா? எனக்கு 22 வயதுதான் ஆகுது, அதுக்குள்ள உன்ன கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கணுமா?” எனக் கோபமாகக் கேட்டாள் “உனக்கு என்ன பிடிக்கல, என்கிட்ட இருந்து விலகிப் போகணும்னு நினைக்கிற, அதான் ஏதேதோ காரணம் சொல்ற” என அவனும் கோபப்பட்டான் அவள் அவனிடம் எந்த வாக்குவாதமும் செய்யவில்லை. “உன்கிட்டலாம் பேசிப் புரிய வைக்க முடியாது”  என எழுந்து சென்றாள். சஞ்சய் அவன் பெற்றோர்களைக் கட்டாயப்படுத்தி மீரா வீட்டில் பெண் கேட்க சொன்னான். மீரா அவர்களிடம் பக்குவமாகச் சொல்லி நிராகரித்தாள். “எங்க வீட்ல உன்ன கல்யாணம் பண்ண ஒத்துக்க மாட்டாங்க, முதல்ல எனக்கே இப்ப கல்யாணம் பண்ண இஷ்டம் இல்ல, நான் வெளி நாடு போய் மாஸ்டர்ஸ் படிக்கப் போறேன், எனக்கு நிறைய கனவுகள் இருக்கு” என்று அவனிடம் சொன்னாள் “யாரோ நல்ல வசதியான ஒருத்தன புடிச்சிட்ட அதான் என்ன கழட்டிவிடற” என அவளை நடுரோட்டில் எல்லார் முன்பாகவும் கத்தி அசிங்க அசிங்கமான வார்த்தைகளால் அவமானப்படுத்தி அனுப்பினான். மீரா அழுதுகொண்டே வீட்டிற்கு வந்தாள். ஆண்-பெண் உறவில் சேர்தலைப் போலவே பிரிதலையும் நாம் இயல்பானதாகக் கருத வேண்டும். சேர்தலைப் போலவே பிரிதலின் முடிவையும் மதிக்கும் பண்பை அந்தக் காதலின் நிமித்தமே வளர்த்துக்கொள்ள வேண்டும்.   ஓர் உறவில் இருந்து வெளியே போவதற்கான கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது என்னும் நிலையில் இருக்கும் உறவுகளே மிகவும் பக்குவப்பட்ட உறவுகளாக, பரஸ்பர அன்பை ஆத்மார்த்தமாகக் கொண்ட உறவாக இருக்கும் என்பது எனது எண்ணம். அத்தனை கதவுகளையும் பூட்டிவிட்டு எங்களது உறவு ஆத்மார்த்தமானது என்று சொல்வது நிச்சயம் அபத்தமானது. ஒரு காதல் ஏற்படுதற்கு இருவருக்கும் இருக்கும் பக்குவம், பொறுப்புகள், முதிர்ச்சி, அக மற்றும் புறச் சூழல்கள் எனப் பல்வேறு காரணங்கள் இருக்கும். இந்தக் காரணங்கள் எல்லாம் மாறக்கூடியவை. ஒருவருக்கு இருக்கும் பக்குவமும், முதிர்ச்சியும் அவரின் வயதைப் பொறுத்து மாறிக்கொண்டிருக்கும் அதே போலவே ஒருவரின் அக, புறச் சூழல்கள் தொடர்ச்சியாக மாறிக்கொண்டிருப்பவை. ஒரு காதல் தொடங்கிய தருணத்தில் இருந்த இந்தக் காரணிகள் எல்லாம் அதற்குப் பிறகு மெல்ல மெல்ல மாறிக்கொண்டிருப்பவை. காதலுக்கான காரணங்கள் நீர்த்துப்போகும்போது அங்குக் காதலும் முடிந்து போகிறது. அதை நீட்டிக்க வேண்டிய தேவை இல்லாமல் போய்விடுகிறது, அப்போது அங்குக் காதல் முடிவுக்கு வருகிறது, முடிவுக்கு வரும் காதலை ஏற்றுக்கொள்ளாமல் அதற்கான அத்தனை கதவுகளையும் அடைத்துக் கட்டாயப்படுத்தும்போது அதுவரை இருந்த காதலே கேள்விக்குறியாகிறது, பழகிய