Jump to content

தமிழர் இனஅழிப்பு கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் இனஅழிப்பு கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர்

on: June 20, 2018
தமிழர் இனஅழிப்பு கண் கலங்கினார் ஐ.நா. செயலாளர்

பிரதான செய்திகள்:போதுமான வளங்கள் இல்லாதே காரணத்தினாலேயே பொறுப்பு கூறல் பொறிமுறையை விடயத்தில் இலங்கை அரசை ஐ.நா. வினால் நிர்பந்திக்க முடியாமல் இருப்பதாக ஐ.நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நோர்வையின் ஒஸ்லோ நகரில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

ஐ.நா. இலங்கை விடயத்தில் ஏன் தோல்வியை சந்திக்கவேண்டி ஏட்பட்டது… இலங்கை விடயத்தில் ஏன் இதுவரை சரியான பொறுப்புக்கூறல் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தமிழ் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் போதே ஐ.நா. செயலாளர் நாயகம் இவ்வாறு தெரிவித்தார்.

நாடுகளுக்கு பொறுப்புக்கள் இருக்கின்றன. சர்வதேச சட்டங்களை ஏற்று கடைபிடிக்கவேண்டிய பொறுப்புக்கள் அவற்றிட்கு இருக்கின்றன. அனல் அதனை இலங்கை செய்யவில்லை. வளப்பற்றாக்குறைகள் காரணமாக ஐ.நா.வினாலும் அதனை சரியானமுறையில் செய்ய முடியவில்லை. இந்த விடயம் பற்றி நங்கள் ஆராய்ந்து எங்களது அணுகுமுறைகளை மாற்றி வருகிறோம்.

இன அழிப்பு, யுத்த குற்றங்கள், மனிதத்திற்கு ஏதிரான குற்றங்கள் போன்றனவற்றிக்கான பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் பொறிமுறை இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார் .

தமிழர் பிரச்சனை பற்றிய அவரது பதிலின் போது அவர் உணர்ச்சிவசப்பட்டதாகவும், கண் கலங்கியதாகவும் நிகழ்வில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்தார்கள்.

 
 

 

http://www.theevakam.com/2018/06/20/தமிழர்-இனஅழிப்பு-கண்-கலங/

 Post Views: 195
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவின் வெளியேற்றம் இலங்கைக்கு சாதகம் என்கிறார் ராஜித...

Quote

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளமை இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறியமையால் இலங்கை மீதான சர்வதேசத்தின் அழுத்தம் குறையும் என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எவ்வாறாயினும், மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து இலங்கை அரசாங்கம் ஒருபோதும் விலகப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

”ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ளமை இலங்கைக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறலாம்.

ஏனெனில், சர்வதேச மட்டத்திலிருந்து இலங்கைக்கு விடுக்கப்பட்ட பாரிய அழுத்தமொன்று குறைவடையும். இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு அமெரிக்கா முதலில் எதிர்ப்பினை வெளியிட்டது. எனினும், கடந்தகாலங்களில் இலங்கை ஐ.நா.வில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதையடுத்து, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அமெரிக்காவே கொண்டுவந்தது.

இந்நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து அமெரிக்கா நேற்று வெளியேறியுள்ளது. அமெரிக்கா வெளியேறினாலும், நாம் சர்வதேசத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்கியோ விலகியோ செயற்படப்போவதில்லை என்பதையும் நாம் இவ்வேளையில் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

http://thinakkural.lk/article/13017

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உப்பத் தான் இவருக்கு தெரியுமாக்கும் 
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ரதி said:

உப்பத் தான் இவருக்கு தெரியுமாக்கும் 
 

நம்ம சனத்துக்கே இன்னும்      தெரியாமல் இருக்கு நிங்க வேற 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசுகளின் எடுபிடியாக இருக்கும் வரை சேர்ந்து அழுவதைத் தவிர வேறு என்ன தான் செய்ய முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன் என்ன செய்யப்போறார் இனி .....

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.