Jump to content

விமானத்திற்குள் பிச்சையெடுத்த நபர்: வீடியோ!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

விமானத்திற்குள் பிச்சையெடுத்த நபர்: வீடியோ!

June 20, 2018
640x375xFlight_Beggar-1024x600.jpg.pages

விமானத்தில் ஒருவர் பிச்சை கேட்கும் வீடியோ ஒன்று பயணி ஒருவரால் வீடியோ செய்யப்பட்டு வெளியிடபப்ட்டு வைரலாகி உள்ளது.

முதிய தோற்றமுடைய நபர் ஒருவர் பிளாஸ்டிக் பை ஒன்றை கையில் வைத்தபடி பயணிகளிடம் பிச்சை கேட்ட இச்சம்பவம் டோஹா – ஷிராஸ் செல்லும் கட்டார் ஏர்வேசில் இடம்பெற்றுள்ளது.

 

பிச்சை கேட்காமல் சீட்டில் அமருமாறு பலமுறை பயணிகள் கோரியும் அதனை அவர் சட்டை செய்யவில்லை எனவும், சிலர் அவருக்கு பணம் கொடுத்ததாகவும், இதனால் விமானம் ஏற பிந்தியதாகவும் தெரிவிக்கபடுகிறது.

பின்னர் விமான பணியாளர்கள் அவரை கொண்டுபோய் அமர வைத்ததாகவும், அவரின் நிலையை பார்த்த மேலும் சில பயணிகளும் பணம் கொடுத்ததாகவும் தெரிவிக்கபடுகிறது.

குறிப்பிட்ட நபர் ஈரான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

http://www.pagetamil.com/8995/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக மாட்டது என்று உதை தான் எம் முன்னோர்கள் சொன்னார்கள்...போலும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனுக்கு என்ன கஸ்ரம் இருக்கிறதோ யாருக்குத் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தரையில தொழில் வாய்ப்பு வருமானம் குறைய போலுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, ஈழப்பிரியன் said:

தரையில தொழில் வாய்ப்பு வருமானம் குறைய போலுள்ளது.

 

22 hours ago, Kavi arunasalam said:

அவனுக்கு என்ன கஸ்ரம் இருக்கிறதோ யாருக்குத் தெரியும்

 

On 6/21/2018 at 12:40 PM, putthan said:

உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக மாட்டது என்று உதை தான் எம் முன்னோர்கள் சொன்னார்கள்...போலும்....

கள்ளத்தனமாக வேலை செய்பவர்கள் அப்படியே பிடிக்கப்பட்டு ( கைதி) டிக்கட் போட்டு உடுத்த உடையுடன்  அப்படியே அனுப்பிவிடும் சில நாடுகள் மத்திய கிழக்கில்.  அப்படியான நிலமை இவருக்கு ஏற்பட்டு இருக்கலாம் அண்மையில் ஒருவர் ஊருக்கு இப்படி வந்தார் அவரை நாங்கள் பகிடி பண்ணுவது சொப்பின் பையுடன் வந்தவர் என்று வெளிநாட்டில்  இருந்து 

அதிலும் பகிடி என்னவென்றால் அவர் கொழும்பில் வாங்கி வந்த பொதிகளை பஸ்ஸில விட்டுத்து வந்ததுதான் ஆக ஆள் மட்டுமே உடுத்த உடையுடன் வந்து சேர்ந்தது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தனிக்காட்டு ராஜா said:

கள்ளத்தனமாக வேலை செய்பவர்கள் அப்படியே பிடிக்கப்பட்டு ( கைதி) டிக்கட் போட்டு உடுத்த உடையுடன்  அப்படியே அனுப்பிவிடும் சில நாடுகள் மத்திய கிழக்கில்.  அப்படியான நிலமை இவருக்கு ஏற்பட்டு இருக்கலாம் அண்மையில் ஒருவர் ஊருக்கு இப்படி வந்தார் அவரை நாங்கள் பகிடி பண்ணுவது சொப்பின் பையுடன் வந்தவர் என்று வெளிநாட்டில்  இருந்து 

அதிலும் பகிடி என்னவென்றால் அவர் கொழும்பில் வாங்கி வந்த பொதிகளை பஸ்ஸில விட்டுத்து வந்ததுதான் ஆக ஆள் மட்டுமே உடுத்த உடையுடன் வந்து சேர்ந்தது 

இந்த விமானத்தில் பிச்சை எடுத்தவர்,  ஈரான் நாட்டை  சேர்ந்தவர் என்று, செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஈரான் மத்திய கிழக்கில் தானே... உள்ளது. ஈரான்  நாட்டவர்களும்  மத்திய கிழக்கில் உள்ள நாடுகளுக்கு சென்று,
களவாக  வேலை செய்வார்களா... ராஜா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