கணங்களின் மீது ஓர் ஒவ்வாமை ஏற்படுகிறது, அந்த மூர்க்கத்தனத்தைக் காதலையே மலினப்படுத்தும், சிறுமைப்படுத்தும் செயலாகவே பார்க்க முடியும். சஞ்சய்க்கும் மீராவிற்கும் இருந்தது ஓர் இளம் பிராயத்துக் காதல். சிறு வயதிலேயே துளிர் விட்ட காதல். ஒரு வகையிலான இனக்கவர்ச்சி. ஒருவர் மீதான மோகமே அந்தக் காதலுக்கு அடிப்படை. அந்த வயதில் எந்தப் பொறுப்புகளும் இல்லை, பக்குவமும் இல்லை, இலக்குகளும் இல்லை. ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பாக இருப்பது மட்டுமே அந்தப் பருவத்தில் போதுமானது, அதுவும் எப்போதாவது சந்திக்கிற சில நாள்களில் மட்டும் அந்த ஈர்ப்பு இருந்தால் போதுமானது, அதுவே பரஸ்பரக் காதல் என அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் இருவரும் வளரும் போது இருவருக்கான தனிப்பட்ட அடையாளங்கள் ஆளுமைப் பண்புகள் உருவாகின்றன. எதிர்காலம் குறித்த கனவுகளும், லட்சியங்களும் உருவாகின்றன. இந்தச் சூழலில் காதலென்பது வெறும் ஈர்ப்பு மட்டுமே அல்ல, பரஸ்பரமாக ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வது, அவர்களின் ஆளுமைப் பண்புகளை ஏற்றுக்கொள்வது, அவர்களின் கனவுகளையும், லட்சியங்களையும் மதிப்பது. இதில் போதாமைகள் ஏற்படும்போது ஒருவர் மீதான ஒருவரின் காதல் தன்னை மறுபரிசீலனை செய்து கொள்கிறது. அந்த காதலை நீட்டிப்பதற்கான தேவைக் குறித்து கேள்வி எழுகிறது. ஒரு பிராயத்தில் ஒருவருடன் பழகிய காரணங்களுக்காகவே இந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் புறம் தள்ள முடியாது. மீராவின் லட்சியங்களும், கனவுகளும் சஞ்சயைப் பொறுத்த வரை தேவையில்லாதவை. மீராவிற்கு அவன் மட்டுமே பிரதானமாக இருக்க வேண்டும், மீதி அத்தனையையும் அவள் நிராகரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். ஆனால், மீராவோ தனது விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் அவன் துணை நிற்க வேண்டும், அவளின் இந்த முடிவுகளை அவன் மதிக்க வேண்டும் என நினைக்கிறாள். அப்படி அவன் இருக்கும்போதே அவனின் மீது காதலுடன் இருக்க முடியும் என அவள் உணர்கிறாள். அப்படி அவன் இல்லை மாறாக அவன் அவளை எப்போதும் கட்டுப்படுத்த நினைக்கிறான், அவன் சொல்வதற்கு மாறாக அவள் நடந்து கொள்ளக்கூடாது என நினைக்கிறான் என்பது அவளுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. ஏன் இந்தக் காதலைத் தொடர வேண்டும் என அவள் நினைப்பதற்கு அவனின் இந்தப் போதாமைகள் முக்கியமான காரணம். ஆனால், சஞ்சயை பொறுத்தவரை அவளின் இந்த எதிர்பார்ப்புகளைச் சிறுமைப் படுத்துகிறான். அவளுக்கு வேறு யார் கூடவோ பழக்கம் இருக்கிறது அதனாலே தன்னை