Jump to content

எப்போது உங்கள் மரணம்? - கண்டுபிடித்துச் சொல்லும் கூகுள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 ஒருவரின் உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து அளிக்கும் போது, அவருக்கு எப்போது மரணம் நிகழும் என 95 சதவீதம் துல்லியமாக கூகுள் கண்டுபிடித்துக் கூறுகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய நவீன, அவசரமான வாழ்க்கை முறையில் மனித உயிர்கள்  பிறக்கும் முறை அனைவருக்கும் தெரிந்த விஷயமாகிவிட்டது. மரணம், அது எப்போது சம்பவிக்கும், எந்த நேரத்தில், தேதியில் என்பதுதான் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட முடியாத விஷயமாக இருக்கிறது.

வாழ்க்கையின் சூட்சமம் அந்த ஒரு விஷயத்தில்தான் அடங்கி இருக்கிறது. சாகும் தேதி தெரிந்துவிட்டால் வாழும் காலம் நரகமாகிவிடும் என்று கூறுவார்கள். அது விரைவில் கூகுள் தொழில்நுட்பத்தால், நனவாகப் போகிறது.

கூகுள் நிறுவனத்தின் மெடிக்கல் பிரைன் டீம் ஒருங்கிணை ஆர்ட்டிபிஷயல் இன்டலிஜன்ஸை உருவாக்கி, மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளில் உயிருக்குப் போராடிக்கொண்டிருப்பவர்கள் எப்போது இறப்பார்கள் என்பதைக் கண்டுபிடிக்க வைத்துள்ளது.

இது முதல்கட்ட சோதனைதான், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் உடல்நலன் சார்ந்த விவரங்கள், மருந்துகள், மாத்திரைகள், போன்றவற்றின் உள்ளீட்டு விவரங்களைக் கூகுள் ஏஐ-யிடம்(ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜன்ஸ்)அளித்தால், அந்த நோயாளி இன்னும் எத்தனை நாட்களுக்கு உயிருடன் இருப்பார் என்ற விவரத்தை 93 முதல் 95 சதவீதம் துல்லியமாகக் கணித்துக் கூறுகிறது.

அதுமட்டுமல்லாமல், நோயாளிகளின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும் பட்சத்தில் அது குறித்த விவரங்களை அளித்தாலும், எப்போது, எந்தத் தேதியில், எந்த நேரத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார், அடுத்து எத்தனை நாட்களுக்குப் பின் அவர் மருத்துவப் பரிசோதனைக்கு வர வேண்டும், அல்லது பரிசோதனைக்கு வர வேண்டுமா என்பதையும் கூகுள் ஏஐ தெரிவிக்கிறது.

இது குறித்த ஆய்வறிக்கை கடந்த மாதம் தி நேச்சர் வார ஏட்டில் வெளியாகி இருந்தது. அதில் மார்பகப் புற்றநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரின் உடல்பரிசோதனை குறித்த விவரங்கள் இந்தக் கூகுள் ஏஐயில் பதிவேற்றம் செய்யப்பட்டு அவரின் வாழ்நாள் குறித்து கேட்கப்பட்டது.

அந்த பெண் குறித்து ஆய்வு செய்த கூகுள் ஏஐ, 19.9 சதவீதம் உயிர்வாழ அந்த பெண்ணுக்கு சாத்தியம் இருக்கிறது என்றது. ஆனால், மருத்துவர்களோ 9.3 சதவீதம் மட்டுமே உயிர்வாழ சாத்தியம் என்று தெரிவித்தனர். ஆனால், மருத்துவர்கள் கணிப்பின்படி அந்த பெண் இன்னும் சில மணிநேரங்களில் இறந்துவிடுவார் என்று முடிவு செய்தனர். ஆனால், இறுதியில் கூகுள் ஏஐ கணிப்பின்படி, அந்த பெண் அடுத்த சில நாட்களுக்கு உயிருடன் வாழ்ந்து அதன்பின் இறந்தார்.

கூகுல் ஏஐயில் செயல்படும் மனிதர்களின் நரம்புமண்டலம் போன்ற ஒருவகையான மென்பொருள் நாம் அளிக்கும் விவரங்களைத் தானாகவே கற்றுக்கொண்டு, தன்னை மேம்படுத்திக்கொள்ளும் தன்மை கொண்டது.

கடந்த காலத்தில் இறந்த நோயாளிகளின் உடல்நலன் தொடர்பான புள்ளிவிவரங்களை அளித்து கூகுள் ஏஐயிடம் அவர்கள் இறந்த நாட்கள், தேதி குறித்து கேட்கப்பட்டது. அதில் கூகுள் ஏஐ கூறிய தேதிகள், நேரம் ஏறக்குறைய 95 சதவீதம் சரியாக பொருந்தியது கண்டு மருத்துவர்கள் வியந்துவிட்டனர். அந்த புள்ளிவிவரங்களைக் கொடுத்ததும் கூகுள் ஏஐ செயல்பட்ட விதம், வேகம், அதன் துல்லியத்தன்மை ஆகியவற்றைக் கண்டு மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் வியந்துள்ளனர்.

எதிர்காலத்தில் கூகுள் நிறவுனத்தின் இந்த ஏஐ தொழில்நுட்பம் பல்வேறு மருத்துவமனைகளிலும், கிளினிக்களிலும் கொண்டுவரப்படும். அப்போது, ஒருநோயாளின் நோய் குறித்த விதம், அவரின் உடல்நலன் சார்ந்த விவரங்கள் மூலம் அவர்களின் வாழ்நாள் குறித்த துல்லியத்தன்மை, அவர் குணமடைவாரா, எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதையும் அறிய முடியும்.

மேலும், கூகுள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒருவரின் உடல்நலன் குறித்த விவரங்களை அளிக்கும் போது ஒருவருக்கு மாரடைப்பு எப்போது வரும், சாத்தியங்கள் குறித்து கண்டுபிடித்துக் கூற முடியும். கூகுள் மெடிக்கல் பிரையன் தொழில்நுட்பம், மருத்துவர்களோடு இணைந்து செயல்படுத்தப்படுவதால், எதிர்காலத்தில் ஒருவருக்கு நீரழிவுநோய் வருமா என்பதையும் கண்டுபிடித்துக் கூற முடியும.்

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/india/article24219126.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மரணம் ஒன்று தான்.. இதுவரை மர்மமாக இருந்தது.?
அதற்கும்  விடை கிடைத்து விட்டதா? ?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.