இந்த விமானத்தில் பிச்சை எடுத்தவர்,  ஈரான் நாட்டை  சேர்ந்தவர் என்று, செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது.
ஈரான் மத்திய கிழக்கில் தானே... உள்ளது. ஈரான்  நாட்டவர்களும்  மத்திய கிழக்கில் உள்ள நாடுகளுக்கு சென்று,
களவாக  வேலை செய்வார்களா... ராஜா 

சிலர் வேலைக்கு வந்து  வேறு வேலை பார்ப்பது சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள்  மற்றது ஈரான் காசுக்கும் மற்ற நாட்டு காசுக்கும் பாரிய வேறுபாடும் உண்டு வெள்ளைகாரன்களிலும் ஏழைகள் இருப்பது போல தான் ஈரானிகளும் பழகி இருக்கிறேன் கஞ்சனுகள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

சிலர் வேலைக்கு வந்து  வேறு வேலை பார்ப்பது சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கைகள்  மற்றது ஈரான் காசுக்கும் மற்ற நாட்டு காசுக்கும் பாரிய வேறுபாடும் உண்டு வெள்ளைகாரன்களிலும் ஏழைகள் இருப்பது போல தான் ஈரானிகளும் பழகி இருக்கிறேன் கஞ்சனுகள் 

ராஜா... நீங்கள், வெள்ளைக்காரன் என்று  சொன்னதால்,
போலந்து நாட்டுக் காரனும், வெள்ளைக் காரன் தான்....
அவனைப் போல மகா கஞ்சனை, இந்த உலகத்தில் பார்க்க முடியாது. 
இந்த  ஈரான்காரனிடமே... போலந்து நாட்டுக்காரன்  பிச்சை  எடுப்பான்.
ஆனால்... கதை மட்டும்... கோட்டு, சூட்டு  போட்ட   மாதிரி இருக்கும்.?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/21/2018 at 8:17 AM, கிருபன் said:

விமானத்திற்குள் பிச்சையெடுத்த நபர்: வீடியோ!

கொம்பனி ஏரோப்பிளேன் வரைக்கு விரிவாக்கம் பெற்று விட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கட்டார்.. கொழும்பு  கட்டார் எயார் வெய்ஸ் ஏறிப் பாருங்கள்.. உரப் பையுடன் சனம் வாறதைக் கூடக் காணலாம். அரிசி.. அரிசி மா பாக்.. ஆட்டா மா.. கடலை எண்ணெய் கான்..இப்படி இன்னோரென்ன பொருட்கள்..  இதெல்லாம்...சர்வசாதாரணமாகக் காவப்படும். 

ஏன் எங்கடை ஆக்கள்.. சறத்தால் முருங்கக்காயை கூட்டா கட்டிட்டு எடுத்திட்டு.. கோட்டு சூட்டுப் போட்டு இங்கிலாந்து பாஸ்போட்டில்.. லண்டன் போறதையும் சர்வசாதாரணமாகப் பார்க்கலாம். 

இதொன்னும் ஆச்சரியமே இல்லை. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

ராஜா... நீங்கள், வெள்ளைக்காரன் என்று  சொன்னதால்,
போலந்து நாட்டுக் காரனும், வெள்ளைக் காரன் தான்....
அவனைப் போல மகா கஞ்சனை, இந்த உலகத்தில் பார்க்க முடியாது. 
இந்த  ஈரான்காரனிடமே... போலந்து நாட்டுக்காரன்  பிச்சை  எடுப்பான்.
ஆனால்... கதை மட்டும்... கோட்டு, சூட்டு  போட்ட   மாதிரி இருக்கும்.?

சில வருடங்களுக்கு முன்பு பாதையில் நடந்து போகும் போது சைக்கிளில் வந்த இரண்டு வெள்ளைகள் ( இலங்கையில் ) எங்களுக்கு இன்று இரவு ரூம் வேண்டும் ஆக குறைந்த விலையில் என்று கேட்டான் நானும் ஏசி ரூம் உள்ளதா சாதரணமானதா  என்று கேட்டேன் இல்லை  இரவைக்கு தங்க மட்டும் என்றான்  இந்த பாதை போல இருந்தாலும் பரவாயில்லை என்றான் அப்போது நினைத்துக்கொண்டேன் அவனும் நம்ம ஆள் தான் என்று  காசு இல்லாதவன் போல கொஞ்சம் போதையில் வேற நின்றிருந்தான் ( கல்முனையில்) அம்பாறை மாவட்டம் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.