நிராகரிக்கிறாள், அவளின் படிப்பிற்கும், வசதிக்கும் தன்னைத் தகுதியானவன் இல்லை என அவள் நினைகிறாள் என அவளை மலினப்படுத்துகிறான். ஒருபோதும் அவன் தனது நடவடிக்கைகள் குறித்து உணரவே இல்லை, அவளின் மீதே அத்தனை குற்றசாட்டுகளையும் சுமத்துகிறான். இது மீராவிற்கு மூச்சு முட்டவைக்கிறது, அதை அவனிடம் சொல்ல முற்படும்போது அவன் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கட்டாயப்படுத்துகிறான். ஒரு போதும் அவன் மாறப்போவதேயில்லை என உணர்ந்து கொண்ட மீரா அவனிடம் இருந்து நிரந்தரமாகப் பிரிந்து விடும் முடிவை எடுக்கிறாள். அந்த முடிவைச் சஞ்சய் எப்படி எதிர்கொள்கிறான்? மிகவும் உணர்ச்சிவசப்பட்டு மூர்க்கமாக எதிர்கொள்கிறான். அவளின் அத்தனை வருடக் காதலைக் கொச்சைபடுத்துகிறான், அவளை மோசமாகச் சித்தரிக்கிறான் அவனது குற்றசாட்டுகளில் அவன் இத்தனை நாள்கள் அவள் மீது துளியும் காதல் கொண்டிருக்கவில்லை என்பதுதான் தெரிகிறது. இந்தப் பிரிவை எதிர்கொள்ள அவன் இன்னும் பக்குவப்பட வேண்டும். பக்குவமற்று, உணர்ச்சிவசப்பட்ட நிலையில் பிரிதலை அணுகும் போக்கு இரண்டு பாலினரிடையுமே இருக்கிறது. நவீன காதலில் பிரிதலை அணுகும் பக்குவம் கொஞ்சம் ஏற்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் சினிமாக்களும், ஊடகங்களும் காதலில் பெண்களை எதிர்மறையாகச் சித்தரிக்கும் போக்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதன் பாதிப்பில் வளரும் இளைஞர்கள் பெண்களின் மீதான பொத்தாம்பொதுவான சில பொதுப்பார்வைகளுடன் இருக்கின்றனர் அதனால் பிரிதலை, பிரிவதற்கான முடிவைப் பெண்களுக்கான ஒன்றாகவே, பெண்களின் குணாதிசயம் என்றளவிலே புரிந்து கொள்கிறார்கள், இது பிரிதலுக்கான காரணங்களை முழுமையாக உணர்ந்து கொள்வதிலிருந்து அவர்களைத் தடுக்கிறது. ‘அந்தப் பெண் என்னை வேண்டாம் என்று சொன்னதற்கு நானும் ஒரு காரணம்’ என்பதை ஏற்றுக்கொள்வதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்பதால் பெண்களின் மீதான இந்தச் சித்தரிப்பைப் பெரும்பாலான ஆண்களும் மனமுவந்து ஏற்றுக்கொள்கிறார்கள். பிரிதலைப் பக்குவமாக ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதற்கான காரணங்களை விருப்பு, வெறுப்புகளின்றி, முன்முடிவுகளின்றி ஏற்றுக்கொள்ளும் ஒருவரால்தான் அதுவரையிலான அந்தக் காதலில் உண்மையாக இருந்திருக்க முடியும். அப்படி இல்லாதவர்களால் அதுவரை இருந்த காதலே அர்த்தமற்றுப் போகிறது. எப்படிப் பிரிவது? “எனக்கு நல்லாவே தெரியுது, இந்த ரிலேஷன்சிப்னாலதான் நான் இவ்வளவு கஷ்டப்படுறேன், இதனால நான் நிறைய அவமானங்களைச் சந்திக்கிறேன், என்னைப் பற்றி நானே