Jump to content

'வைஃபை' உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட பெண் அறிவியலாளர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கிரேஸ் ஹாப்பர்:

படத்தின் காப்புரிமை Getty Images

கிரேஸ் ஹாப்பர்:

அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய அட்மிரல் கிரேஸ், இரண்டாம் உலகப்போரின் போது, மார்க்-1 என்ற கணினியின் மேம்பாட்டு பணிக்கான ஆய்வின் இடம்பெற்றிருந்தார்.

ஆங்கிலத்தைப் போலவே, கணினியில் பயன்படுத்தப்படும் நிரல் மொழியும் எளிமையாக இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். தொடர் ஆய்வின் விளைவாக, அவர் தலைமையிலான குழு, பிரபல கணினி மொழியான COBOL-க்கு முந்தைய, கணினி நிரல் மொழிக்கான தொகுப்பியை கண்டறிந்தனர்

நான்சி ஜான்சன்:

நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீம்களை திடமாக வைத்துக்கொள்ள பலரும் கனரக இயந்திரங்களையும் வண்டிகளையும் பயன்படுத்திவந்த காலத்தில், கைகளில் தூக்கிச்செல்லும் அளவிலான இயந்திரத்தை தயாரித்தார் நான்சி ஜான்சன்.

1843ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இந்த இயந்திரம் இன்றும் மேற்கத்திய நாடுகளில் வீடுகளிலேயே ஐஸ்கிரீம்கள் செய்ய பெரும் உதவியாக உள்ளது. இதற்கான காப்புரிமையை அவர் 1843இல் பெற்றார்.

மேரி வான் பிரிட்டான் பிரவுண்:

நம்மை 24x7மணி நேரமும் கண்காணிக்கும் சி.சி.டி.வி உருவாவதற்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை வீட்டின் பாதுகாப்புகளுக்கான பயன்படுத்தப்படும் கண்காணிப்பு கேமராக்கள்.

அமெரிக்காவில் செவிலியராக பணியாற்றிவந்த மேரி விட்டில் தனியாக இருப்பதை அசௌகர்யமாக கருதினார். தனது கணவருடன் இணைந்து வீட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் கண்காணிப்பு முறையை கண்டறிந்தார்.

1966இல் அவர் கண்டறிந்த இந்த முறையில் வீட்டின் வாசலை கண்காணிக்கும் கேமராக்கள் இருந்தன. வாசலில் நிற்பவரின் முகத்தை வீட்டினுள்ளே இருந்து பார்ப்பதற்கான இந்த கேமராக்களை ஒரு தொலைக்காட்சிப் பெட்டியில் இணைத்து பயன்படுத்திய மேரி, ஆபத்து காலங்களில் காவல்துறைக்கு தகவல் அளிக்க ஒரு `அவசர பொத்தான்` வைத்திருந்தார்.

ஹேடி லமார்:படத்தின் காப்புரிமை George Rinhart/Corbis via Getty Images

ஹேடி லமார்:

ஹாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த ஹேடி லமார் ஒரு கண்டுபிடிப்பாளராகவும் தனது பணியை செய்து வந்தார். இரண்டாம் உலகப்போரின்போது, `டொர்பிடோ` என்று அழைக்கப்பட்ட ஆயுதங்கள் ரேடியோ அலைவரிசைகள் மூலம் இயங்கின.

இந்த ரேடியோ அலைவரிசைகள் எளிதில் கண்டறியப்படுபவை என்பதால், அவற்றை வேறு திசைகளுக்கு மாற்றி அனுப்பும் வாய்ப்புகள் இருந்தன.

இந்த சூழலை தடுக்க, ஹேடி தனது நண்பருடன் இணைந்து புதிய முறையை கண்டறிந்தனர். ரோடியோ அலைவரிசையுடன் ஒரு தானாக இசைக்கும் பியானோ இசையையும் அவர்கள் சேர்த்து வடிவமைத்தனர். இது `frequency hopping` என்று அழைக்கப்பட்டது.

இதே முறையை மேம்படுத்தும் வகையில் அவர்கள் ` spread-spectrum' என்ற ஆய்வில் பங்கேற்றனர். பிற்காலத்தில் புளூடூத் மற்றும் வை-ஃபை ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு இந்த ஆய்வு பெரும் பங்களித்தது.

https://www.bbc.com/tamil/global-44537858

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
    • முள்ளிவாய்க்கால் அழிவிற்கு நன்றி சொல்லி பொன்னாடை போர்த்திய நிகழ்வுகளுக்கு ஊமையாக இருந்தோர் சீமான் விடயத்தில் கதறுவது ஏன்?  தமிழை விட திராவிடம் வலிமையானது என்றா?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.