Jump to content

தேர்தல் ஆணையத்தில் கமல் மனு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் ஆணையத்தில் கமல் மனு!

62.jpg

மக்கள் நீதி மய்யம் கட்சியைப் பதிவு செய்வதற்காக, இன்று டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் சென்றார் கமல்ஹாசன். கூடிய விரைவில் தங்கள் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்குமென்று, அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 21ஆம் தேதியன்று மக்கள் நீதி மய்யம் என்ற கட்சிப் பெயரையும் கொடியையும் மதுரையில் தொண்டர்கள் மத்தியில் அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன். கட்சி குறித்த அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பாக, திமுக தலைவர் மு.கருணாநிதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் நல்லகண்ணு, நடிகர் ரஜினிகாந்த், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பல தலைவர்களைச் சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் முயற்சியில் மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஏப்ரல் மாதம் உள்ளாட்சி அமைப்புகள் சரிவர இயங்குவதில்லை எனவும், ஆண்டுக்கு 4 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை எனவும் குற்றம்சாட்டினார் கமல்ஹாசன். இதற்கு மறுப்பு தெரிவித்தார் தமிழக அமைச்சர் வேலுமணி. கடந்த மே 16, 17, 18 தேதிகளில் நாகர்கோவில், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டார் கமல். மக்களுக்கு என்ன வேண்டுமென்று தெரிந்துகொள்வதே தனது பயணத்தின் நோக்கம் என்று கூறினார். இந்த காலகட்டத்தில், பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் மய்யம் விசில் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. காவிரி விவகாரம் தொடர்பாக, மக்கள் நீதி மய்யம் சார்பில் அனைத்துக்கட்சி கூட்டத்தையும் நடத்தினார். இதில் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றைப் பதிவு செய்ய, டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கமல் சார்பில் ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதில் ஆட்சேபணை இருந்தால் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது தேர்தல் ஆணையம். அவ்வாறு எந்தப் புகாரும் வராததால், யாரும் மக்கள் நீதி மய்யம் கட்சிப்பெயருக்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என தேர்தல் ஆணைய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்று (ஜூன் 20) காலை டெல்லியிலுள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்திற்குச் சென்றார் கமல்ஹாசன். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் சென்றனர். இதன்பின்னர், அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “தேர்தல் ஆணையத்திற்குச் சில கேள்விகள் இருந்தன. அதற்குப் பதில் சொன்னேன். பெரிதாக எந்த ஆட்சேபணையும் சொல்லவில்லை. கூடிய விரைவில் எங்களுக்கான அங்கீகாரம் கிடைக்குமென்று நம்புகிறோம்” என்று தெரிவித்தார் கமல். இதனால், இன்று மக்கள் நீதி மய்யத்திற்கு தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் அளிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்பின்னர், தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் மக்கள் நீதி மய்யம் பற்றிய தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

டெல்லியில் கடந்த எட்டு நாட்களாகப் போராட்டம் நடத்திய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலைச் சந்திப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்த கமல், மாலையில் விமானநிலையம் செல்வதற்கு முன்பாக அவரைச் சந்திக்க வாய்ப்புள்ளதாகக் கூறினார். சேலம் எட்டுவழிச்சாலை தொடர்பான போராட்டம் பற்றிப் பேசியவர், சுற்றுச்சூழல் குறித்துப் பேசினாலே குற்றம் என்பதை ஒத்துக்கொள்ள முடியாது என்றும், அந்த ஆதங்கமும் கவலையும் எல்லா குடிமகனையும் போலத் தனக்கும் இருப்பதாகவும் அவர் கூறினார். தனது பட நிறுவனத்தின் சார்பாக, நடிகை கவுதமிக்கு கொடுக்கவேண்டிய பணமும் அவருக்கு தரப்பட்டதாகத் தன் பேச்சில் குறிப்பிட்டார் கமல்.

 

https://minnambalam.com/k/2018/06/20/62

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.