குற்றவுணர்ச்சி கொள்ற அளவுக்கு அவதிப்படறேன், இதுல இருந்து வெளிய போகணும்னு நினைக்கிறேன் ஆனால் போக முடியல, எப்படியாவது இதுல இருந்து நான் வெளிய போறதுக்கான வழிய சொல்லுங்க” தினமும் இப்படிப்பட்ட சிலரையாவது நான் எனது கிளினிக்கில் பார்த்து விடுகிறேன். எப்படிப் பிரிவது? என்பதுதான் அவர்களின் தவிப்பு. நீண்ட நாள் காதலன் தன்னை நிராகரிக்கிறான் என்பது தெளிவாகத் தெரிந்த பின்னரும் அவனை விட்டு நீங்க முடியாமல் இருப்பது, திருமணத்தைத் தாண்டிய ஓர் உறவு தவறு என்று தெரிந்த பின்னரும்கூட அதை விட்டு வெளியே போக முடியாமல் வருந்துவது, திருமணம் தரும் வலிகளில் இருந்து, வன்முறைகளில் இருந்து நிரந்தரமாகச் செல்ல முடிவு செய்து அதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பது எனச் சேர்வது எப்படி என்று வருவோரைவிட, பிரிவது எப்படி என்னிடம் வருபவர்களின் எண்ணிக்கை சில நேரங்களில் அதிகமாகவே இருக்கிறது. அதுவும் நவீன காதல்களில் லிவிங்கில் இருக்கும் நிறைய இணையர்களில், தங்கள் உறவு முடிவுக்கு வருவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவிப்பவர்கள் ஏராளமானவர்கள். ஒரு பால் உறவிலும்கூடப் பிரிவை தாங்கிக்கொள்ள, ஏற்றுக்கொள்ளாமல் துயரத்தில் உழல்பவர்கள் நிறையப் பேர். இவர்கள் அனைவரின் பிரச்சினையும் ஒன்றே ஒன்று தான், பிரிவு தரும் வலியைத் தாங்க முடியாமல் இருப்பதே! ஓர் ஆத்மார்த்தமான உறவு என்பது எப்போதும் நம்மைப் பற்றியான நமது மதிப்பீட்டை உயர்வாகத்தான் கொண்டிருக்கும், எத்தனையோ முரண்பாடுகள் இருந்தாலும் ஒருவர் மீதான மதிப்பு என்பது மாறாமல் இருக்கும், பிறரின் முன்னிலையில் தனது இணையைப் பெருமிதமாகவே காட்டிக்கொள்ள விளைவார்கள். தனது இணை அவமானப்படுவதையோ அல்லது குற்றவுணர்ச்சி கொள்வதையோ ஒர் ஆத்மார்த்த காதலில் உள்ளவர்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள். ஓர் உறவின் விளைவாக நான் தாழ்வு மனப்பான்மை கொண்டாலோ, அவமானப்பட்டாலோ, குற்றவுணர்ச்சி கொண்டாலோ அந்த உறவு ஆத்மார்த்தமானதாக இல்லையென்று பொருள். அப்படிப்பட்ட உறவு இருவரையும் எப்போதும் காயப்படுத்திக்கொண்டேதான் இருக்கும், அப்படிப்பட்ட உறவை முடிவுக்குக் கொண்டு வருவதன் வழியாகவே அந்த உறவையும், அதில் உள்ளவர்களையும் காப்பாற்ற முடியும்.  அப்படிப்பட்ட உறவில் இருந்து பிரிய வேண்டும் என்ற முடிவு எடுக்கும்போது முதலில் அந்த முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். பிரிவதற்கான படிநிலைகள்: பிரிவதற்கான காரணங்களை உணர்வது பிரிவதற்கான முடிவைப் பரஸ்பரமாக எடுப்பது முடிவை ஏற்றுக்கொள்வது பிரிவின் வலியைக் கடந்து வருவது பிரிவில் இருந்து முழுமையாக வருவது பிரிய வேண்டும் என முடிவுசெய்துவிட்டால் அதற்கான காரணங்களை இருவரும் நிதானமாக, பரஸ்பரக் குற்றசாட்டுகள் இன்றி நிதானமாக உரையாட வேண்டும். ஏன் இதைத் தொடர வேண்டாம் என்பதை அத்தனை முதிர்ச்சியாக இருவரும் விவாதித்து முடிவெடுக்க வேண்டும். நிறைய நேரங்களில் பிரிய வேண்டும் என ஒருவர் மட்டுமே முடிவு செய்து விட்டு அதை இன்னொருவரிடம் தெரிவிக்காமல் அவரே புரிந்து கொள்ளட்டும் என அவரை அலட்சியம் செய்யும் போதுதான் நிறைய பிரச்சினைகள் வருகின்றன அது இந்தப் பிரிதலை இன்னும் சிக்கலாக்குகிறது. ஓர் உறவில் நாம் இருக்கும் போது அதை தொடர வேண்டாம் என நினைத்தால் அதற்கான காரணங்களைத் தெரிந்து கொள்ளக்கூடிய உரிமை இன்னொருவருக்கு இருக்கிறது, அதனால் அந்த முடிவைத் தெளிவாக இணையருக்கு தெரிவிக்கவேண்டிய கடமை அந்த முடிவை எடுத்தவருக்கு இருக்கிறது. அவர் அந்தக் காரணங்களை ஏற்றுக்கொள்கிறாரோ இல்லையோ அதைச் சொல்ல வேண்டியது ஒருவரின் பொறுப்பு. அதே போல நிறைய நேரங்களில், பிரியலாம் என்ற முடிவை எடுத்த பின்பும் அதை ஏற்றுக்கொள்வதில் இருக்கும் தயக்கம் அந்தப் பிரிவைச் சிக்கலாக்கும். பல்வேறு காரணங்களால் பிரிய வேண்டும் என்ற முடிவை எடுத்த பின், அதை இன்னொருவரிடம் தெளிவாகத் தெரிவித்த பிறகு அந்த முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும். “இல்லை நான் இன்னும் முழுமையாகப் பிரியவில்லை, நாளைக்கேகூட அவர் திரும்ப என்னிடம் பேசுவதற்கு வாய்ப்பிருக்கிறது, அப்படிப் பேசினால் திரும்பவும் அத்தனையும் தொடரும்” எனச் சாத்தியமற்ற எதிர்பார்ப்புகளை மீண்டும் மீண்டும் கொண்டிருப்பதால் அந்தப் பிரிவைச் சார்ந்த துயரம் இன்னும் பலமடங்காகும். ஓர் இழப்பை, அது இழப்பென்று ஏற்றுக்கொண்டால் மட்டுமே அந்த இழப்பில் இருந்து நம்மால் வெளியே வர முடியும். இல்லை நான் இழக்கவில்லை என நமக்கு நாமே சமாதானம் செய்து கொண்டிருந்தால் அந்த இழப்பில் இருந்து வெளியே வரும் காலமும் அதிகமாகும், காயமும் அதிகமாகும். பிரிதல் என்பது நினைவுகளாலானது. ஒருவரை விட்டு ஒருவர் நீங்கும்போது அவரைச் சார்ந்த நினைவுகளும், அவருடன் இருந்த கணங்களின் நல்லுணர்வுகளும் ஒருவரை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தும். அந்தத் துயரத்தை தவிர்க்க முடியாது. அந்தத் துயரமே அத்தனை காலக் காதலின் அடையாளம். அதை ஒருவர் கடந்துதான் வரவேண்டும். “என்னால அவளோட நினைவுகளை தாங்கிக்க முடியல,ரொம்ப கஷ்டமா இருக்கு, ஏதாவது மாத்திரை இருந்தா கொடுங்க, அவள மறக்கற மாதிரியான மாத்திரை” என நிறையப் பேர் கேட்பார்கள். ஒருவரை மறப்பதற்கான மாத்திரை என்பது உலகத்தில் இதுவரையிலும் கண்டுபிடிக்கவில்லை, அப்படி ஒரு மாத்திரை இருந்தால் உலகத்திலேயே அதிக விலையுள்ள மாத்திரை அதுவாகத்தான் இருக்கும். பிரிவு என்பது துயரமானதே. அந்தத் துயரத்தைக் கடந்து வருவதே ஒரு பிரிவின் உண்மையான சவால். கடந்து வர எவ்வளவு நாள் ஆகும் என்பது உங்கள் காதலை, உங்கள் முதிர்ச்சியை, பிரிவை ஏற்றுக்கொண்ட பக்குவத்தை அடிப்படையாக்க் கொண்டது. முழுமையாகப் பிரிவதுதான் பிரிவை இன்னும் இலகுவாக்கும். “நான் கொஞ்சமாக அவனிடம் இருந்து வெளியே வந்துவிடலாம் என இருக்கிறேன், திடீரென நான் பேசுவதை நிறுத்திக்கொண்டால் அவன் தாங்க மாட்டான், அதுவே நான் அவனிடம் இருந்து சிறிது சிறிதாக விலகினால் அவன் புரிந்துகொள்வான்” என்று ஒரு பெண் என்னிடம் சொன்னாள். நிறையப் பேருக்கும் பிரிதலையொட்டி இந்த நிலைப்பாடே இருக்கும். மதுவை எப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாதோ அதே போலவே ஒரு காதலையும் கொஞ்சம் கொஞ்சமாக விட முடியாது.  தொடர வேண்டாம் என முடிவு செய்து விட்டால் அதில் முழுமையாக இருந்தால் வெளியே வர முடியும். இடையிடையே பேசிக்கொண்டு, பார்த்துக்கொண்டு, ஒருவரை ஒருவர் கண்காணித்துக்கொண்டு இருந்தால் பிரிவு சிக்கலானதாக நிறையக் காயப்படுத்துவதாக, மனவுளைச்சல் கொடுக்கக்கூடியதாக இருக்கும். “நான் அவ கூட ரொம்ப இண்டிமேட்டா இருந்துட்டேன், செக்ஸ் கூட வச்சிகிட்டோம், ஆனால் இனி அப்படி இல்லாம வெறும் ஃபிரண்ட்ஸா மட்டும் இருக்கலாம்னு இருக்கேன்” என அந்த இளைஞன் சொன்ன போது. அப்படி இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு எனச் சொன்னேன். ஓர் உறவு ஒரு கட்டத்தை அடைந்துவிட்டால் அதற்கு பிறகு அதன் முந்தைய நிலைக்குக் கொண்டு வந்து அதை நிறுத்துவது கடினம். தினமும் காலையில் இருந்து மது அருந்தும் ஒருவன் திடீரென ஒரு நாள் வந்து இனி நான் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே மது அருந்துவேன் எனச் சொல்லும் போது அது எப்படிச் சாத்தியமில்லையோ அதே போலவே ஓர் உறவை அதன் முந்தைய நிலைகளுக்கு ஒருபோதும் எடுத்து வர முடியாது. பிரியவேண்டும் என முடிவெடுத்தால் அதில் உறுதியாகவும், முழுமையாகவும் இருந்தால் மட்டுமே பிரிய முடியும். ஓர் உன்னதமான உறவு என்பது எத்தனைக் காலம் அது நீடித்தது என்பதில் மட்டும் இல்லை, ஒருவேளை அது ஒரு முடிவுக்கு வந்தால் அந்தப் பிரிவின் முடிவை எத்தனை காதலுடன் அதை அணுகியது என்பதில்தான் இருக்கிறது. பிரிதலின் வழியாகவே நாம் அதிலிருந்த காதலை முழுமையாக உணர முடியும்.   https://uyirmmai.com/article/uyirmmai-magazine-march-2024-article-05/
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.